Jump to content

வெளிநாடுகளின் தேவைகளை நிறைவேற்றும் அரசமைப்பு இலங்கைக்கு அவசியமில்லை- இந்திய ஊடகத்திற்கு மகிந்த கருத்து


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாடுகளின் தேவைகளை நிறைவேற்றும் அரசமைப்பு இலங்கைக்கு அவசியமில்லை- இந்திய ஊடகத்திற்கு மகிந்த கருத்து

August 10, 2020

இலங்கைக்கு அதன் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றக்கூடிய புதிய அரசியல் அமைப்பே தேவை வெளிச்சக்திகளின் தேவைகளை நிறைவேற்றக்கூடிய அரசமைப்பு அவசியமில்லை என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் ஈடிவிபாரத்திற்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

 

spacer.png

ஸ்மித்தா சர்மாவிற்கு வழஙகியுள்ள பேட்டியில் இதனை குறிப்பிட்டுள்ள அவர் 19வது திருத்தம் அரசாங்கம் சீராகவும் ஆக்கபூர்வமாகவும் செயற்பட முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளது என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
முன்னைய அரசாங்கத்தை மக்கள் தேர்தலில் முற்றுமுழுதாக நிராகரித்தமைக்கான ஒரு காரணம் இதுவென மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

 

19வது திருத்தம் வெளிச்சக்திகளின் தேவைகளை நிறைவேற்றுகின்றது என குற்றம்சாட்டியுள்ள மகிந்த ராஜபக்ச இலங்கைக்கு பொருத்தமான மக்களின் அபிலாசைகளுக்கு ஏற்ற அரசமைப்பே இலங்கைக்கு அவசியம் என குறிப்பிட்டுள்ளார்.
வெளிச்சக்திகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் அரசமைப்பு அவசியமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

http://thinakkural.lk/article/61487

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவுக்கு அவசியமானதும்.. மகிந்தர் குடும்பம் இன்னும் 25..30 வருசத்துக்கு சர்வாதிகார சிங்கள பெளத்த இனவெறி அரசாட்சி செய்யவும் ஏதுவான அரசியலமைப்பே இப்போ அவசியம். மேற்கு நாடுகளில் உள்ள ஓரளவேனும் சுயாதீனத் தன்மை கொண்ட சனநாயகம் சொறீலங்காவுக்கு குறிப்பாக மகிந்த கும்பலுக்கு செளகரியப்பட்டு வராது என்பதே இந்த இனப்படுகொலை சர்வாதிகாரியின் திடமான கருத்து.

இதில் ஹிந்தியா சீனாவுக்கு கீழ தான். என்ன தான் முந்தி அடிச்சு வாழ்த்தினாலும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, nedukkalapoovan said:

சீனாவுக்கு அவசியமானதும்.. மகிந்தர் குடும்பம் இன்னும் 25..30 வருசத்துக்கு சர்வாதிகார சிங்கள பெளத்த இனவெறி அரசாட்சி செய்யவும் ஏதுவான அரசியலமைப்பே இப்போ அவசியம். மேற்கு நாடுகளில் உள்ள ஓரளவேனும் சுயாதீனத் தன்மை கொண்ட சனநாயகம் சொறீலங்காவுக்கு குறிப்பாக மகிந்த கும்பலுக்கு செளகரியப்பட்டு வராது என்பதே இந்த இனப்படுகொலை சர்வாதிகாரியின் திடமான கருத்து.

இதில் ஹிந்தியா சீனாவுக்கு கீழ தான். என்ன தான் முந்தி அடிச்சு வாழ்த்தினாலும். 

இந்த விடயத்தில் நான் இராசபக்சேவின் பக்கம். 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிச்சை போட மட்டும் வெளிச்சக்திகள் தேவை. பல்லிளிச்சுக்கொண்டு வாங்குவோம். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.