Jump to content

அடுத்த ஐந்து வருடங்களுக்கு எப்படி செயல்பட போகிறீர்கள்? கஜேந்திரகுமார் பொன்னம்பலம்:-


Recommended Posts

 

 
அடுத்த ஐந்து வருடங்களுக்கு எப்படி செயல்பட போகிறீர்கள்?
கஜேந்திரகுமார் பொன்னம்பலம்:-
 
எமது செயல்பாடுகள் மூனறு கோணங்களில் அமையும்.
 
முதலாவது, கோத்தபாய அரசு கொண்டுவர எத்தனிக்கும் ஒற்றையாட்சி முறைமையான அரசியலமைப்பை மக்களிற்கான அரசியல் விழிப்புணர்வூட்டல் மூலமும் மக்கள் அணிதிரள்வு மூலமும் எதிர்ப்போம்.
அதே வேளை , தமிழ் மக்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்யக்கூடியவிதமாக ஒரு நாட்டுக்குள் தமிழர்களின் உரிமைகளை பாதுக்காக்கக்கூடிய விதத்தில் தமிழ் மக்கள் பேரவை தயாரித்த தீர்வு யோசனைகளின் அடிப்படையில் ஒரு தீர்வினை அடைவதற்கான அழுத்தங்கள், முயற்சிகளில் ஈடுபடுவோம்.
 
இரண்டாவதாக தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட இனப்படுகொலைக்கு சிறிலங்கா அரசை பொறுப்புக்கூற வைக்ககூடிய சர்வதேச குற்றவியல் பொறிமுறை ஒன்றை நடைமுறைக்கு கொண்டுவருவதற்கு கடுமையாக உழைப்போம்.
 
மூன்றாவதாக, தமிழர் தேசத்தின் பொருளாதாரத்தையும் ஒவ்வொரு தமிழ் குடும்பத்தின் பொருளாதார பலத்தையும் நாட்டில் இருக்கக்கூடிய ஏனைய பகுதிகளுக்கு ஒப்பிடக்கூடிய அளவுக்கு சுயசார்பு பொருளாதார அபிவிருத்தி வேலைத்திட்டங்களை புலம்பெயர் தமிழ் மக்களின் பங்களிப்போடு அடைவதற்கு கடுமையாக உழைப்போம்.
 
அதாவது புலம்பெயர் தமிழ் மக்களின் ஆதரவுடன் முதலீடுகளை தமிழ் தேசத்தில் கொண்டுவந்து சிறிய நடுத்தர தொழிற்துறைகளை உருவாக்கும் செயற்றிட்டத்தில் ஈடுபடுவோம்.
இதனூடாக , எமது தாயகத்தில் வேலைவாய்ப்பை உருவாக்குதல் , தமிழ் குடும்பம் ஒவ்வொன்றினதும் பொருளாதார நிலையை உயர்த்தி பலப்படுத்தல் போன்றன ஏற்படும்.
 
தினக்குரல் :-(09/08/2020)
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:
முதலாவது, கோத்தபாய அரசு கொண்டுவர எத்தனிக்கும் ஒற்றையாட்சி முறைமையான அரசியலமைப்பை மக்களிற்கான அரசியல் விழிப்புணர்வூட்டல் மூலமும் மக்கள் அணிதிரள்வு மூலமும் எதிர்ப்போம்.
அதே வேளை , தமிழ் மக்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்யக்கூடியவிதமாக ஒரு நாட்டுக்குள் தமிழர்களின் உரிமைகளை பாதுக்காக்கக்கூடிய விதத்தில் தமிழ் மக்கள் பேரவை தயாரித்த தீர்வு யோசனைகளின் அடிப்படையில் ஒரு தீர்வினை அடைவதற்கான அழுத்தங்கள், முயற்சிகளில் ஈடுபடுவோம்.
 
இரண்டாவதாக தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட இனப்படுகொலைக்கு சிறிலங்கா அரசை பொறுப்புக்கூற வைக்ககூடிய சர்வதேச குற்றவியல் பொறிமுறை ஒன்றை நடைமுறைக்கு கொண்டுவருவதற்கு கடுமையாக உழைப்போம்.
 
மூன்றாவதாக, தமிழர் தேசத்தின் பொருளாதாரத்தையும் ஒவ்வொரு தமிழ் குடும்பத்தின் பொருளாதார பலத்தையும் நாட்டில் இருக்கக்கூடிய ஏனைய பகுதிகளுக்கு ஒப்பிடக்கூடிய அளவுக்கு சுயசார்பு பொருளாதார அபிவிருத்தி வேலைத்திட்டங்களை புலம்பெயர் தமிழ் மக்களின் பங்களிப்போடு அடைவதற்கு கடுமையாக உழைப்போம்.

வெற்றி பெற வாழ்த்துக்கள்.
புலம்பெயர் மக்களின்பங்களிப்பு சம்பந்தமாக உத்தியோகபூர்வ கட்டமைப்பை உருவாக்குங்கள்.

Link to comment
Share on other sites

4 hours ago, nunavilan said:

 

 
அடுத்த ஐந்து வருடங்களுக்கு எப்படி செயல்பட போகிறீர்கள்?
கஜேந்திரகுமார் பொன்னம்பலம்:-
 
எமது செயல்பாடுகள் மூனறு கோணங்களில் அமையும்.
 
முதலாவது, கோத்தபாய அரசு கொண்டுவர எத்தனிக்கும் ஒற்றையாட்சி முறைமையான அரசியலமைப்பை மக்களிற்கான அரசியல் விழிப்புணர்வூட்டல் மூலமும் மக்கள் அணிதிரள்வு மூலமும் எதிர்ப்போம்.


கோத்தபாயாவுக்கு இது கொசுக்கடி கூட இல்லை. கா,  கூ, என்று கத்திவிட்டு சாப்பாட்டுக்கு உழைக்க கட்சி ஆதரவாளர்கள் போய்விடுவார்கள். மக்களுக்கோ தம் அன்றாட பிரச்சினைக்கே நேரம் போதாது. ஒற்றையாட்சியை எதுவுமே அகற்றாது.

4 hours ago, nunavilan said:

 

 
அதே வேளை , தமிழ் மக்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்யக்கூடியவிதமாக ஒரு நாட்டுக்குள் தமிழர்களின் உரிமைகளை பாதுக்காக்கக்கூடிய விதத்தில் தமிழ் மக்கள் பேரவை தயாரித்த தீர்வு யோசனைகளின் அடிப்படையில் ஒரு தீர்வினை அடைவதற்கான அழுத்தங்கள், முயற்சிகளில் ஈடுபடுவோம்.
 

வெற்றி பெறுவோம் என்று சொல்லாத நேர்மை பாராட்டத்தக்கது. முயன்று, ஏதோ முயன்றோம் என்று திருப்திபடுங்கள்.

4 hours ago, nunavilan said:

 

மூன்றாவதாக, தமிழர் தேசத்தின் பொருளாதாரத்தையும் ஒவ்வொரு தமிழ் குடும்பத்தின் பொருளாதார பலத்தையும் நாட்டில் இருக்கக்கூடிய ஏனைய பகுதிகளுக்கு ஒப்பிடக்கூடிய அளவுக்கு சுயசார்பு பொருளாதார அபிவிருத்தி வேலைத்திட்டங்களை புலம்பெயர் தமிழ் மக்களின் பங்களிப்போடு அடைவதற்கு கடுமையாக உழைப்போம்.

ஏனைய பகுதிகள் பல வெளிநாட்டு அகதிப்பணம் பெறுவதில்லை. வடக்கு தமிழரிலும் பார்க்க இலங்கை வருமானத்தில் தங்கி இருக்கும் பரம ஏழைகள். அந்த பகுதிகளின் தரத்துக்கு பொருளாதாரம் இறங்கும் என்கிறாரா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, கற்பகதரு said:

வெற்றி பெறுவோம் என்று சொல்லாத நேர்மை பாராட்டத்தக்கது. முயன்று, ஏதோ முயன்றோம் என்று திருப்திபடுங்கள்.

தள்ளிப் படுத்தால் எப்படித் தான் பிள்ளைப் பெறுவது.

கொஞ்சம் விடுங்களேன்.

Link to comment
Share on other sites

அதாவது இந்த 70 வருடங்களில் ஒருவருமே முயட்சி செய்யாததை , சொல்லாததை இப்போது கஜன் ஐந்து வருடங்களில் செய்யப்போகின்றார். இருப்பதையும் இழக்காமல் இருந்தாலே பெரிய காரியம். வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த 11 வருடங்களில் கூத்தமைப்பு இவர் கூறியதை செய்ய முயற்சியாவது மேற்கொண்டதா?

Link to comment
Share on other sites

 

32 minutes ago, MEERA said:

கடந்த 11 வருடங்களில் கூத்தமைப்பு இவர் கூறியதை செய்ய முயற்சியாவது மேற்கொண்டதா?

 

இவருக்கும் இன்னுமொரு முப்பது வருடங்களை கொடுத்தால் என்ன புதிதாக இழக்க வேண்டி இருக்கும்? ஒன்றுமில்லை. ஒற்றை ஆட்சியின் கீழ் மக்களெல்லாம் கொழும்பு தமிழர் போல சிங்களம் படித்து இரு மொழிப் புலமையுடன் தாமாகவே மொழிப் பிரச்சினைக்கு முடிவு கண்டு விடுவார்கள்.

பொன்னம்பலம் பரம்பரையும், விக்னேஸ்வரனும் சுமந்திரனும் நன்கு வெற்றியுடன் வாழ்ந்து காட்டிய பாதை சிங்களம் படித்து மொழிப்பிரச்சினையை தீர்ப்பது. அதை தொடர்ந்து விக்னேஸ்வரனின் பாதையில் சிங்களவரின் சம்பந்தியாக கலந்து இனப்பிரச்சினையையும் தீர்த்து கொள்ளலாம். விக்னேஸ்வரனின் பேரப்பிள்ளைகளுக்கு ஏது இனப்பிரச்சினை?

2 hours ago, ஈழப்பிரியன் said:

தள்ளிப் படுத்தால் எப்படித் தான் பிள்ளைப் பெறுவது.

கொஞ்சம் விடுங்களேன்.

சிங்களவருடன் தள்ளிப் படுக்காமல் பிள்ளை பெற்று அடுத்த 30 வருடத்துக்குள் இனப்பிரச்சினையும் தீர்ந்துவிடும்.🤠

 

Link to comment
Share on other sites

1 minute ago, கற்பகதரு said:

 

 

இவருக்கும் இன்னுமொரு முப்பது வருடங்களை கொடுத்தால் என்ன புதிதாக இழக்க வேண்டி இருக்கும்? ஒன்றுமில்லை. ஒற்றை ஆட்சியின் கீழ் மக்களெல்லாம் கொழும்பு தமிழர் போல சிங்களம் படித்து இரு மொழிப் புலமையுடன் தாமாகவே மொழிப் பிரச்சினைக்கு முடிவு கண்டு விடுவார்கள்.

பொன்னம்பலம் பரம்பரையும், விக்னேஸ்வரனும் சுமந்திரனும் நன்கு வெற்றியுடன் வாழ்ந்து காட்டிய பாதை சிங்களம் படித்து மொழிப்பிரச்சினையை தீர்ப்பது. அதை தொடர்ந்து விக்னேஸ்வரனின் பாதையில் சிங்களவரின் சம்பந்தியாக கலந்து இனப்பிரச்சினையையும் தீர்த்து கொள்ளலாம். விக்னேஸ்வரனின் பேரப்பிள்ளைகளுக்கு ஏது இனப்பிரச்சினை?

சிங்களவருடன் தள்ளிப் படுக்காமல் பிள்ளை பெற்று அடுத்த 30 வருடத்துக்குள் இனப்பிரச்சினையும் தீர்ந்துவிடும்.🤠

 

70 வருடம் பொறுத்த நமக்கு இன்னும் ஒரு 5 பொறுத்திருப்பது பெரிய பிரச்சினையே இல்லை. பார்ப்பம், பார்ப்பம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கற்பகதரு said:

 

 

இவருக்கும் இன்னுமொரு முப்பது வருடங்களை கொடுத்தால் என்ன புதிதாக இழக்க வேண்டி இருக்கும்? ஒன்றுமில்லை. ஒற்றை ஆட்சியின் கீழ் மக்களெல்லாம் கொழும்பு தமிழர் போல சிங்களம் படித்து இரு மொழிப் புலமையுடன் தாமாகவே மொழிப் பிரச்சினைக்கு முடிவு கண்டு விடுவார்கள்.

பொன்னம்பலம் பரம்பரையும், விக்னேஸ்வரனும் சுமந்திரனும் நன்கு வெற்றியுடன் வாழ்ந்து காட்டிய பாதை சிங்களம் படித்து மொழிப்பிரச்சினையை தீர்ப்பது. அதை தொடர்ந்து விக்னேஸ்வரனின் பாதையில் சிங்களவரின் சம்பந்தியாக கலந்து இனப்பிரச்சினையையும் தீர்த்து கொள்ளலாம். விக்னேஸ்வரனின் பேரப்பிள்ளைகளுக்கு ஏது இனப்பிரச்சினை?

ஐயா கற்பகம்,

வாக்களித்த மக்களுக்கு இது தெரியாமலா உள்ளது???

நீங்கள் எவ்வளவு கத்தினாலும் அங்குள்ள மக்களின் மனதில் நீங்க குறிப்பிட்ட இருவருக்கும் இடம் உள்ளது. மக்கள் புத்திசாலிகள். அது தான் சுத்துமாத்திரனை விட கஜேந்திரகுமாருக்கு அதிகமாக வாக்களித்துள்ளனர். 

Link to comment
Share on other sites

28 minutes ago, MEERA said:

ஐயா கற்பகம்,

வாக்களித்த மக்களுக்கு இது தெரியாமலா உள்ளது???

நீங்கள் எவ்வளவு கத்தினாலும் அங்குள்ள மக்களின் மனதில் நீங்க குறிப்பிட்ட இருவருக்கும் இடம் உள்ளது. மக்கள் புத்திசாலிகள். அது தான் சுத்துமாத்திரனை விட கஜேந்திரகுமாருக்கு அதிகமாக வாக்களித்துள்ளனர். 

அங்கஜனுக்கு அதையும்விட அதிகம். என்ன இருந்தாலும், எப்படித்தான் எழுதினாலும் சாம் சும்மை உங்களால் தோற்கடிக்கமுடியவில்லையே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, nunavilan said:

 

 
அடுத்த ஐந்து வருடங்களுக்கு எப்படி செயல்பட போகிறீர்கள்?
கஜேந்திரகுமார் பொன்னம்பலம்:-
 
எமது செயல்பாடுகள் மூனறு கோணங்களில் அமையும்.
 

 

ஏதாவது அமைச்சுப் பொறுப்பை ஏற்று வாக்குப் போட்ட மக்களுக்கு  நல்லது செய்து கொன்டு உங்கள் அரசியலையும் தொருங்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எத்தனையோ தேசங்களுக்கு போயிருக்கேன்.. என் தாயக பூமியில் தான் கடற்கரை முள்ளு வேலிக்குள் அடைபட்டுக்கிடக்குது காண்கிறேன். உங்களுக்கு அதன் வலி புரிய வாய்ப்பில்லை. உக்ரைனுக்கு நீலிக்கண்ணீர் வடிக்கிறீங்க. அப்பவே விளங்கிட்டுது இப்படி கருத்து வருமுன்னு. கண்டுகொள்ளவதில் பயனில்லை. ஏனெனில்.. எல்லாத்தையும் சகித்துப் போகிற.. கூட்டத்துக்குள் நீங்கள் வந்து கனகாலம். 
    • இராணுவத்தின் நிர்வாகத்தின் கீழ் ஒட்டுசுட்டான் ஓட்டு தொழிற்சாலை – புனரமைப்பையும் ஆரம்பித்தனா் March 29, 2024     ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலை இராணுவ சமூக சேவையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. அத்துடன், அந்தத் தொழிற்சாலையை புனரமைக்கும் பணிகளில் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் முல்லைத்தீவு மாவட்டத்துக்கு சென்ற இராணுவத் தளபதி லெப். ஜெனரல் விக்கும் லியனகே பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார். இதன் போது, ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலைக்கும் சென்று அங்கு முன்னெடுக்கப்படும் புனரமைப்பு பணிகளையும் பார்வையிட்டார். இந்தத் தொழிற்சாலையை கடந்த பெப்ரவரி 15ஆம் திகதி முதல் புனரமைப்பு பணிகள் இடம்பெற்று வருகின்றன. கூழாமுறிப்பில் அமைந்துள்ள இந்த ஓட்டுத் தொழிற்சாலை உள்நாட்டு போர் காரணமாக கடந்த 1983ஆம் ஆண்டு முதல் செயலிழந்து காணப்பட்டது. எனினும், 2009ஆம் ஆண்டின் பின்னர் இந்தத் தொழிற்சாலையை மீண்டும் இயக்க மாறி மாறி வந்த அரசாங்கங்கள் உறுதியளித்தன. ஆனால், அவை எதுவும் நடக்கவில்லை. இந்த நிலையிலேயே, இலங்கை பீங்கான் கூட்டுத்தாபனம் தொழிற்சாலையை இராணுவ சமூக சேவையின் கீழ் வழங்கியுள்ளது. இதைத் தொடர்ந்தே தொழிற்சாலையை புனரமைக்கும் பணிகளில் இராணுவம் ஈடுபட்டுள்ளது. “நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவும் உள்நாட்டு மக்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் அந்தப் பகுதி மக்களின் நலனை மேம்படுத்தவும் இந்த தொழிற்சாலை புதுப்பிக்கப்படுகிறது” என்று இராணுவம் தெரிவித்துள்ளது.   https://www.ilakku.org/இராணுவத்தின்-நிர்வாகத்த/
    • பிளவை நோக்கிச் செல்லும் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன ஜனாதிபதி தேர்தலில்  கட்சியின் வேட்பாளரை நிறுத்தவேண்டும் என ஒரு தரப்பினரும் ஜனாதபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கவேண்டும் என மற்றைய தரப்பினரும்  உறுதியாக நிற்பதன் காரணமாக ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன பிளவுபடும் நிலை உருவாகியுள்ளதாக டெய்லிமிரர் செய்தி வெளியிட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் ராஜபக்ச குடும்பத்திற்கு ஆதரவான தரப்பினர் கட்சி தனது சொந்தவேட்பாளரை நிறுத்தி தேர்தலில் போட்டியிடவேண்டும் என  தெரிவித்துள்ளனர். கட்சியின் நிறைவேற்றுகுழுவின் கூட்டத்தில் இந்த கருத்து வெளியாகியுள்ளது - எனினும் தேர்தல் திகதி அறிவிக்கப்படாததால் இது குறித்து கட்சி இன்னமும் தீவிரமாக ஆராயவில்லை. இதேவேளை அரசாங்கத்தில் அமைச்சரவை பதவிகளை வகிக்கும்  பொதுஜனபெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தேர்தலில் போட்டியிடும் பட்சத்தில் அவருக்கே ஆதரவளிக்கவேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டை கொண்டுள்ளனர். R   https://www.tamilmirror.lk/செய்திகள்/பிளவை-நோக்கிச்-செல்லும்-ஸ்ரீலங்கா-பொதுஜனபெரமுன/175-335341
    • முல்லைத்தீவில் புத்தாண்டை முன்னிட்டு இராணுவத்தின் மாபெரும் விளையாட்டு ! (புதியவன்) இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் மாபெரும் விளையாட்டு விழா முன்னாயத்த கலந்துரையாடல். மலர இருக்கும் 2024 ஆம் ஆண்டு தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட இலங்கை இராணுவத்தின் 59 வது படைப்பிரிவின் ஏற்பாட்டில் முள்ளியவளை பிரதேசம் மாமூலை டைமன் விளையாட்டுக் கழக மைதானத்தில் (07.04.2024) அன்று மாபெரும் விளையாட்டு நிகழ்வு நடைபெறவுள்ளது. அத்தோடு அன்றைய தினம் காலையில் மரதன் ஓட்டம், துவிச்சக்கரவண்டி ஓட்டம், ஏனைய மைதான விளையாட்டுக்கள், இரவு மாபெரும் இன்னிசை நிகழ்வும் இடம்பெறவுள்ளது. இதன் முன்னாயத்த கலந்துரையாடல் இன்றைய தினம் (28) மு.ப 10.00 மணியளவில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் முல்லைத்தீவு மாவட்ட 59 வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர்ஜென்ரல் பிரசன்ன விஜயசூரிய தலைமையில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் பிரதம அதிதியாக மேலதிக மாவட்ட செயலாளர் திரு.எஸ்.குணபாலன் கலந்து சிறப்பித்தார். இந்த நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ம.உமாமகள், முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , வலயக்கல்வி பணிமனையின் அதிகாரிகள், கலாசார உத்தியோகத்தர், மாவட்ட மருத்துவர்கள் , முல்லைத்தீவு மாவட்ட இராணுவ அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.   https://newuthayan.com/article/புத்தாண்டை_முன்னிட்டு_இராணுவத்தின்_மாபெரும்_விளையாட்டு_கலந்துரையாடல்!  
    • மக்கள் தொகை முதன்முறையாக வீழ்ச்சி!   புதியவன் சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக நாட்டின் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று இலங்கை பதிவாளர் பணியக புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஓராண்டு காலப்பகுதியில் மக்கள் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த மக்கள் தொகை ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 395 ஆல் குறைவடைந்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளால் நாட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அத்துடன், பிறப்பு வீதமும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் காரணிகளால் நாட்டின் மொத்த சனத்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.(க) https://newuthayan.com/article/மக்கள்_தொகை_முதன்முறையாக_வீழ்ச்சி!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.