Jump to content

யாருக்கு அளித்த அங்கீகாரம்? புலி நீக்க அரசியலுக்கா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

-கார்வண்ணன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் சம்பந்தன், சுமந்திரன் ஆகியோர் புலி நீக்க அரசியலை முன்னெடுத்தனர் என்ற குற்றச்சாட்டு பலகாலமாக கூறப்பட்டு வரும் ஒன்று.

TNA meets President. | Live 24

புலிகளின் ஆதரவுடன் கூட்டமைப்புக்குள்  வந்தவர்களை- அவர்களின் கொள்கைகளுடன் ஒத்துப் போகிறவர்களை, படிப்படியாக கட்சியை விட்டு நீக்கி புலி நீக்கத்தை இவர்கள் செயற்படுத்தினார்கள் என்பது குற்றச்சாட்டு.

2010 பொதுத் தேர்தலிலின் போது செல்வராஜா கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன் ஆகியோருக்கு போட்டியிடும் வாய்ப்பு மறுக்கப்பட்டு, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனித்துப் போட்டியிட முனைந்த போது தொடங்கியது இந்தக் குற்றச்சாட்டு.

அதற்குப் பின்னர், அனந்தி சசிதரன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட போதும் அதே குற்றச்சாட்டு கூறப்பட்டது.

புலிகளால் அரசியலுக்குக் கொண்டு வரப்பட்டவர்கள் எல்லோரும் புலிகளின் கொள்கை வழியில் இருப்பவர்கள் அல்ல. இப்போது இருக்கின்றவர்களும் அல்ல.

உதாரணத்துக்கு, கிழக்கில் புலிகளால் நாடாளுமன்றத் தேர்தலில் நிறுத்தப்பட்ட ஜெயானந்த மூர்த்தியும்,  வன்னியில் களமிறக்கப்பட்ட சதாசிவம் கனகரத்தினமும் இப்போது ‘மொட்டு’ கட்சியில் இருக்கின்றனர்.

அதுபோல இன்னும் பலர் வழிமாறி தடம் மாறி சென்று விட்டனர்.

தமிழ் மக்களின் உரிமை வேட்கையை ...

செல்வராஜா கஜேந்திரனுக்கும், பத்மினி சிதம்பரநாதனுக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டதில் தொடங்கிய புலி நீக்க அரசியல் என்ற குற்றச்சாட்டு இந்த தேர்தலின் போதும் பிரசாரத்துக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் வேட்பாளர் அனந்தி சசிதரன்  பிரசார மேடைகளில் கூட்டமைப்பு தன்னை மாகாணசபைத் தேர்தலில் நிறுத்தி விட்டு, தோற்கடிக்க முயன்றது என்று குற்றம்சாட்டினார்.

அதாவது, புலிகளுக்கு செல்வாக்கு இல்லை என்பதை நிரூபிக்க தன்னைத் தோற்கடிக்க சதி செய்யப்பட்டது என்று ஒரு குற்றச்சாட்டை அவர் முன்வைத்தார்.

உண்மை அதற்கு மாறானது. அனந்தி சசிதரனை கூட்டமைப்பு போட்டியில் நிறுத்தியதே அவர் மூலம் அனுதாப வாக்குகளையும், புலிகள் ஆதரவு வாக்குகளையும் பெற வேண்டும் என்பதற்காகத் தான்.

மாகாணசபைத் தேர்தலில் புலிகளின் செல்வாக்கு இல்லை என்று நிரூபிப்பதன் மூலம் கூட்டமைப்புக்கு என்ன இலாபம் கிடைத்திருக்கப் போகிறது? 

இதுபோன்ற தர்க்க நியாய முரண்களைக் கூட அவர் கவனத்தில் கொள்ளவில்லை.

தன்னைத் தோற்கடித்து புலிகளைத் தோற்கடித்து விட்டதாக திருப்திப்பட்டுக் கொள்ள கூட்டமைப்பு விரும்பியது என்று அவர் கூறியது, யாராலும் நம்பக் கூடியதாக இருக்கவும் இல்லை.

ஆனால், அவர் இந்தக் கருத்தின் மூலம், இம்முறை தேர்தலில் தன்னை புலிகளின் பிரதிநிதியாக மக்கள் முன்னிலையில் நம்ப வைக்க முயன்றார்.

தனக்கு ஏற்படும் தோல்வி புலிகளின் தோல்வியாகி விடும் என்று அர்த்தப்படுத்த முயன்றார்.

அதேவேளை, தமிழ்த் தேசிய நீக்க அரசியலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுக்கிறது என்ற குற்றச்சாட்டும் இம்முறை முன்வைக்கப்பட்டது.

இந்த தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தோற்கடிப்பதே எல்லா தரப்புகளினதும் பிரதான இலக்காக இருந்தது.

அரசாங்கமும் அதையே தான் செய்தது. தமிழ்க் கட்சிகளும் அதனையே தான் செய்தன. புலம்பெயர் தமிழர்கள் இரவுபகலாக அதற்காக வேலை செய்தனர். 

புலம்பெயர் ஊடகங்கள், சமூக வலைத்தளங்களில் இருப்போர் எல்லாம், கூட்டமைப்பைத் தோற்கடிப்பதற்காக தமது நேரத்தையும் உழைப்பையும் பணத்தையும் செலவழித்தனர்.

இதுபோதாதென்று தமிழ்நாட்டில் செல்வாக்கிழந்து போன கட்சிகள், அமைப்புகள், தலைவர்கள் மட்டுமன்றி, கவிஞர்கள், இயக்குனர்கள், நடிகர்கள் கூட கூட்டமைப்புக்கு எதிராக வேலை செய்தனர்.

இங்குள்ள தமிழ் மக்கள் யாரை ஆதரிக்க வேண்டும், யாரை நிராகரிக்க வேண்டும் என்று அவர்கள் எல்லாம் பாடம் கற்றுக் கொடுக்க முனைந்தனர்.

இங்குள்ள தமிழ் மக்களுக்கு அரசியல் தெரியாது என்பது போலவும், இவர்களை ஒன்றுமறிய மந்தைகள் போன்றும் கருதிக் கொண்டு, அவர்களும், வேறெங்கோ எல்லாம் இருப்பவர்களும் தமிழ் மக்கள் கூட்டமைப்பைத் தோற்டிக்க வேண்டும் என்று வழிகாட்ட முனைந்தனர்.

இவையனைத்தும் நடந்தது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தோற்கடிப்பதற்காகவே. 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தோற்கடிப்பதற்காக  பணியாற்றிய பெரும்பாலானவர்களால் சரியான வழி எது என்றோ, சரியான தெரிவு எது என்றோ வழிகாட்ட முடியவில்லை.

ஏனென்றால், அதற்காக அறிவு அவர்களிடம் இல்லை. அதற்கான தெளிவும் அவர்களிடம் இல்லை. தவறைச் சுட்டிக்காட்டுபவர்களுக்கு சரியானதைச் சுட்டிக்காட்டும் தகுதியும் இருக்க வேண்டும்.

தங்களையே சரியாக வழிப்படுத்த, வழிநடத்த தெரியாதவர்களெல்லாம், இங்குள்ள தமிழ் மக்களுக்கு வழிகாட்டுவதற்கு புறப்பட்டு வந்தமை தான், இந்த தேர்தலில் மிகப்பெரிய அவலம்.

தமிழ் மக்களுக்கான ஒரு தலைமைத்துவ வெற்றிடம், எந்தளவுக்கு நிலைமையைக் கொண்டு வந்திருக்கிறது என்பதற்கு இதுவே சான்று.

தங்களது சொந்த நாட்டில் ஆயிரம் வாக்குகளை பெறுவதற்குக் கூட திராணியற்றவர்கள் எல்லாம், கூட்டமைப்பை தோற்கடிக்க, அறைகூவல் விடுக்கும் அளவுக்கு தமிழ்த் தேசிய அரசியலில் வெறுமை ஆட்கொண்டிருக்கிறது.

2009 இற்குப் பின்னர் தமிழரின் அரசியல் தலைமைத்துவத்தில் ஏற்பட்ட வெற்றிடம் இன்னமும் நிரவப்படவில்லை. 

தலைமை தாங்குவதாக வந்தவர்கள் எவரும் அதற்கான தகுதியுடன் இருக்கவும் இல்லை.

அவ்வாறு இருந்திருந்தால், இப்படியொரு அவல நிலை வந்திருக்காது.

சொந்த மக்களின் மீது நம்பிக்கை வைக்காமல்,  சொந்த மக்களுக்குப் புத்தி சொல்ல வெளிநாட்டில் இருந்து ஆட்களைக் கூட்டி வரும் அளவுக்குத் தான், மாற்று அரசியல் இருக்கிறது.

மாற்று அரசியல், மாற்றுத் தலைமைத்துவம் என்பன, அதுவல்ல. அது மக்களிடம் இருந்து வர வேண்டியது. மக்களால் உணர வேண்டியது. 

அதனை வெளியில் உள்ள எவரும் ஏற்படுத்தி விட முடியாது. அவ்வாறாக உருவாக்கப்படும் மாற்றம் நிரந்தரமானதாக இருக்கவும் முடியாது.

தமிழ்த் தேசிய அரசியலை முன்னெடுத்த தரப்புகள் இம்முறை தமக்குள் சண்டையிட்டுக் கொண்டனவே தவிர பிரதான எதிரியை மறந்து போய் விட்டனர்.

அதன் விளைவு இந்த தேர்தலில் எதிரொலித்திருக்கிறது.

ஆயினும், கடும் எதிர்ப்பிரசாரங்களுக்கு மத்தியிலும், இந்த தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்திருக்கும் வாக்குகள் - முதன்மையிடம் எதனை உணர்த்தியிருக்கிறது?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய நீக்க அரசியலை முன்னெடுக்கிறது என்ற பிரசாரத்துக்கு கிடைத்த அங்கீகாரத்தையா?

புலி நீக்க அரசியலை முன்னெடுக்கிறது என்ற பிரசாரத்துக்கு கிடைத்த அங்கீகாரமா?

இப்படி கேள்வி எழுப்ப முயன்றால் அது யாருக்கு அவமானம்? யாருக்குத் தலைகுனிவு?

தமிழ்த் தேசிய அரசியலையும் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தையும் ஒன்றாக குழப்பியதன் விளைவு தான் இது.

தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டம், விடுதலைப் புலிகளுடன் முடிந்து போனது. அந்த நிலைப்பாட்டை யாராலும் இனிமேல் முன்னெடுக்கவும் முடியாது. அதனை அடைவதற்கு அரசியல் வழியில் சாத்தியமும் இல்லை.

தமிழ்த் தேசிய அரசியலை முன்னெடுக்கும் சக்திகள், தமது நலனுக்காக, தமது வெற்றிக்காக தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தை ஒரு பிரசார ஆயுதமாக மாற்றினர்.

அதனைக் கையில் எடுத்து, எப்படியாவது வென்று விடலாம், நாடாளுமன்றத்துக்குள் புகுந்து விடலாம் என்று கருதினர்.

அதற்காகத் தான் புலிகளையும், போராட்டத்தையும் இழுத்துக் கொண்டு வந்து தெருவில் நிறுத்தினார்கள். 

புலிகளையும், மாவீரர்களையும், தலைமையையும் பயணம் வைத்து வெற்றி பெற்று விட தலைகீழாக நின்றார்கள்.

புலிகள் ஒருபோதும், நாடாளுமன்றம் செல்ல விரும்பியதில்லை. விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி என்ற கட்சியைப் பதிவு செய்தாலும், அது அவர்களின் ஒரு அரசியல் உத்தியாக இருந்ததே அன்றி, அதனை நாடாளுமன்றம் செல்வதற்கான வழியாக பயன்படுத்த முயன்றதில்லை.

அவ்வாறான புலிகளை பணயம் வைத்து அவர்களின் கொள்கை , இலட்சியம் போன்றவற்றை வியாபாரப் பொருளாக்கி அரசியல் ஆதாயம் தேட முனைந்தனர்.

இந்த தரப்புகள் இந்த தேர்தலின் மூலம் இலாபம் அடைந்திருக்கலாம். அல்லது நட்டம் அடைந்திருக்கலாம்.

ஆனால் புலிகள், போராட்டம், தலைமை ஆகியவற்றின் நிலை என்னவாகும் என்று ஒரு கணம் கூட சிந்திக்கவில்லை.

அரசாங்கத்தின் ஏமாற்றுப் போக்கு ...

புலிகளைத் தோற்கடிப்பதற்காக தன்னைத் தோற்கடிக்க கூட்டமைப்பு முயன்றது என்று கூறி வாக்கு கேட்ட, அனந்தி சசிதரன் வெற்றி பெற முடியாமல் போனது, அவரது தோல்வியாக அல்லது புலிகளின் தோல்வியா?

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி மாத்திரமன்றி தமிழ் தேசிய கூட்டமைப்பும் கூட புலிகளைப் பணயம் வைக்கத் தவறவில்லை.

உள்நாட்டிலும் புலம்பெயர் தேசங்களிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை புலிகளுக்கு எதிரான அமைப்பாக, அதன் தலைவர்களை புலிகளுக்கு எதிரானவர்களாக அடையாளப்படுத்தி, அதனை தோற்கடிக்க முயன்றவர்கள் அடைந்திருக்கும் தோல்வி எதனை உணர்த்துகிறது?

இதையெல்லாம் மீறி கூட்டமைப்புக்கு கிடைத்திருக்கும் ஆதரவும் வாக்குகளும், புலி நீக்க அரசியலுக்கான, தமிழ்த் தேசிய நீக்க அரசியலுக்கான அங்கீகாரமாக அல்லவா எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும்.

தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள், இந்த ஆபத்தான ஆயுதங்களைக் கையில் எடுப்பதற்கு முன் இதையெல்லாம் யோசித்திருக்க வேண்டுமல்லவா?.

https://www.virakesari.lk/article/87871

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்தேசியக்கூட்டமைப்பு எப்போது அறுதிப்பெரும்பானமை பெற்று வென்றது வீரகேசரி இப்படிப்பீத்திக்கொள்ளுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீரகேசரி சொல்வதன்படி பார்த்தால், கூத்தமைப்பு புலிநீக்க அரசியலைச் செய்வதென்பதை மக்கள் ஆதரிக்கிறார்கள் என்றால், ஏன் இம்முறை கூத்தமைப்பிற்கான ஆசனங்களில் சரிவு ஏற்பட்டது? 18 ஆசனங்களாக இருந்து 9 + 1 ஆக குறைந்திருப்பதன் காரணம் என்ன? புலிநீக்க அரசியலை கூத்தமைப்புச் செய்வதை மக்கள் ஆதரிப்பதாக வந்துவிடும் என்று கூறும் வீரகேசரி, கூத்தமைப்பின் புலிநீக்க அரசியலுக்கான தண்டனையாகவே இத்தேர்தலில் மக்களில் ஒருபகுதியினர் எதிர்த்து வக்களித்தனர் என்று ஏன் கூறவில்லை? கூத்தமைப்பி புலிநீக்க அரசியலை மக்கள் ஏற்றுக்கொண்டிருந்தால் போக்குற்றவாளிகளின் ஏஜெண்டுக்கள் வடக்கிலும், இனத்துரோகிகளும் கொலைகாரர்களும் கிழக்கிலும் வெற்றிபெற்றிருப்பது எவ்வாறு? இவர்களுக்குக் கிடைத்த வாக்குகள் கூத்தமைப்பின் புலிந்நீக்கத்திற்கல்லவா கிடைத்திருக்க வேண்டும்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/8/2020 at 23:41, பிழம்பு said:

ள்நாட்டிலும் புலம்பெயர் தேசங்களிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை புலிகளுக்கு எதிரான அமைப்பாக, அதன் தலைவர்களை புலிகளுக்கு எதிரானவர்களாக அடையாளப்படுத்தி, அதனை தோற்கடிக்க முயன்றவர்கள் அடைந்திருக்கும் தோல்வி எதனை உணர்த்துகிறது?

இதையெல்லாம் மீறி கூட்டமைப்புக்கு கிடைத்திருக்கும் ஆதரவும் வாக்குகளும், புலி நீக்க அரசியலுக்கான, தமிழ்த் தேசிய நீக்க அரசியலுக்கான அங்கீகாரமாக அல்லவா எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும்.

தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள், இந்த ஆபத்தான ஆயுதங்களைக் கையில் எடுப்பதற்கு முன் இதையெல்லாம் யோசித்திருக்க வேண்டுமல்லவா?.

ஆக கிழக்கு மாகாண மக்கள் கூத்தமைப்பின் புலிநீக்க அரசியலுக்கு சாவு மணி அடித்திருக்கும் வேளையில் 
வடக்கு மாகாண மக்கள் புலி நீக்க அரசியலுக்கு ஆதரவளித்திருக்கிறார்கள் என்றும் எடுத்துக்கொள்ளலாம் அல்லவா ....?
அரசியல் அவியலாளர்கள் கூடிபோய்விட்டால்  இப்படித்தான் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விழுந்த அடியில் ஏற்கனவே குழம்பி போய்  உள்ள கூத்தமைப்பு  இதை எழுதிய வீரகேசரி கார்வண்ணனை தேடிப்போய் உதைக்கப்போகினம் .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • வயதைப் பார்த்தால் வேலை செய்பவர்கள் போல தெரியலை.
    • @nunavilan என்ன‌ அண்ணா க‌ள‌த்தில் குதிக்கிற‌ ஜ‌டியா இல்லையா இன்னும் சில‌ ம‌ணி நேர‌ம் தான் இருக்கு🙏🥰...................................
    • @நீர்வேலியான், உங்கள் பதில்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன😀 வெற்றிபெற வாழ்த்துக்கள்😃 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.