Jump to content

கிழக்கைச் சேர்ந்த அனைத்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ள த.ம.விடுதலைப் புலிகள் கட்சி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் இருப்பினை பாதுகாக்கின்ற வகையில் கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒற்றுமையுடன் சேர்ந்து பயணிப்பதற்கு நாம் பகிரங்கமாக அழைப்பு விடுக்கின்றோம் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூபாலபிள்ளை பிரசாந்தன் அழைப்பு விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு - வாவிக்கரை வீதியில் அமைந்துள்ள அவரது கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வேண்டுகோளை விடுத்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் ஒரு பாரிய செய்தியினை வெளிப்படுத்தியிருக்கின்றது. கடந்த 40 வருடங்களுக்கு மேலாக பல வேதனைகளுக்கு மத்தியில் வாழ்ந்து வந்த மக்கள் 2015 ஆம் ஆண்டு தொடக்கம் அபிவிருத்தியிலும், தனித்துவத்திலும் மிகவும் மோசமாகப் பின்னடைவை எதிர்நோக்கியிருக்கின்றார்கள்.

எனவே மட்டக்களப்பு மாவட்டத்தில் அபிவிருத்திகளும் முன்னெடுக்கப்படல் வேண்டும். அதேபோல் தனித்துவமும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை மட்டக்களப்பு மாவட்ட மக்கள் கடந்த தேர்தல் மூலம் வெளிப்படுத்தியிருக்கின்றார்கள்.

இதனை எமது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி , எமது தலைவர் சிவனேசத்துரை சந்திரகாந்தனின் தலைமையில் முன்னெடுத்துச் செல்வோம் என்பதில் எமக்கு நம்பிக்கை இருக்கின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தமிழ் மக்கள் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிகமான வாக்குகளை வழங்கி இம்முறை 4 நாடாளுமன்றப் பிரதிநிதிகளைத் தேர்வு செய்துள்ளார்கள்.

இவ்வாறு தெரிவு செய்யப்பட்ட ஒவ்வாருவரும் ஒவ்வொரு அரசியற் கட்சி சார்ந்தவர்களாக இருந்தாலும், ஒவ்வொரு கட்சிக் கொள்கை சார்ந்தவர்களாக இருந்தாலும், அரசியல் என்பது மக்களுக்காகவே தவிர தங்களுக்காகவோ, தாங்கள் சார்ந்த கட்சிக்காகவோ அல்ல என்பதைப் புரிந்து கொண்டு, மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்டடிருக்கின்ற அனைத்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும், ஒரே கூரையின் கீழ் மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கான களத்தினை எமது கட்சி அமைத்துக் கொடுக்கும் என்ற அடிப்படையில், எதிர்வரும் 20ஆம் திகதி ஆரம்பிக்கப்பட இருக்கின்ற புதிய நாடாளுமன்ற அமர்வில் எமது கட்சித்தலைவரான நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள சி.சந்திரகாந்தன் அந்த அமர்வில் கலந்து கொள்வார்.

எனவே மட்டக்களப்பிலிருந்து தெரிவு செய்யப்பட்டுள்ள 4 தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும், அதேபோல் தமிழர்களின் இருப்பினை பாதுகாக்கின்ற வகையில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த அனைத்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒற்றுமையுடன் சேர்ந்து பயணிப்பதற்கு நாம் பகிரங்கமாக அழைப்பு விடுக்கின்றோம்.

கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் வசமிருந்த கிழக்கு மாகாணசபை மீண்டும் தமிழர்களின் வசம் வரவேண்டும் என்பதில் கிழக்கு மாகாண தமிழ் மக்கள் உறுதியாக இருக்கின்றார்கள்.

ஆனால் அம்பாறை மாவட்டத்திலும், திருகோணமலை மாவட்டத்திலும், தமிழர்களின் இருப்பை பாதுகாக்க வேண்டும் எனும் நோக்கில், எமது கட்சி கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் போட்டியிட்டிருந்தது.

ஆனாலும் திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டத்திலுள்ள தமிழ் மக்களை என்றும் நடுக்கடலில் விடுவதற்கு எமது கட்சி தயாராக இல்லை. ஏனெனில் அவர்கள் அரசியல் அநாதைகளாக நடுத்தெருவில் விடப்பட்டது போன்று பல செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

எனவே அம்பாறை மாவட்டத்திற்கும், திருகோணமலை மாவட்டத்திற்கும், எமது கட்சி அரசியல் தலைமைத்துவத்தை வழங்குவதற்குத் தயாராக இருக்கின்றது. இந்நிலையில் எமது கட்சி எதிர்வரும் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் கிழக்கு மாகாணத்தில் உள்ள திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் போட்டியிடும்.

இந்நிலையில் தமிழர்கள் நிருவகித்த கிழக்கு மாகாண சபையை மீண்டும் பொறுப்பேற்று செயற்படுத்துவதற்கு எமது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தயாராக இருக்கின்றது.

மத்திய அரசாங்கத்துடன் ஒரு இணக்க அரசியல் செய்தவர்கள் நாங்கள் என்ற வகையில் மத்தியில் ஆட்சி அமைத்திருக்கின்ற ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோருடன் இணக்க ஆட்சி நடத்திய நட்பு இருக்கின்றது. அவர்களும் எம்முடன் கலந்துரையாடியுள்ளார்கள்.

எமது கட்சித் தலைவருக்கு அமைச்சுப் பதவி வழங்குவது தொடர்பில் மிக விரைவில் இறுதித் தீர்மானங்கள் எடுக்கப்படும்.

புதன்கிழமை அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளன. இந்நிலையில் எமது தலைவர் தடுப்புக் காவலில் இருப்பதன் காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சிறப்புரிமை என்கின்ற அடிப்படையில் எதிர்வரும் 20 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற அமர்வுக்குரிய நீதிமன்ற அனுமதி பெறப்பட்டுள்ளது.

அவர் நாடாளுமன்றம் சென்ற பின்பே ஏனைய நடைமுறைகள் முன்னெடுக்கப்படும் என அவர் இதன்போது மேலும் கூறியுள்ளார்.

https://www.tamilwin.com/politics/01/253303?ref=home-latest

இந்தாங்கோ இன்னொரு செய்தி. இனி இதிலை பிச்சுப்புடுங்குங்கோ.

எண்டாலும் அவர் சொன்னதிலே ஒரு நியாயம் இருக்கு. ஒண்டா இருங்கோ ஒருத்தர் அபிவிருத்தியை செய்யட்டும், ஒருத்தர் தேசியத்தை பாருங்கோ, ஒருத்தர் எல்லை பிரச்சனையை பாருங்கோ.

அது தானே அரசியல். ஒருத்தர் சேர்ந்தும் ஒருத்தர் எதிர்த்தும் அரசியல் செய்யுங்கோ ஆனால் இரண்டுபேரும் ஒண்டா நில்லுங்கோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச ரீதியில் மிகவும் மோசமான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் மற்றும் சொந்த இனத்தை படுகொலை செய்த குற்றச்சாட்டுக்கள் அடங்கிய இந்த சிங்கள பெளத்த பேரினவாத அரச ஒட்டுக்குழுப் பயங்கரவாத அமைப்போடு சேர்வதை தமிழ் மக்களின் உரிமை நாடும் அனைவரும் தவிர்த்துக் கொள்வது நல்லம்.

ஏலவே இவர்களின் எஜமானர்களாக சிங்கள பெளத்த பேரினவாதிகளே இவர்களுக்கு அமைச்சுப் பதவி வழங்காமல் புறக்கணித்துள்ளதாக செய்திகள் வரும் நிலையில்.. சொந்த இனத்தின் குறிப்பாக தமிழ் தேசிய கருத்தியலூடான தமிழ் மக்களின் உரிமை மீட்புக்காக பாடுபட்ட பலரையும் சிங்கள பெளத்த பேரினவாத அரச கூலிகளாக இருந்து படுகொலை செய்த இந்தக் கும்பலோடு எந்தவகையான தொடர்புகளும் பேணப்படுவது ஆபத்தாகவே முடியும். 

இவர்கள் செய்த குற்றங்களுக்கு தண்டிக்கப்பட வேண்டிய தடை செய்யப்பட வேண்டியவர்கள். 

Link to comment
Share on other sites

6 hours ago, nedukkalapoovan said:

சர்வதேச ரீதியில் மிகவும் மோசமான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் மற்றும் சொந்த இனத்தை படுகொலை செய்த குற்றச்சாட்டுக்கள் அடங்கிய இந்த சிங்கள பெளத்த பேரினவாத அரச ஒட்டுக்குழுப் பயங்கரவாத அமைப்போடு சேர்வதை தமிழ் மக்களின் உரிமை நாடும் அனைவரும் தவிர்த்துக் கொள்வது நல்லம்.

ஏலவே இவர்களின் எஜமானர்களாக சிங்கள பெளத்த பேரினவாதிகளே இவர்களுக்கு அமைச்சுப் பதவி வழங்காமல் புறக்கணித்துள்ளதாக செய்திகள் வரும் நிலையில்.. சொந்த இனத்தின் குறிப்பாக தமிழ் தேசிய கருத்தியலூடான தமிழ் மக்களின் உரிமை மீட்புக்காக பாடுபட்ட பலரையும் சிங்கள பெளத்த பேரினவாத அரச கூலிகளாக இருந்து படுகொலை செய்த இந்தக் கும்பலோடு எந்தவகையான தொடர்புகளும் பேணப்படுவது ஆபத்தாகவே முடியும். 

இவர்கள் செய்த குற்றங்களுக்கு தண்டிக்கப்பட வேண்டிய தடை செய்யப்பட வேண்டியவர்கள். 

இங்கு யாருமே சுத்தமானவர்கள் இல்லை. எல்லா கட்சிகளிலும் கொலை காரர்களும் கொள்ளை காரர்களும் கேடடார்கள். ஆனால் எல்லோரும் தெரிவு செய்யப்படவில்லை. பிள்ளையான் தெரிவு செய்யப்படடர். சுரேஷ் பிரேமச்சந்திரனை ஏற்றுக்கொள்ள முடியமென்றால், அடைக்கலத்தை ஏற்றுக்கொள்ள முடியுமென்றால், சித்தார்தனை ஏற்றுக்கொள்ள முடியுமென்றால் ஏன் பிள்ளையானை ஏற்றுக்கொள்ள முடியாது. உங்களில் குற்றமில்லாதவன் முதல் கல்லை எறியக்கடவன். பழையதை கிளறினால் எல்லாருடையதையும் கிளற வேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, முதல்வன் said:

எனவே மட்டக்களப்பிலிருந்து தெரிவு செய்யப்பட்டுள்ள 4 தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும், அதேபோல் தமிழர்களின் இருப்பினை பாதுகாக்கின்ற வகையில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த அனைத்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒற்றுமையுடன் சேர்ந்து பயணிப்பதற்கு நாம் பகிரங்கமாக அழைப்பு விடுக்கின்றோம்.

நல்ல செய்தி ....பயணிக்க வேண்டும் ....தனித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் அத்துடன் அபிவிருத்தி ....செய்து காட்டி முன்னோடியாக இருங்கள்

Link to comment
Share on other sites

பிழவுகளிருந்தாலும் இணைந்து செயற்படுதல் அவசியமானது. அடுத்த தேர்தலை மனதில் கொண்டு மற்றவர்கள் வாருங்கள் கிழக்கின் தேவை கருதி இணைவோமென்றால் அதற்கு மதிப்பளிக்காவிட்டாலும் எதிர்ப்பது என்பது சரியான முடிவல்ல.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஒவ்வொரு பொது த‌ள‌ங்க‌ளிலும் காணொளி பார்த்து முடிந்தது வாசிப்ப‌து உண்டு..................... சீமானுக்கு ஆத‌ர‌வாக‌ 180க்கு மேலான‌ யூடுப் ச‌ண‌ல் இருக்கு......................... புதிய‌த‌லைமுறை ம‌ற்றும் வேறு ஊட‌க‌ங்க‌ளில் ம‌க்க‌ளின் ம‌ன‌ நிலை என்று கீழ‌ வாசிப்ப‌துண்டு நீங்க‌ள் மேல‌ ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணாவுக்கு எழுதின‌தில் என‌க்கு உட‌ன் பாடு இல்லை ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா யாழில் யார் கூட‌வும் வ‌ர‌ம்பு மீறி எழுதும் ந‌ப‌ர் கிடையாது நீங்க‌ள் சீமானில் ஒரு குறை க‌ண்டு பிடிச்சால் க‌ருணாநிதி குடும்ப‌த்தில் ப‌ல‌ நூறு குறைக‌ள் என்னால் க‌ண்டு பிடிக்க‌ முடியும் அதில் பாதி தான் நேற்று உங்க‌ளுக்கு எழுதின‌து ஆனால் நீங்க‌ள் ப‌தில் அளிக்க‌ முடியாம‌ ந‌க‌ர்ந்து விட்டீங்க‌ள்...................................
    • தே. ஆணையம் ஒரு கட்சி அல்ல. அதற்கு ஆதரவாக யூடியூப்பில் எழுத யாரும் இல்லை. ஆனால் - பிஜேபி உட்பட அதை எல்லா கட்சி ஆட்களும் விமர்சிகிறனர். எனவே கட்சி சார்பான காணொளிகளில் தே.ஆ விமர்சிக்கபடுவதை வைத்து த.நா மக்களின் கருத்து அதுவே என சொல்ல முடியாது.  
    • இவரின் செவ்வி பாடப் புத்தகமாக்கப்பட வேண்டும்.    
    • ஆண்ட‌ருக்கு தான் வெளிச்ச‌ம்.............................. யாழை விட்டு பொது யூடுப் த‌ள‌த்தில் காணொளிக்கு கீழ‌ போய் வாசியுங்கோ த‌மிழ் நாட்டு ம‌க்க‌ளின் ம‌ன‌ங்க‌ளில் தேர்த‌ல் ஆணைய‌ம் எப்ப‌டி இருக்கின‌ம் என்று.....................நீங்க‌ள் யாழில் சீமானை ப‌ற்றி தேவை இல்லா அவ‌தூற‌ ப‌ர‌ப்புவ‌தை நிறுத்தினால் ந‌ல்ல‌ம்   உத‌ய‌நிதிக்கு தூச‌ன‌ம் கெட்ட‌ சொல்ட்க‌ள் தெரியாது தானே ந‌ல்ல‌ வ‌ளப்பு......................................................    
    • இப்படி எல்லாம் செய்து 39 தொகுதியில் எத்தனையில் பிஜேபி வெல்வதாக அறிவிப்பார்கள் என நினைக்கிறீர்கள்? ——————————————————— வாக்கு பதிவு சதவீதம் பற்றிய இரு வேறுபட்ட தலவல்கள் வந்ததன் பிண்ணனி. 👇 ———————————— 24 மணி நேரம் கழித்து.. வெளியான தமிழக வாக்குப்பதிவு சதவிகிதம்.. இந்தளவுக்கு தாமதம் ஆக என்ன காரணம் VigneshkumarPublished: Saturday, April 20, 2024, 20:16 [IST]   சென்னை: தமிழ்நாட்டில் நேற்று லோக்சபா தேர்தல் நடந்த நிலையில், சுமார் 24 மணி நேரத் தாமதத்திற்குப் பிறகு இன்று மாலை தான் இறுதி வாக்கு சதவிகிதம் வெளியிடப்பட்டுள்ளது. இந்தளவுக்குத் தாமதம் ஏற்பட என்ன காரணம் என்பதைப் பார்க்கலாம். வாக்குப்பதிவு: அமைதியான முறையிலேயே வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில், நேற்று தமிழகத்தில் பதிவான வாக்குகள் எத்தனை என்பதில் குழப்பமே நிலவி வந்தது. நேற்று மாலை முதலில் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு மாநிலத்தில் 72.09% வாக்குகள் பதிவானதாக அறிவித்தார். ஆனால், நள்ளிரவில் வெளியான மற்றொரு டேட்டாவில் வாக்கு சதவிகிதம் 69.46% என்று கூறப்பட்டு இருந்தது. இதுவே பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இருப்பினும், இறுதி வாக்குப்பதிவு சதவிகிதம் இன்று காலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது. இருப்பினும், இரண்டு முறை இது குறித்த செய்தியாளர் சந்திப்பு தள்ளிப்போனது. 12, 3 இரண்டு முறை தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தனது செய்தியாளர் சந்திப்பை ரத்து செய்தார். இது பல வித கேள்விகளை எழுப்பியது. தாமதம்: எப்போதும் தேர்தல் முடிந்து மறுநாள் காலையே இறுதி நம்பர் வந்துவிடும். ஆனால், இந்த முறை வாக்குப்பதிவு முடிந்து 24 மணி நேரம் கழித்து இன்று மாலை தான் இறுதி டேட்டா வந்தது. அதன்படி தமிழ்நாட்டில் 69.45% வாக்குகள் பதிவாகி இருக்கிறது. அதிகபட்சமாகத் தருமபுரியில்81.48% வாக்குப்பதிவும், குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 53.91% வாக்குகள் பதிவாகி உள்ளது. இந்தளவுக்குத் தாமதம் ஏன் என்று பலருக்கும் கேள்வி எழுந்தது. மாவட்ட ரீதியான தகவல்களைப் பெறுவதில் தாமதம் ஆனதே இதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. கடந்த தேர்தல்களில் நள்ளிரவில் ஒரு டேட்டா வரும். தொடர்ந்து காலை இறுதி நம்பர் வரும். தொலைதூர கிராமங்கள் மற்றும் மலைப் பிரதேசங்களில் உள்ள கிராமங்களில் இருந்து இறுதி டேட்டா வர தாமதம் ஆகும். அதுவே இறுதி வாக்கு சதவிகிதம் மறுநாள் வரக் காரணமாக இருக்கும். அதுவும் கூட ஓரிரு சதவிகிதம் மட்டும் மாறுபடும்.. அதுவும் இறுதி நம்பர் அதிகரிக்கவே செய்யும். ஆனால், இந்த முறை குறைந்துள்ளது. என்ன காரணம்: இந்த இறுதி நம்பர் என்பது நள்ளிரவில் வெளியான டேட்டாவுடன் கிட்டதட்ட ஒத்துப் போய் தான் இருந்தது. ஆனால், மாலை வெளியான டேட்டா உடன் ஒப்பிடும் போது தான் பெரியளவில் முரண்பாடு இருந்தது. காரணம் projecton எனப்படும் அனுமானத்தை வைத்து மாலையில் இறுதி நம்பரை கொடுத்ததே இதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. தாமதம் ஏன்: வாக்குப்பதிவுக்கு புதிய செயலியை அவர்கள் பயன்படுத்திய நிலையில், அதில் இருந்த டேட்டாவை வைத்து புரோஜக்ஷன் அடிப்படையில் வாக்கு சதவிகிதத்தைக் கொடுத்ததே டேட்டா தவறாகக் காரணமாக இருந்துள்ளது. ஏற்கனவே இப்படி ஒரு முறை தவறு நடந்துவிட்டதால்.. மீண்டும் தவறு நடக்கக்கூடாது என்பதற்காகவே மாவட்ட வாரியாக பெற்ற தகவல்களை ஒரு முறைக்கு இரண்டு முறை உறுதி செய்துவிட்டு இறுதி செய்துவிட்டு வாக்குப்பதிவு சதவிகிதத்தை வெளியிட்டுள்ளனர். இதுவே தாமதத்திற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. https://tamil.oneindia.com/news/chennai/what-is-the-reason-behind-delay-in-final-polling-percentage-number-in-tamilnadu-599947.html
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.