Jump to content

இராணுவத்தையும் பெளத்த சிங்கள கொள்கையையும் பாதுகாக்கும் ஆட்சியை உருவாக்கியுள்ளோம் -சரத் வீரசேகர


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

(ஆர்.யசி)

செய்யாத போர்க்குற்றத்தை செய்ததாக கூறி இராணுவத்தை தண்டிக்க முயற்சித்த ஆட்சியை வீழ்த்தி இராணுவத்தையும், சிங்கள பெளத்த கொள்கையையும் பாதுகாக்கும் அரசாங்கமொன்ரை உருவாக்கியுள்ளோம். எக்காரணம் கொண்டும் இராணுவத்தை சர்வதேச அரங்கில் தண்டிக்க இடமளிக்க மாட்டோம் என்கிறார் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்பினர்  ரியல் அட்மிரல் சரத் வீரசேகர.

போர் குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக தொடர்ச்சியாக கருத்துக்களை முன்வைத்துவரும் சரத் வீரசேகரவின் தற்போதைய நிலைப்பாடு குறித்து வியவிய போதே அவர் இதனைக் கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

இறுதி யுத்தத்தில் நாம் செய்யாத குற்றமொன்றை செய்ததாக கூறி முன்னைய நல்லாட்சியாளர்கள் ஜெனிவாவில் பொய்யான சாட்சியங்களை கொடுத்தனர். அதனை எம்மால் ஒரு போதும் ஏற்றுகொள்ள முடியாது. அவ்வாறான சூழ்நிலையில் நான்  எந்தவித அரசியல் பின்னணியும், தூண்டுதலும் இல்லாது சுயமாக ஜெனிவாவில் எமது இராணுவத்தை நியாயப்படுத்தி பேசினேன். தொடர்ச்சியான எனது முயற்சியை நான் முன்னெடுத்துக்கொண்டே இருந்தேன். எனினும் மங்கள சமரவீர போன்றவர்கள் செய்த அநியாயத்தின் மூலமாக கடந்த காலங்களில் அளவுக்கு அதிகமான சர்வதேச அழுத்தங்களும் புலம்பெயர் புலி அமைப்புகளின் தலையீடுகளும் ஏற்பட்டது.

ஜெனிவா பிரேரணை கோரிக்கைகளை செய்வ வேண்டும் என்ற எந்தவொரு கட்டாயமும் எந்தவொரு நாட்டுக்கும் இல்லை.  ஆனால் நல்லாட்சி அரசாங்கம் பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்கியதன் மூலமாக வலுக்கட்டாயமான தலையீடுகள் ஏற்பட்டது. எமது இராணுவத்தை சர்வதேச அரங்கில் தண்டிக்கும் நிலைமைக்கு கொண்டு சென்றனர். அவர்களின் ஆட்சி தொடர்ந்திருந்தால் இன்று எமது இராணுவத்தினர் வெளிநாடுகளுக்கு சென்றிருக்க முடியாது. இராணுவத்தை கைது செய்து சிறையில் அடைக்கும் நிலைமையே உருவாகியிருக்கும். சர்வதேச ஆய்வாளர்கள் அறுவர் இலங்கையை நியாயப்படுத்திய போதும் கூட மங்கள சரமவீர மற்றும் நல்லாட்சி உறுப்பினர்கள் நாம் குற்றவாளிகள் என ஜெனிவாவில் கூறினர். அவற்றையெல்லாம் அங்கிருந்தே நான் பார்த்தேன்.

விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகளுடன் சமாதான உடன்படிக்கை செய்து நாட்டில் இராணுவத்தின் கரங்களை கட்டிப்போட்டுவிட்டு விடுதலைப்புலிகளையும், கடல் புலிகளையும் சுதந்திரமாக செயற்பட வைத்தவர்கள் ஆட்சிக்கு வந்தவுடனும் அதே புலி புராணத்தையே பாட ஆரம்பித்தனர். அதுதான் உண்மை. இவற்றையெலாம் மனதில் வைத்துக்கொண்டே நாம் மக்களை ஒன்றிணைக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்து வந்தோம். சிங்கள பெளத்த நாட்டில் பெளத்த சிங்களத்தை அழிப்பது எம்மால் பார்த்துக்கொண்டு இருக்க முடியாது. இன்று நாம் ஆட்சிக்கு வந்துள்ளோம், அதிகாரங்கள் எமக்கு கிடைத்துள்ளது. இப்போது எம்மால் நாட்டின் சிங்கள பெளத்த கொள்கையை பாதுகாப்போம். அதேபோல் எமது இரானுவத்தை பாதுகாக்கும் சகல நடவடிக்கைகளையும் நாம் முன்னெடுப்போம் என்றார்.https://www.virakesari.lk/article/87882

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பிழம்பு said:

செய்யாத போர்க்குற்றத்தை செய்ததாக கூறி இராணுவத்தை தண்டிக்க முயற்சித்த ஆட்சியை வீழ்த்தி இராணுவத்தையும், சிங்கள பெளத்த கொள்கையையும் பாதுகாக்கும் அரசாங்கமொன்ரை உருவாக்கியுள்ளோம்.

நீங்கள் செய்யவில்லை என்பதை நிரூபிக்க ஒன்றே ஒன்று, சர்வதேச விசாரணைக்கு ஒத்துழையுங்கள். இல்லையாயின் உங்கள் மனசாட்சியை ஏமாற்றுகிறீர்கள். இப்பவே கர்வம் கொள்ளாதீர்கள். இப்பத்தான்   உங்கள் அரசுப்படகு பயணத்தை ஆரம்பிக்குது. உங்களது  முன்னைய பயணம் போல் இது அமையாது. உங்கள் மாய முகம், கோர முகம் எல்லாவற்றையும் புலி முகத்தால் மூடினீர்கள், இனி அது எடுபடாது.   படகு  கரை சேரும்போது  பேசுவதற்கு நீங்கள் இந்தபதவியில் இருப்பீர்களோ என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, satan said:

நீங்கள் செய்யவில்லை என்பதை நிரூபிக்க ஒன்றே ஒன்று, சர்வதேச விசாரணைக்கு ஒத்துழையுங்கள். இல்லையாயின் உங்கள் மனசாட்சியை ஏமாற்றுகிறீர்கள். இப்பவே கர்வம் கொள்ளாதீர்கள். இப்பத்தான்   உங்கள் அரசுப்படகு பயணத்தை ஆரம்பிக்குது. உங்களது  முன்னைய பயணம் போல் இது அமையாது. உங்கள் மாய முகம், கோர முகம் எல்லாவற்றையும் புலி முகத்தால் மூடினீர்கள், இனி அது எடுபடாது.   படகு  கரை சேரும்போது  பேசுவதற்கு நீங்கள் இந்தபதவியில் இருப்பீர்களோ என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.

இனப்படுகொலையை அரங்கேற்றிப் புதைத்துவிட்டு அதன்மேல் முகாம்களை  அமைத்து ஆக்கிரமித்திருப்போரால் எப்படிச்  சர்வதேச குழுக்களை ஆய்வுசெய்ய எப்படி அனுமதிப்பார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, nochchi said:

இனப்படுகொலையை அரங்கேற்றிப் புதைத்துவிட்டு அதன்மேல் முகாம்களை  அமைத்து ஆக்கிரமித்திருப்போரால் எப்படிச்  சர்வதேச குழுக்களை ஆய்வுசெய்ய எப்படி அனுமதிப்பார்கள்.

 
Wel done racists.....!!!!

 

 

Link to comment
Share on other sites

எப்போதாவது சிங்கள பவுத்த ஆட்சி இல்லாமல் இந்த நாட்டில் இருந்திருக்குதா? அதை முதலில் சொல்லுங்கள் வீரசேகர.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.