Jump to content

ரஷ்ய தடுப்பூசி குறித்து உலக சுகாதார அமைப்பு கருத்து


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

GettyImages-1210872967-720x450.jpg

ரஷ்ய தடுப்பூசி குறித்து உலக சுகாதார அமைப்பு கருத்து

உலகத்தின் முதல் தடுப்பூசியை பதிவு செய்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ள நிலையில், கடுமையான ஆய்வு தேவை என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பின் செய்தி தொடர்பாளர் தரிக் ஜசரேவிக் ஜெனீவாவில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே இதனை தெரிவித்தார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், ‘ரஷ்யாவின் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் நாங்கள் தொடர்பில் உள்ளோம். தடுப்பூசிக்கு முன் தகுதி அளிப்பது குறித்த நடைமுறைகள் பற்றிய ஆலோசனை நடைபெறுகிறது.

எந்த ஒரு தடுப்பூசிக்கும் முன் தகுதி அளிப்பது என்பது தேவையான பாதுகாப்பு மற்றும் திறன் அம்சங்களை கடுமையாக மதிப்பாய்வு செய்த பின்னரே இருக்கும்’ என தெரிவித்தார்.

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸுக்கு எதிராக உலகமெங்கும் ஏறத்தாழ 165 தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு வருவதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.

இவற்றில் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் ‘கோவிஷீல்டு’ உள்ளிட்ட 6 தடுப்பூசிகள் மட்டும் பரிசோதனையின் இறுதிக்கட்டத்தில் உள்ளன.

கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக விளங்கும் ரஷ்யாவில் அந்த நாட்டின் இராணுவ அமைச்சகமும், கமலேயா தொற்றுநோயியல், நுண்ணுயிரியல் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனமும் சேர்ந்து ஒரு தடுப்பூசியை உருவாக்கி உள்ளன.

இந்த தடுப்பூசி பரிசோதனைகளை வெற்றிகரமாக முடித்துக்கொண்டுள்ள நிலையில், விரைவில் பதிவு செய்யப்படும் என தகவல்கள் வெளிவந்தன. அதன்படி, அந்த தடுப்பூசி பொதுமக்கள் பயன்பாட்டுக்காக தயாராகி நேற்று பதிவு செய்யப்பட்டது.

இந்தத் தகவலை வெளியிட்ட ரஷ்ய அதிபர் புடின், கொரோனா தடுப்பூசிக்கு ‘ஸ்புட்னிக்-வி’ என பெயரிடப்பட்டுள்ளதாகவும் இது மிகவும் திறம்பட செய்படுகிறது என்றும் தெரிவித்தார்.

இது ஒரு நிலையான எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது என்பதோடு, இந்த தடுப்பூசியானது, தேவையான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுவிட்டது என குறிப்பிட்டார்.

மேலும் இந்த தடுப்பூசி ஆற்றல்மிக்கது என்பது சோதனைகளில் நிரூபிக்கப்பட்டுள்ளதுடன், இது பாதுகாப்பானது என தெரிய வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இதேவேளை, 3ஆவது கட்ட சோதனையை இன்று தொடங்க இருப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/ரஷ்ய-தடுப்பூசி-குறித்து/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரஷ்யாவின் கரோனா தடுப்பு மருந்தின் செயல் திறனும், பாதுகாப்பும்தான் கவலைக்குரியது: நோபல் பரிசு விஞ்ஞானி கருத்து

safety-efficacy-main-concerns-with-russias-covid-19-vaccine-nobel-laureate-peter-doherty கோப்புப்படம்

கொல்கத்தா

ரஷ்யா தயாரித்துள்ள கரோனா தடுப்பு மருந்தின் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால் அந்த மருந்தின் செயல்பாட்டுத் திறன், பாதுகாப்புப் பற்றி யாருக்கும் தெரியாது. நம்முடைய சந்தேகம் உறுதியானால் மற்ற தடுப்பு மருந்துகளையும் மறுக்க வேண்டியது வரும் என்று நோபல் பரிசு வென்ற விஞ்ஞானி பீட்டர் டோஹெர்டி தெரிவித்துள்ளார்.

உலகிலேயே கரோனா வைரஸுக்கு முதன்முதலாக தடுப்பு மருந்தை கண்டுபிடித்து உருவாக்கிவிட்டதாக ரஷ்யா அறிவித்தது. அந்த தடுப்பு மருந்து உடலில் நிலையான எதிர்ப்புச் சக்தியை ஏற்படுத்தி வருவதாகவும், திறன்மிக்க வகையில் கரோனாவுக்கு எதிராகச் செயல்படுவதாக அதிபர் விளாதிமிர் புதின் அறிவித்தார்

ரஷ்யாவின் காமாலியா தொற்றுநோய் தடுப்பு நுண்அறிவியல் ஆய்வு நிறுவனம் ரஷ்யாவின் நேரடி முதலீட்டு நிறுவனத்துடன் இணைந்து இந்த தடுப்பு மருந்தை தயாரித்துள்ளது. ஸ்புட்னிக்-5 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த மருந்து கிளினிக்கல் பரிசோதனையில் 3-ம் கட்டத்துக்கு செல்லவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும் மருந்தின் மீதான நம்பகத்தன்மையை மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் தனது மகளுக்கே இந்த மருந்தை செலுத்தினார் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின். ஆனால், உலக ஆய்வாளர்கள் மத்தியில் ரஷ்யா கண்டுபிடித்துள்ள ஸ்புட்னிஸ்-5 கரோனா தடுப்பு மருந்து மீது முழுமையான நம்பிக்கை வரவில்லை. உலக சுகாதார அமைப்பும் இந்த மருந்தை அங்கீகரிக்கவில்லை.

1597661096756.jpg

இந்த சூழலில் 1996-ம் ஆண்டு நோபல் பரிசு வென்ற மருத்துவ விஞ்ஞானி பீட்டர் டோஹெர்டி பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் பல்கலைக்கழகத்தில் உள்ள மைக்ரோபயாலாஜி மற்றும் நோய்தடுப்புவியல் பிரிவில் பீட்டர் டோஹர்டி பணியாற்றி வருகிறார். அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:

ரஷ்யா கண்டுபிடித்துள்ள ஸ்புட்னிஸ்-5 கரோனா தடுப்பு மருந்தில் இருக்கும் கவலைக்குரிய அம்சமே அதன் பாதுகாப்பும், செயல்பாட்டுத் திறனும்தான். ஒருவேளே நாம் சந்தேகப்படும்வகையில் அமைந்தால், இந்த தடுப்பு மருந்தை மட்டுமல்லாமல், பல்வேறு நோய்களுக்கு வழங்கப்படும் தடுப்பு மருந்துகளையும் நாம் மறுக்க வேண்டியதுவரும்.

ஆனால், கரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் குறைந்தவிலையில் மருந்துகளை வழங்கும் அம்சத்தில் இந்தியா முன்னணியில் இருந்து வருகிறது. ஆதலால், கரோனா தடுப்பு மருந்துக்கான சந்தையில் இந்தியாவின் பங்கு எதிர்காலத்தில் மிகப்பெரியதாக அமையும். இவைஅனைத்துமே உலகத்தின் பொருளாதாரம் விரைவாக இயல்புநிலைக்கு வரவேண்டும் என்பதற்கான முயற்சிதான்.

ஸ்புட்னிக்-5 தடுப்பு மருந்து எவ்வாறு கிளினிக்கல் பரிசோதனைக்கு வராமலே கண்டுபிடித்துவிட்டதாக அறிவிப்பட்டது, மருந்தின் பாதுகாப்பு , செயல்திறன் என்ன என்பது பற்றித்தான் இப்போது இருக்கும் கவலை.

ஆஸ்திரேலியாவில் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகம் சார்பிலும் கரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சி நடந்து வருகிறது.

தற்போதுமுதல் கிளினிக்கல் பரிசோதனை முடிந்து, 2-ம் கட்ட கிளினிக்கல் பரிசோதனையில் இருக்கிறது. நாங்கள் இந்த மருந்தைக் கண்டுபிடித்துவிட்டால், ஏழை நாடுகளுக்குத்தான் முதலில் முன்னுரிமை அளித்து வழங்க உள்ளோம்.

இவ்வாறு டோஹெர்டி தெரிவித்தார்.

https://www.hindutamil.in/news/india/570355-safety-efficacy-main-concerns-with-russias-covid-19-vaccine-nobel-laureate-peter-doherty-2.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேற்கு நாட்டவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட மருந்தாக இருந்தால் இந்தப் பயம் தோன்றியிருக்காதோ 😂

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதென்ன பிரமாதம்…. நான் ஒரு முடா குடியன் எண்டும்…லண்டனில் ஹரோ பகுதி பப் ஒன்றில் வெறியில் அரசியல் கதைக்கும் ஆள் நான் தான் என்று சத்தியம் செய்ததோடு… அந்த நபரோடு டெலிபோன் தொடர்பை ஏற்படுத்தி…அவரும் ஓம் நான் கோஷாந்தான் என சொல்லி…. இவரை ஒரு சில மாதம் ஓட்டு…ஓட்டு எண்டு ஓட்டி🤣. இன்னும் அந்த மனுசன் இவரை உசுபேத்தி கொண்டு இருக்கோ தெரியாது🤣.  
    • 28 MAR, 2024 | 11:04 AM   நியூமோனியாவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 59 வயதுடைய நபரொருவரின் சடலத்தில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் போது அவரது நுரையீரலில் காணப்பட்ட பல் ஒன்று பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் பல வருட காலமாக நியூமோனியா மற்றும் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்தனர். பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின்போதே இந்த பல் கண்டுபிடிக்கப்பட்டதாக பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி பத்மேந்திர விஜேதிலக தெரிவித்தார். பலாங்கொடை - பின்னவலை பிரதேசத்தை சேர்ந்த எஸ் . கருணாரத்ன என்பவரின் நுரையீரலில் இருந்தே இவ்வாறு பல் கண்டுப்பிடிகக்ப்பட்டுள்ளது. இவர் மதுபானத்துக்கு அடியானவர் என்பதுடன் நியூமோனியா நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். சில வருடங்களுக்கு முன்னர் இவரது பல் ஒன்று உடைந்துள்ள நிலையில், அந்த பல் நுரையீரலில் சிக்கியிருக்கலாம் என வைத்தியர்கள் சந்தேகிக்கின்றனர். https://www.virakesari.lk/article/179883
    • உற‌வே அவ‌ர் சொல்ல‌ வ‌ருவ‌து நாம் த‌மிழ‌ர் க‌ட்சி...........திமுக்கா ஆதிமுக்கா வீஜேப்பி இவ‌ர்க‌ளுக்கு அடுத்து 4வ‌து இட‌த்துக்கு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ரும் என்று எழுதி இருக்கிறார் சில‌ தொகுதிக‌ளில் மூன்றாவ‌து இட‌ம் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ர‌லாம் இது அதான் க‌ந்த‌ப்பு அண்ணாவின் தேர்த‌ல் க‌ணிப்பு.................
    • Published By: SETHU    28 MAR, 2024 | 02:08 PM   சுவீடனில் புனித குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்திய நபர், ஈராக்குக்கு நாடு கடத்தப்படவுள்ள நிலையில் நோர்வேயில் புகலிடம் கோருவதற்கு முயற்சிக்கிறார். ஈராக்கியரான சல்வான் மோமிகா எனும் இந்நபர், 2021 ஆம் ஆண்டில் சுவீடனில் வதிவிட உரிமை பெற்றவர்.  கடந்த பல வருடங்களில் அவர் பல தடவைகள் குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்தினார்.  இச்சம்பவங்களுக்கு எதிராக பல நாடுகளில் ஆர்ப்பாட்டங்களும் வன்முறைகளும் இடம்பெற்றன.  கடந்த ஒக்டோபர் மாதம் அவரின் வதிவிட அனுமதி இரத்துச் செய்யப்பட்டது. வதிவிட அனுமதி கோரிக்கைக்கான விண்ணப்பத்தில் தவறான தகவல்களை அளித்திருந்தமை இதற்கு காரணம் என சுவீடன் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.  அவரை ஈராக்குக்கு நாடு கடத்த சுவீடன் நீதிமன்றம் அனுமதி அளித்தது. எனினும், ஈராக்கில் தனது உயிருக்கு ஆபத்துள்ளதாக மோமிகா தெரிவித்ததையடுத்து நாடு கடத்தல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. அவருக்கு வழங்கப்பட்டிருந்த புதிய தற்காலிக அனுமதிப்பத்திரம் எதிர்வரும் ஏப்ரல் 16 ஆம் திகதியுடன் காலவாதியாகிறது. இந்நிலையில், தான் நோர்வேயில் புகலிடம் கோரவுள்ளதாக சுவீடன் ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் மோமிகா தெரிவித்துள்ளார். இது குறித்து நோர்வே அதிகாரிகள் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. https://www.virakesari.lk/article/179895
    • இருக்கலாம்.  இருக்க வேண்டும் என்பதே என் பிரார்தனையும் கூட🙏
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.