Jump to content

மைத்திரிக்கு அமைச்சுப் பதவி வழங்கப்படாமைக்கான காரணம் வெளியானது!


Recommended Posts

மைத்திரிக்கு அமைச்சுப் பதவி வழங்கப்படாமைக்கான காரணம் வெளியானது!

 

image_ec4581cdbb.jpg

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு வழங்குவதற்காக முன்மொழியப்பட்டிருந்த அமைச்சுப் பதவியை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மற்றுமொரு உறுப்பினருக்கு வழங்குமாறு அவர் தெரிவித்திருந்ததாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதற்கமைய சுற்றுச்சூழல் அமைச்சுப் பதவியானது மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்குவதற்கு முன்மொழியப்பட்டிருந்ததாகவும் அதன் பின்னர் அந்த அமைச்சுப் பதவி மஹிந்த அமரவீரவுக்கு வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

எவ்வாறாயினும் கண்டியில் இன்று இடம்பெற்றிருந்த அமைச்சர்களுக்கான பதவியேற்பு விழாவில் மைத்திரிபால சிறிசேன கலந்துக்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  by : Dhackshala

http://athavannews.com/மைத்திரிக்கு-அமைச்சுப்-ப/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவருக்கு ஆளுநர் பதவி குடுக்க போறார்கள் என்று சொல்லினம்    

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகத்திலையே கேவலங்கெட்ட அரசியல் உள்ள நாடு எண்டால் சிறிலங்காதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, குமாரசாமி said:

உலகத்திலையே கேவலங்கெட்ட அரசியல் உள்ள நாடு எண்டால் சிறிலங்காதான்.

உலகத்திலேயே கேவலங் கெடடதுகள் எண்டால், தன் இனத்தை அழித்தவனை புகழ்ந்து அவனுக்கு சேவகம் செய்து மகிழ்வதுகள்.

Link to comment
Share on other sites

20 minutes ago, குமாரசாமி said:

உலகத்திலையே கேவலங்கெட்ட அரசியல் உள்ள நாடு எண்டால் சிறிலங்காதான்.

நீங்கள் சொன்னது சரியான கருத்துதான். அதுக்குள் எங்களது தமிழ் பேசும் ஐயாக்களும் அடங்குவார்களா, இல்லை சிங்கள ஐயாக்கள் மட்டுமா?

 தொப்பி பிரட்டும் அரசியல் செய்யும் ஐயாக்களும் இருக்கிறார்கள், சிங்கள ஐயாக்களுக்கு ஆதரவாக பேசி வென்று அரசியல் செய்பவர்களும் இருக்கிறார்கள், தமிழ் தேசியம் பேசி அரசியல் செய்து வென்று இந்த பக்கமா அந்த பக்கமா எண்டு தெரியாமலே அரசியல் செய்பவர்களும் இருக்கிரார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

அவருக்கு ஆளுநர் பதவி குடுக்க போறார்கள் என்று சொல்லினம்    

 

உங்கள் அண்ணனும் ஆளுனர் என்றுதான் பட்சி சொல்லுகிறது. உண்மையோ 🤔

Link to comment
Share on other sites

7 minutes ago, Kapithan said:

உங்கள் அண்ணனும் ஆளுனர் என்றுதான் பட்சி சொல்லுகிறது. உண்மையோ 🤔



ஏதோ ஒன்று கொடுப்பார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Robinson cruso said:

நீங்கள் சொன்னது சரியான கருத்துதான். அதுக்குள் எங்களது தமிழ் பேசும் ஐயாக்களும் அடங்குவார்களா, இல்லை சிங்கள ஐயாக்கள் மட்டுமா?

 தொப்பி பிரட்டும் அரசியல் செய்யும் ஐயாக்களும் இருக்கிறார்கள், சிங்கள ஐயாக்களுக்கு ஆதரவாக பேசி வென்று அரசியல் செய்பவர்களும் இருக்கிறார்கள், தமிழ் தேசியம் பேசி அரசியல் செய்து வென்று இந்த பக்கமா அந்த பக்கமா எண்டு தெரியாமலே அரசியல் செய்பவர்களும் இருக்கிரார்கள்.

சிறிலங்கா அரசியல் எண்டால் எங்கடை ஆக்களும் உள்ளடங்குவினம் தானே..😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புதிய அரசாங்கத்தில் மைத்திரிபால உள்ளிட்ட பலருக்கும் ஏமாற்றம்.

(இராஜதுரை ஹஷான்)
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையிலான புதிய அரசாங்கத்தில் முன்னாள் ஜனாதிபதியும், சுதந்திர கட்சியின் தலைவருமான  மைத்திரிபால சிறிசேன,  பாராளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன் இராமநாதன், அஎஸ். பி. திஸாநாயக்க, டிலான் பெரேரா, சுசில் பிரேமஜயந்த, விஜயதாஸ ராஜபக்ஷ உள்ளிட்ட பலருக்கு அமைச்சு பதவிகளோ, இராஜாங்க அமைச்சு பதவிகளோ வழங்கப்படவில்லை.

 9வது பாராளுமன்றத்தின் சபாநாயகராக சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிவேனவை நியமிக்குமாறு விடுத்த கோரிக்கைக்கு அரசாங்க தரப்பு மறுப்பு தெரிவித்ததை தொடர்ந்து அபிவிருத்தி அமைச்சு பதவியை அவருக்கு வழங்குவதாக வாக்குறுதி  வழங்கியுள்ளதாக சுதந்திர கட்சியின் தலைவவர் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் குறிப்பிட்டமை குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையிலான புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பதவியேற்றும் நிகழ்வு இன்று தலதா மாளிகையின் வளாகத்தில் இடம்பெற்றது.

thumb_fd.jpg

அமைச்சுக்கள், இராஜாங்க அமைச்சுக்கள் மற்றும் 24 மாவட்ட  அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுதலைவர் பதவி ஆகியவற்றுக்கான  நியமண பத்திரங்கள் ஜனாதிபதியால் வழங்கப்பட்டன. மாவட்ட அபிவிருத்தி தலைவர் பதவி புதிதாக பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்ட புதுமுகங்கள்.  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள். மற்றும் அமைச்சர் பதவி வகித்தவர்களுக்கு வழங்கப்பட்டன.

  முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அமைச்சரவை அந்தஸ்த்துமிக்க அமைச்சு பதவி வழங்கப்படும் என  எதிர்பார்க்கப்பட்டது. 9வது பாராளுமன்றத்தின் சபாநாயர் பதவியை  சுதந்திர கட்சியின் தலைவருக்கு  வழங்குமாறு ஆளும் தரப்பினர்     கோரிக்கை விடுத்தனர். மாகாவலி அபிவிருத்தி அமைச்சு பதவியை அவருக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் செயற்குழு கூட்டத்தில் குறிப்பிடப்பட்டது. ஆனால் மைத்திரிபால சிறிசேனவுக்கு அமைச்சுபதவியோ, இராஜாங்க  அமைச்சு பதவியோ, ஏன் மாவட்ட அபிவிருத்தி தலைவர் பதவி  கூட வழங்கப்படவில்லை. ஆனால் அவர் பொலன்னறுவை மாவட்டத்தில் விருப்பு வாக்கு பட்டியலில் முன்னிலை வகிக்கிறார்.

 கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டு விருப்பு வாக்கு பட்டியலில் 4வது இடம்வகித்த முன்னாள் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவிற்கு  அமைச்சு பதவியோ, இராஜாங்க அமைச்சர் பதவியோ வழங்கப்படவில்லை. ஆனால் கம்பஹா, கொழும்பு மற்றும் களுத்துறை மாவட்டங்களில் விருப்பு வாக்குப்பட்டியலில் இடம் வகித்தவர்களுக்கு  அமைச்சு மற்றும்  இராஜாங்க அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷவின் கடந்த இடைக்கால அரசாங்கத்தில் காணி அமைச்சு பதவி வகித்த எஸ்.பி. திஸாநாயக்கவுக்கும்,  சர்வதேச உறவுகள்  இராஜாங்க  அமைச்சர் பதவி வகித்த சுசில் பிரேமஜயந்தவுக்கும் எவ்வித  அமைச்சு பதவியோ, இராஜாங்க   அமைச்சு பதவிகளோ புதிய அரசாங்கத்தில் வழங்கப்படவில்லை  பாராளுமன்ற த்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள டிலான் பெரேராவிற்கு எவ்வித    பதவிகளும் வழங்கப்படவில்லை. அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளஅங்கஜன் இராமநாதன், காதர் மஸ்தான் ஆகியோருக்கு அமைச்சுபதவியோ, இராஜாங்க அமைச்சு பதவியோ வழங்கப்படவில்லை. இவ்விருவருக்கும்  மாவட்ட அபிவிருத்தி தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் அங்கம் வகித்த   ஜோன் செனவிரத்ன,    மஹிந்தயாப்பா அபேவர்தன,    மஹிந்த சமரசிங்க, அனுர பிரியதர்ஷன யாப்பா ஆகியோருக்கும் புதிய  அரசாங்கத்தில் எவ்வித   பதவிகளும் வழங்கப்படவில்லை.     9வது  பாராளுமன்றத்தின் சபாநாயகராக    மஹிந்த   யாப்பா  அபேவர்தனவை   நியமிக்கும் யோசனை       முன்வைக்கப்பட்டுள்ளது.

  ஸ்ரீ லங்கா   பொதுஜன   பெரமுனவின் தேசிய  பட்டியலில்   பாராளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ள  ஜி. எல். பீறிஷூக்கு  கல்வி அமைச்சு பதிவியும், அலி சப்ரிக்கு   நீதியமைச்சு பதவியும்,     திறன்கள் மற்றும் தொழினுட்ப விருத்தி  இராஜாங்க அமைச்சு பதவி  சீதா அரம்பேபொலவிற்கும்,   நிதி  சந்தைப்படுத்தல் அரச தொழிற்துறை   அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு பதவி    அஜித் நிவார்ட் கப்ரால் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/87931

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kapithan said:

உங்கள் அண்ணனும் ஆளுனர் என்றுதான் பட்சி சொல்லுகிறது. உண்மையோ 🤔

தேர்தல் முடிவுகள் வந்த நாளில் இருந்து கதை அடிபடுது...மட்டு இணைப்பு செயலாளர் பதவியும் இன்னும் காலியாத் தான் இருக்கு ...பிள்ளையானுக்கு ஒரு பதவி கொடுப்பினம்...பொறுத்திருந்து பார்ப்போம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ரதி said:

தேர்தல் முடிவுகள் வந்த நாளில் இருந்து கதை அடிபடுது...மட்டு இணைப்பு செயலாளர் பதவியும் இன்னும் காலியாத் தான் இருக்கு ...பிள்ளையானுக்கு ஒரு பதவி கொடுப்பினம்...பொறுத்திருந்து பார்ப்போம் 

ஆளுனராக வந்து மக்களுக்கு தன்னால் இயலுமான அனைத்தையும் செய்ய வேண்டி வாழ்த்துகிறேன். 🎁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, Kapithan said:

ஆளுனராக வந்து மக்களுக்கு தன்னால் இயலுமான அனைத்தையும் செய்ய வேண்டி வாழ்த்துகிறேன். 🎁

ஈழத்து மண்டேலா  செய்வார் எண்டு நான் நம்புறன் 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவத்துக்கு ஒதுக்கப்பட்ட அமைச்சுக்கள்  போக மிச்சம் மீதி இருந்தால் பார்த்து ஆறுதலாக வழங்குவார். கோத்தபாய; யார் யாருக்கு என்னென்ன பதவி என்று ஏற்கெனவே தீர்மானித்து, இவர்களை ஓட விட்டிருப்பார். இது தெரியாமல் இவர்களும் ஓடி களைத்திருப்பார்கள். இனித்தான் உண்மை முகத்தை காண்பார்கள். என்ன செய்வது விழுந்தும் மண் ஒட்டிடவில்லை என்பார்கள். அடுத்த தேர்தலில் அங்கயனுக்கு பதிலாக ஒரு சிங்களவர் தேர்தலில் வடக்கில் நிற்பார். அப்போ அங்கயன் எங்கே நிற்பார்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, satan said:

இராணுவத்துக்கு ஒதுக்கப்பட்ட அமைச்சுக்கள்  போக மிச்சம் மீதி இருந்தால் பார்த்து ஆறுதலாக வழங்குவார். கோத்தபாய; யார் யாருக்கு என்னென்ன பதவி என்று ஏற்கெனவே தீர்மானித்து, இவர்களை ஓட விட்டிருப்பார். இது தெரியாமல் இவர்களும் ஓடி களைத்திருப்பார்கள். இனித்தான் உண்மை முகத்தை காண்பார்கள். என்ன செய்வது விழுந்தும் மண் ஒட்டிடவில்லை என்பார்கள். அடுத்த தேர்தலில் அங்கயனுக்கு பதிலாக ஒரு சிங்களவர் தேர்தலில் வடக்கில் நிற்பார். அப்போ அங்கயன் எங்கே நிற்பார்?

நிச்சயமாக அங்கஜன்தான் வடக்கில் நிற்பார். ஆனால் என்ன....

அங்கஜன் சிங்களவராக மாறியிருப்ப்பார், தகப்பன் போல 😂

Link to comment
Share on other sites

26 அமைச்சரவை அமைச்சர்கள் -  24 சிங்களவர் ,1 தமிழர்,1 முஸ்லீம்.
 
39 இராஜாங்க அமைச்சர்கள் - 37 சிங்களவர், 2 தமிழர்.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

அநுர பிரியதர்சன யாப்பா, சுசில் பிரேம்ஜயந்த், டிலான் பெரேரா ஆகியோருக்கும் இராஜாங்க அமைச்சர்களாக இருந்த விஜயதாச ராஜபக்‌ஷ, எஸ்.பி. திசாநாயக்க, சந்திம வீரகொடி ஆகியோருக்கும் புதிய அரசாங்கத்தின் அமைச்சரவையில் எவ்வித அமைச்சுப் பதவிகளும் வழங்கப்படவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

40 ஆவது ராஜாங்க அமைச்சர் தான் பிள்ளையான். சட்டப்பிரச்சனையால் இண்டைக்கு போகவில்லை.

Link to comment
Share on other sites

9 hours ago, முதல்வன் said:

40 ஆவது ராஜாங்க அமைச்சர் தான் பிள்ளையான். சட்டப்பிரச்சனையால் இண்டைக்கு போகவில்லை.

விஜேதாஸ ராஜபக்சவுக்கும் ராஜாங்க அமைச்சர் (அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்) பதவி வழங்க இருந்ததாகவும் , அவர் அதனை எட்காமல் சென்று விட்ட்தாகவும் கூறப்படுகின்றது. அல்லது பிள்ளையானுக்கு ஒதுக்கப்படடதோ தெரியவில்லை. இருந்தாலும் மடடக்கலப்பு மாவடட அபிவிருத்தி ஒருங்கிணைப்பாளர் பதவி வெற்றிடமாக இருப்பதால் அவருக்கு அது வழங்கப்படக்கூடிய சந்தர்ப்பம் அதிகமாகவே இருக்கின்றது. வியாழேந்திரனுக்கு ராஜாங்க அமைச்சர் பதவி வழங்கப்படட படியால் இவருக்கு சந்தர்ப்பம் குறைவாகவே காணப்படுகின்றது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பாவம் சிரித்திரன் சுந்தர்.  கல்லறைக்குள் இருந்து நெளிவார் என நினைக்கிறேன். 
    • இதென்ன பிரமாதம்…. நான் ஒரு முடா குடியன் எண்டும்…லண்டனில் ஹரோ பகுதி பப் ஒன்றில் வெறியில் அரசியல் கதைக்கும் ஆள் நான் தான் என்று சத்தியம் செய்ததோடு… அந்த நபரோடு டெலிபோன் தொடர்பை ஏற்படுத்தி…அவரும் ஓம் நான் கோஷாந்தான் என சொல்லி…. இவரை ஒரு சில மாதம் ஓட்டு…ஓட்டு எண்டு ஓட்டி🤣. இன்னும் அந்த மனுசன் இவரை உசுபேத்தி கொண்டு இருக்கோ தெரியாது🤣.   கேட்டா எண்ட சாதகம் மோகனிடம் இருக்கு, நிழலிட்ட இருக்கு என்பார். அந்த தகவலை அவர்கள் தந்தாலும்…அதை வச்சு நான் என்ன செய்யலாம்? கலியாணம் பேசவோ🤣
    • 28 MAR, 2024 | 11:04 AM   நியூமோனியாவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 59 வயதுடைய நபரொருவரின் சடலத்தில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் போது அவரது நுரையீரலில் காணப்பட்ட பல் ஒன்று பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் பல வருட காலமாக நியூமோனியா மற்றும் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்தனர். பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின்போதே இந்த பல் கண்டுபிடிக்கப்பட்டதாக பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி பத்மேந்திர விஜேதிலக தெரிவித்தார். பலாங்கொடை - பின்னவலை பிரதேசத்தை சேர்ந்த எஸ் . கருணாரத்ன என்பவரின் நுரையீரலில் இருந்தே இவ்வாறு பல் கண்டுப்பிடிகக்ப்பட்டுள்ளது. இவர் மதுபானத்துக்கு அடியானவர் என்பதுடன் நியூமோனியா நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். சில வருடங்களுக்கு முன்னர் இவரது பல் ஒன்று உடைந்துள்ள நிலையில், அந்த பல் நுரையீரலில் சிக்கியிருக்கலாம் என வைத்தியர்கள் சந்தேகிக்கின்றனர். https://www.virakesari.lk/article/179883
    • உற‌வே அவ‌ர் சொல்ல‌ வ‌ருவ‌து நாம் த‌மிழ‌ர் க‌ட்சி...........திமுக்கா ஆதிமுக்கா வீஜேப்பி இவ‌ர்க‌ளுக்கு அடுத்து 4வ‌து இட‌த்துக்கு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ரும் என்று எழுதி இருக்கிறார் சில‌ தொகுதிக‌ளில் மூன்றாவ‌து இட‌ம் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ர‌லாம் இது அதான் க‌ந்த‌ப்பு அண்ணாவின் தேர்த‌ல் க‌ணிப்பு.................
    • Published By: SETHU    28 MAR, 2024 | 02:08 PM   சுவீடனில் புனித குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்திய நபர், ஈராக்குக்கு நாடு கடத்தப்படவுள்ள நிலையில் நோர்வேயில் புகலிடம் கோருவதற்கு முயற்சிக்கிறார். ஈராக்கியரான சல்வான் மோமிகா எனும் இந்நபர், 2021 ஆம் ஆண்டில் சுவீடனில் வதிவிட உரிமை பெற்றவர்.  கடந்த பல வருடங்களில் அவர் பல தடவைகள் குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்தினார்.  இச்சம்பவங்களுக்கு எதிராக பல நாடுகளில் ஆர்ப்பாட்டங்களும் வன்முறைகளும் இடம்பெற்றன.  கடந்த ஒக்டோபர் மாதம் அவரின் வதிவிட அனுமதி இரத்துச் செய்யப்பட்டது. வதிவிட அனுமதி கோரிக்கைக்கான விண்ணப்பத்தில் தவறான தகவல்களை அளித்திருந்தமை இதற்கு காரணம் என சுவீடன் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.  அவரை ஈராக்குக்கு நாடு கடத்த சுவீடன் நீதிமன்றம் அனுமதி அளித்தது. எனினும், ஈராக்கில் தனது உயிருக்கு ஆபத்துள்ளதாக மோமிகா தெரிவித்ததையடுத்து நாடு கடத்தல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. அவருக்கு வழங்கப்பட்டிருந்த புதிய தற்காலிக அனுமதிப்பத்திரம் எதிர்வரும் ஏப்ரல் 16 ஆம் திகதியுடன் காலவாதியாகிறது. இந்நிலையில், தான் நோர்வேயில் புகலிடம் கோரவுள்ளதாக சுவீடன் ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் மோமிகா தெரிவித்துள்ளார். இது குறித்து நோர்வே அதிகாரிகள் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. https://www.virakesari.lk/article/179895
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.