Jump to content

சீனப் பாணியிலான ஆட்சிக்கு அடித்தளம் ? - மங்கள


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

(நா.தனுஜா)

 

பௌத்த பிக்குகளின் எதிர்ப்பையும் மீறி நீதியமைச்சராக அலி சப்ரி நியமிக்கப்பட்டமைக்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவைப் பாராட்டியிருக்கும் முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர, பாதுகாப்பு அமைச்சின் கீழ் 'உள்நாட்டு அலுவல்கள்' என்ற விடயதானம்  கொண்டுவரப்பட்டமை சீனப்பாணியிலான 'கண்காணிப்பு மிகுந்த' அரசாங்கமொன்றை அமைப்பதற்கு அடித்தளமிடப்படுவதையே காண்பிக்கின்றது என்றும் எச்சரித்திருக்கிறார்.

Mangala.jpg

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ - பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை இன்று புதன்கிழமை கண்டியிலுள்ள தலதா மாளிகையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டது. 

அதன்படி நீதியமைச்சராக ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி நியமிக்கப்பட்டிருப்பதுடன், இராஜாங்க அமைச்சுக்களின் கீழ் பல்வேறு புதிய விடயதானங்கள் உள்வாங்கப்பட்டிருக்கின்றன. 

இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் மங்கள சமரவீர செய்திருக்கும் பதிவில் மேலும் கூறியிருப்பதாவது:

பௌத்த பிக்குகளின் எதிர்ப்பையும் மீறி நீதியமைச்சராக அலி சப்ரியை நியமித்தமைக்காக பிரதமரைப் பாராட்டுகின்றேன். எஞ்சிய அமைச்சரவை நியமனங்கள் அத்தனை வரவேற்கத்தக்கவையாக இல்லை என்பதுடன் பெரும்பாலும் இராஜாங்க அமைச்சர்களுக்குப் பொறுப்பாக ஒதுக்கப்பட்டுள்ள விடயதானங்கள் பெரும் நகைப்பிற்குரியதாக இருக்கின்றது என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும் பாதுகாப்பு அமைச்சிற்குக் கீழான விடயதானங்களில் ஒன்றாக 'உள்நாட்டு அலுவல்களை' உள்ளடக்கி ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டிருக்கும் வர்த்தமானி அறிவித்தலானது, சீனப்பாணியிலான கண்காணிப்பு மிகுந்த அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கான முதல் அடித்தளமாகவே அமைந்திருக்கிறது என்று அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

https://www.virakesari.lk/article/87928

Link to comment
Share on other sites

சீனப்பணியினாலான அடித்தளம் இட முன்னர் சீன அடித்தளம் இங்கு இட்டுவிட்ட்து. இனி சீனாவின் ஆட்சிதான் விரைவில் உருவாகும். வடக்கிக்கான பாதை அபிவிருத்தி திட்ட்ங்களும் அவர்களுக்குவழங்கப்பட சந்தர்ப்பம் அதிகமாகவே காணப்படுகின்றது. முழு இலங்கையிலும் கால் பாதிக்க சீன முடிவெடுத்து விட்ட்து. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Robinson cruso said:

சீனப்பணியினாலான அடித்தளம் இட முன்னர் சீன அடித்தளம் இங்கு இட்டுவிட்ட்து. இனி சீனாவின் ஆட்சிதான் விரைவில் உருவாகும். வடக்கிக்கான பாதை அபிவிருத்தி திட்ட்ங்களும் அவர்களுக்குவழங்கப்பட சந்தர்ப்பம் அதிகமாகவே காணப்படுகின்றது. முழு இலங்கையிலும் கால் பாதிக்க சீன முடிவெடுத்து விட்ட்து. 

சீனாவே தங்கள் வரவு நல்வரவாகுக 💐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, Kapithan said:

சீனாவே தங்கள் வரவு நல்வரவாகுக 💐

இப்ப அவையள் என்ன செய்வினம்?  :grin:

Link to comment
Share on other sites

9 hours ago, குமாரசாமி said:

இப்ப அவையள் என்ன செய்வினம்?  :grin:

எவ்வயள்? அவையள் அவர்களை சுற்றியுள்ள எல்லா நாடுகளையும் கோடடைவிட்டிட்டினம். இனி செய்வதட்கு ஒன்றுமில்லை. இனி எல்லாம் தட்காப்பு நடவடிக்கைகளை மேட்கொள்ளுவதுதான் அவர்களுக்குள்ள ஒரே வழி. டூ லேட்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Robinson cruso said:

எவ்வயள்? அவையள் அவர்களை சுற்றியுள்ள எல்லா நாடுகளையும் கோடடைவிட்டிட்டினம். இனி செய்வதட்கு ஒன்றுமில்லை. இனி எல்லாம் தட்காப்பு நடவடிக்கைகளை மேட்கொள்ளுவதுதான் அவர்களுக்குள்ள ஒரே வழி. டூ லேட்.

அவ்வையள் தாய்வானுக்காக ஐ.நா. சபையில் குரல் கொடுக்க போயினமாம்...
இவையள் சீனாக்கார்னின்ட சீலைக்குள் மறைந்திருந்து அவையளுக்கு வெடி வைக்க போயினமாம்...

அவ்வையளுக்கு இப்ப எங்களை கொஞசம் உசெளப்பி விடுகிற பிளானும் இருக்கு போல.....

 

 

Link to comment
Share on other sites

14 minutes ago, putthan said:

அவ்வையள் தாய்வானுக்காக ஐ.நா. சபையில் குரல் கொடுக்க போயினமாம்...
இவையள் சீனாக்கார்னின்ட சீலைக்குள் மறைந்திருந்து அவையளுக்கு வெடி வைக்க போயினமாம்...

அவ்வையளுக்கு இப்ப எங்களை கொஞசம் உசெளப்பி விடுகிற பிளானும் இருக்கு போல.....

 

 

உசுப்பிவிட்டு முள்ளி வாய்க்காலில் கொண்டுபோய் விடாமல் விடடாள் சரிதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

44 minutes ago, putthan said:

அவ்வையள் தாய்வானுக்காக ஐ.நா. சபையில் குரல் கொடுக்க போயினமாம்...
இவையள் சீனாக்கார்னின்ட சீலைக்குள் மறைந்திருந்து அவையளுக்கு வெடி வைக்க போயினமாம்...

அவ்வையளுக்கு இப்ப எங்களை கொஞசம் உசெளப்பி விடுகிற பிளானும் இருக்கு போல.....

21 minutes ago, Robinson cruso said:

உசுப்பிவிட்டு முள்ளி வாய்க்காலில் கொண்டுபோய் விடாமல் விடடாள் சரிதான்.

புதிய கோணத்திலை/கொஞ்சம் வித்தியாசமாய் உசுப்பிவிடுற பிளானாம் :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதென்ன சீனா பானியிலான ஆட்ச்சி.இனி சீனாவின் ஆட்ச்சயேதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, சுவைப்பிரியன் said:

அதென்ன சீனா பானியிலான ஆட்ச்சி.இனி சீனாவின் ஆட்ச்சயேதான்.

சீனா பாதி  சீறிலங்கா பாதி சேர்த்து வைச்ச கலவை ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, குமாரசாமி said:

 

புதிய கோணத்திலை/கொஞ்சம் வித்தியாசமாய் உசுப்பிவிடுற பிளானாம் :grin:

ஓம் ஓம்...தாய்வானுக்காக உவையள் ஐ.நா.சபையில் குரல் கொடுத்து அவையளை (சீனாவை) கடுப்பாக்கினவையள்  அல்லோ..
அந்த கடுப்பில் அவையள்(சீனா) சீறிலங்காவிலிருந்து உவையளுக்கு தொல்லை கொடுக்கிற பிளான்.....

எங்கன்ட சனம் மெளனித்த மாதிரியே விசயத்தை கொண்டு நடத்த வேண்டும் ......குறிப்பாக இளைஞர்கள் ஆயுதப்பக்கம் தலைவைச்சு படுக்காமல் இருக்க வேண்டும் மிச்சத்தை அவையளும் உவையளும் சிறிலங்காவில் பட்ட பாடு என்று இருக்க வேணும்...

Link to comment
Share on other sites

4 hours ago, putthan said:

ஓம் ஓம்...தாய்வானுக்காக உவையள் ஐ.நா.சபையில் குரல் கொடுத்து அவையளை (சீனாவை) கடுப்பாக்கினவையள்  அல்லோ..
அந்த கடுப்பில் அவையள்(சீனா) சீறிலங்காவிலிருந்து உவையளுக்கு தொல்லை கொடுக்கிற பிளான்.....

எங்கன்ட சனம் மெளனித்த மாதிரியே விசயத்தை கொண்டு நடத்த வேண்டும் ......குறிப்பாக இளைஞர்கள் ஆயுதப்பக்கம் தலைவைச்சு படுக்காமல் இருக்க வேண்டும் மிச்சத்தை அவையளும் உவையளும் சிறிலங்காவில் பட்ட பாடு என்று இருக்க வேணும்...

முதலில் அவர்கள் புலிகளுக்கு எதிரான தடையை நீக்கி சிறிய அதிர்ச்சி கொடுக்கிற திடடம். பின்னர் மேட்குலக நாடுகளில் பிரச்சாரம் செய்வதட்கு உதவி செய்து பின்னர் மனித உரிமை ஆணையகத்துக்கு கொண்டு செல்லுவது.

இதன்மூலம் அவர்கள் ஒரு பிரச்சினையை இலங்கை அரசுக்கு எதிராக உருவாகும் எண்ணம் இருக்கிறது. அனால் உண்மையான நோக்கத்துடன் செய்வார்களா என்பதுதான் பிரச்சினை.

அண்ணனுக்கு ஒரேயடியாக இலங்கையை பகைக்கும் எண்ணம் இல்லை. அவர்களுக்கு வசதிப்படும்போது , அவர்களுக்கு தேவைக்கேட்ப காய் நகர்த்துவார்கள். எனவே எதுவும் நடக்கும்வரை ஒன்றும் சொல்ல முடியாது.

மேலும் ஆயுதப்போராட்டம் ஒன்றுக்கு சந்தர்ப்பம் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Robinson cruso said:

முதலில் அவர்கள் புலிகளுக்கு எதிரான தடையை நீக்கி சிறிய அதிர்ச்சி கொடுக்கிற திடடம். பின்னர் மேட்குலக நாடுகளில் பிரச்சாரம் செய்வதட்கு உதவி செய்து பின்னர் மனித உரிமை ஆணையகத்துக்கு கொண்டு செல்லுவது.

இதன்மூலம் அவர்கள் ஒரு பிரச்சினையை இலங்கை அரசுக்கு எதிராக உருவாகும் எண்ணம் இருக்கிறது. அனால் உண்மையான நோக்கத்துடன் செய்வார்களா என்பதுதான் பிரச்சினை.

அண்ணனுக்கு ஒரேயடியாக இலங்கையை பகைக்கும் எண்ணம் இல்லை. அவர்களுக்கு வசதிப்படும்போது , அவர்களுக்கு தேவைக்கேட்ப காய் நகர்த்துவார்கள். எனவே எதுவும் நடக்கும்வரை ஒன்றும் சொல்ல முடியாது.

மேலும் ஆயுதப்போராட்டம் ஒன்றுக்கு சந்தர்ப்பம் இல்லை.

ஒரு சில சதி திட்டங்களுக்கு சாத்தியம் இருக்கு.....தொடர்ந்து மகிந்தா&கோ வை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க மாட்டார்கள்....கச்சதீவு மூலம் ஒரு சில பிரச்சனையை உருவாக்க முயல்வார்காள்

ஆயுத போராட்டத்திற்கு சாத்தியமில்லை ஆனால் ஆயுததாரிகளை உருவாக்குவார்கள்....முன்னாள் ஆயுததாரிகளை அரவணைத்து இருக்கும் இரு சாராரும்  எதுவும் செய்வார்கள்...

Link to comment
Share on other sites

3 hours ago, putthan said:

ஒரு சில சதி திட்டங்களுக்கு சாத்தியம் இருக்கு.....தொடர்ந்து மகிந்தா&கோ வை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க மாட்டார்கள்....கச்சதீவு மூலம் ஒரு சில பிரச்சனையை உருவாக்க முயல்வார்காள்

ஆயுத போராட்டத்திற்கு சாத்தியமில்லை ஆனால் ஆயுததாரிகளை உருவாக்குவார்கள்....முன்னாள் ஆயுததாரிகளை அரவணைத்து இருக்கும் இரு சாராரும்  எதுவும் செய்வார்கள்...

இருந்தும் என்ன. எல்லாவற்றாலும் பாதிக்கப்படப்போவது அப்பாவி தமிழ் மக்களே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Robinson cruso said:

இருந்தும் என்ன. எல்லாவற்றாலும் பாதிக்கப்படப்போவது அப்பாவி தமிழ் மக்களே.

உண்மைதான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, putthan said:

ஒரு சில சதி திட்டங்களுக்கு சாத்தியம் இருக்கு.....தொடர்ந்து மகிந்தா&கோ வை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க மாட்டார்கள்....கச்சதீவு மூலம் ஒரு சில பிரச்சனையை உருவாக்க முயல்வார்காள்

ஆயுத போராட்டத்திற்கு சாத்தியமில்லை ஆனால் ஆயுததாரிகளை உருவாக்குவார்கள்....முன்னாள் ஆயுததாரிகளை அரவணைத்து இருக்கும் இரு சாராரும்  எதுவும் செய்வார்கள்...

நிறைய பேருக்கு இன்னமும் தீனி போட்டு வளர்கினம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.