Jump to content

சிங்கள பௌத்த பேரினவாதத்தினை கொள்கை அடிப்படையில் எதிர்கொள்வதற்கு ஒன்றிணைந்த செயற்பாடுகள் அவசியம்; – விக்னேஸ்வரன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள பௌத்த பேரினவாதத்தினை கொள்கை அடிப்படையில் எதிர்கொள்வதற்கு ஒன்றிணைந்த செயற்பாடுகள் அவசியம்; – விக்னேஸ்வரன்

August 12, 2020

எமது இனத்தின் நன்மை கருதி தெரிவு செய்யபட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் மத்தியில் சிங்கள பௌத்த பேரினவாதத்தினை கொள்கை அடிப்படையில் எதிர்கொள்வதற்கு ஒன்றிணைந்த செயற்பாடுகள் அவசியமாகவுள்ளன என தமிழ்மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இதற்கு ஒத்துழைப்பு வழங்க நானும் தமிழ்மக்கள் தேசிய கூட்டணியும் தயாராகவுள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

cv.w-300x182.png

 

இணைந்த வடக்குகிழக்கில் சுயநிர்ணய அடிப்படையிலான சமஸ்டி தீர்வு தரபபடவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்றேல் இறுதிதீர்வு தொடர்பாக சர்வதேசமேற்பார்வையின் கீழ் சர்வஜனவாக்கெடுப்பும் அதனடிப்படையில் செயற்பாட்டு நடவடிக்கைகளும் எடுக்கப்படவேண்டும் என தெரிவித்துள்ள அவர் இனப்படுகொலைதொடர்பில் சர்வதேசரீதியிலான சுயாதீன விசாரணைகள் இடம்பெறவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த விடயங்கள் தொடர்பில் இதயசுத்தியுடன் செயற்படும் எந்த கட்சிக்கும் ஆதரவு வழங்க தமிழ் மக்கள் தேசிய கூட்டணி தயாராகவுள்ளது என தெரிவித்துள்ள விக்னேஸ்வரன் தமிழ்தேசிய மக்கள் முன்னணியும் இது பற்றி தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
தமிழ்தேசிய கூட்டமைப்பு தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் இது பற்றிகுறிப்பிடவில்லை என தெரிவித்துள்ள அவர் அந்த கட்சி இந்த விடயங்களில் தனது நிலைப்பாடு என்னவென்பதை அறியத்தரவேண்டும் என கோரியுள்ளார்.

 

http://thinakkural.lk/article/61984

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விக்கியரும், கஜேந்திரகுமாரும் இதனை ஒரே நாளில் ஒரே தொனியில் ஒரே வசனங்களைவைத்தே கூறுகிறார்கள். சுமந்திரனை சிங்களத்துக்கு நேந்துவிட்டுட்டு ( சிறியரையும் சம்பந்தனையும் இலவச இணைப்பாகக் கொடுக்கலாம்) பார்கிற அலுவலைப் பார்க்கவும்.
ஆகவே இருவரும் சேர்ந்து வெளிப்படையாகவே பொதுமக்கள் மத்தியிலும் சர்வதேசத்தின் இராஜதந்திரிகள் மத்தியிலும் நிலைமையை அனைவருக்கும் எடுத்துக்கூறி தந்தை செல்வாபோல் வட்டுக்கோட்டைத் தீர்மானத்துக்கு நிகரான ஒரு தீர்மானத்தை உலகின் காதுகளுக்கும் எதிரியின் காதுகளுக்கும் அறியும்படி அறைகூவல்வேண்டும். 

Link to comment
Share on other sites

1 hour ago, Elugnajiru said:

விக்கியரும், கஜேந்திரகுமாரும் இதனை ஒரே நாளில் ஒரே தொனியில் ஒரே வசனங்களைவைத்தே கூறுகிறார்கள். சுமந்திரனை சிங்களத்துக்கு நேந்துவிட்டுட்டு ( சிறியரையும் சம்பந்தனையும் இலவச இணைப்பாகக் கொடுக்கலாம்) பார்கிற அலுவலைப் பார்க்கவும்.
ஆகவே இருவரும் சேர்ந்து வெளிப்படையாகவே பொதுமக்கள் மத்தியிலும் சர்வதேசத்தின் இராஜதந்திரிகள் மத்தியிலும் நிலைமையை அனைவருக்கும் எடுத்துக்கூறி தந்தை செல்வாபோல் வட்டுக்கோட்டைத் தீர்மானத்துக்கு நிகரான ஒரு தீர்மானத்தை உலகின் காதுகளுக்கும் எதிரியின் காதுகளுக்கும் அறியும்படி அறைகூவல்வேண்டும். 

மீண்டும் மே 14, 1976 க்கு போய் வட்டுக்கோட்டைக்கு போகும் வழி தேடப்போகிறீர்கள் - துட்டுக்கு இரண்டு கொட்டைப்பாக்கு கூட கிடைக்காது. வேறு வழி தெரிந்தால் பாருங்கள்.

Link to comment
Share on other sites

30 minutes ago, கற்பகதரு said:

மீண்டும் மே 14, 1976 க்கு போய் வட்டுக்கோட்டைக்கு போகும் வழி தேடப்போகிறீர்கள் - துட்டுக்கு இரண்டு கொட்டைப்பாக்கு கூட கிடைக்காது. வேறு வழி தெரிந்தால் பாருங்கள்.

மீண்டும்  மே 14, 1976 க்கு time travel  போய்  நடந்த எல்லாதையும் மாற்றலாமா?  ஆனால் இப்ப நடக்கிறத பார்த்ததால் மீண்டும் அதே தவறுகளை செய்து அதே இடத்தில் வந்து நிற்பார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விடப்பட்ட தவறுகள் திருத்தப்பட வேண்டுமென்றால், ஆரம்பத்திலிருந்து தேடினாலே சரியாக இனங் காணமுடியும். மேலோட்டமாக தேடி சரி செய்துவிட்டோம் என்றால், எங்கே தவறு என்பதை கண்டுபிடிக்குமட்டும் திருத்தங்களும் தேவைப்பட்டுக்கொண்டே இருக்கும். அது திருத்த முடியாத அளவுக்கு இடிக்கும் வரைக்கும் போய்விடும். பழுது பார்க்காதவர்கள் வீடு இடிந்து விழுவது திண்ணம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கற்பகதரு said:

மீண்டும் மே 14, 1976 க்கு போய் வட்டுக்கோட்டைக்கு போகும் வழி தேடப்போகிறீர்கள் - துட்டுக்கு இரண்டு கொட்டைப்பாக்கு கூட கிடைக்காது. வேறு வழி தெரிந்தால் பாருங்கள்.

மீண்டும் காலபயணமா  கொடுமை,மே 14 1976 வட்டுக்கோட்டை தீர்மானம் கொட்டை பாக்கு போரில் கொல்லப்பட்டோர் காணாமற்போனோர் சிறையிருப்போர் அவர்களை தேடி அலைவோர்    மக்களை வாழ விடமாட்டார்களா

Link to comment
Share on other sites

இன்னுமோர் எழுபது ஆண்டுகளா? ஐயா இன்னும் கொஞ்ச காலத்தில் போய் சேர்ந்திடுவார். நம்மட பாடுதான் பெரும்பாடாக இருக்கப்போகுது. மீண்டும் வேதாளம் முருங்கை மரத்திலா???????????? தமிழனின் சாபக்கேடு.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.