Jump to content

கண்ணான கண்ணே ......


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

https://i.pinimg.com/originals/10/ba/0d/10ba0dccbd9a5ccc78ddfb9d930ad8ca.jpg

 

கண்ணான கண்ணே ......

'கண்ணான கண்ணே கண்ணான கண்ணே
என்மீது சாய வா
புண்ணான நெஞ்சை பொன்னான கையால்
பூப்போல நீவ வா....
ஆராரிராரோ.... ஆராரிராரோ....ஆராரிராரிரோ......'

கடந்த சில மாதங்களாக ஆதவன் தன் செல்ல மகள் ஆரதிக்காகப் பாடிப்பாடி ஆரதிக் குட்டிக்கு பிடித்துப்போன இப் பாடலை இன்று ஆரதி தன் அன்புத் தந்தைக்காகப் பாட நேரிடும் என்று கனவில்கூட எண்ணியிருக்க மாட்டாள்.
அவளது கொஞ்சும் குரலில் செல்லச் சிணுங்கலாய் ஆதவனின் காதுகளில் பாடல் புகுந்து அவனைப் பரவசப் படுத்திக்கொண்டிருந்தது.
அப்பரவசத்தினோடே அவனது உடலின் அசைவுகளும் இதயத்தின் துடிப்பும் மெல்ல மெல்ல அடங்க அவனது அன்பு மனைவி அபிராமியும் மகள் ஆரதியும் கையசைத்து விடைகொடுப்பதான பிரேமையுடன் இரு காதோரங்களிலும் இருசொட்டுக்கண்ணீர் வழிந்தோட எங்கோ மேலே மேலே மிதக்கத் தொடங்கினான்.
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

ஆதவன் கொழும்பிலேயே பிறந்து வளர்ந்தவன். பெற்றவர்களுக்கு ஒரே பிள்ளையான அவன் மிகவும் பிரியமாக வளர்ந்தான். அதவன் வளர வளர பெற்றவர்கள் அவனது படிப்பிலும் நல் ஒழுக்கத்திலும் மிகவும் அக்கறையுடன் பேணி வளர்த்தனர். ஆதவனும் பெற்றவர்களுக்கு பெருமை சேர்ப்பவனாய் ஆசிரியர்களும் அயலவர்களும் பாராட்டக்கூடிய வகையில் படிப்பிலும் விளையாட்டிலும் பண்பிலும் சிறந்து விளங்கினான்.
படித்து முடிந்ததும் அவனுக்கும் நண்பர்களைப்போல் வெளிநாட்டுக்கு போக வேண்டுமென ஆசை அரும்பியது. அப்பொழுது அவனது நண்பனின் சகோதரன் வெளிநாட்டு கப்பலுக்கு ஆட்களை அனுப்ப ஆட்களை பதிவு செய்வதாக அறிந்தான். எனவே அவனும் நண்பன் ரவியுடன் கப்பல் ஏறி வெளிநாடொன்றில் இறங்கலாம் என்று திட்டமிட்டான்.
அம்மாவோ' ஆதவன் எங்களுக்கு இருக்கிறது நீ ஒருவன்தான். உனக்கும் வேறு பொறுப்புக்கள் இல்லை. நானும் அப்பாவும் உன்ர திருமணத்தை பார்க்க வேணும்'என்று தன் ஆசையை சொல்லவும் 'என்னம்மா நான் அங்கு போய் இறங்கி வேலை செய்து அதற்குப்பிறகு அதைப்பற்றி யோசிக்கலாம்' எதையாவது சொல்லி இப்போதைக்கு கட்டிக் கழிக்க முற்பட்ட ஆதவனை அம்மா விடுவதாக இல்லை. ' ஆதவன் சொன்னாக் கேளு' அம்மாவுக்கு உள்ளுற பயம். இப்பிடி தனக்குத் தெரிந்த எத்தனை பேரின் பிள்ளைகள் வெளிநாடு போய் பெற்றவர்களுக்குத் தெரியாமல் வேற்றினப் பெண்களை மணந்து கொண்ட கதைகளைக் கேள்விப்பட்டிருக்கிறாள்.
'ஆதவன் நீ கலியாணம் கட்டிப்போட்டு எங்களோட அந்தப் பிள்ளையை விட்டிட்டுப் போனால் அது அங்கு வருமட்டுமாவது உன்ர பிரிவு தெரியாமல் நாங்க இருப்பம்.' அம்மாவும் அப்பாவும் மாறிமாறி பேசவும் ஆதவன் மனதில் அபிராமியின் முகம் வந்து போனது.
சில ஆண்டுகளுக்கு முன் யாழ்ப்பாணத்திலிருந்து குடிபெயர்ந்து கொழும்புக்கு வந்து தமது வீட்டிற்கு அண்மையில் குடியிருந்த அபிராமியின் குடும்பம் இப்பொழுது அவர்களது குடும்ப நண்பர்களாகி இருந்தனர். சின்னஞ்சிறு பெண்ணாக இருந்த அபிராமி இப்பொழுது பருவப் பெண்ணாக அழகும் அமைதியும் நிறைந்தவளாய் திகழ்ந்தாள். ஆதவனின் அம்மா அப்பாவுக்கும் அபிராமியை பிடிக்கும். தமக்கு இப்படி ஒரு பெண்குழந்தை இருந்தால் என்ற ஏக்கமும் மனதில் எழுவதுண்டு. ஆரம்பத்pல் இருந்தே ஆதவனுக்கும் அபிராமியைப் பிடிக்கும். அவள் பள்ளிச் சீருடையில் பாடசாலை போகும் காலம் தொடக்கம் இப்பொழுது அழகிய உடைகளுடன் கணனி வகுப்புக்கு போகும் நேரங்களிலும் அவளது அழகான தோற்றம் அவனது மனதில் பதிந்துபோய் இருந்தது. அவளுடன் நேரடியாகப் பேசிப் பழகா விட்டாலும் பார்த்து புன்னகைப்பான். அவளும் பதிலுக்கு புன்னகைக்கத் தவறுவதில்லை.
அவனுக்கு அபிராமியில் நல்ல அபிப்பிராயம் இருப்பது பெற்றவர்களுக்குத் தெரியும். அவர்கள் மனதிலும் அபிராமியை மருமகளாக்கினால் நல்லது என்ற எண்ணம் உருவாகி இருந்தது.
பெற்றவர்களுடன் நண்பர்கள் உறவினர்களும் உசுப்பேத்த அவனும் சரி என்ற பச்சைக் கொடி காட்டினான். பிறகென்ன அம்மா அப்பாவுக்கு கால் நிலத்தில் நிற்குமா? அபிராமி வீட்டாரும் தமக்கு நன்கு பரிச்சயமான இடம் என்பதாலும் அபிராமிக்கும் பிடித்த இடம் எனவே திருமணத்திற்கு சந்தோசமாக ஒத்துக்கொண்டனர்.
அடுத்த மாதத்திலேயே திருமணம் ஒரு குறையுமின்றி மிக விமரிசையாக நடைபெற்றது. ஆதவனும் அபிராமியும் பிறந்த வீட்டிற்கும் புகுந்த வீட்டிற்குமாக விருந்துகளும் மகிழ்சியான பொழுதுகளுமாக நாட்கள் விரைவாக ஓடியது.
திருமணமாகி நான்கு மாதங்கள் முடிவதற்குள் ஆதவன் கப்பல் ஏறுவதற்காக பம்பாய் செல்வதற்கான ஒழுங்குகள் நடைபெற்றன. இதுவரை பெற்றவர்களை பிரிந்து வாழாத ஆதவனுக்கு இப்பொழுது பிரியமான தன் மனைவியையும் பிரிவது மனதுக்கு மிகவும் கஸ்ரமாக இருந்தது. பயண ஆயத்தங்களுடன் விமான நிலையத்தில் அனைவரும் கூடி நிற்க பெற்றவர்களுடன் கண்கலங்கி நின்ற அபிராமியை அணைத்து சரி கவலைப்படாதேயும் நான் நல்ல இடத்தில் இறங்கியபின் விரைவில் உம்மை கூப்பிட முயற்சி செய்யிறன் என்று ஆறுதல் கூறி அனைவருக்கும் கை அசைத்து விடை கொடுத்தான்.
ஆதவனின் கப்பல் பம்மாயிலிருந்து புறப்பட்டு இரண்டு வாரங்கள் சென்ற நிலையில் தினமும் போனில் பேசும் அபிராமியின் அழைப்பு வராமலிருக்கவே என்னமோ ஏதோ என்று பெற்றவர்களுக்கு போன் எடுத்தான். அம்மாதான் போன் எடுத்தார். 'ஆதவன் இன்றுதான் அபிராமி டொக்ரரிடம் போய் வந்தார் ஒரு கிழமையாக ஆரதிக்கு ஒரே தலை சுற்று .இன்று டொக்ரர் நல்ல செய்தி சொல்லி இருக்கிறேர். ஏங்களுக்கு பேரக் குழந்தை கிடைக்க இருக்கு' என்று மகிழ்சியில் மூச்சு விடாமல் பேசி முடித்தார்.
ஆதவனுக்கு சந்தோசத்தில் வானில் பறப்பது போல இருந்தது. இதுவரை குழந்தையாக தன்னை எண்ணி பெற்றவர்களின் செல்ல மகனாக இருந்த எனக்கா குழந்தை பிறக்க இருக்கு. மகிழ்ச்சியுடன் உடனே அபிராமியை போனில் அழைத்து வாழ்த்து சொல்லவும் அவளும் சந்தோசமும் வெட்கமும் கலந்த குரலில் தான் தாயாகப் போகும் விடயத்தை கூறினாள். இந்த சமயத்தில் அவளுக்கு அருகிலிருந்து கவனிக்க முடியவில்லையே என்று ஆதங்கப் பட்டாலும் மனதை தேற்றிக் கொண்டு நண்பர்களிடம் சொல்லி மகிழ்ந்தான்.
ஆரம்ப நாட்களில் கப்பல் பிரயாணமும் வேலையும் மிகுந்த சிரமமாக இருந்தாலும் சிலநாட்கள் பழகியபின் பாரிய அலைகளின் நடுவில் கப்பலில் வேலை செய்வதும் அலைகளின் ஆட்டத்திலும் நடக்கவும் உண்ணவும் உறங்கவும் கூட பழகி விட்டது.
கப்பல் பல துறைமுகங்களைத் தாண்டி அமெரிக்கா புறப்பட்டது. அவனும் ரவியுமாக ரகசியமாக திட்டமிட்டு நாட்களை எண்ணிக்கொண்டிருந்தனர். ஒரு மாதத்தின்பின் கப்பல் அமெரிக்காவின் பொஸ்ரன் துறைமுகத்தை வந்தடைந்தது. வெளியே போவதுபோல் வெளிக்கிட்டு இருவருமாக அங்கிருந்து புறப்பட்டு நண்பனுக்கு தெரிந்த ஒருவரின் உதவியுடன் சில நாட்களின்பின் அகதி அந்தஸ்திற்காக விண்ணப்பித்தனர்.
காலம் உருண்டோடியது. அமெரிக்காவில் அகதியாக அவன் இருக்க ஆரதியோ இலங்கையில் அவனது செல்ல மகளாக பிறந்தாள். குழந்தையை நேரில் பார்க்கவோ தூக்கி கொஞ்சி மகிழவோ முடியாவிட்டாலும் ஸ்கைப்பில் தினமும் பார்த்து மகிழ்ந்தான். அவனது அகதி விண்ணப்பமும் ஒரு வருடம் இரண்டு வருடம் என்று இழுபட்டு ஆறு வருடங்கள் ஓடி மறைந்து விட்டன. குழந்தையின் மழலை மொழி காதில் விழும் நேரமெல்லாம் அவன் உள்ளுக்குள் நொந்து போனான். ஆரதியும் ஸ்கைப்பில் தோன்றி ஆடலும் பாடலுமாக அவனை மகிழ்விப்பாள். அபிராமியும் எத்தனையோ எதிர்பார்ப்புக்களுடன் காத்திருந்தாள். ஒருவாறு ஆதவனுக்கு வதிவிட உரிமை கிடைத்து விட்டது. ஸ்பொன்சர் வேலைகளும் ஆரம்பித்து விட்டன.
ஆறு வருடங்கள் காத்திருந்து களைத்த ஆதவனுக்கோ இப்போழுதெல்லாம் தூக்கமே வருவதில்லை. எந்த நேரமும் தன் அன்பு மனைவியையும் அருமைக் குழந்தையையும் பாசமுள்ள பெற்றவர்களையும் நினைவில் சுமந்தபடி நாட்களைக் கழித்தான்.
இடைக்கிடை தலைவலி வேறு பிரச்சினை கொடுத்தது. ஆரம்ப நாட்களில் தலைவலிதானே என்று உதாசீனமாக இருந்தவன் தொடர்ந்தும் தலைவலி மோசமாக இருக்கவே வைத்தியரை நாடினான். ஆரம்பத்pல் வைத்தியரும் சாதாரணமான தலைவலிஎன்றுதான் அதற்கான மருந்துகளை கொடுத்தார்.
ஆனால் தொடர்ந்தும் தலைவலி மட்டுமல்ல அடிக்கடி மயக்கம் பசியின்னை உடல் தளர்ச்சி என்ற உபாதைகள் அதிகரித்தபடி இருந்தன. அதன்பின் எக்ஸ்ரே ஸகேன் இரத்தபரிசோதனை என்று சிகிச்சைகள் தொடர்ந்தன. ஆதவன் தன் சுகவீனத்தை வீட்டிற்கு தெரிவித்து அவர்களை கவலைப்பட வைக்கக்கூடாது என நினைத்து சொல்லாமலே மறைத்து வைத்தான்.

இந்த ஆறு மாதங்களாக ஆதவனுக்கு பலவிதமான சிகிச்சைகள் நடைபெற்றன. முடிவில் மூளையில் கட்டி இருப்பதாகவும் அதை அகற்றுவது மிகவும் சிரமம் என்றும் அதனால் மருந்துகள் மூலம் அவனது வலிகளைக் குறைப்பதுதான் இப்போதைக்கு செய்யக்கூடியதென்றும் வைத்தியர்கள் கைவிரித்தனர்.
அவன் உள்ளுக்குள் உடைந்து போனான். அருகிலிருந்து ஆறுதல் சொல்லக்கூட யாரமற்ற தனிமையில் மனம் புழுங்கினான். குழந்தையின் மழலைமொழி காதில் விழும் நேரமெல்லாம்
இதற்கிடையில் உலகெங்கும் கொரோனா வைரசின் தாக்கத்தினால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. பல நாடுகளில் ஏற்பட்ட மரணங்களும் தொற்று அதிகரிப்பும் காரணமாக விமான நிலையங்கள் மூடப்பட்டன. போக்கு வரத்துக்கள் ஸ்தம்பிதமாயின. ஆதனால் அமெரிக்க தூதரகமும் இழுத்து மூடப்பட்டுவிட்டது.
இப்போது அவனது நோய் முற்றிய நிலையில் ஆதவன் மிகவும் வேதனைப்பட்டான். நாளடைவில் அவனால் எதுவுமே செய்ய முடியவில்லை. உதவிக்குக்கூட யாருமில்லை. கனடாவிலிருந்து அவனது நெருங்கிய உறவான சிறியதாயார்கூட எல்லைகள் மூடப்படுவதற்கு முன் அங்குசென்று இருண்டு நாட்களில் நாடு திரும்பவேண்டியதாய் விட்டது. அமெரிக்காவிலுள்ள ஆதவனின் நண்பன் ரவியும் தூரத்திர் வசித்ததனால் அங்கிருந்து  வந்து சில நாட்கள் தங்கி இருந்து கவனித்தான். கொரோனா பிரச்சனையால் அவன்கூட தொடர்ந்து தங்கி இருந்து கவனிக்க முடியாத இக்கட்டான நிலை.
ஆரம்பத்தில் ஆதவனின் நோய் பற்றி சீரியசாக எடுக்காத பெற்றவர்களும் அபிராமியும்கூட நோயின் தாக்கம் அதிகரித்திருப்பதை அறிந்ததும் பதறிப் போயினர். தலைவலிதானே அபிராமி அங்கு போனதும் குழந்தையையும் அவளையும் பார்க்கும் சந்தோசத்தில் எல்லாம் சரியாகிவிடும் என்றுதான் இதுவரை நம்பிக்கொண்டிருந்தனர்.
ஆபிராமிக்கு நோயின் தீவிரம் தெரியவந்ததும் அவளது மனக்கோட்டைகள் யாவும் இடிந்து விழுந்து தரைமட்டமாகியது. யாரை நோவது? கடவுளையா? தன் விதியையா? யாரை நோவது?
விசா கிடைத்ததும் வந்து விடுவார்கள் என்று காத்து காத்து இந்த ஏழு வருடமாக பெற்ற மகளைக்கூட பார்க்கமுடியாத தன் துயரமான வாழ்க்கையை நினைத்து நினைத்து மனம் புழுங்கினான்.
யாருக்கு யார் ஆறுதல் சொல்வது? மணமாகி நாலே மாதங்கள் ஆதவனுடன் வாழ்ந்து இன்று ஏழுவயதை எட்டும் ஆரதியை மட்டுமே துணையாக வாழும் அபிராமிக்கு உலகமே இருண்டு விட்டது.
கண்காணாத தேசத்தில் நோயுடன் போராடும் கணவனைப் பார்க்கவோ அவனது துன்பமான நேரத்தில் அருகிருந்து பராமரிக்கவோகூட தனக்கு கொடுத்து வைக்காத கொடுமையான நிலமையை நினைத்து நினைத்து அழுதாள்.
ரவிதான் திரும்பவும் வந்து அவனுக்கு உதவியாக அவனுடன் தங்கி நின்றான்.
ஆதவனின் நிலை மோசமாக இருந்ததால் இப்பொழுதெல்லாம் அவனால் எழுந்து நடமாடக்கூட முடியாமல் படுக்கையிலேயே நாட்கள் கழிந்தன. கீமோ சிகிச்சையும் பயனளிக்கவில்லை. வைத்தியசாலையிலேயே அவனது நாட்கள் கழி;ந்தன. பெற்றவர்களும் தன் பிரிய மனைவியும் தன் இந்த நிலையைப் பார்க்கக் கூடாதென்ற எண்ணத்தில் ஸ்கைப்பில் கதைப்பதையும் தவிர்த்தான். நண்பனின் கட்டாயத்தால் போனில் சில வார்த்தைகள் பேசுவதோடு நிறுத்திக்கொள்வான்.
இந்த ஏழு ஆண்டுகள் இல்லறவாழ்வில் அபிராமி என்னத்தை அனுபவித்தாள். சில நாள் இன்பத்தை மட்டுமே கொடுக்க முடிந்த தன்னால் காலம் முழுவதும் கண்ணீரையும் வேதனையையும் கொடுக்கவா திருமணம் செய்தேன்?
தன் அருமை மகளை தொட்டுத் தூக்கி அவளது மழலைப் பேச்சைக் கேட்கவும் முடியாத அபாக்கியசாலியாகி விட்டேனே என்று மனதுக்குள் மறுகினான். அதனால் அவனுக்கு மனஅழுத்தமும் சோர்வும் வேதனையுமே மிஞ்சின.
இந்த ஒரு மாதமும் வேதனை மிகுந்த நாட்கள். கொரோனா தாண்டவம் ஒருபுறம். கொடிய நோயின் வேதனை தனது குடும்பத்தினரின் பிரிவு என்று அடுத்தடுத்து வேதனையே மிஞ்சின. வைத்தியர்களும் அவனது உடல் நிலை மோசமாக இருப்பதாகவும் இன்னும் ஒருமாதமே தம்மால் காலக்கொடு கொடுக்க முடியுமென்றும் கூறினர். ஆதவனால் நன்றாகப் பேசவும் முடியவில்லை. மூச்சு விடுவது உண்பது மருந்துகள் என்ற எல்லாமே குழாய்களின் மூலம்தான். இறுதி நாட்கள் அண்மித்து விட்டன. அஸ்தமனத்தின் ஒளிக்கீற்றுகள் அவனது நினைவுகளில் வந்து மாஜாயாலம் காட்டியது,
அவனது நண்பனும் அவனைப் பார்த்துவிட்டுப் போகத்தான் வந்திருந்தான். ஆனாலும் அவனது நிலையை பார்த்தபின் அங்கேயே தங்கவேண்டி வந்துவிட்டது. ஆதவன் கடைசியாக மகளின் பாடலைக் கேட்கவேண்டுமென்ற தன் விருப்பத்தைக் கூறி இருந்தான். அத்துடன் மகளுக்காக தான் இதுவரை செய்து வைத்த நகைகள் பணம் எல்லாவற்றையும் நண்பனிடம் கொடுத்து அபிராமியிடம் சேர்க்கும்படி கூறினான். அபிராமியும் அவனது பெற்றவர்களும் நண்பனிடம் தொடர்பு கொண்டு தாங்கள் எப்படியாவது ஆதவனை ஸ்கைப்பில் பார்க்க வேண்டுமென அழுகையும் விம்மலுமாக இறஞ்சிக் கேட்டனர். ஆதவனுக்கோ நினைவு மறையத் தொடங்கி இருந்தது. ரவியும் ;அபிராமியிடம் ஆதவன் ஆரதியின் பாடலைக் கேட்க விரும்பினான் என்று கூறி ஸ்கைப்பில் தொடர்பை ஏற்படுத்தினான். அபிராமி மகளை அழைத்து அப்பாவுக்காக அவனுக்கு விருப்பமான பாடலை பாடும்படி கேட்கிறாள். ஆரதியும் அப்பா கேட்கிறார் என்றதும் தமது மழலை கொஞ்சும் குரலால் பாடத் தொடங்கினாள். அபிராமியின் விம்மலும் பெற்றவர்களின் அழுகையும் இசையாக ஆரதி பாடிக்கொண்டிருந்தாள். இனி ஒருபோதும் அப்பாவை பார்க்கப் போவதில்லை என்றோ அப்பா தன்னை ஒருபோதுமே அணைத்து மகிழப்போவதில்லை என்றோ புரியாதவளாய் ஆரதி அப்பாவுக்காக ஆசைதீரப் பாடிக்கொண்டிருந்தாள்.


(யாவும் கற்பனையல்ல)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, Kavallur Kanmani said:

ஆரம்ப நாட்களில் கப்பல் பிரயாணமும் வேலையும் மிகுந்த சிரமமாக இருந்தாலும் சிலநாட்கள் பழகியபின் பாரிய அலைகளின் நடுவில் கப்பலில் வேலை செய்வதும் அலைகளின் ஆட்டத்திலும் நடக்கவும் உண்ணவும் உறங்கவும் கூட பழகி விட்டது.
கப்பல் பல துறைமுகங்களைத் தாண்டி அமெரிக்கா புறப்பட்டது. அவனும் ரவியுமாக ரகசியமாக திட்டமிட்டு நாட்களை எண்ணிக்கொண்டிருந்தனர். ஒரு மாதத்தின்பின் கப்பல் அமெரிக்காவின் பொஸ்ரன் துறைமுகத்தை வந்தடைந்தது.

எனது கப்பல் வாழ்வை அசை போட்டு பார்க்கிறேன்.
நல்ல கதை அருமையாக எழுதியிருக்கிறீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 வாசிக்கும் போதே கண்கள் கலங்குகின்றன. இப்படி ஒரு நிலை எந்தக் குழந்தைக்கும்
 வரக்கூடாது . . உண்மை கலந்த கதைபோல உள்ளது.  இன்று எவர் வாழ்வும் நிலையில்லை . யாருக்கு என்ன வகையில் விதி விளையாடும் எனவும் தெரியாது பிரிவு கொடுமையானது . . .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில் யாருக்குப் பாவம் பார்ப்பது என்றே தெரியவில்லை. அருமை அக்கா.

Link to comment
Share on other sites

இந்த கதையை வாசித்து முடிக்கும்போது இது ஒரு கற்பனையாக இருக்க வேண்டும் என்றுதான் மனம் ஏங்கியது. யாவும் கற்பனையல்ல என்ற இறுதிவரி அப்படியே நொருங்க வைத்துவிட்டது. இப்படி ஒரு நிலை யாருக்கும் வரவே கூடாது ...கடவுளே இது ஒரு கதையாக மட்டுமே இருந்திட வேண்டும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் பிரான்ஸ் வந்து மகனுக்கு நான்கு வயதில்தான்  பார்த்தேன்..... மிகவும் மனக்கஷ்டமான காலங்கள் அவை.......பகிர்வுக்கு நன்றி சகோதரி......!  🤔 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வலிகளும் சோகங்களும் வாழ்கையில் பிரிக்க முடியாதவை. உணரவைத்துவிட்டீங்கள் அக்கா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதையாக படித்துவிட்டு இறுதியில் யாவும் கற்பனையல்ல என்பதையும் வாசித்த போது நெஞ்சை ஒருமுறை வருடியது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, ஈழப்பிரியன் said:

எனது கப்பல் வாழ்வை அசை போட்டு பார்க்கிறேன்.
நல்ல கதை அருமையாக எழுதியிருக்கிறீர்கள்.

கப்பலில் வேலை செய்தீர்களா அண்ணா ? நெடுந்தூர கடல் பயணங்கள் நிறய அனுபவங்களை தந்திருக்குமே ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது பொய்யாக இருக்கவேண்டுமென மனம் விரும்பினாலும் சில மாதங்களுக்குமுன் உண்மையாக நடந்த நிகழ்வு.  கொரோனா காலமானதால் நெருங்கிய உறவுகள் கனடாவில் இருந்தும் இறுதி நிகழ்வுகளில்கூட கலந்து கொள்ள முடியாமல் மிகவும் வேதனைப்பட்டனர். படித்து கருத்திட்ட ஈழப்பிரியன் நிலாமதி சுமே நிகி சுவி முதல்வன் குமாரசாமி நில்மினி அனைவருக்கும் நன்றிகள். பச்சைப் புள்ளியிட்ட நிழலி எப்போதும் தமிழன் மற்றும் அனைவருக்கும் நன்றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, Kavallur Kanmani said:

இது பொய்யாக இருக்கவேண்டுமென மனம் விரும்பினாலும் சில மாதங்களுக்குமுன் உண்மையாக நடந்த நிகழ்வு.  கொரோனா காலமானதால் நெருங்கிய உறவுகள் கனடாவில் இருந்தும் இறுதி நிகழ்வுகளில்கூட கலந்து கொள்ள முடியாமல் மிகவும் வேதனைப்பட்டனர். படித்து கருத்திட்ட ஈழப்பிரியன் நிலாமதி சுமே நிகி சுவி முதல்வன் குமாரசாமி நில்மினி அனைவருக்கும் நன்றிகள். பச்சைப் புள்ளியிட்ட நிழலி எப்போதும் தமிழன் மற்றும் அனைவருக்கும் நன்றிகள்

மிகவும் மனதை நெருடிய கதை, இப்படியொரு நிலை யாருக்கும் வரக்கூடாது.

கண் முன்னே காட்சிகள் விரிக்கின்றது துயரத்துடன், நானும் அனுபவித்துள்ளேன் பிரிவையும் அதன் தாக்கங்களையும்.

ஒவ்வொரு புலம் பெயர் தமிழருக்கு பின்னால் ஒரு சோக கதையிருக்கும், வாழ்நாளில் மறக்க முடியாது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனதை வருத்தினாலும் சில உண்மைகளை கூறிவிட்டு செல்லும் கதை.. இங்கே பகிர்ந்தமைக்கு நன்றிகள்.

சில கதைகள், சித்திரங்கள், கட்டுரைகள், திரைப்படங்கள் என்பன சமூகத்திற்கு விழிப்புணர்வை ஏதோவொரு வழியில் வழங்கும் சாதனங்கள் என்பதால் நான், எனது தனிப்பட்ட கருத்தை கூறவிரும்புகிறேன். யாருடைய மனதையும் காயப்படுத்தும் எண்ணம் இல்லை..

ஆதவனுடைய பெற்றோர் போன்றவர்களை அடிக்கடி எங்கள் வாழ்க்கையில் பார்ப்போம். அவர்கள் ஒருதரம் சிந்தித்து இருந்தால் இன்று அபிராமியின் வாழ்க்கை இப்படி ஆகியிருக்காது. திருமணம் மட்டுமே வாழ்க்கை இல்லை. பிள்ளையில் நம்பிக்கை வைக்காது வேறு யாரிடம் நம்பிக்கை வைப்பீர்கள்?. அவர்கள் தங்களது நிலையை மட்டுமே யோசித்திருக்கிறார்கள். ஆதவன் ஒரு நிலைக்கு வந்து, திருமணத்தை செய்து கொடுத்திருந்தால் ஆரதிக்கு இந்த நிலை வந்திருக்காது, தனது தந்தையின் இறுதிகணங்களில் கூடவே இருந்திருப்பாள்.

ஆதவனைப்போன்றவர்கள்.. தான் ஒரு நிலைக்கு வரும்வரை பொறுத்திருந்தால் ஆரதிக்கு இந்த நிலை வந்திருக்காது. வாழ்க்கை என்பது, 100% நம்பிக்கையில் மட்டுமல்ல நாங்கள் எங்களை சுற்றி நடைபெறும் விஷயங்களிலும் தங்கியுள்ளது.. ஆதவன் ஒரு தரம் உணர்வுகளில் மயங்காமல் அறிவுபூர்வமாக, யதார்த்தமாக சிந்தித்து இருந்தால், தனது வாழ்வின் கடைசி நொடிகளில் அமைதியுடன் இறந்திருப்பார்.

அபிராமியை போன்ற பெண்கள் எங்களிடையே இருக்கிறார்கள ..கணவன் தன்னைவிட்டு இன்னொரு தேசத்திற்கு போவது, எதிர்காலம் பற்றிய கேள்விக்குறி இருக்கும் போது, குழந்தையை பெறுவதைப்பற்றி யோசித்திருக்கலாம் என்ற ஆதங்கம் மனதில் எழலாமல் இல்லை.. அபிராமி தனது எதிர்காலத்தை எப்படி எதிர்கொள்வார்?.. 

எல்லாவிடயங்களையும் விதி என்ற ஒன்றின் மேல் போடமுடியாது...எங்களை சுற்றி நடக்கும் நிகழ்வுகளில் இருந்தும் கற்றுக்கொள்ளவேண்டும் என பெரும்பலான நேரங்களில் நினைப்பதுண்டு. உணர்ச்சிகளை ஒதுக்கி யதார்த்தமாக சிந்தித்தால் அபிராமி போன்ற பெண்களின் நிலை தெரியவரும்.. 

யாருடைய மனதையும் நோகடிக்க வேண்டும் என கருத்தை கூறவில்லை ஆனால் அபிராமி போன்றவர்களை, துணையுடன் சேர்ந்து வாழமுடியாமல், எப்பொழுது குடும்பமாக வாழலாம் என்ற நிலையில் வெளியே சிரித்து உள்ளே அழுதபடி வாழும் அவர்களை சந்தித்து இருக்கிறேன்.. பார்த்திருக்கிறேன்.. 

நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, nilmini said:

கப்பலில் வேலை செய்தீர்களா அண்ணா ? நெடுந்தூர கடல் பயணங்கள் நிறய அனுபவங்களை தந்திருக்குமே ?

வணக்கம் நில்மினி.
கப்பல் வாழ்வு என் வாழ்நாளில் கிடைத்த ஒரு வரம்.
அதே தான் அமெரிக்கா வரவும் உதவியாக இருந்தது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்மணி அக்கா இந்த கதையை பதிந்து விட்டு போகும் போது, படித்து விட்டு ஒன்றுமே எழுத முடியாது போய் விட்டேன்..

Link to comment
Share on other sites

20 hours ago, nige said:

இந்த கதையை வாசித்து முடிக்கும்போது இது ஒரு கற்பனையாக இருக்க வேண்டும் என்றுதான் மனம் ஏங்கியது. யாவும் கற்பனையல்ல என்ற இறுதிவரி அப்படியே நொருங்க வைத்துவிட்டது. இப்படி ஒரு நிலை யாருக்கும் வரவே கூடாது ...கடவுளே இது ஒரு கதையாக மட்டுமே இருந்திட வேண்டும்..

 

19 hours ago, குமாரசாமி said:

கதையாக படித்துவிட்டு இறுதியில் யாவும் கற்பனையல்ல என்பதையும் வாசித்த போது நெஞ்சை ஒருமுறை வருடியது.

எனக்கும் இதே உணர்வுதான்...வாசித்துவிட்டு ஒன்றுமே எழுத முடியாமல் இருந்தது. எனக்கும் மகள் இருப்பதும் அவளுக்கும் இப் பாடல் விருப்பமான பாடல் என்பதால் ஆரதியின் உணர்வுகளை நெருக்கமாக உணர முடிந்தது....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படித்து கருத்திட்ட உடையார் பிரபா யாயினி நிழலி அனைவருக்கும் நன்றிகள். வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் வாசல் தோறும் வேதனை இருக்கும் என்று ஒரு கவிஞன் பாடியுள்ளான். என்னதான் நாம் திட்டமிட்டாலும் யார்யாருக்கு  என்ன நடக்க வேண்டுமென இருக்கோ அதை மாற்றுவது எளிதல்ல. மரணத்தை யாரால் வெல்ல முடியும்.  விரிவாகக் கருத்திட்ட பிரபாவுக்கு நன்றிகள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, ஈழப்பிரியன் said:

வணக்கம் நில்மினி.
கப்பல் வாழ்வு என் வாழ்நாளில் கிடைத்த ஒரு வரம்.
அதே தான் அமெரிக்கா வரவும் உதவியாக இருந்தது

இப்படியான நல்ல மகிழ்ச்சி தரக்கூடிய அனுபவங்கள்தான் உண்மையில் வாழ்க்கை. அந்த வகையில் நீங்கள் அதிஷ்டசாலி அண்ணா. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாசிக்கும் போதே கண்கள் கலங்குகின்றன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு தெரிந்த ஒரு தம்பிக்கும் பிரேயின் டியூமர் இருந்தது ...அவர் புலம் பேர் நாடு ஒன்றில் தனியாக இருந்தார் ...பெற்றோர் ஊரில்...அவருக்கு கேள் பிரண்ட் இருந்தவ.தமிழ்ப் பெண் ...ஒரு அறிகுறியும் இல்லாமல் திடிரென்று மயங்கி விழுந்தவர் ...ஆஸ்பத்திக்கு கொண்டு போனவுடன் கண்டு பிடித்து விட்டார்கள் ...தலையிடி இருந்தும் கணக் எடுக்காமல் விட்டாரோ தெரியாது ...ஆள் ஒரு மாதிரி தப்பி விட்டார் ...கண காலம் நினைவு தப்பி இருந்தார் ...கேள் பிரண்ட் விட்டுட்டு போய்ட்டா ...அவாவிலும் பிழையில்லை ...இப்ப அவர் திருமணம் முடித்து ஒரு பிள்ளை இருக்குது ...மனைவியை, சொந்தங்கள் ஏமாத்தி கட்டி கொடுத்து விட்டினம்...சுமாராக அவர்களது வாழ்க்கை போகிறது 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படித்து  கருத்திட்ட சுவைப்பிரியன் ரதிக்கும் விருப்பிட்ட அபராஜிதனுக்கும் நன்றிகள். 
நில்மினி கப்பலில் வேலை செய்வது மகிழ்ச்சியான அனுபவம் என்று எழுதியுள்ளீர்கள். நான் நினைக்கிறேன் அது குடும்பத்தை பிள்ளைகளை பெற்றவர்களை விட்டுவிட்டு தனிமையான மிகக் கொடுமையான அனுபவமென்று. மாதக் கணக்காக கரையே தெரியாத கடலில் சுழற்காற்றில் மிகக் கடுமையான வேலை. திரும்ப ஊருக்கு வந்தால் கப்பல்காரன் என்ற மவுசு. ஈழப்பிரியனுக்கு தெரிந்திருக்கும் என நினைக்கிறேன். கருத்துக்கு நன்றிகள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கப்பல் மூலம்  அமெரிக்காவுக்கு வந்தமையைக்  குறிப்பிட்டுள்ளார்  நில்மினி என நினைக்கிறேன் . ஆனால் நீங்கள் குறிப்பிட்ட் படி   குடும்பத்தை பிள்ளைகளை பெற்றவர்களை விட்டுவிட்டு தனிமையான மிகக் கொடுமையான அனுபவமென்று. மாதக் கணக்காக கரையே தெரியாத கடலில் சுழற்காற்றில் மிகக் கடுமையான வேலை.. நானும் உணர்ந்தது  உண்டு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்பொழுதாவது செல்போன் ஸ்கைப் லப்ரப் என்று எல்லா வசதிகளும் உண்டு. அன்றைய நாட்களில் மாதக்கணக்காய் கடிதம் ஒன்றுதான் தொலைத்தொடர்புச் சாதனம். மிகக் கொடுமையான நாட்கள். கருத்துக்கு நன்றிகள் நிலாமதி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்பிடி எங்கள் வாழ்க்கையில் நிறையப் பேரைக் கடந்து செல்ல வேண்டியிருக்கிறது. என்ன செய்வது ஒரு பக்கம் போரில் ஏற்பட்ட இழப்புகள், இன்னொரு பக்கம் கொடிய நோய்கள்...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 09:47 AM   உலகில் வாழும் கிறிஸ்தவர்கள் இன்று யேசுக்கிறிஸ்துவின் பாடுகள், மரணத்தை நினைவு கூர்ந்து புனித வெள்ளியை அனுஷ்டித்து வருகின்றனர். இயேசுவின் மறைவு புனித வெள்ளியாக இன்று அனுசரிக்கப்படுகிறது. அவர் உயிர்த்தெழுந்த நாள் 'ஈஸ்டர்' ஞாயிறாக அனுஷ்டிக்கப்படுகின்றது. யேசுக்கிறிஸ்து இறந்தது துக்க நிகழ்வு என்றாலும், அதனால் மனித குலத்திற்கு விளைந்த நன்மைகளை வைத்தே 'புனித வெள்ளி' என்றழைக்கின்றனர் கிறிஸ்தவர்கள். வரலாற்றில் முக்கிய நிகழ்வான இயேசு கிறிஸ்துவின் பாடுகள், மரணம், உயிர்ப்பை உலகளவில் கிறிஸ்தவர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். அந்தவகையில் இயேசு கிறிஸ்து உயிர்விட்ட நாளை இன்று உலகிலுள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் இன்று 'பெரிய வெள்ளி'யாக நினைவு கூருகின்றனர். பெரிய வெள்ளி, புனித வெள்ளி, Good Friday என்று சொல்லும் போதே இயே­சுவின் மர­ணம் தான் சர்வ உலக மக்களின் நினை­விலும் வரும். அந்த நாளுக்கு பெரி­ய­வர்கள் அல்­லது முன்­னோர்கள் சரி­யாக பெய­ரிட்­டுள்­ளனர். நல்ல வெள்ளி, புனித வெள்ளி, எல்லா வெள்­ளி­க­ளிலும் பெரிய வெள்ளி என்று மிகவும் பொருத்­த­மா­கவே பெய­ரிட்­டுள்­ளனர். ஆனால், அந்த பெயர்­களின் அடிப்­ப­டையில் அந்த நாள் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கின்­றதா என்று கேட்டால் இல்லை என்­றுதான் சொல்­ல­வேண்டும். ஒரு கெட்ட மனி­த­னு­டைய மர­ண­மா­யி­ருந்­தாலும் அதற்கு அனு­தா­பப்­ப­டு­கிற உல­கமே நாம் வாழும் இவ்­வு­லகம். ஒரு மனி­த­னுக்கும் தீங்கு நினை­யாமல் எல்லா மனித வாழ்­விலும் நன்மை செய்த தேவ­கு­மாரன் இயே­சுவின் மரண நாளுக்கு வைக்­க­வேண்­டிய பெயரை வைக்­காமல் அந்த நாளுக்கு நல்ல நாள் என்றும், புனித நாள் என்றும், பெரிய நாள் என்றும் ஏன் பெய­ரிட்­டார்கள்? ஆம் பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த நாள் உல­கத்­தி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் நல்ல நாள். ஏனென்றால், ஜீவ கால­மெல்லாம் மரண பயத்­தி­னாலே அடி­மைத்­த­னத்­திற்­குள்­ளா­ன­வர்கள் யாவ­ரையும் விடு­தலை பண்­ணும்­ப­டிக்கு தேவ­கு­மா­ரனாம் இயேசு சர்­வத்­தையும் படைத்­தவர், சர்­வத்­தையும் ஆளுகை செய்ய வேண்­டி­யவர். பிள்­ளைகள் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வர்­க­ளா­யி­ருக்க அவரும் நம்­மைப்போல் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வ­ராகி மர­ணத்தின் அதி­ப­தி­யா­கிய பிசா­சா­ன­வனை தம்­மு­டைய மர­ணத்­தினால் அழிக்கும் படிக்கும், நம்மை மரண பயத்­தி­லி­ருந்து விடு­விக்­கும்­ப­டிக்கும் மர­ணத்­துக்­கே­து­வான ஒன்றும் அவ­ரிடம் காணப்­ப­டாத போதும், மரணம் மனித வாழ்வில் பயத்­தையோ அடி­மைத்­த­னத்­தையோ கொடுக்­கக்­கூ­டாது என்று காண்­பிக்கும் படிக்கும் மர­ணத்தை ஏற்றுக் கொண்டார். பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த உலகில் வாழும் எல்லா மனி­த­னுக்கும் மரணம் என்­பது மாமி­சத்­துக்கும் இரத்­தத்­துக்­கும்தான். நம்­மு­டைய ஆவி, ஆத்­து­மா­வுக்­கல்ல. சரீ­ரத்தில் இரத்த ஓட்டம் நின்று சரீரம் செய­லற்றுப் போவ­துதான் மரணம். எனவே பரி­சுத்த வேதா­கமம், ‘ஆத்­து­மாவைக் கொல்ல வல்­ல­வர்­க­ளா­யி­ராமல், சரீ­ரத்தை மாத்­திரம் கொல்­லு­கி­ற­வர்­க­ளுக்கு நீங்கள் பயப்­பட வேண்டாம்; ஆத்­து­மா­வையும் சரீ­ரத்­தையும் நர­கத்­திலே அழிக்க வல்­ல­வ­ருக்கே பயப்­ப­டுங்கள்’ (மத் 10:28) என்று சொல்­கி­றது. மேலே சொல்­லப்­பட்­ட­து­போல மரண பயத்­தினால் பிசா­சா­னவன் யாவ­ரையும் அடி­மைப்­ப­டுத்­தி­யி­ருந்தான். நம் இயேசு சிலுவை மர­ணத்தை ஏற்றுக் கொண்டு உல­கி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் ‘இவ்­வு­லகில் மரணம் என்­பது வெறும் சரீ­ரத்­திற்கே சொந்­த­மா­னது’ என்ற உண்­மையை தெளி­வு ­ப­டுத்­தினார். எனவே உல­கத்­தி­லுள்ள எந்த மனு­ஷனும் மனு­ஷியும் இயே­சுவின் மர­ணத்தை ஏற்றுக் கொள்ளும் போது, மரண பயத்­திற்கு நீங்­க­லாகி பிசாசின் அடி­மைத்­த­னத்­திற்கு நீக்­க­லாக்­கப்­ப­டு­கி­றார்கள். ஆக­வேதான் அதை நல்ல வெள்ளி (Good Friday) என்று உலகம் அழைக்­கி­றது. அடுத்து புனித வெள்ளி என்று ஏன் சொல்­லு­கிறோம்? தேவன் மனி­தனை தம்­மைப்போல் வாழும்­ப­டி­யாயும், பரி­சுத்த சந்­த­தியை உரு­வாக்­கும்­ப­டி­யாயும் படைத்தார். ஆனால் முதல் மனிதன் ஆதாமின் கீழ்­ப­டி­யாமை, மீறு­த­லினால் உல­கத்தில் பாவம் வந்­தது. எல்லா மனி­தர்­க­ளையும் பாவம் ஆளுகை செய்­தது. ஒரு மனித வாழ்­விலும் புனிதம் (பரி­சுத்தம்) இல்லை. பாவம் கழு­வப்­ப­ட­வில்லை. ‘இரத்தம் சிந்­து­த­லினால் மாத்­தி­ரமே பாவப்­பி­ரா­யச்­சித்தம் உண்டு’ என்­பது உலகில் வாழும் அநே­க­மானோர் ஏற்றுக் கொள்ளும் ஒன்று. ஆகவே, தேவ­னு­டைய ஆதி விருப்­பத்­தின்­படி இயேசு சிலு­வையில் சிந்­திய இரத்தம் மாத்­தி­ரமே மனித வாழ்வின் பாவத்தை கழுவி பரி­சுத்­த­மாக்­கி­யது. இரண்டாம் ஆதாம் என்று அழைக்­கப்­படும் இயே­சுவின் கீழ்­ப­டிதல், தாழ்­மையின் மூலம் உலகில் கிரு­பையும், சத்­தி­யமும் வந்­தது. யார் இயேசு மூலம் வந்த கிரு­பையைக் கொண்டு சத்­தி­யத்தை பின்­பற்­று­கி­றார்­களோ அவர்கள் வாழ்வில் கீழ்­ப­டிவும், தாழ்­மையும் காணப்­படும். இயே­சுவின் கீழ்­ப­டிவும் தாழ்­மையும் முழு­மையாய் கல்­வாரி சிலு­வையில் காட்­டப்­ப­டு­கி­றது. இயேசு அங்கே சிந்­திய இரத்­தத்­தி­னால்தான் நாம் பரி­சுத்­த­மாக்­கப்­பட்டோம். ஆக­வேதான் புனித (பரி­சுத்த) வெள்ளி என்று அந்நாள் போற்­றப்­ப­டு­கி­றது. பிரி­ய­மா­ன­வர்­களே, எத்­த­னையோ வெள்­ளிக்­கி­ழ­மைகள் இருக்க இந்­நாளை மட்டும் ஏன் பெரிய வெள்ளி என்று சொல்­கிறோம்? இந்த நாள் மனித வாழ்வில் மரண பயத்தை நீக்கி, அடி­மைத்­தன நுகத்தை முறித்து, மனித வாழ்வில் சாப­மாக வந்த பாவத்தைக் கழுவி, ஆசிர்­வா­தத்தை உண்­டாக்கி, மனி­தனை சிந்­தனை செய்ய வைத்த நாள். இது துக்­கத்தின் நாளும் அல்ல, சந்­தோ­ஷத்தின் நாளும் அல்ல. இது அர்ப்­ப­ணிப்பின், தீர்­மா­னத்தின் நாள். இயே­சுவின் மர­ணத்தில் நம்மை பங்­குள்­ள­வர்­க­ளாக்கும் நாள். நம்­மு­டைய பாவ, சாப, தரித்­திர, மரண வல்­ல­மையை முறி­ய­டித்த நாள். நாம் நம் இயே­சுவின் மர­ணத்தை ஏற்று அதில் நாம் பங்­கு­டை­ய­வர்­க­ளா­கிறோம் என்­ப­துதான் நம் வாழ்வில் நாம் எடுத்த தீர்­மா­னங்­களில் மிகவும் பெறு­ம­தி­யான, விலை­ம­திக்க முடி­யாத தீர்­மானம். நம் வாழ்வில் நாம் எடுக்கும் வெற்றியான தீர்மானத்தின் நாள்தான் நம் வாழ்வின் பெரிய நாளாய் இருக்கும். ஆகவே, இந்த நாள் நல்ல, புனித, பெரிய நாளாய் என் வாழ்வில் அமைந்துள்ளது. உங்கள் வாழ்விலும் அமைய இயேசுவோடு கூட நீங்கள் சிலுவையில் அறையப்பட உங்களை ஒப்புக் கொடுக்கும் தீர்மானம்; உங்கள் பாவ, சாப, பலவீனங்களை சிலுவையில் அறைந்து இயேசுவின் தேவ, தூய பண்புகளை உங்கள் வாழ்வில் கொண்டு வரும். இந்நிலையில், இலங்கையைப் பொருத்தவரையில் மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்ற நிலையில், கிறிஸ்தவர்கள் புனித வாரத்தை அனுஷ்டிக்கின்றனர். மக்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள இன்னல்களில் இருந்து விடுபட அனைவரும் பிரார்த்திப்போமாக ! சிலுவையைப் பெற்றுக் கொள்வோம்! ஜெயமாய் வாழ்வோம்! ஆமென்! பெரிய வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கொழும்பு-13 புதுச்செட்டித் தெரு புனித வியாகுல மாதா ஆலயத்தில் யேசுவின் பாடுகளை நினைவு கூர்ந்து சிலுவைப்பாதை இடம்பெற்றதை படங்களில் காணலாம். (படப்பிடிப்பு :- ஜே.சுஜீவகுமார்) https://www.virakesari.lk/article/179948
    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.