Jump to content

கட்சிக்குள் முரண்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டம் திருமலையில்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

TNA-1.jpg

கட்சிக்குள் முரண்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டம் திருமலையில்

தேசியப் பட்டியல் உறுப்பினர் தெரிவு செய்யப்பட்ட விவகாரத்தில் கட்சிக்குள் முரண்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டம் திருகோணமலையில் நடைபெறவுள்ளது.

கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் எதிர்வரும் சனிக்கிழமை முற்பகல் 11 மணியளவில் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் இந்தக் கூட்டம் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த கூட்டத்தில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கம், அரசியல் குழுவின் உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன், ப.சத்தியலிங்கம், சி.வி.கே.சிவஞானம் மற்றும் எஸ்.எக்ஸ்.குலநாயகம் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதன்போது தமிழரசுக் கட்சியின் தேசியப் பட்டியல் விவகாரம் உட்பட பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்படும் என்று கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்தார்.

தமிழரசுக் கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினராக கலையரசனை கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கம் அறிவித்தமைக்கு கட்சிக்குள் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

குறிப்பாக கட்சியின் தலைவரான தன்னிடம் கலந்தாலோசிக்காமல் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மாவை சேனாதிராஜா குற்றம் சுமத்தியுள்ளார்.

இவ்வாறான பரபரப்பான சூழ்நிலையில் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/கட்சிக்குள்-முரண்பாடு-ஏற/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பரபரப்பான சூழ்நிலையில் காலை 11.00 மணிக்கு திருமலையில் கூடுகிறது தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு

August 15, 2020

ItAK.pngகட்சிக்குள் ஏற்பட்டுள்ள பெரும் குழப்பங்களையடுத்து இலங்கை தமிழ் அரசு கட்சியின் அரசியல்குழு இன்று காலை 11.00 மணிக்கு பரபரப்பான சூழ்நிலையில் திருகோணமலையிலுள்ள இரா.சம்பந்தனின் இல்லத்தில் கூடுகிறது.

தேசியப் பட்டியல் விவகாரத்தில் நடந்த குழப்பங்கள், கட்சி தலைமையை மாற்ற முனைந்தமை, தேர்தலில் ஏற்பட்ட பாரிய பின்னடைவு போன்ற சம்பவங்களின் பின்னர் தமிழ் அரசு கட்சியின் அரசியல் செயற்குழு இன்று கூடுவதால் அங்கு என்ன நடைபெறும் என்பது பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகின்றது.

 

அரசியல் செயற்குழுவில், இரா.சம்பந்தன், மாவை சேனாதிராசா, சீ.வீ.கே.சிவஞானம், கி.துரைராசசிங்கம், எக்ஸ்.குலநாயகம், எம்.ஏ.சுமந்திரன், கிளிநொச்சி சார்பில் சி.சிறிதரன், வவனியா சார்பில் எஸ்.சத்தியலிங்கம், செ.செல்வராசா, த.கலையசரன் ஆகியோர் அரசியல் செயற்குழுவில் அங்கம் வகிக்கிறார்கள். இதுவரை கொழும்பு கிளை சார்பில் யாரும் கலந்துகொள்ளாத நிலையில், இம்முறை கொழும்பு கிளை சார்பில் கே.வி.தவராசாவை கலந்து கொள்ளுமாறு, தலைவர் மாவை சேனாதிராசா அழைப்பு விடுத்துள்ளார்.
 

 

http://thinakkural.lk/article/62474

Link to comment
Share on other sites

அண்மையில் கொழும்பிலிருந்து வால் ஒன்று அறிக்கை விட்டிருந்ததே? அந்த அம்மணி (?) யை அழைக்க வில்லையா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.