Jump to content

ஜிடிபி-யில் 20.4% சரிவு..மோசமான பொருளாதார வீழ்ச்சியில் சிக்கியது பிரிட்டன்..!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஜிடிபி-யில் 20.4% சரிவு..மோசமான பொருளாதார வீழ்ச்சியில் சிக்கியது பிரிட்டன்..!

image6-1597233196.jpg

கொரோனா தொற்று உலக நாடுகளின் பொருளாதாரத்தைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டு உள்ளதை நாம் கண்முன்னே பார்த்து வரும் நிலையில், வல்லரசு நாடுகளில் ஒன்றான பிரிட்டன் அதிகாரப்பூர்வமாகப் பொருளாதாரப் பின்னடைவைச் சந்தித்துள்ளதாக அந்நாட்டுத் தேசிய புள்ளியியல் அமைப்பு தெரிவித்துள்ளது.

உலக மக்களின் காவு வாங்கும் கொரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டது என ரஷ்யா அதிகாரப்பூர்வமாக அறிவித்து ஒருபக்கம் மகிழ்ச்சியை அளித்தாலும், வல்லரசு நாடுகளின் பொருளாதாரச் சரிவும், வர்த்தக மந்த நிலையும் சாமானிய மக்களைப் பயமுறுத்தி வருகிறது.

பிரிட்டனில் அப்படி என்ன நடந்தது..? எப்படி #Recession என அறிவிக்கப்படுகிறது..?

_111783142_obr_gdpscenario-nc.png

பிரிட்டனில் பொருளாதார நெருக்கடி

புதன்கிழமை பிரிட்டன் நாட்டின் தேசிய புள்ளியியல் அமைப்பு அந்நாட்டுப் பொருளாதார வளர்ச்சி ஆய்வுகளை வெளியிட்டது. இதில் 2020ஆம் ஆண்டின் 2வது காலாண்டில் யாரும் எதிர்பார்க்காத வகையில் பிரிட்டனின் ஜிடிபி சுமார் -20.4 சதவீத (எதிர்மறை) வரையில் சரிந்துள்ளதாக அறிவித்துள்ளது.

2 காலாண்டுகள் தொடர் சரிவு

மார்ச் 30 வரையிலான காலாண்டில் பிரிட்டன் நாட்டின் பொருளாதாரம் -2 சதவீதத்திற்கு ம் அதிகமாகச் சரிவைச் சந்தித்தது. பொதுவாக எந்தொரு நாடு தொடர்ந்து 2 காலாண்டுகளாகப் பொருளாதாரச் சரிவை எதிர்கொள்கிறதோ அப்போது Recession என அறிவிக்கப்படும்.

2008 நிதிநெருக்கடி

 2008ல் அமெரிக்காவில் பல வங்கிகள் நிதிநெருக்கடியால் மூடப்பட்டபோது உலக நாடுகளின் பொருளாதாரம் மற்றும் வர்த்தகத்தைத் தலைகீழாக மாறியது யாராலும் மறந்திருக்க முடியாது. குறிப்பாக ஐடி வேலையில் இருந்தவர்கள் எந்தொரு காரணமும் இல்லாமல் வேலையை விட்டு நீக்கப்பட்டும், வெளிநாட்டு ஆர்டர்கள் கிடைக்காமல் போனதும் என உலக நாடுகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது.

அப்போது கூடப் பிரிட்டன் பொருளாதாரம் அதிகப்படியாக -2.1 சதவீதம் வரையில் தான் சரிவைச் சந்தித்து இருந்தது. ஆனால் இப்போது -20.4 சதவீதம் சரிவைச் சந்தித்துள்ளது பிரிட்டன்.

கொரோனா

Hospitality-worst-hit-as-UK-plunges-into

இந்த மிகப்பெரிய சரிவுக்கு முக்கியக் காரணம் கொரோனா தான், பிரிட்டனில்  கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த அரசு கடுமையான கட்டுப்பாடுகள் உடன் அனைத்து வர்த்தகத்தையும் முடக்கியது. இதனால் நாட்டின் மொத்த வர்த்தகமும் தடைபெற்றது இதன் வாயிலாகவே பிரிட்டன் நாட்டின் பொருளாதாரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது எனப் பிரிட்டன் அரசு தெரிவிக்கிறது.

மார்ச் 23
முதல் காலாண்டில் பொருளாதாரப் பாதிப்புகளை முழுமையாகக் கணிக்க முடியவில்லை, இதற்குக் காரணம் மார்ச் 23ஆம் தேதி தான் பிரிட்டனில் லாக்டவுன் அறிவிக்கப்பட்டது. இதனால் அடுத்த 9 நாட்களில் ஏற்பட்ட பாதிப்புகளின் அளவீட்டை முழுமையாகக் கணிக்க முடியவில்லை, இதன் வாயிலாகவே முதல் காலாண்டில் வெறும் -2.1 சதவீத பொருளாதாரச் சரிவு பதிவாகியுள்ளது.

ஐரோப்பா

இதேபோல் Eurozone-ன் பொருளாதார புள்ளிவிவரங்களும் வெளியாகியுள்ளது. இந்தப் புள்ளிவிவரத்தில் பிரான்ஸ், ஸ்பெயின், இத்தாலி ஆகிய நாடுகளின் பொருளாதாரமும் அடக்கம். 2020ஆம் ஆண்டின் 2வது காலாண்டில் Eurozone-ன் பொருளாதாரம் 12.1 சதவீதம் வரையில் சரிந்துள்ளது.

இதனால் பிரிட்டனைப் போலவே ஐரோப்பாவும் தற்போது Recession-க்கு தள்ளப்பட்டுள்ளது.

அமெரிக்கா

வல்லரசு நாடான அமெரிக்கா பொருளாதாரச் சரிவு குறித்து முழுமையான அறிவிக்கை வெளியிடாத நிலையில், இந்நாட்டில் பிப்ரவரி மாதத்தில் இருந்து ஐரோப்பாவில் பொருளாதாரச் சரிவு இருப்பதாகத் தெரிகிறது.

இதனால் பிரிட்டன், ஐரோப்பா போலவே அமெரிக்காவும் Recession-க்கு தள்ளப்பட்டு இருக்க வாய்ப்புகள் உள்ளது.

https://tamil.goodreturns.in/news/uk-gdp-plunged-20-4-in-q2-great-britain-officially-in-recession-020147.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடிக்கிற காத்தில்  இமயமலையே  பறக்குது  சிலோனின் பொருளாதாரம் முன்னேறுதாம் நம்புங்க மக்களே ..................................

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ஆண்டின் மொத்த தேசிய உற்பத்தி -10% குறைவாக இருந்தால் அந்த நாடு இலகுவாக பொருளாதர மீட்சியினை அடையலாம் அதனை சந்தை சரிபடுத்தல் என்றழைப்பர் அதுவே -20% அடைந்தால் பொருளாதார சரிவு, மேலும் இரண்டு காலாண்டிற்குள் மொத்த தேசிய வருமானம் மற்றும் மொத்த தேசிய உற்பத்தி -20% விகிதத்திற்கு குறைவாக வரும் பட்சத்தில் இங்கிலாந்து பொருளாதார சரிவிலிருந்து மீளலாம், ஆனால் அதுநடை முறை சாத்தியமற்றது, அவுஸ்திரேலியா தனது பொருளாதார சரிவினை அதிகாரபூர்வமாக அறிவித்து விட்டது, கடந்த காலாண்டில் -0.3% மொத்த தேசிய உற்பத்தி மற்றும் மொத்த தேசிய வருமானம் -0.4%, இந்த காலாண்டில் -7.0% மொத்த தேசிய உற்பத்தி மற்றும் மொத்த தேசிய வருமானம்( மொத்த தேசிய உற்பத்தியும் மொத்த தேசிய வருமானமும் கிட்ட தட்ட ஒன்றுதான் வெளினாட்டில் இயங்கும் உள்னாட்டுநிறுவனங்களின் வாருமான வரவு மட்டுமே மாற்றம்) மேலும் இரு காலாண்டுகள் இருக்கின்ற நிலையில் அவுஸ்திரேலியா இவ்வறிப்பைச்செய்துள்ளது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முல்லைத்தீவில் புத்தாண்டை முன்னிட்டு இராணுவத்தின் மாபெரும் விளையாட்டு ! (புதியவன்) இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் மாபெரும் விளையாட்டு விழா முன்னாயத்த கலந்துரையாடல். மலர இருக்கும் 2024 ஆம் ஆண்டு தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட இலங்கை இராணுவத்தின் 59 வது படைப்பிரிவின் ஏற்பாட்டில் முள்ளியவளை பிரதேசம் மாமூலை டைமன் விளையாட்டுக் கழக மைதானத்தில் (07.04.2024) அன்று மாபெரும் விளையாட்டு நிகழ்வு நடைபெறவுள்ளது. அத்தோடு அன்றைய தினம் காலையில் மரதன் ஓட்டம், துவிச்சக்கரவண்டி ஓட்டம், ஏனைய மைதான விளையாட்டுக்கள், இரவு மாபெரும் இன்னிசை நிகழ்வும் இடம்பெறவுள்ளது. இதன் முன்னாயத்த கலந்துரையாடல் இன்றைய தினம் (28) மு.ப 10.00 மணியளவில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் முல்லைத்தீவு மாவட்ட 59 வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர்ஜென்ரல் பிரசன்ன விஜயசூரிய தலைமையில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் பிரதம அதிதியாக மேலதிக மாவட்ட செயலாளர் திரு.எஸ்.குணபாலன் கலந்து சிறப்பித்தார். இந்த நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ம.உமாமகள், முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , வலயக்கல்வி பணிமனையின் அதிகாரிகள், கலாசார உத்தியோகத்தர், மாவட்ட மருத்துவர்கள் , முல்லைத்தீவு மாவட்ட இராணுவ அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.   https://newuthayan.com/article/புத்தாண்டை_முன்னிட்டு_இராணுவத்தின்_மாபெரும்_விளையாட்டு_கலந்துரையாடல்!  
    • மக்கள் தொகை முதன்முறையாக வீழ்ச்சி!   புதியவன் சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக நாட்டின் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று இலங்கை பதிவாளர் பணியக புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஓராண்டு காலப்பகுதியில் மக்கள் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த மக்கள் தொகை ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 395 ஆல் குறைவடைந்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளால் நாட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அத்துடன், பிறப்பு வீதமும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் காரணிகளால் நாட்டின் மொத்த சனத்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.(க) https://newuthayan.com/article/மக்கள்_தொகை_முதன்முறையாக_வீழ்ச்சி!
    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.