Jump to content

லெப். கேணல் நாகதேவன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

லெப். கேணல் நாகதேவன்

Commander-Lieutenant-Colonel-Nagathevan.jpg

பன்முகத் திறன்கள் கொண்ட லெப். சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி தாக்குதல் தளபதி லெப். கேணல் நாகதேவன்.

“நவம்பர்” என்று போராளிகளால் அன்போடு அழைக்கப்பட்ட நாகதேவன், யாழ். மாவட்டம் மானிப்பாய், கட்டுடை கிராமத்தில் பிறந்தார். கெங்காரட்ணம் ரமேஸ் என்ற இயற்பெயரைக் கொண்ட நாகதேவன் தனது ஆரம்பக் கல்வியை கட்டுடை சைவ வித்தியாலயத்தில் பயின்றார். தொடர்ந்து மானிப்பாய் இந்து கல்லூரியில் கல்வி கற்றார். பின்னர் தமிழீழ விடுதலைக்காகப் போராடும் உயரிய நோக்குடன் 1993ம் ஆண்டு ஆரம்பத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். க.பொ.த. சாதாரண தர கல்வியை முடித்துக் கொண்டு இயக்கத்தில் இணைந்த கெங்காரட்ணம் ரமேஸ் படைய தொடக்கப் பள்ளியில் தனது ஆரம்பப் பயிற்சியை முடித்துக் கொண்டு நாகதேவன் என்ற இளம் போராளியாக கேணல் கிட்டு படையணியில் சேர்க்கப்பட்டார். பூநகரியை மீட்ட “தவளை” சமரில் தனது முதலாவது களப்பணியில் கால் பதித்தான் இளம் போராளி நாகதேவன். தொடர்ந்து யாழ். குடா நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடமையாற்றினான். பின்னர் மணலாற்றுக் காடுகளில் சிறிலங்கா இராணுவத்தினர் மீதான பல தாக்குதல்களில் தாக்குதலணியில் ஒரு போராளியாக நாகதேவன் களமாடினான். இவனுடைய கல்வியறிவு புதிய ஆயுதங்களை கையாளுவதில் இருந்த ஆர்வம் ஆகியவற்றால் பொறுப்பாளர்களால் பெரிதும் கவரப்பட்டு மோட்டார் அணியில் இவனை இணைத்தனர். 60 மி.மீ மோட்டார் சூட்டாளனாக திறம்பட செயல்பட நாகதேவன் விரைவிலேயே 81 மி.மீ. அணியில் இடம்பெற்றார். மோட்டாரை இயக்குவதில் தேர்ந்த சூட்டாளனாகவும் வரைபடக்காரனாகவும் விளங்கிய நாகதேவன் தனது களப்பணியைத் தொடர்ந்தார்.

1995 ல் நாகதேவன் சாள்ஸ் அன்ரனி சிறப்புப படையணி யில் இணைக்கப்பட்டார். “ஓயாத அலைகள் – 01” முல்லைத்தீவு மீட்புச் சமரில் படையணியின் கனரக ஆயுத அணியில் சூட்டாளனாக செயற்பட்டார். இவருடைய கள அனுபவங்களும் போராளிகளை வழிநடத்தும் திறனும் இவரை செக்சன் லீடராக உயர்த்தின. 1997ல் ஜெயசிக்குறு முறியடிப்புச் சமரில் செக்சன் லீடராக மிகத் தீவிரமாக நாகதேவன் களமாடினார். இச்சமரில் தனது இடுப்புப் பகுதியில் படுகாயமுற்ற நாகதேவன் இறக்குந்தறுவாயில் சக போராளிகளால் மீட்கப்பட்டு மருத்துவப் பிரிவு போராளிகளின் தீவிர சிகிச்சைகளால் காப்பாற்றப்பட்டார். சில மாதங்கள் ஓய்வுக்குப் பிறகு மீண்டும் மோட்டார் அணியில் இணைந்து கொண்டார். “ஓயாத அலைகள் 02” கிளிநொச்சி மீட்புச் சமரில் 81 மி.மீ மோட்டார் சூட்டாளனாக அயராது களமாடிய நாகதேவன் படையணி போராளிகளிடையே பிரபலமான அணித்தலைவர்களில் ஒருவராக வளர்ந்தார்.

கிளிநொச்சி மீட்புச் சமருக்குப் பிறகு ஊரியான் பரந்தன் முன்னரங்கில் 81 மி.மீ மோட்டார் சூட்டாளனாக நாகதேவன் தொடர்ந்து கடமையாற்றினார். படையணியின் கனரக ஆயுதங்கள் ஒருங்கிணைப்பாளரும் இளம் தளபதியுமான மதன் அவர்களின் கட்டளையின் கீழ் எமது நீண்ட முன்னரண் வரிசையைப் பாதுகாப்பதில் நாகதேவன் மிகுந்த ஊக்கமுடன் செயற்பட்டார். படையினரின் புகழ்பூத்த கொம்பனிப் பொறுப்பாளர்கள் வீரமணி, நியூட்டன், இராசநாயகம், கோபித் முலானோருடன் சிறந்த ஒருங்கிணைப்பை பேணிய நாகதேவன் முன்னரண் இளம் அணித் தலைவர்களை திறமான ஓ.பி போராளிகளாக வளர்ப்பதில் பெரும் முயற்சி எடுத்தார். இந்நாட்களில் ஈழவாசன், தாவீதின், நிலான், மதி உள்ளிட்ட பல இளம் போராளிகளை மோட்டாரை இயக்குவதில் தேர்ந்தவர்களாக வளர்த்தெடுத்தார். 1999ம் ஆண்டு 8ம் மாதம் எதிரி பரந்தன் ஊரியான் பகுதியில் மேற்கொண்ட பாரிய படை நகர்வுக்கு எதிரான முறியடிப்புச் சமரில் தளபதி விமலன் அவர்களின் கட்டளையில் நாகதேவன் சிறப்புடன் செயற்பட்டு சிறப்புத் தளபதி ராகவன் அவர்களின் பாராட்டுக்களை பெற்றார்.

“ஓயாத அலைகள் 03” சமரில் ஒட்டுசுட்டான், மாங்குளம், கனகராயன்குளம், புளியங்குளம், பரந்தன் முதலான அனைத்து களமுனைகளிலும் மோட்டார் சூட்டாளனாக இடையறாது செயற்பட்டார். “ஓயாத அலைகள் 04” நடவடிக்கையில் “பாலா” மோட்டார் அணி லீடராக பொறுப்பேற்று கடமையாற்றினார். 2001ல் முகமாலை கிளாலி முன்னரங்கில் மோட்டார் அணி லீடராக கடமையைத் தொடர்ந்தார். இந்நாட்களில் படையணியில் 60 மி.மீ மோட்டார் அணிகளை உருவாக்கி பயிற்றுவித்ததில் நாகதேவன் பெரும் பங்காற்றினார். இளம் செக்சன் லீடர்களான சிலம்பரசன், வீரமறவன், இசைச்செல்வன், ஜெயசீலன், சாந்தீபன், யாழ்வேந்தன், கலைச்செல்வன், றமணன் முதலானோர் நாகதேவனுடன் இணைந்து சிறந்த சூட்டாளர்களாகவும் வரைபடக்காரர்களாகவும் “ஓ.பி.” போராளிகளாகவும் சிறப்புடன் செயற்பட்டனர். சக மோட்டார் அணிகளுடன் சிறந்த ஒருங்கிணைப்பை பேணுவதில் நாகதேவன் முக்கியத்துவம் அளித்தார். இவருடைய சக தோழன் வைத்தியை மோட்டாரில் பயிற்றுவித்து அவனை சூட்டாளனாகவும் வரைபடக்காரனாகவும் நாகதேவன் உருவாக்கினார்.

2001 தீச்சுவாலை முறியடிப்புச் சமரில் இவருடைய” பாலா ” அணி மிகச் சிறப்பாக செயல்பட்டு தாக்குதலணி போராளிகளுக்கு பெரும் வெற்றியை ஈட்டித் தந்தது. இச்சமரில் மகளிர் போராளிகளின் மோட்டார் அணியொன்று எதிரியின் சுற்றிவளைப்புக்கு உள்ளான போது, நாகதேவன் உடனடியாக துணைத் தளபதி கோபித் அவர்களின் கட்டளையைப் பெற்று தனது மோட்டாரை பின்பக்கமாக திருப்பி மகளிர் போராளிகளுக்கு ஆதரவாக செறிவான சூடுகளை வழங்கினார். சிங்கள இராணுவத்தினரின் முற்றுகையை உடைத்து மகளிர் போராளிகளை பாதுகாப்பாக வெளியேற்றிய இம் முக்கிய சமரில் நாகதேவனின் செயற்பாடு அளப்பரியதாக இருந்தது. தொடர்ந்து நடந்த சண்டையில் இவருடைய சக தோழர்களான றமணனையும் வைத்தியையும் நாகதேவன் சிறப்பாக வழிநடத்தினார். இவருடைய அணியிலிருந்த பல போராளிகள் காயமடைந்த நிலையில் இவருக்கு உதவுவதற்காக வந்த மகளிர் போராளிகளை சிறப்பாக நெறிப்படுத்தி தொடர்ந்து களமாடி இச்சமரின் வெற்றிக்கு வழிகோலினார். இதற்காக தேசியத் தலைவரிடம் பாராட்டையும் சிறப்புச் சான்றிதழையும் வைத்தியும் நாகதேவனும் பெற்றுக் கொண்டனர்.

Lieutenant-Colonel-Nagathevan-scaled.jpg

2002ம் ஆணடு போர் நிறுத்த காலத்தில் நாகதேவன் பயிற்சித் தளங்களில் செயற்பட்டார். பல இளம் போராளிகளை மோட்டார் அணியில் பயிற்றுவித்த நாகதேவன், தொடர்ந்து தாக்குதல் அணியில் பிளாட்டூன் லீடராக கடமையேற்றுச் செயற்பட்டார். மட்டக்களப்பில் துரோகி கருணாவுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கையில் தளபதி கோபித் அவர்களின் பொறுப்பின் கீழ் நாகதேவன் பிளாட்டூன் லீடராக தீரமுடன் களமாடினார். இவருடைய சக தோழர்களான செங்கோலன், தென்னரசன் ஆகியோரும் இந்நடவடிக்கையில் பிளாட்டூன் லீடர்களாக களமிறங்கி போராடினர். மட்டக்களப்பு நடவடிக்கைக்கு பிறகு வன்னிக்கு திரும்பிய நாகதேவன் மீண்டும் பயிற்சி தளங்களில் நின்று தாக்குதல் தளபதியாக பல்வேறு கடமைகளில் செயலாற்றினார்.

2006ம் ஆணடு 8ம் மாதம் முகமாலை களமுனையில் எமக்கும் சிறிலங்கா இராணுவத்திற்கும் இடையே போர் மூண்ட போது நாகதேவன் தாக்குதல் தளபதியாக சிறப்புத் தளபதி கோபித்தின் கீழ் நின்றிருந்தது தாக்குதலணிகளுக்கு தளங்களை அமைப்பதிலும் கனரக ஆயுத போராளிகளை பயிற்றுவித்து ஒருங்கிணைப்பதிலும் ஈடுபட்டார். இச்சமரில் ஓகஸ்ட் மாதம் 13ம் நாள் எதிரியின் தொடர் காவலரண்களை தாக்கிக் கைப்பற்ற நாகதேவன் கடுமையாக சமராடினார். இவ் வீரம்மிக்க நடவடிக்கையில் எதிரியின் பகுதிக்குள் முன்னேறிய நாகதேவன் அங்கே படுகாயமுற்று வீரச்சாவைத தழுவிக் கொண்டார்.

தமிழீழ தாயக விடுதலைக்காக இறுதி மூச்சு வரை போராடிய லெப். கேணல் நாகதேவன் அமைதியான இயல்பும் தொலை நோக்கும் பொறுப்புணர்வும் மிக்க போராளியாக, தனது போராட்ட வாழ்க்கை முழுவதும் களமுனைகளிலேயே செயற்பட்ட ஒப்பற்ற போராளியாக திகழ்ந்தார். போராளிகளிடையே சகோதரத்துவ உறவைப் பேணி அவர்களுக்கு நல்ல வழிகாட்டியாக விளங்கினார். இயக்கத்தில் பல்துறை சார்ந்த செயற்பாடுகளில் அவர் முன்னோடியாக ஊக்கமுடன் செயற்பட்டார். தனது சிறப்பான செயற்பாடுகளுக்காக தளபதிகளாலும் எமது தேசியத் தலைவராலும் பலமுறை பாராட்டுக்களைப் பெற்ற போராளியாக நாகதேவன் விளங்கினார். “நவம்பர்” என்று போராளி களால் அன்போடு அழைக்கப்பட்ட லெப். கேணல் நாகதேவன் அவர்களின் துணிவும் பொறுப்புணர்வும் வீரமும் தமிழீழ வரலாற்றில் என்றும் நீங்காமல் நிலைத்திருக்கும்.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

நினைவுப்பகிர்வு: பெ.தமிழின்பன்.
நன்றி: லெப்.சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி (முகபுத்தகம்).

 

https://thesakkatru.com/commander-lieutenant-colonel-nagathevan/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீர வணக்கம் 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.