Jump to content

லெப். கேணல் வீரன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

லெப். கேணல் வீரன்

Commander-Lieutenant-Colonel-Gobithan-Veeran.jpg

 

தமிழீழ விடுதலையில் உறுதியான பற்றுக் கொண்ட லெப். சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி தாக்குதல் தளபதி லெப். கேணல் வீரன் / கோபிதன்.

கிளிநொச்சி மாவட்டம் கந்தபுரம் தான் வீரனினசொந்த ஊர். க.பொ.த.சாதாரண தர கல்வியை 1995ல் முடித்த சோமசுந்தரம் மோகனசுந்தரம் என்ற பதினாறு வயது மாணவன் விடுதலைப் போராட்டத்தின்பால் கவரப்பட்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தன்னை இணைத்து கொண்டான். “சரத்பாபு – 10” பயிற்சித் தளங்களில் அடிப்படை பயிற்சியை முடித்த வீரன் யாழ். மாவட்ட படையணியில் இணைக்கப்பட்டான். யாழ் குடா நாட்டின் பல்வேறு பகுதிகளில் தனது களச் செயற்பாடுகளைத் துவங்கிய இளம் போராளி வீரன் தொடர்ந்து வன்னிக் காடுகளில் கடமையாற்றினான்.

1996ம் ஆணடு லெப். சாள்ஸ் அன்ரனி சிறப்புப படையணியில் வீரன் இணைக்கப்பட்டான். தாக்குதல் அணியில் ஒரு போராளியாக தனது போராட்ட வாழ்க்கையை தொடர்ந்தான் வீரன். “ஓயாத அலைகள் – 01 “முல்லைத்தீவு மீட்புச் சமரில் படையணியின் தாக்குதல் அணியில் ஒரு போராளியாக செயற்பட்டான். இவனுடைய கல்வியறிவும் புதியனவற்றைக் கற்றுக்கொள்ளும் ஆர்வமும் இவனை தளபதிகளின் விசேட பார்வைக்குள் கொண்டு சென்றன. இதனால் இவன்”ஓ.பி” போராளியாக சிறப்பு பயிற்சி பெற்று ஜெயசிக்குறு முறியடிப்புச் சமரில் திறன்பட செயற்பட்டான். இச்சமரில் வீரன் படுகாயமுற்று மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டான். இதனால் சில மாதங்கள் ஓய்வுக்குப் பிறகு வீரன் மீண்டும் தாக்குதல் அணியில் இணைந்து கொள்ள விரும்பினான். ஆனால் இவனுடைய உடல் நலன் கருதி படையணியின் தாக்குதல் தளபதியும் நிர்வாகப் பொறுப்பாளருமான மதன் அவர்கள் வீரனை ஆளுகைத் தளத்தில் அறிக்கைக்காரனாக கடமையில் ஈடுபடுத்தினார். “சேரா நவம்பர்” தளத்தில் வீரன் தனது சக தோழர்களான சேந்தன், தமிழரசன் முதலானோருடன் அறிக்கை பணிகளில் முழுமையாக ஈடுபட்டான். 1998ல் படையணியின் ஆளுகைத் தளம் வட்டக்கச்சிக்கு மாறிய போது வீரன் அங்கு அறிக்கை போராளியாகச் செயற்பட்டான்.

1999ம் ஆண்டு படையணியின் சிறப்புத் தளபதியாக ராகவன் அவர்கள பொறுப்பேற்ற போது மீண்டும் தாக்குதல் அணிக்கு திரும்பிய வீரன் முதுநிலை அணித் தலைவன் நியூட்டன் அவர்களின் கொம்பனியில் ஒரு செக்சன் லீடராக களமிறங்கினான். இந்நாட்களில் முன்னரங்க வேலைகளிலும், காவற் கடமையிலும் முழுவீச்சுடன் வீரன் ஈடுபட்டிருந்தான். குழப்படிகளூம் முன்முயற்சிகளும் நிறைந்த இளம் அணித்தலைவனான வீரன் படையணியின் பிரபலமான அணித்தலைவர்களில் ஒருவராக வளர்ந்தான்.

வீரன் திறமையான சண்டைக்காரன் மட்டுமின்றி விளையாட்டு கவிதை புனைதல், வாசித்தல், கலை நிகழ்ச்சிகளை தயாரித்து நடத்துவது முதலான பல்துறை சார்ந்த போராளிக் கலைஞனாகவும் விளங்கினான். சதுரங்க ஆட்டத்திலும் வீரன் வல்லவனாக இருந்தான். ஊரியான், பரந்தன், சுட்டதீவு களமுனைகளில் போராளிகளின் ஒன்றுகூடலின் போது வீரன் தயாரித்து நடத்தும் “மேஜர் பிரியக்கோண் இசைக்குழு” நிகழ்ச்சி போராளிகளிடையே மிகப் பிரபலமாக இருந்தது. போராளிக் கலைஞர்களை தனக்கேயுரிய துள்ளலான குரலில் வருணனையுடன் வீரன் அறிமுகப் படுத்தும் போது மிகு‌ந்த கரவொலி எழுப்பி போராளிகள் வரவேற்பர். இவனுடைய நகைச்சுவை ததும்பும் கதைகளாலும் அறிவிப்புகளாலும் ஒரு சிறந்த போராளிக் கலைஞனாக படையணி வட்டாரத்தில் வீரன் பெரிதும் மதிக்கப்பட்டான்.

வீரனின் திறன்களை மேலும் வளர்த்தெடுக்கும் விதமாக ராகவன் அவர்கள் இவனை கனரக ஆயுதப் பயிற்சிகளிலும் “ஓ.பி” பயிற்சியிலும் ஈடுபடுத்தினார். மேலும் தடையுடைப்பு அணியாக இவனுடைய செக்சனை தெரிவு செய்து பயிற்சியில் ஈடுபடுத்தினார். சிறந்த தடையுடைப்பு லீடராக வீரன் வளர்ந்தான். “ஓயாத அலைகள் – 03” நடவடிக்கையில் அம்பகாமம், ஒட்டுசுட்டான், புளியங்குளம் பகுதிகளில் வீரன் திறமையாக களமாடினான். இதன் பின்னர் 2000ம் ஆணடு ஆனையிறவை மீட்ட இத்தாவில் தரையிறங்க சமரில் வீரன் செக்சன் லீடராக களமிறங்கினான். யாழ் சாலையை ஒட்டி கிளாலி பக்க பகுதியில் “பெட்டி” வியூகப் பாதுகாப்பில் வீரன் தனது செக்சனை திறமையாக நடத்தினான். எதிரியின் மிகக் கடுமையான தாக்குதல்களையும் முனேற்ற முயற்சிகளையும் வீரன் தீவிரமாக எதிர்த்து போராடினான். தனது மூத்த லீடர்களான சிந்து, ஐயன், தேவன், இலக்கியன் முதலானோருடன் வீரன் சிறந்த ஒருங்கிணைப்பை கொண்டிருந்து கோபித்தின் கட்டளையின் கீழ் மிகச் சிறப்பாக களமாடினான். இச்சமரில் கையிலும் வயிற்றுப் பகுதியிலும் படுகாயமுற்ற வீரன் சக போராளிகளால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். காயம் ஆறி குணமடைந்தவுடன் மீண்டும் தாக்குதல் அணிக்கு வந்து விட்டார் வீரன். போர்ப் பயிற்சிக் கல்லூரியில் பிளாட்டூன் இரண்டாம் லீடராக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து “ஓயாத அலைகள் – 04” நடவடிக்கையிலும் களமாடினார். இச்சமரிலும் வீரன் காயமுற்றார். பொதுவாகவே வீரன் பங்கேற்ற எல்லாச் சண்டைகளிலும் காயம்பட்டு ஏராளமான வீரத்தழும்புகளை தன் உடலில் தங்கியிருந்தான். ஒரு கையில் மேல் எலும்பு முழுவதுமாக நொறுங்கி அகற்றப் பட்டிருந்தது. உள்ளங்கையும் பல காயங்களுக்கு உள்ளாகி சில விரல்கள் நீக்கப்பட்டவராக இருந்தார். அவருடைய உடல் நலனைக் கருத்தில் கொண்டு பின்தள வேலைகளில கடமையாற்றும்படி தளபதிகள் அவரை பணித்த போதும் வீரன் பிடிவாதமாக தாக்குதல் அணியிலே தொடர்ந்து கடமையாற்றினார்.

2001ம் ஆணடு முகமாலை களமுனையில் பிளாட்டூன் லீடராக வீரன் கடமையாற்றினார். தீச்சுவாலை முறியடிப்புச் சமரில் முன்னணி கொமாண்டரான கப்டன் வான்மீகி அவர்கள் வீரச்சாவைத தழுவிக் கொண்ட போது, அவருடைய இடத்தில் வீரன் நின்றிருந்தது முதுநிலை அணித் தலைவன் அமுதாப்புடன இணைந்து தீவிரமாக களமாடினார். இச்சமரில் அதிரடி செக்சன் கொமாண்டர் கப்டன் மகேஷ் அவர்கள் வீரச்சாவைத தழுவிக் கொண்ட போது அவருடைய அணியையும் வீரன் பொறுப்பேற்று திறம்பட சமர் செய்தார். இச்சமரில் வீரனின் பங்கு குறிப்பிடத்தக்கதாக இருந்தது. இதன் பின்னர் படையணி நாகர்கோவில் களமுனையில் கடமையில் இருந்த போது வீரன் பிளாட்டூன் லீடராக செயற்பட்டார்.

2002ம் ஆணடு போர் நிறுத்த காலத்தில் படையணி போர்ப் பயிற்சிக் கல்லூரியில் நிலை கொண்டிருந்தது. அங்கு வீரன் நிர்வாகத்திலும், பயிற்சிகளிலும் கடமையாற்றினார். இக்காலத்தில் வீரன் மேனிலை மோட்டார் பீரங்கி ஒருங்கிணைப்பு பயிற்சி, கிளைமோர் பயிற்சி முதலான சிறப்புப பயிற்சிகளில் ஈடுபட்டார் புதிய போராளிகள் படையணிக்கு வந்தபோது வீரன் கொம்பனி லீடராக பொறுப்பேற்று இளம் போராளிகளின் சிறப்புப பயிற்சியில் ஒரு முன்னுதாரணமான அணித் தலைவனாக செயற்பட்டார். படையணியின் ஒரு பகுதி முகமாலை முன்னரங்கில் கண்டல் பகுதியில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு இருந்த போது வீரன் கொம்பனி லீடராக கடமையைத் தொடர்ந்தார். பின்னர் வீரன் நாகர்கோவில் களமுனையில் பகுதிப் பொறுப்பாளனாக சில மாதங்கள் கடமையாற்றினார். இக்காலத்தில் களமுனையில் நிலை கொண்டிருந்த மகளிர் தாக்குதலணி மற்றும் அரசியற்துறை தாக்குதலணி ஆகியவற்றோடு வீரன் சிறந்த ஒருங்கிணைப்பை கொண்டிருந்து பாதுகாப்பு கடமைகளைச் செவ்வனே செய்தார். 2005ல் மீணடும் போர்ப் பயிற்சிக் கல்லூரிக்கு திரும்பிய வீரன் கொம்பனி பொறுப்பாளராக பல்வேறு கடமைகளில் செயலாற்றினார்.

2006ம் ஆணடு மன்னார் களமுனை பாதுகாப்பை உறுதிப்படுத்த இயக்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. இதன் போது காடுகளூடாக நீண்ட முன்னரண் வரிசையை அமைக்கும் வகையில நிலைகளை தெரிவு செய்து தகடுகள் போட ஒரு கொமாண்டரை அனுப்புமாறு தேசியத் தலைவர் படையணியை பணித்த போது வீரன் இக்கடமையில் ஈடுபடுத்தப்பட்டார். சுமார் ஒரு கிழமைக்கும் மேலாக மன்னார் மாவட்டத்தின் பெரும் காடுகளில் வீரன் தனது குழுவுடன் சுற்றித் திரிந்து சுமார் முப்பது கிலோமீற்றர் தொலைவுக்கு நீண்ட முன்னரண் நிலைகளை தெரிவு செய்து தகடுகளை கட்டி வரைபடம் தயாரித்து தனது கடமையைச் சிறப்பாக செய்து முடித்தார். இந் நடவடிக்கையில் வீரனின் செயற்பாடு அளப்பரியதாக இருந்தது.

மீண்டும் வட்டக்கச்சி தளத்திற்கு திரும்பிய வீரன் அங்கு பல்வேறு கடமைகளில் செயலாற்றினார். தமிழீழ தேசத்தின் கிழக்கு பகுதியில் சிங்கள ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பெரும் தாக்குதல்களை நடத்தி கொண்டிருந்த கால கட்டத்தில் வடக்கிலும் எதிரி பெரும் யுத்த முனைப்புக்களை செய்யத் துவங்கியிருந்தான். இதனால் அவசரமாக படையணி முகமாலை களமுனையில் பாதுகாப்புக்காக நிலை நிறுத்தப்பட்டது. இதன் போது வீரன் தாக்குதல் தளபதியாக நியமிக்கப்பட்டு கண்டல் பகுதியில் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டார். இந்நாட்களில் வீரன் எதிரியின் தாக்குதல்களை முறியடிக்கும் வகையில் பல்வேறு கடமைகளில் ஓய்வின்றி ஈடுபட்டார்.

Lieutenant-Colonel-Gobithan-Veeran-scale

2006ம் ஆணடு ஆவணி மாதம் 11ம் நாள் திடீரென யுத்தம் வெடித்த போது வீரன் தீவிரமான முறியடிப்புத் தாக்குதல்களை நடத்தினார். தொடர்ந்து எதிரியின் முன்னரங்க நிலைகளை கைப்பற்ற தடையுடைப்பு அணிக்கு தலைமை ஏற்று தடையை உடைத்து வீரன் முன்னேறினார். இவ் வீரம்மிக்க நடவடிக்கையில் ஆவணி மாதம் 13ம் நாள் வீரன் படுகாயமுற்றார். படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிலையிலும் வீரன் உறுதியாகவும் தெளிவாகவும் தன்னுடன் நின்ற மகளிர் போராளிகளுக்கு திட்டங்கள் வழங்கினார். பின்னர் தனது கைத்துப்பாக்கியை தனது சக அணித் தலைவியிடம் கொடுத்து தனது சிறப்புத் தளபதி கோபித்திடம் ஒப்படைக்க பணித்தார். பின்னர் களமுனை துணை மருத்துவ நிலையத்திற்கு தூக்கி வரப்பட்ட வீரன் அங்கு வீரச்சாவைத்தழுவிக் கொண்டார்.

எந்நேரமும் கலகலப்பாகவும் உற்சாகமாகவும் காணப்படும் வீரன் போராளிகளுடன் சகோதரத்துவ உறவைப் பேணி அவர்களுக்கு முன்னுதாரணமாக விளங்கினார். வீரன் மக்களை ஆழமாக நேசித்தார். மக்கள் மத்தியில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்தி மக்களை உற்சாகப்படுத்தினார். தமிழீழ விடுதலையில் உறுதியான பற்றுக் கொண்ட உன்னதமான போராளியாக விளங்கினார். லெப். சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி தாக்குதல் தளபதி லெப். கேணல் வீரன் / கோபிதன் அவர்களின் போராட்ட வாழ்க்கை தமிழீழ வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும்.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

நினைவுப்பகிர்வு: பெ.தமிழின்பன்.
நன்றி: லெப்.சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி (முகபுத்தகம்).

 

https://thesakkatru.com/commander-lieutenant-colonel-gobithan-veeran/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீர வணக்கம் 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எனக்கு தெரிந்த சில சிறிய பென்சன்காரர்கள் (மாதம் 500 இலிருந்து 600 யூரோக்கள் வரை) அங்கே 6 முதல் 9 மாதங்கள் தங்கி வருகிறார்கள். அவர்களுக்கு இது இனி கடினம் தானே? விமான ரிக்கற் மற்றும் விசா செலவு என்று பார்த்தால் வாழ்க்கை இனி இறுகலாம் அல்லவா?
    • குளிப்பா? கிலோ என்ன விலை எனும் சப்பையள் நாளுக்கு நாலு தரம் குளிக்கும் எம்மை பார்த்து மூக்கை பொத்துகிறார்களா? ஜோக்தான். எனக்கும் இதில் கொஞ்சம் நாட்டம் அதிகம்தான். Paco Rabanne 1Million பாவித்துள்ளீர்களா? எனக்கு பிடிக்கும். முன்னர் Gucci Envy for men பிடிக்கும். ஒரு பத்து வருடம் முன் நிறுத்தி விட்டார்கள்.  இப்போ வெறும் போத்தல் நல்ல விலை போகிறது. கடைசியாக பாவித்தது ஒரு 10 மில்லியோடு பாதுகாப்பாக வைத்திருக்கிறேன். 
    • அரசதலைவர் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் களமிறக்கப்படும் விடயம் சூடுபிடித்திருக்கின்றது. இந்த விடயத்தைப்பற்றிப் பேச்சு எழுந்தவுடனேயே இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோர் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர். அவர்களுக்கு ஒத்தூதும் வகையில் வடக்கு மாகாணசபையின் அவைத் தலைவர் சி.வீ.கே. சிவஞானமும் கருத்து வெளியிட்டிருக்கிறார். கடந்த காலங்களில் அரசதலைவர் தேர்தலின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினது வகிபாகம் மிகப்பெரியது. அந்தக் கட்சி எடுக்கும் முடிவையே தமிழ் மக்களும் எடுத்திருந்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளும் பங்காளிகளுடன் பேசி, அந்த முடிவு எடுக்கப்பட்டதா என்ற கேள்வி எழுந்தால் எந்தத் தாமதமும் இல்லாமல் இல்லை என்ற பதிலே கிடைக்கும். சகல முடிவுகளையும் சம்பந்தன் அல்லது சம்பந்தனின் பெயரால் சுமந்திரனே எடுத்தனர், அதை ஏனையோரிடம் திணித்தனர். அவர்களும் எதிர்ப்புகளை கட்சிக்குள் பதிவு செய்துவிட்டு, திணிக்கப்பட்ட முடிவை செயற்படுத்தினர். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவுக்கான தேர்தலில் எம்.ஏ.சுமந்திரன் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, கட்சிக்குள் அவருக்கான இடம் - செல்வாக்கு கட்சி தொடர்பில் தீர்மானிக்கும் சக்திக்கான அந்தஸ்து என்பன கேள்விக்குள்ளாகியிருக்கின்றது. கடந்த காலங்களைப்போன்று தென்னிலங்கையின் அரசதலைவர் வேட்பாளர்களை கண் மூடித்தனமாக ஆதரித்த சுமந்திரன்- சம்பந்தன் கூட்டின் போக்கை இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குள் உள்ளவர்களே ஏற்க மறுக்கின்ற சூழல் உருவாகியிருக்கின்றது. இலங்கைத் தமிழரசுக் கட்சி அரசதலைவர் தேர்தல்களில் எடுத்த முடிவு தவறு என்பதை காலம் நிரூபித்திருக்கின்றது. இதை அந்தக் கட்சியின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈ.சரவணபவன் கூட அண்மையில் ஊடக சந்திப்பில் குறிப்பிட்டிருந்தார். இப்படியான சூழலில் தங்களது கைகளை மீறி, தமிழ்ப் பொது வேட்பாளர் விவகாரம் சென்று விடுமோ என்ற அச்சத்தில், இரா. சம்பந்தன் -எம்.ஏ.சுமந்திரன் மற்றும் அவரது அணியினர் கருத்துகளை முன்வைக்க ஆரம்பித்திருக்கின்றனர். அவர்கள் இதற்காக, ராஜபக்சக்கள் மீண்டும் வந்து விடுவார்கள், தென்னிலங்கையில் இனவாதிகள் ஒன்றாகி விடுவார்கள் என்ற தேய்ந்துபோன இசைத் தட்டையே மீண்டும் வாசிக்கத் தொடங்கியிருக்கின்றார்கள். ஒவ்வொரு தேர்தல்களின் போதும், தமிழ் மக்கள் இதைச் செய்தால் தென்னிலங்கை இப்படி எதிர் வினையாற்றும் என்று சொல்லிச் சொல்லியே, தமிழ் மக்க ளுக்கு எது தேவை என்பதைச் சொல்லாமல் செய்து விட்டிருந்தனர். இம்முறை அதேதவறை தமிழ் மக்கள் மீண்டும் இழைப்பதற்குத் தயாரில்லை. அரசதலைவர் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் என்ற முடிவை நோக்கி தமிழ் மக்கள் தாங்களாக வரவில்லை. அதை நோக்கி கடந்தகால அரசதலைவர் தேர்தல் அனுபவங்கள் தமிழ் மக்களை தள்ளிவிட்டிருக்கின்றன. இப்போதும், தமிழ்ப் பொதுவேட்பாளர் என்றதும் எதிர் வரும் அரசதலைவர் தேர்தலில் போட்டியிடவிருக்கின்ற சிங்கள வேட்பாளர்கள் பதறத் தொடங்கியிருக்கின்றனர். அவர்கள் எவரும் தமிழ்ப்பொது வேட்பாளர் விடயத்தை சாதகமாகப் பார்க்கவில்லை. அந்தத் தென்னிலங்கை வேட்பாளர்களைப்போல அல்லது அதற்கு ஒருபடி மேலேபோய், சம்பந்தன் - சுமந்திரன் இணை அணியும் பதறத் தொடங்கியிருக்கின்றது. ராஜபக்ச பூச்சாண்டி அல்லது தென்னிலங்கை இனவாதிகள் என்ற பயத்தைக் காண்பித்து, தாங்கள் சேவகம் செய்யவேண்டிய ஏதோவொரு தென்னிலங்கை வேட்பாளரை நோக்கி தமிழ் மக்களைத் தள்ள வேண்டும் என்று இந்த அணியினர் சிந்திக்கின்றனர். ஆனால், தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் இதுவரைகாலமும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்து எதுவும் பெறமுடியாத சூழலில், தமிழ்ப் பொதுவேட்பாளரை ஆதரித்து, எங்கள் நிலைப்பாடு இதுதான் என்பதைச் சொல்வதற்கான சந்தர்ப்பமாக மாத்திரம் அரசதலைவர் தேர்தலை பிரயோகிப்பதில் தவறில்லையே...! (13.04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/உள்ளத்தில்_இருப்பதை_உரக்கச்_சொல்ல_ஒரு_சந்தர்ப்பம்!!!
    • விசா கட்டணம் கணிசமாக கூடியுள்ளது. அந்த பாதிப்பு மட்டுமே. வேறு மாற்றங்கள் இல்லை. உதாரணமாக தொடர்சியாக ஒரே மூச்சில் 3 மாதம் நாட்டில் நிற்க இப்போ 200 டொலர் (ஒரு வருட மல்டி என்ரி விசா ஆனால் 3 மாதத்தின் பின் வெளியே போய் வரல் வேண்டும். ஒருக்கா பலாலி-சென்னை போய் வந்தால் இன்னொரு 3 மாதம், இப்படியாக ஒரு வருடம் நிற்கலாம்). முன்பு இது 100/120 என நினைக்கிறேன்.  ——————- அதேபோல் இப்போ இதை கையாளவது VFS. இவர்கள் 30 டொலர் அளவு அட்மின் சார்ஜ் எடுப்பார்கள். ஏனைய நாடுகளில் அதுவே நடைமுறை. ஆகவே 30 நாளுக்குள் தங்கபோகும் ஒருவருக்கு (வெள்ளையர் சராசரியாக 10 தங்குவர் என நினைக்கிறேன்): முன்பு 50 டொலர். இப்போ 75+30 டொலர். பிகு தனி மனிதருக்கு இது பெரிதாக தோற்றா விடினும் பெரிய குடும்பங்கள், தொகையாக இறக்கும் tour operators ற்கு இது கணிசமான பாதிப்பை தரும். போட்டியாளர்களாகிய தாய்லாந்து இலவச விசா கொடுக்கும் போது இலங்கை இப்படி செய்வது ரிஸ்கிதான். கூடவே நாளுக்கு 20 டொலரில் தங்கும் low end ஆட்களும் வர முன் யோசிப்பர். இதனால் அவர்களை நம்பி உள்ள ஹொஸ்டல்கள், லொஜ்ஜுகள் பாதிக்கபடும். ஆனால் 2018 இல் வைத்த இதுவரை இல்லாத சுற்றுலா பயணிகள் வருகை ரெக்கோர்ர்ட்டை 2024 ரெட்கோர்ட் உடைக்கும் என்கிறார்கள் சிலர். ஆகவே இலங்கை குறைவான ஆட்கள் ஆனால் high spending செய்ய கூடிய ஆட்கள் நோக்கி நகர்வதாய் தெரிகிறது. எனக்கு sign up page வரை வேலை செய்கிறது. அப்பால் முயலவில்லை. பிகு 50 நாடுகளுக்கு இலவச டூரிஸ்ட் விசா விரைவில் இலங்கை அறிவிக்கும் என ஒரு வதந்தி உலவுகிறது. வாய்ப்பில்லை என நினைக்கிறேன். நடந்தாலும் இந்த 50 இல் மேற்கு நாடுகள் இராது.  
    • இணைத்த படம் தெளிவாக இல்லை. கவனம் செலுத்தவும் 😎 @தமிழ் சிறி
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.