Jump to content

புலம்பெயர் உறவுகள் தாயக பிரதேசங்களில் முதலீடுகளை மேற்கொள்ள முன்வர வேண்டும் – டக்ளஸ் அழைப்பு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

 

புலம்பெயர் உறவுகள் தாயக பிரதேசங்களில் முதலீடுகளை மேற்கொள்ள முன்வர வேண்டும் – டக்ளஸ் அழைப்பு!

நாட்டில் நிலையான அரசாங்கம் உருவாகியுள்ள நிலையில் புலம்பெயர் மக்கள் தங்களுடைய தாயக பிரதேசங்களில் முதலீடுகளை மேற்கொள்ள முன்வர வேண்டும் என்றும் அதற்காக உத்தரவாத்தினை தான் வழங்குவதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அழைப்பு விடுத்துள்ளார்.

மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சில் இன்று( வியாழக்கிழமை) கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே கடற்றொழில் அமைச்சர் டகளஸ் தேவானந்தா இதனைத் தெரிவித்தார்.

இதன்போது அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், ”பொருத்தமான சூழலை உருவாக்குவதல் மற்றும் உருவாகின்ற சூழலை பயன்படுத்துதல் என்ற தன்னுடைய நீண்ட கால கோட்பாட்டின் அடிப்படையில் தற்போது உருவாகியுள்ள அரசியல் சூழலை தமிழ் மக்களும் தமிழ் தரப்புக்களும் பயன்படுத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.

இந்நிலையில், புலம்பெயர் தேசங்களில் வாழ்ந்து வருகின்ற தமிழ் மக்கள் கடந்த காலங்களில் பல்வேறு முதலீடுகளை மேற்கொள்வதற்கு ஆர்வம் செலுத்திய போதிலும் தமிழ் தலைமைகள் என்று சொல்லிக் கொண்டோர் அவற்றை சரியாக கையாளவில்லை எனவும் இடைத் தரகர்கள் சிலர் தங்களுடைய குறுகிய நலன்களுக்காக புலம்பெயர் முதலீட்டாளர்களை தவறாக பயன்படுத்த முயற்சித்திருந்தனர் அமைச்சரினால் குற்றஞ்சாட்டப்பட்டது.

மேலும், தற்போது நிலையான அரசாங்கம் உருவாகியுள்ள நிலையில், ஜனாதிபதி   மற்றும் பிரதமர்  ஆகியோர் தவறான செயற்பாடுகள் எவற்றையும் அனுமதிப்பது இல்லை என்பதில் உறுதியாக இருக்கின்ற நிலையில், அதற்கான உத்தரவாதத்தினை தன்னால் வழங்க முடியும் எனவும் தெரிவித்;தார்.

அத்துடன், வடக்கு கிழக்கு பிரதேசங்களில் புலம்பெயர் முதலீடுகள் அதிகரிக்கும் பட்சத்தில், தமிழ் மக்கள் எதிர்கொள்ளுகின்ற அபிவிருத்தி மற்றும் அன்றாடப் பிரச்சினைகளை விரைவாகத் தீர்த்துக் கொள்ள முடியும் எனவும் புலம்பெயர் முதலீட்டாளர்கள் தமக்கிருக்கும் தார்மீக கடமையை உணர்ந்து முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும்” எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்தள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/புலம்பெயர்-உறவுகள்-தாயக/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Robinson cruso said:

அது மட்டும் நடக்காது. அதுக்கு பல காரணங்கள் உண்டு.எழுத விரும்பவில்லை.

கனக்க வேண்டாம்... ஒரு காரணத்தையாவது,  சொல்லுங்கோவன். :grin: 🤣

Link to comment
Share on other sites

9 minutes ago, தமிழ் சிறி said:

கனக்க வேண்டாம்... ஒரு காரணத்தையாவது,  சொல்லுங்கோவன். :grin: 🤣

எதுக்கு வீண் வம்பு. உண்மையை எழுதினால் தமிழ் தேசியத்துக்கு எதிராக எழுதுகிறேன் என்று அப்படி இப்படி எல்லாம் எழுதுகிறார்கள்.

அதாவது அவல் என்று நினைத்து உரலை போட்டு இடிக்கிறார்கள். இனி இடித்தால் உலக்கை , உரல் இரண்டுமே உடைந்து போகும். வேணாம் சாமி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன்.. இவர் கப்பம் வாங்கவும்.. இலஞ்சம் வாங்கவும்.. பொக்கட்டுக்குள் போடவுமா. 

டக்கிளஸ் முதலில்.. ஆயுத அரசியலில்.. சிங்கள பெளத்த பேரினவாத எடுபிடி அரசியலில் இருந்து விலகிக் கொள்ள வேண்டும்.

தமிழர்களின் தாயகம் என்பதை வரையறுக்க வேண்டும்.

தமிழர்களின் தாயகத்தில்.. தமிழர்கள் தமது பொருண்மியத்தை அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக இருக்க வகை செய்ய வேண்டும்.

இவை இல்லாமல்.... சிங்கள பெளத்த பேரினவாதத்திற்கு அதன் அடக்குமுறைக்கு ஆக்கிரமிப்புக்கு தீனிபோட தமிழர்கள் முதலீடு செய்ய முடியாது. டக்கிளசுக்கு கப்பம் கொடுக்க.. மகிந்த கும்பலுக்கு கப்பம் கொடுக்க.. புலம்பெயர் தமிழர்கள் தயார் இல்லை.

வெளிநாட்டு முதலீட்டாளர்களே சொறீலங்காவில் தனிக்குடும்ப ஆட்சியை அடுத்து.. வெளியேறிக் கொண்டிருக்கும் நிலையில்.. இந்த ஓநாய் எதற்கு ஊளையிடுகிறது என்பது வெளிப்படையாகும். 

Link to comment
Share on other sites

2 hours ago, தமிழ் சிறி said:

கனக்க வேண்டாம்... ஒரு காரணத்தையாவது,  சொல்லுங்கோவன். :grin: 🤣

நான் ஒன்றும் எழுத தேவை இல்லை. இங்கு கருத்து எழுதுபவர்கள் அதட்கான பதிலை வழங்க தொடங்கிவிடடார்கள். இது போதுமா? இல்லை இன்னும் வேணுமா?

Link to comment
Share on other sites

1 hour ago, nedukkalapoovan said:

 

வெளிநாட்டு முதலீட்டாளர்களே சொறீலங்காவில் தனிக்குடும்ப ஆட்சியை அடுத்து.. வெளியேறிக் கொண்டிருக்கும் நிலையில்.. இந்த ஓநாய் எதற்கு ஊளையிடுகிறது என்பது வெளிப்படையாகும். 

வெளிநாட்டு முத்லீட்டாளர்கள் வெளியேறியதாக எந்த்வொரு இடத்திலையும் நான் பார்க்கவில்லையேவ்......!!!!!!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர்ந்தவர்களால் தான் நாடு சிங்கபூராக மாறவில்லை என்றார்கள் பிறகு என்ன இப்ப அவர்களிடம்  டிசன்டா பெக் பண்ணினம்....அபிவிருத்தியை நீங்கள் செய்யுங்கோ மத்திய அரசுடன் இணைந்த்து....நீங்கள் மாநிலத்தில் முடிசூடா மன்னாக வலம் வரும் பொழுது நிச்சயம் அபிவிருத்திக்கு புலம் பெயர் மக்கள் கொட்டோ கொட்டு என கொட்டுவார்கள்.....நீஙகள் அள்ளோ அள்ளு என அள்ளிக்கொள்ளலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nedukkalapoovan said:

டக்கிளஸ் முதலில்.. ஆயுத அரசியலில்.. சிங்கள பெளத்த பேரினவாத எடுபிடி அரசியலில் இருந்து விலகிக் கொள்ள வேண்டும்.

இதிலிருந்து விலகி இவரால் வாழ முடியுமா? தண்ணியில்லாமல் வெறுந்தரையில்  மீன் வாழுமா??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Robinson cruso said:

அது மட்டும் நடக்காது. அதுக்கு பல காரணங்கள் உண்டு.எழுத விரும்பவில்லை.

கொஞ்சம் பிரயோசனமாக ஏதேனும் செய்யலாமே. 😀 

எழுதுங்கள். 🙏

Link to comment
Share on other sites

6 minutes ago, Kapithan said:

கொஞ்சம் பிரயோசனமாக ஏதேனும் செய்யலாமே. 😀 

எழுதுங்கள். 🙏

கொஞ்சம் பொறுங்கள் . அவர்களாகவே எழுதுவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, Robinson cruso said:

கொஞ்சம் பொறுங்கள் . அவர்களாகவே எழுதுவார்கள்.

தமிழினத்துக்ககாக தமிழரின் ஒற்றுமையைவிட தமிழ்தேசியத்தை நினைப்பவர்களுக்கு எதிரான தமிழரின் ஒற்றுமைதான் வியக்க வைக்கிறது 🤔🤔🤔.  

பறவாயில்லை யமாயுங்கள் உங்கள் காட்டில் தானே எனி மழையே.

Link to comment
Share on other sites

Just now, ragaa said:

தமிழினத்துக்ககாக தமிழரின் ஒற்றுமையைவிட தமிழ்தேசியத்தை நினைப்பவர்களுக்கு எதிரான தமிழரின் ஒற்றுமைதான் வியக்க வைக்கிறது 🤔🤔🤔.  

பறவாயில்லை யமாயுங்கள் உங்கள் காட்டில் தானே எனி மழையே.

தமிழ் தேசியம், தமிழர் ஒற்றுமை? எங்கே இருக்கிறது? அங்கிருந்து எழுதுவது இலகு. இங்கிருப்பவர்களுக்குத்தான் தெரியும் மக்களின் நிலைமை.

நாளுக்கு நாள் தமிழன் கீழே போகிறானே ஒழியே மேல வந்தது கிடையாது. இப்படியே போனால் தமிழன் இன்னும் கொஞ்ச காலத்தில் முஸ்லிமின் அடிமையாக மாறிவிடுவான்.

பிறகு தமிழ் தேசியம் எண்டு முஸ்லிமகளுக்கு எதிராகவும் ஒரு போராட்டம் தொடங்க வேண்டும். இப்போதே அந்த நிலைமை வந்து விட்ட்து.

அப்படி என்றால் உங்களைப்போல எல்லா தமிழனும் வசதி தேடி வெளிநாடு சென்றால் தமிழ் தேசியம் செழித்தோங்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Robinson cruso said:

தமிழ் தேசியம், தமிழர் ஒற்றுமை? எங்கே இருக்கிறது? அங்கிருந்து எழுதுவது இலகு. இங்கிருப்பவர்களுக்குத்தான் தெரியும் மக்களின் நிலைமை.

நாளுக்கு நாள் தமிழன் கீழே போகிறானே ஒழியே மேல வந்தது கிடையாது. இப்படியே போனால் தமிழன் இன்னும் கொஞ்ச காலத்தில் முஸ்லிமின் அடிமையாக மாறிவிடுவான்.

பிறகு தமிழ் தேசியம் எண்டு முஸ்லிமகளுக்கு எதிராகவும் ஒரு போராட்டம் தொடங்க வேண்டும். இப்போதே அந்த நிலைமை வந்து விட்ட்து.

அப்படி என்றால் உங்களைப்போல எல்லா தமிழனும் வசதி தேடி வெளிநாடு சென்றால் தமிழ் தேசியம் செழித்தோங்கும்.

எனது ஊரை பார்த்தவர் என்றால் இப்படி எழுத வராது. 😡

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.