Jump to content

விஸ்வலிங்கம் மணிவண்ணன், கட்சிப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டாரா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

விஸ்வலிங்கம் மணிவண்ணன், கட்சிப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டாரா?

August 14, 2020

Mani-vannan-Curry-Leaves.jpg

இளந் தலைமுறையால் தமிழ் அரசியலில் பெரிதும் விரும்பப்பட்ட சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் மற்றும் ஊடகப் பேச்சாளர் பதவிகளிலிருந்து நீக்க கட்சியின் மத்திய குழு தீர்மானித்துள்ளததாக யாழில் இருந்து வெளியாகும் செய்திகள் தெரிவிக்கின்றன.

நேற்று வியாழக்கிழமை இரவு கூடிய மத்திய குழு, சட்டத்தரணி வி.மணிவண்ணனை முன்னணியின் பதவி நிலைகளிலிருந்து நீக்கும் இந்த முடிவை எடுத்ததாகவும், இந்தக் கூட்டத்துக்கு மத்திய குழு உறுப்பினரான சட்டத்தரணி வி.மணிவண்ணன் அழைக்கப்பட்டிருக்கவில்லை எனவும் அந்த செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன. (தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி இதனை உறுதிப்படுத்தவில்லை)

அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் சார்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் மூன்றாவது முறையாகவும் சட்டத்தரணி வி.மணிவண்ணன் போட்டியிட்டார். எனினும் அண்மையக் காலமாக, சட்டத்தரணி வி. மணிவண்ணனை அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி தனது நடவடிக்கைகளில் இருந்து புறந் தள்ளியதாக குற்றச்சாட்டுக்கள் பரவலாக முன்வைக்கப்பட்டு வந்தன. குறிப்பாக சமூக வலைத்தளங்களில் பாரிய வாதப்பிரதிவாதங்கள் தொடர்கின்றன.

குறிப்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அமைப்பாளர்கள், நடந்து முடிந்த நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் மணிவண்ணனுக்காக பரப்புரைகளை முன்னெடுக்கக் கூடாது என்ற பணிப்பும் தலைமையினால் விடுக்கப்பட்டதாகவும், சட்டத்தரணி வி.மணிவண்ணன் சார்பில் இளைஞர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட பரப்புரைக் கூட்டங்களுக்கும் முன்னணியின் உயர்மட்ட குழு குறுக்கீடு செய்ததாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.

இந்த நிலையில் சட்டத்தரணி வி.மணிவண்ணனின் ஆதரவுத் தளம் 2020 பொதுத் தேர்தலில் அதிகரித்தமையும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் நாடாளுமன்றுக்கு தெரிவானதில் மணிவண்ணனின் பங்கும் கணிசமாக இருந்தது என்பதும் பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பொதுத் தேர்தலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் விருப்பு வாக்குகளின் அடிப்படையில் சட்டத்தரணி வி.மணிவண்ணன் மூன்றாம் நிலையைப் பெற்றுள்ளார்.

இத்தகைய சூழலில் சட்டத்தரணி வி. மணிவண்ணன் தொடர்பில் முடிவெடுக்க கட்சியின் மத்திய குழுவை செயலாளர் நேற்றிரவு கூட்டியிருந்தார். எனினும் நேற்றைய கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி உத்தியோகபூர்வ அறிவித்தல் எதனையும் வெளியிடவில்லை.

மாறாக தன் எதிர்காலம் குறித்து, தனக்கு நெருக்கமானவர்களிடம் கருத்து வெளியிட்டுள்ள சட்டத்தரணி வி.மணிவண்ணனின், கட்சியின் தேசிய அமைப்பாளர், ஊடகப் பேச்சாளர் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டதாக கட்சியின் தலைமையால் அறிவிக்கப்படவில்லை எனவும், கட்சியினதும், தலமையினதும் நிலைப்பாடு உத்தியோகபூர்வமாக தனக்கு அறிவிக்கப்பட்ட பின்னரே தமது நிலைப்பாட்டை அறிவிக்க முடியும் என பதிலளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

 

https://globaltamilnews.net/2020/148700/

Link to comment
Share on other sites

கட்சிக்கு ரெண்டு உறுப்பினர்கள் கிடைத்து ரெண்டு நாட்கள் ஆகவில்லை , அதுக்குள்ளே அடுப்பிடியா? பதவி ஆசை யாரைத்தான் விட்டுது. ஞான சாரார் பரவாயில்லையே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அற்பனுக்கு பவுசு வந்தால் கதைதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முன்னணியின் தேசிய அமைப்பாளர், பேச்சாளர் பதவிகளிலிருந்து மணிவண்ணன் நீக்கம்; மத்திய குழு அதிரடித் தீர்மானம்

August 14, 2020

manivannan-300x200.jpg

 

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் மற்றும் ஊடகப் பேச்சாளர் பதவிகளிலிருந்து கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் சட்டத்தரணியுமான விஸ்வலிங்கம் மணிவண்ணனை நீக்குவதற்கு கட்சியின் மத்திய குழு தீர்மானம் எடுத்துள்ளதாக யாழ்ப்பாணச் செய்தி ஒன்று தெரிவிக்கின்றது.

முன்னணியின் மத்திய குழுக் கூட்டம் நேற்று கட்சியின் தலைமை அலுவலகத்தில் கட்சியின் தலைவரான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் நடைபெற்றபோதே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

 

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மணிவண்ணண் கட்சியின் கட்டுப்பாடுகளை மீறிச் செயற்பட்டார் என்று கட்சியினர் தெரிவித்து வந்த நிலையில் நேற்று அவசரமாகக்கூடி கட்சியின் மத்திய குழு மணிவண்ணனை நீக்குவதென முடிவெடுத்துள்ளது.

 

http://thinakkural.lk/article/62424

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

முன்னணியின் தேசிய அமைப்பாளர், பேச்சாளர் பதவிகளிலிருந்து மணிவண்ணன் நீக்கம்; மத்திய குழு அதிரடித் தீர்மானம்

August 14, 2020

manivannan-300x200.jpg

 

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் மற்றும் ஊடகப் பேச்சாளர் பதவிகளிலிருந்து கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் சட்டத்தரணியுமான விஸ்வலிங்கம் மணிவண்ணனை நீக்குவதற்கு கட்சியின் மத்திய குழு தீர்மானம் எடுத்துள்ளதாக யாழ்ப்பாணச் செய்தி ஒன்று தெரிவிக்கின்றது.

முன்னணியின் மத்திய குழுக் கூட்டம் நேற்று கட்சியின் தலைமை அலுவலகத்தில் கட்சியின் தலைவரான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் நடைபெற்றபோதே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மணிவண்ணண் கட்சியின் கட்டுப்பாடுகளை மீறிச் செயற்பட்டார் என்று கட்சியினர் தெரிவித்து வந்த நிலையில் நேற்று அவசரமாகக்கூடி கட்சியின் மத்திய குழு மணிவண்ணனை நீக்குவதென முடிவெடுத்துள்ளது.

 

http://thinakkural.lk/article/62424

 

அவரின் தொழில் சம்பந்தப்பட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டிருல்லாம். ஏலவே அவர் மீது அவரின் தொழிலை தொடர முடியாத படிக்கு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.. அரசியல் காரணங்களை.. பதவி நிலைகளைக் காட்டி. 

எதுஎப்படி சமீபத்திய தேர்தல் வெற்றியோடு.. தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் மீது மகிந்த கோத்தா கும்பலின் கொடூரப் பார்வை விழுந்துள்ள நிலையில்.. கட்சிக்குள் சிக்கல்களை ஏற்படுத்த மகிந்த கும்பல் தங்கள் கூலிகளை பாவிக்கக் கூடும். அவதானம் அவசியம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது தான் பிரச்சனை நெடுக்ஸ். தமிழர்கள் தங்களுக்குள்ளே பிரச்சனை என்றாலும் அதுக்கு சிங்களவன் தான் காரணம் என்று விம்பத்தை உருவாக்குவதும், அதை நியாயப்படுத்துவதும் தான் பிரச்சனை.

முதல்ல பிரச்சனையின் அடிப்படை தெரியும் வரை யார் மீதும் குற்றம் சாட்டாத பொறுமை வேணும்.

பின்னர் உண்மையான பிரச்சனைக்கான காரணத்தை அறிஞ்சு பக்கசார்பற்ற விமர்சனம் செய்யவேணும்.

இந்த கட்சியில் இளைஞர் செல்வாக்கு மிக்க நம்பிக்கையான ஒருவர் மணிவண்ணன். கீழ் மட்டம் வரை இறங்கி வேலை செய்தவர். 

கடந்தகாலங்களில் இயக்கங்கள் விட்ட தவறை மீண்டும் அதே பாணியில் செய்கிறார்கள். 

என்ன சுடுவதற்கு பதிலாக வெளியேற்றுகிறார்கள்.😝

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மணிவண்ணன் அவர்கள் கடந்தகாலங்களிலிருந்தே கஜெந்திரனுடன் சேர்ந்தே அரசியல் செய்திருந்தாலும் தமிழ்தேசியக் கூட்டமைப்பில் விக்கியர் இருக்கும்போதே அவரது அனுதாபியாகவே கணிக்கப்பட்டவர் தவிர அவர் தமிழர் பேரவையுடனேயே இணைந்து அரசியல் செய்ய விருப்பமாக இருந்தார் காரணம் விக்கியரும் அவருக்கு தனது ஆசானெனும் ஒரு பணிவாகும்.

எனினும் தற்போதைய சூழலில் காண்டீபனே அவரை மீண்டும் முண்ணணிக்கு இழுத்து வந்திருந்தார் தேர்தல் வேளையில் பரப்புரையில் முதலாவது விருப்பு வாக்காக கஜேந்திரகுமாருக்கும் இரண்டாவதாக செல் கஜேந்திரனுக்கும் அதன் பின்பு நீங்கள் விரும்புபவர்களுக்கு வாக்களிக்கக் கேட்பது அனைவரும் கூடித் தீர்மானம் எடுக்கபட்டது.

ஆனால் மணிவண்ணன் இடைநடுவிலிருந்து தனித்தே இயங்க ஆரம்பித்துவிட்டார் தன்னை முன்னிலைப்படுத்தியே அனைத்துப் பரப்புரையும் இருக்கும்படி பார்த்துக்கொண்டார் தேர்தல் செலவும் அவர் சார்பில் மிகவும் அதிகமாக இருந்தது.

செயற்பாட்டாளர்கள் மத்தியில் இவர்  காலக்கிரமத்தில் விக்கியருடன் சாய்துவிடுவாரோ எனும் குழப்பமும் இருந்தது.

காரணம் விக்கியர் இப்போது சிரேஸ் பிரேமச்சந்திரனுடன் இந்தியாவின் நிகழ்சி நிரலுக்குள் இழுக்கப்பட்டுவிட்டார்

கூடிய விரைவில் டெல்கியில் கடந்தகாலத்தில் அதாவது எண்பதுகளில் இயக்கத்திலிருந்த கிட்டருடன் திரிந்த ரகீம் சுக்ளா மேலும் குண்டப்பா எனும் ரகுவப்பா ஆகியோருடன்பரந்தன் ராஜன் உட்பட்ட புதிதாக இன்னமும் புலம்பெயர்தேசங்களில் வாழும் கடந்தகால இயக்ககாரர்களையும் காசி ஆனந்தன் போன்றோரையும் விக்கியரையும் இணைத்து ஒரு மாநாடு ஒழுங்கு செய்யப்படுகிறது. இதை அமெரிக்காவில் வாழும் நாரயணதாஸ் என்பவர் ஒழுங்குபடுத்துவதாகக் காட்டபட்டாலும் முற்றிலுமாக இந்தியாவின் உளவுத்துறையே இதைச் செய்கிறது. தவிர பா ஜ கவின் வானதி சீனிவாசனே அரசியல்வாதிகளில் முன் நிற்கிறார். இலங்கைத் தமிழ விடையத்தில் இந்தியாவுடன் நாங்கள் எதப்பற்றி யாருடனும் பேசவேண்டுமாகவிருந்தால் முதலில் வானதி சீனிவாசனையே தொடர்புகொள்ளவேண்டும் எனும் அளவுக்கு இவ்விடையத்தில் பலமான ஒருத்தராக இருக்கிறார்.

டயஸ்பொறா எனும் பெயரில் சில அல்லக்கைகளைக் இனம்காட்டி இவர்கள்தான் புலம்பெயர் தமிழர்களது பிரதிநிதிகள் விக்கியர்தலைமையே உள்ளூர் என அறிமுகப்படுத்தி பதின்மூன்றாவது திருத்தச்சட்டத்துக்கு மேலே போகாது ஒரு தீர்வை முன்வைப்பதும் அதன்மூல சீனாவினது ஆக்கிரமிப்புக்கு ஆப்படிப்பதற்கான முYஅர்சியாகவே இதைப்பார்க்கப்படுகிறது.

சிலவேளை மணிவண்ணன் தேர்தலில் வெற்றி பெற்றிருந்தால் காலக்கிரமத்தில் விக்கியருடன் இணைந்து இந்தியாவுடன் சங்கமமாகியிருப்பார் அப்படி நடந்தால் இப்போதுள்ள சிறிய சலசலப்பு முகப்பெரும் வெடிப்பாக மாறியிருக்கும் 

சில நாளுக்கு முன்பே மணிவண்ணன் புத்தம் புதிய வாகனம் ஒன்றைக் கொள்வனவுசெய்திருந்தார் அதன் பெறுமது ஒன்றஎஐக்கோடிக்கு மேல் எனக்கூறப்படுகிறது.

இப்படிப் பல சிக்கல்கள் அங்கு இருக்கின்றன. மணிவண்ணனகு பிரிவு எதிர்பார்த்ததுதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, Elugnajiru said:

மணிவண்ணன் அவர்கள் கடந்தகாலங்களிலிருந்தே கஜெந்திரனுடன் சேர்ந்தே அரசியல் செய்திருந்தாலும் தமிழ்தேசியக் கூட்டமைப்பில் விக்கியர் இருக்கும்போதே அவரது அனுதாபியாகவே கணிக்கப்பட்டவர் தவிர அவர் தமிழர் பேரவையுடனேயே இணைந்து அரசியல் செய்ய விருப்பமாக இருந்தார் காரணம் விக்கியரும் அவருக்கு தனது ஆசானெனும் ஒரு பணிவாகும்.

எனினும் தற்போதைய சூழலில் காண்டீபனே அவரை மீண்டும் முண்ணணிக்கு இழுத்து வந்திருந்தார் தேர்தல் வேளையில் பரப்புரையில் முதலாவது விருப்பு வாக்காக கஜேந்திரகுமாருக்கும் இரண்டாவதாக செல் கஜேந்திரனுக்கும் அதன் பின்பு நீங்கள் விரும்புபவர்களுக்கு வாக்களிக்கக் கேட்பது அனைவரும் கூடித் தீர்மானம் எடுக்கபட்டது.

ஆனால் மணிவண்ணன் இடைநடுவிலிருந்து தனித்தே இயங்க ஆரம்பித்துவிட்டார் தன்னை முன்னிலைப்படுத்தியே அனைத்துப் பரப்புரையும் இருக்கும்படி பார்த்துக்கொண்டார் தேர்தல் செலவும் அவர் சார்பில் மிகவும் அதிகமாக இருந்தது.

செயற்பாட்டாளர்கள் மத்தியில் இவர்  காலக்கிரமத்தில் விக்கியருடன் சாய்துவிடுவாரோ எனும் குழப்பமும் இருந்தது.

காரணம் விக்கியர் இப்போது சிரேஸ் பிரேமச்சந்திரனுடன் இந்தியாவின் நிகழ்சி நிரலுக்குள் இழுக்கப்பட்டுவிட்டார்

கூடிய விரைவில் டெல்கியில் கடந்தகாலத்தில் அதாவது எண்பதுகளில் இயக்கத்திலிருந்த கிட்டருடன் திரிந்த ரகீம் சுக்ளா மேலும் குண்டப்பா எனும் ரகுவப்பா ஆகியோருடன்பரந்தன் ராஜன் உட்பட்ட புதிதாக இன்னமும் புலம்பெயர்தேசங்களில் வாழும் கடந்தகால இயக்ககாரர்களையும் காசி ஆனந்தன் போன்றோரையும் விக்கியரையும் இணைத்து ஒரு மாநாடு ஒழுங்கு செய்யப்படுகிறது. இதை அமெரிக்காவில் வாழும் நாரயணதாஸ் என்பவர் ஒழுங்குபடுத்துவதாகக் காட்டபட்டாலும் முற்றிலுமாக இந்தியாவின் உளவுத்துறையே இதைச் செய்கிறது. தவிர பா ஜ கவின் வானதி சீனிவாசனே அரசியல்வாதிகளில் முன் நிற்கிறார். இலங்கைத் தமிழ விடையத்தில் இந்தியாவுடன் நாங்கள் எதப்பற்றி யாருடனும் பேசவேண்டுமாகவிருந்தால் முதலில் வானதி சீனிவாசனையே தொடர்புகொள்ளவேண்டும் எனும் அளவுக்கு இவ்விடையத்தில் பலமான ஒருத்தராக இருக்கிறார்.

டயஸ்பொறா எனும் பெயரில் சில அல்லக்கைகளைக் இனம்காட்டி இவர்கள்தான் புலம்பெயர் தமிழர்களது பிரதிநிதிகள் விக்கியர்தலைமையே உள்ளூர் என அறிமுகப்படுத்தி பதின்மூன்றாவது திருத்தச்சட்டத்துக்கு மேலே போகாது ஒரு தீர்வை முன்வைப்பதும் அதன்மூல சீனாவினது ஆக்கிரமிப்புக்கு ஆப்படிப்பதற்கான முYஅர்சியாகவே இதைப்பார்க்கப்படுகிறது.

சிலவேளை மணிவண்ணன் தேர்தலில் வெற்றி பெற்றிருந்தால் காலக்கிரமத்தில் விக்கியருடன் இணைந்து இந்தியாவுடன் சங்கமமாகியிருப்பார் அப்படி நடந்தால் இப்போதுள்ள சிறிய சலசலப்பு முகப்பெரும் வெடிப்பாக மாறியிருக்கும் 

சில நாளுக்கு முன்பே மணிவண்ணன் புத்தம் புதிய வாகனம் ஒன்றைக் கொள்வனவுசெய்திருந்தார் அதன் பெறுமது ஒன்றஎஐக்கோடிக்கு மேல் எனக்கூறப்படுகிறது.

இப்படிப் பல சிக்கல்கள் அங்கு இருக்கின்றன. மணிவண்ணனகு பிரிவு எதிர்பார்த்ததுதான்.

பதவியேற்க முன்னமே பட்டம் கொடுத்தாயிற்று 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆக எல்லோரும் தமிழ்நாடு மாதிரி கட்சி அரசியல்தான் செய்கின்றார்கள். ஒற்றுமையாக தேசியம் வளர்க்க வெளிக்கிட்டவர்கள் சுயநல கட்சி அரசியலுக்கு அப்பால் போகமுடியாமல் இருக்கின்றார்கள். இந்த இலட்சணத்தில் வன்னி, திருமலை, மட்டக்களப்பு, அம்பாறை எல்லாம் கட்சி வளரும் என்று நினைப்பு வேறு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, முதல்வன் said:

இது தான் பிரச்சனை நெடுக்ஸ். தமிழர்கள் தங்களுக்குள்ளே பிரச்சனை என்றாலும் அதுக்கு சிங்களவன் தான் காரணம் என்று விம்பத்தை உருவாக்குவதும், அதை நியாயப்படுத்துவதும் தான் பிரச்சனை.

முதல்ல பிரச்சனையின் அடிப்படை தெரியும் வரை யார் மீதும் குற்றம் சாட்டாத பொறுமை வேணும்.

பின்னர் உண்மையான பிரச்சனைக்கான காரணத்தை அறிஞ்சு பக்கசார்பற்ற விமர்சனம் செய்யவேணும்.

இந்த கட்சியில் இளைஞர் செல்வாக்கு மிக்க நம்பிக்கையான ஒருவர் மணிவண்ணன். கீழ் மட்டம் வரை இறங்கி வேலை செய்தவர். 

கடந்தகாலங்களில் இயக்கங்கள் விட்ட தவறை மீண்டும் அதே பாணியில் செய்கிறார்கள். 

என்ன சுடுவதற்கு பதிலாக வெளியேற்றுகிறார்கள்.😝

தலைப்பே கேள்விக்குறியோடு இருக்குது. மேலும்.. அவர் கட்சியை விட்டு நீக்கப்பட்டதாக செய்தியில் இல்லை. அவர் கட்சியில்.. வகித்த இரண்டு பதவிகளில் இருந்து நீக்கம் என்றே செய்து சொல்கிறது. அதுவும் இன்னும் கட்சியில் இருந்து சொல்லப்படவில்லை. 

ஏலவே மணிவண்ணன் மீது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தொடுத்த வழக்கு அவரின் பிரதான பணிக்கு தடை விதித்துள்ள நிலையில்.. 

இந்தச் செய்திகள்.. வேண்டும் என்றே மக்கள் மத்தியில் குழப்பத்தை உண்டு பண்ணும் வகைக்கு தேர்தல் வெற்றியை அடிப்படையாகக் கொண்டு பின்னப்பட்டிருக்கலாம். இதற்கான சாத்தியமும் உண்டு.

நீங்கள் இயக்கங்கள் அடிபட்டத்தை சொல்லிட்டே இருக்கிறீர்கள். அடிபட தூண்டிவனை சொல்லுவதும் இல்லை கண்டிப்பதும் இல்லை தண்டித்ததும் இல்லை. ஏனெனில்.. அவன் உங்கள் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டு நிற்கிறான். அவனை ஒன்னும் பண்ண முடியாது.. என்பதால். 

உங்களுக்கும் நடுவீட்டில் குழிபறிப்பதில்.. தான் ஒரு கிளுகிளுப்பு. அடுத்தவன்... எதிரி.. அதனை தனக்கு சாதமாக்கிக் கொள்கிறானே என்ற கவலை கிஞ்சிதமும் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, கிருபன் said:

ஆக எல்லோரும் தமிழ்நாடு மாதிரி கட்சி அரசியல்தான் செய்கின்றார்கள். ஒற்றுமையாக தேசியம் வளர்க்க வெளிக்கிட்டவர்கள் சுயநல கட்சி அரசியலுக்கு அப்பால் போகமுடியாமல் இருக்கின்றார்கள். இந்த இலட்சணத்தில் வன்னி, திருமலை, மட்டக்களப்பு, அம்பாறை எல்லாம் கட்சி வளரும் என்று நினைப்பு வேறு!

அங்கால சும்மை பதவியில் இருந்து நீக்கு என்றீங்கள்.. அவர் போகமாட்டன் என்கிறார்.. இங்கால.. ஏதோ ஒரு செய்தியை வைச்சு.. நம்பத்தகுத்தது போல்.. இவரை நீக்கிட்டார்கள்.. இதெல்லாம் ஒரு கட்சியா என்கிறீர்கள்.

கட்சிகளுக்குள் எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு வெளியில் இருந்து கொண்டு விமர்சனம் வைப்பது அதுவும் வெளிநாடுகளில் இருந்து கொண்டு செய்தியின் நம்பகத்தன்மையைக் கூட உறுதி செய்தி கொள்ள முடியாத நிலையில்.. இப்படி வெறுப்பைக் கக்குவது எவ்வளவு கேவமாக இருக்குது. ஏன் இப்படி அவசரக் குடுக்கை தனம். 

நேரடியாக சம்பந்தப்பட்ட கட்சியின் தலைமைப் பீடத்தை அணுகி விபரம் கேட்கலாம்.. அல்லது மணிவண்ணனையே விபரம் கேட்கலாமே.

தினக்குரல் செய்தி கூட.. யாப்பாணத்தில் இருந்து ஓர் செய்தி என்று தான் போட்டிருக்குது. அந்த ஓர் செய்தியை வழங்கியது யார்.. மகிந்த - டக்கிளஸ் கும்பலா. அல்லது சம் சும் கும்பலா.. அல்லது அங்கஜன் கும்பலா.. இல்ல இராணுவப் புலனாய்வுப் பிரிவா...????! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, nedukkalapoovan said:

நேரடியாக சம்பந்தப்பட்ட கட்சியின் தலைமைப் பீடத்தை அணுகி விபரம் கேட்கலாம்.. அல்லது மணிவண்ணனையே விபரம் கேட்கலாமே.

தினக்குரல் செய்தி கூட.. யாப்பாணத்தில் இருந்து ஓர் செய்தி என்று தான் போட்டிருக்குது. அந்த ஓர் செய்தியை வழங்கியது யார்.. மகிந்த - டக்கிளஸ் கும்பலா. அல்லது சம் சும் கும்பலா.. அல்லது அங்கஜன் கும்பலா.. இல்ல இராணுவப் புலனாய்வுப் பிரிவா...????! 

முன்னணியோடு நேரடியாக தொடர்பில் இருக்கும் அண்ணல் எழுஞாயிறு இவ்வளவு நீண்ட விளக்கம் தந்த பின்னர் இருந்த சின்ன சந்தேகமும் போய்விட்டது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, கிருபன் said:

முன்னணியோடு நேரடியாக தொடர்பில் இருக்கும் அண்ணல் எழுஞாயிறு இவ்வளவு நீண்ட விளக்கம் தந்த பின்னர் இருந்த சின்ன சந்தேகமும் போய்விட்டது!

எதுக்கு அவசரப்படுவான். உண்மை வெளிவரத்தானே போகுது. 

Link to comment
Share on other sites

3 hours ago, nedukkalapoovan said:

 

ஏலவே மணிவண்ணன் மீது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தொடுத்த வழக்கு அவரின் பிரதான பணிக்கு தடை விதித்துள்ள நிலையில்.. 

நீங்கள் மணிவண்ணனையும், குமரவடிவேல் குருபரனையும் குழப்பியுள்ளீர்கள்

Link to comment
Share on other sites

சனநாயக நாட்டிலை இது எல்லாம் சகஜம். ஆனால் சில பேர் TNA நடந்தால் விசில்லாடிச்சான் 
குஞ்சுகளாகவும், தற்போழுது தத்துவார்த்த விளக்கம் கொடுப்பவர்களாகவும் இருக்கின்றார்கள்.
தனக்கு வந்தால் இரத்தம்  பிறருக்கு வந்தால் தக்காளிச் சட்னி.

 

 

Link to comment
Share on other sites

9 hours ago, nedukkalapoovan said:

அவரின் தொழில் சம்பந்தப்பட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டிருல்லாம். ஏலவே அவர் மீது அவரின் தொழிலை தொடர முடியாத படிக்கு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.. அரசியல் காரணங்களை.. பதவி நிலைகளைக் காட்டி. 

எதுஎப்படி சமீபத்திய தேர்தல் வெற்றியோடு.. தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் மீது மகிந்த கோத்தா கும்பலின் கொடூரப் பார்வை விழுந்துள்ள நிலையில்.. கட்சிக்குள் சிக்கல்களை ஏற்படுத்த மகிந்த கும்பல் தங்கள் கூலிகளை பாவிக்கக் கூடும். அவதானம் அவசியம். 

இப்படியே சொல்லி சொல்லி உங்களையும் ஏமாத்தி, அப்பாவி மக்களையும் முடியுமென்றால் ஏமாற்ற பாருங்கள்.

Link to comment
Share on other sites

ஒரு வேளை மணிவண்ணன் தற்போதைய யதாத்த அரசியலைப்  பேசியுருக்கலாம். அது சவப்பெட்டி கஜனுக்கு பிடிக்காமல் இருந்திருக்கலாம்.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மணிவண்ணனுக்கு கடிதம் அனுப்பியது முன்னணி! பதவி பறிப்பு.?

mun.jpg

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் மற்றும் ஊடகப் பேச்சாளர் மணிவண்ணனுக்கு கடிதம் அனுப்பப்பட்டுவிட்டதாக கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

பதவி ஏற்பதற்கு முன்பாக முள்ளிவாய்க்காலில் வணக்கம் செலுத்திய பின்னர் ஊடகவியலாளர்கள் மணிவண்ணன் தொடர்பில் கேள்வி எழுப்பியபோதே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

மணிவண்ணனுக்கான கடிதம் இரவு மின் அஞ்சல் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. அந்தக் கடிதம் பதிவுத் தபால் மூலம் இன்று அனுப்பப்படும் என்று தெரிவித்தார்.

கடிதத்தில் என்ன குறிப்பிடப்பட்டுள்ளது என்று ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியபோது அதற்கு கஜேந்திரகுமார் பதிலளிக்க மறுத்துவிட்டார்.

நேற்று முன்தினம் மத்தியகுழு கூடியபோது தேசிய அமைப்பாளர் மற்றும் ஊடகப் பேச்சாளர் பதவிகளில் இருந்து மணிவண்ணனை நீக்குவதாக தீர்மானிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் இது குறித்து மணிவண்ணனிடம் கேள்வி எழுப்பியபோது அவ்வாறான அறிவித்தல்கள் இதுவரை தனக்கு கிடைக்கவில்லை என்றும் கிடைத்த பின்னரே அடுத்த கட்டம் தொடர்பில் தீர்மானிக்கப்படும் என்றும் மணிவண்ணன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://aruvi.com/article/tam/2020/08/15/15607/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் எனக்கு எதிராக சதித் திட்டம் செய்யப்பட்டது – வி.மணிவண்ணன்

நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் எனக்கு எதிராக சதித் திட்டம் செய்யப்பட்டது – வி.மணிவண்ணன்

நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் எனக்கு எதிராக சதித் திட்டம் செய்யப்பட்டது. அதுதொடர்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரிடம் கடந்த சில தினங்களுக்கு முன்பு நேரிவல் எடுத்துக் கூறியிருந்தேன்.இந்த நிலையிலேயே என்னை கட்சியின் தேசிய அமைப்பாளர், ஊடகப் பேச்சாளர் பதவிகளிலிருந்து நீக்குவதற்கான தீர்மானத்தை கட்சியின் மத்திய குழு எடுத்துள்ளது என்று ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.அதுதொடர்பில் கட்சியின் தலைமையினால் எனக்கு எந்தவொரு அறிவிப்பும் விடுக்கப்படவில்லை. கட்சியின் ஒற்றுமைக்காக தலைமையுடன் பேச்சு நடத்துவதற்கு எதிர்பார்த்துள்ளேன். அதனால் ஆதரவாளர்கள் அனைவரும் அமைதி காக்கவேண்டும் என்று வேண்டுகின்றேன் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.நாடாளுமன்ற தேர்தலிலே எனக்கு எதிராக சதி செய்யப்பட்டமை தொடர்பில் கட்சியின் தலைமையிடம் வெளிப்படுத்தியிருந்தேன். அது தொடர்பில் தலைமையுடன் பேசுவதற்கு தயாராகவே உள்ளேன் என நேற்று இரவு ஊடகங்களுக்கு அனுப்பிவைத்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.(15)
 

 

http://www.samakalam.com/செய்திகள்/நடந்து-முடிந்த-பொதுத்-தே/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, zuma said:

நீங்கள் மணிவண்ணனையும், குமரவடிவேல் குருபரனையும் குழப்பியுள்ளீர்கள்

குமரவடிவேல் குருபரனிற்கு எதிரான யு ஜி சி யின் வழக்கில்.. மணிவண்ணன் ஆஜரான செய்தியின் அடிப்படையில் இந்தக் குழப்பம் என்று நினைக்கிறேன். 

மேலும்.. சுமந்திரனின் தான்றோன்றித்தனம் கட்சிக்குள் மட்டுப்பட்டிருந்தால்.. அது கட்சி விவகாரம். ஆனால்.. அவர் விசர் நாய் மாதிரி தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளை.. உணர்வுகளை புரிந்து கொள்ளாமல்.. விடும் அறிக்கைகள்.. பேட்டிகள்.. இன்று தமிழ் மக்களை மேலும் மேலும் அரசியல் நிர்க்கதிக்குள் தள்ளி உள்ளதே தவிர.. தமிழ் மக்களின் அரசியலை இலங்கைத் தீவில் பலப்படுத்தவோ.. தமிழ் மக்கள் மீது இழைக்கப்பட்ட இனப்படுகொலைகளுக்கு.. அநீதிகளுக்கு.. காணி பறிப்புக்கு.. நில ஆக்கிரமிப்புக்கு.. சிங்கள இராணுவ மயமாக்கலுக்கு.. நீதியையோ.. நியாயத்தையோ..பெற்றுக்கொடுக்க தவறிவிட்டது.

Link to comment
Share on other sites

1 hour ago, tulpen said:

ஒரு வேளை மணிவண்ணன் தற்போதைய யதாத்த அரசியலைப்  பேசியுருக்கலாம். அது சவப்பெட்டி கஜனுக்கு பிடிக்காமல் இருந்திருக்கலாம்.   

அது யாரப்பா சவப்பெட்டி கஜன். கேட்கவே பயமா இருக்குது.😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, கிருபன் said:

நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் எனக்கு எதிராக சதித் திட்டம் செய்யப்பட்டது – வி.மணிவண்ணன்

நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் எனக்கு எதிராக சதித் திட்டம் செய்யப்பட்டது – வி.மணிவண்ணன்

நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் எனக்கு எதிராக சதித் திட்டம் செய்யப்பட்டது. அதுதொடர்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரிடம் கடந்த சில தினங்களுக்கு முன்பு நேரிவல் எடுத்துக் கூறியிருந்தேன்.இந்த நிலையிலேயே என்னை கட்சியின் தேசிய அமைப்பாளர், ஊடகப் பேச்சாளர் பதவிகளிலிருந்து நீக்குவதற்கான தீர்மானத்தை கட்சியின் மத்திய குழு எடுத்துள்ளது என்று ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.அதுதொடர்பில் கட்சியின் தலைமையினால் எனக்கு எந்தவொரு அறிவிப்பும் விடுக்கப்படவில்லை. கட்சியின் ஒற்றுமைக்காக தலைமையுடன் பேச்சு நடத்துவதற்கு எதிர்பார்த்துள்ளேன். அதனால் ஆதரவாளர்கள் அனைவரும் அமைதி காக்கவேண்டும் என்று வேண்டுகின்றேன் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.நாடாளுமன்ற தேர்தலிலே எனக்கு எதிராக சதி செய்யப்பட்டமை தொடர்பில் கட்சியின் தலைமையிடம் வெளிப்படுத்தியிருந்தேன். அது தொடர்பில் தலைமையுடன் பேசுவதற்கு தயாராகவே உள்ளேன் என நேற்று இரவு ஊடகங்களுக்கு அனுப்பிவைத்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.(15)

http://www.samakalam.com/செய்திகள்/நடந்து-முடிந்த-பொதுத்-தே/

காத்திரமான பதில். கட்சி முரண்பாடுகளை கட்சிக்குள் பேசி தீர்த்துக்குக் கொள்ளும் பக்குவமே உண்மையான சனநாயகமும்.. மக்களின் நலன் காப்புமாகும்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைமைகள் இதனைப் புரிந்து கொண்டு செயற்படுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் ஒரு சிலர் தாந்தோன்றித்தனமாக நடந்து தங்களின் அரைகுறை விளக்கங்களோடு தங்களின் தேவைக்கு அடுத்தவர்களை குறை சொல்லி கட்சியை விட்டு நீக்கல் செய்வது எல்லாமே நடந்ததன் விளைவு.. தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலம்.. உரிமைப் போராட்டம் திக்குத் திசை இன்றி திணறி நிற்கிறது.

இதில்.. ஒட்டுக்குழுக்களும்.. சிங்கள இனப்படுகொலையாளர்களுமே நன்மை பெறுகிறார்கள். இந்த நிலை நீடிக்கக் கூடாது. 

Link to comment
Share on other sites

Just now, nedukkalapoovan said:

குமரவடிவேல் குருபரனிற்கு எதிரான யு ஜி சி யின் வழக்கில்.. மணிவண்ணன் ஆஜரான செய்தியின் அடிப்படையில் இந்தக் குழப்பம் என்று நினைக்கிறேன். 

மேலும்.. சுமந்திரனின் தான்றோன்றித்தனம் கட்சிக்குள் மட்டுப்பட்டிருந்தால்.. அது கட்சி விவகாரம். ஆனால்.. அவர் விசர் நாய் மாதிரி தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளை.. உணர்வுகளை புரிந்து கொள்ளாமல்.. விடும் அறிக்கைகள்.. பேட்டிகள்.. இன்று தமிழ் மக்களை மேலும் மேலும் அரசியல் நிர்க்கதிக்குள் தள்ளி உள்ளதே தவிர.. தமிழ் மக்களின் அரசியலை இலங்கைத் தீவில் பலப்படுத்தவோ.. தமிழ் மக்கள் மீது இழைக்கப்பட்ட இனப்படுகொலைகளுக்கு.. அநீதிகளுக்கு.. காணி பறிப்புக்கு.. நில ஆக்கிரமிப்புக்கு.. சிங்கள இராணுவ மயமாக்கலுக்கு.. நீதியையோ.. நியாயத்தையோ..பெற்றுக்கொடுக்க தவறிவிட்டது.

ஐயோ பாவம். இதைத்தான் அவல் என்று நினைத்து உரலை இடிப்பதோ? தமிழ் தேசியம் எல்லாம் குழம்பிப்போய் இருக்குதுபோல. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Robinson cruso said:

ஐயோ பாவம். இதைத்தான் அவல் என்று நினைத்து உரலை இடிப்பதோ? தமிழ் தேசியம் எல்லாம் குழம்பிப்போய் இருக்குதுபோல. 

குறித்த செய்திக் குறிப்பை.. மீள கண்டறிந்து மீளாய்வு செய்து கருத்தெழுத நேரமின்மை காரணமாக ஏற்பட்ட கருத்துத் தவறு. அது திருப்படுதல் தவறன்று. திருத்தப்படுதல்.. கருத்தியல் பண்பாகும். கருத்தியல் பண்பற்றவர்களுக்கு அவல்.. வடை.. வாய்ப்பனாகவே தெரியும். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.