Jump to content

தேசியத்தை பலப்படுத்த தவறிய தேசியப் பட்டியல் விவகாரம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தேசியத்தை பலப்படுத்த தவறிய தேசியப் பட்டியல் விவகாரம்

August 14, 2020
  • தயாளன்

தேசியப் பட்டியல் உறுப்பினர் என்ற விடயம் குறிப்பிட்ட இனங்களின், தேசியத்தின் நலன் என்பதை விட சொந்தக் கட்சிகளின் சிக்கல்களுக்குத் தீர்வு காணும் மருந்தாகவே உள்ளது. இது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இருந்தாலும் சரி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியாக இருந்தாலும் சரி. குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரை தலைமைக்குக் குழி பறிக்கும் வாய்ப்பாகக் கருதுகின்றனர் சுமந்திரனும் சீறிதரனும்.

ampara.jpg

 

சுமந்திரன் கட்சியின் தலைமை மிகமோசமாகத் தோற்றுவிட்டது அதனை அகற்றியே ஆகவேண்டும் என்ற நிலைப்பாட்டில் தலைகீழாக உள்ளார். சிறீதரன் கட்சிக்குப் பலத்த பின்னடைவு ஏற்பட்டுள்ளதே எனக் கண்ணீர் வடிக்கிறார். அவரும் தலைமையை மாற்ற வேண்டுமாம். மாவையின் ஆளுமை எந்தளவு என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். அவரது வரலாற்றை ஆராய்ந்தால் காசி ஆனந்தனுக்கு அடுத்தபடியாக அவரது பெயரே உச்சரிக்கப்பட்டது. தந்தை செல்வா முதற்கொண்டு பிரபாகரன் முதலானோருடன் தொடர்புபட்டவர். கொழும்பு நாலாம் மாடி முதல் மட்டக்களப்பு முதலான சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டவர். இலங்கை அரசியலில் தந்தை செல்வா, ஜீ. ஜீ, அமிர்தலிங்கம், சிவசிதம்பரம் மட்டுமல்ல சம்பந்தன் ஐயாவும் இரு தடவைகள் தோற்றவர்தான். சுமந்திரனின் மொழியில் சொன்னால் மிக மோசமான தோல்வி.

 

1981 ஆம் ஆண்டில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தலை நினைவூட்டுகிறது 2020 பொதுத்தேர்தல். இதன் முடிவுகளை விலாவாரியாக எழுத முற்பட்டால் நாங்கள் ஆயிரம் கோடி பெறுமதிமிக்க மனிதர்களாக உயர்ந்து விடுவோம். அவ்வளவு தொகை நஷ்டஈடு கேட்பதென்றால் அத்தகைய பெறுமதியைக் கட்டக்கூடியவராக எழுதுபவர் இருக்கிறார் என்பதே அர்த்தம். அதுவும் ஒருவகை கௌரவம்தான்.

 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் பிரதிநிதித்துவம் இழந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் சுமந்திரனே என அறுதியிட்டுக் கூறலாம். கல்முனை உபபிரதேச செயலகத்தை தரமுயர்த்தும் விவகாரம் தமிழரைப் பொறுத்தவரை ஓர் உணர்வுபூரவமான விடயம். இது சாகும் வரை உண்ணாவிரதம் என்றளவுக்குப் போனது. திருமண வீடென்றால் தான்தான் மாப்பிள்ளை; சாவீடென்றால் தான்தான் பிணம் என்ற நினைப்பிலுள்ள சுமந்திரன். குறிப்பிட்ட சில நாட்களுக்குள் இப்பிரச்னைக்குத் தீர்வு வழங்கப்படும் எனப் பிரதமர் ரணிலின் சார்பில் உறுதிமொழி வழங்கினார்.

 

அரசில் கூட்டமைப்பு அங்கம் வகிக்கவில்லை. இவ்வாறான உறுதிமொழியை அமைச்சரவை அந்தஸ்துள்ள ஒருவரே பிரதமரின் சார்பில் வழங்கியிருக்க வேண்டும். முஸ்லிம் காங்கிரஸ் இப்பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்துவதை எதிர்க்கிறது. அக் கட்சியின் ஹாரிஸ் எம்.பி., போராட்டம் நடத்தியோருக்கு வழங்கிய உறுதிமொழி குறித்து ரணிலிடம் விசாரித்தார். ரணில் அவ்வாறான நிலைப்பாடு எதனையும் தாம் எடுக்கவில்லை எனக்குறிப்பிட் டார். எதிர்பார்த்தபடி எதுவுமே நடக்கவில்லை. விளைவு என்னவாகும்? சுமந்திரன் என்பவரை தனிமனிதனாகவா கருதுவர்? வடக்குத் தலைமை தங்களை ஏமாற்றி விட்டது என்று கிழக்குத் தேசியம் குறித்து பரப்புரை செய்வோரின் வாய்களுக்கு அவல் கிடைத்து விட்டது .

 

கருணா முஸ்லிம்களுக்கு எதிராகப் பேசினார். கிழக்குத் தேசியம் பேசுவோர் வடக்குத் தலைமையின் துரோகம் பற்றிப் பேசினர். முடிவு தேர்தலில் எதிரொலித்தது. பிரதிநிதித்துவம் இழக்கப்பட்டது. அதிலும் கூட்டமைப்பைவிட கருணா கூடுதல் வாக்குகள் பெற்றார். எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலிலும்இந்நிலைமை எதிரொலிக்கும். கருணாவின் துரோகம் மறக்கப்பட்ட விவகாரமாக மாறிவிட்டது. ஆனால் எதுவும் நடக்காதது மாதிரி மாவையால்தான் கட்சிக்குத் தோல்வி என்கிறார் சுமந்திரன்.

 

அதுமட்டுமல்லாது தேசியப் பட்டியல் ஆசனம் கனடா வரவு குகதாசனுக்கே வழங்க வேண்டும் என சிறீதரனும் , சுமந்திரனும் கட்சித் தலைமையிடம் குறிப்பிட்டனர் என்று காலைக்கதிர் செய்தி வெளியிட்டது. அதேநாள் துணைச் செயலாளர் சீ. வீ. கே. சிவஞானம் முதலானோர் கட்சித் தலைமைக்கே இதனை வழங்க வேண்டுமென சம்பந்தன் ஐயாவிடம் வேண்டினர். புளொட் தலைவர் சித்தார்த்தன், ரெலோ தலைவர் செல்வம் ஆகியோரும் மாவையையே தேசியப் பட்டியல் உறுப்பினராக்க வேண்டும் என்றனர். இதை அறிந்ததும் சிறீதரனும், சுமந்திரனும் தோசையை திருப்பிப் போட்டனர் என நம்பகரமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அம்பாறையின் கலையரசனுக்கு இந்த ஆசனம் வழங்கப்பட்டதாக செயலர் அறிவித்தார். மரியாதைக்கேனும் தமிழரசின் தலைவரிடம் அவர் இவ்விடயத்தைத் தெரிவிக்கவில்லை என அறியமுடிகிறது. மாவை வரக்கூடாது என்பதற்காகவே திடீரென கலையரசனின் நாமத்தைக் குறிப்பிட்டார்களே தவிர, சுமந்திரன் செய்த தவறுக்கு பிராயச்சித்தம் செய்ய அல்ல.

தேசியப் பட்டியல் விவகாரத்தில் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தமக்கு இதற்கும் சம்பந்தம் இல்லை என்ற தொனியில் கருத்துரைத்துள்ளார். இந்த விடயம் குறித்து கட்சியின் செயலாளரே எழுத்து மூலம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு தகவல் அனுப்பினார் என்று தனது பொறுப்பிலிருந்து நழுவுகிறார்.

உண்மையில் ஓர் இனத்தின் தலைமைக்குரிய பண்பை சம்பந்தன் ஐயா எப்படி வெளிப்படுத்தியிருக்க வேண்டும்?

சிவஞானத்தின் முன்பாகவே அம்பாறை மாவட்டத்துக்கு தேசியப் பட்டியல் நியமனம் வழங்கப்பட வேண்டிய அவசியம் பற்றி சித்தார்த்தனுக்கும், செல்வத்துக்கும் விளக்கியிருக்க வேண்டும். அப்படியானால் மாவைக்கு வழங்கப்பட வேண்டுமென்ற கோரிக்கை தொடர்பாக அவர் என்ன செய்திருக்க வேண்டும் என்ற வினா எழுகிறது.

மாவை சேனாதிராசா பாராளுமன்றத்திலிருந்து கௌரவமாக விடைபெறும் வாய்ப்பை வழங்கியிருக்க வேண்டும். அம்பாறைப் பிரதிநிதியை முற்கூட்டியே சக எம்.பிக்களுக்கு அறிமுகப்படுத்தும் வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கலாம். பாராளுமன்றத்தில் சத்திய பிரமாணம் எடுத்துவிட்டு உரையாற்றும்போது “தமிழர்களின் அடிநாதக் கோரிக்கையான வட,கிழக்கு கோரிக்கையை இப்போதும் நான் வலியுறுத்துகிறேன். உணர்வால் வட, கிழக்கு மக்கள் ஒன்றுபட்டவர்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக எனது பதவியை ராஜிநாமா செய்கிறேன். எனது இடத்துக்கு அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த இன்னார் (பெயரைக் குறிப்பிடலாம்) பதவியேற்பார்”, எனக் குறிப்பிட்டு விட்டு வெளியேறலாம். தனது ராஜிநாமா கடிதத்தை சபாநாயகருக்கோ, பாராளுமன்றத் செயலாளர் நாயகத்துக்கோ அனுப்புவதுடன் தேர்தல்கள் ஆணையாளருக்கு உடனடியாக அனுப்ப ஏற்பாடு செய்திருக்கலாம். பதவியேற்ற நாளன்றே கௌரவமாகப் பதவி விலகுவது இலங்கைக்குப் புதிதன்று. தலைமை நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்கா மீண்டும் பதவியேற்று அன்றைய நாளே பதவி விலகியமை ஒரு முன்னுதாரணம்.

ஒரு மூத்த அரசியல் தலைவர் என்ற வகையில், இவர் சக பாராளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து விடைபெறும் தருணம் நெகிழ்ச்சியாக இருந்திருக்கும். வட, கிழக்கு இணைப்புக்கு எதிராகக் குரல் கொடுக்கும் சக்திகளுக்கு ஒரு பாடமாக இருந்திருக்கும்.

எப்படி இருந்தாலும் தமிழினத்தின் சரியான தலைவர் என்று எல்லோரும் பாராட்டக்கூடிய ஒரு சந்தர்ப்பத்தை சம்பந்தன் ஐயா போட்டுடைத்துவிட்டார். ஒருவேளை மாவை ராஜினாமா செய்யாவிட்டால் என்றொரு கேள்வியும் எழலாம். அதுவும் நியாயமானதே. “பதவியைத் துறக்க தயார் தயார் என்று சொல்லிக்கொண்டே இருக்க வேண்டுமே ஒழிய ஒருபோதும் துறந்து விடக்கூடாது”, என அமிர்தலிங்கம் தன்னிடம் கூறினார் என்று தலைவர் பிரபாகரன் ஒரு போராளியிடம் தெரிவித்தார். (அந்த முன்னாள் போராளி இன்னமும் உயிருடன் உள்ளார்) மாவை எவ்வாறு உரையாற்றப் போகிறார் என்ற விடயத்தை மட்டும் தவிர்த்து விட்டு ராஜிநாமா செய்வார் என்பதை மட்டும் ஊடகங்களுக்குத் தெரிவித்திருக்கலாம் .

கடந்தமுறை 58,043 வாக்குகள் பெற்ற சுமந்திரன் இம்முறை இரட்டிப்பாக வாக்குப் பெறுவேன் என மார்தட்டினார். அவருக்கு 27,834 வாக்குகளே கிடைத்தன. அதாவது அரைவாசிக்கும் குறைவு. கடந்தமுறை மருதனார்மடம் கூட்டத்தில் எனது தலைவர் பிரபாகரனே என சம்பந்தர் முன்னிலையில் கூறினார் சிறீதரன். அத் தேர்தலில் 72,058 வாக்குகள் பெற்றார். இம்முறை சுமந்திரன் எமக்குத் தேவை என்றார். முதல் கிடைத்ததில் அரைப்பங்கு கூடக் கிடைக்கவில்லை. (35,884 வாக்குகள்) இந்த வாக்குகள்கூட பெரும்பாலும் தீபன், ஹில்மனை நினைத்தே போடப்பட்டன.

எனவே, கிளிநொச்சியில் என்ன நடந்தது என்பதை ஆராயாமலே விடுவோம். முடிவில் சிறீதரன், சுமந்திரன் முதலாம், இரண்டாம் இடங்களைப் பெற்றனர் என அறிவிக்கப்பட்டது.

1981 மாவட்ட அபிவிருத்தி சபைத் தேர்தலின்போது அமைச்சர்கள் காமினி திஸநாயக்கா, சிறில் மத்தியூ ஆகியோர் யாழ். சுபாஸ் ஹோட்டலில் தங்கியிருந்தனர். வாக்குப் பெட்டிகள் இந்த ஹோட்டலுக்குக் கொண்டு செல்லப்பட்டன. கட்டுக் கட்டாக வாக்குகள் போடப்பட்டன. சில கட்டுக்களில் ‘றபர் பாண்ட்’ கூட கழற்றப்படவில்லை. இந்தத் தேர்தல் மோசடியாக நடத்தப்பட்டது என இரு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. உடனே ஜே.ஆர். 10 ஆசனங்ளையும் உங்களுக்கே தருகிறோம் என்றார். மகிழ்ச்சியுடன் திரும்பினர் கூட்டணியினர். நீதிமன்றில் தேர்தல் நீதியாக நடத்தப்பட்டது என சத்தியக் கடதாசி தாக்கல் செய்தனர்.

இறுதியில் எனக்குக் கிடைத்தது இந்த மேசை ஒன்றுதான் என சபைத் தலைவர் நடராசா கூறினார்.

இதேவேளை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி திருமலையில் 2,745, மட்டக்களப்பில் 1,203,அம்பாறையில் 283 வாக்குகளைப் பெற்றது. இந்த வாக்குகள் கிடைத்திருக்காவிடில் தேசியப் பட்டியல் ஆசனம் முன்னணிக்குக் கிடைத்திருக்காது. அவர்கள் பெயரில்தான் தேசியம் உள்ளது. கஜேந்திரகுமார், கஜேந்திரன், சுகாஷ் எனத் தேசியம் பேசுபவர்கள் கட்சிக்குள் இருந்தும் எல்லாச் சிந்தனையும் குடாநாட்டுக்குள்தான்?

மாவையின் கௌரவமும் பாதுகாக்கப்பட வேண்டும். அதேவேளை கிழக்கு மாகாண மக்களின் உணர்வுகளையும் புரிந்து கொள்ளவேண்டும். இதில் சரியான முடிவு எடுக்கத் தவறினால் வரலாற்றுத் தவறைப் புரிந்தவர்கள் ஆவோம். கிழக்குத் தேசியம் பேசும் ஞானம், த.கோபாலகிருஷ்ணன், பூபாலரெத்தினம் சீவகன், அழகு குணசீலன், குழந்தைவேல் நவநீதன் போன்றோரின் கருத்துக்களை முறியடிக்கும் வகையில் நடவடிக்கை அமைய வேண்டும்.

 

http://thinakkural.lk/article/62249

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.