Jump to content

மாவை – சுமந்திரன் யாழ். நகரில் திடீர்ச் சந்திப்பு; மருத்துவர்களின் ஏற்பாட்டில் 3 மணி நேரம் சமரசப் பேச்சு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மாவை – சுமந்திரன் யாழ். நகரில் திடீர்ச் சந்திப்பு; மருத்துவர்களின் ஏற்பாட்டில் 3 மணி நேரம் சமரசப் பேச்சு

August 14, 2020

mavai-suma.png

 

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா மற்றும் கூட்டமைப்பின் பேச்சாளர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருக்கு இடையில் உருவாகியிருக்கும் முரண்பாடுகளை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியில் மருத்துவர்கள் குழு ஒன்று இறங்கியிருக்கின்றது.

இதன் பலனாக இருவரும் நேற்றிரவு யாழ். நகரில் சந்தித்து மூன்று மணி நேரம் பேச்சுக்களை நடத்தியிருப்பதாக யாழ். தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

யாழ். நகரிலுள்ள மருத்துவர் ஒருவருடைய விடுதியில் இருவரும் சந்தித்து நேற்றிரவு 10 மணிக்கு மேலாகப் பேச்சுக்களை நடத்தியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அண்மைக்காலத்தில் உருவாகியிருந்த முரண்பாடுகள் தொடர்பில் இருவரும் விரிவாக முறையில் இதன்போது பேசியதாகவும், சில விடயங்களில் இணக்கம் ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு நாளை சனிக்கிழமை திருமலையில் கூடவிருக்கும் நிலையில் இந்த சமரச முயற்சி இடம்பெற்றிருக்கின்றது

 

http://thinakkural.lk/article/62234

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திடீர் பல்ட்டி எதற்காக..? தமிழரசு கட்சி மறுசீரமைக்கப்படவேண்டும் என்ற கோஷம் உட்கட்சி மோதலின் வெளிப்பாடா..?

WHY_1080.jpg

நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சியான தமிழரசு கட்சியின் தலைவர் தோல்வியடைந்த நிலையில் கட்சியில் மறுசீரமைப்பு வேண்டும் எனவும், கட்சி தலமை மாற்றப்படவேண்டும் எனவும் தீவிரமாக பேசியதுடன் செயற்பட்டுவந்த கூட்டமைப்பின் இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்போது எதிர்மாறான கருத்துக்களை கூறிவருகின்றனர்.

குறிப்பாக தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தேர்தலில் தோற்றதற்காக மாவை சேனாதிராஜா கட்சி தலமை பொறுப்பிலிருந்து விலகும் அவசியமில்லை என கூறியுள்ளார்.

அதேபோல் மாவை சேனாதிராஜா மனக்கிலேசமடைந்திருந்தால் அதற்காக தாம் மன்னிப்புகோருவதாக தமிழ்தேசிய கூட்டமைப்பின் மற்றொரு நாடாறுமன்ற உறுப்பினராக எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார்.

குறித்த இரு நாடாளுமன்ற உறுப்பினர்களும் தேர்தலுக்கு பின்னர் தமிழரசு கட்சி மறுசீரமைக்கப்படவேண்டும். என பகிரங்கமாக கூறி வந்தனர். அதே கருத்தை பொது நிலைப்பாட்டிலுள்ள சிலரும் கூறினர்.

அவ்வாறான தேவை உண்மையில் இருந்தால் ஏன் அத்தகைய மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படவில்லை. எனவும், குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் அந்தர் பல்ட்டி அடித்து மன்னிப்பு கேட்பதும், இப்போது தலமை மாற்றம் தேவையில்லை என கூறுவதும் எதற்காக ? என்ற கேள்வி பொது மக்கள் மத்தியில் எழுந்திருப்பதுடன், புதிய கூட்டணி ஒன்றுக்கான அடித்தளமிடப்படுவதாக அரசல் புரசலாக பேச்சுக்கள் எழுந்துள்ள நிலையில் அதன் விளைவா இந்த மாற்றம்? எனவும் கேள்விகள் எழுந்திருக்கின்றது.

https://jaffnazone.com/news/19880

Link to comment
Share on other sites

 

அதென்ன வைத்தியர்களின் ஏட்பாட்டில்? யாருக்கும் சுகம் இல்லையோ? தலைகளை சுத்தமாக்கினால் மற்றவையெல்லாம் குணமாகும். மத்தபடி ஒரு வேலையும் நடக்காது.

Link to comment
Share on other sites

சுமந்திரன் செய்தியாளர் மாகாநாடுகளில் சும்மா படம் காட்டாமல், மக்கள் ஆணைக்கு அமைவாக அனைவரையும் அரவணைத்தது போக வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, zuma said:

சுமந்திரன் செய்தியாளர் மாகாநாடுகளில் சும்மா படம் காட்டாமல், மக்கள் ஆணைக்கு அமைவாக அனைவரையும் அரவணைத்தது போக வேண்டும்.

மக்கள் ஆணை எங்கு அவருக்கு கிடைத்தது ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவையுடன் முரண்பாடில்லை ஒன்றாகவே கலந்துரையாடலில் பங்கேற்றோம்: சுமந்திரன்

(ஆர்.ராம்)

மாவை.சோ.சேனாதிராஜாவுக்கும் எனக்கும் இடையில் எந்தவொரு முரண்பாடுகளும் இல்லை. நாம் இருவரும் ஒன்றாகவே இருந்து கலந்துரையாடலிலும் பங்கேற்றோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

யாழில் நேற்று முன்தினம் இரவு குடாநாட்டின் முக்கிய வைத்தியர்களைக் கொண்ட குழுவொன்று ஏற்பாடு செய்த கலந்துரையாடலொன்று வைத்தியர் ஒருவரின் விடுதியில் நடைபெற்றிருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தமை தொடர்பாக வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கேள்வி:- தங்களையும், கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராஜாவையும் சமரசப்படுத்தவற்காக ஏற்பாடொன்றை வைத்தியர்கள் குழுவொன்று மேற்கொண்டிருந்ததா?

பதில்:- எனக்கும், மாவை.சேனாதிராஜாவுக்கும் முரண்பாடே இல்லை. அப்படியிருக்கின்றபோது எதற்காக சமரசம் பேசப்பட வேண்டும். 

கேள்வி:- அப்படியென்றால் நீங்களும், மாவை.சேனாதிராஜாவும் பங்கேற்ற கலந்துரையாடலொன்று நடைபெறவில்லையா?

பதில்:- நடைபெற்றது.

கேள்வி:- அதில் எவ்விதமான விடயங்களை பேசினீர்கள் என்று கூறமுடியுமா?

பதில்:- குடாநாட்டின் சில வைத்தியர்கள் எமது கட்சியின் எதிர்காலச் செயற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாட விரும்பியிருந்தனர். அவர்கள் என்னையும், தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை. சோ. சேனாதிராஜாவையும் அழைத்திருந்தனர். நாம் இருவரும் சென்றிருந்தோம். ஒன்றாகவே அந்த கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தோம்.

வைத்தியர்கள் பல்விதமான கேள்விகளை எழுப்பினார்கள். அதற்கான தெளிவு படுத்தல்களை நானும், சேனாதிராஜாவும் வழங்கியிருந்தோம். அத்துடன் அவர்களின் சில யோசனைகளும் முன்வைக்கப்பட்டன. அவற்றையும் நாம் செவிமடுத்திருந்தோம் என்றார். 
 

 

https://www.virakesari.lk/article/88086

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவை விட்ட தவறு தகுதியில்லாதவருக்கு பதவி கொடுத்தது.  சுமந்திரன் தலைவருக்கே  தெரியாமல் முடிவுகளை எடுத்து நடைமுறைப்படுத்திவிட்டு,வரப்போகும் நடவடிக்கையை தடுப்பதற்காக தலைவர் பதவியையும் தட்டிப்பறித்து, இவரை வெளியில் விட முயன்று பகிரங்கமாக கருத்து வெளியிட்டு, மாவையரை பழி வாங்கியிருக்கிறார். மாவையரால் அம்பாறைக்கு கொடுக்கப்பட்ட ஆசனத்தை திரும்பப் பெற முடியுமா? அல்லது சுமந்திரனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியுமா?  சுமந்திரன் தன்னிச்சையாக  கட்சியோடு ஆலோசிக்காமல் பேசுவார், அது கட்சியின் கருத்தல்ல தனது சொந்தக்கருத்து என்றும் சொல்லமாட்டார், பிரச்சனை என்றவுடன் கட்சியின் பின்னால் ஒளிந்து கொள்வார். கட்சியும் அவரை போத்து மூடி அறிக்கை விடும். அவர் கொடுத்த பேட்டியை வழமைபோல் யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள் என எண்ணியோ, திட்டமிட்டோ விளாசிவிட்டார். தேர்தல் காலமென்பதால் மாவையர் கண்டித்திருக்கிறார், அவரை அன்றே வெளியேற்றியிருந்திருந்தால் கட்சியும், மாவையும் தப்பியிருக்கலாம், சுமந்திரன் முந்திக்கொண்டார். சுமந்திரன் என்பவர் தந்திரசாலி, அது அவரோடு கூடப்பிறந்தது. இது எந்தப்பாடசாலையிலும் படிப்பதில்லை, எந்தப் பயிற்சி அறையிலும் எடுப்பதில்லை. மாவையரை வைத்து தனக்கு வேண்டாதவர்களை 
வெளியேற்றினார், மாவைக்கு தானே கெடு வைத்துவிட்டார். மாவை என்ன செய்யப்போகிறார்? சுமந்திரனை மன்னிப்பாரோ இல்லையோ, அவருடன் இணங்கி போவதுபோல் நடித்தே ஆகவேண்டும். வேறு வழி மாவைக்கு இல்லை. குருவை மிஞ்சிய சிஷ்யன் சுமந்திரன். விக்கினேஸ்வரன் + சுமந்திரன், மாவையர் +சுமந்திரன். 

Link to comment
Share on other sites

On 15/8/2020 at 16:06, satan said:

மாவை விட்ட தவறு தகுதியில்லாதவருக்கு பதவி கொடுத்தது.  சுமந்திரன் தலைவருக்கே  தெரியாமல் முடிவுகளை எடுத்து நடைமுறைப்படுத்திவிட்டு,வரப்போகும் நடவடிக்கையை தடுப்பதற்காக தலைவர் பதவியையும் தட்டிப்பறித்து, இவரை வெளியில் விட முயன்று பகிரங்கமாக கருத்து வெளியிட்டு, மாவையரை பழி வாங்கியிருக்கிறார். மாவையரால் அம்பாறைக்கு கொடுக்கப்பட்ட ஆசனத்தை திரும்பப் பெற முடியுமா? அல்லது சுமந்திரனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியுமா?  சுமந்திரன் தன்னிச்சையாக  கட்சியோடு ஆலோசிக்காமல் பேசுவார், அது கட்சியின் கருத்தல்ல தனது சொந்தக்கருத்து என்றும் சொல்லமாட்டார், பிரச்சனை என்றவுடன் கட்சியின் பின்னால் ஒளிந்து கொள்வார். கட்சியும் அவரை போத்து மூடி அறிக்கை விடும். அவர் கொடுத்த பேட்டியை வழமைபோல் யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள் என எண்ணியோ, திட்டமிட்டோ விளாசிவிட்டார். தேர்தல் காலமென்பதால் மாவையர் கண்டித்திருக்கிறார், அவரை அன்றே வெளியேற்றியிருந்திருந்தால் கட்சியும், மாவையும் தப்பியிருக்கலாம், சுமந்திரன் முந்திக்கொண்டார். சுமந்திரன் என்பவர் தந்திரசாலி, அது அவரோடு கூடப்பிறந்தது. இது எந்தப்பாடசாலையிலும் படிப்பதில்லை, எந்தப் பயிற்சி அறையிலும் எடுப்பதில்லை. மாவையரை வைத்து தனக்கு வேண்டாதவர்களை 
வெளியேற்றினார், மாவைக்கு தானே கெடு வைத்துவிட்டார். மாவை என்ன செய்யப்போகிறார்? சுமந்திரனை மன்னிப்பாரோ இல்லையோ, அவருடன் இணங்கி போவதுபோல் நடித்தே ஆகவேண்டும். வேறு வழி மாவைக்கு இல்லை. குருவை மிஞ்சிய சிஷ்யன் சுமந்திரன். விக்கினேஸ்வரன் + சுமந்திரன், மாவையர் +சுமந்திரன். 

சாத்தான், நான் விக்கியரின் தகைமைகளை முன்னர் எழுதிவிடடேன். மாவயரின் தகைமைகள் என்னவென்று ஒருக்கா எழுத முடியுமா? 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 03:55 PM   ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய பாடசாலை மாணவர்களுக்கு போசாக்குள்ள உணவு வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்காக உலக உணவுத் திட்டத்தின் மூலம் பாடசாலைகளுக்கு வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice) விநியோகம் இன்று வெள்ளிக்கிழமை (19) வெயங்கொட உணவு களஞ்சிய வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பாடசாலை மாணவர்களிடையே இரும்புச் சத்து குறைபாட்டைக் குறைக்கும் நோக்கில், பாடசாலை உணவுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice)  வழங்கப்படுவதுடன், ஜனாதிபதி செயலகத்தின் கீழுள்ள உலக உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.எச்.ஏ.எம்.ரிப்லானின் மேற்பார்வையில் இந்த விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்படி, முதற்கட்டமாக மாகாண மட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு 735 மெற்றிக் தொன் அரிசி வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பமானதுடன் நாளையும் (20) இந்தப் பணிகள் தொடரும். சம்பந்தப்பட்ட மாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களின்  கண்காணிப்பின் கீழ்  பாடசாலைகளுக்கு அரிசி விநியோகிக்கப்படுகிறது. இதேவேளை, மே 19ஆம் திகதி பாடசாலை புதிய  தவணை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், 378.835 மெற்றிக் தொன் பருப்பு, 412.08 மெற்றிக் தொன் சூரியகாந்தி சமையல் எண்ணெய், 300 மெற்றிக் தொன் பேரீச்சம்பழங்கள் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படும் என உலகக் உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம்  எம்.எச்.ஏ.எம்.ரிப்லான் தெரிவித்தார். நாட்டிலுள்ள தரம் 1-5 வரை உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலையில் ஒருவேளை உணவு வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. போசாக்கு நிபுணர்களின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு, மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடும் முன்னர், தினமும் காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை  காலை உணவு வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் ஊடாக"ஆரோக்கியமான சுறுசுறுப்பான  மாணவர் தலைமுறை" என்ற கருப்பொருளின் கீழ், 2024 ஆம் ஆண்டிற்கான பாடசாலை உணவுத் திட்டம், பாடசாலை மாணவர்களிடையே போசாக்குப் பிரச்சினைகளைக் குறைத்தல், மாணவர்களின் தினசரி பாடசாலை வருகையை அதிகரித்தல், நல்ல உணவுப் பழக்கம் மற்றும் சுகாதாரப் பழக்கங்களை மேம்படுத்துதல், கல்வி மேம்பாட்டு மட்டத்தை உ யர்த்த பங்களித்தல்,  மற்றும் உள்நாட்டு உணவு கலாசாரத்தை கட்டியெழுப்புதல் ஆகிய அடிப்படை நோக்கங்களை  நிறைவேற்ற எதிர்பார்க்கப்படுகிறது. 9134 அரச பாடசாலைகளிலும், 100 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட அனைத்துப் பாடசாலைகளிலும் உள்ள அனைத்து ஆரம்ப வகுப்பு மாணவர்களையும் உள்ளடக்கிய இந்த ஆண்டு பாடசாலை உணவுத் திட்டத்தின் மூலம் 1.6 மில்லியன் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இதற்காக ஒன்பது மாகாண சபைகளுக்கு அரசாங்கம் நேரடியாக 16,600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கியுள்ளதுடன், உலக உணவுத் திட்டம் மற்றும் அமெரிக்க விவசாயத் திணைக்களம் (USDA) உட்பட பல அமைப்புகளும் அனுசரணை வழங்குகின்றன. https://www.virakesari.lk/article/181467
    • செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. https://yarl.com/forum3/topic/291011-செம்மணியில்-துடுப்பாட்ட-மைதானம்-அமையின்-அயற்கிராமங்கள்-வெள்ளத்தில்-மூழ்கும்-கோடையில்-கடும்-நீர்ப்பஞ்சமும்-ஏற்படும்/#comment-1709825
    • இவர்கள் student visaவில் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன், நீதிமன்றத்துக்கு போனால் இவர்களின் விசாவிற்கு பிரச்சனை வரலாம், record இல் வந்தால் பிற்காலத்தில் green card எடுக்கும்போது பிரச்சனை வரும், தேவையற்ற சில்லறைக்கு ஆசைப்பட்டு பெரிய பிரச்சனையை சந்திக்கிறார்கள் 
    • அண்ணை சத்திர சிகிச்சை அறைக்கு வெளியில் இருந்திருப்பார்கள் என நினைக்கிறேன். அடுத்த சிகிச்சையாளரைக் கூட தயார்படுத்தல் அறையில் தான் இருக்க விடுவார்கள் என நினைக்கிறேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.