Jump to content

பிரித்தானியாவின் கினிமினி மீது விசாரணை ஆரம்பம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கினிமினி மீது விசாரணை ஆரம்பம்

கினிமினி என்னும் பிரித்தானியாவின் வர்த்தக இராணுவ (merchant army) நிறுவனத்தின் இலங்கை நடவடிக்கை தொடர்பில் விசாரணை ஆரம்பித்தது, லண்டன் மெட்ரோபாலிட்டன் போலீஸ்.

இவர்களால் பயிற்றுவிக்கப்பட்ட STF என்னும் இலங்கை போலீசாரின் விசேட பிரிவினரின் முதலாவது அணி, இவர்கள் இரண்டாவது அணிக்கு பயிட்சி கொடுத்துக் கொண்டிருக்கும் போதே கிழக்கு இலங்கையின் றால் பண்ணை ஒன்றினுள் புகுந்து, 85 பேரை சுட்டுக் கொண்டிருந்தது. இந்த றால் பண்ணை அமேரிக்க நிறுவனத்தினால் நடத்தப்பட்டது. 

இது வெளிநாடு ஒன்றில் நடந்த, பிரித்தானிய நிறுவனம் சம்பந்தப்பட்டு, மறக்கடிக்கப்படட ஒரு யுத்த குற்ற சம்பவம் என லண்டனில் உள்ள, தமிழர் அமைப்பு ஒன்றினால், பிரித்தானிய வெளிவிவகார அலுவலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட யுத்த குற்ற முறைப்பாட்டின் படி, இந்த விசாரணைக்கு உத்தரவு இடப்பட்டுள்ளதாக கொழும்பு டெய்லி மிரர் பத்திரிகை தெரிவிக்கின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உதெல்லாம் வெறும் கண் துடைப்பு 

Link to comment
Share on other sites

  • 3 months later...
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்கள் மீதான போர்க் குற்றங்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

 
SLA-Tank-696x392.jpg
 84 Views

சிறீலங்காவில் தமிழ் மக்களுக்கு எதிராக சிறீலங்கா படையினருடன் இணைந்து பிரித்தானியா தனியார் நிறுவனத்தின் கூலிப்படையினர் மேற்கொண்ட போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரித்தானியா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

1980 களில் சிறீலங்காவின் சிறப்பு அதிரடிப்படையினருக்கு பயிற்சிகளை வழங்கிய பிரித்தானியாவின் கினிமினி என்ற தனியார் அமைப்பின் படையினர்இ பல சந்தர்ப்பங்களில் தாக்குதல் உலங்குவானூர்திகளை செலுத்தி நேரடியான தாக்குதல்களிலும் ஈடுபட்டிருந்ததுடன் பெருமளவான அப்பாவி தமிழ் மக்களையும் சிறீலங்கா படையினருடன் இணைந்து படுகொலை செய்திருந்தனர்.

இவர்களால் பயிற்சி அளிக்கப்பட்ட சிறப்பு அதிரடிப்படையினர் பெருமளவான நீதிக்குப் புறம்பான படுகொலைகளை மேற்கொண்டிருந்தனர்.

இது தொடர்பான பல ஆதாரங்கள் பிரித்தானியா அரச ஆவணங்கள் மற்றும் ஊடகவிலயலாளர் பிலிப் மில்லர் சமர்ப்பித்த ஆவணங்கள் மூலம் கிடைத்துள்ளது. இது தொடர்பில் நூல் ஒன்றையும் மில்லர் எழுதியிருந்தார்.

இந்த விசாரனைகளை பிரித்தானியாவில் உள்ள 200இ000 தமிழ் மக்கள் அவதானித்து வருவதாகவும் இவர்கள் கினி மினி அமைப்பு சிறீலங்காவில் இருந்தபோது இங்கு புகலிடத்தஞ்சம் கோரி வந்தவர்கள் எனவும் மில்லர் தெரிவித்துள்ளார்.

தமக்கு இது தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும்இ அதன் மீதான விசாரணைகைள ஆரம்பித்துள்ளதாகவும் பிரித்தானியா காவல்துறையினர் தெரிவித்துள்ளதாக பி.பி.சி ஊடகம் இன்று (30) தெரிவித்துள்ளது.

 

https://www.ilakku.org/தமிழ்-மக்கள்-மீதான-போர்க/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் பிரிட்டனின் கினிமினி கூலிப்படையினரின் யுத்த குற்றங்கள் குறித்த விசாரணைகள் ஆரம்பம்.

 

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தில் பிரிட்டனின் கூலிப்படையினர் யுத்தகுற்றங்களில் ஈடுபட்டமை குறித்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக் மெட்ரோபொலிட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர் .
பிரிட்டனின் கினிமினி கூலிப்படையினர் தொடர்பான விசாரணைகளே ஆரம்பமாகியுள்ளன.

kini-miini-300x169.jpg
பிரிட்டனின் கூலிப்படையினர் யுத்த குற்றங்களில் ஈடுபட்டமை தொடர்பான பரிந்துரைகள் மார்ச் மாதத்தில் கிடைத்தன என தெரிவித்துள்ள பொலிஸ் பேச்சாளர் விசாரணைகளை முன்னெடுப்பது குறித்த ஆய்வுகளின் பின்னர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
பிரிட்டிஸ் அரசாங்கம் பகிரங்கப்படுத்திய ஆவணங்களில் இருந்தும்,பத்திரிகையாளர் மில் பில்லர் தகவல் சுதந்திரத்தை பயன்படுத்தி பெற்ற விடயங்கள் மூலமும் பெறப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையிலேயே விசாhரணைகள் இடம்பெறுகின்றன.
கினிமினி குறித்த தனது நூலை கடந்த ஜனவரியில் மில் பில்லர் வெளியிட்டிருந்தார்.

kinimini.jpg
இலங்கையின் உள்நாட்டு யுத்தம் காரணமாக பிரிட்டனிற்கு தப்பிவந்த 200,000க்கும் மேற்பட்ட தமிழர்கள் இந்த விசாரணையை உன்னிப்பாக அவதானித்த வண்ணமுள்ளனர் என பில்மில்லர் தெரிவித்துள்ளார்.
கினிமினி இலங்கையில் செயற்பட்ட காலத்திலேயே பெருமளவு தமிழர்கள் அகதிகளானார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
தாங்கள் ஹெலிக்கொப்டர்களில் இருந்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலிற்குள்ளானதை பலர் நினைவில் வைத்திருக்கின்றார்கள், இந்த ஹெலிக்கொப்டர்களை பிரிட்டனின் கூலிப்படையினரே செலுத்தினார்கள் என்பது இங்கிலாந்தில் உள்ள இலங்கை தமிழர்களிற்கு அதிர்ச்சியை அளிக்கும் என பில் மில்லர் தெரிவித்துள்ளார்.

kini-mini-4-300x255.jpg
முன்னாள் எஸ்ஏ அதிகாரியான டேவிட்வோக்கர் என்பவரே கினிமினியை ஸ்தாபித்தார்.
கினிமினி தற்போது இல்லாத போதிலும் அவர் சலாடின் செக்குரிட்டி என்ற நிறுவனத்தின் இயக்குநராக காணப்படுகின்றார்.
கினிமினியை சேர்ந்த எவரும் இலங்கையில் யுத்த குற்றங்களில் ஈடுபடவில்லை என அவர் உறுதியாக தெரிவிக்கின்றார்.
தமிழ் போராளிகளுக்கு எதிராக 1980களில் பிரிட்டனின் கினிமினி கூலிப்படையின் இலங்கையின் விசேட அதிரடிப்படையிருக்கு பயிற்சிகளை வழங்கியிருந்தனர்.

kini-mi1-300x180.jpg

 

https://thinakkural.lk/article/94068

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 03:40 PM   அதிகாரபகிர்வு உரிய முறையில் சரியான விதத்தில் இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என அரசியல் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்  வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் தூய்மையான அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்துவதற்காக மார்ச் 12 இயக்கம் ஏற்பாடு செய்திருந்த தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம் என்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தூய்மையான ஒரு எதிர்காலத்தினை  தூய்மையான அரசியலிற்கான ஒரு தேவைப்பாட்டினை அரசிடமிருந்து மக்கள் நீண்டகாலமாக  எதிர்பார்க்கின்றனர். இலங்கைதொடர்ந்து பல வருடங்களாக பொருளாதார ரீதியில் பின்னடைவுகளை சந்தித்துவந்தாலும் 2022ம் ஆண்டு மிக மோசமான அடியை சந்தித்தது 2022 பொருளாதார பிரச்சினை என்பது வெறுமனே 2022 ம் ஆண்டு வந்தது அல்ல இது மிகநீண்டகாலமாக தீர்க்கவேண்டிய பிரச்சினைகளை தீர்க்காமல் அந்த பிரச்சினைகளை மையமாக வைத்து அதன் ஊடாக அரசியல் இலாபம் தேடிக்கொண்டிருந்தவர்களால் எடுத்துக்கொண்டுவரப்பட்டு பின்னர் அது ஒரு பூகம்பமாக வெடித்தது. அதுதான் நாங்கள் அனைவரும் எதிர்நோக்கிய மோசமான பொருளாதார  நெருக்கடி. அதன் பிற்பாடு நாங்கள் மீட்சியை அடைந்துவிட்டோம் என சிலர் கூறினாலும் கூட நாங்கள் உண்மையான மீட்சியை அடையவில்லை. சிறந்த ஒரு பொறிமுறை ஊடாக நாங்கள் அடையவேண்டிய இலக்குகள் இன்னமும் உள்ளன. சமத்துவம் என்ற வார்த்தையை வைத்து நாங்கள் இலங்கையின் ஒட்டுமொத்த  பிரச்சினையையும் அடையாளம் காணமுடியும். சமத்துவமற்ற ஜனநாயகத்தினால் நாங்கள் எந்தவொரு முன்னேற்றத்தையும் அடைந்துவிட முடியாது. இலங்கையில் இலவசக்கல்வி வழங்கப்படுகின்றது இந்த இலவசக்கல்வி ஊடாக தங்களுடைய இலக்கினை ஒரு பணக்கார மாணவன் அடைந்துகொள்ளும்;  தன்மையும் ஏழை மாணவன் அடைந்துகொள்ளும் முறைக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது. அடித்தட்டுமக்கள் இவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கின்றனர் ஏன் அவர்கள் இவ்வளவு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளவேண்டியுள்ளது என்பதை சற்றே சிந்தித்து பார்த்தால் சமத்துவமற்ற நிலையே இதற்கு காரணம் என்பது புலப்படும். வருமானசமத்துவம் இன்மை அதிகரித்துவருகின்றது செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாகின்றனர்  வறியவர்கள் மேலும் வறியவர்களாகின்றனர். இங்கு காணப்படுகின்ற ஜனநாயகத்தில் தமிழர்கள் முஸ்லீம்கள்  ஒருபோதும் அதிகாரம் செலுத்துவதில்லை. சிங்களவர்கள் கொண்டுவருகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் அதிகாரம் செலுத்துகின்றார்கள. நாங்கள் பங்காளிகள் இல்லையா என்ற கேள்வி  தமிழ் முஸ்லீம்கள் மத்தியில் காணப்படுகின்றது. வடக்குகிழக்கில் தமிழ் மக்களின் நிலங்கள் அடாத்தாக கைப்பற்றப்படுகின்றன இதற்கு பொலிஸார் துணைபோகின்றனர். இனங்களுக்கு இடையில் சமத்துவம் இன்மையே இதற்கு காரணம் மற்றைய சமூகங்களிற்கு அதிகாரங்கள் சென்றடையவில்லை. கொரோனா காலத்தில் முஸ்லீம்மக்களின் உடல்கள் எரியூட்டப்பட்டன அவர்கள் பழிவாங்கப்பட்டார்கள் இதற்கு யாராவது பொறுப்புக்கூறச்செய்யப்பட்டார்களா  சிறுபான்மை சமூகங்களின் இடங்களை பிடித்து  பௌத்த மக்களை கவர்ந்து நாயகர்களாக மாறி தேர்தல்களில் வெற்றிபெறுகின்றனர் ஆனால் அவர்களை வெற்றிபெறச்செய்தவர்களின் வாழ்க்கை மாற்றமடையாமல் வறுமையில் நீடிக்கின்றது. இந்த உணர்வு அரசியலை என் சகோதரசிங்கள மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். சரியான முறையில்  அதிகாரபகிர்வு இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை நீங்கள் நம்பவேண்டும். மீண்டும் மீண்டும் இந்த விடயங்களை  கூறி எங்களை எத்தனை காலமாக எங்களை ஏமாற்றப்போகின்றீர்கள். புரிந்துணர்வுதான் இந்த ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியமானது. https://www.virakesari.lk/article/179972
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • சீமானுக்கு எதிராக பொங்கி எழுபவர்கள் யாரென்று பார்த்தால் சிங்கள ஆக்கிரமிப்பையும் கிந்திய ஆக்கிரமிப்பை பற்றியும் வாயே திறக்காதவர்கள் தான் 🤣
    • எம் ஜிஆர் ,  கருணாநிதி , நெடுமாறன்,திருமாளவன்,வைகோ,துரைமுருகன் போன்றோர் செய்யாத ஈழ அரசியலையா சீமான் செய்து விட்டார்? அதிலும் பழ நெடுமாறன்  ஒருபடி மேலே......! நான் தமிழன். நீங்கள் ஈழத்து திராவிடர்களா?😁
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.