Jump to content

தபால் துறையை வினை திறன்கொண்ட அமைச்சாக மாற்றியமைக்க திடசங்கற்பம் பூண்டுள்ளோம் – வியாழேந்திரன்!


Recommended Posts

தபால் துறையை வினை திறன்கொண்ட அமைச்சாக மாற்றியமைக்க திடசங்கற்பம் பூண்டுள்ளோம் – வியாழேந்திரன்!

 

தபால் துறையை வினை திறன்கொண்ட அமைச்சாக மாற்றியமைக்க திடசங்கற்பம் பூண்டுள்ளோம் என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

தபால் சேவைகள் திணைக்களத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) தனது கடமைகளை உத்தியோகப்பூர்வமாக பொறுப்பேற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “நாட்டை சகல துறை சார்ந்தும் ஒரு சுபீட்சத்தின் அடிப்படையில் இந்த நாட்டை கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணக்கருவினை நடைமுறைப்படுத்துகின்ற செயற்திட்டத்தினை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.

தபால்துறையை உலகத் தரம்வாய்ந்த நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதே நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் நோக்காக இருகின்றது.

புதிய தொழிநுட்ப முறைகளை கையாண்டு பல புதிய பரிமானங்களை தபால் சேவை ஊடாக புகுத்தி. இதை மக்களுடைய காலடிக்கு கொண்டு வந்து செயற்படுத்துவதற்குரிய ஒரு துறையாக மாற்றியமைக்க வேண்டும் என்பதே அனைவருடைய நோக்கமாக காணப்படுகின்றது.

    by : Benitlas

http://athavannews.com/தபால்-துறையை-வினை-திறன்க/

Link to comment
Share on other sites

தபால் துறை மட்டுமல்ல. கிழக்கு , வன்னி மக்களுக்கு வேறு பிரச்சினைகள் நிறையவே இருக்கின்றன. இன்று எல்லாமே முஸ்லீம் மயப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ் பிரதேசங்களை குறைந்தது முஸ்லீம் பிரதேசத்தின் அரைவாசி நிலைக்காவது கொண்டுவர முயட்சிக்க வேண்டும். இதட்கு கருணா,பிள்ளையானுடன் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமைச்சர் வியாழேந்திரன், நன் கீழே எழுதுவது தபால் அல்லது அஞ்சல் சேவை பற்றிய வேண்டு கோள்கள் மட்டுமே.

தபால் துறையை பற்றி சில நாட்களுக்கு கூட இலங்கை தீவில் வசிப்பவருடன் உரையாட வேண்டிய சந்தர்ப்பம் வந்தது.

தபால் துறைக்கு மறுசீரமைப்பு மிகவும் அவசியமாகிறது.

தொழில்நுட்ப அறிமுகம் தேவை தான். 

ஆனாலும், எந்த சேவையாயினும், அதில் முக்கியமானது மனித வலுவும், ஊடாட்டமும் (interaction),  எத்தகைய தொழில்நுட்ப முன்னேற்றங்கள் அறிமுகப்படத்தப்பட்டாலும்.

அதில் முக்கியமானது, தபால் அலுவலகங்களிற்கு வரும் வாடிக்கையாளர்களை, மரியாதையுடனும், மதிப்புடனும், கண்ணியமாக சேவையை வழங்குவது பற்றியது.     

தபால் அலுவலங்கங்களுக்கு வரும் வாடிக்கையாளர் மீது எரிந்து விழுவதும, அவர்களை மரியாதையை குறைவாக நடத்துவதும், வாடிக்கையாளர் ஒருவர் மட்டும் வரும் போது (வேறு எந்த வாடிக்கையாளர் இல்லாத நிலையிலும்) அல்லது பல வாடிக்கையாளர்கள் காத்திருக்கும் போதே, தாம் ஏதோ பாரிய வேலைப்பளு சுமத்தப்பட்டு, அப்போது தான் வேகமாக வேலை செய்வது போன்று நடிப்பதும், அப்படி உண்மையில் வேலைப்பளு  இருந்தாலும் வாடிக்கையாளரை முதலில் கவனிக்க வேண்டியபோதிலும், அவர்களை கவனிக்காதது போன்று  புறக்கணித்து தாமதிக்க  வைப்பதும் நடைபெறுகிறது.

இது இன்றல்ல, நேற்றல்ல, கலாதிகாலமாக நடைபெறுகிறது.

இது எல்லா தபாலகங்களிலும் நடைபெறுவதாக கருத முடியாதாயினும், பொதுவாக, வெளிப்படையாக அவதானிக்கப்படக் கூடியவாறு தெரியாக் கூடியவாறு நடை  பெறுகிறது.    

இதனால், பலர் தமது அருகில் இருக்கும் தபாலகத்தை தவிர்த்து, தமக்கு தூர இடங்களில் இருக்கும், அவர்களின் பார்வையில் தம்மை கண்ணியமாக நடத்தும் தபாலகத்தை நாடுகின்றனர்.

நீங்கள் , தபால் சேவையில் வாடிக்கையாளரே-முதன்மை (customer-first) எனும் சேவை நெறிமுறையை அறிமுகப்படுத்துங்கள். இதற்கு வாடிக்கையாளர் திருப்தி என்பதும் அளவிடப்பட வேண்டும்.

 வாடிக்கையாளர் திருப்தி அளவிடுவதற்கு (செல்லிடப் பேசி இணையவெளி மூலமாக) கணக்கீடை (survey) அறிமுகப்படுத்துங்கள்.

வாடிக்கையாளர் திருப்தி அளவு மட்டம், தபாலகங்ளிடற்கு வழங்கப்படும் நிதியை நிர்ணயிக்கும் அளவு கோலிகளுள் (Metric) ஒன்றாக இருத்தல் அவசியம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் சர்வதேச ரீதியில் இனி உருப்பட முடியாத துறை இது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விடுங்கோ அண்ணே. கொஞ்ச வேலைவாய்ப்புகளையாவது சொந்தக்காரர்களுக்கு கொடுத்தாலும் தமிழருக்கு கொடுக்கட்டும். 

அதை சொல்லித்தானே வந்தவர்.🤪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

PoisedFickleAnemoneshrimp-size_restricte முக்கியமானது எல்லாம் அவயள் லவட்டி கொண்டு ஒப்புக்கு ஏதோ கொடுத்திருக்கினம் .. அவனவன் ஈ மெயில் இன்டர் நெட் என்டு இருக்கையில் .. சரக்கு கையளித்தல்  மற்றும் சிறுசேமிப்பு வகையில் முன்னேற சான்ஸ் உண்டு..👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

PoisedFickleAnemoneshrimp-size_restricte முக்கியமானது எல்லாம் அவயள் லவட்டி கொண்டு ஒப்புக்கு ஏதோ கொடுத்திருக்கினம் .. அவனவன் ஈ மெயில் இன்டர் நெட் என்டு இருக்கையில் .. சரக்கு கையளித்தல்  மற்றும் சிறுசேமிப்பு வகையில் முன்னேற சான்ஸ் உண்டு..👍

சரக்கு கையளிப்பு அல்ல தோழர் சரக்கு கையாடல்.

முன்னர் வெளிநாடுகளில் இருந்து ஈழத்துக்கு குறிப்பாக தமிழர் பகுதிகளுக்கு அல்லது தமிழர்கள் செறிந்து வாழும் இடங்களுக்கு பார்சல் அனுப்பினால்.. அல்லது கடிதம் அனுப்பினால்... உடைச்சுப் பார்த்து.. அதில் பெறுமதியான பொருட்கள்.. அவசர தேவைக்கு அனுப்பப்பட்டும் வெளிநாட்டு பணத்தை சுருட்டுவதே வாடிக்கையாக இருந்தது. இப்பவும் தொடர்வதாக பலமுறைப்பாடுகள் உண்டு.

அதில் அதிகம் கையாடல் செய்யப்பட்டது கொழும்பில். அதில் ஒரு பகுதி அமைச்சுக்களுக்கு பகிர்ந்தளிப்பு. கீழ்மட்டத்தில் இருந்து உயர்மட்டம் வரை கொள்ளை தான். தமிழினிடம் கொள்ளை அடித்தால் கேட்டுக்கேள்வி இருக்காது. 

Link to comment
Share on other sites

9 hours ago, nedukkalapoovan said:

சரக்கு கையளிப்பு அல்ல தோழர் சரக்கு கையாடல்.

முன்னர் வெளிநாடுகளில் இருந்து ஈழத்துக்கு குறிப்பாக தமிழர் பகுதிகளுக்கு அல்லது தமிழர்கள் செறிந்து வாழும் இடங்களுக்கு பார்சல் அனுப்பினால்.. அல்லது கடிதம் அனுப்பினால்... உடைச்சுப் பார்த்து.. அதில் பெறுமதியான பொருட்கள்.. அவசர தேவைக்கு அனுப்பப்பட்டும் வெளிநாட்டு பணத்தை சுருட்டுவதே வாடிக்கையாக இருந்தது. இப்பவும் தொடர்வதாக பலமுறைப்பாடுகள் உண்டு.

அதில் அதிகம் கையாடல் செய்யப்பட்டது கொழும்பில். அதில் ஒரு பகுதி அமைச்சுக்களுக்கு பகிர்ந்தளிப்பு. கீழ்மட்டத்தில் இருந்து உயர்மட்டம் வரை கொள்ளை தான். தமிழினிடம் கொள்ளை அடித்தால் கேட்டுக்கேள்வி இருக்காது. 

நீங்கள் எழுதியது உண்மை. எனக்கும் அந்த அனுபவம் இருக்குது. கொஞ்சம் பொறுங்கோவன். ஐயா இப்பதானே பதவிக்கு வந்திருக்கிறார். 70 வருடம் பொறுத்த உங்களுக்கு இன்னும் 5 வருடம் பொறுக்க முடியாதா? ஆக்க பொறுத்த நாம் ஆறவும் பொறுக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழக தேர்தல் நிலவரம் – தந்தி டிவி கருத்துக்கணிப்புகள் தெரிவித்திருப்பது என்ன? திமுக 34 இடங்களில் வெல்லும். அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாது. பாஜக 1 இடத்தில் வெற்றிபெறும். இழுபறி நீடிக்கும் இடங்கள் 5 என தந்திடிவி தெரிவித்துள்ளது இந்திய நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் 5 தொகுதிகளில் கடுமையான இழுபறி நீடிக்கும் என்று தந்தி டிவி கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தொகுதிகளில் பாஜக அதிமுக திமுக இடையே கடுமையான போட்டி நிலவும் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் நாளை மறுநாள்  தேர்தல் நடக்க உள்ளது. திமுக அதிமுக பாஜக நாம் தமிழர் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. தமிழ்நாட்டில் 4 முனை போட்டி தீவிரமாக நிகழ்ந்து வருகிறது. இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்த அளவில் வரும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் திமுக 21 தொகுதிகளும் அதன் கூட்டணி கட்சிகள் மற்ற தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. தேர்தல் தொடர்பாக வரிசையாககருத்துக்கணிப்புகள்   வெளியாகி வருகின்றன. அந்த வகையில்  தேர்தல் தொடர்பாக தந்தி டிவி கருத்துக்கணிப்பை மேற்கொண்டுள்ளது மொத்தமாக திமுக 34 இடங்களில் வெல்லும். அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாது. பாஜக 1 இடத்தில் வெற்றிபெறும். இழுபறி நீடிக்கும் இடங்கள் 5 என தந்திடிவி தெரிவித்துள்ளது : வேலூர் திருநெல்வேலி கோயம்புத்தூர் கள்ளக்குறிச்சி பொள்ளாச்சி உச்சக்கட்ட  ஆகிய இடங்களில் இழுபறி நீடிக்கும் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் வேலூர் திருநெல்வேலி கோயம்புத்தூர் ஆகிய தொகுதிகளில் திமுக – பாஜக இடையே இழுபறி நீடிக்கும். கள்ளக்குறிச்சி பொள்ளாச்சி ஆகிய தொகுதிகளில் அதிமுக – திமுக இடையே இழுபறி நீடிக்கும் என்று தந்தி டிவி கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. வாக்கு சதவிகிதம்: திமுகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 42 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். அதிமுகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 34 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். பாஜகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 18 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். நாம் தமிழருக்கு வாக்கு அளிப்போம் என்று 5 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர் : புதுச்சேரியில் பாஜகவிற்கான வெற்றி வாய்ப்பு உள்ளதாக கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.   https://akkinikkunchu.com/?p=274079
    • 50 நாடுகளுக்கு இலவச வீசா – உல்லாசப் பயணிகளை கவர இலங்கை திட்டம் April 18, 2024   இலங்கையின் சுற்றுலாத் துறையை மேலும் வலுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய 50 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அண்மைக்காலமாக இலங்கை வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியா உட்பட பல ஐரோப்பிய நாடுகளில் இருந்து அதிகளவான சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகின்றனர். குறிப்பாக ரஷ்யா, ஜேர்மன், பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து அதிகளவான சுற்றுலா பயணிகள் வருகை தருவதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை புதிய விசா முறையொன்றை நடைமுறைப்படுத்தல் மற்றும் புதிய இணைய வழிமுறையை செயற்படுத்தும் பணிகள் நேற்று முதல் ஆரம்பிக்கப் பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய விசா நடைமுறை, அதற்கான கட்டணங்கள், பூர்த்திசெய்யப்பட வேண்டிய தேவைப்பாடுகள் மற்றும் இலங்கையில் தங்கியிருக்கக்கூடிய காலப்பகுதிகள் என்பன கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் திகதி விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டது.   https://www.ilakku.org/50-நாடுகளுக்கு-இலவச-வீசா-உல/  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.