Jump to content

இராஜாங்க அமைச்சர் ஜீவனின் அதிரடி அறிவிப்பு


Recommended Posts

இராஜாங்க அமைச்சர் ஜீவனின் அதிரடி அறிவிப்பு

இராஜாங்க அமைச்சர் ஜீவனின் அதிரடி அறிவிப்பு

 

தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு பிரதமரின் நேரடி பார்வையின் கீழ் காணப்படுவதனால் எனது அபிவிருத்தி பணிகளை தடை இன்றி தயக்கம் இன்றி முன்னெடுப்பேன். யாரும் அச்சப்பட தேவையில்லை என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

கொழும்பு கொள்ளுப்பிட்டிவில் அமைந்துள்ள தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சில் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் இன்று (14) காலை சுப நேரத்தில் கடமைகளை பொறுப்பேற்ற பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வுக்கு நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிதிச் செயலாளருமான மருதபாண்டி ரமேஸ்வரன், தேர்தலில் போட்டியிட்ட இ.தொ.கா வேட்பாளர்கள், உட்பட இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முக்கியஸ்த்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

தற்போதைய புதிய அரசாங்கத்தில் வழங்கப்பட்டுள்ள அமைச்சு பொறுப்புகளை கண்காணிப்பதற்காக அமைச்சரவை அமைச்சுக்கள் வழங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் எனக்கு வழங்கப்பட்டுள்ள அமைச்சு நாட்டின் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் நேரடி பார்வையில் காணப்படுகின்றது.

ஆகையால் யார் குற்றம் சொன்னாலும் அச்சப்பட தேவையில்லை. எனது அமைச்சின் கடமைகளை எவ்வாறு முன்னெடுக்கின்றேன் என்பதை பொருத்திருந்து பாருங்கள்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அரசியல் ரீதியாகவும், தொழிற்சங்க ரீதியாகவும் அதன் அணுகுமுறைகளை வெவ்வேறாக முன்னெடுத்து செல்கின்றது.

அந்த வகையில் தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபாய் சம்பளம் விடயம் தொழிற்சங்க ரீதியாக முன்னெடுக்கப்படவுள்ளது. அதேநேரத்தில் இது தொடர்பாக நாட்டின் பிரதமருடைய கவனத்திற்கும் ஏற்கனவே கொண்டு வரப்பட்டுள்ளது.

ஆயிரம் ரூபாய் தொடர்பான பேச்சுவார்த்தை சற்று வித்தியாசமாக எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும்.

பெருந்தோட்டப்பகுதிகளில் அமைக்கப்படும் வீடமைப்பு ஆரம்ப காலத்தில் சொன்னதை போல் எழுத்தளவில் மாடி வீடாக இருந்தாலும், (சிலப்) முறையிலான வீடுகளே அமைக்கப்படும்.

ஆனால் இந்திய வீடமைப்பை வைத்துக் கொண்டு நாம் அரசியல் செய்யப்போவதில்லை. வீடமைப்பு தொடர்பில் முன்னெடுக்கும் பணிகளை நீங்கள் பொருத்திருந்து பார்க்க வேண்டும்.

ஆசிய அபிவிருத்தி வங்கி நிதி உதவியுடன் மலையகத்தில் நுவரெலியா மாவட்டத்தில் தேசிய பல்கலைகழகம் அமையப்பெறவுள்ளது. இன்று கல்வி அமைச்சராக ஜீ.எல்.பீரிஸ் அவர்கள் பதவியேற்றுள்ளார்.

அவரிடம் கலந்தாலோசித்துள்ளோம். ஆகையால் இன்னும் ஓரிரு வாரங்களில் பல்கலைகழகம் அமைப்பது தொடர்பான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என நம்பிக்கை உள்ளது.

வடக்கு, கிழக்கு மலையகம் உள்ளிட்ட மாணவர்களை உள்ளடக்கியே இவ் தேசிய பல்கலைகழகம் அமையப்படும். அங்குள்ள இளைஞர்களையும் நாம் கவனிக்க கடமைப்பட்டுள்ளோம் என்றார்.
 

-மலையக நிருபர் கிரிஷாந்தன்-

http://tamil.adaderana.lk/news.php?nid=132236

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ உங்களால் முடிந்ததை அந்த மக்களுக்கு செய்யுங்கோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, nunavilan said:

ஆசிய அபிவிருத்தி வங்கி நிதி உதவியுடன் மலையகத்தில் நுவரெலியா மாவட்டத்தில் தேசிய பல்கலைகழகம் அமையப்பெறவுள்ளது. இன்று கல்வி அமைச்சராக ஜீ.எல்.பீரிஸ் அவர்கள் பதவியேற்றுள்ளார்.

பணம் பெரிய பிரச்சனையாக இருக்கும் .....சீனா அரசை மடக்கி   வைத்து இருக்க கூடிய திட்டங்களுக்கே பணத்தை வழங்கும்
சிறிய திட்டங்களுக்கு பணம் கிடைப்பது கடினமாக இருக்கும்.....கொரானா தான் எல்லோரையும் காப்பாற வேண்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, nunavilan said:

வடக்கு, கிழக்கு மலையகம் உள்ளிட்ட மாணவர்களை உள்ளடக்கியே இவ் தேசிய பல்கலைகழகம் அமையப்படும். அங்குள்ள இளைஞர்களையும் நாம் கவனிக்க கடமைப்பட்டுள்ளோம் என்றார்.

மலையகத்துக்கு பல்கலைக்கழகம் இப்ப ரெம்ப அவசியம் என்றில்லை.. அது அமைந்தால் மேலதிக நன்மையே தவிர..!  ஏனெனில்.. ஏலவே.. பேராதனிய.. ஊவா.. சப்பிரகமுவா பல்கலைக்கழகங்கள் வந்தாயிற்று. குருணாகலிலும் ஒரு பல்கலைக்கழகம் வந்தாச்சு. அதுபோக கல்வியற் கல்லூரிகளும் திறந்தாச்சு. மேலும் இலங்கை திறந்த பல்கலைக்கழகமும்.. எல்லா இடமும் நுழைஞ்சிட்டு.

இப்ப தேவை.. ஆறுமுகம் தொண்டமான் உறுதி அளிச்சிட்டு போனது போல.. தோட்டத்தொழிலாளர்களுக்கு 1000 ரூபா நாளாந்த வேதனமும். நான் பதவிக்கு வந்ததும் 1000 ரூபா என்ன அதுக்கு மேலவும் கொடுப்பன் என்ற கோத்தா.. பின் அரசாங்கம் அமைச்சதும் கொடுப்பன் என்றார். இப்ப அரசாங்கமும் அமைஞ்சிட்டு. 1000 ரூபா வேதனக் கதை.. காற்றோட போச்சு. 

இப்ப அதை திசை திருப்ப இந்தப் புதுக்கதை. மலைய மக்களில் ஒரு 20% பேர் தான் உயர்கல்விக்கு போகும் நிலைக்கு குடும்ப வருமானத்தை ஈட்டி வரும் நிலையில்.. குடும்ப வருமானத்தை அதிகரிக்காமல்.. மலையகப் பிள்ளைகளின் கல்வித்தரத்தை உயர்த்த முடியாது. அதை உயர்த்தாது பல்கலைக்கழகம் கட்டி.. என்ன சிங்கள மாணவர்களுக்கு இன்னும் இன்னும் அதிக வாய்ப்பை உண்டு பண்ணிக் கொடுக்கப் போகிறீர்களா..??! 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.