Jump to content

பிரபல திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் கவலைக்கிடம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எஸ்பிபி தற்போது எப்படி இருக்கிறார்?

spacer.png

 

கடந்த மூன்று நாட்களாக மயக்க நிலையிலிருந்த பாடகர் எஸ்பிபியின் கண்களில் அசைவு வந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வரும் பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், சென்னை எம்.ஜி.எம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடைய நுரையீரல் கடுமையாகப் பாதிக்கப்பட்டு செயல் இழக்கும் நிலைக்குச் சென்றதால் எக்மோ கருவி அவருக்குப் பொருத்தப்பட்டது.

அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் தரப்பில், எஸ்பிபியின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. 48 மணி நேரமாக உயிர்காக்கும் கருவிகள் அவருக்குப் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.

 

இந்நிலையில் திரையுலகினருக்கும், அவரது ரசிகர்களுக்கும் ஆறுதல் அளிக்கும் விதமாக, எஸ்பிபி அவர்களின் கண்களில் அசைவு வந்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. செயற்கை சுவாசம், மயக்க மருந்து கொடுக்கும் அளவு குறைக்கப்பட்ட நிலையில், அவரின் கண்களில் அவ்வப்போது அசைவு தெரிவதாக மருத்துவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

எனினும் அவரது நுரையீரல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. நுரையீரலை மீட்டுக் கொண்டு வர நீண்ட நாள் எடுக்கும் என்பதால், மருத்துவமனையின் மூன்றாவது மாடியிலிருந்து ஆறாவது மாடியில் மாற்றியமைக்கப்பட்ட தனிச்சிறப்பு தீவிர சிகிச்சை வார்டுக்கு அவர் மாற்றப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் தந்தையின் உடல் சீராக இருக்கிறது. செயற்கை சுவாசம் பொருத்தியது பலன் அளித்துள்ளது. அப்பா நிச்சயம் மீண்டு வருவார் என்று மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இதற்கு நேரம் எடுக்கும். அனைவரின் பிரார்த்தனையும் அவருக்கு உதவியாக உள்ளது என்று எஸ்பிபியின் மகன் சரண் தெரிவித்துள்ளார்.

இதனிடையே எஸ்பிபியின் மனைவி சாவித்திரிக்கும் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

https://minnambalam.com/public/2020/08/16/47/spb-health-condition

 

Link to comment
Share on other sites

  • Replies 84
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

என் கடைசி பாடலையும் நீ பாட வேண்டும் ! - வைரமுத்து உருக்கம்

 

Appa kandipa Varuvaru ! | Health update of S. P. Balasubrahmanyam | S.P Charan | 17-Aug-2020 4.13pm

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எஸ்.பி.பி நெருக்கடியான நிலையில் தொடர்கிறார்: மருத்துவமனை அறிக்கை

எஸ்.பி.பி நெருக்கடியான நிலையில் தொடர்கிறார் என்று மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஆகஸ்ட் 5-ம் தேதி பிரபல பாடகர் எஸ்.பி.பிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு நல்லபடியாக ஒத்துழைத்து வந்த அவருடைய உடம்பு ஆகஸ்ட் 14-ம் தேதி மோசமடைந்தது.

எஸ்.பி.பிக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவ்வப்போது அவருடைய உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று (ஆகஸ்ட் 17) மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"கரோனா தொற்று பாதிப்பால் எங்களுடைய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தொடர்ந்து செயற்கை சுவாச உதவியோடு தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறார். நெருக்கடியான நிலையில் தொடர்கிறார். அவருக்குச் சிகிச்சை அளித்து வரும் மருத்துவ நிபுணர் குழு அவரது உடல்நிலையைக் கூர்ந்து கண்காணித்து வருகிறது"

இவ்வாறு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/570382-spb-health-condition.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 15/8/2020 at 12:47, ஈழப்பிரியன் said:

அந்தாள் பாடிக் கொண்டு திரிந்த போது பங்கு கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார்.
இப்போ முக்கி முனகிறார்.

 

அவர் பங்கு கேட்டது என்பது எதோ உண்மை தான்... ஆனால் அந்த பங்கு நலிந்த இசை கலைஞர்களுக்கு என்பதுவும் உண்மை. ஆயிரம் நல்லது செய்தாலும் பிற மனிதர்கள் தவறுகளை மட்டுமே உற்று நோக்குகிறார்கள் என்பது சற்றே கவலைதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்- மருத்துவமனை அறிக்கை

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்- மருத்துவமனை அறிக்கை

சென்னை: 

ஆகஸ்ட் 5-ம் தேதி பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு நல்லபடியாக ஒத்துழைத்து வந்த அவருடைய உடம்பு ஆகஸ்ட் 14-ம் தேதி மோசமடைந்தது.

எஸ்.பி.பிக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் உடல நலம் பெற்றுவர பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்

தினமும் அவருடைய உடல்நிலை குறித்து மகன் எஸ்.பி.சரண் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அதுபோல் இன்று எஸ்.பி.சரண் வெளியிட்டுள்ள வீடியோவில்

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் தனது தந்தை எஸ்.பி.பாலசுப்பிரமணியன் உடல்நிலை சீராக உள்ளது என அவரது மகன் எஸ்.பி.சரண் தெரிவித்துள்ளார். எனது தந்தை எஸ்.பி.பாலசுப்பிரமணியனுக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி என அவர் தெரிவித்துள்ளார். 

"அப்பா நேற்று எந்த நிலையில் இருந்தாரோ அப்படித்தான் இருக்கிறார். தீவிர சிகிச்சையில் இருந்தாலும் சீராக இருக்கிறார். வேறெந்த சிக்கல்களும் இல்லை. இது நல்ல அறிகுறி என்று மருத்துவர்கள் நினைக்கின்றனர். பிரார்த்தனைகள், வாழ்த்துகள், அக்கறை, அன்பு செலுத்தும் உங்கள் அனைவருக்கும் மீண்டும் நன்றி கூற விரும்புகிறேன். கண்டிப்பாக அப்பா மீண்டு வருவார். நன்றி" என கூறி உள்ளார்.

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது என மருத்துவமனை அறிக்கை வெளியிட்டு உள்ளது.

எஸ்.பி.பி. உடல் நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2020/08/17181723/Singer-SP-Balasubramaniams-health-continues-to-be.vpf

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உயிர்காக்கும் கருவிகள் உதவியுடன் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு சிகிச்சை - மருத்துவ அறிக்கையில் தகவல்

உயிர்காக்கும் கருவிகள் உதவியுடன் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு சிகிச்சை - மருத்துவ அறிக்கையில் தகவல்

பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது என்றும், தொடர்ந்து உயிர்காக்கும் கருவிகள் உதவியுடன் அவசர சிகிச்சை பிரிவில் இருக்கிறார் என்றும் மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பதிவு: ஆகஸ்ட் 18,  2020 04:45 AM
சென்னை,

புகழ்பெற்ற சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கடந்த 5-ந்தேதி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சூளைமேடு பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். சில தினங்களுக்கு முன்பு அவரது உடல்நிலை மோசம் அடைந்தது. இதனால் அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றி செயற்கை சுவாச கருவிகள் பொருத்தி சிகிச்சை அளித்தனர்.


அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. திரையுலகினரும் ரசிகர்களும் அதிர்ச்சியாகி, எஸ்.பி.பாலசுப்பிரமணியம் விரைவில் குணமடையை பிரார்த்திப்பதாக சமூக வலைத்தளங்களில் பதிவுகள் வெளியிட்டனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது என்றும் அவருக்கு டாக்டர்களை அடையாளம் தெரிகிறது என்றும் அவரது மகன் எஸ்.பி.பி.சரண் தெரிவித்தார். முன்பை விட இப்போது கொஞ்சம் நன்றாகவே அப்பா மூச்சு விடுகிறார். முழுமையான மயக்க நிலையில் இல்லை என்றும் கூறினார்.

இந்தநிலையில் நேற்று மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலை தொடர்ந்து மோசமான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மருத்துவ அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“கொரொனா தொற்றினால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ள எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தொடர்ந்து உயிர்காக்கும் கருவிகள் உதவியுடன் அவசர சிகிச்சை பிரிவில் இருக்கிறார். அவரது உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது. மருத்துவ நிபுணர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து உடல்நிலையை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.”

இவ்வாறு குறிப்பிடப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் நேற்று (திங்கட்கிழமை) எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மகன் எஸ்.பி.பி சரண் இன்னொரு வீடியோ வெளியிட்டார். அதில், “எனது தந்தை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) எந்த நிலையில் இருந்தாரோ அப்படியேதான் இருக்கிறார். அவரது உடல்நிலை சீராகவே உள்ளது. எந்த சிக்கலும் இல்லை. மீண்டும் உங்கள் எல்லோருடைய பிரார்த்தனைகள், வாழ்த்துகள், அன்பு, அக்கறைக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அப்பா நிச்சயம் மீண்டு வருவார்.” என்று கூறியுள்ளார்.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/08/18035943/Treatment-for-SP-Balasubramaniam-with-the-help-of.vpf

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல் நிலை கவலைக்கிடம்: எக்மோ கருவி மூலம் தொடரும் சிகிச்சை

கொரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவரும் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு ECMO கருவியும் பொருத்தப்பட்டுள்ளது.

பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஆகஸ்ட் ஐந்தாம் தேதியன்று சென்னையில் உள்ள எம்.ஜி.எம். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அப்போது, தான் நலமாக இருப்பதாகவும் தொலைபேசியில் யாரும் அழைக்க வேண்டாம் என்றும் காணொளி காட்சி மூலம் அவர் கேட்டுக் கொண்டிருந்தார்.

ஆனால், நாட்கள் செல்லச் செல்ல அவரது உடல்நிலை மோசமடைந்தது. ஆகஸ்ட் 14ஆம் தேதியன்று அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்திருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. அதற்குப் பிறகு பெரிய முன்னேற்றம் ஏதும் இல்லாத நிலையில், அவருக்கு செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டது.

அவர் சிகிச்சை பெற்றுவரும் தனியார் மருத்துவமனை புதன்கிழமையன்று வெளியிட்டிருக்கும் அறிக்கையின்படி, அவருக்கு 'ECMO' கருவியும் பொருத்தப்பட்டிருப்பாதவும் அவருடைய உடல்நலக் குறியீடுகள் தற்போது திருப்திதரும் வகையில் இருப்பதாகவும் மருத்துவர்கள் குழு அவரது உடல்நலத்தை கவனித்துவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதும் அவரது உடல்நலம் கவலைக்கிடமான நிலையிலேயே இருக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ECMO கருவி என்றால் என்ன?

Extracorporeal membrane oxygenation என்பதன் சுருக்கமே ECMO. ஒருவரது இதயமும் நுரையீரலும் போதுமான அளவு இயங்காதபோது ரத்தஓட்டம் தடைபடுகிறது. நுரையீரலுக்கு ஆக்ஸிஜன் செல்வதும் குறைகிறது. இந்த எந்திரத்தைப் பொருத்துவதன் மூலம் ரத்தம் உடலில் இருந்து வெளியில் எடுக்கப்பட்டு, ஆக்ஸிஜனேற்றம் செய்யப்பட்டு மீண்டும் உடலுக்குள் அனுப்பப்படுகிறது. ரத்தத்தில் போதுமான ஆக்ஸிஜன் இல்லாமல் உடலின் பிற உறுப்புகள் பாதிக்கப்படுவது இதனால் தடுக்கப்படும்.

எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடம்

பட மூலாதாரம், SPB / FB

 

பொதுவாக, இதய - நுரையீரல் செயலிழப்பு ஏற்பட்ட நோயாளிகளுக்கு இந்த எந்திரத்தைப் பொருத்தி, உடல்நிலையை மேம்படுத்த மருத்துவர்கள் முயற்சிப்பார்கள். கோவிட் - 19 நோயின் தாக்கத்தால் போதுமான ஆக்ஸிஜன் ரத்தத்திற்குக் கிடைக்காத நிலையில், அவர்களுக்கு செயற்கை சுவாசம் வழங்கப்படுகிறது. ஆனால், செயற்கை சுவாசமும் பலனளிக்காத நிலையில், இந்த ECMO கருவி பொருத்தப்படுகிறது.

இதற்கு முன்பாக முன்னால் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ECMO கருவி பொருத்தப்பட்டபோது இந்தக் கருவியின் பயன்பாடு குறித்து பரவலாகப் பேசப்பட்டது.

இந்த நிலையில், எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நலம் பெற வேண்டுமென ஆகஸ்ட் 20ஆம் தேதி மாலை 6 மணி முதல் 6.05 வரை கூட்டுப் பிரார்த்தனை செய்ய வேண்டும் என இயக்குநர் பாரதிராஜா, இசையமைப்பாளர்கள் இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், பாடலாசிரியர் வைரமுத்து உள்ளிட்டவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். அவரவர் இடத்திலிருந்தபடி எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் பாடல்களை ஒலிக்கச்செய்வதன் மூலம் இந்தப் பிரார்த்தனையை செய்ய வேண்டுமென அவர்கள் கோரியுள்ளனர்.https://www.bbc.com/tamil/india-53838330

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

SP Balasubrahmanyam-காக ஒன்று கூடும் திரையுலகம்- Vijay, Simbu, Karthi, Rajini, Kamal, Ilaiyaraja

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் -அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் -அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

 

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

 
கொரோனாவால் பாதிக்கப்பட்ட பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கிறது. இதேபோல் வசந்தகுமார் எம்.பி.க்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு கொரோனா பாதிப்பு இல்லை. அவர் 5 நாட்கள் சென்னை ராஜீவ்காந்தி பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்புவார்.

இவ்வாறு அவர் கூறினார்.

எஸ்.பி. பாலசுப்பிரமணியத்திற்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதையடுத்து, அவர் கடந்த 5ம் தேதி சென்னையில் உள்ள எம்.ஜி.எம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நலமாக இருப்பதாக மருத்துவமனையில் இருந்து வீடியோ வெளியிட்டார் எஸ்.பி. பாலசுப்பிரமணியம். ஆனால் கடந்த 12ம் தேதி இரவில் இருந்து அவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அவர் நலம்பெற வேண்டி திரையுலகினர் கூட்டு பிரார்த்தனை செய்தனர்.

https://www.maalaimalar.com/news/topnews/2020/08/21134015/1801741/Singer-SP-Balasubrahmanyam-remains-critical-says-Minister.vpf

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

``எஸ்.பி.பி-யும் வாலி சாரும் ஒண்ணா உட்கார்ந்தா அவ்ளோ கலாட்டாவா இருக்கும்!''- தாணு

எஸ்.பி.பி

எஸ்.பி.பி-யை இசையமைக்க வைக்கும் எண்ணம் எப்படி வந்தது எனத் தெரிந்துகொள்ள தாணுவிடம் பேசினேன்.

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் 40,000 பாடல்களுக்கு மேல் பாடியிருப்பதோடு சில படங்களுக்கு இசையமைப்பாளராகவும் இருந்திருக்கிறார். தமிழில் 5 படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். அந்தப் படங்களில் ஒன்று பார்த்திபன் நடித்த 'தையல்காரன்'. எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் கலைப்புலி தாணு தயாரித்தப் படம் இது. எஸ்.பி.பி-யை இசையமைக்க வைக்கும் எண்ணம் எப்படி வந்தது எனத்தெரிந்துகொள்ள தாணுவிடம் பேசினேன்.
தாணு
 
தாணு

''1988-ல விஜயகாந்த்தை வெச்சு 'நல்லவன்' படத்தை தயாரிச்சேன். இந்தப் படத்தை எஸ்.பி.முத்துராமன் சார்தான் இயக்கினார். இந்தப் படம் முடிஞ்சதும் திரும்ப விஜயகாந்த்தை வெச்சு நானே தயாரிச்சு, இயக்கி, இசையமைச்ச படம்தான் 'புதுப்பாடகன்'. ஒரு இசையமைப்பாளரா இந்தப் படத்துக்கான எல்லா பாட்டையும் எஸ்.பி.பி-தான் பாடணும்னு எனக்கு ஆசை. மொத்தம் 8 பாடல்கள். 7 பாடல்கள் எஸ்.பி.பி பாடிட்டார். ஒரே ஒரு பாடல் மட்டும் பாட முடியாமப் போயிடுச்சு.

 

தயாரிப்பாளரான இவர் எப்படி இசையமைப்பாளர் ஆனார், என்னோட இசையறிவு என்னன்னுலாம் அவர் பார்த்ததேயில்லை. நான் பாடிக்காட்டுவேன். அவ்ளோ ரசிச்சுப் பார்ப்பார். அதை கேட்டுட்டு அவர் இன்னும் கொஞ்சம் சில விஷயங்கள் சேர்த்து அவ்ளோ சூப்பரா பாடிக்கொடுப்பார். இசை நல்லாயிருக்குன்னு பாராட்டுவார். 'முறையா இசையைக் கத்துக்காதவன் இசை நல்லாயிருக்குன்னு சொல்றீங்களே?' எனக் கேட்பேன். 'எல்லா இசையமைப்பாளர்கள் கூடவும் ஸ்வரம் பிரிக்க ஒரு ஆள் இருப்பாங்கய்யா. உன் ரத்தத்துலயே இசையிருக்கு'ன்னு என்னை நிறையவே சந்தோஷப்படுத்தினார்.

எஸ்.பி.பி
 
எஸ்.பி.பி

இந்தப் படத்துக்கு அடுத்து பார்த்திபன் ஹீரோவா நடிச்சு நான் தயாரிச்ச படம்தான் 'தையல்காரன்'. இந்தப் படத்துக்கும் இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் சார்தான். 'அப்ப முந்தைய படம் சந்திரபோஸ் வெச்சிப்பண்ணோம், இந்தப் படம் வேற மியூசிக் டைரக்டர் வெச்சிப்பண்ணுவோம்'னு பேசும்போதுதான் எஸ்.பி.பி ஞாபகம் வந்தது. அப்ப அவர் 'சிகரம்'னு ஒரு படத்துக்கும் இசையமைச்சிட்டிருந்தார். முத்துராமன் சார்கூடவும் அவருக்கு நல்ல நட்பு இருந்தது. நானும் பழக்கம்ன்றதால நாங்க கேட்டதும், இசையமைக்க ஒத்துக்கிட்டார்.

 

அவர் வீட்டிலேயேதான் பாடல் கம்போஸிங் நடந்தது. அவர்கூடவே ஶ்ரீனிவாசமூர்த்தின்னு ஒருத்தர் இருப்பார். இப்ப அவர் ஏ.ஆர்.ரஹ்மான்கூட இருக்கார். இந்தப் படத்துக்கான எல்லா பாடல்களையும் வாலி சார்தான் எழுதினார். கம்போஸிங் அப்ப வாலி சார்கூட உட்காரும்போது அவ்ளோ கலாட்டாவா இருக்கும். வாலி சாரை பயங்கரமா கிண்டல் பண்ணுவார் எஸ்.பி.பி. இதுல 'அப்பாடி பப்பாளிதான்... என் பூவுடம்பு விக்காத தக்காளிதான்... என் பொன் உதடு தித்திக்கும் ரஸ்தாளிதான்...'னு வாலி சார் ஒரு பாட்டு எழுதியிருப்பார். இந்தப் பாட்டு கம்போஸிங் அப்ப 'அனுபவம் பேசுது போலிருக்கே'ன்னு வாலி சாரை அவ்ளோ ஜாலியா கிண்டல் பண்ணி சிரிச்சிட்டிருப்பார். அப்பலாம் சம்பளம் ரொம்ப கம்மிதான். இந்தப் படத்துக்கு எவ்ளோ சம்பளம் கொடுத்தேன்னுகூட சரியா ஞாபகம் இல்ல. அப்ப ஒரு பாட்டு பாட 5000 ரூபாய் சம்பளம் வாங்கிட்டிருந்தார் பாலு.

எஸ்.பி.பி
 
எஸ்.பி.பி

ஒரே நேரத்துல 10 பாட்டு, 15 பாட்டுலாம் பாடிக்கொடுத்துடுவார். எளிமைதான் அவரோட அடையாளம்'' என்றவரிடம் சமீபத்தில் அவரிடம் பேசினீர்களா எனக்கேட்டேன்.

''ஒரு மாசத்துக்கு முன்னாடி பாலு சாருக்கு போன் பண்ணிப்பேசினேன். பழைய விஷயங்கள் நிறையப் பேசிக்கிட்டோம். அப்ப அவர், 'தயாரிப்பாளர் சங்கத்தலைவரா இருக்கும்போது நீங்க கொடுத்த செக் அப்படியே இருக்கு. யாரையாவது அனுப்புங்க. திருப்பிக்கொடுத்துவிடுறேன்'னு சொன்னார். அதெல்லாம் வேண்டாம் சார். திரும்ப நாம நிகழ்ச்சிப் பண்ணவேண்டியிருக்கும். அது அப்படியே பத்திரமா இருக்கட்டும்னு சொன்னேன். இப்ப உங்ககிட்டயும் அதையேதான் சொல்றேன். அவர் உடல்நலம் தேறி திரும்ப நல்லபடியா வருவார். தயாரிப்பாளர் சங்க நிகழ்ச்சியில நிச்சயம் பாடுவார்'' என்றார் தாணு.

https://cinema.vikatan.com/tamil-cinema/producer-thanu-shares-his-experiences-with-s-p-balasubrahmanyam

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எஸ்.பி.பிக்கு கொரோனா தொற்றியமைக்கான காரணம் நானா ? - பாடகி மாளவிகா விளக்கம்

என்னால்தான் எஸ்.பி. பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா தொற்று பரவியதாக கூறப்படும் செய்தி போலியானது என பாடகி மாளவிகா தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 5 ஆம் திகதி பிரபல பாடகர் எஸ்.பி.பிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

சிகிச்சைக்கு நல்லபடியாக ஒத்துழைத்து வந்த அவருடைய உடம்பு ஆகஸ்ட் 14 ஆம் திகதி மோசமடைந்தது.

எஸ்.பி.பிக்கு எக்மோ கருவியின் மூலம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தினமும் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் பிரபல பின்னணி பாடகி மாளவிகாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

அவர் கலந்து கொண்ட இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற பாடகி சுனிதாவுக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

எனவே மாளவிகா கலந்து கொண்ட இசை நிகழ்ச்சியில் பங்கேற்றதால்தான் எஸ்.பி.பிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக சமூக வலைதளங்களில் செய்தி ஒன்று பரவி வந்தது.

இந்த தகவலுக்கு மறுப்பு தெரிவித்து மாளவிகா தனது பேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது,

‘அந்த இசை நிகழ்ச்சியின் படப்பிடிப்புக்கு முன்னதாகவே எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக ஒரு போலி செய்தி ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

பல்வேறு பிரபல பாடகர்களுடன் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கலந்துகொண்ட நிகழ்ச்சியின் படப்பிடிப்பு கடந்த ஜூலை 30 மற்றும் 31 அன்று நடைபெற்றது.

இரண்டாம் நாளில் 4 பாடகர்களில் ஒருவராக நானும் கலந்து கொண்டேன். ஒருவேளை எனக்கு அப்போது தொற்று ஏற்பட்டிருந்தால் என் மூலம் என்னோடு கலந்து கொண்ட பாடகர்களுக்கும், என்னோட மேக்கப் ரூமில் இருந்த நிகழ்ச்சி தொகுப்பாளருக்கும் பரவியிருக்க வேண்டும். என் சகோதரியும் என்னோடு பாடியதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

என் சகோதரி அமெரிக்காவில் வசிக்கிறார். அவர் எப்படி என்னோடு பாடியிருக்க முடியும். மேலும் என் கணவரும் கடந்த 5 மாதங்களாக வீட்டில் இருந்தே அலுவலக வேலைகளை பார்த்து வருகிறார். என் குழந்தை மற்றும் பெற்றோரின் பாதுகாப்பு கருதி நானும் எங்கும் வெளியே செல்லவில்லை. இந்த நிகழ்ச்சிக்காக மட்டுமே முதன் முதலாக வீட்டை விட்டு வெளியே வந்தேன்.

கடந்த ஆகஸ்ட் 5 ஆம் திகதி பாலுக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இன்னும் சிலருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் நானும் 8 ஆம் திகதி கொரோனா பரிசோதனை செய்து கொண்டேன்.

துரதிரஷ்டவசமாக எனக்கும் என் பெற்றொருக்கும், என் குழந்தைக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. ஆனால் என் கணவருக்கு தொற்று இல்லை. என் சாரதிக்கும் கொரோனா தொற்று இல்லை.

எனவே தயவு செய்து போலிச் செய்திகளை பரப்பாதீர்கள். இது போன்ற வதந்திகளை பரப்புவோருக்கு எதிராக சைபர் க்ரைம் பொலிஸில் புகார் செய்துள்ளேன் என மாளவிகா கூறியுள்ளார்.

https://www.virakesari.lk/article/88498

Link to comment
Share on other sites

எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை சீராக உள்ளது- மருத்துவமனை அறிவிப்பு

   by : Litharsan

S.P.Balasubrahmanyam.jpg

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவரும் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.

தீவிர சிகிச்சைப் பிரிவில் செயற்கை சுவாசக் கருவியின் உதவியுடன் அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், எஸ்.பி.பி.யின் உடல்நிலையை மருத்துவ வல்லுநர் குழு தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அவரது உடல்நிலையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து அவ்வப்போது அவரது குடும்பத்தினரிடம் தெரிவித்து வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

பிரபல சினிமா பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடந்த ஐந்தாம் திகதி கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு சூளைமேடு பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு அவரது உடல்நிலை மோசமடைந்ததால் அவர், அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/எஸ்-பி-பாலசுப்ரமணியத்தின/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எஸ்.பி பாலசுப்பிரமணியம் உடல் நிலை சீராக உள்ளது - மருத்துவமனை

எஸ்.பி பாலசுப்பிரமணியம் உடல் நிலை சீராக உள்ளது - மருத்துவமனை

 

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு கடந்த 5-ம் தேதி கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சென்னை சூளைமேடு பகுதியில் உள்ள எம்.ஜி.எம். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். லேசான கொரோனா தொற்று உள்ளது. இரு தினங்களில் குணமடைந்து வீடு திரும்பி விடுவேன் என்று அவரே வீடியோவில் நம்பிக்கை தெரிவித்து இருந்தார்.

ஆனால், கடந்த 13-ம் தேதி உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டு மருத்துவக் குழுவின் ஆலோசனையின்படி தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். இதையடுத்து, அவருக்கு செயற்கை சுவாசக்கருவிகள் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எக்மோ கருவி மூலமாகவும் அவருக்கு  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல் நிலையை மருத்துவ குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. 

எஸ்.பி பாலசுப்பிரமணியம் உடல்நிலை குறித்து தினமும் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டு வருகிறது.

இந்நிலையில், இன்று மாலை மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நிலை சீராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், அமெரிக்கா, இங்கிலாந்து  மருத்துவர்களுடன் ஆலோசித்து எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளில் கொரோனா பாதித்து எக்மோ உதவியுடன் சிகிச்சை பெறுபவர்கள் அதிகம் என்பதால் அங்குள்ள மருத்துவர்கள் ஆலோசனை பெற்று சிகிச்சை அளிக்கப்படுவதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. 

 

https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/08/22185258/1812009/Hospital-report-says-SPB-condition-still-stable.vpf

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் வடக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு.  (புதியவன்) அதி உயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் 21 வழிபாட்டுத் தலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவற்றுள் 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிக்கப்படவிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கூறியதாக அரச தலைவர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.  இவ்வாறாக கட்டுவன், வசாவிளான் மற்றும் பலாலி ஆகிய பகுதிகளில் காணப்படும் ஆலயங்களே வழிபாட்டு நடவடிக்கைகளுக்காக விடுவிக்கப்படவுள்ளன. அரச தலைவர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், இணைத் தலைவர்களான வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் தலைமையில் இன்று நடைபெற்றது. இதன்போது கடந்த கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், புதிய பிரேரணைகளும் சமர்பிக்கப்பட்டன. இதன்போது உரையாற்றிய வடக்கு மாகாண ஆளுநர், சுமார் 30 வருடங்களுக்கு மேலாக எவ்வித வழிபாடுகளையும் நிகழ்த்தாத குறித்த ஆலயங்களுக்கு முதலில் மக்கள் செல்ல வேண்டும் எனவும், இவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் இராணுவத்துடன் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவித்தார். மக்கள் அங்கு செல்லும் போது ஊடகவியலாளர்களுக்கும் அனுமதி வழங்கப்பட வேண்டும் என இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த விடயம் தொடர்பில் பாதுகாப்பு தரப்பினருடன் கலந்துரையாடி பரிசீலிக்கப்படும் என மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவர்கள் தெரிவித்தார்கள். இதேவேளை, 1985 ஆம் ஆண்டுக்கு பின்னர் வனவள மற்றும் வனஜீவராசிகள் பணிமனையின் கீழ் கையகப்படுத்தப்பட்ட காணிகளை விடுவிக்குமாறு துறைசார் அமைச்சரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்குள் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் ஆளுநர் தெரிவித்தார்.  இதேவேளை, வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் விவசாய நவீனமயமாக்கல் செயற்பாடு தொடர்பில் மாகாண சபைக்கு அறிவிக்க வேண்டும் என குறித்த செயற்றிட்டத்தின் பிரதிப் பணிப்பாளருக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.  அத்துடன் விதை உருளைக் கிழங்கில் பக்றீரியா தொற்று ஏற்பட்டமை தொடர்பான முழுமையான அறிக்கையை சமர்பிக்குமாறு மாகாண விவசாய அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தினார். அத்துடன் யுக்திய சிறப்புச் சுற்றிவளைப்பின் ஊடாக கைது செய்யப்படும் நபர்களுக்கான புனர்வாழ்வு செயற்பாடுகளை மாத்திரம் மேற்கொள்ளாது, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் முழு வலையமைப்பையும் கண்டுபிடிக்க வேண்டும் என பொலிஸாருக்கு ஆளுநர் தெரிவித்தார்.  மேலும் பொதுமக்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்துக்குள் பொலிஸ் காவலரன் ஒன்றை அமைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது. குறித்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான, சி.சிறிதரன், செ.கஜேந்திரன், யாழ்ப்பாண மாவட்ட பதில் செயலாளர் ம.பிரதீபன், வடக்கு மாகாண சபைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பணிமனைத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், பொலிஸார், முப்படையினர், சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.  இதன்போது, பொதுமக்களின் காணியில் கட்டப்பட்டுள்ள யாழ்.தையிட்டி விகாரை இடித்து அகற்றப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், செ.கஜேந்திரன் குறிப்பிட்டிருந்தனர்.(ஏ) அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு (newuthayan.com)
    • முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி,பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பாக மிகப் பெரிய ஆரவாரத்துடன் தி.மு.கவில் இருந்து பிரிந்து உருவான ம.தி.மு.க. தற்போது மிகவும் பலவீனமான நிலையை எட்டியிருக்கிறது. காரணம் என்ன ம.தி.மு.கவின் பொருளாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அ. கணேசமூர்த்தியின் தற்கொலை மரணம் அக்கட்சியினரை உலுக்கியிருக்கிறது. அதற்கு இணையான அதிர்ச்சியாக, இந்த நாடாளுமன்றத் தேர்தலில் அக்கட்சிக்கு பம்பரம் சின்னம் கிடைக்காமல் போனதைச் சொல்லலாம். அ. கணேசமூர்த்தியின் மரணத்தைவிட, பார்வை ரீதியாக மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது இந்த விவகாரம். மாநிலத்தில் ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடுவதால் அக்கட்சி கேட்ட சின்னத்தைத் தர முடியாது என மறுத்திருக்கிறது இந்தியத் தேர்தல் ஆணையம். துவக்கத்தில் ஒரே சின்னத்தில் 24 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட்ட கட்சி, தற்போது கூட்டணி அரசியலில் இரு தொகுதிகளில் போட்டியிட முடியாமல் சின்னத்தை இழந்து நிற்கிறது. தமிழ்நாடு அரசியலிலும் தி.மு.க. மீதும் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய கட்சியாகக் காட்சியளித்த ம.தி.மு.க., இவ்வளவு பெரிய சரிவை உடனடியாகச் சந்திக்கவில்லை. இந்தச் சரிவு படிப்படியாக நேர்ந்தது. வைகோவுக்கும் தி.மு.கவுக்கும் இடையிலான பிளவு தி.மு.கவின் முக்கியமான தளபதிகளில் ஒருவராக 1980களில் இருந்தவர் வை. கோபால்சாமி. தி.மு.கவின் மாநாடுகள், கூட்டங்கள் ஒவ்வொன்றிலும் அவருக்கெனவே இளைஞர்கள் திரண்டார்கள். ஆனால், 90களின் துவக்கத்தில் அவருக்கும் கட்சித் தலைமைக்கும் இடையிலான முரண்பாடுகள் முற்றத் துவங்கின. இந்த நிலையில், 1993இல் விடுதலைப் புலிகளால் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக மத்திய - மாநில அரசுகளின் உளவுத் துறைகள் அனுப்பிய கடிதத்தை தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி வெளியிட்டார். இதையடுத்து, வைகோவுக்கும் தி.மு.கவுக்கும் இடையிலான பிளவு முற்றத் துவங்கியது. 30 மாவட்டச் செயலாளர்களில் 9 பேர் வைகோவுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டனர். அதே ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி தி.மு.கவை விட்டு நீக்கப்பட்டார் வைகோ. ஆதரவாக அறிக்கை வெளியிட்ட 9 மாவட்டச் செயலாளர்களும் நீக்கப்பட்டனர். செயற்குழு உறுப்பினர்களில் 40 பேர், பொதுக் குழு உறுப்பினர்களில் சுமார் 200 பேர், 9 மாவட்டச் செயலாளர்கள், சில சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் வைகோவுக்கு ஆதரவாக நின்றனர். எம்.ஜி.ஆர். தி.மு.கவைவிட்டு விலகியபோது ஏற்பட்ட பிளவைவிட இந்தப் பிளவு மிகப் பெரியது என அப்போது பலர் கருதினார்கள். காரணம், எம்.ஜி.ஆர். கட்சியைவிட்டு வெளியேறியபோது, தி.மு.கவின் மாவட்டச் செயலாளர்கள் யாரும் எம்.ஜி.ஆரோடு செல்லவில்லை. ஆனால், இந்த முறை, துடிப்புமிக்க மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய தலைவர்களான பொன். முத்துராமலிங்கம், செஞ்சி ராமச்சந்திரன், அ. கணேசமூர்த்தி, கண்ணப்பன், எல். கணேசன், ரத்தினராஜ், டிஏகே லக்குமணன், திருச்சி செல்வராஜ், நாகை மீனாட்சி சுந்தரம், மதுராந்தகம் ஆறுமுகம் உள்ளிட்டோர் வைகோவின் பக்கம் நின்றனர். இவர்கள் தவிர, திருச்சி மலர்மன்னன், முன்னாள் அமைச்சர் தங்கவேலு, புதுக்கோட்டை சந்திரசேகரன், கே.எஸ். ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கும் வைகோ பக்கம் நின்றனர். இந்தப் பின்னணியில் தி.மு.கவின் கட்சி, கொடி ஆகியவற்றுக்கு உரிமை கோரிய வைகோ அது நடக்காத நிலையில், 1994ஆம் ஆண்டு மே மாதம் ஆறாம் தேதி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியைத் துவங்கினார். இந்தக் காலகட்டத்தில் தமிழக அரசியலில் மிக முக்கியமான ஒரு கட்சியாக ம.தி.மு.க. பார்க்கப்பட்டது. அப்போதைய ஆளும் கட்சியான அ.தி.மு.கவை எதிர்ப்பதில் மிகப் பெரும் தீவிரத்தைக் காட்டினார் வைகோ. அ.தி.மு.க. ஆட்சியைக் கண்டித்து கன்னியாகுமரியில் இருந்து சென்னையை நோக்கி நடைபயணம் ஒன்றையும் மேற்கொண்டார் வைகோ. மதிமுகவும் பம்பரச் சின்னமும் ம.தி.மு.க. 1994இல் துவங்கப்பட்ட தருணத்தில் மயிலாப்பூர் மற்றும் பெருந்துறை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் ம.தி.மு.கவுக்கு மயிலாப்பூர் தொகுதியில் பேருந்து சின்னமும் பெருந்துறையில் பம்பரச் சின்னமும் ஒதுக்கப்பட்டது. கடந்த 1996ஆம் ஆண்டில் தேர்தல்கள் வந்தபோது, பா.ம.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜனதா தளம், திவாரி காங்கிரஸ் ஆகிய கட்சிகளை உள்ளடக்கி, தனது தலைமையில் கூட்டணியை உருவாக்க விரும்பினார் வைகோ. ஆனால், கூட்டணியின் பெயர் ம.தி.மு.க. - பா.ம.க. கூட்டணி என இருக்க வேண்டுமென்று கூறியது பா.ம.க. இதனால், அந்தக் கூட்டணி உருவாக முடியவில்லை. முடிவில், ம.தி.மு.க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜனதாதளம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்தனர். இந்தக் கூட்டணியின் சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் குடை சின்னத்தில் 24 இடங்களில் போட்டியிட்டது அக்கட்சி. சட்டமன்றத் தேர்தலில் அதே சின்னத்தில் 177 இடங்களில் போட்டியிட்டது அக்கட்சி. சட்டமன்றத் தேர்தலில் 5.7 சதவீதமும் நாடாளுமன்றத் தேர்தலில் 4.5 சதவீதமும் அக்கட்சிக்குக் கிடைத்தன. இந்தத் தருணத்தில் ஒரு நிரந்தரச் சின்னத்திற்காக முயற்சி செய்தது ம.தி.மு.க. பெருந்துறை இடைத் தேர்தலில் ம.தி.மு.க. போட்டியிட்ட பம்பரச் சின்னம் நன்றாக இருக்கிறது, அந்தச் சின்னம் கிடைத்தால் சிறப்பாக இருக்கும் என மு. கண்ணப்பன் தெரிவித்த கருத்தை ஏற்றுக்கொண்டு, அந்தச் சின்னத்தைப் பெற முயற்சிகளை மேற்கொண்டது ம.தி.மு.க. வைகோவும் கே.எஸ். ராதாகிருஷ்ணனும் டெல்லியில் தங்கியிருந்து இந்தச் சின்னத்திற்காக தேர்தல் ஆணையத்தில் தொடர்ந்து பேசி வந்தனர். ஆனால், ம.தி.மு.கவின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டிருந்ததால், ஒரே சின்னத்தை ஒதுக்குவதில் பிரச்னை இருந்தது. இதையடுத்து, ஒரு கட்சி சில தொகுதிகளுக்கு மேல் போட்டியிட்டால், ஒரே சின்னத்தை ஒதுக்கலாம் என ஆணை வெளியிடப்பட்டு, பம்பரம் சின்னம் ம.தி.மு.கவுக்கு ஒதுக்கப்பட்டதாக நினைவுகூர்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். இதற்கு அடுத்து வந்த 1998 நாடாளுமன்றத் தேர்தலிலேயே அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற ம.தி.மு.கவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதில் 3 இடங்களில் வெற்றி பெற்று ஆச்சரியமளித்தது ம.தி.மு.க. இந்தத் தேர்தலில்தான் முதன்முதலில் பம்பரம் சின்னத்தில் போட்டியிட்டது அக்கட்சி. வாக்கு சதவீதம் 6.2ஆக உயர்ந்திருந்தது. மீண்டும் திமுகவுடன் கூட்டணி பட மூலாதாரம்,GETTY IMAGES கடந்த 1998ல் தேர்வுசெய்யப்பட்ட நாடாளுமன்றம் ஓராண்டிலேயே கலைக்கப்பட்டுவிட, 1999இல் மீண்டும் தேர்தலைச் சந்தித்தது இந்தியா. அதற்குள் பல விஷயங்கள் நடந்திருந்தன. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்த அ.தி.மு.க. அதிலிருந்து வெளியேறிவிட, தி.மு.க. உள்ளே வந்தது. எல்லாக் கூட்டங்களிலும் தி.மு.கவையும் வாரிசு அரசியலையும் விமர்சித்து வைகோ பேசி வந்த நிலையில், இப்படி ஒரு கூட்டணி உருவானது. ஆனால், தான் ஏற்கெனவே இருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள்தான் தி.மு.க. வருகிறது என்பதால், பெரிய முரண்பாடு இன்றி கூட்டணி அமைந்தது. இந்த முறையும் 5 இடங்கள். அதே பம்பரச் சின்னம். வாக்கு சதவீதம் குறைந்தாலும் வெற்றி பெற்ற இடங்களின் எண்ணிக்கையில் ஒன்று அதிகரித்தது. கடந்த 2001ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கியபோது தி.மு.கவுக்கும் ம.தி.மு.கவுக்கும் இடையில் பிரச்னைகள் ஏற்பட்டன. தமிழகத்தில் செல்வாக்கில்லாத கட்சியாக இருக்கும் பா.ஜ.கவுக்கு 23 இடங்களை அளிக்கும் நிலையில், எல்லாத் தொகுதிகளிலும் செல்வாக்கு கொண்ட தங்களுக்கு 21 தொகுதிகளை மட்டும் கொடுப்பது சரியல்ல என்றார் வைகோ. இதையடுத்து தனக்கு அளிக்கப்பட்ட 23 தொகுதிகளில் இரண்டைக் குறைத்துக்கொள்ள பா.ஜ.க. முன்வந்தது. ஆனால், தாங்கள் விரும்பிய தொகுதியைத் தரவில்லை என்றார் வைகோ. முடிவில் பா.ஜ.க. போட்டியிடும் தொகுதிகள் தவிர, மற்ற தொகுதிகளில் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்தார் வைகோ. வைகோ எடுத்த மிக மோசமான அரசியல் முடிவுகளில் ஒன்றாக, இந்தத் தேர்தலில் அவர் எடுத்த முடிவை அரசியல் பார்வையாளர்கள் குறிப்பிடுகிறார்கள். காரணம், இந்தத் தேர்தலில் 211 தொகுதிகளில் போட்டியிட்ட ம.தி.மு.க., ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. ஆனால், இதைவிட மோசமான முடிவுகளை எடுக்கக் காத்திருந்தார் வைகோ. பட மூலாதாரம்,வைகோ பொடா சட்டத்தில் கைதுசெய்யப்பட்ட வைகோ மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதற்காக அவரைப் பொடா சட்டத்தில் கைதுசெய்தது அ.தி.மு.க. அரசு. இது நாடு முழுவதும் சலசலப்பை ஏற்படுத்தியது. பொடா சட்டத்தின் பிரிவுகள் எவ்வளவு கடுமையானவை எனக் காட்டுவதற்கான சின்னமாக உருவெடுத்தார் வைகோ. அவரை விடுவிக்க வேண்டுமென தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் குரல் கொடுத்தன. அதில் தி.மு.கவின் குரலும் இருந்தது. இதையடுத்து இரு கட்சிகளும் மீண்டும் நெருங்க ஆரம்பித்தன. வேலூருக்குச் சென்று வைகோவை நேரில் சென்று சந்தித்து வந்தார் தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி. 2004ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ம.தி.மு.கவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட வைகோ, சென்னை வரை ஊர்வலமாக வந்து சேரப் பல மணிநேரம் ஆனது. சென்னையில் பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற வைகோ, நான்கு தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தார். கடைசியாக சிவகாசி தொகுதியின் பெயரைச் சொல்லி நிறுத்தியதும், தொண்டர்கள் அனைவரும் 'வைகோ', 'வைகோ' என முழக்கமிட்டனர். ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் அந்தத் தொகுதியில் சிப்பிப்பாறை ரவிச்சந்திரன் என்ற இளைஞர் போட்டியிடுவதாக அறிவித்தார் வைகோ. வைகோ அரசியல் ரீதியாக எடுத்த மிக மோசமான முடிவுகளில் இதுவும் ஒன்றாகப் பார்க்கப்பட்டது. காரணம், இந்தத் தேர்தலில் நான்கு தொகுதிகளிலும் ம.தி.மு.க. வெற்றி பெற்றது. வைகோ தேர்தலில் போட்டியிட்டிருந்தால், அவரும் நாடாளுமன்றம் சென்றிருக்க முடியும். ஆனால், அந்த வாய்ப்பை வேறொருவருக்கு அளித்தார் வைகோ. 2006ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் மறுபடியும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தினார் வைகோ. அ.தி.மு.கவுடனான வைகோவின் கூட்டணி பட மூலாதாரம்,GETTY IMAGES தி.மு.க. கூட்டணியில் 35 இடங்களைக் கோரிய ம.தி.மு.கவுக்கு 22 இடங்களைக் கொடுக்க முன்வந்தது தி.மு.க. இதையடுத்து, திடீரென அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்தார் வைகோ. சில ஆண்டுகளுக்கு முன்பு அவரை பொடா சட்டத்தின் கீழ் தமிழக அரசு சிறையில் அடைத்தபோது மிகக் கடுமையான விமர்சனங்களை ஜெயலலிதா மீது அவர் முன்வைத்திருந்தார். இந்த நிலையில், வைகோவின் முடிவு பலரையும் அதிரவைத்தது. இந்தக் கூட்டணியில் 35 இடங்களில் போட்டியிட்டு வெறும் 6 இடங்களை மட்டுமே அக்கட்சியால் வெல்ல முடிந்தது. 2009 நாடாளுமன்றத் தேர்தலிலும் அ.தி.மு.கவுடனான கூட்டணி தொடர்ந்த நிலையில், ஒரு இடம் மட்டுமே அக்கட்சிக்குக் கிடைத்தது. கடந்த 2011ஆம் ஆண்டு தேர்தல் நெருங்கியபோதும் அ.தி.மு.க. கூட்டணியிலேயே ம.தி.மு.க. இடம்பெற்றிருந்தது. ஆனால், பேச்சு வார்த்தைகள் நடைபெற்றபோது, ம.தி.மு.க. குறைந்தது 21 தொகுதிகளாவது எதிர்பார்த்தது. ஆனால், பேச்சுவார்த்தையை 6 தொகுதிகளில் இருந்து துவங்கியது அ.தி.மு.க. இதனால், கூட்டணியில் இருந்து வெளியேறி, தனித்துப் போட்டியிடத் தயாரானது ம.தி.மு.க. இந்த நிலையில்தான் ஒரு அதிரடியான முடிவை எடுத்தார் வைகோ. 2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிப்பதாக ம.தி.மு.க. அறிவித்தது. ம.தி.மு.க. எடுத்த முடிவுகளிலேயே மிக மோசமான அரசியல் முடிவாக இந்த முடிவே பார்க்கப்படுகிறது. ம.தி.மு.கவின் பின்னடைவுகளுக்குக் காரணம் என்ன? ம.தி.மு.கவின் தொடர் பின்னடைவுகளுக்குக் காரணம், வைகோவின் முடிவுகள்தான் என்கிறார் அக்கட்சியின் ஆரம்ப காலத் தலைவர்களில் ஒருவரான கே.எஸ். ராதாகிருஷ்ணன். "வைகோ ஒரு விஷயத்தை அதைச் செய்ய வேண்டிய காலத்தில் செய்யவில்லை. ம.தி.மு.க. தற்போது அடைந்திருக்கும் பின்னடைவுகளுக்கு இதுவே காரணம்," என்று கூறும் கே.எஸ். ராதாகிருஷ்ணன், கூட்டணி தொடர்பாக அவர் எடுத்த மூன்று முடிவுகள் மிக மோசமாக இருந்ததாகச் சுட்டிக்காட்டுகிறார். கடந்த 2001ஆம் ஆண்டில், தி.மு.க. கூட்டணியிலேயே தொடர்ந்திருந்தால் சில இடங்களைப் பெற்றிருக்கக்கூடிய நிலையில், தனித்துப் போட்டியிட்டு எல்லாத் தொகுதிகளிலும் தோல்வியடைந்து, கட்சி பலவீனமாக இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தினார் வைகோ என்கிறார் ராதாகிருஷ்ணன். அடுத்ததாக 2006ஆம் ஆண்டு தேர்தலில், தி.மு.க. கூட்டணியில் இருந்து திடீரென அ.தி.மு.க. கூட்டணிக்கு மாறியது கட்சி மேலிருந்த நம்பகத் தன்மையை உடைத்தது என்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். "அப்போது திருச்சியில் மிகப் பெரிய தி.மு.க. மாநாடு நடந்தது. அதில் வைகோவின் கட்-அவுட்டும் வைக்கப்பட்டிருந்தது. அந்த மாநாட்டிற்கு வருவதாகச் சொன்ன வைகோ, திடீரென ஜெயலலிதாவை சந்தித்தார். அன்றைய தினமே கூட்டணி அறிவிக்கப்பட்டது. எப்படி ஒரு சந்திப்பில் கூட்டணி, இடங்கள் ஆகியவை முடிவாகும்? ஆகவே, முன்பே பேச்சுவார்த்தைகள் நடந்திருக்க வேண்டும் எனப் பலரும் கருதினர். இது அக்கட்சியின் மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கியது," என்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். வைகோ 2006இல் சரியான முடிவெடுத்திருந்தால் ம.தி.மு.க. அந்தத் தேர்தலில் சுமார் 15 இடங்களைப் பெற்றிருக்கும். கட்சி வலுவடைந்திருக்கும் என்கிறார் மூத்த பத்திரிகையாளரான குபேந்திரன். "வைகோ எப்போதுமே சரியான நேரத்தில் தவறான முடிவுகளை எடுப்பார் என்பதற்கு அந்தத் தேர்தல் உதாரணமாகிவிட்டது. அப்போது ஆரம்பித்த தவறு, சமீபகாலம் வரை தொடர்ந்தது. இதன் உச்சகட்டமாக 2011இல் தேர்தலையே புறக்கணிக்க வேண்டிய நிலை வந்தது," என்கிறார் குபேந்திரன். தி.மு.கவில் இருந்து வைகோ வெளியேறியபோது நொச்சிப்பட்டு தண்டபாணி, பாலன், இடிமழை உதயன், வீரப்பன், ஜஹாங்கீர் உள்ளிட்ட ஆறு பேர் தீக்குளித்தனர். ஆனால், வைகோ எடுத்த தவறான முடிவுகளால் அவர்கள் தியாகம் முழுவதும் வீணாகிவிட்டது என்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். தற்போது வைகோ உடல்ரீதியாக தளர்ந்திருக்கும் நிலையில், அவரது மகன் துரை வைகோ கட்சியை முன்னெடுத்துச் செல்கிறார். அவர் எடுக்கவிருக்கும் முக்கிய முடிவுகளே இனி கட்சியின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதாக அமையும். ம.தி.மு.க தொடர் பின்னடைவுகளை சந்திப்பது ஏன்? வைகோ எடுத்த முடிவுகள் எப்படி பாதித்தன? - BBC News தமிழ்
    • தேர்தல் வருகின்றது என்பதற்காகவா.............🙃.........சரத் வீரசேகர உட்பட இன்னும் பலர் தொடர்ச்சியாக இப்படியான கருத்துகளை சொல்லிக் கொண்டே இருக்கின்றார்களே. நடவடிக்கை எடுக்கப்படுவது இதுவே முதல் முறை என்று நினைக்கின்றேன். தேர்தல் முடிந்த பின், இவருக்கு ஒரு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கும் திட்டமும் இருக்கலாம். அமெரிக்கா, இந்தியா, இலங்கை - இந்த மூன்று இடங்களில் இருந்து வரும் அரசியல் செய்திகள் ஒரே மாதிரியே இருக்கின்றன......😀
    • ஸ்கன்டினேவிய நாடுகளில் மத ரீதியாக பதற்றத்தை ஏற்படுத்தும் புட்டினின் முயற்சியாக இருக்குமோ?  😁
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.