Jump to content

தமிழரசு கட்சி சூழ்ச்சிகளை வென்று மீள் எழுச்சி பெறும் மகன் அமுதன் மீது வீண்பழி என்கிறார் மாவை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசு கட்சி சூழ்ச்சிகளை வென்று மீள் எழுச்சி பெறும் மகன் அமுதன் மீது வீண்பழி என்கிறார் மாவை

(ஆர்.ராம்)

இலங்கை தமிழரசுக்கட்சி உள்ளக, வெளியக சூழ்ச்சிகள் அனைத்தையும் வெற்றி கொண்டு மக்கள் பலத்துடன் மீள் எழுச்சி பெறும் என்று அதன் தலைவர் மாவை.சோ.சோதிராஜா தெரிவித்துள்ளார். 

தனது மகன் கலைஅமுதன் மீது வீணான பழிகள் சுமத்தப்பட்டு வருவதாக தெரிவித்த அவர், அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் முன்வைக்கப்பட்டும் அனைத்துக் குற்றச்சாட்டுக்களையும் நிராகரிப்பதாகவும் தெரிவித்தார்.

தமிழரசுக்கட்சிக்குள் ஏற்பட்டுள்ள குழப்ப நிலைமைகள் தொடர்பிலும், அடுத்தகட்டச் செயற்பாடுகள் தொடர்பிலும் கருத்து வெளியிடும்போதே மாவை சேனாதிராஜா மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில், 

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு மறுநாளே ஊடகவியலாளர் சந்திப்பினை நடத்தியிருந்த சுமந்திரன் கட்சியின் பின்னடைவுகளுக்கு தலைவராக நானும், பொதுச்செயலாளரும் பொறுப்பு என்ற தொனிப்பட பகிரங்க வெளியில் கருத்து வெளியிட்டிருந்தார். அத்துடன் மற்றுமொரு உறுப்பினரான சிறிதரன் கட்சியின் தலைமைப்பொறுப்பினை ஏற்பதற்கு தயார் என்றும் கூறியிருந்தார். 

இவை அனைத்துமே கட்சிக்குள் கலந்துரையாடப்பட வேண்டிய விடயங்களாகின்றன. அதுமட்டுமன்றி கட்சியின் தலைமைப்பதவியை மத்திய செயற்குழுவும், பொதுச்சபையுமே தீர்மானிக்க வேண்டும். அந்த விடயங்களை நான் மேற்படி இரு உறுப்பினர்களுக்கும் தெரிவித்துள்ளேன். அத்துடன் சுமந்திரன் தன்னை அரசியலுக்குள் நானே அழைத்துவந்ததாகவும் மேலும் பல விடயங்களையும் ஊடகங்கள் ஊடாக தெரிவித்துள்ளார். அதுபோன்று சிறிதரனும் கட்சியின் தலைமை மாற்றப்பட வேண்டிய அவசியமில்லை என்று கூறியிருக்கின்றார். 

எது எவ்வாறு இருந்தாலும், எமது கட்சியானது நீண்ட வரலாற்றினைக் கொண்டது. தந்தை செல்வா கட்சியின் தலைமைப்பொறுப்பிலிருந்தபோது ஒருதடவை தேர்தலில் தோல்வி கண்டார். அண்ணன் அமிர்தலிங்கம் அவ்வாறு ஒருதடவை தோல்வி கண்டார். ஆனால் பின்னரான நாட்களில் பின்னடைவுக்கான காரணங்களை கண்டறிந்தார். கட்சியை மறுசீரமைத்தார். மக்களையும் நல்லெண்ண சக்திகளையும் ஒருங்கிணைத்து கட்சியை கீழ் மட்டத்திலிருந்து கட்டியெழுப்பினார். 

அவர்களின் பாசறையிலிருந்து வளர்ந்த என்னாலும் அந்தப்பணிகளை முன்னெடுக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. அத்துடன் தற்போதைய சூழலில் தென்னிலங்கையின் அரசியல் சூழலை கருத்திற்கொண்டு எமது அனுகுமுறைகளை மாற்றியமைக்க வேண்டியுள்ளது. 

புதிய உபாயங்களை வகுத்து விடுதலைக்கான பயணத்தினை முன்னெடுக்க வேண்டியுள்ளது. ஆகவே எமது கட்சியை பலமான கட்டமைப்பாகவும்,அதேநேரம் தமிழ்த் தேசியப் பரப்பில் ஒருமித்து இயங்ககூடிய அனைத்து தரப்புக்களுடனும் இணைந்து வலுவான தமிழ்த் தேசிய தரப்பாக செயற்பட வேண்டியுள்ளது. அதற்குரிய நடவடிக்கைளை நான் முன்னெடுத்து வருகின்றேன். ஆகவே தமிழரசுக்கட்சி நிச்சயமாக மீண்டும் எழுச்சி பெறும். அனைத்து சூழ்ச்சிகளையும் வெற்றிகொள்ளும் என்றார். 

அமுதன் மீதான குற்றச்சாட்டு

இதேவேளை, புதல்வாரன கலைஅமுதன் மற்றும் கனகசபாபதி ஆகியோர் பிரசாரத்தில் இடம்பெற்றபோது நடந்து கொண்ட முறைமை தொடர்பில் எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடர்பில் கருத்து வெளியிட்ட மாவை, என்னிடத்தில் கலைஅமுதன் சம்பந்தமான முறைப்பாடொன்று கிடைத்தது. அவர் என்னை மட்டும் முன்னிலைப்படுத்தி வாக்கு கோருகின்றார் என்பதே அதுவாகும். அந்தச்சந்தர்ப்பத்தில் உடனடியாக நான் அவரை அழைத்து, நடுநிலையாக செயற்படுமாறு அறிவுரை வழங்கியிருந்தேன். அத்துடன் அவ்விடயம் முடிவுற்றது. 

இவ்வாறிருக்க அதன் பின்னர் அவர் மீது திட்டமிட்டே குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. அவை அனைத்தும் அரசியல் பின்னணியைக் கொண்டவை. ஆகவே அவ்விதமான வீண்பழிகளை நான் முழுமையாக நிராகரிக்கின்றேன் என்றார். 

அரசியல் குழு

நாளை சனிக்கிழமை எமது அரசியல் குழு கூட்டம் இடம்பெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் நாம் அனைத்து விடயங்கள் தொடர்பிலும் கலந்தாராயவுள்ளதோடு விரைவில் மத்திய குழு கூட்டமும் நடைபெறவுள்ளது என்றார். 
 

 

https://www.virakesari.lk/article/88085

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீண்பழியா 😂😂

யாழ் மத்திய கல்லூரி வளாகத்தில் நின்று கத்திக் குழறி, கூக்காட்டி, குறிப்பாக சுமந்திரனுக்கெதிராக திட்டமிட்டு அடாவடித்தனங்களை முன்னின்று நடாத்தியதே அமுதனும் அவர் குழுவினரும்தானே. ☹️

இவருடைய செய்கைகளை நோக்கும்போது, உதயநிதி ஸ்ராலின் போலவே எனக்கு தென்பட்டார். 😏

மாவை இன்னமும் 1977ம் ஆண்டிலிருந்து இருந்து வ்ளியே வரவில்லை போலுள்ளது. 😜😜

Link to comment
Share on other sites

கஜேந்திரனுடன் பேச்சுவார்த்தை நடக்குதாம். விரைவில் கட்சி தாவலை எதிர்பார்க்கலாம். இதை எதிர்க்கட்சியில் இருந்து அரசாங்கத்துக்கு தாவினார் என்றா, அல்லது அரச கட்சியில் இருந்து எதிர்கட்சிக்கு தாவினார் என்று கூறுவதா என்று தெரியவில்லை.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அடுத்த அடுத்த வரிகளில் எப்படி இப்படி 180 பாகை எதிராக எழுத முடிகிறது? 👆🏼👇 2016 இல் இறங்கினார் சரி.  2021 வரை அனுபவம் ஜனநாயகம் செயல் அளவில் இல்லை என சொன்னபின்னும் ஏன் அதையே 2024 இல் செய்கிறார்? The definition of  insanity is doing the same thing again and gain and expecting a different outcome. அண்ணன் என்ன லூசா? அல்லது கமிசன் வாங்கி கொண்டு வாக்கை பிரிக்க இப்படி செய்கிறாரா? நான் என்ன ரோ எஜெண்டா அல்லது பிஜேபி பி டீமா? எனக்கு எப்படி தெரியவரும்? உங்களை சவுத் புளொக் கூப்பிட்டு காதுக்குள் ஐபி டைரக்டர் சொல்லி இருப்பார் என நினைக்கிறேன்? மாற்றுக்கருத்து ஏதும் இல்லை. நேற்று டவுனிங் ஸ்டிரீட் பக்கம் சும்மா வாக்கிங் போனேன். உங்களை பற்றி இந்த வகையில்தான் பேசி கொண்டார்கள். நான் கேள்விபட்ட வரையில் டிரம்ப் தான் வென்றதாம்….நீங்கள் சொல்லி விட்டீர்கள் என்பதால், தேர்தல் முடிவை குளறுபடி செய்து மாற்றினார்களாம்.
    • உங்க‌ட‌ அறிவுக்கு நீங்க‌ள் இப்ப‌டி எழுதுறீங்க‌ள் அவ‌ர்க‌ள் ஜ‌ன‌நாய‌க‌த்தின் மீது ந‌ம்பிக்கை இருந்த‌ ப‌டியால் தான் அர‌சிய‌லில் இற‌ங்கின‌வை இந்தியாவில் ஜ‌ன‌நாய‌க‌ம் என்ற‌து சொல் அள‌வில் தான் இருக்கு செய‌லில் இல்லை................ 2023 டெல்லிக்கு உள‌வுத்துறை கொடுத்த‌ த‌க‌வ‌ல் உங்க‌ளுக்கு வேணும் என்றால் தெரியாம‌ இருக்க‌லாம் இது ப‌ல‌ருக்கு போன‌ வ‌ருட‌மே தெரிந்த‌ விடைய‌ம்.........................நீங்க‌ள் யாழில் கிறுக்கி விளையாட‌ தான் ச‌ரியான‌ ந‌ப‌ர்.............................என‌க்கும் த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் அமெரிக்கா அர‌சிய‌ல் டென்மார்க் அர‌சிய‌ல் ப‌ற்றி ந‌ங்கு தெரியும் ஆனால் நான் பெரிதாக‌ அல‌ட்டி கொள்வ‌து கிடையாது.................   ந‌ண்ப‌ர் எப்போதும் த‌மிழ‌ன் ம‌ற்றும் விவ‌சாயிவிக் அண்ணா இவ‌ர்க‌ள் இருவ‌ரும் 2020ம் ஆண்டு ர‌ம் தான் மீண்டும் ஆட்சிக்கு வ‌ருவார் என்று சொன்ன‌வை  நான் அதை ம‌றுத்து பைட‌ன் தான் ஆட்சிக்கு வ‌ருவார் என்று சொன்னேன் அதே போல் நான் சொன்ன‌ பைட‌ன் அமெரிக்கன் ஜனாதிபதி ஆனார்😏............................ ஆர‌ம்ப‌த்தில் தாங்க‌ளும் வீர‌ர்க‌ள் தான் என்று வார்த்தைய‌ வீடுவின‌ம் ஒரு சில‌ர் அடிக்கும் போது  அடிக்கு மேல் அடி விழுந்தால் ப‌தில் இல்லாம‌ கோழை போல் த‌ங்க‌ளை தாங்க‌ளே சித்த‌ரிப்பின‌ம்🤣😁😂..............................
    • இந்த மாத முடிவில் சில நாடுகளின் நரித்தனத்தாலும், சுயநலத்தாலும் இரு நாடுகள் அணு ஆயுதங்களால் பலமாக தாக்கபட போகின்றன. ஜீசசும் வருகின்றார் என்ற செய்தும் உலாவுகிறது.
    • நான் யாழில் எழுத தொடங்கியது 2013. அதுதான் உளவுதுறை பிஜேபி கைப்பாவை ஆச்சே? அதேபோல் இப்படி சொன்ன தேர்தல் ஆணையம் மீது ஏன் சீமான் வழக்கு போடவில்லை? நம்ப வேண்டிய தேவை இல்லை. என் கருத்து அது. ஆனால் தேர்தல் ஆணையம் இப்படி ஒரு விடயத்தை சீமானிடம் சொல்லாது. எந்த அதிகாரியாவது மேலிட பிரசரால் இப்படி செய்கிறோம் என சீமானிடமே வெளிப்படையாக சொல்வாரா? மிகவும் சின்னபிள்ளைதனமாக சீமான் கதை பின்னுகிறார். நம்ப ஆள் இருக்கு என்ற தைரியத்தில். சீமான் சொல்வது உண்மை எனில் சீமான் வழக்கு போட்டிருக்க வேண்டும்.  போடமாட்டார் ஏன் என்றால் இது சும்மா….லுலுலுலா கதை. இந்த 😎 இமோஜியை பாவிக்காமலாவது விட்டிருக்கலாம். திருடப்போகும் இடத்தில் சிக்னேச்சர் வைத்தது போல் உள்ளது. 🤣🤣🙏
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.