Jump to content

வீரவன்சவின் மனைவிக்கு ‘கள்ள பாஸ்போர்ட்’ தயாரித்தவர் அமைச்சுக்குச் செயலாளராகிறார்


Recommended Posts

வீரவன்சவின் மனைவிக்கு ‘கள்ள பாஸ்போர்ட்’ தயாரித்தவர் அமைச்சுக்குச் செயலாளராகிறார்

ஆகஸ்ட் 14, 2020: மனைவி சஷி யிற்கு பத்திரங்களை மோசடி செய்ததன் மூலம் ‘கள்ள பாஸ்போர்ட்’ தயாரித்ததாக நீதிமன்றத்தில் ஒத்துக்கொண்ட, குடிவரவு-குடியகல்வுப் பணிப்பாளர் சூளானந்த பெரேராவைத் தனது அமைச்சின் செயலாளராக்கியிருக்கிறார் அமைச்சர் வீரவன்ச.

தனது மனைவிக்கு ராஜதந்திரிகளுக்கு வழங்கும் விசேட கடவுச்சீட்டொன்றை வழங்கும்படி வீரவன்ச கேட்டிருந்தார் என்றும், அதற்கான விண்ணப்பத்தில் மனைவி சஷி தவறான பிறப்புத் திகதியை இட்டிருக்கிறார் எனத் தெரிந்தும் தான் அவ்வேண்டுகோளை நிறைவேற்றியதாகவும் பெரேரா முன்னர் வாக்குமூலம் அளித்திருந்தார். வழக்கு இப்போது நீதிமன்ற விசாரணைக்குச் செல்கிறது.

இது தொடர்பாக பெரேரா, திருமதி வீரவன்சவைக் குற்ற விசாரணைப் பிரிவிற்கு முறைப்பாடு செய்திருக்கவேண்டுமெனினும் தான் மனிதாபிமான காரணங்களுக்காக அப்படிச் செய்யவில்லை என நீதிமன்றத்துக்குத் தெரிவித்துள்ளார்.

இந் நிலையில், குற்றம்சாட்டப்பட்ட மனைவிக்கு உதவி செய்த ஒருவரைத் தனது அமைச்சின் செயலாளாராக்குவது எப்படி என அமைச்சர் வீரவன்ச மீது கேள்விகள் எழுந்துள்ளன.

https://marumoli.com/வீரவன்சவின்-மனைவிக்கு-க/?fbclid=IwAR1f4gaPuW1VZQ1NAPwo9leQ79iFZAlIYjh9GvSaSltSNZGmga2FGAJN5sY

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, nunavilan said:

தனது மனைவிக்கு ராஜதந்திரிகளுக்கு வழங்கும் விசேட கடவுச்சீட்டொன்றை வழங்கும்படி வீரவன்ச கேட்டிருந்தார் என்றும், அதற்கான விண்ணப்பத்தில் மனைவி சஷி தவறான பிறப்புத் திகதியை இட்டிருக்கிறார் எனத் தெரிந்தும் தான் அவ்வேண்டுகோளை நிறைவேற்றியதாகவும் பெரேரா முன்னர் வாக்குமூலம் அளித்திருந்தார். வழக்கு இப்போது நீதிமன்ற விசாரணைக்குச் செல்கிறது.

கட்டாய வாக்கு மூலமாக இருந்திருக்குமோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில் என்ன ஆச்சரியம். 5 ஆண்டுகளுக்கு முன்னர் மிகக் கொடியோர் என்று ஆட்சியில் இருந்து அகற்றிய அதே கும்பல் மீண்டும் மிகப் பலத்துடன் ஆட்சிப்பீடம் ஏற்றப்பட்டிருக்கும் நிலையில் இதென்ன.. இதனை விடப் பலமடங்கு மோசமான நிகழ்வுகளை பார்க்கப் போகிறோம்.

குறிப்பாக.. 13 வது  சரத்து.. 19 வது சரத்து எல்லாமே காலியாகப் போகிறதாம். 20 வது சரத்தென்று முழு அதிகாரங்களும் சிங்கள சனாதிபதியிடம் குவிகிற மாதிரி ஒன்று வரப்போகிறது.

ஜே ஆருக்கு மூன்றில் இரண்டு கொடுத்து சொறீலங்காவை நாசப்படுத்தினதிற்கு பல மடங்கு மேலதிகமாக ஒற்றைக் குடும்ப ஆட்சி கொடுங்கோல் மன்னராட்சியாக மாறப் போகிறது.

எம்மவர்கள் இன்னும் அபிவிருத்திக் கனவில் இருக்கினம். உரிமைகள் அற்ற அபிவிருத்தி என்பது.. அடைக்கப்பட்ட சிறைக்குள் சிக்கன் புரியாணி கொடுப்பது போன்றது... மிக விரைவில் அது சிக்கன் புரியாணியாக அல்ல.. கல்லுச் சோறாகவும் மாறப் போகிறது. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
    • இல்லை ச‌கோ வீர‌ப்ப‌னே உள்ள‌தை ஒத்து கொண்டார் தன‌க்கு கிடைச்ச‌ காசை த‌ன் ஊர் ம‌க்க‌ளுக்கே கொடுத்து விட்டேன் ஏதோ 9ல‌ச்ச‌ம் அப்ப‌டியா தான் நான் பார்த்த‌ காணொளியில் என் காதுக்கு கேட்ட‌து..............அந்த‌ ம‌னுஷ‌ன் கோடி கோடியா கொள்ளை அடிக்க‌வும் இல்லை சிறு தொகை கிடைச்சா கூட‌ அவ‌ரின் சொந்த‌ ஊர் ம‌க்க‌ளுக்கு அது போய் சேருமாம்.................. ......................அண்ண‌ன் சீமான் சொன்ன‌து போல் வீர‌ப்ப‌ன் கொள்ளைக் கார‌ன் என்றால் ஜெய‌ல‌லிதாவும் க‌ருணாநிதியும் திருடாத‌ நேர்மையாள‌ர்க‌ளா என்று ஜெய‌ல‌லிதாவின் ஆட்சி கால‌த்திலே வெளிப்ப‌டையாய் பேசின‌வ‌ர் 2012 அல்ல‌து 2013 இந்த‌ கால‌ப் ப‌குதியில்.................. என‌க்கு பெரும் ம‌கிழ்ச்சி வீர‌ப்ப‌ன் ம‌க‌ள அண்ண‌ன் சீமான் வேட்பாள‌ரா.........................
    • விவசாயியின் குளிர்சாதனப் பெட்டி .......!   😁
    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது . இப்படி இருக்கையில் சிங்களத்தில் இருந்த குரங்கு கூட தமிழர்களை பார்த்து இனவாதம் கக்கும் .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.