Jump to content

முன்னாள் போராளிகளை இணைத்து பயங்கரவாதத்தை தலைதூக்கச் செய்ய புலம்பெயர் தரப்பு முயற்சி- பாதுகாப்புச் செயலாளர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, Robinson cruso said:

நான் நினைக்கவில்லை அது ஒரு இலகுவான காரியமாக இருக்குமென்று. இந்திரா அம்மையாரின் காலத்தில் அது வழங்கப்பட்டு  இலங்கையுடன் இணைக்கப்பட்டு விட்ட்து. அதை திருப்பி கேட்பதட்கு சீனாவை கரணம் காடட முடியாது. பொருளாதார ரீதியாக இலங்கை உதவி செய்யவில்லை, அல்லது இந்தியாவை அழைத்தபோது அவர்கள் முதலீடு செய்யவில்லை என்று கூறுகிறார்கள்.

தீவுகளை வைத்து தான் பிரச்சனையை உருவாக்கின்றனர் தற்பொழுது.... எல்லை கண்கானிப்பு என்று தொடங்கி எதாவது செய்வார்கள் ..இந்தியா.தாய்வானுக்கு குரல் கொடுக்கின்றது...சீனா  வியட்னாமுக்கும்,ஜப்பானுக்கும் சொந்தமான தீவுகளை தனதாக்க பல இராணுவ முயற்சிகளை செய்கின்றது ....எதுவும்  நடக்கலாம்

Link to comment
Share on other sites

  • Replies 152
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஊரில் பிறந்து ,அங்கேயே படித்து விட்டு வெளிநாட்டுக்கு வந்து விட்டு அங்கத்தைய கடவுசீட்டு எடுத்த பிறகு  தேசியம் என்று  சொல்லிக் கொண்டு இருப்பது இலகு ...காரணம் இலங்கையரசை எந்த விதத்திலும் நாங்கள் எதிர்பாத்து காத்து இருக்கவில்லை.

அங்கே படித்து,அங்கேயே வேலை செய்ப்பவர்களது நிலைமை வேறு ...அவர்கள் அங்கேயே இருக்கிறார்கள் ...அரசின் சட்ட ,திட்டங்களுக்கு கட்டுப்பட்டேயாகணும்.

ஒன்றிணைந்த இலங்கைக்குள் ஒற்றுமையாய் வாழ்வது என்பது சிங்களவர்களுக்கு அடிமையாய் வாழணும் என்று இல்லை ...தமிழர்கள் தங்கள் தகுதிகளை எல்லாத் துறைகளிலும் வளர்த்து கொண்டு ,எல்லாத்துக்குள்ளும் ஊடுருவ வேண்டும்...பல்கலையில் இருந்து பாராளுமன்றம் வரை ...அவர்கள் தமிழில் தான் படிக்கிறார்கள் ,கதைக்கிறார்கள் பார்லிமென்டில் கூட .


ஈழம் கிடைத்தால் எல்லோருக்கும் தான் சந்தோசம் ...ஆனால் வெளிநாட்டில் இருந்து கொண்டு ஈழம் ஈழம் என்று கத்தினால்    மட்டும் ஈழம் கிடைத்து விடாது ...இங்கேயிருந்து கொண்டு தேசியம் என்று கதைப்பவர்கள் எப்படி அங்கேயிருப்பவர்கள் செயற்பட வேண்டும் என்று நினைக்கிறார்கள் ?

மக்களை திரட்டி  ஆயுதக் குழுக்களை அமைத்து போராட சொல்கிறார்களா அல்லது வேறு வழி ஏதும் வைத்து இருக்கிறார்களா ?....எழுதினால் எனக்கும் அறிந்து கொள்ள முடியும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Robinson cruso said:

முள்ளிவாய்க்காலில் ஈழம் எடுப்பதாக சத்தியப்பிரமாணம், கொழும்பில் ஒற்றையாட்ச்யில் இருப்போம் என சத்தியப்பிரமாணம்.

முள்ளிவாய்க்காலில் சத்தியப்பிரமாணம் என்பது அப்பட்டமானமான ஏமாற்று.

1 hour ago, கிருபன் said:

தமிழனாக மொழி மீது பற்றுக்கொண்டு வாழ்வது.    தெரிந்த மொழியைக்கொண்டு சகல கருமங்களையும் ஆற்றுவதோடு,  வேலைவாய்ப்புக்களிலும், பொருளாதாரத்திலும் சரிசமமான வாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்வது.

இந்த நியாயவாதிகளும் தமிழ் தேசியம் பேசுவோர்களும் எதிர் துருவங்கள்.
இலங்கையைவிட வெளிநாட்டிலும் புலி புகழ் தமிழ் தேசியம் மோட்டு சிங்களவன் என்று பேசிக்கொண்டு சிங்களவருடன் கூடிக்குலாவி திருமண சம்மந்தம் பார்ட்டி என்று திரியும் தமிழர்கள் அதிகம்.

16 minutes ago, ரதி said:

அங்கே படித்து,அங்கேயே வேலை செய்ப்பவர்களது நிலைமை வேறு ...அவர்கள் அங்கேயே இருக்கிறார்கள் ...அரசின் சட்ட ,திட்டங்களுக்கு கட்டுப்பட்டேயாகணும்.

👍

வெளிநாட்டில்  உள்ள தமிழ் தேசியவாதிகள் வெளிநாட்டு அரசின் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்படுவார்களாம்
இலங்கையில் உள்ள தமிழர்கள் அரசின் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட கூடாதாம்

 

Link to comment
Share on other sites

1 hour ago, ரஞ்சித் said:

நீங்கள் வாழும் கனவுலகுதான் போலித்தேசியம். உண்மையில் அப்படியொன்று இருப்பதாக நான் நினைக்கவில்லை. சொந்த லாபங்களுக்காக உங்களின் இன அடையாளத்தினை அழித்து, எமதினத்தினை அழித்தவனுடன் சங்கமமாகப் பார்க்கிறீர்கள் பாருங்கள், அதுதான் போலித்தேசியம். 

எனது கடவுச்சீட்டில் இலங்கையன் என்று இல்லை. இன்று இலங்கையென்றால் சிங்கள பெளத்தர்களுக்குச் சொந்தமான நாடு மட்டும்தான், ஏனையவர்கள் விரும்பினால் வாழலாம் என்ற நிலை வந்துவிட்டபின்னர் என்னை இலங்கையனாக அடையாளப்படுத்தவேண்டிய தேவை இருப்பதாக நான் நினைக்கவில்லை.  ஏனென்றால், எனது இனத்தில் லட்சக்கணக்கானவர்களைக் கொன்ற சிங்கள இனவாதிகளிடமிருந்து நான் எதனையும் எதிர்பார்க்கவில்லை. 

தமிழ்த்தேசியம் இன்று கேட்கும் எம்மீதான அட்டூழியங்களுக்கான நீதியும், உண்மையான அரசியல் தீர்வும், எமது தாயகத்தில் நாமே எம்மை ஆளும் உரிமையும் போலியானவை அல்ல. இவற்றின் அடிப்படையிலேயே தமிழரின் அரசியல் இதுவரையில் நடந்துவருகிறது, இனிமேலும் அப்படித்தான். இவற்றினைத் தவிர்த்து, இவற்றினைப் புறந்தள்ளி, ஏளனம் செய்து நடத்தப்படும் அரசியல் தமிழினத்தின் இருப்பிற்கெதிரான சிங்கள பெளத்த அரசியல்தான். இன்று நீங்கள் ஆதரிப்பதும் அதனைத்தான். ஆனால், அதனைச் சொல்லமுடியாமல் நியாயமான தமிழர்களின் அரசியலைப் போலியென்று ஏளனம் செய்கிறீர்கள்.

சொந்த இனத்தினை விற்று வயிறு வளர்க்கும் உங்களை நீங்கள் தாராளமாக இலங்கையன் என்றோ அல்லது "போலித் தேசியவாதி" என்றோ அழைத்துக்கொள்ளலாம், அதில் தவறேதுமில்லை. அந்தத் தகுதிக்கு நீங்கள் முற்றிலும் உரித்துடையவர்தான்.  நேரத்திற்கொருமுறை பெயர்களையும், கொள்கைகளையும் மாற்றி வலம்வரும் உங்களின் தேசியம் போலியானதென்பதில் மாற்றுக்கருத்தில்லை. 

நீங்கள் உங்கள் நாடடை பார்த்துக்கொள்ளுங்கள். நாங்கள் எங்கள் நாடடை பார்த்துக்கொள்ளுகிறோம். உங்களுக்கும் தமிழ் தேசியத்துக்கு இனி ஏதும் தொடர்பு இருக்குமோ தெரியவில்லை. நிச்சயமாக போலி தமிழ் தேசியத்துடன் வைத்திருப்பீர்கள். அப்படியே தொடருங்கள்.

18 minutes ago, ரதி said:

ஊரில் பிறந்து ,அங்கேயே படித்து விட்டு வெளிநாட்டுக்கு வந்து விட்டு அங்கத்தைய கடவுசீட்டு எடுத்த பிறகு  தேசியம் என்று  சொல்லிக் கொண்டு இருப்பது இலகு ...காரணம் இலங்கையரசை எந்த விதத்திலும் நாங்கள் எதிர்பாத்து காத்து இருக்கவில்லை.

அங்கே படித்து,அங்கேயே வேலை செய்ப்பவர்களது நிலைமை வேறு ...அவர்கள் அங்கேயே இருக்கிறார்கள் ...அரசின் சட்ட ,திட்டங்களுக்கு கட்டுப்பட்டேயாகணும்.

ஒன்றிணைந்த இலங்கைக்குள் ஒற்றுமையாய் வாழ்வது என்பது சிங்களவர்களுக்கு அடிமையாய் வாழணும் என்று இல்லை ...தமிழர்கள் தங்கள் தகுதிகளை எல்லாத் துறைகளிலும் வளர்த்து கொண்டு ,எல்லாத்துக்குள்ளும் ஊடுருவ வேண்டும்...பல்கலையில் இருந்து பாராளுமன்றம் வரை ...அவர்கள் தமிழில் தான் படிக்கிறார்கள் ,கதைக்கிறார்கள் பார்லிமென்டில் கூட .


ஈழம் கிடைத்தால் எல்லோருக்கும் தான் சந்தோசம் ...ஆனால் வெளிநாட்டில் இருந்து கொண்டு ஈழம் ஈழம் என்று கத்தினால்    மட்டும் ஈழம் கிடைத்து விடாது ...இங்கேயிருந்து கொண்டு தேசியம் என்று கதைப்பவர்கள் எப்படி அங்கேயிருப்பவர்கள் செயற்பட வேண்டும் என்று நினைக்கிறார்கள் ?

மக்களை திரட்டி  ஆயுதக் குழுக்களை அமைத்து போராட சொல்கிறார்களா அல்லது வேறு வழி ஏதும் வைத்து இருக்கிறார்களா ?....எழுதினால் எனக்கும் அறிந்து கொள்ள முடியும் .

சரியாக சொன்னீர்கள் ரதி. இதுக்குமேலயும் விளங்காவிடடாள், அவர்கள் தூங்கவில்லை தூங்குவது போல நடிக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

3 hours ago, ரஞ்சித் said:

ஜூட், கற்பகதரு, ஆகியோரின் கருத்துக்களும் உங்களது கருத்தும், அதாவது சிங்களத்துடன் ஐக்கியப்படுவது, உங்களின் பாஷையில் சொல்வதானால் "இலங்கையனாக"( இலங்கையன் என்பது பெளத்த சிங்களவர்களை மட்டுமே குறிக்கிறதென்பது தெரிந்தும்கூட) அச்சொட்டாக அப்படியே இருப்பது ஏனென்று எப்போதாவது சிந்தித்திருக்கிறீர்களா? ஏன் கேட்கிறேன் என்றால், தமிழர்கள் தமது அடையாளத்தினை இழந்து சிங்கள இனத்தினுள் உள்வாங்கப்படுவது அவசியம் என்று 2009 யுத்தம் முடிந்தவுடன் ஜூட் என்பவர் எழுதிவந்தார், நீங்களும் அதனையே "இலங்கையனாக" எனும் பதத்தின்மூலம் சொல்ல விழைகிறீர்கள். 

சிலவேளை நீங்கள் எல்லோரும் ஒரே ஆள்த்தானோ என்கிற ஐய்யம்தான் , வேறொன்றுமில்லை. 

சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்.

Link to comment
Share on other sites

8 minutes ago, விளங்க நினைப்பவன் said:

முள்ளிவாய்க்காலில் சத்தியப்பிரமாணம் என்பது அப்பட்டமானமான ஏமாற்று.

இந்த நியாயவாதிகளும் தமிழ் தேசியம் பேசுவோர்களும் எதிர் துருவங்கள்.
இலங்கையைவிட வெளிநாட்டிலும் புலி புகழ் தமிழ் தேசியம் மோட்டு சிங்களவன் என்று பேசிக்கொண்டு சிங்களவருடன் கூடிக்குலாவி திருமண சம்மந்தம் பார்ட்டி என்று திரியும் தமிழர்கள் அதிகம்.

👍

வெளிநாட்டில்  உள்ள தமிழ் தேசியவாதிகள் வெளிநாட்டு அரசின் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்படுவார்களாம்
இலங்கையில் உள்ள தமிழர்கள் அரசின் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட கூடாதாம்

 

நீங்கள் விளங்கி விளக்கமாக எழுதினாலும் இவர்கள் விளங்காத மாதிரி நடிக்கிறார்கள். தங்கள் ஊர் சடடப்படி தங்கள் நடப்பார்களாம். எங்களை மட்டும் சடடத்தை மீறி நடக்கடடாம். சரியான பதில்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரஞ்சித் said:

ஜூட், கற்பகதரு, ஆகியோரின் கருத்துக்களும் உங்களது கருத்தும், அதாவது சிங்களத்துடன் ஐக்கியப்படுவது, உங்களின் பாஷையில் சொல்வதானால் "இலங்கையனாக"( இலங்கையன் என்பது பெளத்த சிங்களவர்களை மட்டுமே குறிக்கிறதென்பது தெரிந்தும்கூட) அச்சொட்டாக அப்படியே இருப்பது ஏனென்று எப்போதாவது சிந்தித்திருக்கிறீர்களா? ஏன் கேட்கிறேன் என்றால், தமிழர்கள் தமது அடையாளத்தினை இழந்து சிங்கள இனத்தினுள் உள்வாங்கப்படுவது அவசியம் என்று 2009 யுத்தம் முடிந்தவுடன் ஜூட் என்பவர் எழுதிவந்தார், நீங்களும் அதனையே "இலங்கையனாக" எனும் பதத்தின்மூலம் சொல்ல விழைகிறீர்கள். 

சிலவேளை நீங்கள் எல்லோரும் ஒரே ஆள்த்தானோ என்கிற ஐய்யம்தான் , வேறொன்றுமில்லை. 

 

பெயர் மாற்றம் நடைபெற்றுவிட்டது

Link to comment
Share on other sites

3 hours ago, ரஞ்சித் said:

ஏன் கேட்கிறேன் என்றால், தமிழர்கள் தமது அடையாளத்தினை இழந்து சிங்கள இனத்தினுள் உள்வாங்கப்படுவது அவசியம் என்று 2009 யுத்தம் முடிந்தவுடன் ஜூட் என்பவர் எழுதிவந்தார்,

ரஞ்சித்,

உங்களை நேர்மையானவர் என்று நினைத்திருந்தேன். அதை இப்படி எழுதி மறுவளமாக நிருபித்து விட்டீர்களே?

நான் எழுதியது, நிலமை இப்படியே தொடர்ந்தால் தமிழர்கள் தமது அடையாளத்தினை இழந்து சிங்கள இனத்தினுள் உள்வாங்கப்படுவது தவிர்க்க முடியாதது, என்று. அதை மாற்றி, “தவிர்க்க முடியாதது” என்ற பதத்துக்கு பதிலாக “அவசியம்” என்ற சொல்லை செருகி எனது கருத்தையே மாற்றி பிரச்சாரம் செய்கிறீர்களே? இதனால் எதை அடையப் போகிறீர்கள்?

3 hours ago, ரஞ்சித் said:

இலங்கையில் இருப்பது இரண்டு தேசியங்கள் மட்டும்தான். ஒன்று தமிழ்த் தேசியம் மற்றையது சிங்களத் தேசியம்.

உண்மையில்  தமிழ் தேசியம் என்றால் என்ன? தமிழர் ஒரு இனம். அவர்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு. ஆகவே அவர்கள் தொன்றுதொட்டு வாழும் நிலத்தை தமது சுதந்நிரமும் இறைமையும் உள்ள நாடாக பிரகடனப்படுத்தி வாழ அவர்களுக்கு உள்ள உரிமை தமிழ் தேசியம் இல்லையா?

தமிழ்நாட்டில் வாழும் தமிழருக்கும் இந்த உரிமை - தமிழ் தேசியம், உண்டல்லவா? தமிழ் நாடு தனிநாடாக வேண்டுமா? தமிழீழம் தனிநடாக வேண்டுமா? அல்லது இவை இரண்டும் இரண்டு தனியான நாடுகளாக வேண்டுமா? அல்லது இவை இணைந்து தனியான நாடாகி வேறு ஒரு பெயரை பெற வேண்டுமா?

தமிழர் இப்படி தனியான நாடான பின் மலையகத்தில் உள்ள பல இலட்சம் தமிழர்களினதும் கொழும்பு, மாத்தளை, புத்தளம் போன்ற இடங்களில் உள்ள தமிழர்களின் எதிர்காலம் எப்படி அமையும்? அவர்களுக்கு மொழி உரிமை முற்றாக மறுக்கப்பட்டு, அவர்கள் சிங்களவர்களாக வேண்டுமா? கொழும்பில் உள்ள தமிழ் பாடசாலைகள் மூடப்பட வேண்டுமா? சி. வி. விக்னேஸ்வரனின் பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் அவர்கள் போன்றவர்களும் சிங்களவர்களாக வேண்டுமா? 

இவையா உங்கள் தீர்வுகள்? வேறு வழிகள் திட்டங்கள் இருந்தால் எழுதுங்கள். நாங்களும் இணைந்து கொள்ளலாம்.

Link to comment
Share on other sites

Just now, கற்பகதரு said:

ரஞ்சித்,

உங்களை நேர்மையானவர் என்று நினைத்திருந்தேன். அதை இப்படி எழுதி மறுவளமாக நிருபித்து விட்டீர்களே?

நான் எழுதியது, நிலமை இப்படியே தொடர்ந்தால் தமிழர்கள் தமது அடையாளத்தினை இழந்து சிங்கள இனத்தினுள் உள்வாங்கப்படுவது தவிர்க்க முடியாதது, என்று. அதை மாற்றி, “தவிர்க்க முடியாதது” என்ற பதத்துக்கு பதிலாக “அவசியம்” என்ற சொல்லை செருகி எனது கருத்தையே மாற்றி பிரச்சாரம் செய்கிறீர்களே? இதனால் எதை அடையப் போகிறீர்கள்?

உண்மையில் தேசியம் என்றால் என்ன? தமிழர் ஒரு இனம். அவர்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு. ஆகவே அவர்கள் தொன்றுதொட்டு வாழும் நிலத்தை தமது சுதந்நிரமும் இறைமையும் உள்ள நாடாக பிரகடனப்படுத்தி வாழ அவர்களுக்கு உள்ள உரிமை தமிழ் தேசியம் இல்லையா?

தமிழ்நாட்டில் வாழும் தமிழருக்கும் இந்த உரிமை - தமிழ் தேசியம், உண்டல்லவா? தமிழ் நாடு தனிநாடாக வேண்டுமா? தமிழீழம் தனிநடாக வேண்டுமா? அல்லது இவை இரண்டும் இரண்டு தனியான நாடுகளாக வேண்டுமா? அல்லது இவை இணைந்து தனியான நாடாகி வேறு ஒரு பெயரை பெற வேண்டுமா?

தமிழர் இப்படி தனியான நாடான பின் மலையகத்தில் உள்ள பல இலட்சம் தமிழர்களினதும் கொழும்பு, மாத்தளை, புத்தளம் போன்ற இடங்களில் உள்ள தமிழர்களின் எதிர்காலம் எப்படி அமையும்? அவர்களுக்கு மொழி உரிமை முற்றாக மறுக்கப்பட்டு, அவர்கள் சிங்களவர்களாக வேண்டுமா? கொழும்பில் உள்ள தமிழ் பாடசாலைகள் மூடப்பட வேண்டுமா? சி. வி. விக்னேஸ்வரனின் பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் அவர்கள் போன்றவர்களும் சிங்களவர்களாக வேண்டுமா? 

இவையா உங்கள் தீர்வுகள்? வேறு வழிகள் திட்டங்கள் இருந்தால் எழுதுங்கள். நாங்களும் இணைந்து கொள்ளலாம்.

அவர் அவரது நாடடைபற்றி எழுதுகிறார். நீங்கள் என்னடாவென்றால் அவரிடம் போய் திட்ட்ங்களை கேட்க்கிறீர்கள். இப்போது தெரியும்தானே அவர் எந்த நாடு என்று? அவரிடம் ஸ்ரீலங்கா பாஸ் போர்ட் இல்லயாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கிருபன் said:

தமிழ்த் தேசியம் என்பது தமிழனாக மொழி மீது பற்றுக்கொண்டு வாழ்வது.    தெரிந்த மொழியைக்கொண்டு சகல கருமங்களையும் ஆற்றுவதோடு,  வேலைவாய்ப்புக்களிலும், பொருளாதாரத்திலும் சரிசமமான வாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்வது.

 

கிருபன்,

இந்த வரைவிலக்கணம் என்னை மிகவும் சிந்திக்க வைத்தது. என்னை ஒருவித மன உழைச்சலுக்கு இட்டுச் சென்றது. என்னை நான் இந்த வரையரைக்குள் வைத்துப்பார்த்தேன். நான் இதற்கு பொருத்தமானவனல்ல.

தமிழ் தேசியம் என்றால் என்ன? சத்தியமாக இதன் வரவிலக்கணம் என்னவென்று எனக்கு தெரியவில்லை. நான் ஒரு இந்திய வம்சாவளி தமிழன். நாங்கள் 5 அல்லது 6  தலைமுறையாக கொழும்பில் வாழ்கின்றோம். நான் படித்தது தமிழ் மொழியில் எனக்கு அதில் ப‌‌ற்றுண்டு.

மேலும் வரைவிலக்கணத்தின் படி, "தெரிந்த மொழிகொண்டு கடைமையற்றுவது" இக்கூற்றின் படி வீட்டில் நாங்கள் தமிழ் கதைக்கின்றேம் ஆனால் ஒரு அரசாங்க அமைச்சுக்கோ அல்லது எதெனும் அரச அலுவல் நிமித்தமாக செல்லும்போது நான் அங்கு தமிழ் மொழியைவிட சிங்கள மொழியயை சரளமாக பாவிக்கின்றேன். எனக்கு என்னுடய வேலையை இலகுவாக செய்து கொண்டு வரமுடிகின்றது. இத‌ற்கு காரணம் நான் சிங்களத்தில் உள்ள அன்பினால் அல்ல. அவர்களுடன் இலகுவாக தொடர்பாட முடிகின்றது. எனக்கு வேண்டியதை இலகுவா அவர்களுடைய மொழியில் கூறி செய்யக்கூடியதாக இருக்குன்றது.

இங்கு நான் சிங்களம் பேசுவதனால் தமிழ் அடையாளத்தை இழக்கின்றேனா?

மேலும் வேலைவாய்ப்புக்களில், நான் இலகையில் வேலைசெய்த நாட்களில் எனக்கு எந்தவித பாகுபாடும் காட்டப்படவில்லை. உண்மையில் எனக்கு 3 மொழிகளும் சரளமாக தெரியும் என்பதால் எனக்கு அது சாதகமாகவே அமைந்தது.   சிங்களவர்களின் மொழி மதம் என்னை ஆதிக்கம் செலுத்தவில்லையே.

இரண்டு நாட்களுக்கு முன்பு திண்ணையில் நாதமுனி குறிப்பிட்டார். நீர் ஒன்றில் தமிழ் தேசியம் அல்லது சிங்கள தேசியம் என, எனக்கு உண்மையில் ஒரே குழப்பமாக போய்விட்டது.

எனக்கு இருக்கும் கேள்விகள் இதுதான்?

1. தமிழ் தேசியம் என்றால் என்ன? இதற்கு ஒரு சரியான வரைவிலக்கணம் உள்ளதா? 
2. எப்படி என்னைப் போன்றவர்கள் தமிழ் தேசியவாதியாக மாறாலம்? 
3. எப்படி நான் தமிழ் தேசிய பண்புகளை வள‌ர்த்து கொள்ளலாம்?  


எனக்கு இதை குறித்து யாரவது தெளிவாக விளக்குவீர்களா?  

5 hours ago, ரதி said:

ஊரில் பிறந்து ,அங்கேயே படித்து விட்டு வெளிநாட்டுக்கு வந்து விட்டு அங்கத்தைய கடவுசீட்டு எடுத்த பிறகு  தேசியம் என்று  சொல்லிக் கொண்டு இருப்பது இலகு ...காரணம் இலங்கையரசை எந்த விதத்திலும் நாங்கள் எதிர்பாத்து காத்து இருக்கவில்லை.

ஒன்றிணைந்த இலங்கைக்குள் ஒற்றுமையாய் வாழ்வது என்பது சிங்களவர்களுக்கு அடிமையாய் வாழணும் என்று இல்லை ...தமிழர்கள் தங்கள் தகுதிகளை எல்லாத் துறைகளிலும் வளர்த்து கொண்டு ,எல்லாத்துக்குள்ளும் ஊடுருவ வேண்டும்...பல்கலையில் இருந்து பாராளுமன்றம் வரை ...அவர்கள் தமிழில் தான் படிக்கிறார்கள் ,கதைக்கிறார்கள் பார்லிமென்டில் கூட .

மக்களை திரட்டி  ஆயுதக் குழுக்களை அமைத்து போராட சொல்கிறார்களா அல்லது வேறு வழி ஏதும் வைத்து இருக்கிறார்களா ?....எழுதினால் எனக்கும் அறிந்து கொள்ள முடியும் .

நன்றி ரதி 
எனக்கு இது தான் எனக்கிருக்கும் கேள்வியும் கூட‌
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ரஞ்சித் said:

நீங்கள் வாழும் கனவுலகுதான் போலித்தேசியம். உண்மையில் அப்படியொன்று இருப்பதாக நான் நினைக்கவில்லை. சொந்த லாபங்களுக்காக உங்களின் இன அடையாளத்தினை அழித்து, எமதினத்தினை அழித்தவனுடன் சங்கமமாகப் பார்க்கிறீர்கள் பாருங்கள், அதுதான் போலித்தேசியம். 

எனது கடவுச்சீட்டில் இலங்கையன் என்று இல்லை. இன்று இலங்கையென்றால் சிங்கள பெளத்தர்களுக்குச் சொந்தமான நாடு மட்டும்தான், ஏனையவர்கள் விரும்பினால் வாழலாம் என்ற நிலை வந்துவிட்டபின்னர் என்னை இலங்கையனாக அடையாளப்படுத்தவேண்டிய தேவை இருப்பதாக நான் நினைக்கவில்லை.  ஏனென்றால், எனது இனத்தில் லட்சக்கணக்கானவர்களைக் கொன்ற சிங்கள இனவாதிகளிடமிருந்து நான் எதனையும் எதிர்பார்க்கவில்லை. 

தமிழ்த்தேசியம் இன்று கேட்கும் எம்மீதான அட்டூழியங்களுக்கான நீதியும், உண்மையான அரசியல் தீர்வும், எமது தாயகத்தில் நாமே எம்மை ஆளும் உரிமையும் போலியானவை அல்ல. இவற்றின் அடிப்படையிலேயே தமிழரின் அரசியல் இதுவரையில் நடந்துவருகிறது, இனிமேலும் அப்படித்தான். இவற்றினைத் தவிர்த்து, இவற்றினைப் புறந்தள்ளி, ஏளனம் செய்து நடத்தப்படும் அரசியல் தமிழினத்தின் இருப்பிற்கெதிரான சிங்கள பெளத்த அரசியல்தான். இன்று நீங்கள் ஆதரிப்பதும் அதனைத்தான். ஆனால், அதனைச் சொல்லமுடியாமல் நியாயமான தமிழர்களின் அரசியலைப் போலியென்று ஏளனம் செய்கிறீர்கள்.

சொந்த இனத்தினை விற்று வயிறு வளர்க்கும் உங்களை நீங்கள் தாராளமாக இலங்கையன் என்றோ அல்லது "போலித் தேசியவாதி" என்றோ அழைத்துக்கொள்ளலாம், அதில் தவறேதுமில்லை. அந்தத் தகுதிக்கு நீங்கள் முற்றிலும் உரித்துடையவர்தான்.  நேரத்திற்கொருமுறை பெயர்களையும், கொள்கைகளையும் மாற்றி வலம்வரும் உங்களின் தேசியம் போலியானதென்பதில் மாற்றுக்கருத்தில்லை. 

 

நன்றி ரஞ்சித் உங்கள் தமிழ் தேசிய பற்றிற்கு

எனக்கு இருக்கும் கேள்விகள் இதுதான்?

1. தமிழ் தேசியம் என்றால் என்ன? இதற்கு ஒரு சரியான வரைவிலக்கணம் உள்ளதா? 
2. எப்படி என்னைப் போன்றவர்கள் தமிழ் தேசியவாதியாக மாறாலம்? 
3. எப்படி நான் தமிழ் தேசிய பண்புகளை வள‌ர்த்து கொள்ளலாம்?  

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, colomban said:

மேலும் வரைவிலக்கணத்தின் படி, "தெரிந்த மொழிகொண்டு கடைமையற்றுவது" இக்கூற்றின் படி வீட்டில் நாங்கள் தமிழ் கதைக்கின்றேம் ஆனால் ஒரு அரசாங்க அமைச்சுக்கோ அல்லது எதெனும் அரச அலுவல் நிமித்தமாக செல்லும்போது நான் அங்கு தமிழ் மொழியைவிட சிங்கள மொழியயை சரளமாக பாவிக்கின்றேன். எனக்கு என்னுடய வேலையை இலகுவாக செய்து கொண்டு வரமுடிகின்றது. இத‌ற்கு காரணம் நான் சிங்களத்தில் உள்ள அன்பினால் அல்ல. அவர்களுடன் இலகுவாக தொடர்பாட முடிகின்றது. எனக்கு வேண்டியதை இலகுவா அவர்களுடைய மொழியில் கூறி செய்யக்கூடியதாக இருக்குன்றது.

இங்கு நான் சிங்களம் பேசுவதனால் தமிழ் அடையாளத்தை இழக்கின்றேனா?

மேலும் வேலைவாய்ப்புக்களில், நான் இலகையில் வேலைசெய்த நாட்களில் எனக்கு எந்தவித பாகுபாடும் காட்டப்படவில்லை. உண்மையில் எனக்கு 3 மொழிகளும் சரளமாக தெரியும் என்பதால் எனக்கு அது சாதகமாகவே அமைந்தது.   சிங்களவர்களின் மொழி மதம் என்னை ஆதிக்கம் செலுத்தவில்லையே.

நான் வரைவிலக்கணம் எழுதவில்லை. ஒரு புரிதலுக்காக எழுதினேன்.

தெரிந்த மொழி என்பதை தெரிந்த தாய்மொழி என்று கொண்டால் தமிழ்மொழியை வைத்து இலகுவாக அரச அலுவலகங்களில் கருமங்களைப் பார்க்கமுடியுமா?

நீங்கள் மும்மொழியிலும் பாண்டித்தியம் உள்ளவராக இருப்பதால் இலகுவாக காரியங்களை/கருமங்களை செய்யக்கூடியதாக இருக்கின்றது. ஆனால் சிங்களம் மட்டுமே தெரிந்த ஒருவருக்கு உள்ள அனுகூலங்கள் அனைத்தும் தமிழ் மட்டும் தெரிந்த ஒருவருக்கு இல்லை. தமிழன் சிங்களம் தெரிந்திருந்தால் பலவிடயங்களைச் செய்யலாம் என்பதே தமிழ் புறக்கணிக்கப்படுகின்றது என்பதை பறைசாற்றுகின்றது.

தமிழ்த் தேசியம் என்றால் என்ன என்பதை இலகுவாக வரைவிலக்கணம் கொடுக்கமுடியாது. அது தேசியம் என்ன என்றால் என்பதில் இருந்து ஆரம்பிக்கும். இதற்கே பல வாதப்பிரதிவாதங்கள் உள்ளன.

 

இதைப் பற்றிய விளக்கங்களை பின்னர் எழுதுகின்றேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, colomban said:

கிருபன்,

இந்த வரைவிலக்கணம் என்னை மிகவும் சிந்திக்க வைத்தது. என்னை ஒருவித மன உழைச்சலுக்கு இட்டுச் சென்றது. என்னை நான் இந்த வரையரைக்குள் வைத்துப்பார்த்தேன். நான் இதற்கு பொருத்தமானவனல்ல.

தமிழ் தேசியம் என்றால் என்ன? சத்தியமாக இதன் வரவிலக்கணம் என்னவென்று எனக்கு தெரியவில்லை. நான் ஒரு இந்திய வம்சாவளி தமிழன். நாங்கள் 5 அல்லது 6  தலைமுறையாக கொழும்பில் வாழ்கின்றோம். நான் படித்தது தமிழ் மொழியில் எனக்கு அதில் ப‌‌ற்றுண்டு.

மேலும் வரைவிலக்கணத்தின் படி, "தெரிந்த மொழிகொண்டு கடைமையற்றுவது" இக்கூற்றின் படி வீட்டில் நாங்கள் தமிழ் கதைக்கின்றேம் ஆனால் ஒரு அரசாங்க அமைச்சுக்கோ அல்லது எதெனும் அரச அலுவல் நிமித்தமாக செல்லும்போது நான் அங்கு தமிழ் மொழியைவிட சிங்கள மொழியயை சரளமாக பாவிக்கின்றேன். எனக்கு என்னுடய வேலையை இலகுவாக செய்து கொண்டு வரமுடிகின்றது. இத‌ற்கு காரணம் நான் சிங்களத்தில் உள்ள அன்பினால் அல்ல. அவர்களுடன் இலகுவாக தொடர்பாட முடிகின்றது. எனக்கு வேண்டியதை இலகுவா அவர்களுடைய மொழியில் கூறி செய்யக்கூடியதாக இருக்குன்றது.

இங்கு நான் சிங்களம் பேசுவதனால் தமிழ் அடையாளத்தை இழக்கின்றேனா?

மேலும் வேலைவாய்ப்புக்களில், நான் இலகையில் வேலைசெய்த நாட்களில் எனக்கு எந்தவித பாகுபாடும் காட்டப்படவில்லை. உண்மையில் எனக்கு 3 மொழிகளும் சரளமாக தெரியும் என்பதால் எனக்கு அது சாதகமாகவே அமைந்தது.   சிங்களவர்களின் மொழி மதம் என்னை ஆதிக்கம் செலுத்தவில்லையே.

இரண்டு நாட்களுக்கு முன்பு திண்ணையில் நாதமுனி குறிப்பிட்டார். நீர் ஒன்றில் தமிழ் தேசியம் அல்லது சிங்கள தேசியம் என, எனக்கு உண்மையில் ஒரே குழப்பமாக போய்விட்டது.

எனக்கு இருக்கும் கேள்விகள் இதுதான்?

1. தமிழ் தேசியம் என்றால் என்ன? இதற்கு ஒரு சரியான வரைவிலக்கணம் உள்ளதா? 
2. எப்படி என்னைப் போன்றவர்கள் தமிழ் தேசியவாதியாக மாறாலம்? 
3. எப்படி நான் தமிழ் தேசிய பண்புகளை வள‌ர்த்து கொள்ளலாம்?  


எனக்கு இதை குறித்து யாரவது தெளிவாக விளக்குவீர்களா?  
 

என்னைப் பொறுத்தவரை(சுருங்கக் கூறின்), தேசியம் என்பது எனது அடையாளம். 

தேசியம் என்பது எப்போது தூசு தட்டப்படுகிறதென்றால் எனது  அடையாளத்திற்கு ஆபத்து நெருங்குகிறது என உணரும்போது. 

எனது அடையாளத்திற்கு ஆபத்து நெருங்குகிறது என உணரும்போது அதே உணர்வுள்ள மக்கள் கூட்டம் ஒன்று சேர்ந்து தங்கள் அடையாளத்தைக் காப்பதற்கு முயற்சிக்கிறார்கள். 

ஏனென்றால் ஒவ்வொருவரும் தனித்துவம் மிக்கவர்கள். ஆனால் சமமானவர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேசியம் எனப்படுவது ஒரு மக்கள் திரளின் ஒத்த உணர்வு அல்லது கூட்டுப்பிரக்ஞை. வெளியாரின் அச்சுறுத்தல்களின் போது தமது அடையாளத்தைப் பேண ஒரு மக்கள் திரளை உணர்வு ரீதியாக ஒன்றாக்குவது தேசியம்.

இது மதத்தின் வழியாக இருக்கலாம் (முஸ்லிம் தேசியம்), தொடர்ச்சியான நிலப்பரப்பின் மூலமாக இருக்கலாம் அல்லது மொழியின் மூலமாகவும் இருக்கலாம். இலங்கையில் சிங்களவர்கள் மொழி ரீதியாக தேசிய இனமாக இருக்கின்றார்கள், முஸ்லிம்கள் மதரீதியாக தேசிய இனமாக இருக்கின்றார்கள். மலையக/இந்திய வம்சாவழித் தமிழர்கள் தமிழ் மொழியைப் பேசினாலும், இந்து/சைவ மதமாக இருந்தாலும் வடக்கு-கிழக்கில் இருக்கும் தமிழர்களுடன் தம்மை அடையாளப்படுத்தி ஒரே தேசிய இனமாக உணரவில்லை. ஆகவே மலையகத் தமிழர்கள் தனித்துவம் மிக்க தனி இனம்.

வடக்கு-கிழக்கில் வாழும் தமிழர்களை தேசிய இனமாக ஒன்றாக்குவது, தமிழ்மொழி, நிலத்தொடர்ச்சி, மற்றும் சிங்கள, முஸ்லிம்களின் நெருக்குவாரங்கள். இந்த நெருக்குவாரங்கள்தான் உணர்வு ரீதியில் தமிழர்களை தமது அடையாளத்திற்காகப் போராடத் தூண்டியது. இந்த அடையாளத்தில் தமிழ் மொழிதான் முக்கியமான கூட்டுப் பிரக்ஞையை உருவாக்கியது. 

இந்தக் கூட்டுப் பிரக்ஞையை சிதறடிக்க, பிராந்திய, மத, சாதீய வேறுபாடுகளைத் தூண்டி தேசிய உணர்வை நலியச் செய்யும் யுக்தியை சிங்கள அரசு கச்சிதமகாச் செய்கின்றது.

தேசியத்தின் உள்ளடக்கம் ஜனநாயகமாக இருக்கவேண்டும். தேசிய உணர்வை இன ரீதியாக பெருமிதத்துடன் போற்றும் அதே வேளை பிற இனங்களும் அப்படியான தேசிய உணர்வுள்ளவர்கள் என்பதை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வேண்டும். இத்தகைய ஜனநாயகப் பண்புள்ள தேசியம் விரிந்து வளரும்.

தேசிய உணர்வு பிற தேசியங்களின் மீதான வெறுப்பில் கட்டியமைக்கப்பட்டால் அது உட்சுருங்கி அழிந்துவிடும்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, colomban said:

எப்படி என்னைப் போன்றவர்கள் தமிழ் தேசியவாதியாக மாறாலம்? 

தயவு செய்து இப்போது இருப்பது போல நேர்மையான தமிழனாகவே இருங்கள்.

ஏமாற்று தமிழ் தேசியவாதியாக மாற வேண்டாம்.

நீங்கள் இலங்கையில் கொழும்பில் சிங்கள மொழியயை சரளமாக பாவிப்பது போன்றே வெளிநாடுகளில் தமிழ் தேசியவாதிகள் அன்னிய மொழிகளை சரளமாக பாவிக்கின்றனர் ஆனால் இலங்கையில் சிங்கள பகுதிகளிலும் தமிழில் தான் பேச வேண்டும் என்பார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த கும்பல் ஒவ்வொரு தடவையும் பதவிக்கு வரும் போது புலிக்கு உயிர்கொடுப்பினம்.

பிறகு நாம் தான் புனர்வாழ்வு அளித்து விடுதலை செய்தம் என்றும் சொல்லுவினம்.

நான் பிடி நீ பிடின்னு அரசியல் கைதிகளின் பட்டியலைக் கொடுத்தாங்கப்பா.. தேர்தலும் முடிஞ்சு பார்லிமென்டும் கூடியாது.. அவர்களின் விவகாரம் தொடர்ப்பில் மூச்சும் இல்லை. 

மக்களா திருந்தாதவரை இப்படியான அரசியல் வியாதிகள் திருந்தப் போறதே இல்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 19/8/2020 at 12:47, Robinson cruso said:

நான் நினைக்கவில்லை அது ஒரு இலகுவான காரியமாக இருக்குமென்று. இந்திரா அம்மையாரின் காலத்தில் அது வழங்கப்பட்டு  இலங்கையுடன் இணைக்கப்பட்டு விட்ட்து. அதை திருப்பி கேட்பதட்கு சீனாவை கரணம் காடட முடியாது. பொருளாதார ரீதியாக இலங்கை உதவி செய்யவில்லை, அல்லது இந்தியாவை அழைத்தபோது அவர்கள் முதலீடு செய்யவில்லை என்று கூறுகிறார்கள்.

அப்போ  வடக்கு-கிழக்கு இணைப்பு, 13வது  திருத்தச்சட்டம் நடைமுறைப்படுத்தல் எல்லாம் இருநாடுகளுக்கிடையிலான ஒப்பந்தங்கள் தானே!! அவற்றை ஸ்ரீலங்கா கிழித்தெறியும்போது கச்சதீவு  ஒப்பந்தம் கிழிக்கப்பட்ட முடியாத என்ன??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விளங்க நினைப்பவன் said:

நீங்கள் இலங்கையில் கொழும்பில் சிங்கள மொழியயை சரளமாக பாவிப்பது போன்றே வெளிநாடுகளில் தமிழ் தேசியவாதிகள் அன்னிய மொழிகளை சரளமாக பாவிக்கின்றனர் ஆனால் இலங்கையில் சிங்கள பகுதிகளிலும் தமிழில் தான் பேச வேண்டும் என்பார்கள்

வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்தவர்கள் அந்த நாட்டு மொழிகளைக் கற்று கருமங்களை ஆற்றுவதையும் பிறந்த நாட்டில் தெரிந்த ஒரே தமிழ் மொழியை வைத்து தமது வேலைகளைச் செய்யமுடியாமல் தவிப்பதற்கும் பலத்த வேறுபாடு உள்ளது.

வெளிநாடுகளில் கூட அத்தியாவசியமான தேவைகளுக்கு மொழிபெயர்ப்பு சேவையை ஜனநாயகப்பண்புள்ள அரசுகள் செய்து கொடுக்கின்றன என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

எனவே, தமிழ் மக்களை இலங்கையர் என்று உணரவைக்கவேண்டுமானால் சிங்களப் பகுதிகளில் தமிழில் கருமங்களை ஆற்ற உதவிகள் செய்யத்தான் வேண்டும். ஆனால் தமிழ்ப்பகுதிகளிலேயே, குறிப்பாக பொலிஸ் நிலையங்களில் தமிழில் முறைப்பாடுகள் செய்வதற்குக்குகூட இடர்பாடுகள் இருக்கின்றன.

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்தவர்கள் அந்த நாட்டு மொழிகளைக் கற்று கருமங்களை ஆற்றுவதையும் பிறந்த நாட்டில் தெரிந்த ஒரே தமிழ் மொழியை வைத்து தமது வேலைகளைச் செய்யமுடியாமல் தவிப்பதற்கும் பலத்த வேறுபாடு உள்ளது.

வெளிநாடுகளில் கூட அத்தியாவசியமான தேவைகளுக்கு மொழிபெயர்ப்பு சேவையை ஜனநாயகப்பண்புள்ள அரசுகள் செய்து கொடுக்கின்றன என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

எனவே, தமிழ் மக்களை இலங்கையர் என்று உணரவைக்கவேண்டுமானால் சிங்களப் பகுதிகளில் தமிழில் கருமங்களை ஆற்ற உதவிகள் செய்யத்தான் வேண்டும். ஆனால் தமிழ்ப்பகுதிகளிலேயே, குறிப்பாக பொலிஸ் நிலையங்களில் தமிழில் முறைப்பாடுகள் செய்வதற்குக்குகூட இடர்பாடுகள் இருக்கின்றன.

தமிழ்ப்பகுதிகளிலேயே பொலிஸ் நிலையங்களில் தமிழில் முறைப்பாடுகள் செய்வதற்குக்கு இடர்பாடுகள் இருந்தால் அது ஏற்று கொள்ள முடியாத தவறு.   ஆனால் தான் பிறந்த நாட்டில் தெரிந்த ஒரே மொழியாக சொந்த தமிழ் வைத்து கொண்டு சிங்கள பகுதிகளில் தமது வேலைகளைச் செய்யமுடியாமல் ஏன் தவிக்க வேண்டும்? அந்த நாட்டின் இன்னொரு மொழியான சிங்களத்தையும் படித்திருக்க வேண்டும் அல்லவா.வெளிநாடுகளில் தமது வேலைகளைச் செய்ய தமிழை தவிர வேறு மொழி படிக்கிறார்கள் தானே தங்களுக்கு ஒரு நியாயம்  இலங்கையில் உள்ளவர்களுக்கு ஒரு நியாயமா?  நீங்கள் சொன்ன மொழிபெயர்ப்பு சேவைகள் எல்லாம் வெளிநாட்டில் புதிதாக வரும் அகதிகளுக்கு மட்டும் தான்.

எனக்கு நேரம் கிடைத்தால் வேறு மொழிகளும் படிக்க ஆசை உண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

நீங்கள் சொன்ன மொழிபெயர்ப்பு சேவைகள் எல்லாம் வெளிநாட்டில் புதிதாக வரும் அகதிகளுக்கு மட்டும் தான்

நாங்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாக நடத்தப்படுகிறோம். எங்கள் கிராமங்களில் போலீஸ் நிலையங்களில் முறைப்பாடுகளை பதியவோ, அல்லது எடுத்துரைக்கவோ மொழிபெயர்ப்பாளர் தேவைப்படுகிறார். சிங்கள பிரதேசத்தில் அந்த மக்களுக்கு அந்த அவசியமில்லை. எனினும் சிங்களம் கருமமாற்றுவதற்கு இலகு, எனக்கு எந்த வேறுபாடும் காட்டப்படுவதில்லை, இழப்பில்லை, சந்தோசமாக இருக்கிறேன் என்பவருக்கு, கஸ்ரத்தை அனுபவிப்பவரின் தேவை வலி புரியாது. எங்களுக்கு வரும் அரச திணைக்கள கடிதங்கள் சிங்களத்தில் வருகின்றன. தமிழ்ப் பிரதேசம் என்று தெரிந்தும் ஏன் சிங்களம் மட்டும் பிரயோகிக்கப் படுகிறது? மும்மொழியையோ, இரு தேசிய மொழிகளைகளையோ பாவிக்காது ஒரு மொழி மட்டும் திணிக்கப்படுகிறது.  எங்களின் தொழில், மூலதனம் கொள்ளை அடிக்கப்படுகின்றன. எங்கள் பூர்வீக நிலங்கள் பறிக்கப்படுகின்றன. அங்கிருந்து விரட்டப்படுகின்றோம். உரிமைகள் பறிக்கப்படுகின்றன. இப்படி எத்தனையோ. உங்கள் வீட்டில் இப்படியான அக்கிரமம் நடந்தால் எப்படி உங்கள் நடவடிக்கை இருக்கும்? தலைநகரில் உள்ள விலைபோன தமிழர், ஒட்டுக்குழுக்களில் இருந்து தலைநகரில் சிங்களத்தின் புலனாய்வாளராக இயங்குபவர்கள், சிங்களக்குட்டிகளின் மயக்கத்தில் கிறங்கி இனி அதுவே வாழ்வு என்று ஆகியவர்கள் பல பரப்புரைகளை றோவைக் காட்டி செய்து வருகிறார்கள் சுய உணர்வில்லாதவர்கள் உண்மையை விட போலிகளையே  நம்புகிறார்கள். ஏனென்றால் போலிகளுக்கே கவர்ச்சி அதிகம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, விளங்க நினைப்பவன் said:

தமிழ்ப்பகுதிகளிலேயே பொலிஸ் நிலையங்களில் தமிழில் முறைப்பாடுகள் செய்வதற்குக்கு இடர்பாடுகள் இருந்தால் அது ஏற்று கொள்ள முடியாத தவறு.   ஆனால் தான் பிறந்த நாட்டில் தெரிந்த ஒரே மொழியாக சொந்த தமிழ் வைத்து கொண்டு சிங்கள பகுதிகளில் தமது வேலைகளைச் செய்யமுடியாமல் ஏன் தவிக்க வேண்டும்? அந்த நாட்டின் இன்னொரு மொழியான சிங்களத்தையும் படித்திருக்க வேண்டும் அல்லவா.வெளிநாடுகளில் தமது வேலைகளைச் செய்ய தமிழை தவிர வேறு மொழி படிக்கிறார்கள் தானே தங்களுக்கு ஒரு நியாயம்  இலங்கையில் உள்ளவர்களுக்கு ஒரு நியாயமா?  நீங்கள் சொன்ன மொழிபெயர்ப்பு சேவைகள் எல்லாம் வெளிநாட்டில் புதிதாக வரும் அகதிகளுக்கு மட்டும் தான்.

எனக்கு நேரம் கிடைத்தால் வேறு மொழிகளும் படிக்க ஆசை உண்டு.

நீங்கள் இருவேறு விடயங்களைக் கதைக்கிறீர்கள்.

1) Rights

2) Choice

1) இலங்கையின் எப்பகுதியிலும் தமிழில் அரச கரும விடயங்களை நிறைவேற்றிக்கொள்ள ஏற்பாடுகள் இருக்கவேண்டும். இது Privilege அல்ல Right. எந்த தனியார் நிறுவனங்களிலும் தமிழில் சேவை கிடைக்கவேண்டும் என தமிழர்கள் எதிர்பார்க்கவில்லை. இலங்கையின் வடக்கு கிழக்கில் தங்களுடைய கருமங்களை ஆற்றிக்கொள்ள முடியவில்லை என எந்த ஒரு சிங்களவரும் முறைபாடு செய்ததாக எனக்குத் தெரியாது. ஆனால் வடக்கு கிழக்குக்கு வெளியே தமிழர் ...... 🤥

2) சிங்களம் தெரிந்து வைத்திருத்தல் எனக்கு அனுகூலமானதுதான். ஆனால் அதனைக்  கற்பது எனது தெரிவைப்பொறுத்தது. என்னை கற்கும்படி நிர்ப்பந்திக்க முடியாது.

சிங்களவர்களை யாராவது தமிழைக் கற்கும்படி கேட்கவோ நிர்ப்பந்திக்கவோ முடியுமா 😂

தமிழைக் கற்கும்படி உங்களால் சிங்களவரிடம் கூற முடியுமா ☹️

தமிழரிடம் சிங்களத்தைக் கற்கும்படி உங்களால் கூறமுடியும். ஆனால் சிங்களவரிடம் தமிழைக் கற்கும்படி கூறமுடியாதல்லவா 😀 இங்குதான் பிரச்சனை ஆரம்பமாகிறது. 👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, விளங்க நினைப்பவன் said:

1) தயவு செய்து இப்போது இருப்பது போல நேர்மையான தமிழனாகவே இருங்கள்.

ஏமாற்று தமிழ் தேசியவாதியாக மாற வேண்டாம்.

2) நீங்கள் இலங்கையில் கொழும்பில் சிங்கள மொழியயை சரளமாக பாவிப்பது போன்றே வெளிநாடுகளில் தமிழ் தேசியவாதிகள் அன்னிய மொழிகளை சரளமாக பாவிக்கின்றனர் ஆனால் இலங்கையில் சிங்கள பகுதிகளிலும் தமிழில் தான் பேச வேண்டும் என்பார்கள்

😂

1) 😏(😂)

2) சிங்களப் பகுதிகளில் தமிழர் ஒருவரும் தமிழ் பேசுமாறு கேட்பதில்லை. சிங்களப் பகுதிகளில் அரச அலுவல்களை மேற்கொள்ள முனையும்போது தமிழில், அதாவது எனது சொந்த மொழியில் மேற்கொள்ள எனக்கு உரிமை இருக்க வேண்டும். ஏனென்றால் இலங்கை எனது நாடு. அங்கே நான் சலுகைகளை எதிர்பார்ப்பதில்லை. உரிமைகளை கேட்கிறேன். 

குடியேற்ற நாடுகளில் எனக்கு வழங்கப்படுவது சலுகை. 

மற்றவர்களுக்கு advice மழை பொழிவதற்கு முன்னர் சலுகைக்கும் உரிமைக்கும் இடையே உள்ள வேறுபாட்டைத் தெரிந்துகொள்ளுங்கள். ☹️

Link to comment
Share on other sites

6 hours ago, Eppothum Thamizhan said:

அப்போ  வடக்கு-கிழக்கு இணைப்பு, 13வது  திருத்தச்சட்டம் நடைமுறைப்படுத்தல் எல்லாம் இருநாடுகளுக்கிடையிலான ஒப்பந்தங்கள் தானே!! அவற்றை ஸ்ரீலங்கா கிழித்தெறியும்போது கச்சதீவு  ஒப்பந்தம் கிழிக்கப்பட்ட முடியாத என்ன??

13 வது திருத்தும் முழுமையாக நடைமுறை படுத்தப்படடாதா?  போலி தமிழ் தேசியவாதிகளே கூறுகிறார்கள் அதிலே ஒன்றுமே இல்லை என்று. அப்படி என்றால் அரசாங்கம் அதை நீக்குமா? நிச்சயமாக அதை நீக்கமாட்ட்டார்கள். இந்தியா தமிழர்களுக்கு எதையோ பெற்றுக்கொடுத்துவிட்ட்தாக காட்டுவதட்கு உருவாக்கப்படட திருத்தம் ஒழிய தமிழர்களுக்கு கொடுப்பதட்கு ஒன்றுமே இல்லை. ஒரு பியோனையே நியமிக்க முடியாதென்றால் அதனால் என்ன பிரயோசனம். அப்படியான 13 வது திருத்தத்தின் மூலமாக தமிழர்களுக்கு கொடுத்த அந்த மாபெரும் அதிகாரத்தை அவர்கள் இல்லாதொழிப்பார்களா? ஒரு நாளும் நடக்காது.

ஒப்பந்தம் கையொப்பமிடட கொழும்பு துறைமுகத்தில் இருந்தே இந்தியாவை துரத்தி விடடவனுக்கு இதெல்லாம் ஒன்றுமேயில்லை. இந்தியா என்ன கிழித்தா விடடார்கள்? இவர்களுக்கு தெரியும் என்னதான் செய்தாலும் கச்சத்தீவு ஒரு நாளும் இந்தியா பக்கம் போகாது எண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, விளங்க நினைப்பவன் said:

தான் பிறந்த நாட்டில் தெரிந்த ஒரே மொழியாக சொந்த தமிழ் வைத்து கொண்டு சிங்கள பகுதிகளில் தமது வேலைகளைச் செய்யமுடியாமல் ஏன் தவிக்க வேண்டும்? அந்த நாட்டின் இன்னொரு மொழியான சிங்களத்தையும் படித்திருக்க வேண்டும் அல்லவா..

நீங்கள் இப்படியொரு கேள்வியை கேட்டதால்தான் நல்லதொரு விளக்கத்தை கபிதான் தந்துள்ளார். அதற்கு உங்களுக்கு நன்றி.

3 hours ago, Kapithan said:

நீங்கள் இருவேறு விடயங்களைக் கதைக்கிறீர்கள்.

1) Rights

2) Choice

1) இலங்கையின் எப்பகுதியிலும் தமிழில் அரச கரும விடயங்களை நிறைவேற்றிக்கொள்ள ஏற்பாடுகள் இருக்கவேண்டும். இது Privilege அல்ல Right. எந்த தனியார் நிறுவனங்களிலும் தமிழில் சேவை கிடைக்கவேண்டும் என தமிழர்கள் எதிர்பார்க்கவில்லை. இலங்கையின் வடக்கு கிழக்கில் தங்களுடைய கருமங்களை ஆற்றிக்கொள்ள முடியவில்லை என எந்த ஒரு சிங்களவரும் முறைபாடு செய்ததாக எனக்குத் தெரியாது. ஆனால் வடக்கு கிழக்குக்கு வெளியே தமிழர் ...... 🤥

2) சிங்களம் தெரிந்து வைத்திருத்தல் எனக்கு அனுகூலமானதுதான். ஆனால் அதனைக்  கற்பது எனது தெரிவைப்பொறுத்தது. என்னை கற்கும்படி நிர்ப்பந்திக்க முடியாது.

சிங்களவர்களை யாராவது தமிழைக் கற்கும்படி கேட்கவோ நிர்ப்பந்திக்கவோ முடியுமா 😂

தமிழைக் கற்கும்படி உங்களால் சிங்களவரிடம் கூற முடியுமா ☹️

தமிழரிடம் சிங்களத்தைக் கற்கும்படி உங்களால் கூறமுடியும். ஆனால் சிங்களவரிடம் தமிழைக் கற்கும்படி கூறமுடியாதல்லவா 😀 இங்குதான் பிரச்சனை ஆரம்பமாகிறது. 👍

மிக்க நன்றி. 

Link to comment
Share on other sites

14 hours ago, Kapithan said:

என்னைப் பொறுத்தவரை(சுருங்கக் கூறின்), தேசியம் என்பது எனது அடையாளம். 

தேசியம் என்பது எப்போது தூசு தட்டப்படுகிறதென்றால் எனது  அடையாளத்திற்கு ஆபத்து நெருங்குகிறது என உணரும்போது. 

எனது அடையாளத்திற்கு ஆபத்து நெருங்குகிறது என உணரும்போது அதே உணர்வுள்ள மக்கள் கூட்டம் ஒன்று சேர்ந்து தங்கள் அடையாளத்தைக் காப்பதற்கு முயற்சிக்கிறார்கள். 

ஏனென்றால் ஒவ்வொருவரும் தனித்துவம் மிக்கவர்கள். ஆனால் சமமானவர்கள்.

நீங்கள் சொன்னதை ஏற்றுக்கொள்ளுகிறேன். இருந்தாலும் எவ்வளவு காலத்துக்கு தூசு தடட வேண்டுமென்று சொன்னால் கொஞ்சம் விளக்கமாக இருக்கும்.

நான் அறிந்த வரைக்கும் 70 வருடங்களாக தூசு தட்டுவதாக அறிகிறேன்.

இப்போது போகிற போக்கில் இன்னும் 70 வருடங்களுக்கு தூசு தட்டுவார்கள், அல்லது இந்த அரசு 5 வருடத்துக்குள் முடித்து வைக்கும் என நம்புகிறேன்.

6 hours ago, Kapithan said:

நீங்கள் இருவேறு விடயங்களைக் கதைக்கிறீர்கள்.

1) Rights

2) Choice

1) இலங்கையின் எப்பகுதியிலும் தமிழில் அரச கரும விடயங்களை நிறைவேற்றிக்கொள்ள ஏற்பாடுகள் இருக்கவேண்டும். இது Privilege அல்ல Right. எந்த தனியார் நிறுவனங்களிலும் தமிழில் சேவை கிடைக்கவேண்டும் என தமிழர்கள் எதிர்பார்க்கவில்லை. இலங்கையின் வடக்கு கிழக்கில் தங்களுடைய கருமங்களை ஆற்றிக்கொள்ள முடியவில்லை என எந்த ஒரு சிங்களவரும் முறைபாடு செய்ததாக எனக்குத் தெரியாது. ஆனால் வடக்கு கிழக்குக்கு வெளியே தமிழர் ...... 🤥

2) சிங்களம் தெரிந்து வைத்திருத்தல் எனக்கு அனுகூலமானதுதான். ஆனால் அதனைக்  கற்பது எனது தெரிவைப்பொறுத்தது. என்னை கற்கும்படி நிர்ப்பந்திக்க முடியாது.

சிங்களவர்களை யாராவது தமிழைக் கற்கும்படி கேட்கவோ நிர்ப்பந்திக்கவோ முடியுமா 😂

தமிழைக் கற்கும்படி உங்களால் சிங்களவரிடம் கூற முடியுமா ☹️

தமிழரிடம் சிங்களத்தைக் கற்கும்படி உங்களால் கூறமுடியும். ஆனால் சிங்களவரிடம் தமிழைக் கற்கும்படி கூறமுடியாதல்லவா 😀

இங்குஇன்னொரு மொழியை கற்க வேணுமா இல்லை வேண்டாமா என்பதை யார் தீர்மானிப்பது? அரசியல் கட்சியா இல்லை தனி மனிதனா? அல்லது தேசியம் என்று சொல்லி வேறு மொழியை கட்காமல் இருக்க வேண்டுமா? இதட்கும் விளக்கம் தந்தாள் நல்லது.தான் பிரச்சனை ஆரம்பமாகிறது. 😜

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஜனாதிபதித் தேர்தல் களம் தெற்கைவிட இம்முறை தமிழர் தாயகப் பிரதேசத்திலும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றது. போரின் பின்னரான அனைத்து ஜனாதிபதித் தேர்தல்களிலும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்த தமிழ் மக்கள் இம்முறை அத்தகைய நிலைப்பாட்டை எடுப்பதற்குத் தயங்குவதும், தமிழ்ப் பொது வேட்பாளரை நோக்கி தமிழர்கள் அணிதிரட்டப்படுவதாலும் ஜனாதிபதித் தேர்தல் விவகாரம் பேசுபொருளாகியிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப்பொது வேட்பாளர் களமிறக்கப்படுவது தென்னிலங்கை கட்சிகளைப்போன்று தமிழ்த்தேசியக் கட்சியைச் சேர்ந்த சிலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அதே நேரம் இந்தப் பொதுவேட்பாளர் விவகாரத்தை குழப்பியடிப்பதற்கான சதி முயற்சியும் முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடுகள் தொடர்பில் பலத்த சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. கொள்கைத் தளம்பலான ஒருவர் இந்த விடயங்களை முன்னின்று செயற்படுத்துவதாகச் சொல்லிக்கொள்ளும் போது சந்தேகங்கள் எழுவது இயல்பானதே. பொதுவேட்பாளர் விவகாரத்தை ஆதரிப்பதாகக் காட்டிக்கொண்டு அதைக் குழப்பியடிப்பது தான் அவரது இலக்கா என்ற கேள்வியும் எழுகின்றது. ஏனெனில் அவரின் நடவடிக்கைகள் அப்படியானவையாகத்தான் அமைந்திருக்கின்றன. ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியே, ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளரைக் களமிறக்கும் யோசனையை முன்வைத்தது. அது தொடர்பில் பல தரப்புகளையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தது. இதேகாலப் பகுதியில் விக்னேஸ்வரன், ‘ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்கு நல்லது செய்கிறார். அவரைத்தான் ஆதரிப்பேன்' என்று அறிக்கைவிட்டார். பின்னர் ரணில் ஏமாற்றிவிட்டார் என்று சொன்னார். திடீரென பொதுவேட்பாளர் விவகாரம் தொடர்பில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினார். அது தொடர்பில் அறிக்கைகள் விடுத்தார். இந்த விவகாரத்தை முன்னெடுத்த தரப்புகளுடன் எந்தவொரு சந்திப்பையும் நடத்தாமல் தான்தோன்றித்தனமாக விக்னேஸ்வரன் விடயங்களைக் கையாள்கின்றார். இது தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரத்தை எதிர்க்கும் தரப்புகளுக்கு வாய்ப்பாக அமைந்திருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு கோரப்பட்ட பின்னர் தமிழ்ப்பொதுவேட்பாளர் யார் என்பதைப் பகிரங்கப்படுத்தலாம். விக்னேஸ்வரன் பொறுமை காக்கவேண்டும். இலங்கையிலுள்ள தமிழ்மொழி பேசும் அனைவரும் ஆதரிக்கக்கூடிய ஜனரஞ்சகமான தலைவர் ஒருவராக இருக்கவேண்டும். அப்படிப்பட்டண்டும். ஒருவரையே தமிழ்ப்பொதுவேட்பாளராக களமிறக்க வேண்டும். தமிழ்ப்பொதுவேட்பாளர் என்பது ஒரு அரசியல் தீர்மானம். எப்படி வட்டுக்கோட்டைத் தீர்மானம் காலம் கடந்தும் நிலைத்து நிற்கின்றதோ அதே போன்று தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரமும் அமையவேண்டும். நாடு முழுவதிலிருந்தும் ஆகக் குறைந்தது 15 லட்சம் வாக்குகளையாவது அவர் திரட்டிக்கொள்ளக் கூடியவராக இருக்கவேண்டும். முஸ்லிம் மற்றும் மலையக சமூகங்களின் அரசியல் தலைவர்கள் தென்னிலங்கை தரப்புகளுடன் ஒட்டிக் கொண்டிருந்து அமைச்சுப் பதவியை பெறுபவர்கள். அவர்கள் எந்தளவு தூரம் பொதுவேட்பாளர் விவகாரத்துடன் ஒத்துழைத்துச் செயற்படுவார்கள் என்பது கேள்விக்குறியானது. இவ்வாறான சூழலில் அனைத்துத் தரப்புகளுடனும் அவதானமாகவும் - நிதானமாகவும் கலந்துரையாடல் நடத்தவேண்டும். அதைவிடுத்து விக்னேஸ்வரன் போல, மின்னஞ்சலில் போதிய அவகாச மின்றி அழைப்பு அனுப்பிவிட்டு கலந்துரையாடல் நடத்த கூடாது. விக்னேஸ்வரன் தலைமை தாங்கிய எந்தவொரு விடயமும் நேர்சீராக நடைபெறவில்லை. மாகாண சபையாக இருக்கலாம் அல்லது தமிழ்மக்கள் பேரவை என்ற சிவில் அமைப்பாக இருக்கலாம் அல்லது அவரது கட்சியாக இருக்கலாம். எங்குமே அவர் ஒரே கொள்கையோடு இயங்காமையால் கடைசியில் அவையெல்லாமே குழப்பத்துக்குள் சிக்கி, செயற்றிறனை இழந்ததைக் கண்முன்னே பார்த்தோம். அப்படிப்பட்ட ஒருவர் தனது அவசரத்தனமான நடவடிக்கைகளால் தீர்க்கமான அரசியல் முடிவை குழப்பியடித்துவிடக்கூடாது என்பதே மக்களின் ஆதங்கம். (16. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/அவசரத்தனங்களும்_குழப்பங்களும்...
    • இலங்கையில் தமிழர்களுக்கு மாத்திரமல்லாமல் முஸ்லிம்களுக்கும் தாய்மொழி தமிழ்தான். இதனாலேயே தமிழர்களையும் முஸ்லிம்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் தந்தை செல்வா ஈடுபட்டார். இதனால் 'தமிழ்பேசும் மக்கள்' என்ற சொல்லை தந்தை செல்வா பாவிக்கத்தொடங்கினார். இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொட்டு இரு தரப்பு அரசியல்வாதிகளும் தமிழ் முஸ்லிம் ஒற்றுமை பற்றிப் பேசி வருகின்றனர். தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளும் பல விட்டுக்கொடுப்புகளைச் செய்து தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை கட்டியெழுப்ப அன்றிலிருந்து இன்று வரை பாடுபட்டு வருகின்றனர். ஆனால் முஸ்லிம்களோ மொழிரீதியான பிணைப்பைக் கணக்கிலேயே எடுப்பதில்லை. அவர்கள் எப்போதுமே தம்மைத் தனியான இனமாக முன்னிறுத்துவதிலும், தமது நலன்களைப் பெற்றுக்கொள்வதிலுமே கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். ஒரு சிறுபான்மை இனம் என்ற அடிப்படையில், முஸ்லிம்கள் தமது நலன்களை முன்னுரிமைப்படுத்திச் செயற்படுவதில் எவ்விதத் தவறுமில்லை என்று தமிழர்கள் கடந்துசென்றுவிடலாம். ஆனால், ஒரே மொழியைப்பேசிக்கொண்டு, சகோதர இனம் என்று சொல்லிக்கொண்டு, தமிழர்களை ஒடுக்கும் செயற்பாடுகளை முஸ்லிம்கள் மேற்கொள்வதைத்தான் ஜீரணிக்க முடியாமல் இருக்கின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் கல் முனையில் முஸ்லிம்கள் தமிழர்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும் செயற்பாடுகளை காலாதிகாலமாக மேற்கொண்டு வருகின்றனர். இதனால் கல்முனைத் தமிழர்கள் சாட்சிக்காரனின் காலில் வீழ்வதை விட சண்டைக்காரனின் காலில் வீழ்வதே மேல் என்ற நிலைப்பாட்டுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இலங்கைத்தீவை நிர்வகிப்பதற்கு 256 பிரதேச செயலர் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த 256 பிரதேச செயலகங்களின் ஊடாக அந்தந்தப் பிரதேசத்துக்குரிய மக்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். இப்படிப்பட்டநிலையில், கல்முனைப் பிரதேச செயலர் பிரிவில் முஸ்லிம் பிரதேச செயலர்களே தொடர்ச்சியாக நியமிக்கப்பட்டு வந்தனர், வருகின்றனர். இவர்கள் முஸ்லிம்களுக்குச் சார்பாக நடந்து கொள்வதாக தமிழர்கள் தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டி வந்தனர். இதனால் கல்முனை பிரதேச செயலர் பிரிவு 1989 ஆம் ஆண்டு முஸ்லிம் பிரிவு, தமிழ்ப் பிரிவு என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இவ்வாறு கல்முனைப் பிரதேச செயலர் பிரிவு இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது முஸ்லிம் பிரதேச செயலர் பிரிவு முழு அதிகாரத்துடன் செயற்படத் தொடங்கியது. தமிழ்ப் பிரிவுக்கு முழுமையான அதிகாரங்களை வழங்க விடாமல் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆட்சியாளர்களுக்கு சிங்களவர்கள் அழுத்தம்கொடுத்தனர், இப்போதும் அதே அழுத்தத்தைக் கொடுத்து வருகின்றனர். கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகம் 'உதவி அரசாங்க அதிபர் பிரிவு' என்றே இன்றுவரை அழைக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் அதன் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையை உள்ளார்ந்தமாக உணரலாம். தமிழ்ப் பிரிவுக்குரிய காணி, நிதி போன்ற விடயங்கள் முஸ்லிம் பிரிவின் கீழேயே உள்ளன. இலங்கை அரசியலில் பௌத்த பிக்குகள் தான் தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகின்றனர். அப்படியிருந்தும் ஞானசார தேரராலோ, சுமணரத்ன தேரராலோ கல்முனை தமிழ் பிரதேச செயலர் பிரிவை தரமுயர்த்த முடியவில்லை.சுமணரத்ன தேரர், ஞானசாரதேரர் ஆகியோரை விட முஸ்லிம் அரசியல்வாதிகளின் செல்வாக்கு கொழும்பு அரசியலில் கூடுதலான தாக்கம் செலுத்துகிறது என்பதே யதார்த்தம். கல்முனைப் பிரதேச செயலக தமிழ்ப் பிரிவை பூரண அதிகாரமுள்ள பிரதேச செயலகமாக தரமுயர்த்தக்கோரி கடந்த 35 வருடங்களாக கல்முனைத் தமிழர்கள் பல்வேறு சாத்வீகப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். எனினும் இன்றுவரை கல்முனை தமிழர்களுக்கு நீதி கிட்டவில்லை. இந்த வருடமும் தமிழ்ப் புத்தாண்டை கல்முனைத் தமிழர்கள் கரிநாளாக அனுஷ்டித்தனர். இந்த நிமிடம் வரை கொட்டும் மழைக்கு மத்தியிலும் கல்முனைத் தமிழர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இறுதியாக நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தில் கூடுதலான ஆசனங்களைப் பெற்றிருந்தும், கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸுக்கு தாரைவார்த்துக்கொடுத்தது. கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டதும் முதலமைச்சர் அஹமட் நஷீர் ‘வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு தான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்' என்று அறிக்கைவிட்டு, தமிழர்களின் அடிப்படைக்கோரிக்கையையே நிராகரித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் பதவிக்கு வந்த முதலமைச்சரான நஷீர் யுத்தம் நடைபெற்ற காலத்திலும் யுத்தம் முடிந்த பின்னரும் தமிழர்களுக்கு கிடைக்கவேண்டிய வேலை வாய்ப்புகள், உயர்கல்வி வசதிகள் போன்றவற்றை தமிழ்மொழியை பேசுகின்ற காரணத்தால் முஸ்லிம்கள் தட்டிப்பறித்து வருகின்றனர் என்றொரு குற்றச்சாட்டு பொதுவாக உண்டு. ஆனால், ஒரு பிரதேச செயலகத்தைக் கூட தரமுயர்த்த அனுமதிக்காமல், இன்னொரு சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளைக் கூடவா தட்டிப்பறிப்பார்கள்? தமிழ் அரசியல்வாதிகள் தீர்க்கமான ஒரு முடிவெடுக்கவேண்டிய தருணம் வந்து விட்டது. தமிழ் - முஸ்லிம் ஒற்றுமை என்றைக்கும் இருக்கத்தான் வேண்டும். ஆனால் அதைச் சொல்லிச் சொல்லியே முஸ்லிம்கள் எல் லாவற்றையும் பறித்தெடுக்க, நாம் மட்டும் இலவு காத்த கிளிகளாக ஏமாந்து கொண்டே இருக்கிறோம். இனியும் அவ்வாறான விட்டுக்கொடுப்புகளுக்கு இடமளிக்காமல், முதலில் தமிழர் நலன் அதன்பின்னரே தமிழ்-முஸ்லிம் ஒற்றுமை என்ற நிலைப்பாட்டுக்கு தமிழ்மக்களும், தமிழ் அரசியல்வாதிகளும் வரவேண்டும். அப்போதுதான் எஞ்சியவற்றையாவது இழக்காமல் காக்க முடியும். (17. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/இனநலனா!_ஒற்றுமையா!!!
    • முடிவாய் ரணிலையும் விடுறதாக இல்லை , அவர் பணக்கார வீட்டு  பிள்ளை , சந்து பொந்தெல்லாம் போகாமலா  இருந்திருப்பார் . பழம் இருக்கிறவன் அதன் சுவையை ருசிக்கிறான் ....அம்புட்டுதான் 
    • என்ன இது எங்க போனாலும் கொழுவி இழுக்க பார்க்கிறிங்க.  சுமா வை பற்றி தெரியும் என்றால் ஏன் கோத்திரத்தை அப்படி என்று எடுக்கிறீர்கள்.  என்ன பொறுத்தவரை உயர்ந்த குலமா அப்படியா இல்லையா என்பதல்ல ஏன் ஆதங்கம். பொறுக்கித்தனம் செய்பவனை பொறுக்கி என்பதுபோல தான் இது.  தப்பான பழக்கங்களை செய்கின்ற ஆள் தப்பான குலம் அவ்வளவு தான். 
    • பிரிதலும் புனிதமானது : சிவபாலன் இளங்கோவன் மார்ச் 2024 - சிவபாலன் இளங்கோவன் · உளவியல்   சஞ்சய்குமாருக்கு அவனது அத்தைப்பெண்ணான மீராவுடன் சிறு வயதிலிருந்தே காதல். சிறுவயதென்றால் பத்தாவது, பதினொன்றாவது படிக்கும் வயதிலிருந்தே. மீரா சென்னையில் இருந்து சஞ்சயின் கிராமத்து வீட்டிற்கு வரும்போதெல்லாம் சஞ்சய் ஏகாந்த மனநிலையில் இருப்பான்.  மீராவின் அப்பா சென்னையில் வங்கி மேலாளராக இருக்கிறார். சஞ்சய்க்கு அத்தனை வசதியில்லை. மீராவிற்குச் சிறு வயதில் சஞ்சயைப் பார்க்கபோவது மகிழ்ச்சியானதாகவே இருந்தது. இருவரும் கல்லூரி செல்லும் வரை அது ஓர் இளம் பிராயத்துக் காதலாகவே தொடந்து வந்தது. மீரா கல்லூரிப் படிப்பிற்காக டெல்லி சென்றாள். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாகச் சஞ்சயைத் தவிர்த்து வந்தாள். சஞ்சயால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அடிக்கடி அவளிடம் சண்டை போட்டான். முதலில் பொறுமையாக விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்தவள் அதன் பிறகு அவன் ஏதாவது பேச ஆரம்பிக்கும்போதே தொடர்பைத் துண்டித்துவிடச் செய்தாள். அதன் பிறகு எத்தனை முறை அவன் கால் செய்தாலும் அழைப்பை ஏற்க மாட்டாள், இன்னொரு பொழுது அவன் அழைத்தால் எதுவும் நடந்த மாதிரியே காட்டிக்கொள்ளாமல் பட்டும் படாமல் பேசுவாள். இப்படியே மூன்று வருடங்கள் சென்றது. டெல்லியில் அவள் படிப்பை முடித்து வந்தபோது சஞ்சய் ஒரு சாதாரண கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்திருந்தான். அவள் வந்தவுடன் அவளிடம் திருமணம் செய்துகொள்ளலாம் எனப் பேசினான். அவள் அலட்சியமாகச் சிரித்தாள். “உனக்கு என்ன பைத்தியமா? எனக்கு 22 வயதுதான் ஆகுது, அதுக்குள்ள உன்ன கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்கணுமா?” எனக் கோபமாகக் கேட்டாள் “உனக்கு என்ன பிடிக்கல, என்கிட்ட இருந்து விலகிப் போகணும்னு நினைக்கிற, அதான் ஏதேதோ காரணம் சொல்ற” என அவனும் கோபப்பட்டான் அவள் அவனிடம் எந்த வாக்குவாதமும் செய்யவில்லை. “உன்கிட்டலாம் பேசிப் புரிய வைக்க முடியாது”  என எழுந்து சென்றாள். சஞ்சய் அவன் பெற்றோர்களைக் கட்டாயப்படுத்தி மீரா வீட்டில் பெண் கேட்க சொன்னான். மீரா அவர்களிடம் பக்குவமாகச் சொல்லி நிராகரித்தாள். “எங்க வீட்ல உன்ன கல்யாணம் பண்ண ஒத்துக்க மாட்டாங்க, முதல்ல எனக்கே இப்ப கல்யாணம் பண்ண இஷ்டம் இல்ல, நான் வெளி நாடு போய் மாஸ்டர்ஸ் படிக்கப் போறேன், எனக்கு நிறைய கனவுகள் இருக்கு” என்று அவனிடம் சொன்னாள் “யாரோ நல்ல வசதியான ஒருத்தன புடிச்சிட்ட அதான் என்ன கழட்டிவிடற” என அவளை நடுரோட்டில் எல்லார் முன்பாகவும் கத்தி அசிங்க அசிங்கமான வார்த்தைகளால் அவமானப்படுத்தி அனுப்பினான். மீரா அழுதுகொண்டே வீட்டிற்கு வந்தாள். ஆண்-பெண் உறவில் சேர்தலைப் போலவே பிரிதலையும் நாம் இயல்பானதாகக் கருத வேண்டும். சேர்தலைப் போலவே பிரிதலின் முடிவையும் மதிக்கும் பண்பை அந்தக் காதலின் நிமித்தமே வளர்த்துக்கொள்ள வேண்டும்.   ஓர் உறவில் இருந்து வெளியே போவதற்கான கதவு எப்போதும் திறந்தே இருக்கிறது என்னும் நிலையில் இருக்கும் உறவுகளே மிகவும் பக்குவப்பட்ட உறவுகளாக, பரஸ்பர அன்பை ஆத்மார்த்தமாகக் கொண்ட உறவாக இருக்கும் என்பது எனது எண்ணம். அத்தனை கதவுகளையும் பூட்டிவிட்டு எங்களது உறவு ஆத்மார்த்தமானது என்று சொல்வது நிச்சயம் அபத்தமானது. ஒரு காதல் ஏற்படுதற்கு இருவருக்கும் இருக்கும் பக்குவம், பொறுப்புகள், முதிர்ச்சி, அக மற்றும் புறச் சூழல்கள் எனப் பல்வேறு காரணங்கள் இருக்கும். இந்தக் காரணங்கள் எல்லாம் மாறக்கூடியவை. ஒருவருக்கு இருக்கும் பக்குவமும், முதிர்ச்சியும் அவரின் வயதைப் பொறுத்து மாறிக்கொண்டிருக்கும் அதே போலவே ஒருவரின் அக, புறச் சூழல்கள் தொடர்ச்சியாக மாறிக்கொண்டிருப்பவை. ஒரு காதல் தொடங்கிய தருணத்தில் இருந்த இந்தக் காரணிகள் எல்லாம் அதற்குப் பிறகு மெல்ல மெல்ல மாறிக்கொண்டிருப்பவை. காதலுக்கான காரணங்கள் நீர்த்துப்போகும்போது அங்குக் காதலும் முடிந்து போகிறது. அதை நீட்டிக்க வேண்டிய தேவை இல்லாமல் போய்விடுகிறது, அப்போது அங்குக் காதல் முடிவுக்கு வருகிறது, முடிவுக்கு வரும் காதலை ஏற்றுக்கொள்ளாமல் அதற்கான அத்தனை கதவுகளையும் அடைத்துக் கட்டாயப்படுத்தும்போது அதுவரை இருந்த காதலே கேள்விக்குறியாகிறது, பழகிய கணங்களின் மீது ஓர் ஒவ்வாமை ஏற்படுகிறது, அந்த மூர்க்கத்தனத்தைக் காதலையே மலினப்படுத்தும், சிறுமைப்படுத்தும் செயலாகவே பார்க்க முடியும். சஞ்சய்க்கும் மீராவிற்கும் இருந்தது ஓர் இளம் பிராயத்துக் காதல். சிறு வயதிலேயே துளிர் விட்ட காதல். ஒரு வகையிலான இனக்கவர்ச்சி. ஒருவர் மீதான மோகமே அந்தக் காதலுக்கு அடிப்படை. அந்த வயதில் எந்தப் பொறுப்புகளும் இல்லை, பக்குவமும் இல்லை, இலக்குகளும் இல்லை. ஒருவர் மீது ஒருவர் ஈர்ப்பாக இருப்பது மட்டுமே அந்தப் பருவத்தில் போதுமானது, அதுவும் எப்போதாவது சந்திக்கிற சில நாள்களில் மட்டும் அந்த ஈர்ப்பு இருந்தால் போதுமானது, அதுவே பரஸ்பரக் காதல் என அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். ஆனால் இருவரும் வளரும் போது இருவருக்கான தனிப்பட்ட அடையாளங்கள் ஆளுமைப் பண்புகள் உருவாகின்றன. எதிர்காலம் குறித்த கனவுகளும், லட்சியங்களும் உருவாகின்றன. இந்தச் சூழலில் காதலென்பது வெறும் ஈர்ப்பு மட்டுமே அல்ல, பரஸ்பரமாக ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது, அவர்களின் ஆளுமைப் பண்புகளை ஏற்றுக்கொள்வது, அவர்களின் கனவுகளையும், லட்சியங்களையும் மதிப்பது. இதில் போதாமைகள் ஏற்படும்போது ஒருவர் மீதான ஒருவரின் காதல் தன்னை மறுபரிசீலனை செய்து கொள்கிறது. அந்த காதலை நீட்டிப்பதற்கான தேவைக் குறித்து கேள்வி எழுகிறது. ஒரு பிராயத்தில் ஒருவருடன் பழகிய காரணங்களுக்காகவே இந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் புறம் தள்ள முடியாது. மீராவின் லட்சியங்களும், கனவுகளும் சஞ்சயைப் பொறுத்த வரை தேவையில்லாதவை. மீராவிற்கு அவன் மட்டுமே பிரதானமாக இருக்க வேண்டும், மீதி அத்தனையையும் அவள் நிராகரிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறான். ஆனால், மீராவோ தனது விருப்பங்களுக்கும் கனவுகளுக்கும் அவன் துணை நிற்க வேண்டும், அவளின் இந்த முடிவுகளை அவன் மதிக்க வேண்டும் என நினைக்கிறாள். அப்படி அவன் இருக்கும்போதே அவனின் மீது காதலுடன் இருக்க முடியும் என அவள் உணர்கிறாள். அப்படி அவன் இல்லை மாறாக அவன் அவளை எப்போதும் கட்டுப்படுத்த நினைக்கிறான், அவன் சொல்வதற்கு மாறாக அவள் நடந்து கொள்ளக்கூடாது என நினைக்கிறான் என்பது அவளுக்கு ஏமாற்றமாக இருக்கிறது. ஏன் இந்தக் காதலைத் தொடர வேண்டும் என அவள் நினைப்பதற்கு அவனின் இந்தப் போதாமைகள் முக்கியமான காரணம். ஆனால், சஞ்சயை பொறுத்தவரை அவளின் இந்த எதிர்பார்ப்புகளைச் சிறுமைப் படுத்துகிறான். அவளுக்கு வேறு யார் கூடவோ பழக்கம் இருக்கிறது அதனாலே தன்னை நிராகரிக்கிறாள், அவளின் படிப்பிற்கும், வசதிக்கும் தன்னைத் தகுதியானவன் இல்லை என அவள் நினைகிறாள் என அவளை மலினப்படுத்துகிறான். ஒருபோதும் அவன் தனது நடவடிக்கைகள் குறித்து உணரவே இல்லை, அவளின் மீதே அத்தனை குற்றசாட்டுகளையும் சுமத்துகிறான். இது மீராவிற்கு மூச்சு முட்டவைக்கிறது, அதை அவனிடம் சொல்ல முற்படும்போது அவன் அவளைத் திருமணம் செய்து கொள்ளலாம் எனக் கட்டாயப்படுத்துகிறான். ஒரு போதும் அவன் மாறப்போவதேயில்லை என உணர்ந்து கொண்ட மீரா அவனிடம் இருந்து நிரந்தரமாகப் பிரிந்து விடும் முடிவை எடுக்கிறாள். அந்த முடிவைச் சஞ்சய் எப்படி எதிர்கொள்கிறான்? மிகவும் உணர்ச்சிவசப்பட்டு மூர்க்கமாக எதிர்கொள்கிறான். அவளின் அத்தனை வருடக் காதலைக் கொச்சைபடுத்துகிறான், அவளை மோசமாகச் சித்தரிக்கிறான் அவனது குற்றசாட்டுகளில் அவன் இத்தனை நாள்கள் அவள் மீது துளியும் காதல் கொண்டிருக்கவில்லை என்பதுதான் தெரிகிறது. இந்தப் பிரிவை எதிர்கொள்ள அவன் இன்னும் பக்குவப்பட வேண்டும். பக்குவமற்று, உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பிரிதலை அணுகும் போக்கு இரண்டு பாலினரிடையுமே இருக்கிறது. நவீன காதலில் பிரிதலை அணுகும் பக்குவம் கொஞ்சம் ஏற்பட்டிருக்கிறது என நினைக்கிறேன். ஆனால் சினிமாக்களும், ஊடகங்களும் காதலில் பெண்களை எதிர்மறையாகச் சித்தரிக்கும் போக்கு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதன் பாதிப்பில் வளரும் இளைஞர்கள் பெண்களின் மீதான பொத்தாம்பொதுவான சில பொதுப்பார்வைகளுடன் இருக்கின்றனர் அதனால் பிரிதலை, பிரிவதற்கான முடிவைப் பெண்களுக்கான ஒன்றாகவே, பெண்களின் குணாதிசயம் என்றளவிலே புரிந்து கொள்கிறார்கள், இது பிரிதலுக்கான காரணங்களை முழுமையாக உணர்ந்து கொள்வதிலிருந்து அவர்களைத் தடுக்கிறது. ‘அந்தப் பெண் என்னை வேண்டாம் என்று சொன்னதற்கு நானும் ஒரு காரணம்’ என்பதை ஏற்றுக்கொள்வதிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்பதால் பெண்களின் மீதான இந்தச் சித்தரிப்பைப் பெரும்பாலான ஆண்களும் மனமுவந்து ஏற்றுக்கொள்கிறார்கள். பிரிதலைப் பக்குவமாக ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதற்கான காரணங்களை விருப்பு, வெறுப்புகளின்றி, முன்முடிவுகளின்றி ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதுவரையிலான அந்தக் காதலில் உண்மையாக இருந்திருக்க முடியும். அப்படி இல்லாதவர்களால் அதுவரை இருந்த காதலே அர்த்தமற்றுப் போகிறது. எப்படிப் பிரிவது? “எனக்கு நல்லாவே தெரியுது, இந்த ரிலேஷன்சிப்னாலதான் நான் இவ்வளவு கஷ்டப்படுறேன், இதனால நான் நிறைய அவமானங்களைச் சந்திக்கிறேன், என்னைப் பற்றி நானே குற்றவுணர்ச்சி கொள்ற அளவுக்கு அவதிப்படறேன், இதுல இருந்து வெளிய போகணும்னு நினைக்கிறேன் ஆனால் போக முடியல, எப்படியாவது இதுல இருந்து நான் வெளிய போறதுக்கான வழிய சொல்லுங்க” தினமும் இப்படிப்பட்ட சிலரையாவது நான் எனது கிளினிக்கில் பார்த்து விடுகிறேன். எப்படிப் பிரிவது? என்பதுதான் அவர்களின் தவிப்பு. நீண்ட நாள் காதலன் தன்னை நிராகரிக்கிறான் என்பது தெளிவாகத் தெரிந்த பின்னரும் அவனை விட்டு நீங்க முடியாமல் இருப்பது, திருமணத்தைத் தாண்டிய ஓர் உறவு தவறு என்று தெரிந்த பின்னரும்கூட அதை விட்டு வெளியே போக முடியாமல் வருந்துவது, திருமணம் தரும் வலிகளில் இருந்து, வன்முறைகளில் இருந்து நிரந்தரமாகச் செல்ல முடிவு செய்து அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பது எனச் சேர்வது எப்படி என்று வருவோரைவிட, பிரிவது எப்படி என்னிடம் வருபவர்களின் எண்ணிக்கை சில நேரங்களில் அதிகமாகவே இருக்கிறது. அதுவும் நவீன காதல்களில் லிவிங்கில் இருக்கும் நிறைய இணையர்களில், தங்கள் உறவு முடிவுக்கு வருவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பவர்கள் ஏராளமானவர்கள். ஒரு பால் உறவிலும்கூடப் பிரிவை தாங்கிக்கொள்ள, ஏற்றுக்கொள்ளாமல் துயரத்தில் உழல்பவர்கள் நிறையப் பேர். இவர்கள் அனைவரின் பிரச்சினையும் ஒன்றே ஒன்று தான், பிரிவு தரும் வலியைத் தாங்க முடியாமல் இருப்பதே! ஓர் ஆத்மார்த்தமான உறவு என்பது எப்போதும் நம்மைப் பற்றியான நமது மதிப்பீட்டை உயர்வாகத்தான் கொண்டிருக்கும், எத்தனையோ முரண்பாடுகள் இருந்தாலும் ஒருவர் மீதான மதிப்பு என்பது மாறாமல் இருக்கும், பிறரின் முன்னிலையில் தனது இணையைப் பெருமிதமாகவே காட்டிக்கொள்ள விளைவார்கள். தனது இணை அவமானப்படுவதையோ அல்லது குற்றவுணர்ச்சி கொள்வதையோ ஒர் ஆத்மார்த்த காதலில் உள்ளவர்கள் நிச்சயம் விரும்ப மாட்டார்கள். ஓர் உறவின் விளைவாக நான் தாழ்வு மனப்பான்மை கொண்டாலோ, அவமானப்பட்டாலோ, குற்றவுணர்ச்சி கொண்டாலோ அந்த உறவு ஆத்மார்த்தமானதாக இல்லையென்று பொருள். அப்படிப்பட்ட உறவு இருவரையும் எப்போதும் காயப்படுத்திக்கொண்டேதான் இருக்கும், அப்படிப்பட்ட உறவை முடிவுக்குக் கொண்டு வருவதன் வழியாகவே அந்த உறவையும், அதில் உள்ளவர்களையும் காப்பாற்ற முடியும்.  அப்படிப்பட்ட உறவில் இருந்து பிரிய வேண்டும் என்ற முடிவு எடுக்கும்போது முதலில் அந்த முடிவில் உறுதியாக இருக்க வேண்டும். பிரிவதற்கான படிநிலைகள்: பிரிவதற்கான காரணங்களை உணர்வது பிரிவதற்கான முடிவைப் பரஸ்பரமாக எடுப்பது முடிவை ஏற்றுக்கொள்வது பிரிவின் வலியைக் கடந்து வருவது பிரிவில் இருந்து முழுமையாக வருவது பிரிய வேண்டும் என முடிவுசெய்துவிட்டால் அதற்கான காரணங்களை இருவரும் நிதானமாக, பரஸ்பரக் குற்றசாட்டுகள் இன்றி நிதானமாக உரையாட வேண்டும். ஏன் இதைத் தொடர வேண்டாம் என்பதை அத்தனை முதிர்ச்சியாக இருவரும் விவாதித்து முடிவெடுக்க வேண்டும். நிறைய நேரங்களில் பிரிய வேண்டும் என ஒருவர் மட்டுமே முடிவு செய்து விட்டு அதை இன்னொருவரிடம் தெரிவிக்காமல் அவரே புரிந்து கொள்ளட்டும் என அவரை அலட்சியம் செய்யும் போதுதான் நிறைய பிரச்சினைகள் வருகின்றன அது இந்தப் பிரிதலை இன்னும் சிக்கலாக்குகிறது. ஓர் உறவில் நாம் இருக்கும் போது அதை தொடர வேண்டாம் என நினைத்தால் அதற்கான காரணங்களைத் தெரிந்து கொள்ளக்கூடிய உரிமை இன்னொருவருக்கு இருக்கிறது, அதனால் அந்த முடிவைத் தெளிவாக இணையருக்கு தெரிவிக்கவேண்டிய கடமை அந்த முடிவை எடுத்தவருக்கு இருக்கிறது. அவர் அந்தக் காரணங்களை ஏற்றுக்கொள்கிறாரோ இல்லையோ அதைச் சொல்ல வேண்டியது ஒருவரின் பொறுப்பு. அதே போல நிறைய நேரங்களில், பிரியலாம் என்ற முடிவை எடுத்த பின்பும் அதை ஏற்றுக்கொள்வதில் இருக்கும் தயக்கம் அந்தப் பிரிவைச் சிக்கலாக்கும். பல்வேறு காரணங்களால் பிரிய வேண்டும் என்ற முடிவை எடுத்த பின், அதை இன்னொருவரிடம் தெளிவாகத் தெரிவித்த பிறகு அந்த முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும். “இல்லை நான் இன்னும் முழுமையாகப் பிரியவில்லை, நாளைக்கேகூட அவர் திரும்ப என்னிடம் பேசுவதற்கு வாய்ப்பிருக்கிறது, அப்படிப் பேசினால் திரும்பவும் அத்தனையும் தொடரும்” எனச் சாத்தியமற்ற எதிர்பார்ப்புகளை மீண்டும் மீண்டும் கொண்டிருப்பதால் அந்தப் பிரிவைச் சார்ந்த துயரம் இன்னும் பலமடங்காகும். ஓர் இழப்பை, அது இழப்பென்று ஏற்றுக்கொண்டால் மட்டுமே அந்த இழப்பில் இருந்து நம்மால் வெளியே வர முடியும். இல்லை நான் இழக்கவில்லை என நமக்கு நாமே சமாதானம் செய்து கொண்டிருந்தால் அந்த இழப்பில் இருந்து வெளியே வரும் காலமும் அதிகமாகும், காயமும் அதிகமாகும். பிரிதல் என்பது நினைவுகளாலானது. ஒருவரை விட்டு ஒருவர் நீங்கும்போது அவரைச் சார்ந்த நினைவுகளும், அவருடன் இருந்த கணங்களின் நல்லுணர்வுகளும் ஒருவரை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தும். அந்தத் துயரத்தை தவிர்க்க முடியாது. அந்தத் துயரமே அத்தனை காலக் காதலின் அடையாளம். அதை ஒருவர் கடந்துதான் வரவேண்டும். “என்னால அவளோட நினைவுகளை தாங்கிக்க முடியல,ரொம்ப கஷ்டமா இருக்கு, ஏதாவது மாத்திரை இருந்தா கொடுங்க, அவள மறக்கற மாதிரியான மாத்திரை” என நிறையப் பேர் கேட்பார்கள். ஒருவரை மறப்பதற்கான மாத்திரை என்பது உலகத்தில் இதுவரையிலும் கண்டுபிடிக்கவில்லை, அப்படி ஒரு மாத்திரை இருந்தால் உலகத்திலேயே அதிக விலையுள்ள மாத்திரை அதுவாகத்தான் இருக்கும். பிரிவு என்பது துயரமானதே. அந்தத் துயரத்தைக் கடந்து வருவதே ஒரு பிரிவின் உண்மையான சவால். கடந்து வர எவ்வளவு நாள் ஆகும் என்பது உங்கள் காதலை, உங்கள் முதிர்ச்சியை, பிரிவை ஏற்றுக்கொண்ட பக்குவத்தை அடிப்படையாக்க் கொண்டது. முழுமையாகப் பிரிவதுதான் பிரிவை இன்னும் இலகுவாக்கும். “நான் கொஞ்சமாக அவனிடம் இருந்து வெளியே வந்துவிடலாம் என இருக்கிறேன், திடீரென நான் பேசுவதை நிறுத்திக்கொண்டால் அவன் தாங்க மாட்டான், அதுவே நான் அவனிடம் இருந்து சிறிது சிறிதாக விலகினால் அவன் புரிந்துகொள்வான்” என்று ஒரு பெண் என்னிடம் சொன்னாள். நிறையப் பேருக்கும் பிரிதலையொட்டி இந்த நிலைப்பாடே இருக்கும். மதுவை எப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாதோ அதே போலவே ஒரு காதலையும் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாது.  தொடர வேண்டாம் என முடிவு செய்து விட்டால் அதில் முழுமையாக இருந்தால் வெளியே வர முடியும். இடையிடையே பேசிக்கொண்டு, பார்த்துக்கொண்டு, ஒருவரை ஒருவர் கண்காணித்துக்கொண்டு இருந்தால் பிரிவு சிக்கலானதாக நிறையக் காயப்படுத்துவதாக, மனவுளைச்சல் கொடுக்கக்கூடியதாக இருக்கும். “நான் அவ கூட ரொம்ப இண்டிமேட்டா இருந்துட்டேன், செக்ஸ் கூட வச்சிகிட்டோம், ஆனால் இனி அப்படி இல்லாம வெறும் ஃபிரண்ட்ஸா மட்டும் இருக்கலாம்னு இருக்கேன்” என அந்த இளைஞன் சொன்ன போது. அப்படி இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு எனச் சொன்னேன். ஓர் உறவு ஒரு கட்டத்தை அடைந்துவிட்டால் அதற்கு பிறகு அதன் முந்தைய நிலைக்குக் கொண்டு வந்து அதை நிறுத்துவது கடினம். தினமும் காலையில் இருந்து மது அருந்தும் ஒருவன் திடீரென ஒரு நாள் வந்து இனி நான் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே மது அருந்துவேன் எனச் சொல்லும் போது அது எப்படிச் சாத்தியமில்லையோ அதே போலவே ஓர் உறவை அதன் முந்தைய நிலைகளுக்கு ஒருபோதும் எடுத்து வர முடியாது. பிரியவேண்டும் என முடிவெடுத்தால் அதில் உறுதியாகவும், முழுமையாகவும் இருந்தால் மட்டுமே பிரிய முடியும். ஓர் உன்னதமான உறவு என்பது எத்தனைக் காலம் அது நீடித்தது என்பதில் மட்டும் இல்லை, ஒருவேளை அது ஒரு முடிவுக்கு வந்தால் அந்தப் பிரிவின் முடிவை எத்தனை காதலுடன் அதை அணுகியது என்பதில்தான் இருக்கிறது. பிரிதலின் வழியாகவே நாம் அதிலிருந்த காதலை முழுமையாக உணர முடியும்.   https://uyirmmai.com/article/uyirmmai-magazine-march-2024-article-05/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.