Jump to content

முன்னாள் போராளிகளை இணைத்து பயங்கரவாதத்தை தலைதூக்கச் செய்ய புலம்பெயர் தரப்பு முயற்சி- பாதுகாப்புச் செயலாளர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, satan said:

அதிகமான வியாபாரிகள் சிங்களவரும், கொழும்பில் இருந்து வந்தவர்களுமே. யாழ்ப்பாணத்தில் உள்ளவர்கள் தமிழர், வியாபாரிகள் ஏன் சிங்களத்தில் கதைக்கிறார்கள்? சிங்களத்தை திணிக்கிறார்களா? ஒருகாலத்தில் கொம்பிலிருந்து விரட்டப்பட்டோம் இப்ப நாடுமுழுவதும் தன்னோடது என்று எங்கள் வீட்டுக்குள்ளேயே வந்திருந்து எங்களை விரட்டுறான். ஒரு உறவு பதித்திருந்தார்; எங்களுக்கு சிங்களம் தெரியும், அவர்களுக்கு தமிழ் தெரியும், எங்களுக்குள் பாரபட்ஷம் இல்லை, இது போதும் என்பது போல் இருந்தது. அவர்கருத்து தமிழ் உணர்வு இல்லை. எங்கள் உரிமைகள் பறிபோகிறது தெரியவில்லை. சாதாரண சிங்கள மக்களுக்கு எப்படி புரியும்? அவர்களுக்கு பொய்யான கதைகளையே பரப்புகிறார்கள். தமிழர், சிங்களவர்களாக மாறுவதற்கு பொருளாதாரத்தோடு தமிழ் பற்றிய உணர்வு இல்லாமை, சுற்றி வர என்ன நடக்கிறது என்பதை புரிந்து கொள்ளாமையும் காரணம். பொதுவாக பெரும்பாலானோர்; சிங்களம் படித்தால் பிரச்சனை முடிந்து விட்டது என்கிற முடிவிக்கே வந்து விட்டார்கள். இது ரொம்ப ஆபத்தானது. ஏன் ஒரு பொது மொழி ஆங்கிலத்தை ஊக்குவிக்கக்கூடாது?

கடற்படை தரைப்படை காவல் நிற்க, கடல் வளத்தை கொள்ளையடிக்கின்றான், இனி இலங்கையில் பல தமிழ் பிச்சைகாரர்களை காணலாம்

Link to comment
Share on other sites

  • Replies 152
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, உடையார் said:

கடற்படை தரைப்படை காவல் நிற்க, கடல் வளத்தை கொள்ளையடிக்கின்றான், இனி இலங்கையில் பல தமிழ் பிச்சைகாரர்களை காணலாம்

 தமிழருக்கு: தொழில் செய்ய சிங்களம் தெரியவில்லை, தொழிலும் தெரியவில்லை. அதனால் சிங்களவன் வருகிறான் நல்ல முன்னேற்றம். முதலில் தமிழர் சிங்களம் படித்துவிட்டு, சிங்கள பிரதேசத்துக்கு போய் தொழில் செய்யலாம் இலங்கையனாக.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, satan said:

அங்கு அரசியல் மொழி எல்லோருக்கும் பொதுவானது. குடிபெயர்ந்தோர் அந்நாட்டு மொழியை கற்றுத்தான் ஆகவேண்டும்.

 

தமிழர் பிரதேசங்களில் உள்ள வேலை வாய்ப்பை, சிங்களவரைக் கொண்டு நிரப்புவதற்கு இது ஒரு தந்திரம், பயிற்சி அளிக்கிறார்கள். எம்மவர் வேலை வாய்ப்பு இன்றி அவதிப்படும்போது, ஏன் சிங்களவர் தமிழ் பேசிக்கொண்டு இங்கு வரவேண்டும்? சரி தமிழருக்கு சிங்கள மாநிலங்களில் வேலை வாய்ப்பு அளிக்கப்படுகிறதா? சிங்களவர் தமிழ் கதைக்கிறார்கள், என்று புளுகித் தள்ளும் நாம் அதன் பின்னால் இருக்கிற தந்திரோபாயத்தை ஏற்றுக்கொள்ளாமல் ஏமாந்து விடுகிறோம், அல்லது சேர்ந்து ஆதரித்தால் நமக்கு பிரச்னை இல்லாமல் நம் முதலீடுகளை செய்யலாம் என்கிற எதிர்பார்ப்பா?

தமிழன் ரொம்ப நல்லவனப்பா 
எப்படி புரட்டி புரட்டி போட்டு அடித்தாலும் 
தங்குவான் ! 
அதுகூட பெருசில்லை அடிக்க அடிக்க அடிக்கிற எமக்கே 
வக்காலத்துவாங்க வாங்க கூட ஒரு கூட்டம் வரும். 

தமிழ் தெரிந்த தமிழனுக்கு தமிழ் பிரதேசத்த்தில் வேலை இல்லை 
சிங்களவன் வந்து தமிழில் பேசுகிறானாம் அப்படியே மெய்  சிலிர்த்து நிற்கிறார்கள் 

இது தமிழில் எழுதி வேறு வாதம் செய்யவேண்டுமா?? 

Link to comment
Share on other sites

5 hours ago, goshan_che said:

கற்பகதரு,

இரெண்டு விடயங்களை அவதானியுங்கள்.

1. பிரிந்து போகும் உரிமையுள்ள வெளியக சுய உரிமை. பிரிந்து போகும் உரிமையற்ற உள்ளக சுய உரிமை என சுய உரிமை இருவகைபடும். கொசோவோ கோரி, இறுதியில் அடைந்தது முதலாம் வகை. வேறுபட்ட நிலைகளில் அவுஸ்ரேலியா, இந்திய, அமெரிக்க மாகாணங்கள், ஏன் அந்தமான் நிக்கோபர் தீவு, அமேசன் காட்டு பழங்குடிகள் அனுபவிப்பது உள்ளக சுய உரிமை. இந்த பழங்குடிகள் வாழும் இடத்தில் பிரேசில் அல்லது இந்திய சட்டம் செல்லாது. அங்கே ஒரு 12 வயது குழந்தை பாலியல் உறவில் ஈடுபடுவது வழக்கமாயின் - அதுவே, அவர்களின் உள்ளக சட்டத்தின் அடிப்படையில் ஏற்று கொள்ளப்படும். அவர்களது காணி, பொலீஸ் சகல அதிகாரமும் அவர்கள் வசமே இருக்கும். ஆனால் பிரிந்து போக முடியாது.

2. இந்தியவை பொறுத்தவரை -நாடு உருவாகும் போதும் அம்பேத்கர் அரசியலமைப்பை எழுதும் போதும் இந்தியாவை ஒரு யூனியன் “கூட்டு” என்பதாகவே கட்டமைக்கிறார். State list, தனியே மாநிலங்கள் மட்டும் உரிமை உள்ள விடயங்கள் (காணி - சில விடயங்கள் தவிர, பொலிஸ்) central list - கூட்டு அரசு மட்டும் உரிமை செலுத்தும் விடயங்கள் (பாதுகாப்பு, அயலக துறை, ரயில்வே) மற்றும் concurrent list இரு அரசுகளுக்கும் உரிமை உள்ள விடயங்கள் ( கல்வி, சுகாதாரம், துறைமுகம்) என அதிகாரங்களையும் அரசியலமைப்பு தெளிவாக வகை செய்கிறது. ஆனால் பிரிந்து போகும் உரிமை பற்றி முதலாம் அரசியலமைப்பு மெளனமாக இருந்தது. சுதந்திரத்துக்கு பின் மாநிலங்களிலும் மத்தியிலும் காங்கிரசே ஆட்சியில் இருந்ததாலும், இந்தி/மலையாள லாபியின் கபட நகர்வுகளாலும் யூனியன் என்ற பதம் தவிர்க்கப்பட்டு - மைய அரசு அல்லது மத்திய அரசு என்ற பதம் உள்ளே வருகிறது. கூடவே ஸ்டேட் லிஸ்டில் இருந்த கல்வி கொன்கொரெண்ட் லிஸ்டுக்கு போகிறது. இந்த காலத்திலே திராவிட நாடு கொள்கை எழுந்து, பின் பிரிவினையை முடக்கும் சட்டம் வந்து - திராவிட நாட்டு கொள்கையை அண்ணா மாநில சுயாட்சி (பாதுகாப்பு, அயலக உறவு தவிர மிகுதி எல்லாம் மாநிலத்துக்கே) கொள்கையாக மாற்றினார்.

இந்திய தமிழர்களுக்கும் இந்திய சட்டப்படி வெளியக சுயநிர்ணய உரிமை மறுக்கப்பட்டதை ஏற்றுக்கொள்கிறீர்கள். இலங்கையில் இப்போது இடம்பெறுவது உள்ளக சுயநிர்ணய உரிமைக்கான முயற்சிகள். கூட்டமைப்பும்,  கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் இதை தெளிவாக சொல்கிறார்கள். விக்னேஸ்வரன் இதை சொல்லவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இதை எழுதுவதா இல்லையா.. வீணாக ஏன் தேவையற்ற விவாதங்களுக்கு போகவேண்டும் என நினைத்தாலும்.. எழுதாமல் இருக்கமுடியவில்லை அதனால் எழுதுகிறேன்..

இங்கே அவரவருக்கு கிடைத்த தனிப்பட்ட அனுபவங்களை வைத்து சிங்களவர்கள் தமிழ் கதைக்கிறார்கள்.. வியந்து போய்விட்டோம், வரவேற்கதக்க மாற்றம் என கூறுகிறார்கள்.. ஆனால் எனக்கும், நான் அறிந்த பலருக்கும் எதிர்மறையான அனுபவமே உள்ளது.. நாங்கள் இலங்கையில் இருந்த காலம் தொடங்கி இப்பொழுது வரை கொழும்பிலும் சில சிங்கள கிராமப்புறங்களுக்கும் சென்றபோதும்,  கடந்த வருடமும், இதை எனது தனிப்பட்ட விஷயம் சம்பந்தமாக அனுபவிக்கநேரிட்டது, அத்தோடு ஊரில் இருக்கும் எனது தந்தை அடிக்கடி கூறும் விடயம், “ சிறுக சிறுக எல்லா இடங்களிலும் சிங்களவர்களே வேலைக்கு அமர்த்தப்படுகிறார்கள். சிங்களம் தெரியாமல் ஒரு வேலையும் செய்யமுடியாதிருக்கிறது” என்று.. ஏனெனில் அவருக்கு, அவரது தொழில் சம்பந்தமாக வரும் சில முக்கிய கடிதங்கள் சிங்களத்திலேயே வருகிறது.. சிங்களவர்களே முக்கிய பதவிகளிலும் இருக்கிறார்கள்.. ஆகையால் எங்களது தனிப்பட்ட அனுபவங்களை வைத்து பொதுவான ஒரு பிரச்சனைக்கான தீர்வாக கூறலாமா? தெரியவில்லை

இரண்டாவது, இங்கே யாரும் இன்னொரு மொழியை கற்கவேண்டாம் எனக்கூறவில்லை,இலங்கையில் தமிழும் ஒரு மொழி என அங்கீகரிக்கப்பட்ட நிலையில் இன்னொரு மொழியான சிங்களத்தை கற்க எவ்வாறு கட்டாயப்படுத்தப்பட்டார்கள், அதனால் உருவான பிரச்சனைகள். இப்பொழுது எவ்வாறு, எத்தகைய வழிகளில் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள், அதனால் என்ன பிரச்சனைகள்  என பொருள்படத்தான் எழுதியுள்ளார்கள். ஆகையால் வீணாக புலம்பெயர்ந்தவர்கள், ஊரில் உள்ளவர்கள் எனபிரிக்காமல் இருந்தால் நல்லது என நினைக்கிறேன்.
நன்றி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, goshan_che said:

தமிழ் தேசியம் என்றால் என்ன

தேசியம் என்பதற்கு பின்வரும் காரணிகள் இன்றி அமையாதன:

1. தனித்துவமான மொழி, வரலாறு, கலை கலாசாரம், பண்பாட்டியல்

2. பாரம்பரிய வாழிடம்

3. தம்மை தாமே தேசியமாக உணர்தல் (subjective)

4. வெளியார் நம்மை தேசியமாக அங்கீகரித்தல் (objective).

இங்கே தமிழ் தேசியம் என்பது ஒன்றுதான், அது உலகெங்கும் உள்ள தமிழர் யாவருக்கும் பொருந்தும். எமது பாரம்பரிய வாழிடம்கள் தமிழ் நாடும், இலங்கையின் வட கிழக்கும்.

அதாவது தமிழ்நாடு, இலங்கையின் வடகிழக்கு பாரம்பரிய வாழிடத்தில் பெரும்பான்மையாகவும், வரலாற்று தொடர்சியாகவும், இந்த வாழிடத்துக்கு வெளியேயும் வாழும் தனித்துவ மொழி, வரலாறு, கலை கலாச்சார, பண்பாட்டியலை கொண்ட ஒரு தேசிய இனம் நாம்.

சரியான விளக்கம் கோஷான். இந்தப் புரிதல்கூட இல்லாமலா 30-40 வருடம் போராட்டம் நடந்தது?

நிலாந்தனின் இன்றைய கட்டுரையில் இருந்து..

Quote

தேசியம் எனப்படுவது ஒரு மக்கள் கூட்டத்தை திரள் ஆக்குவது. பொதுவாக ஒரு மக்கள் கூட்டத்தை பின்வரும் அம்சங்கள் திரள் ஆக்குவதுண்டு. இனம், மொழி, நிலம், பொதுப் பண்பாடு, பொதுப் பொருளாதாரம் இவைதவிர அடக்குமுறை போன்றனவும் ஒரு மக்கள் கூட்டத்தை திரள் ஆக்கும்.

இந்த அடிப்படையில் பார்த்தால் நிலம் அதாவது தாயகம் இது ஒரு மக்கள் கூட்டத்தைத் திரள் ஆக்கும் அடிப்படை அம்சங்களில் ஒன்று. தமிழ் நோக்கு நிலையில் இருந்து பார்த்தால் தாயகம் எனப்படுவது வடக்கு கிழக்கு இணைந்த வரலாற்று தொடர்ச்சி மிக்க ஒரு நிலப்பரப்பு. எனவே ஈழத்தமிழர்கள் தாயகம் என்று கூறும்பொழுது அது பிரயோகத்தில் வடக்கு கிழக்கு இணைப்பையே குறிக்கிறது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

எனக்கு இதை எழுதுவதா இல்லையா.. வீணாக ஏன் தேவையற்ற விவாதங்களுக்கு போகவேண்டும் என நினைத்தாலும்.. எழுதாமல் இருக்கமுடியவில்லை அதனால் எழுதுகிறேன்..

இங்கே அவரவருக்கு கிடைத்த தனிப்பட்ட அனுபவங்களை வைத்து சிங்களவர்கள் தமிழ் கதைக்கிறார்கள்.. வியந்து போய்விட்டோம், வரவேற்கதக்க மாற்றம் என கூறுகிறார்கள்.. ஆனால் எனக்கும், நான் அறிந்த பலருக்கும் எதிர்மறையான அனுபவமே உள்ளது.. நாங்கள் இலங்கையில் இருந்த காலம் தொடங்கி இப்பொழுது வரை கொழும்பிலும் சில சிங்கள கிராமப்புறங்களுக்கும் சென்றபோதும்,  கடந்த வருடமும், இதை எனது தனிப்பட்ட விஷயம் சம்பந்தமாக அனுபவிக்கநேரிட்டது, அத்தோடு ஊரில் இருக்கும் எனது தந்தை அடிக்கடி கூறும் விடயம், “ சிறுக சிறுக எல்லா இடங்களிலும் சிங்களவர்களே வேலைக்கு அமர்த்தப்படுகிறார்கள். சிங்களம் தெரியாமல் ஒரு வேலையும் செய்யமுடியாதிருக்கிறது” என்று.. ஏனெனில் அவருக்கு, அவரது தொழில் சம்பந்தமாக வரும் சில முக்கிய கடிதங்கள் சிங்களத்திலேயே வருகிறது.. சிங்களவர்களே முக்கிய பதவிகளிலும் இருக்கிறார்கள்.. ஆகையால் எங்களது தனிப்பட்ட அனுபவங்களை வைத்து பொதுவான ஒரு பிரச்சனைக்கான தீர்வாக கூறலாமா? தெரியவில்லை

இரண்டாவது, இங்கே யாரும் இன்னொரு மொழியை கற்கவேண்டாம் எனக்கூறவில்லை,இலங்கையில் தமிழும் ஒரு மொழி என அங்கீகரிக்கப்பட்ட நிலையில் இன்னொரு மொழியான சிங்களத்தை கற்க எவ்வாறு கட்டாயப்படுத்தப்பட்டார்கள், அதனால் உருவான பிரச்சனைகள். இப்பொழுது எவ்வாறு, எத்தகைய வழிகளில் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள், அதனால் என்ன பிரச்சனைகள்  என பொருள்படத்தான் எழுதியுள்ளார்கள். ஆகையால் வீணாக புலம்பெயர்ந்தவர்கள், ஊரில் உள்ளவர்கள் எனபிரிக்காமல் இருந்தால் நல்லது என நினைக்கிறேன்.
நன்றி. 

சிங்களவர்கள் தமிழர் பகுதியில் வேலைக்கு அமர்த்தப்படுகிறார்கள் .உண்மை ...காரணம் என்ன /
அவர்கள் உஙகள மாதிரி தமிழ் படிக்க மாட்டோம் என்று அடம் பிடிக்கவில்லை.
அடுத்தது யாழில் கூலி வேலைக்கு தட்டுப்பாடு ...வேலைக்கு ஆட்களை பிடித்தாலும் அதிக கூலி கேட்பது...வேலையில் மரியாதை இல்லை .
சிங்களவர்கள் அப்படியில்லை...தொழிலை  கடவுளாய் நினைத்து செய்கிறார்கள் ...காரணம் வறுமை ....தமிழ்ப் பகுதியில் வெளிநாட்டு காசு ...அவர்களுக்கு வேலையை பற்றிய அக்கறை இல்லை...எல்லாத்திலும் விதி விலக்கணவர்களும் உண்டு 
தமிழர் வைத்தியயர் ,இஞ்சினியர் என்று படித்தாலும் பொதுவான இலகுவான துறையைத் தான் இவர்கள் தேர்ந்தெடுக்கிறார்கள்...[உ+ ம்] வைத்தியர்களுக்குள்ளேயே பல பிரிவுகள் இருக்கு ...ஆனால் தமிழாக்கள் படிப்பது பொதுவான மருத்துவம் ...பல சிறப்பு மருத்துவத்திற்கு கட்டாயம் சிங்களவர் அல்லது முஸ்லீம்கள் வர வேண்டி இருக்குது ....கஸ்ட பட்ட தமிழ்ப் பகுதிகளுக்கே தமிழர் போய் வேலை செய்ய விருப்பமில்லை ...ஆனால் சிங்களவர்கள் ஓம் என்று சொல்லி பணி புரிய வருகிறார்கள் ...ஆகவே இங்கே இருந்து கொண்டு எல்லா இடமும் சிங்களவன் புகுந்திட்டான் என்று கத்துவது சுத்த மடத்தனம் .
ஏற்கனவே மேலே எழுதியது தான் ...தமிழர்கள் மட்டும் சிங்களம் படிக்க வேண்டும் என்று  கட்டாயப்படுத்தப்படவில்லை ...சிங்களவர்களும் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள் ...ஒரு மொழி பேசுபவர்களை மட்டும் கட்டாயப்படுத்தினால் மட்டும் தான் அது இனவாதம்.
புலம்பெயர்ந்தவர்கள் வருடத்திற்கு ஓர் ,இரு தடவை ஊருக்கு போய்ட்டு குறைந்தது ஒரு மாசம் நின்று போட்டு வந்து இலங்கையில் எங்கை பார்த்தாலும் சிங்களமாயிருக்கு என்று புலம்புவது வீண் வேலை
 

18 hours ago, குமாரசாமி said:

அது சரி மொழியை படிச்சால் தமிழர்ரை பிரச்சனை முடிஞ்சுது.
இன்னும் கொஞ்ச காலத்தாலை ஈழத்தமிழருக்கு பிரச்சனையே இல்லையெண்டு கொடி தூக்கிற ஆக்கள் உங்களைப்போல ஆக்களாய்த்தான் இருக்கும்.

அண்ணா ,எல்லாருக்கும் தமிழீழ கனவு ,கனவாகவே போய் விடும் என்ற பயம் தான் ...அதற்காக நாங்கள் இங்கேயிருந்து கொண்டு பிரச்சனைகளை திணிக்க கூடாது  அல்லது நாங்கள் நினைத்த மாதிரி நடக்க வேண்டும் என்று எதிர் பார்க்க கூடாது ...அந்த மக்களை அவர்கள் விரும்பின மாதிரி வாழ விடுங்கள் ...நீங்கள் எழுதுவது உங்கள் எதிர்பார்ப்பு ....நான் எழுதுவது பிராக்டிகல் 🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

சரியான விளக்கம் கோஷான். இந்தப் புரிதல்கூட இல்லாமலா 30-40 வருடம் போராட்டம் நடந்தது?

நிலாந்தனின் இன்றைய கட்டுரையில் இருந்து..

 

இந்த புரிதலை ஏற்படுதாமலே 40 வருடம் போராடிய எம் மீதுதானே பிழை ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, goshan_che said:

கொழும்பான்,

நீங்கள் கேட்ட கேள்விகளும் இங்கே எழுந்த சில வாதங்களும் தமிழ் தேசியம் என்பது ஏதோ அருவருக்க தக்க கொள்கை அல்லது வட கிழக்குக்கு வெளியே வாழும் தமிழரை விலக்கி அமைவது என்பதாக தொனிப் பட்டதால் இதை எழுதுகிறேன்.

தமிழ் தேசியம் என்றால் என்ன

தேசியம் என்பதற்கு பின்வரும் காரணிகள் இன்றி அமையாதன:

1. தனித்துவமான மொழி, வரலாறு, கலை கலாசாரம், பண்பாட்டியல்

2. பாரம்பரிய வாழிடம்

3. தம்மை தாமே தேசியமாக உணர்தல் (subjective)

4. வெளியார் நம்மை தேசியமாக அங்கீகரித்தல் (objective).

இங்கே தமிழ் தேசியம் என்பது ஒன்றுதான், அது உலகெங்கும் உள்ள தமிழர் யாவருக்கும் பொருந்தும். எமது பாரம்பரிய வாழிடம்கள் தமிழ் நாடும், இலங்கையின் வட கிழக்கும்.

அதாவது தமிழ்நாடு, இலங்கையின் வடகிழக்கு பாரம்பரிய வாழிடத்தில் பெரும்பான்மையாகவும், வரலாற்று தொடர்சியாகவும், இந்த வாழிடத்துக்கு வெளியேயும் வாழும் தனித்துவ மொழி, வரலாறு, கலை கலாச்சார, பண்பாட்டியலை கொண்ட ஒரு தேசிய இனம் நாம்.

இலங்கையின் வட கிழக்கில் நாம் எம்மை ஒர் தேசிய இனமாக உணர்ந்து எமது வாழிடத்தில் சுய நிர்ணயமாக எமது அரசியலை தீர்மானிக்கும் உரிமையை கோருகிறோம் என்பதற்கு வட்டு கோட்டை தீர்மானமும் அதன் பின் வந்த போராட்டமும் தேர்தல்களுமே சாட்சி. மேலும் சாட்சி தேவைபடின் ஒர் சர்வஜன வாக்கெடுப்பை இந்த பகுதியில் நடத்தி பார்க்கலாம்.

எம்மை இவ்வாறு அங்கீகரிக்க கோரி நாம் ஏனையோரை கோருவதே 77இல் இருந்து எமது போராட்டம் (objective recognition). 
 

தமிழ் தேசிய இனமாக எமக்கு தமிழக்கதிலும், இலங்கையின் வட கிழக்கிலும் சுயநிர்ணய உரிமை உள்ளது. இந்தியா இதை அங்கீகரித்து, தமிழகம் தனது சுயநிர்ணயத்தை இந்திய கூட்டாட்ட்சியில் ஒன்று சேர்த்து மாநில சுயாட்சியில் பங்காளியாக, இந்திய யூனியனில் ஒரு அங்கமாக இருக்கிறது.

இலங்கையிலும் எமது சுய நிர்ணயத்தை அங்கீகரித்து, ஒரு கூட்டாட்சி அடிபடையில் (புலிகள் பிரிந்து செல்லும் உரிமையுடன் கூடிய கூட்டாட்சி என்றார்கள்) எம்மை அரசில் (கவனிக்க - அரசில், அரசாங்கத்தில் அல்ல) பங்குதாரர் ஆகவேண்டும் என்பதே தமிழ் தேசிய அரசியல்( வட கிழக்கில் அரசாங்கம் எம்மாலே நடத்தபடும், ஆனால் இலங்கை அரசில் நாமும் பங்குதாரர்கள்) .

இப்போ தமிழ் தேசிய அரசியல் என்றால் என்ன என்பது விளங்கியாயிற்று.

நீங்கள் எப்படி தமிழ் தேசியவாதியாக ஆகலாம்?

இப்படி ஆக வேண்டும் என கட்டாயம் ஏதுமில்லை. ஒவ்வொரு தனி தமிழ் மனிதனும் தமிழ் தேசியத்தை ஏற்க வேண்டும் என்ற நிபந்தனை ஏதும் இல்லை. பாரம்பரிய வாழிடத்தில் வாழும் பெரும்பாலனோர் ஏற்றால் போதுமானது. ஆனா தமிழ் தேசியம் வாழிடத்துக்கு உள்ளே வெளியே வாழும் எல்லோருக்குமானது. மேற்சொன்ன தமிழ் தேசியதுக்கான வரைவிலக்கணத்தை நீங்கள் ஏற்றால் நீங்களும் ஒரு தமிழ் தேசியவாதியே. மனோ கணேசன் செய்யும் அரசியல் தமிழ் தேசிய அரசியல் அல்ல. ஆனால் அவர் இந்த கொள்கையை ஏற்கிறார். எனவே அவர் ஒரு தமிழ் தேசியவாதி. புலம் பெயர் வேறு நாட்டின் கடவுசீட்டு கொண்டுள்ள தமிழரும், சீமானும், பேரா ராமசாமியும் இப்படியே.

எப்படி பண்புகளை வளர்துகொள்ளலாம்

நீங்கள் தமிழ் தேசியவாதியாக இருக்கவே வேண்டிய அவசியம் இல்லை, எனும் போது இந்த பண்புகளை நீங்கள் வளர்க வேண்டிய அவசியமும் இல்லை. உளப்பூர்வமாக நீங்களும் மனோவை போல் தமிழ் தேசியத்யில் நம்பிக்கை கொண்டிருந்தால் போதுமானது. இலாவிடிலும் நீங்கள் தமிழர்தான். 100% சகல தமிழர்களும் தமிழ் தேசியவாதிகளாக இருக்க வேண்டியதில்லை.

ஆனால் எமக்கென ஒரு பாரம்பரிய வாழிடம், அங்கே எமது அரசாங்கம் இருக்கும் போது, வாழிடத்துக்கு வெளியே எம்மை “பற தெமிலோ” என்று விரட்டி அடிக்கும் போது உரிமையோடு ஓடிப் போவதற்கு ஒரு இடம் இருக்கும். 

நன்றி கோசான் உங்கள் பதிலுக்கு 
இப்பொழுது விளங்குகின்றது தமிழ்தேசியம் என்றால் என்ன என்பது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, vasee said:

அனால் வட இந்தியர்கள் மிகவும் மோசம் எடுத்தவுடன் இந்தியில் பேச ஆரம்பித்து வுடுவார்கள் அதில் குறிப்பாக ஒருவர் எனக்கு இந்தி தெரியாது எனக்குத்தமிழ்த்தான் தெரியும் என்றதற்கு தமிழ் மொழி தெரிந்து என்ன இலாபம் என்று திருப்பிக்கேட்டார்.

இலங்கையை சேர்ந்த உங்களிடம் தனது நாட்டு இந்தி தெரியுமா என்று கேட்ட இந்தியரை பற்றி தான் நினைக்கிறேன் 😂
எனது உறவினர் ஒருவர் தமிழ் இசை பிரியர் ரகுமான் இசை கச்சேரிக்கு டிக்கட் வாங்கி போனவர் அங்கே இந்தி பாட்டு தான் அதிகம் என்று ஏமாற்றம் தெரிவிந்தார்.இந்தி பட உலகம் ரகுமானை புறக்கணிப்பதாக யாழ்களத்தில் கவலை தெரித்திருந்தார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இப்ப யாழ்ப்பானத்தில் வியாபாரிகள் சிங்கள மொழி பேச தொடங்கிவிட்டார்கள் சிங்கள மொழி படிக்க நான் கூட வெறு இடத்திற்கு வேலை  மாற்றம் செய்ய இருக்கிறன் மொழியை படித்தால் பல பிரச்சினைகளை பேசி தீர்க்கலாம் .

ஒரு பொலிஸ் பிடிச்சாலும் அவருடன் பேசக்கூட முடியவில்லை  

நேற்றுத்தான் யாழ்ப்பாணத்திலிருந்து வந்தேன் எந்த மாற்றமும் இல்லை கிராமங்கள் அப்படியே காடுகளாகவும் குடிசைகளாகவும் கையில் காசு இருக்கும் மக்கள் வசதியான வாழ்க்கை மற்றவர்கள் வாழ்க்கை ஓட்டம் 

எங்கு இராணுவ பிரசன்னம் நிறைந்து காணப்படுகிறது  ஆனால் கெடுபிடிகள் இல்லை  

இதைத்தான் நானும் சொல்லுறன்.சண்டை இல்லையே தவிர மற்றதெல்லாம் அப்படியேதான் இருக்கு எண்டு....
பேஸ்புக்கிலை என்ரை பெறாமகன் அங்கஜனுக்கு வாழ்த்து தெரிவிச்சு இருந்தான். ஏனடா எண்டு கேட்டன். இப்போதைக்கு தங்களோடை இருந்து உதவியள் செய்யிற அரசியல் தலைவர் எண்டால் அவர் ஒருத்தர் தானாம்.

தமிழ் மக்கள் கூட்டமைப்புக்கு வாக்களிக்கவில்லையே தவிர தமிழ்வேட்பாளர்களுக்குத்தான் வாக்களித்துள்ளார்கள்.எனவே தமிழ்மக்கள் தேசியத்திலிருந்து மாறவில்லை.

ஆமியின்ரை கெடுபிடி இல்லை அதாலை ஊரிலை ஒரு பிரச்சனையுமில்லை எண்ட லாஜிக்தான் இப்ப இஞ்சை பேமஸ்...😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, satan said:

அதிகமான வியாபாரிகள் சிங்களவரும், கொழும்பில் இருந்து வந்தவர்களுமே. யாழ்ப்பாணத்தில் உள்ளவர்கள் தமிழர், வியாபாரிகள் ஏன் சிங்களத்தில் கதைக்கிறார்கள்? சிங்களத்தை திணிக்கிறார்களா? ஒருகாலத்தில் கொம்பிலிருந்து விரட்டப்பட்டோம் இப்ப நாடுமுழுவதும் தன்னோடது என்று எங்கள் வீட்டுக்குள்ளேயே வந்திருந்து எங்களை விரட்டுறான். ஒரு உறவு பதித்திருந்தார்; எங்களுக்கு சிங்களம் தெரியும், அவர்களுக்கு தமிழ் தெரியும், எங்களுக்குள் பாரபட்ஷம் இல்லை, இது போதும் என்பது போல் இருந்தது. அவர்கருத்து தமிழ் உணர்வு இல்லை. எங்கள் உரிமைகள் பறிபோகிறது தெரியவில்லை. சாதாரண சிங்கள மக்களுக்கு எப்படி புரியும்? அவர்களுக்கு பொய்யான கதைகளையே பரப்புகிறார்கள். தமிழர், சிங்களவர்களாக மாறுவதற்கு பொருளாதாரத்தோடு தமிழ் பற்றிய உணர்வு இல்லாமை, சுற்றி வர என்ன நடக்கிறது என்பதை புரிந்து கொள்ளாமையும் காரணம். பொதுவாக பெரும்பாலானோர்; சிங்களம் படித்தால் பிரச்சனை முடிந்து விட்டது என்கிற முடிவிக்கே வந்து விட்டார்கள். இது ரொம்ப ஆபத்தானது. ஏன் ஒரு பொது மொழி ஆங்கிலத்தை ஊக்குவிக்கக்கூடாது?

ஆங்கிலம் பொது மொழியாக அரச காரியாலங்கள் வைத்தியர்கள் உயர்பதவிகளில் இருப்பவர்கள் பேசுகிறார்கள் ஆனால் சிங்களம் அன்றாடம் தொழில் செய்து பிழைப்பவர்கள் ஆங்கிலம் பேச வாய்ப்பில்லை சிங்களத்தை கற்றுக்கொள்கிறார்கள் தற்போது கிழக்கில் கருவாடு மீன் கொன்டு சென்று அங்கே மரக்கறிகளை வாங்கி வருகிறார்கள் மரக்கறி விற்கும் மாத்தையாவுக்கு ஆங்கிலம் வரவே வராது அவருக்கு ஆங்கிலம் படிக்கவோ படியுங்கள் என்று சொல்லமுடியாது ஆனால் விலைகள் பேரம் பேசல்களை தமிழிலும் சொல்லுவார் 

2 hours ago, குமாரசாமி said:

இதைத்தான் நானும் சொல்லுறன்.சண்டை இல்லையே தவிர மற்றதெல்லாம் அப்படியேதான் இருக்கு எண்டு....
பேஸ்புக்கிலை என்ரை பெறாமகன் அங்கஜனுக்கு வாழ்த்து தெரிவிச்சு இருந்தான். ஏனடா எண்டு கேட்டன். இப்போதைக்கு தங்களோடை இருந்து உதவியள் செய்யிற அரசியல் தலைவர் எண்டால் அவர் ஒருத்தர் தானாம்.

தமிழ் மக்கள் கூட்டமைப்புக்கு வாக்களிக்கவில்லையே தவிர தமிழ்வேட்பாளர்களுக்குத்தான் வாக்களித்துள்ளார்கள்.எனவே தமிழ்மக்கள் தேசியத்திலிருந்து மாறவில்லை.

ஆமியின்ரை கெடுபிடி இல்லை அதாலை ஊரிலை ஒரு பிரச்சனையுமில்லை எண்ட லாஜிக்தான் இப்ப இஞ்சை பேமஸ்...😎

அரசு தன் கடமையை செய்யும் 🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, satan said:

அங்கு அரசியல் மொழி எல்லோருக்கும் பொதுவானது. குடிபெயர்ந்தோர் அந்நாட்டு மொழியை கற்றுத்தான் ஆகவேண்டும்.

 

தமிழர் பிரதேசங்களில் உள்ள வேலை வாய்ப்பை, சிங்களவரைக் கொண்டு நிரப்புவதற்கு இது ஒரு தந்திரம், பயிற்சி அளிக்கிறார்கள். எம்மவர் வேலை வாய்ப்பு இன்றி அவதிப்படும்போது, ஏன் சிங்களவர் தமிழ் பேசிக்கொண்டு இங்கு வரவேண்டும்? சரி தமிழருக்கு சிங்கள மாநிலங்களில் வேலை வாய்ப்பு அளிக்கப்படுகிறதா? சிங்களவர் தமிழ் கதைக்கிறார்கள், என்று புளுகித் தள்ளும் நாம் அதன் பின்னால் இருக்கிற தந்திரோபாயத்தை ஏற்றுக்கொள்ளாமல் ஏமாந்து விடுகிறோம், அல்லது சேர்ந்து ஆதரித்தால் நமக்கு பிரச்னை இல்லாமல் நம் முதலீடுகளை செய்யலாம் என்கிற எதிர்பார்ப்பா?

சாத்தான், தாயக நிலைமையைப் பொறுத்தவரை நீங்கள் எவ்வளவு அறிவின்றி இருக்கிறீர்கள் என்று காட்டும் கேள்வி இது! 

பதில்: ஆம்!. சிங்கள பகுதிகளில் தமிழர்கள் வேலை செய்கிறார்கள். நிபுணத்துவ மட்டத்தில் இருப்போர் இன்று மட்டுமல்ல, யுத்தம் நடந்து கொண்டிருந்த போது கூட தெற்கில் சிங்களப் பகுதிகளில் வேலை பெற்றிருக்கிறார்கள். உண்மையில் வடக்கிற்கு வேலைக்காகச் செல்லும் சிங்கள அதிகாரிகளை விட தெற்கிற்கு வேலை நிமிர்த்தம் சென்ற தமிழர்கள் விகிதாசார ரீதியில் அதிகம். 

 எனது துறையில், தமிழ் பகுதியில் தமிழ் ஆட்கள் வேலை செய்யச் செல்லாததால் தான் சிங்களவர்கள் வேலைக்கு வந்தனர். வரண்ட முருங்கன், காய்ந்த பூனகரி என்று எங்கள் ஆட்கள் போகாமல் விட, கொழும்புச் சிங்களப் பெண்கள் அங்கெல்லாம் அரச விடுதியில் தனியே தங்கியிருந்து வேலை செய்கின்றனர். வேலை என்றால், கையெழுத்து வைத்து விட்டு போய்ப் படுத்து விடுவதல்ல, மக்கள் பாராட்டும் அளவுக்கு வேலை! இதுவும் சிங்கள சதி தானோ உங்களுக்கு சந்தேகம் வரும்! ஆச்சரியமில்லை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Justin said:

எனது துறையில், தமிழ் பகுதியில் தமிழ் ஆட்கள் வேலை செய்யச் செல்லாததால் தான் சிங்களவர்கள் வேலைக்கு வந்தனர். வரண்ட முருங்கன், காய்ந்த பூனகரி என்று எங்கள் ஆட்கள் போகாமல் விட, கொழும்புச் சிங்களப் பெண்கள் அங்கெல்லாம் அரச விடுதியில் தனியே தங்கியிருந்து வேலை செய்கின்றனர். வேலை என்றால், கையெழுத்து வைத்து விட்டு போய்ப் படுத்து விடுவதல்ல, மக்கள் பாராட்டும் அளவுக்கு வேலை! இதுவும் சிங்கள சதி தானோ உங்களுக்கு சந்தேகம் வரும்! ஆச்சரியமில்லை!

தற்போது சிங்கள பெண்கள் அரசு இடும் காப்பற் வீதிகளில் ஊழியர்( லேபர்) களாக வேலை செய்கிறார்கள் போர் காலங்களில் தமிழர் பகுதிகளில் இருந்தால் ஆபத்து என சிங்கள பகுதிகளில்தான் அதிகமானோர் வேலையும் செய்தார்கள்  எல்லா துறையிலும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

83 வெளியேற்றத்துக்கு பின் 89-90 இல் வெள்ளவத்தையின் மீள்தமிழாக்கம்🤣 தொடங்கிய காலத்தில் வெள்ளவத்தை மார்கெட்டுக்கு போனால் சிங்கள வியாபாரிகளும், தமிழ் அன்ரிமாரும் ஒரு வினோத மொழியில் பேசி பொருட்களை வாங்குவதை கண்டவர்களுக்குத்தெரியும், காதலுக்கு கண் இல்லை, வியாபாரத்துக்கு மொழி இல்லை என்பது🤣.

அண்மையில் கல்வி அமைச்சின் செயளாலராக நியமிக்கப்பட்ட ஒருவர், தனது மகனுடன் ஓ எல் தமிழ் பரீட்சை எழுதிய கதையை வாசித்தேன்.

ஒவ்வொரு மட்டத்திலும் இரு மொழிகளையும் பேச, பேச வேறுபாடுகள் காணாமல் போக, இலங்கை எல்லோருக்கும் பொதுவான நாடு என்ற ஒரு நிலை ஒரு காலத்தில் உருவாகவும் கூடும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

 

83 வெளியேற்றத்துக்கு பின் 89-90 இல் வெள்ளவத்தையின் மீள்தமிழாக்கம்🤣 தொடங்கிய காலத்தில் வெள்ளவத்தை மார்கெட்டுக்கு போனால் சிங்கள வியாபாரிகளும், தமிழ் அன்ரிமாரும் ஒரு வினோத மொழியில் பேசி பொருட்களை வாங்குவதை கண்டவர்களுக்குத்தெரியும், காதலுக்கு கண் இல்லை, வியாபாரத்துக்கு மொழி இல்லை என்பது🤣.

 

1990 இல் ஆபிரிக்க நாட்டில் உள்ள Togo எனும் நாட்டின் தலைநகர் Lomé இல் மூன்று மாதங்கள் இடையில் நிற்கவேண்டியதாயிற்று. அந்தக் காலத்தில் அவர்களுடன் பேரம்பேசி கரி, தேங்காய், பழப்புளி (ஆம். அதுவும் கிடைத்தது) வாங்கவேண்டும். எங்களுக்குத் தெரிந்த உடைந்த ஆங்கிலத்தில் அவர்கள் பேசும் புறா பிரெஞ்சுடன் (pigeon French) பேரம்பேசி குறைத்துவாங்குவோம். அவர்களும் கண்டபடி ஏதோ சொல்லி/திட்டி நாங்கள் கேட்கும் விலைக்குத் தருவார்கள். இடையிடையே மிரட்ட ஆண்கள் வந்தாலும் பெண்களுடன் பேரம் பேசுவதில்  ஊர் மரக்கறிச் சந்தை அனுபவமும் (மீன் மார்க்கற் அனுபவம் இல்லை) Pettah இல் சிங்களம் தெரியாமலேயே பேரம்பேசிய அனுபவமும் கைகொடுத்தது.😁 

ஆனால் சிங்கள மொழியை தெரிந்துகொள்வது இலகு அல்ல. தென்னிந்திய மொழிகளில் மலையாளம், கன்னடம், தெலுங்கில் பேசுவது முழுமையாக விளங்காவிட்டாலும் என்ன சொல்கின்றார்கள் என்பது புரிந்துவிடும். சிங்களம் தமிழுடன் தொடர்பேயில்லாத மொழி என்பதாலும், சிங்களத்தின் மீது இயல்பான வெறுப்பு இருப்பதாலும் அதைத் தெரிந்துகொள்ள முயன்றதேயில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

1990 இல் ஆபிரிக்க நாட்டில் உள்ள Togo எனும் நாட்டின் தலைநகர் Lomé இல் மூன்று மாதங்கள் இடையில் நிற்கவேண்டியதாயிற்று. அந்தக் காலத்தில் அவர்களுடன் பேரம்பேசி கரி, தேங்காய், பழப்புளி (ஆம். அதுவும் கிடைத்தது) வாங்கவேண்டும். எங்களுக்குத் தெரிந்த உடைந்த ஆங்கிலத்தில் அவர்கள் பேசும் புறா பிரெஞ்சுடன் (pigeon French) பேரம்பேசி குறைத்துவாங்குவோம். அவர்களும் கண்டபடி ஏதோ சொல்லி/திட்டி நாங்கள் கேட்கும் விலைக்குத் தருவார்கள். இடையிடையே மிரட்ட ஆண்கள் வந்தாலும் பெண்களுடன் பேரம் பேசுவதில்  ஊர் மரக்கறிச் சந்தை அனுபவமும் (மீன் மார்க்கற் அனுபவம் இல்லை) Pettah இல் சிங்களம் தெரியாமலேயே பேரம்பேசிய அனுபவமும் கைகொடுத்தது.😁 

ஆனால் சிங்கள மொழியை தெரிந்துகொள்வது இலகு அல்ல. தென்னிந்திய மொழிகளில் மலையாளம், கன்னடம், தெலுங்கில் பேசுவது முழுமையாக விளங்காவிட்டாலும் என்ன சொல்கின்றார்கள் என்பது புரிந்துவிடும். சிங்களம் தமிழுடன் தொடர்பேயில்லாத மொழி என்பதாலும், சிங்களத்தின் மீது இயல்பான வெறுப்பு இருப்பதாலும் அதைத் தெரிந்துகொள்ள முயன்றதேயில்லை.

இது நல்ல அனுபவமாய் இருக்கிறதே 🤣.

ஓரளவு இளமையாக இருக்கும் போதே சிங்கள பகுதிக்கு வந்ததாலும், பள்ளியில் சிங்கள மாணவர்களோடு விளையாட்டு இதர நிகழ்சியில் சேர வேண்டிய தேவையும் சேர்ந்து கிட்டதட்ட வித்தியாசம் தெரியாத அளவுக்கு அவர்களை போலவே சிங்களம் பேசும் ஆற்றலை பெற கூடியதாக இருந்தது.

எனது தந்தையார், சிங்களத்தையும் யாழ்பாண பாணியிலே கதைப்பார் 🤣. அவரை காண வரும் சிங்கள நண்பர்களுக்கு தேனீர் கொடுத்து விட்டு நான் அடித்தட்டு சிங்களத்தில் உரையாடுவேன். சிலர் என்னை வீட்டில் வேலை செய்யும் சிங்கள பையன் என்று நினைத்து அப்பாவிடம் கதைத்தத்தும் உண்டு😂.

ஆனால் சின்ன வயதிலே ஏற்பட்ட குரோதம் என்னை கடைசிவரை சிங்களத்தை எழுதி வாசிக்க பழக விடவில்லை. பல சந்தர்பங்கள் கிடைத்தும் அதை தட்டி கழித்தேன்.  இப்போ யோசிக்க என்ன மடத்தனம் என்று தோன்றுகிறது.

என் சகோதரி எழுதி வாசிப்பா ஆனால் கதைக்கவிட்டால் தூய சிங்களத்தில் கட்டபொம்மன் ரேஞ்சில் இருக்கும் கதை 🤣

இப்போ வெளிநாடு வந்து பலவருடம் ஆகிவிட்டதாலும் இங்கே என்னை சூழ யாரும் சிங்களம் பேச இல்லை என்பதாலும் ஊருக்கு போய் இறங்கி கதைக்க தொடங்க,போர் காலத்தில் ஊரில் மணெண்ணையில் ஸ்டார்ட் அடிக்கும் ஆட்டோ போல ஆரம்பத்தில் கொஞ்சம் விக்கல் எடுக்கும். ஒரு வாரம் ஆக சரியாகி விடும். ஆனாலும் முன்பு போல் சரளமாக இல்லாமல் ஆங்கில வார்தைகள் இடையில் வந்து விழும்.

இந்தியாவில் தேசாந்திரியாக அலைந்த போது, டெல்லியில் நின்ற இடத்தின் விலாசத்தை தொலைத்து விட்டு ஒரு மணிநேரமாக ஆங்கிலம் தெரிந்தவரை தேடி அலைந்த அனுபவம் மறக்கமுடியாதது.

மலையாளம் புரிவதில் ஒருபோதும் சிக்கல் வந்ததில்லை. ஆனால் தெலுங்கு கன்னடா ஒரு மண்ணும் விளங்கவில்லை 🤣

வாபஸ், பைசா , ஜரூர், சாயா இதுபோன்ற எல்லாருக்கும் பொதுவான வட சொற்களை தவிர. 

ஆந்திராவில் மட்டும் 6 மாதம் வாழ்ந்தேன். ஆனால் “ஜருகண்டி” “நாகு தெலுகு தெலுசு லேது” இவை மட்டுமே கற்றேன்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, விளங்க நினைப்பவன் said:

இலங்கையை சேர்ந்த உங்களிடம் தனது நாட்டு இந்தி தெரியுமா என்று கேட்ட இந்தியரை பற்றி தான் நினைக்கிறேன் 😂
எனது உறவினர் ஒருவர் தமிழ் இசை பிரியர் ரகுமான் இசை கச்சேரிக்கு டிக்கட் வாங்கி போனவர் அங்கே இந்தி பாட்டு தான் அதிகம் என்று ஏமாற்றம் தெரிவிந்தார்.இந்தி பட உலகம் ரகுமானை புறக்கணிப்பதாக யாழ்களத்தில் கவலை தெரித்திருந்தார்கள்.

அவரது நோக்கம் தமிழை கேலி செய்யவேண்டும் என்பதாகவே நான் உணர்ந்தேன், அவர் அயாட்ஸ் இந்திய உணவக உரிமையாளர், அவருக்கு நியுசிலாந்தில் பல உணவகங்கள் உண்டு.

Link to comment
Share on other sites

4 hours ago, கிருபன் said:

ஆனால் சிங்கள மொழியை தெரிந்துகொள்வது இலகு அல்ல. தென்னிந்திய மொழிகளில் மலையாளம், கன்னடம், தெலுங்கில் பேசுவது முழுமையாக விளங்காவிட்டாலும் என்ன சொல்கின்றார்கள் என்பது புரிந்துவிடும். சிங்களம் தமிழுடன் தொடர்பேயில்லாத மொழி என்பதாலும்,

tamil-lession-01-page-03.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழருக்கும், முன்னாள் போராளிகளும் பல துன்புறுதல்கள் நிகழத்தான் போகுது. அது வெளி வராமல்  வட கிழக்கில்  சிங்கள கட்சியில் நின்று  வென்ற தமிழர்கள், வெறும் கோஷம் என  அடித்து சொல்வார்கள். நாங்களும் சிங்களம் படித்தால் பிரச்சனை தீர்ந்து விடும், என்று கடந்து போய்க்கொண்ட இருப்போம். 

Link to comment
Share on other sites

On 21/8/2020 at 22:20, Kapithan said:

அப்படியல்ல வங்காலையான்,

உங்கள் கருத்துக்கள் தேசியத்திற்காக மரணித்த ஆயிரமாயிரம் போராளிகள், மக்களை நையாண்டி செய்வதுபோல் உள்ளது.

அதுதான்..... ஒரு விளம்பரம்ம்ம்ம்ம்..😀

தேசியத்துக்காக ஆயிரமாயிரம் போராளிகள் மரித்தார்கள், அப்பாவி மக்கள் மரித்தார்கள். ஆனாலும் அதன் முடிவு என்ன? யார் பலனடைந்தார்கள்? யார் பலனடைகிறார்கள்? இப்போது யார் அதை வைத்து வியாபாரம் செய்கிறார்கள்? ஆரம்பம் அல்ல முடிவுதான் முக்கியம்.உங்களுக்கு நய்யாண்டியாகத்தான் தெரியும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கற்பகதரு said:

tamil-lession-01-page-03.png

றவிக்கை என்பது தமிழ் சொல்லாக இருக்காது 
என்று எனக்கொரு சந்தேகம் எப்போதும் இருந்ததுண்டு 
(ஒரு காரண அர்த்தமும் இல்லாமல் இருப்பதால்)

மேலே சிங்கள ற எழுத்தை பார்க்கும்போது 
சந்தேகம் இன்னமும் கூடுகிறது 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கற்பகதரு said:

 

சிங்களத்தில் பேசினால் ஒரு சில வார்த்தைகளை வைத்து என்ன context என்று அறியமுடியாது. அதனால்தான் சிங்களம் தமிழுடன் தொடர்பே இல்லாத மொழி என்றேன்

Link to comment
Share on other sites

9 hours ago, கிருபன் said:

 

ஆனால் சிங்கள மொழியை தெரிந்துகொள்வது இலகு அல்ல. தென்னிந்திய மொழிகளில் மலையாளம், கன்னடம், தெலுங்கில் பேசுவது முழுமையாக விளங்காவிட்டாலும் என்ன சொல்கின்றார்கள் என்பது புரிந்துவிடும். சிங்களம் தமிழுடன் தொடர்பேயில்லாத மொழி என்பதாலும், சிங்களத்தின் மீது இயல்பான வெறுப்பு இருப்பதாலும் அதைத் தெரிந்துகொள்ள முயன்றதேயில்லை.

சிங்கள மொழி நீங்கள் நினைக்கிற மாதிரி கஷடம் இல்லை. சிங்களத்திலும் தமிழிலும் நிறைய சொற்கள் ஒரேமாதிரியானவை. தென்னிந்தியமொழிகளை விட இலகுவாக கற்றுக்கொள்ளலாம், நீங்கள் விரும்பினால். இப்போது வடகிழக்கு முழுவதும் மக்கள் ஓரளவுக்கு சிங்களம் பேசுகிறார்கள். அவர்கள்மீது சிங்கள திணிப்பு நடக்கவில்லை. இருந்தாலும் மக்கள் அதை விரும்பியோ , விரும்பாமலோ கற்றுக்கொண்டுள்ளார்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கல்லறையில் உடல்கள் தோண்டியெடுப்பு.. மனித எலும்பில் உருவாகும் போதைப் பொருள்.. அடிமையாகும் இளைஞர்கள்! ’போதைப் பொருட்கள் உயிருக்குக் கேடு விளைவிக்கும்’ என விளம்பரப்படுத்தப்பட்டாலும், அதன் விற்பனையும் அதற்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்தே வருகிறது. உலகளவில் பலர் இந்தப் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். அந்த வகையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் இதற்கு பலர் இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர். அதிலும், மனித உடல் எலும்புடன் தயாரிக்கப்படும் ஒருவித போதைப் பொருளுக்குத்தான் அவர்கள் அதிகமாக அடிமையாகி இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருளுக்கு அடிமையான இந்நாட்டு மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. அதிலும், இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் ’குஷ்’ என்ற ரக போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த ’குஷ்’ போதைப்பொருள் மனித எலும்புகளிலிருந்து உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த ’குஷ்’ ரக போதைப்பொருள் சியரா லியோன் பகுதியில் பழக்கத்திலிருந்து வருகிறது. இதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தயாரிப்பவர்கள் கல்லறையில் இருக்கும் புதைகுழிகளைத் தோண்டி பிணங்களை சேகரித்து அதன் எலும்புகளிலிருந்து ’குஷ்’ போதைப்பொருளைத் தயார் செய்வதகாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த எலும்புகளுடன் , கஞ்சா மற்றும் சில இரசாயனங்கள் கலந்து இந்தப் போதைப் பொருள் தயாரிக்கப்படுகிறது. இதற்காக, சியரா லியோனில் இதுவரை நூற்றுக்கணக்கான புதைகுழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த போதை மருந்து கிட்டத்தட்ட பல மணி நேரம் போதை தருவதாகச் சொல்லப்படுகிறது. மேலும் இந்தப் போதைக்கு அடிமையான இளைஞர்கள் தங்களிடம் இருக்கும் பொருட்களை (புத்தகங்கள், ஆடைகள்) விற்று அந்த போதை மருந்தை வாங்குவதாகவும், அதற்குப் பிறகு வீட்டில் உள்ள பொருட்களைத் திருடிச் சென்று கொடுத்து வாங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் மூலம் நாட்டில் குடியிருப்பதற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கவலை தெரிவித்துள்ளார். இதன் பிடியிலிருந்து மக்களை மீட்க போதைப்பொருள் ஒழிப்பு மையங்கள் அமைக்கப்படும் எனவும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நாட்டு ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.   https://thinakkural.lk/article/299459
    • வடக்கு மீனவர்களின் ஓயாத போராட்டம் ஜே.ஏ.ஜோர்ஜ் “அது ஒரு சனிக்கிழமை, நான் எனது வலைகளை எடுப்பதற்காக கடலுக்கு சென்றேன். வலை நிறைய மீன்களை எதிர்பார்த்து சென்ற எனக்கு அங்கு அதிர்ச்சியே மிஞ்சியது. ஏனென்றால் நான் விரித்து வைத்திருந்த வலைகள் அங்கு இல்லை.  எனது வலைகளை இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை சேதப்படுத்தி விட்டனர். ஆனால் இது முதல் முறையாக நடக்கும் சம்பவம் இல்லை” -  இவ்வாறு தனது கதையை கூறும் மீனவரான ரெஜினோல்ட் தனது கடந்த கால அனுபவங்களுடன் ஒப்பிடுகையில் தற்போதைய தனது போராட்டம் தீவிரமடைந்திருப்பதாக கூறுகின்றார். 20 ஆண்டுகளாக தனது வாழ்க்கைக்காக கடல் அலைகளுடன் போராடி வரும் ரெஜினோல்ட் மட்டுமன்றி வடமாகாண மீனவர்களில் அதிகளவானவர்கள் தற்போது இவ்வாறு கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர். இலங்கை கடற்பரப்பிற்குள் இழுவை படகுகளை பயன்படுத்தி இந்திய மீனவர்கள் முன்னெடுக்கும் மீன்பிடி நடவடிக்கைகளே இந்த நெருக்கடிக்கு காரணமாக உள்ளது. நெடுந்தீவைச் சேர்ந்த ரெஜினோல்ட் தனது தந்தையுடன் இணைந்து நீண்டகாலம் மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில், திருமணத்துக்கு பின்னர் தற்போது தனியாக தொழில் செய்கின்றார். “நான் என் படகை மோட்டார் இல்லாமல் பயன்படுத்துகிறேன். மோட்டார் ஒன்றை வாங்க என்னிடம் போதுமான பணம் இல்லை. அதனால் என்னால் அதிக தூரம் செல்ல முடியாது. கடந்த காலங்களில் மீன்பிடிக்க பாரம்பரிய வலைகளைப் பயன்படுத்தினேன். இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை எனது வலைகளை சேதப்படுத்தி விட்டனர். எனவே, இப்போது மீன்பிடிக்க சிறிய வலையைப் பயன்படுத்துகிறேன். இதனால், முன்பு போல் மீன் பிடிக்க முடியவில்லை. கடலில் இரண்டு மூன்று மணி நேரம் மாத்திரமே செலவிட முடிகின்றது. எனக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.  எனது மூத்த மகன் ஐந்தாம் வகுப்பு படிக்கிறான். அவர்களுக்காக நான் பல செலவுகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. பொருட்களின் விலை முன்பை விட அதிகமாக உள்ளது. குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவது இப்போது மிகவும் கடினமாக உள்ளது” என்கிறார் ரெஜினோல்ட். அமெரிக்க பாதுகாப்பு பல்கலைக்கழகம் 2008ஆம் ஆண்டு துருக்கியின் இஸ்தான்புல் நகரில் ஏற்பாடு செய்திருந்த செயற்குழு கூட்டத்தில் கலாநிதி சனத் டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட அறிக்கையின்படி, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கடல் எல்லை மூன்று கடல் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. வடக்கில் வங்காள விரிகுடா, நடுவில் பாக்கு நீரிணை, தெற்கில் மன்னார் விரிகுடா என இந்த கடல் எல்லைகள் உள்ள நிலையில், பாக்கு நீரிணை ஊடாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சராசரி தூரம் சுமார் 32 கிலோமீற்றர்கள் என அறிக்கை கூறுகிறது. கச்சதீவில் இருந்து இந்தியாவின் ராமேஸ்வரம் வரையிலான தூரம் சுமார் 14 கடல் மைல்கள், அதாவது சுமார் 26 கிலோமீட்டர்கள். யாழ்ப்பாணத்தில் இருந்து கச்சத்தீவு வரை சுமார் 60 கிலோமீட்டர் தொலைவான கடற்பரப்பில் தனது அதிகாரத்தை கொண்டுள்ள இலங்கை கடற்படை, சர்வதேச கடல் எல்லையை தாண்டி இலங்கை கடலுக்குள் நுழையும்  இந்திய இழுவை படகுகள் குறித்து அவ்வப்போது  நடவடிக்கை எடுத்து வருகிறது. எவ்வாறாயினும், இலங்கை  கடற்பரப்புக்குள் இந்திய இழுவை படகுகள் பிரவேசிப்பது  நாளாந்தம் இடம்பெறுவதாக வடபகுதி மீனவ சங்க தலைவர்கள் கூறுகின்றனர். “இது ஒரு தீவிரமான பிரச்சினை. இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படை உள்ளிட்டவர்கள் தேவையான நடவடிக்கை எடுக்காதமையே இந்த பிரச்சினை தொடர்வதற்கு முக்கிய காரணமாக உள்ளது.  ஏராளமான இந்திய இழுவை படகுகள் இலங்கை கடல் பகுதிக்குள் நுழையும் நிலையில், கைது செய்யப்படும் இந்திய மீனவர்கள் மற்றும் கைப்பற்றப்படும் இந்திய இலுவை படகுகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கை எடுத்து இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மீன்பிடி அமைச்சு நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை. இந்திய மீனவர்கள் பயன்படுத்தும் இழுவை படகுகள் வடபகுதி மீனவர்களுக்கு சொந்தமானதை படகுகளை விட பெரியவை. அவை தினமும் வடக்கு கடல் பகுதிக்குள் நுழைவதால், ஏராளமான பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதனால் வடபகுதி மீனவர்களின் வருமானம் பாதிக்கப்படுவதுடன், இந்திய இழுவை படகுகளால் இலங்கை மீனவர்களின் வலைகளுக்கு சேதம் ஏற்படுகின்றது. அத்துடன், எமது மீன்பிடி வளம் பறிபோகிறது. எமது மீனவர்களுக்குச் சொந்தமான படகுகளை சேதப்படுத்திய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன”- என யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் சமாசங்களின் சம்மேளன தலைவர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார். அத்துடன், இந்தியாவில் இருந்து இழுவை படகுகள் வருவதை தடுக்கும் வகையில் இலங்கையில் சட்ட அமைப்பு இருப்பதாகவும் எனினும், அவற்றால் நடைமுறையில் இலங்கை மீனவர்களால் எந்தவித பயனையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை என, அன்னராசா சுட்டிக்காட்டினார். 1979 ஆம் ஆண்டின் 59 ஆம் இலக்க கடற்றொழில் (வெளிநாட்டு மீன்பிடி படகுகளை ஒழுங்குபடுத்துதல்) சட்டத்தின் 04ஆவது பிரிவின்படி, அனுமதியின்றி மீன்பிடி தொடர்பான நடவடிக்கைகளுக்காக வெளிநாட்டு மீன்பிடி படகுகளை இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க பயன்படுத்தக்கூடாது என்று கூறுகிறது. அத்துடன், இலங்கை கடற்பரப்பிற்குள் வெளிநாட்டுப் படகுகள் பிரவேசித்தால், மீன்பிடிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், அந்தப் படகில் உள்ள மீன்பிடி சாதனங்களை முறையான முறையில் தடுத்து வைக்க வேண்டும் என்று சட்டத்தின் 05வது பிரிவு கூறுகிறது. வெளிநாட்டுப் படகுகளை நிறுத்தவும், சோதனைகளை நடத்தவும், பிடியாணையுடன் அல்லது இல்லாமலும் படகுகளைக் கைப்பற்றவும், தனிநபர்களைக் கைது செய்யவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.  2018 ஆம் ஆண்டில், இந்த சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டதுடன், இலங்கையில் உள்ள ஆயுதப்படைகளின் தளபதிகள் மற்றும் அதன் அமுலாக்கத்துக்காக கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் தலைவர் ஆகியோருக்கு பொறுப்பை வழங்கும் கூடுதல் சரத்துகள் அறிமுகப்படுத்தப்பட்டன. வெளிநாட்டுப் படகுகள் மூலம் இலங்கைக் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்தால் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். இந்த குற்றம் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் ஒரு மாதத்துக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. இந்த சட்டத்தை நிறைவேற்றுவதற்கு பொறுப்பான அமைச்சருக்கு விதிமுறைகளை உருவாக்கும் திறன் உட்பட விரிவான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. 1981 ஆம் ஆண்டு இந்தச் சட்டத்தின் கீழ் இலங்கைக் கடற்பரப்பில் நுழைவதற்கான அனுமதியைப் பெறுவதற்கான நடைமுறைகளை கோடிட்டுக் காட்டும் விதிமுறைகள் வெளியிடப்பட்டன. இந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு மீன்பிடி அமைச்சு மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் என்பன மீள தவிர்க்க முடியாத பொறுப்பைக் கொண்டுள்ளன. இந்திய மீனவர்கள் வட கடலில் மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை முற்றாக நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்பிலான கலந்துரையாடல் 2023 ஜனவரி 24 ஆம் திகதி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.  மேலும், 2023ல் சட்டவிரோத வெளிநாட்டு மீன்பிடி கப்பல்கள் மற்றும் மீனவர்கள் குறித்து அந்தந்த நிறுவனங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. எவ்வாறாயினும், இந்திய இழுவை படகுகளினால் வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண போதிய நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் இன்னமும் தவறியுள்ளதுடன், இதனால் பிரச்சினை தொடர்ந்து மோசமாகி வருகிறது. இவ்விடயம் தொடர்பில் வினவிய போது கடற்றொழில் அமைச்சின் செயலாளர் கே.என். குமாரி சோமரத்ன, இந்த பிரச்சினைக்கு இரு நாடுகளுக்கிடையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என தெரிவிக்கின்றார். “இந்த விவகாரம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்த விடயம் தொடர்பில் மீண்டும் ஒருமுறை கலந்துரையாடலை ஆரம்பிக்குமாறு வெளிவிவகார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். வெளிவிவகார அமைச்சரும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதை நாம் அறிவோம். இப்பிரச்சினை தொடர்பாக தற்போதுள்ள சட்டங்களில் திருத்தம் செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. தற்போது, முதல் தடவை கைதுக்கான தண்டனை மற்றும் மீண்டும் மீண்டும் கைது செய்யப்பட்டதற்கான தண்டனையை சட்டம் குறிப்பிடுகிறது, ” என்று அவர் கூறுகின்றார். இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்ய கடற்படையின் அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு ஏன் பணிப்புரை வழங்கப்படவில்லை என வினவியபோது, அந்தச் சட்டம் இன்னமும் அமுலில் உள்ளதாகவும், அதன்படி தற்போது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் செயலாளர் தெரிவித்தார். இது இவ்வாறாக இருக்கும் நிலையில், இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் எண்ணிக்கை 150க்கும் அதிகமாகும். இது அதிக எண்ணிக்கையாக தெரிந்தாலும், நாளாந்தம் இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழையும் இந்திய மீனவர்களின் வருகையுடன் ஒப்பிடுகையில் இது மிகக் குறைவு என மீனவ சங்கத் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில், இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்கும் இந்திய மீனவர்களை கண்காணிப்பதற்காக வடக்கில் ‘கடல் காவலர்கள்’ எனப்படும் தன்னார்வ குழுவொன்றை ஸ்தாபிப்பதற்கான அமைச்சரவை பத்திரத்தை கடற்றொழில் அமைச்சர் சமர்ப்பித்துள்ளார். இதேவேளை, இந்திய மீன்பிடி பிரச்சனையால் நாளாந்தம் 350 மில்லியன் ரூபாய் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக அமைச்சு மதிப்பிட்டுள்ளது. இந்த நிலையில், தற்போதைய கடற்றொழில் அமைச்சர் வடக்கில் உள்ள மீனவர்களின் வாக்குகளால் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டதாகவும், கடற்றொழில் அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அவர் போதிய தலையீடுகளை மேற்கொள்ளவில்லை என வடமாகாண மீனவர் சங்க தலைவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். வடக்கில் உள்ள எழுவைத்தீவு, அனலைத்தீவு, நெடுந்தீவு உள்ளிட்ட, மீன் பிடி தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ள மக்கள் வசிக்கும் தீவு பகுதிகள் இன்னும் இலங்கை கடற்படையினரின் கண்காணிப்பிலேயே உள்ளதை எம்மால் நேரடியாக காண முடிந்தது. இந்த தீவுகளின் கடற்படையினரின் சோதனை சாவடி அல்லது முகாம் இன்னும் செயற்பாட்டிலேயே உள்ளது. இவ்வாறு வடக்கின் கடற்பரப்பை சுற்றி ரோந்து நடவடிக்கையில் ஈடுபடும் இலங்கை கடற்படையினர், இந்திய மீனவர்கள் இலங்கைக்குள் பிரவேசிப்பதை தடுக்க  உரிய நடவடிக்கை எடுக்காதது குறித்து வடபகுதி மீனவர்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர். இலங்கை கடற்படையினர் நினைத்தால் இந்திய மீனவர்களை இலங்கை கடல் வளத்தை சுரண்டாமல் இலகுவாக தடுத்து நிறுத்த முடியும் என்பதே வடபகுதி மீனவர்கள் நம்பிக்கையாகும். ஆனால், அது இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை என்பது அந்த மீனவர்கள் நிலையை நேரில் பார்க்குத்போது தெளிவாக புலப்படுகின்றது.   https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/வடக்கு-மீனவர்களின்-ஓயாத-போராட்டம்/91-336077
    • யாழ்.பல்கலையின் பொன்விழாவை முன்னிட்டு ஆய்வு மாநாடு! adminApril 18, 2024 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பதாண்டைப் பூர்த்தி செய்து பொன்விழாக் காண்கின்றது. அதனை முன்னிட்டு முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வுமாநாட்டை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப்படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளன. ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வடக்கு மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் கருப்பொருளில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராசா தலைமையிலும் உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் மற்றும் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இவ் ஆய்வுமாநாடு அரங்கேறவுள்ளது. கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி.ஆ.நித்திலவர்ணண் மாநாட்டின் இணைப்பாளராகச் செயற்படுகின்றார். வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிரஞ்சன் மற்றும் வட மாகாணக் கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தாளர்களாகக் கலந்துகொள்கின்றனர். எதிர்வரும் 20ம் திகதி சனிக்கிழமையும் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை மற்றும் மாலை அமர்வுகள் எனத் திட்டமிடப்பட்டுள்ள இம்மாநாட்டின் காலை அமர்வுகள் கைலாசபதி கலையரங்கிலும் மாலை அமர்வுகள் உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்திலும் நடைபெறவுள்ளன. சனிக்கிழமை நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் திறவுகோல் உரையினை கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பீட கல்வி உளவியல் இருக்கைப் பேராசிரியர் மஞ்சுளா விதாணபத்திரண நிகழ்த்தவுள்ளார். ‘வாண்மைத்துவ விருத்திக்கான ஆய்வு மைய புத்தாக்கங்கள்: வடக்கு இலங்கையின் ஆசிரியர் கல்விக்கான தந்திரோபாய அணுகுமுறை’ எனும் தலைப்பில் இவ் உரை நிகழவிருக்கின்றது. திறவுகோல் உரையினைத் தொடர்ந்து மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்திய மையக்கருத்துரைகள் இடம்பெறவுள்ளன. இக்கருத்தரங்கிற்கு உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் தலைமைதாங்கவுள்ளார். ‘இலங்கையின் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியை முறைமைப்படுத்தல் – சவால்களும் பிரச்சனைகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர்.தி.முகுந்தனும், ‘வட மாகாணக் கல்வியின் சமகால உள சமூக நிலைமைகள்’ எனும் தலைப்பில் உளமருத்துவ நிபுணர் சி.சிவதாசும், ‘இலங்கையின் பாடசாலைக் கலைத்திட்டத்தின் சவால்களும் புதிய போக்குகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர் எவ்.எம்.நவாஸ்தீனும், ‘சட்டத் தீர்மானங்களை அறிவிப்பதில் கல்வியியல் ஆய்வுகளின் தேவைகள்’ எனும் தலைப்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமாரும் உரையாற்றவுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் ஜெயலக்சுமி இராசநாயகம் தலைமை தாங்கவுள்ளார். இந் நிகழ்வில் திறவுகோல் உரையை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் கு.சின்னப்பன் ‘தமிழ் கற்பித்தலில் புதிய போக்குகள்’ எனும் தலைப்பில் நிகழ்த்தவுள்ளார். அதனைத் தொடர்ந்து ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் தலைப்பில் கலைப்பீடப் பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் திறந்த புலமைத்துவக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் அதிபருமாகிய என்.தெய்வேந்திரராஜா, கல்வியியல் ஆய்வாளரும் அகவிழி மற்றும் ஆசிரியம் சஞ்சிகைகளின் ஆசிரியருமான தெ.மதுசூதனன், தேசிய கல்வி நிறுவன விரிவுரையாளர் ஐ.கைலாசபதி, கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலய அதிபர் ஜெய மாணிக்கவாசகர், இலங்கை பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஜீவராணி புனிதா, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கல்லூரியின் முன்னாள் பணிப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் திட்ட முகாமையாளருமாகிய ஜே. ஜூட் வோல்ற்றன் மற்றும் கிளிநொச்சி வடக்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் அலுவலர் சு.வீரசுதாகரன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். பார்வையாளர்களின் வினாக்களுக்கும் விடையளிக்கும் நிகழ்வாகவும் இக் கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது. ‘வடக்கு மாகாணப் பாடசாலைகளின் வெற்றிகளும் பின்னடைவுகளும்’, ‘பாடசாலைகளும் சமூகமும் – எங்கு நாம் நிற்கின்றோம் – முன்னோக்கிப் போவதற்கான வழிகள்’, ‘எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளை அளவிடுதல்’, மற்றும் ‘கல்வியும் வேலைவாய்ப்பும் – சந்தர்ப்பங்களும் சவால்களும்’ எனும் தலைப்புக்களில் இக்கலந்துரையாடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் கருத்துச்செறிவுகளை மாநாடு நிறைவுபெற்ற பின்னர் கொள்கை ஆவணமாக வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரண்டு நாள்களும் மாலை அமர்வுகள் பலாலி வீதியில் அமைந்துள்ள உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்தில் நடைபெறும். இரண்டு நாள் மாலை அமர்வுகளிலும் தலா நாற்பத்து நான்கு ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு தலைப்புக்களிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆசிரியக் கல்வியலாளர்கள், கல்வி நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வாளர்களினால் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன   https://globaltamilnews.net/2024/201875/
    • போட்டியில் கலந்துகொண்ட @kalyani யும், @கந்தப்புவும் வெற்றிபெற வாழ்த்துக்கள். இன்னும் 15 மணித்தியாலங்களே இருப்பதனால், யாழ்களப் போட்டியில் விரைவில் கலந்துகொள்ளுங்கள்😀 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு  
    • அமெரிக்கா ஏதோ ஒரு விதத்தில் பங்கு எடுக்கும், எடுக்க வேண்டிய நிலை, இஸ்ரேல் ஈரானுக்கு திருப்பி அடித்தால் . (மற்ற திரியில் சொன்னனது போல , இஸ்ரேல் க்கு தெரியும், அமெரிக்கா, மேற்கு பாதுகாப்புக்கு எப்போதும் வரும் என்று. அதை மேற்கும், மீண்டும், மீண்டும் சொல்லுகின்றன. இதுவே பங்கு எடுப்பது. அமெரிக்கா செய்வது, இஸ்ரேல் ஐ பாதுகாப்பத்தற்கு ஈரானின் ஏவுகணனைகளை தடுப்பது act of  war,)   ஈரானின் தூதரகம் மீதான இஸ்ரேல் இன் தாக்குதல் , மேற்கு, குறிப்பாக US க்கு தெரிந்து (அதன் மூலம் 5 கண்கள் உளவு நாடுகளுக்கு - 5 eyes intelligence community தெரிந்து), US ஆமோதித்து, அனுமதித்து  நடத்தப்பட்ட தாக்குதல். ஏனெனில், இஸ்ரேல் இப்படியானவற்றை அமெரிக்காவிடம் சொல்லாமல் செய்வதில்லை. மேலும், France க்கும்  உச அறிவித்து இருக்கும், ஏனெனில், சிரியா பிரான்ஸ் இன் காலனித்துவம்  கீழ் இருந்தது. மற்றது, பிரச்னை வந்தால் செக்யூரிட்டி கவுன்சில் இல் பிரான்ஸ் இந்த உதவி தேவை, ஆனால், இந்த காலனி என்பதே பிரதான  காரணம். இது செக்யூரிட்டி கவுன்சில் இல் எழுதப்படாத  விதி- காலனித்துவ அரசுகளே, முனைய காலணிகளின் இப்போதைய அரசுக்கள் சார்ந்த  விடயத்தில் முன்னுரிமை உள்ளது என்பது .  எனவே, மேற்கு ஆகக்குறைந்தது மறைமுக பங்குதாரர் (கனடா தூதரகத்தை காலி செய்தது அநேகமாக இந்த 5 eyes வழியாகத் தான் இருக்கும்) இஸ்ரேல் சொல்லியது தாக்குதலுக்கு மிகச் சிறிய நேரத்துக்கு முதல் என்று (வேண்டும் என்று) அமெரிக்கா கசிய விட்டு, சில செய்திகள் காவுகின்றன. அனால், தாக்குதலை இஸ்ரேல் 2 மாதமாக திட்டமிட்டது என்று பின் செய்து வந்தது.  கேக்கிறவன் கேணையனாக இருந்தால் ... என்ற அமெரிக்காவின் கதை. (அப்படி US  இடம் சொல்லாமல் இஸ்ரேல் செய்தது, Sinnai மீதான தாக்குதல், கைப்பற்றலும்  , ஆனால், அது பெரிய யுத்தத்தின் ஒரு பகுதி, Egypt முதல் தாக்கி இருந்தது). அமெரிக்காவுக்கு முதலே (ஏற்ற காலத்தில் ) தெரியும் என்றது, newyork times வெளியிட்டு உள்ள இன்னொரு செய்தியானா, அமெரிக்கா, இஸ்ரேல் அதிகாரிகள் ஈரானின் எதிர்பபை குறைத்து மதிப்பிட்டு விட்டார்கள் என்று அதிகாரிகள் அவர்களின் வாயால் சொன்னதாக என்ற செய்தியில்   இருந்து தெரிகிறது.   இதனால் தான் மேற்கு, ஈரானை தடுக்க முனைந்தது. முடியாமல் போக, அது தடுத்தது. un இன் பகுதி charter ஐ குழிதோண்டி புதைத்தன அமெரிக்காவும், அதன் வாலுகளும்.  இதை மேற்கு rule based என்று சொல்லும் என்று நினைக்கிறன்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.