Jump to content

சூழலை நேசிக்கும் யாப்பாண இளையவர்களின் பணி...


Recommended Posts

 

 

பண்ணைக் கடற்கரையை நேசிப்போம்

யாழ்ப்பாணம் கடல் எரிகளால் சூழப்பட்ட அழகான ஒரு சிறு நகரம். இது இயற்கை எமக்கு அளித்த வரம். பண்ணை கடற்கரையும் அதனை சூழவுள்ள பகுதிகளும் மிக அழகானவை. அநேகமான மக்கள் இப்போதெல்லாம் மாலை வேளைகளிலும், காலை வேளைகளிலும் உடற்பயிற்சிக்காக நடந்து செல்கிறார்கள். இதைவிட பொழுதுபோக்குக்காகவும் அமைதியை நாடியும் இக் கடற்கரையை இளையவர்களும், முதியவர்களும் பயன்படுத்துகிறார்கள். இது உண்மையிலேயே வரவேற்க வேண்டிய செயற்பாடுகள்,

இந்த பண்ணை வீதியை நடை ப்பயிற்சிக்காக பயன்படுத்துபவர்களில் நானும் ஒருவன். சூரியோதத்தையோ அல்லது சூரிய அஸ்தமனத்தையோ ரசித்தபடி நடந்து செல்லும் பொழுது நம்மையே அறியாமல் நாம் இயற்கையோடு ஒன்றிவிட்ட ஒரு உணர்வு ஏற்படும். ஆனால் ஒரு குறை உண்டு. இந்த பிரதேசம் சுத்தமாகவும் ஒழுங்காகவும் இருப்பதில்லை பல இடங்களில் பிளாஸ்டிக் கழிவுகள் போடப்படுகின்றன. பல இடங்களில் கடலில் போடப்படும் பிளாஸ்டிக், கழிவுகள் நீர் ஏரியில் மிதந்து வந்து ஒதுங்கிய படி இருக்கும். இதைவிட, அதிக வேகத்தில் வாகனங்களை சாரதிகள் செலுத்துவதால் விபத்து நடந்துவிடுமோ என்ற அச்ச உணர்வு இருந்தபடியே இருக்கும். மேலும் மாலை வேளைகளில் இங்கு கூடுபவர்கள் வாகனங்களை நடைபாதைக்கு குறுக்கே நிறுத்துவதால் நடந்துவரும் முதியவர்கள் சிரமங்களுக்கு ஆளாகின்றனர். இதைத்தவிர இந்த இடமும் இயற்கைச் சூழலும் மனதிற்கு இதமாகவே உள்ளன.

2 நாட்களுக்கு முன்பு முகநூலில் இரு விடயங்கள் கண்ணில் பட்டன. முதல் விடயம் நடுத்தர வயதில் உள்ள ஒருவர் கடற்கரையோரத்தில் நிழல் மரங்களை நடுவதற்காக ஆயத்தம் செய்யும் ஒரு படம். இரண்டாவது விடயம் கடற்கரையை சுத்தம் செய்வதற்காகவும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றுவதற்காகவும் ஒன்று சேரும்படி கூறும் இளைஞர்கள் அணியின் வேண்டுகோள் ஒன்று. இந்த இரு விடயங்களும் மனதிற்கு, மகிழ்ச்சியை தந்தன. இன்று, ஆகஸ்ட் 16ஆம் தேதி காலை ஆறு மணிக்கு கழிவகற்றும் செயற்பாடு நடப்பதாக அத்தகவல் கூறியது. வழக்கமாக மாலையில் மட்டுமே பண்ணைக்கு செல்லும் நான் இன்று காலை சென்றேன். கிட்டத்தட்ட 30க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பல்வேறு இடங்களில் பிளாஸ்டிக் குப்பைகளை சுகாதார முறைப்படி சேகரித்துக் கொண்டிருந்தார். மிகமிக மகிழ்ச்சியாக இருந்தது. அவர்கள் சிலருடன் உதை யாடிவிட்டு பெரும்பொழுது முகநூலில் பார்த்த ஒருவர் வேறொருவருடன் சேர்ந்து சில மரக்கன்றுகளை வைத்துக்கொண்டு நடுவதற்காக ஆயத்தம் செய்துகொண்டிருந்தார்.
என்னுடன் இன்னும் ஒருவரும் சேர்ந்துவிட்டார் நாங்கள் நால்வரும் பண்ணை கடற்கரை பற்றியும் தற்போதைய இளைஞர்களின் செயற்பாடுகள் குறித்தும் செயற்றிறன் குறைந்த மாகாணசபை, மாநகர சபை குறித்தும் கருத்துக்களை பரிமாறிக்கொண்டோம்., எந்த எதிர்பார்ப்பும் இல்லாது மரங்களை நடும் அந்த மனிதர்களின் செயற்பாடுகளை மனதார பாராட்டினோம்., அவர்களை பார்க்கும்போது சிறுவயதில் மில்க்வைற் கனகராஜா யாழ் மாவட்டம் முழுவதும் பனை மரங்களை நட்ட ஞாபகங்கள் மனதில் ஓடின. அவர்களை பற்றி ஒரு குறிப்பு எழுதுவதற்கு புகைப்படம் ஒன்று எடுக்க கேட்டபோது மறுத்துவிட்டார். ‘தயவுசெய்து பொது வெளியில் எங்கள் பெயர் பரவுவதை நாங்கள் விரும்பவில்லை. இந்தக் செய்கை மூலம் நான் புகழப்படுவதையோ விமர்சிக்க படுவதையோ விரும்பவில்லை. தயவுசெய்து மன்னித்து விடுங்கள்” என்றார்கள்.

உங்கள் கையால் நாங்கள் கொண்டு வந்த இந்த மரங்களில் ஒன்றை நட்டு விடுவீர்களா? என்று கேட்டார் நானும் என்னுடன் இணைந்து நண்பனும் உடனடியாகவே “ஆம்” என்றோம். எங்களுக்கும் மகிழ்ச்சியாகத்தான் இருக்கும் .மரத்தை நட்டு உயிர் தண்ணீரும் விட்டு அந்த சூழலியல் நண்பர்களோடு மனம் விட்டு உரையாடிவிட்டு வந்தேன் .

உண்மையிலேயே யாழ்ப்பாணம் இன்னும் உயித்துடிப்புடனேயே இருக்கிறது. சூழலை நேசிக்கும் இளைஞர்களும் முதியவர்களும் இருக்கிறார்கள். ஏமாற்றத்தை தரும் போலித் தேசிய அரசியல்வாதிகளிலும் பார்க்க தேசத்தை , சூழலை , நேசிக்கும் மனிதர்களே இன்று நாட்டுக்குத் தேவை. அவர்களே சிறந்தவர்கள்

 

 

 

https://www.facebook.com/pg/sirakukal.info/about/?ref=page_internal

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் நினைக்கின்றேன் அவருக்கு தெரியும் இது புதிது என்று.  ஆனால் பையனின் கருத்தை மட்டும் வைத்து எப்படி சம்பவம் பழையதுதான் என்று அடிச்சு சத்தியம் பண்ணினாரோ தெரியவில்லை. ஓருவர் இங்கு எழுதுவதை மட்டும் வைத்து தனது நிலைப்பாட்டினை மாற்றும் ஆள் அல்ல அவர்.0
    • ஈரான் ஜனாதிபதியின் இலங்கை வருகை : கண்கானிப்பு நடவடிக்கையில் அமெரிக்க உளவுத்துறை. ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இலங்கை வருகையை இஸ்ரேலின் மொசாட் புலனாய்வு சேவையும், அமெரிக்க எப்.பி.ஐ உளவுத்துறையும் கண்காணித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தின் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொள்வதற்காக ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி எதிர்வரும் புதன்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இந்நிலையில், இலங்கையில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைமுறையில் உள்ளதோடு, ஈரானிய சிரேஷ்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் குழுவொன்று அண்மையில் இலங்கைக்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டிருந்தது. ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும், சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதேவேளை, கொழும்பிற்கு அழைத்து வரப்படும் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1379001
    • முற்றிலும் உண்மை ஆனால் மீசாலையில் வ‌சிக்கும் என‌து அத்தை வ‌ய‌தான‌ கால‌த்திலும் சிங்க‌ள‌வ‌னின் அட‌க்கு முறைய‌ தாண்டி த‌மிழ் தேசிய‌ கூட்ட‌மைப்புக்கு தொட‌ர்ந்து ஓட்டு போடுகிறா அதோட‌ அத்தைய‌ ஏதோ ஒரு ச‌ம்ப‌வ‌த்தில் சாலையில் வைச்சு மிர‌ட்டினார்க‌ள் அத்தை அவேன்ட‌ கைய‌ த‌ள்ளி விட்டு வீட்டுக்கு ந‌ட‌ந்து வ‌ந்த‌வா 2009க‌ட‌சியில் ட‌க்கிள‌ஸ்சின் ஆட்க‌ள் வீடு புகுந்து நெஞ்சில் துப்பாக்கிய‌ வைச்சு மிர‌ட்டின‌வை ஆனால் அவ‌ன் ப‌ய‌ப்பிட‌ வில்லை பிற‌க்கு உற‌வுக‌ள் சொல்ல‌ அர‌சிய‌லில் இருந்து முற்றிலுமாய் வில‌கி விட்டான்..............................
    • "ஊசிப் போன வடை" என்று, யாரோ... உருட்டிக் கொண்டு திரிந்தார்கள். 😂 எல்லாம், பொய்யா... கோப்பால். 🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.