Jump to content

கனடிய அரசாங்கத்தின் நிதியமைச்சர் பில் மோர்ணோ பதவி விலகுவதாக இன்று அறிவித்துள்ளார்


Recommended Posts

 

என்னை யாரும் வற்புறுத்தவில்லை, எனது விருப்பத்தின்பேரிலேயே பதவி விலகுகிறேன்

பில் மோர்ணோ

ஆகஸ்ட் 17, 2020: கனடிய அரசாங்கத்தின் நிதியமைச்சர் பில் மோர்ணோ பதவி விலகுவதாக இன்று அறிவித்துள்ளார். அத்தோடு, ரொறோண்டோ மத்தி பாராளுமன்றத் தொகுதியின் உறுப்பினர் பதவியிலிருந்தும் தான் விலகப்போவதாக அவர் அறிவித்திருக்கிறார்.

கோவிட்-19 உத்தேசச் செலவுகள் மற்றும் சுற்றாடல் முன்னெடுப்புகள் தொடர்பாக, கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்றூடோவுக்கும் நிதியமைச்சர் பில் மோர்ணோவுக்குமிடையில் சமீபத்தில் கருத்து வேறுபாடுகள் நிலவியதாகவும், இதன் காரணமாக பிரதமர் ட்றூடோ அவரைப் பதவியிலிருந்து விலகும்படி கேட்டிருந்திருக்கலாம் எனவும் வதந்திகள் முன்னர் பரவியிருந்தன.

“இன்று நான் பிரதமரைச் சந்தித்து, எனது பாராளுமன்றப் பதவியிலிருந்தும் விலகப்போவதாகத் தெரிவித்திருக்கிறேன். இரண்டு தவணைகளுக்குமேல் பாராளுமன்ற உறுப்பினராக இருப்பது ஒருபோதுமே எனது விருப்பமாக இருந்ததில்லை” என அவர் இன்று பத்திரிகையாளர் மத்தியில் பேசும்போது குறிப்பிட்டார்.

பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தி அமைப்பின் (Organization for Economic Co-operation and Development (OECD)) செயலாளர் நாயக பதவிக்குத் தான் போட்டிடவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கோவிட்-19 நோய்த் தொற்றுக் காலத்தில் இருக்கக்கூடிய பொருளாதாரச் சவால்களைச் சமாளிக்க புதிய நிதியமைச்சர் ஒருவரின் தேவை இப்போது இருக்கிறது எனவும், தனது பதவி விலகலுக்கு பிரதமர் ட்றூடோ காரணமில்லை எனவும், தனது முழு விருப்பத்துடனேயே தான் பதவி விலகுவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

‘வீ’ தர்ம நிறுவனம் தொடர்பாகக் கடந்த சில வாரங்களாக நடைபெறும் விவாதங்களின்போது, அச் சர்ச்சைகளில் பிரதமரினதும், நிதியமைச்சரினதும் பங்குகள் குறித்தும், அவருக்கு வழங்கப்பட்ட $41,366 பணத்தை மீளக் கொடுக்க வெண்டுமென்பதுடன், இருவரும் பதவியிலிருந்து விலகவெண்டுமெனவும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

https://marumoli.com/கனடா-நிதியமைச்சர்-பில்-ம/?fbclid=IwAR0Iz_c-XOFEDNb1gk0lJsbQq8_GaAdCs5lIvIFLbOvNkp83X-gE_eon6sU

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.