Jump to content

அமெரிக்காவின் மரணப் பள்ளத்தாக்கில் இதுவரை 'பூமியின் அதிகபட்ச' வெப்பநிலை பதிவு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவின் மரணப் பள்ளத்தாக்கில் இதுவரை 'பூமியின் அதிகபட்ச' வெப்பநிலை பதிவு

மரணப் பள்ளத்தாக்கில் இதுவரை 'பூமியின் அதிகபட்ச' வெப்பநிலை பதிவு

REUTERS

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள மரணப் பள்ளத்தாக்கு தேசிய பூங்காவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று 130 டிகிரி ஃபாரன்ஹீட் (54.4 டிகிரி செல்சியஸ்) வெப்பம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மரணப் பள்ளத்தாக்கின் ஃபர்னேஸ் க்ரீக் எனும் இடத்தில் இந்த வெப்பநிலை பதிவாகியுள்ளது. 

இதுவரை பூமியில் பதிவுசெய்யப்பட்ட வெப்பநிலையில் இதுவே அதிகபட்சமாக இருப்பதற்கான சாத்தியங்கள் இருப்பதாக கருதப்படுகிறது.

அமெரிக்காவின் மேற்குக் கடலோரப் பகுதிகளில் கடுமையான வெப்ப அலை வீசி வரும் சூழலில் இந்த அதிகபட்ச வெப்பநிலை பதிவு செய்யப்பட்டுள்ளது.

அப்பகுதியின் வெப்பநிலை இந்த வாரத்தில் மேலும் அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு பூமியில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை 129.2 டிகிரி ஃபாரன்ஹீட் (54 டிகிரி செல்சியஸ்) ஆகும்.

இதுவும் 2013-ஆம் ஆண்டு மரணப் பள்ளத்தாக்கில்தான் பதிவு செய்யப்பட்டது.

ஒரு நூற்றாண்டுக்கு முன்பாக மரணப் பள்ளத்தாக்கில் 134 டிகிரி ஃபாரன்ஹீட் (56.6 டிகிரி செல்சியஸ்) வெப்பநிலை பதிவு செய்யப்பட்டது என்று கூறப்படுவது குறித்து பல்வேறு சந்தேகங்கள் மற்றும் கேள்விகள் உள்ளன. 
 

1913ஆம் ஆண்டு பதிவான அந்த அளவு வெப்பநிலை, அந்த காலகட்டத்தில் பதிவுசெய்யப்பட்ட வெப்பநிலை அளவுகளுடன் ஒத்துப்போகவில்லை என்று 2016-ஆம் ஆண்டு வெப்பநிலை வரலாற்றாளர் கிறிஸ்டோபர் பர்ட் தெரிவித்துள்ளார்.

1931ஆம் ஆண்டு ஆஃப்ரிக்காவின் துனிசியாவில் 131 டிகிரி ஃபாரன்ஹீட் (55 டிகிரி செல்சியஸ்) வெப்பநிலை பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனாலும் அது காலனியாதிக்க காலத்தில் பதிவுசெய்யப்பட்ட வெப்பநிலை என்பதால் அதன் நம்பகத்தன்மை குறித்து கிறிஸ்டோபர் பர்ட் கேள்வி எழுப்புகிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

50 deg c ல் நான் நடந்து வீதியில் சென்றுள்ளேன். மிகக் கடுமையான வெப்பம். நாக்கு வரண்டுவிடும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, colomban said:

50 deg c ல் நான் நடந்து வீதியில் சென்றுள்ளேன். மிகக் கடுமையான வெப்பம். நாக்கு வரண்டுவிடும்

கத்தாருக்கு போன புதிதில் 50c  க்கு மேலிருக்கும், நான் வேலையால் நடந்து வந்த போது தலையை சுத்தி மயக்க நிலை மாதிரி வர மின் கம்பத்தை கட்டிப்பிடித்து இருந்துவிட்டேன், சத்தியும் எடுத்தனான்😀, என்னால் தாங்க முடியவில்லை - ஒரு கிழமை வெளிக்கிடவில்லை

 அதுக்குபின் மத்திய கிழக்கில் சவுதியை தவிர மற்ற எல்லா நாட்டிலும் இருந்திருக்கின்றேன். கத்தார் மாதிரி ஒரு இடமும் இருக்கவில்லை

அனல் காற்றை அங்கு தான் இரவு பகலா அனுபவிக்கலாம் 

குளிரும் ஊசி குத்துகின்ற மாதிரி காற்றுடன் வரும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, உடையார் said:

கத்தாருக்கு போன புதிதில் 50c  க்கு மேலிருக்கும், நான் வேலையால் நடந்து வந்த போது தலையை சுத்தி மயக்க நிலை மாதிரி வர மின் கம்பத்தை கட்டிப்பிடித்து இருந்துவிட்டேன், சத்தியும் எடுத்தனான்😀, என்னால் தாங்க முடியவில்லை - ஒரு கிழமை வெளிக்கிடவில்லை

 அதுக்குபின் மத்திய கிழக்கில் சவுதியை தவிர மற்ற எல்லா நாட்டிலும் இருந்திருக்கின்றேன். கத்தார் மாதிரி ஒரு இடமும் இருக்கவில்லை

அனல் காற்றை அங்கு தான் இரவு பகலா அனுபவிக்கலாம் 

குளிரும் ஊசி குத்துகின்ற மாதிரி காற்றுடன் வரும் 

ஆம் உடையார் ஐயா. இப்பொழுது கட்டுமானதுறையில் வேலை செய்பவர்கள், பகலில் வேலை செய்ய முடியாது. பகல் 11 ‍ ‍ ‍ 4 மணிவரை விட்டு பின் அந்தி பொழுது சாய்தவுடந்தான்  வேலை செய்யலாம். என ஓர் சட்டமுள்ளது. இப்பொழுது இங்கும் வெயில் குறைந்துவிட்டது. உலகின் வெப்பமாற்றம் காரணமாக.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, உடையார் said:

கத்தாருக்கு போன புதிதில் 50c  க்கு மேலிருக்கும், நான் வேலையால் நடந்து வந்த போது தலையை சுத்தி மயக்க நிலை மாதிரி வர மின் கம்பத்தை கட்டிப்பிடித்து இருந்துவிட்டேன், சத்தியும் எடுத்தனான்😀, என்னால் தாங்க முடியவில்லை - ஒரு கிழமை வெளிக்கிடவில்லை

 அதுக்குபின் மத்திய கிழக்கில் சவுதியை தவிர மற்ற எல்லா நாட்டிலும் இருந்திருக்கின்றேன். கத்தார் மாதிரி ஒரு இடமும் இருக்கவில்லை

அனல் காற்றை அங்கு தான் இரவு பகலா அனுபவிக்கலாம் 

குளிரும் ஊசி குத்துகின்ற மாதிரி காற்றுடன் வரும் 

உடையார் நீங்கள் பேய்க்காய்...:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, குமாரசாமி said:

உடையார் நீங்கள் பேய்க்காய்...:grin:

நான் சொன்ன அர்த்தம் கத்தார் வெட்கை கூட என்று

வெட்கை தனித்தது மற்ற நாடுகளில் தான்😀.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.