Jump to content

தர்மச்சக்கர ஆடை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார் மஸாஹிமா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பௌத்த சின்னமாகக் கருதப்படும் தர்மச் சக்கரம் அச்சிடப்பட்ட துணியிலான ஆடையை அணிந்திருந்தார் எனும் குற்றச்சாட்டில், கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு எதிராக இலங்கை போலீஸார் தொடர்ந்திருந்த வழக்கை மீளப் பெற்றுள்ளனர்.

மஹியங்கண நீதிவான் நீதிமன்றில் இந்த வழக்கு நேற்று திங்கட்கிழமை நீதவான் ஏ.ஏ.பி. லக்ஷ்மன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, சட்ட மா அதிபரின் அறிவுரைக்கு அமைவாக, இந்த வழக்கை தொடர்ந்து நடத்த முடியாதென்றும், அதனால் வழக்கை மீளப் பெற்றுக் கொள்வதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து குறித்த குற்றச்சாட்டுகளில் இருந்தும், வழக்கிலிருந்தும் மேற்படி பெண்ணை விடுவிப்பதாக நீதவான் அறிவித்தார்.

கண்டி மாவட்டம் - கொலங்கொட எனும் பிரதேசத்தைச் சேர்ந்த மஸாஹிமா (தற்போது வயது 48) எனும் பெண், தர்மச் சக்கரம் அச்சிடப்பட்ட ஆடையை அணிந்திருந்தார் என்றும், அதன் மூலம் அவர் பௌத்த மதத்தை அவமதித்து விட்டார் எனவும், அதன் மூலம் அவர் இனமுறுகலை ஏற்படுத்தினார் என்றும் குற்றம்சாட்டி, கடந்த வருடம் மே மாதம் 17ஆம் தேதி - ஹசலக போலீஸாரால் கைது செய்யப்பட்டு, மறுநாள் மஹியங்கண நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டார்.

இதன்போது குற்றம்சாட்டப்பட்ட பெண்ணை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து அவர் - பதுளை சிறைச்சாலையில் 14 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டார்.

மேற்படி பெண் மீது தொடரப்பட்ட வழக்கில் கொழும்பைச் சேர்ந்த சட்டத்தரணி தம்பதிகள் ஏ.எம்.எம். சறூக் மற்றும் பாத்திமா நுஸ்ரா சறூக் ஆகியோர் ஆஜராகி வந்தனர். கட்டணம் எதனையும் பெறாமல் மேற்படி சட்டத்தரணிகள் இந்த வழக்கில் ஆஜராகிமை குறிப்பிடத்தக்கது.

சரியான வடிவம் அரசிடம் இல்லை

இதேவேளை, குற்றம்சாட்டப்பட்ட பெண் அணிந்திருந்த ஆடையில் உள்ளது, தர்மச் சக்கரம்தானா என்பதை ஒப்பிட்டுப் பார்ப்பதற்காக அதனை புத்த சமய அலுவல்கள் ஆணையாளருக்கும், தர நிர்ணய சபையினருக்கும் தாங்கள் அனுப்பியதாகவும், ஆனால் அதனை ஒப்பிட்டு நோக்குவதற்கு தம்மிடம் தர்மச் சக்கரத்தின் சரியான வடிவம் இல்லை என்று அவர்கள் கூறி விட்டனர் எனவும், கடந்த வருடம் ஜுன் மாதம் நீதிமன்றில் போலீஸார் தெரிவித்திருந்தனர்.

தர்மச் சக்கர ஆடை வழக்கு: பெண்ணுக்கு எதிரான வழக்கை, மீளப்பெற்றனர் போலீஸார்

பட மூலாதாரம், FAcebook

 

இதனையடுத்து தன்னை போலீஸார் கைது செய்து, தடுத்து வைத்திருந்தமைக்கு எதிராக, மேற்படி மஸாஹிமா எனும் பெண், கடந்த வருடம் ஜுன் மாதம் நடுப்பகுதியளவில் அடிப்படை உரிமை மீறல் வழக்கு ஒன்றினை உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்தார்.

இந்த நிலையில், குறித்த பெண்ணை கைது செய்து விளக்க மறியலில் வைத்திருந்தமையின் மூலம் அவரின் அடிப்படை உரிமை மீளப்பட்டுள்ளதாகவும், அதற்காக அவருக்கு நீதிமன்றின் மூலம் நஷ்டைஈட்டைப் பெற்றுக் கொடுக்கப் போவதாகவும் சட்டத்தரணி சறூக் கூறினார்.

"குறித்த பெண்ணுக்கு நஷ்டஈட்டை வழங்குமாறு நேற்றைய தினம் மஹியங்கண நீதவான் நீதிமன்றில் கோரிக்கை விடுத்தோம். ஆனால், வழக்கை தொடர்ந்து நடத்த முடியாது என்று மட்டுமே சட்ட மா அதிபர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாகவும், நஷ்டஈடு வழங்குவது தொடர்பில் அவர் எதனையும் குறிப்பிடவில்லை என்றும் மன்றில் நீதவான் கூறினார். எனவேதான், உச்ச நீதிமன்றின் மூலம், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நஷ்டஈட்டைப் பெற்றுக் கொடுக்கத் தீர்மானித்துள்ளோம்" எனவும் சட்டத்தரணி சறூக் தெரிவித்தார்.

புத்தரை பச்சை குத்திய நயோமி கோல்மன்

இலங்கையில் இதுபோன்றதொரு 'பௌத்த சமய அவமதிப்பு' குற்றச்சாட்டு ஒன்றினை 2014ஆம் ஆண்டு பிரித்தானியாவைச் சேர்ந்த நயோமி கோல்மன் எனும் பெண் - இலங்கைக்கு சுற்றுலாப் பயணியாக வந்தபோது எதிர்கொண்டார்.

தர்மச் சக்கர ஆடை வழக்கு: பெண்ணுக்கு எதிரான வழக்கை, மீளப்பெற்றனர் போலீஸார்

பட மூலாதாரம், facebook

 

அப்போது அந்தப் பெண்ணின் இடதுகை புஜத்தில் புத்தரின் வடிவம் பச்சை குத்தப்பட்டிருந்ததைக் காரணம் காட்டி, அவரை போலீஸார் கைது செய்து, 04 நாட்கள் தடுத்து வைத்திருந்தனர். பின்னர் அவர் நாடு கடத்தப்பட்டார்.

பிரித்தானியா சென்ற நயோமி கோல்மன், அந்த சம்பவத்துக்கு எதிராக இலங்கையின் உச்ச நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தார். மூன்று வருடங்கள் நீடித்த அந்த வழக்கின் தீர்ப்பு 2017ஆம் ஆண்டு, நயோமி கோல்மன் எனும் அந்தப் பெண்ணுக்கு சார்பாக வழங்கப்பட்டது.

புத்தரின் உருவத்தை தனது உடலில் பச்சை குத்திக் கொண்டமை, அந்தப் பெண்ணின் அடிப்படை உரிமை என, தனது தீர்ப்பில் நீதிமன்றம் குறிப்பிட்டது. மேலும், அந்தப் பெண்ணை கைது செய்ததன் மூலம் அவரின் அடிப்படை உரிமை மறுக்கப்பட்டதாகவும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

எனவே, புத்தரின் உருவத்தை பச்சை குத்திக் கொண்டதாகக் கூறி, அந்தப் பெண்ணைத் தடுத்து வைத்தமைக்கு நஷ்டஈடாக 05 லட்சம் ரூபாவை அரசாங்கம் வழக்க வேண்டும் என, நீதிமன்றம் உத்தரவிட்டது.

அத்தோடு பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வழக்குச் செலவாக 02 லட்சம் ரூபாவை வழங்க வேண்டும் எனவும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இவற்றுக்கு மேலதிகமாக அந்தப் பெண்ணைக் கைது செய்த கட்டுநாயக்க போலீஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் போலீஸ் சார்ஜன்ட் ஆகியோர், தலா 50 ஆயிரம் ரூபாயை அந்தப் பெண்ணுக்கு வழங்க வேண்டுமென்றும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

https://www.bbc.com/tamil/sri-lanka-53818951

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, பிழம்பு said:

பௌத்த சின்னமாகக் கருதப்படும் தர்மச் சக்கரம் அச்சிடப்பட்ட துணியிலான ஆடையை அணிந்திருந்தார் எனும் குற்றச்சாட்டில், கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு எதிராக இலங்கை போலீஸார் தொடர்ந்திருந்த வழக்கை மீளப் பெற்றுள்ளனர்.

மஹியங்கண நீதிவான் நீதிமன்றில் இந்த வழக்கு நேற்று திங்கட்கிழமை நீதவான் ஏ.ஏ.பி. லக்ஷ்மன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, சட்ட மா அதிபரின் அறிவுரைக்கு அமைவாக, இந்த வழக்கை தொடர்ந்து நடத்த முடியாதென்றும், அதனால் வழக்கை மீளப் பெற்றுக் கொள்வதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து குறித்த குற்றச்சாட்டுகளில் இருந்தும், வழக்கிலிருந்தும் மேற்படி பெண்ணை விடுவிப்பதாக நீதவான் அறிவித்தார்.

கண்டி மாவட்டம் - கொலங்கொட எனும் பிரதேசத்தைச் சேர்ந்த மஸாஹிமா (தற்போது வயது 48) எனும் பெண், தர்மச் சக்கரம் அச்சிடப்பட்ட ஆடையை அணிந்திருந்தார் என்றும், அதன் மூலம் அவர் பௌத்த மதத்தை அவமதித்து விட்டார் எனவும், அதன் மூலம் அவர் இனமுறுகலை ஏற்படுத்தினார் என்றும் குற்றம்சாட்டி, கடந்த வருடம் மே மாதம் 17ஆம் தேதி - ஹசலக போலீஸாரால் கைது செய்யப்பட்டு, மறுநாள் மஹியங்கண நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டார்.

இதன்போது குற்றம்சாட்டப்பட்ட பெண்ணை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து அவர் - பதுளை சிறைச்சாலையில் 14 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டார்.

மேற்படி பெண் மீது தொடரப்பட்ட வழக்கில் கொழும்பைச் சேர்ந்த சட்டத்தரணி தம்பதிகள் ஏ.எம்.எம். சறூக் மற்றும் பாத்திமா நுஸ்ரா சறூக் ஆகியோர் ஆஜராகி வந்தனர். கட்டணம் எதனையும் பெறாமல் மேற்படி சட்டத்தரணிகள் இந்த வழக்கில் ஆஜராகிமை குறிப்பிடத்தக்கது.

சரியான வடிவம் அரசிடம் இல்லை

இதேவேளை, குற்றம்சாட்டப்பட்ட பெண் அணிந்திருந்த ஆடையில் உள்ளது, தர்மச் சக்கரம்தானா என்பதை ஒப்பிட்டுப் பார்ப்பதற்காக அதனை புத்த சமய அலுவல்கள் ஆணையாளருக்கும், தர நிர்ணய சபையினருக்கும் தாங்கள் அனுப்பியதாகவும், ஆனால் அதனை ஒப்பிட்டு நோக்குவதற்கு தம்மிடம் தர்மச் சக்கரத்தின் சரியான வடிவம் இல்லை என்று அவர்கள் கூறி விட்டனர் எனவும், கடந்த வருடம் ஜுன் மாதம் நீதிமன்றில் போலீஸார் தெரிவித்திருந்தனர்.

தர்மச் சக்கர ஆடை வழக்கு: பெண்ணுக்கு எதிரான வழக்கை, மீளப்பெற்றனர் போலீஸார்

பட மூலாதாரம், FAcebook

 

இதனையடுத்து தன்னை போலீஸார் கைது செய்து, தடுத்து வைத்திருந்தமைக்கு எதிராக, மேற்படி மஸாஹிமா எனும் பெண், கடந்த வருடம் ஜுன் மாதம் நடுப்பகுதியளவில் அடிப்படை உரிமை மீறல் வழக்கு ஒன்றினை உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்தார்.

இந்த நிலையில், குறித்த பெண்ணை கைது செய்து விளக்க மறியலில் வைத்திருந்தமையின் மூலம் அவரின் அடிப்படை உரிமை மீளப்பட்டுள்ளதாகவும், அதற்காக அவருக்கு நீதிமன்றின் மூலம் நஷ்டைஈட்டைப் பெற்றுக் கொடுக்கப் போவதாகவும் சட்டத்தரணி சறூக் கூறினார்.

"குறித்த பெண்ணுக்கு நஷ்டஈட்டை வழங்குமாறு நேற்றைய தினம் மஹியங்கண நீதவான் நீதிமன்றில் கோரிக்கை விடுத்தோம். ஆனால், வழக்கை தொடர்ந்து நடத்த முடியாது என்று மட்டுமே சட்ட மா அதிபர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாகவும், நஷ்டஈடு வழங்குவது தொடர்பில் அவர் எதனையும் குறிப்பிடவில்லை என்றும் மன்றில் நீதவான் கூறினார். எனவேதான், உச்ச நீதிமன்றின் மூலம், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நஷ்டஈட்டைப் பெற்றுக் கொடுக்கத் தீர்மானித்துள்ளோம்" எனவும் சட்டத்தரணி சறூக் தெரிவித்தார்.

புத்தரை பச்சை குத்திய நயோமி கோல்மன்

இலங்கையில் இதுபோன்றதொரு 'பௌத்த சமய அவமதிப்பு' குற்றச்சாட்டு ஒன்றினை 2014ஆம் ஆண்டு பிரித்தானியாவைச் சேர்ந்த நயோமி கோல்மன் எனும் பெண் - இலங்கைக்கு சுற்றுலாப் பயணியாக வந்தபோது எதிர்கொண்டார்.

தர்மச் சக்கர ஆடை வழக்கு: பெண்ணுக்கு எதிரான வழக்கை, மீளப்பெற்றனர் போலீஸார்

பட மூலாதாரம், facebook

 

அப்போது அந்தப் பெண்ணின் இடதுகை புஜத்தில் புத்தரின் வடிவம் பச்சை குத்தப்பட்டிருந்ததைக் காரணம் காட்டி, அவரை போலீஸார் கைது செய்து, 04 நாட்கள் தடுத்து வைத்திருந்தனர். பின்னர் அவர் நாடு கடத்தப்பட்டார்.

பிரித்தானியா சென்ற நயோமி கோல்மன், அந்த சம்பவத்துக்கு எதிராக இலங்கையின் உச்ச நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தார். மூன்று வருடங்கள் நீடித்த அந்த வழக்கின் தீர்ப்பு 2017ஆம் ஆண்டு, நயோமி கோல்மன் எனும் அந்தப் பெண்ணுக்கு சார்பாக வழங்கப்பட்டது.

புத்தரின் உருவத்தை தனது உடலில் பச்சை குத்திக் கொண்டமை, அந்தப் பெண்ணின் அடிப்படை உரிமை என, தனது தீர்ப்பில் நீதிமன்றம் குறிப்பிட்டது. மேலும், அந்தப் பெண்ணை கைது செய்ததன் மூலம் அவரின் அடிப்படை உரிமை மறுக்கப்பட்டதாகவும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

எனவே, புத்தரின் உருவத்தை பச்சை குத்திக் கொண்டதாகக் கூறி, அந்தப் பெண்ணைத் தடுத்து வைத்தமைக்கு நஷ்டஈடாக 05 லட்சம் ரூபாவை அரசாங்கம் வழக்க வேண்டும் என, நீதிமன்றம் உத்தரவிட்டது.

அத்தோடு பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வழக்குச் செலவாக 02 லட்சம் ரூபாவை வழங்க வேண்டும் எனவும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இவற்றுக்கு மேலதிகமாக அந்தப் பெண்ணைக் கைது செய்த கட்டுநாயக்க போலீஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் போலீஸ் சார்ஜன்ட் ஆகியோர், தலா 50 ஆயிரம் ரூபாயை அந்தப் பெண்ணுக்கு வழங்க வேண்டுமென்றும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

https://www.bbc.com/tamil/sri-lanka-53818951

அப்போ இவளவு நாளும் தர்ம சக்கரம் என்று சும்மா படம் காட்டி கொண்டு இருந்தார்களா? 

Link to comment
Share on other sites

தமிழ் மக்களுக்கும் நிறைய சட்ட உதவிகள் தேவையாக உள்ளதல்லவா? இவர்களிடம் கேட்கலாமா? நீராவியடி பிள்ளையாருக்கும், திருக்கேதீஸ்வரம் வளைவுக்கும், விரிவுரையாளர் கண்ணதாசனுக்கும் சுமந்திரன் உதவினார். அவரையும், கள்ளவாக்கு என்று அரச பக்கம் அனுப்பியாச்சு. குருபரன் ஒன்று இரண்டு செய்கிறார். மற்றவர்களுக்கு எங்களிடம் சட்டத்தரணிகள் இல்லாததால், எங்களையும் தமிழ் பேசும் சகோதரர்கள் என்று கருதி உதவுமாறு இந்த முஸ்லிம் சட்டத்தரணி தம்பதிகளுடம் கெஞ்சிக் கேட்டு பார்க்கலாமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, கற்பகதரு said:

கள்ளவாக்கு என்று அரச பக்கம் அனுப்பியாச்சு

கள்ள வாக்கு வந்ததே சிங்களவர்களிடம் இருந்து தமிழர்களின் ஒற்றுமையை குலைக்கவே வந்த வேலை முடிந்தால் போயிருக்கணும் போ சொல்லுங்கள் அந்த கள்வனை இப்படி சொன்னால் போகுமா ?

 

12 minutes ago, கற்பகதரு said:

நீராவியடி பிள்ளையாருக்கும், திருக்கேதீஸ்வரம் வளைவுக்கும், விரிவுரையாளர் கண்ணதாசனுக்கும் சுமந்திரன் உதவினார்.

அவர் உதவி பிரச்சனை முடிந்ததா ?

 

13 minutes ago, கற்பகதரு said:

இந்த முஸ்லிம் சட்டத்தரணி தம்பதிகளுடம் கெஞ்சிக் கேட்டு பார்க்கலாமா?

புதியவர்களை நீங்கள்  நம்புவது இல்லையே ?

Link to comment
Share on other sites

3 hours ago, கற்பகதரு said:

நீராவியடி பிள்ளையாருக்கும், திருக்கேதீஸ்வரம் வளைவுக்கும், விரிவுரையாளர் கண்ணதாசனுக்கும் சுமந்திரன் உதவினார். அவரையும், கள்ளவாக்கு என்று அரச பக்கம் அனுப்பியாச்சு.

 

2 hours ago, பெருமாள் said:

அவர் உதவி பிரச்சனை முடிந்ததா ?

இது கூட தெரியவில்லையா?  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு ஈஸ்ட்காமில்  *** சுமத்திரன் சில்வருடங்களுக்கு முன்பு கூட்டம் ஒன்று பவுன்சர் பாதுகாப்புடன் வைத்தார் கேள்வி கேட்கப்படுது  பதில் இதற்க்கு இலங்கை அரசியல் யாப்பை படித்து தெரிந்து கொள்ளுங்கள் .

இரண்டாவது கேள்வி கேட்கப்படுது  பதில் அதற்கும் நீங்கள்  ஆறுதலாக இலங்கையின் அரசியல் யாப்பை படித்து புரிந்துகொள்ளுங்கள் .

மூன்றாவது கேள்வி கேட்க்க எழவும் பவுன்சர்களால் அந்த கேள்வி கேட்ட நபர் எச்சரிக்க படுகிறார் 

அதன்பின் கூட்டத்தில் இருப்பவர்களை பார்த்து எச்சரிக்கும் தொனியில் யாரும் கூட்டத்தை குழப்பும் வண்ணம் நடந்து கொண்டால் அவருக்கு நடந்ததுதான் நடக்கும் .

 

இணையத்தில் இருப்பது தெரியும் உங்களுக்கு அவை பற்றி விளக்கம் இருக்கா ?

Link to comment
Share on other sites

5 hours ago, பெருமாள் said:

இணையத்தில் இருப்பது தெரியும் உங்களுக்கு அவை பற்றி விளக்கம் இருக்கா ?

 

10 hours ago, பெருமாள் said:

அவர் உதவி பிரச்சனை முடிந்ததா ?

உங்களுக்கு கேள்வி கேட்க மட்டும்தான் தெரியுமா? 😁

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, கற்பகதரு said:

தமிழ் மக்களுக்கும் நிறைய சட்ட உதவிகள் தேவையாக உள்ளதல்லவா? இவர்களிடம் கேட்கலாமா? நீராவியடி பிள்ளையாருக்கும், திருக்கேதீஸ்வரம் வளைவுக்கும், விரிவுரையாளர் கண்ணதாசனுக்கும் சுமந்திரன் உதவினார். அவரையும், கள்ளவாக்கு என்று அரச பக்கம் அனுப்பியாச்சு. குருபரன் ஒன்று இரண்டு செய்கிறார். மற்றவர்களுக்கு எங்களிடம் சட்டத்தரணிகள் இல்லாததால், எங்களையும் தமிழ் பேசும் சகோதரர்கள் என்று கருதி உதவுமாறு இந்த முஸ்லிம் சட்டத்தரணி தம்பதிகளுடம் கெஞ்சிக் கேட்டு பார்க்கலாமா?

தாராளமாக நீங்கள் கெஞ்சலாம் ...we don't have any issue. 
At the end of the day it's your wish😂🤣😆. சுத்துமாத்து அரச பக்கம் போயிட்டாரா இது எப்போ ...?
அவர் வந்த வேலை இன்னும் முடியவில்லையே இப்போதானே 22 இலிருந்து 9 ஆக்கியிருக்கிறார் கொஞ்சம் பொறுங்கோ 9 ஐ 0 ஆக்கிவிட்டு அரசதரப்பில் தேசியப்பட்டியல் பா .ஊ ஆக மிக சீக்கிரமே வருவார்   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, அக்னியஷ்த்ரா said:

அரசதரப்பில் தேசியப்பட்டியல் பா .ஊ ஆக மிக சீக்கிரமே வருவார்   

வி. முரளிதரன் மாதிரியும்  ஆகலாம்.

Link to comment
Share on other sites

38 minutes ago, அக்னியஷ்த்ரா said:

சுத்துமாத்து அரச பக்கம் போயிட்டாரா இது எப்போ ...?
அவர் வந்த வேலை இன்னும் முடியவில்லையே இப்போதானே 22 இலிருந்து 9 ஆக்கியிருக்கிறார் கொஞ்சம் பொறுங்கோ 9 ஐ 0 ஆக்கிவிட்டு அரசதரப்பில் தேசியப்பட்டியல் பா .ஊ ஆக மிக சீக்கிரமே வருவார்   

சுத்திச்சுத்தி சுமந்திரனின் கொல்லைக்குள் தானா இன்னமும் நிற்கிறீர்கள்? அதற்கு வெளியால் எதுவுமில்லை - இல்லையா?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, கற்பகதரு said:

சுத்திச்சுத்தி சுமந்திரனின் கொல்லைக்குள் தானா இன்னமும் நிற்கிறீர்கள்? அதற்கு வெளியால் எதுவுமில்லை - இல்லையா?

கொஞ்சம் மேலே போய் நீங்கள் எழுதினதை நீங்களே வாசிக்கிறீர்களா...? 
தர்மசக்கரத்திற்குள் சுத்துமாத்து சும்மை   இழுத்துகொண்டுவந்து சொருகியது யாரென்று (வழமை போல)  
....😂😂😆

Link to comment
Share on other sites

12 hours ago, அக்னியஷ்த்ரா said:

கொஞ்சம் மேலே போய் நீங்கள் எழுதினதை நீங்களே வாசிக்கிறீர்களா...? 
தர்மசக்கரத்திற்குள் சுத்துமாத்து சும்மை   இழுத்துகொண்டுவந்து சொருகியது யாரென்று (வழமை போல)  
....😂😂😆

 

On 18/8/2020 at 07:05, கற்பகதரு said:

தமிழ் மக்களுக்கும் நிறைய சட்ட உதவிகள் தேவையாக உள்ளதல்லவா? இவர்களிடம் கேட்கலாமா? நீராவியடி பிள்ளையாருக்கும், திருக்கேதீஸ்வரம் வளைவுக்கும், விரிவுரையாளர் கண்ணதாசனுக்கும் சுமந்திரன் உதவினார். அவரையும், கள்ளவாக்கு என்று அரச பக்கம் அனுப்பியாச்சு. குருபரன் ஒன்று இரண்டு செய்கிறார். மற்றவர்களுக்கு எங்களிடம் சட்டத்தரணிகள் இல்லாததால், எங்களையும் தமிழ் பேசும் சகோதரர்கள் என்று கருதி உதவுமாறு இந்த முஸ்லிம் சட்டத்தரணி தம்பதிகளுடம் கெஞ்சிக் கேட்டு பார்க்கலாமா?

நான் எழுதியது இந்த முஸ்லிம் சட்டத்தரணிகள் பற்றி. சுமந்திரனும் குருபரனும் உதவுகிறார்கள் என்றும் எழுதினேன்.

நீங்களோ, சுமந்தரன் பெயரைக்கண்டதும் பேதி போகிறவர் மாதிரி குழம்பிப் போய் சுமந்திரம் சொல்ல ஆரம்பித்து விட்டீர்கள்.😆

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, கற்பகதரு said:

அவரையும், கள்ளவாக்கு என்று அரச பக்கம் அனுப்பியாச்சு

சுமந்திரன் உதவுகிறார் என்று எழுதினீர்கள் சரி , எதற்கு கள்ளவாக்கு விடயத்தை இழுத்துகொண்டுவந்து உங்கடை தனிப்பட்ட குடைச்சலுக்கு அலம்பினீர்கள் ...? 
என்னை கள்ளவாக்கு என்று சொல்கிறார்கள் இனி நான் தமிழர்களுக்கு உதவமாட்டேன் என்று சும் உங்களிடம் சொன்னாரா...?
அப்படி அவர் உங்களிடம் சொல்லியிருந்தாலும் நீங்கள் தான் வாங்கிக்கட்ட வேண்டிவரும் ஏனென்றால் சுமந்திரத்தை எங்களிடம் சொல்வது நீங்கள் ...Can't Help ...😂😂🤣

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.