Jump to content

`சீமான் மீது வழக்கு...காரணம் இதுதான்!' - கொதிக்கும் நிர்வாகிகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் உள்பட 20 பேர் மீது அரசின் தடை உத்தரவை மீறுதல், சட்டவிரோதமாகக் கூடுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் மதுராவயல் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து தமிழகம் முழுவதும் நாம் தமிழர் கட்சியின் சார்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சென்னையில், மதுராவயல் ஆலப்பாக்கம் அருகே உள்ளே அஷ்டலட்சுமி நகரில் சீமானின் வீட்டுக்கு எதிராக கட்சியினர் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். கொரோனா காரணமாக சென்னையில் ஞாயிற்றுக்கிழமை, முழு ஊரடங்கு அமலில் இருக்கும்போது இப்படி ஆள்களைக் கூட்டி போராட்டம் நடத்தியதற்காக சீமான் உள்பட 20 பேர் மீது அரசின் தடை உத்தரவை மீறுதல், சட்டவிரோதமாகக் கூடுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் மதுராவயல் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக சீமானிடம் விசாரணை நடத்தவும் காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

போராட்டம்
 
போராட்டம்

இந்தநிலையில், ``ஊரடங்கு காலத்தில் அனைத்துக் கட்சியினரையும்தான் பல்வேறு விதமான போராட்டங்களை முன்னெடுத்தனர். ஆளும் கட்சியாக அ.தி.மு.க-வே பட்டியலின மக்களுக்காக ஆதரவாக ஒரு போராட்டத்தை நடத்தியது. தற்போது தமிழகக் காவல்துறை வழக்குப் பதிவு செய்திருப்பது புதிய கல்விகொள்கைக்காக அல்ல இந்த விஷயத்தில் தமிழக அரசை பின்னால் இருந்து இயக்குவது தமிழக பா.ஜ.கதான் எனக் கொந்தளிக்கிறார்கள் அந்தக் கட்சியின் நிர்வாகிகள்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய நிர்வாகி ஒருவர்,``போராட்டம் நடத்தியதற்காக மட்டும் வழக்குப் பதிவு செய்யவில்லை. போராட்டம் முடிந்த பிறகு அண்ணன் செய்தியாளர்களைச்ச் சந்தித்தார். அப்போது, இந்தி, சமஸ்கிருத மொழித்திணைப்பை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். அதுமட்டுமில்லாமல் இந்தியா என்பது ஒரு நாடல்ல எனவும், இந்து என்கிற மதம் வெள்ளையர்களின் கையெழுத்தில் உருவானது எனவும் மிகக் கடுமையாகவும் பேசினார்.

சீமான் செய்தியாளர் சந்திப்பு
 
சீமான் செய்தியாளர் சந்திப்பு

அதுமட்டுமில்லாமல், நாடற்றவர்கள் இந்த நாட்டை தனதாக்கிக்கொள்ளத் துடிக்கிறார்கள் என்று பேசினார். அதுதான் தமிழக பா.ஜ.க-வினரை அதிகமாகக் கோபப்படுத்தியிருக்கிறது. அவர்களின் தூண்டுதலின் பேரில்தான் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள். வழக்கைச் சந்திக்க எங்கள் அண்ணன் தயாராகவே இருக்கிறார்'' என்றார் அவர்.

https://www.vikatan.com/news/politics/police-files-case-against-seeman-over-protest

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.