Jump to content

கிழக்கு மாகாணத்தில் த.ம.வி.புலிகள் கட்சி ஓரணியில் போட்டியிடதயார்! -கட்சிசெயலாளர் பிரசாந்தன்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

காரைதீவு சகா-


கிழக்கு மாகாணம் தமிழருக்குரியது. எதிர்வரும் மாகாணசபைத்தேர்தலில் கிழக்கின் மூன்று மாவட்டங்களிலும் நாம் போட்டியிடுவோம். எனினும் அனைத்ததமிழ் தரப்புகளும் ஓரணியில் போட்டியிடுவதன்மூலம் ஆட்சியைத்தீர்மானிக்கின்ற சக்தியாக நாம் விளங்கமுடியும். அதற்கான சகல தரப்புகளையும் ஓரணியில் சேர அழைக்கின்றோம்.

இவ்வாறு தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் அம்பாறை மாவட்ட பேராளர்கள் முன்னிலையில் பேசுகையில் அழைப்புவிடுத்தார்.

அம்பாறை மாவட்ட முக்கியஸ்தர்கள் புத்திஜீவிகள் கலந்துகொண்ட மாவட்டமட்டக்கூட்டம் நேற்றுமுன்தினம் சொறிக்கல்முனையில் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சோ.புஸ்பராசா தலைமையில் அவரது வாசஸ்தலத்தில் நடைபெற்றது.

கட்சியின் முக்கியஸ்தர்களான எஸ்.யோகவேல் த.ஈஸ்வரராஜா தலைவர் சோ.புஸ்பராசா ஆகியோரும் உரையாற்றினர்.

அங்கு பிரசாந்தன் மேலும் பேசுகையில்:
நாம் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டிருந்தால் நிச்சயம் ஒரு தேசியபட்டியல் ஆசனத்தை பெற்றிருக்கமுடியும்.ஆனால் இங்கு வாக்குகளைச் சிதறடித்து ஆசனத்தை இல்லாமலாக்கவிரும்பாத காரணத்தினால்தான் நாம் போட்டியிடவில்லை.

சிறைக்குள்ளிருந்து சாதனை வாக்குகளைப்பெற்ற எமது தலைவர் கிழக்குமக்களின் விடிவெள்ளி அண்ணன் பிள்ளையான் நாளைமறுதினம் நடைபெறவிருக்கும் பாராளுமன்ற அமர்வில் பங்கேற்கிறார். அமைசசராகுவார்.வெகுவிரைவில் அவர் வெளிவருகிறார்.

அவர் பாராளுமன்றம் சென்றுவந்தபிறகு கிழக்கை மீண்டும் தமிழன் ஆளுவதற்கான சகல அரசியல் நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவிருக்கிறோம்.
நடந்துமுடிந்த தேர்தல் அபிவிருத்தியை மையப்படுத்திய செய்தியை சொல்லியிருக்கிறது. மட்டக்களப்பில் 4தமிழ்பாராளுமன்ற உறுப்பினர்களை பெற்றுத்தந்துள்ளனர் தமிழ்மக்கள். எனவே அவர்களுக்கான சேவையை அபிவிருத்தியை நாங்களனைவரும் இணைந்து சேர்ந்து மேற்கொள்ளவேண்டும் என்பதே எனது ஆசை.கட்சியின் விருப்பமும் அதுதான்.

அம்பாறை மாவட்டத்தை நாம் ஒருபோதும் கைவிடமாட்டோம். இணைந்து செயற்படுவோம். என்றார்.

தலைவர் சோ.புஸ்பராசா அங்குரையாற்றுகையில்:
சிறைக்குள்ளிருந்துகொண்டு கிழக்கில் அதிகூடிய வாக்குகளைப் பெற்று அமைச்சராகும் அண்ணன் சிவ.சந்திரகாந்தனை பாராட்டுகிறேன். அம்பாறை மாவட்டம் சார்பில் வாழ்த்துகிறேன். அவர் செய்த சேவைக்கு மக்கள் வழங்கிய அங்கீகாரம் அது. அதனை வெளியிலிருந்து செயற்படுத்திய செயலாளர் தம்பி பிரசாந்தனும் பாராட்டுக்குரியவர். இதெல்லாம் வரலாற்றுச் சாதனைகள். என்றார்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, colomban said:

அவர் பாராளுமன்றம் சென்றுவந்தபிறகு கிழக்கை மீண்டும் தமிழன் ஆளுவதற்கான சகல அரசியல் நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவிருக்கிறோம்.

நல்ல விடயம் .....இதுவும் ஒருவித தேசிய பற்றுத்தான்

Link to comment
Share on other sites

3 hours ago, putthan said:

நல்ல விடயம் .....இதுவும் ஒருவித தேசிய பற்றுத்தான்

என்ன இருந்தாலும் பிள்ளையான் முதலமைச்சராக இருந்தபோது தமிழர்கள் ஓரளவு நிம்மதியுடனும், மகிழ்ச்சியாகவும் இருந்தார்கள். விசேடமாக வறுமைக்கோட்டுக்கு கீழே , நடுத்தர வகுப்பினர் ஆதரித்தார்கள். இனி இவர்கள் போலி தமிழ் தேசியவாதிங்களுக்கு சிம்ம செப்பமானமாகத்தான் இருக்கப்போகிறார்கள். ஒரு பக்கம் வியாழேந்திரன், மற்ற பக்கம் பிள்ளையான். தொடருங்கள் உங்கள் மக்கள் சேவையை. போராட்ட காலத்தில் தவறுகள் நடந்திருந்தாலும் அவற்றின் பக்கம் போகாமல் மக்கள் சேவையை தொடர வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, Robinson cruso said:

என்ன இருந்தாலும் பிள்ளையான் முதலமைச்சராக இருந்தபோது தமிழர்கள் ஓரளவு நிம்மதியுடனும், மகிழ்ச்சியாகவும் இருந்தார்கள். விசேடமாக வறுமைக்கோட்டுக்கு கீழே , நடுத்தர வகுப்பினர் ஆதரித்தார்கள். இனி இவர்கள் போலி தமிழ் தேசியவாதிங்களுக்கு சிம்ம செப்பமானமாகத்தான் இருக்கப்போகிறார்கள். ஒரு பக்கம் வியாழேந்திரன், மற்ற பக்கம் பிள்ளையான். தொடருங்கள் உங்கள் மக்கள் சேவையை. போராட்ட காலத்தில் தவறுகள் நடந்திருந்தாலும் அவற்றின் பக்கம் போகாமல் மக்கள் சேவையை தொடர வேண்டும்.

எஜமானர்கள் விடுவார்களா?

Link to comment
Share on other sites

ஓரணியில் போட்டியிடுவது நல்லதே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Iraivan said:

ஓரணியில் போட்டியிடுவது நல்லதே.

அப்புகாத்துமார் வருவினமோ ....இந்த தடவை கற்ற பாடத்தினால் திருந்தினால் நல்லம்

Link to comment
Share on other sites

54 minutes ago, putthan said:

அப்புகாத்துமார் வருவினமோ ....இந்த தடவை கற்ற பாடத்தினால் திருந்தினால் நல்லம்

கொஞ்சம் பிரச்சனைதான். கிழக்கு மக்களைக் கைவிடாமலிருக்க வேண்டும். தமிழ்த்தேசியம் குற்றச் சாட்டுகளுக்காக நிலைகுலையாமல் வளர்ந்து செல்லல் வேண்டும். இப்படி இணையும் தருணங்களில் கருணாவிற்கு ஆதரவு கொடுக்கும் பேரினவாதம் விலகும். 

Link to comment
Share on other sites

50 minutes ago, putthan said:

அப்புகாத்துமார் வருவினமோ ....இந்த தடவை கற்ற பாடத்தினால் திருந்தினால் நல்லம்

திருந்த வேண்டும். இல்லாவிட்ட்தால் அடுத்த ஐந்து வருடத்தில் காணாமல் போய் விடுவார்கள். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.