Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பிரபஞ்சம்

கமலக்குமார்

spacer.png

இந்த பிரபஞ்சம் எப்படி தோன்றியது? யார் எல்லா உயிரினங்களையும் உருவாக்கினார்கள்? என்ற கேள்வி எல்லா மனிதர்களுக்கும் என்றாவது ஒரு சில தருணங்களில் எழுந்திருக்கலாம். இது எனக்குள்ளும் ஒரு தீராத வினாவாகவே இருந்து வந்தது. இதற்கான விடை தேடும் முயற்சியில் இறங்கிய போது, நான் படித்த, பிரமித்த, விளக்கங்களை ஓர் அறிவியல் ஆய்வுக் கட்டுரையாக எழுத முயற்சிக்கலாம் என்று தோன்றியது. பல பில்லியன் ஆண்டுகள் அடங்கிய பரிணாம வளர்ச்சியை ஒரு சில பக்கங்களுக்குள் முடக்கிவிட விரும்பவில்லை. உங்களின் சில மணித்துளிகளை ஒரு நீண்ட விண்வெளிப் புரிதலுக்கு முன்பதிவு செய்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

பாகம் 1:

இந்த பூமி தோன்றிய காலத்தையும், உயிர்களின் ஆதாரம், மூலம் கடவுள் என்று சொல்லும் அல்லது நம்பும் மனிதர்கள் இந்த பூமியில் தோன்றிய காலத்தையும், ஒப்பிட்டுப் பார்த்தால் கடவுள் எப்போது தோன்றினார் அல்லது நம்மால் கடவுள் எவ்வாறு தோற்றுவிக்கப்பட்டார் என்று அறிய வாய்ப்பு இருக்கிறது. இந்தப் பூமி தோன்றிய கால அளவு மிக மிக நீண்ட வருடங்களின் கணக்கு என்பதால் சில சுருக்கமான அளவைகளை நாம் பயன்படுத்த வேண்டும். உதாரணமாக, நம் அறிவியலின் ஆதாரம் புவியீர்ப்பு விசையும், ஒளியும் . இந்த ஒளியின் வேகமே நம் அறிவியலின் அடிப்படை அளவை. ஒளியைவிட வேகமாகச் செல்லக்கூடிய ஒன்று இந்த பிரபஞ்சத்தில் இல்லை என்பது நம் அறிவியலாளர்களின் நிர்மாணம். இது எப்போது தவறு என்று நிரூபிக்கப்படுகிறதோ அப்போது நம் அறிவியல் நிலை குலைந்துவிடும் .

வெற்றிடமான அண்ட வெளியில் (In Outer Space)
ஒளியின் வேகம் ஏறத்தாழ ஒரு வினாடிக்கு மூன்று லட்சம் கிலோமீட்டர் (3,00,000 km/sec). இந்த ஒளியின் வேகத்தால்

  • நம் தொலைத்தொடர்பு செயற்கைக் கோள்களைத் தொடும் நேரம் ஏறத்தாழ 119 மில்லி வினாடிகள் மட்டுமே.
  • பூமியைச் சுற்றிவர ஆகும் நேரம் ஏறத்தாழ 134 மில்லி வினாடிகள் மட்டுமே.
  • நிலவைத் தொட ஆகும் நேரம் ஏறத்தாழ 1.3 வினாடிகள்.
  • சூரியனைத் தொட ஆகும் நேரம் ஏறத்தாழ 8.3 நிமிடங்கள்.

நம்மால் இந்த ஒளியின் வேகத்தில் செல்ல முடியவில்லை என்றாலும், ஒலியின் (வினாடிக்கு 330 மீட்டர் ) வேகத்தை எளிதில் எட்டிவிட்டோம்.

இந்த ஒளி, ஓர் ஆண்டில் எவ்வளவு தூரம் செல்கிறதோ அது ‘ஓர் ஒளி ஆண்டு’ ( One Light Year) என்று கணக்கிடப்படுகிறது.

ஓர் ஆண்டுக்கு = 60 x 60 x 24 x 365 = 3,15,36,000 வினாடிகள் என்றால்,
ஓர் ஒளி ஆண்டின் தூரம் = 3,15, 36, 000 x 3,00,000 ஏறத்தாழ 94,60,80,00,00,000 கிலோமீட்டர் (தொண்ணூற்று நான்கு லட்சத்து அறுபதாயிரத்து எண்பது கோடி கிலோமீட்டர்).
மலைக்க வேண்டாம். இனிமேல் நாம் இந்த அளவையைத்தான் அதிகம் பயன்படுத்த வேண்டியுள்ளது. இது கோடிகளில் இருப்பதால் நாமும் இனி கோடி ‘ஈஸ்வரர்’கள்தான்.

எல்லாவற்றிற்கும் மேலே இருப்பவன் ஈஸ்வரன் என்றால், நாமும் மேலே செல்ல வேண்டுமல்லவா! மன்னிக்கவும், நான் சொல்வது பூமிக்கு மேலே. சரி, முதலில் இந்த ஆகாயம் எப்படிப்பட்டது என்று கவனிப்போம். நம் பூமி சூரிய குடும்பத்தின் மூன்றாவது கோள். நம் சூரிய மண்டலம், பால் வீதி என்னும் விண்மீன் மண்டலத்தின் (Milky way Galaxy ) ஓர் அங்கம். இந்த விண்மீன் மண்டலத்தில் மட்டும் இதுவரை 40,000 கோடிக்கும் அதிகமான சூரியக் குடும்பங்கள் இருப்பதாகக் கணிக்கப்பட்டிருக்கிறது.

spacer.png

நாம் அடிக்கடி செயற்கைக் கோள்களின் புகைப்படங்களில் காணும் சூறாவளியின் தோற்றம் கொண்ட இந்த விண்மீன் மண்டலத்தின் மையப் பகுதிக்கும், நம் சூரியக் குடும்பத்துக்கும் இடையிலான தூரம் ஏறத்தாழ 27,000 ஒளி ஆண்டுகள். சூரியனுக்கும் நமக்கும் உள்ள தூரம் வெறும் 8.3 ஒளி நிமிடங்கள் என்றால் , நம் விண்மீன் மண்டலத்தின் மையப் பகுதியிலிருந்து வரும் ஒளி நம்மை வந்து சேரக் கிட்டத்தட்ட 270 நூற்றாண்டுகள் ஆகும். நாம் இப்பொழுது அந்த ஒளியைக் கண்டுகொண்டிருந்தால் அது ஏறத்தாழ 27,000 ஆண்டுகளுக்கு முன் கிளம்பிய ஒளியாகும்.

இந்தக் கணக்கு நம்முடைய பால் வீதி விண்மீன் மண்டலத்திற்கு மட்டும் என்றால், இன்னும் பல்லாயிரம் கோடி விண்மீன் மண்டலங்கள் இருப்பதாக அறிவியலாளர்கள் சொல்கிறார்கள். இதை எப்படிக் கணக்கிடுவது?. ஒருவேளை நம் உள்ளூர் அரசியல்வாதிகளை கேட்டால் சொல்லிவிடுவார்கள். கறுப்புப் பணத்தையே கணக்கிலடங்காமல் எண்ணுகிறவர்களை, வெளிச்ச ஆண்டுகளைக் கணக்கிடச் சொன்னால் முடியாமல் போய்விடுமா என்ன?

சரி, ஆகாயத்தை அளக்கத் தெரிந்துகொண்டோம், இனி நாம் பிரபஞ்சத்தின் வரலாறு என்ன என்று பார்ப்போம். இந்தப் பிரபஞ்சம் தோன்றி 1380 கோடி வருடங்கள் ஆகின்றன என்று அறிவியலாளர்கள் கணித்துள்ளனர்.

இதில் மனிதம் எப்போது? மதம் எப்போது? சமயம் எப்போது? சாதி எப்போது? குலம் எப்போது? கோத்திரம் எப்போது? என்பது மிகவும் சுவாரஸ்யமான தூண்டுதல். கார்ல் சேகன் என்ற அறிஞன், இந்த 1380 கோடி வருடங்களை, எளிதில் புரிந்துகொள்ளும் விதமாக வருட அட்டவணை ஒன்றை உருவாக்கினான். இந்த அட்டவணையின் பெயர் பிரபஞ்ச அட்டவணை (காஸ்மிக் காலண்டர்). இந்த அட்டவணைப்படி, ஜனவரி முதல் நாள் நடு இரவு 12.00 மணிக்கு உலகம் தோன்றியது என்றும், நாம் வாழும் இந்த வருடம் டிசம்பர் 31 , 11.59 மணி நேரம் என்றும் கொள்வோம். அதாவது நாம் வாழும் காலம் இந்த கால அட்டவணையின் கடைசி நிமிடம் என்று வைத்துக் கொள்வோம். நம் பூமி அட்டவணையை இதற்குள் புகுத்திப் பார்க்க முயன்றோமானால், இந்தப் பிரபஞ்ச அட்டவணையின்படி
ஒரு வருடம் என்பது 1380 கோடி ஆண்டுகள் என்று கொண்டால்,
ஒரு மாதம் என்பது ஏறத்தாழ 3.79 கோடி ஆண்டுகள்,
ஒரு மணி நேரம் என்பது ஏறத்தாழ 15,76,000 ஆண்டுகள்,
ஒரு நிமிடம் என்பது ஏறத்தாழ 26,255 ஆண்டுகள்,
ஒரு வினாடி என்பது ஏறத்தாழ 437 ஆண்டுகள்.

சில வினாடிகளில் மட்டுமே பல்கிப் பெருகிய இந்த மானுட சமுதாயம், கோடிக்கணக்கான ஆண்டுகளாகப் பொதிந்து கிடந்த இயற்கை வளத்தையும், சுற்றுச் சூழலையும், உருத் தெரியாமல் சிதைத்து விட்டு, இப்பொழுது மரம் வளர்க்கவும், உலக வெப்பமயமாவதைத் தடுப்பது பற்றியும் பிதற்றிக் கொண்டிருக்கிறோம். ஓ ! புரிந்துவிட்டது. நாம் கோடி ஈஸ்வரர்கள் அல்லவா, அதனால்தானோ என்னவோ நம்மை நாமே அழித்துக் கொண்டிருக்கிறோம்.

சரி ,அதை விடுத்து இந்த உலகம் எப்படி உருவானது? என்று பார்ப்போம்.

அறிவியலின் கூற்றுப்படி, இந்த மொத்தப் பிரபஞ்சமும் உருவாவதற்கு முன்னால் இன்று விண்வெளியில் இருக்கும் அத்தனை துகள்களும், விண்மீன்களும், கோள்களும், மண்டலங்களும் ஒரு மிகச் சிறிய அணுப்பந்தில் (singularity ), அளவிட முடியாத அழுத்தத்தோடும், அளவுக்கு அதிகமான வெப்பத்தோடும் (சூரியனை விட லட்சம் மடங்கு) அடைபட்டிருந்தது என்றும், ஜனவரி முதல் தேதியன்று இந்தப் பந்தின் வெடிப்பினால் உருவான ஒரு மகா ஒளிப் பிரளயம் (Big Bang ) மூலமாக இந்த மொத்தப் பிரபஞ்சமும் தோன்றியதாகக் கருதப்படுகிறது. இது வெடிப்பு என்று சொல்வதைவிட ஓர் அணுத்துகள் விரிவடைந்ததாகக் கருதுவதே சரியானது என்று பல அறிவியலாளர்கள் வலியுறுத்துகிறார்கள். சரி எவ்வாறு, இவ்வளவு ஆற்றலும், வெப்பமும் ஒரு சிறு பந்துக்குள் அடங்கியது? ஒரு மிகப் பெரிய அண்டம் ஈர்ப்பு விசையால் கொஞ்சம் கொஞ்சமாகச் சுருங்கிப் பல ஆயிரம் கோடி ஆண்டுகள் கழித்து இவ்வாறு சுருக்கப்பட்டிருக்கலாம் என்பது இப்போதைய அனுமானம். இது உண்மை என்றால், நாம் இருக்கும் இந்த அண்டம் இப்போது விரிந்து கொண்டிருக்கிறது என்பதை நாம் அறிந்துவிட்டோம். எனில் இது மீண்டும் சுருங்க வாய்ப்பு இருக்கக்கூடும். இது ஓர் அண்டம் அழிந்து மற்றோர் அண்டம் உருவாகும் நிலை. கவலை வேண்டாம், இவை நடப்பதைப் பார்க்க நாமும் நம் சாதிகளும், மதங்களும் இருக்கப் போவதில்லை.

இந்த அணு வெடிப்பு ஓர் அறிவியல் அனுமானம் என்றாலும், இதைச் சோதித்துப் பார்க்க இந்த மானுடம் மிகுந்த ஆர்வம் கொண்டு பல ஆயிரம் கோடி செலவு செய்து பல இடங்களில் ஆராய்ச்சி மையங்களை நிறுவி, அதில் செய்த சோதனைகளின் மூலம் பல புரியாத புதிர்களுக்கு விடை கண்டிருக்கிறது. இதிலும் மதச் சாயம் பூசிக் கடவுளைக் காப்பாற்றும் முயற்சி, மனிதனால் செய்யப்படுகிறது என்பது வேதனையான ஒன்று. மனிதன்தான் கடவுளைப் படைத்தான் என்றால், மனிதன்தானே காப்பாற்றியாக வேண்டும். விட்டு விடுவோம்.

சரி, இந்த வெடிப்பிற்குப் பிறகு என்ன நடந்தது? யார் முதலில் உயிரானது? பார்ப்போம்.

இந்த வெடிப்பிற்கு பிறகு, கருத்துகள்களும், நிற நிழல்களுடன் (கண்ணுக்கு தெரியாத) மின்காந்த அலைகளும் மட்டுமே எஞ்சியிருந்த நிலையில், இவை கொண்டிருந்த அளவுக்கு அதிகமான அடர்த்தியின் மூலம் ஏற்பட்ட விசை, இவற்றை வெகு வேகமாக விரிவடையச் செய்தது. இந்த விரிவாக்கம் மிக நீண்டு கொண்டிருந்த அதே நேரத்தில் அளவிட முடியாத வெப்பத்திலிருந்த கருத்துகள்கள் சீரற்ற வேகத்தில் இயங்கத் தொடங்கின. இந்த நிகழ்வு பெரியோஜெனிசிஸ் (Baryogenesis ) என்று அழைக்கப்படுகிறது. இந்தச் சீரற்ற இயக்கத்தினால் நேர் விசையும், எதிர் விசையும் கொண்ட துகள்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டு, அழிந்து பின் அந்த அழிவிலிருந்து மீண்டும் உருவாகி, ஒரு தொடர்ச்சியான அழிவுத் தோற்றச் சுழற்சி உண்டானது.

பின் இந்த விரிவாக்கம், ஓர் அணு வெடிப்புக்குப் பின் நிகழும் புகை மண்டலத்தின் விரிவாக்கம் போல் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து நிலைபெறத் தொடங்கியது. இந்த நிலையில் குவார்க் – க்ளுயான் (Quark — Gluon Plasma ) கருத்துகள்களும் மற்றும் பிற தொடக்கநிலைக் கருத்துகள்களும் பிரபஞ்சத்தில் நிறைந்திருந்தன. விரிவாக்கத்தினால் அடர்த்தி குறைய தொடங்கியது. இதற்குப் பிறகு பிரபஞ்சம் குளிரத் தொடங்கியது, இந்த நிலையில், கருத்துகள்கள் ஒன்றோடொன்று பிணைந்து ஒன்றுசேர ஆரம்பித்தன. வெப்பம் குறைய குறையக் கருத்துகள்கள் தம் அடர்த்தி குறைந்து மேலும் மேலும் நெருங்கி ஒன்றுசேர ஆரம்பித்தன. இந்த நிலையிலிருந்து, நம் அறிவியல் அறிவு, யூகங்களை நம்ப வேண்டிய நிலையைக் கடந்து, தீர்மானமாகச் சொல்லக்கூடிய நிலைக்கு வந்துவிட்டது.

குளிரத் தொடங்கிய நிலையில் இருந்த பிரபஞ்சத்தில் குவார்க் மற்றும் க்ளுயான் கருத்துகள்கள் இணைந்து பெரியோன் (Baryon ) என்னும் புரோட்டான்களாகவும் (Protons ) நியூட்ரான்களாகவும் (Nuetrons ) உருவாகத் தொடங்கின. வெப்பநிலை மிகவும் குறைந்த போது இந்தப் புரோட்டான்களும், நியூட்ரான்களும் நிலை குலைந்து நிர்மூலமாகத் (Annihilation ) தொடங்கிக் கோடிகளுக்கு ஒன்றாய் எஞ்சி நின்றன. இதே மாதிரியான இன்னொரு தொடர் சுழற்சியில் எலெக்ட்ரான்களும், பாசிட்ரான்களும் எஞ்சி நின்றன. இந்த நிர்மூலமாக்களுக்குப்பின் போட்டான்கள் பிரபஞ்சத்தில் மேலோங்கி நின்றன, சிறிய அளவில் நியூட்ரினோக்களும் இருந்தன. இப்போது அனைத்துக் கருத்துகள்களும் சலனமின்றி ஒரு புயல் கடந்துபோன நிசப்தமாய் நிலை கொண்டிருந்தன. வெடிப்பு நிகழ்ந்து ஒரு நிமிடம் கழித்து, வெப்பநிலை மேலும் கடுமையாகக் குறைந்தபோது, ஒரு நீண்ட அமைதியில் இருக்கும் மனிதனின் மன இறுக்கம்போல், நிலை பெற்றிருந்த புரோட்டான்களும், நியூட்ரான்களும் இறுக்கமாக இணைந்து நீயூக்ளியோ சிந்தஸிஸ் (nucleosynthesis) எனும் கருத்தொகுப்பு நிகழ்வு நடக்க ஆரம்பித்தது. இதன் மூலம் பிரபஞ்சத்தின் முதல் முழு அணுக்களாக டியூட்டீரியம் (ஹைட்ரஜனின் மாற்று அணு ) மற்றும் ஹீலியம் அணுக்கள் உருவாகின. மேலும் புரோட்டான்கள் பல தொகுப்புராமல் ஹைட்ரஜன் கருத்துகள்களாவே இருந்தன.

பின், கிட்டத்தட்ட 3,79,000 ஆண்டுகளுக்குப் பிறகு, எலெக்ட்ரான்களும், ஹைட்ரஜன் கருத்துகள்களும் இணைந்து ஹைட்ரஜன் அணுக்கள் உருவாகின. இதுவரை இந்த கருத்துகள்களோடு ஒன்றியிருந்த மின்காந்த அலைகள் தம்மை விடுவித்துக்கொண்டு அண்டம் முழுதும் விரியத் தொடங்கின. இந்த அலைகளையே நாம் காஸ்மிக் மைக்ரோவேவ் பேக்கிரௌண்ட் (Cosmic Microwave Background ) என்று அழைக்கிறோம். இந்த அலை, ஒரு தற்செயலான கண்டுபிடிப்பு என்றாலும், நம் அத்தனை யூகங்களுக்கும், இது புத்துயிர் அளித்தது என்பது உண்மை.

இதுவரை, அண்டத்தில் ஓர் அணு எவ்வாறு கருவானது என்று தெரிந்து கொண்டோம். இது நம் பிரபஞ்ச அட்டவணையின் முதல் 13 நிமிடங்கள் மட்டுமே. நம் உடலில் இருக்கும் அத்தனை கனிமங்களும், இந்த வானவெளியிலும் இருக்கின்றன என்றால், நாமும் இந்த அண்டத்தின் ஓர் அங்கம். ஒரு மனிதன் தன்னைத்தானே உணர்ந்துகொள்ள முனைவது ஞானம் என்றால், இந்த அண்டத்தினால் உருவான நாம், இந்த அண்டத்தை உணர்ந்துகொள்ள முனைவதும் ஞானம்தானே? ஞானம் தேடுபவர்கள் சந்நியாசிகளென்றால், கடவுள் மறுப்பாளர்கள் இல்லை என்றால், அண்டம் தேடும் அத்தனை உயிர்களும் சந்நியாசிகள்தான்.

சரி, எவ்வாறு ஒளி மீண்டும் தோன்றியது? எவ்வாறு விண்மீன்கள் உருவாகின? எவ்வாறு விண்வெளி மண்டலங்கள் உருவாகின என்பது போன்ற கேள்விகளுக்கு விடை வேண்டுமா? பொறுத்திருங்கள், அடுத்த பாகம் வரும் வரை.

(தொடரும்)

 

https://solvanam.com/2020/04/25/பிரபஞ்சம்/

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

பிரபஞ்சம் – பாகம் 2

spacer.png


 

முதல் பாகத்தைப் பொறுமையோடு படித்த அனைவருக்கும் நன்றி. கார்ல் சேகனின் காஸ்மிக் காலண்டரை  நினைவில் வைத்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். முதல் 13 நிமிடங்களில், நம் அண்டத்தில் அணுத்துகள்கள் இணைந்து ஓர் அணு எவ்வாறு கருவானது என்று முதல் பாகத்தில் தெரிந்து கொண்டோம். சரி, இந்த அணு எப்படி இருக்கும்? அது எவ்வாறு உருப்பெறுகிறது என்று தெரிந்துகொள்ள சற்று உள்நோக்கிப் பார்ப்போம்.

இந்த பிரபஞ்சம் முழுவதும் ஓர் ஐந்து வகையான அடிப்படை அணுத்துகள்களால் மட்டுமே ஆனது என்றால் நம்பமுடிகிறதா? நம் அறிவியல் இதைத்தான் முன்வைக்கிறது. எப்படி, ‘X’ மற்றும் ‘Y” என்ற இரண்டே இரண்டு குரோமோசோம்கள் இந்த மொத்த மனித சமூகத்துக்கும் பொதுவானதோ, அதேமாதிரிதான் ஐந்தே ஐந்து அடிப்படை அணுத்துகள்கள் இந்தப் பிரபஞ்சத்துக்குப் பொதுவானவை. நியூட்ரான், புரோட்டான், எலக்ட்ரான், ஃபோட்டான் மற்றும் நியூட்ரினோ என்ற இந்த ஐந்து அடிப்படை அணுத்துகள்களே , நம் முன்னோர்கள் வரையறுத்த காற்று, கடல், பூமி, வானம், நெருப்பு எனும் ஐம்பெரும் பூதங்களையும் உருவாக்கிய மூலாதாரம் என்கிறது நம் அறிவியல். அப்படியென்றால், தனித்தனி துகள்களை ஒன்று சேர்த்து உருவம்கொடுக்க வேறு காரணிகள் வேண்டுமல்லவா? நீரையும், மண்ணையும் பிடித்துப் பிசைந்து பாண்டமும், பொம்மையும் செய்வதுபோல இந்த அணுத்துகள்களை இறுக்கிப் பிடித்து, நம்மையும், விலங்குகளையும், உயிரினங்களையும்,  மரங்களையும், செடிகளையும், மகா மலைகளையும் மற்றும் நதிகளையும் ஒன்று சேர்த்து உருவம் கொடுக்கும் அந்தக் காரணிதான் இறைவனாக இருக்குமோ என்று எனக்குள்ளும் ஒரு கேள்வி இருந்துகொண்டிருக்கும் வேளையில், இந்த அறிவியல் (சாமியார்) ஒரு புது விளக்கத்தைத் தருகிறது (றார்). இந்த பிரபஞ்சம் ஐந்து அணுத்துகள்கள் மட்டுமின்றி, நான்கு அடிப்படைச் சக்திகளைக் கொண்டுள்ளது  எனவும்; அவை, “புவிஈர்ப்பு சக்தி” , “மின்காந்த சக்தி” , “வலுவான அணு சக்தி” மற்றும் “பலவீனமான அணு சக்தி” என்பன  என்றும் குறிசொல்கிறது. மேலும், இந்தச் சக்திகள் ஒவ்வொன்றும் சற்று மாறுபட்ட தன்மை கொண்டன என்றும் சொல்லப்படுகிறது. சரி, சக்தி என்றால் ஒரு விசை. அந்த விசைக்கு ஒரு சரகம் அல்லது எல்லை இருக்க வேண்டுமல்லவா? அது என்னவென்று விசாரிக்கப்போனால் கிடைத்த விளக்கம் சற்று மிரட்சியளிக்கிறது.

  • புவிஈர்ப்பு சக்தி – இது எல்லை இல்லாதது, இது ஐந்து அணுத்துகள்களையும் கட்டுப்படுத்தும்.
  • மின்காந்த சக்தி – இதுவும் எல்லை இல்லாதது, ஆனால் இது நியூட்ரான் மற்றும்  நியூட்ரினோக்களைக் கட்டுப்படுத்தாது.

வலுவான அணு சக்தியும், பலவீனமான அணு சக்தியும் மிகமிகச் சிறிய (0.01 பிக்கோ  மீட்டர்) எல்லை மட்டுமே கொண்டவை.
 

இது எப்படிச் சாத்தியம்? எல்லையே இல்லாத ஒரு விசை, எல்லைகள் கொண்ட கிரகங்களை உருவாக்க முடியும், நம்பமுடிகிற மாதிரி இல்லையே! என்று நீங்கள் கேட்பது எனக்குப் புரிகிறது. ஆனால் இப்போதைக்கு இதை நம்புங்கள். வேண்டுமென்றால், புவிஈர்ப்பு சக்தியை சிவன் என்று வைத்துக்கொள்வோம். இவன் எல்லைகளற்றவன், எல்லாவற்றிற்கும் முதல்வன்.  மின்காந்த சக்தியை சிவனின் துணைவி “சக்தி” என்று கொள்வோம். இந்த சக்தி சிவனுக்கு இணை என்றாலும், சற்று குறைவு. வலுவான அணு சக்தி விநாயகன் என்றும் கடைக்குட்டி முருகன்தான் பலவீனமான அணு சக்தி என்றும் வைத்துக்கொள்வோம். ஏனென்றால் முருகனின் எல்லை மிகவும் சிறிது, மேலும் அவரை வணங்குபவர்களும் குறைவு என்பதும் ஒரு காரணம். காலம் காலமாய், புலப்படாத ஒன்றை நம்பிக்கொண்டிருக்கும் நாம், நம்மால் நம்மை சுற்றி இருக்கும் புவிஈர்ப்பு சக்தியை நம்பலாமில்லையா? சரி, இந்த அணு எப்படி இருக்கும்? அது எவ்வாறு உருப்பெறுகிறது என்று இப்போது ஓரளவுக்குப் புரிந்து கொண்டிருப்பீர்கள். நாம் மேலே கண்ட ஐந்து அடிப்படை  அணுத்துகள்கள் ஒன்று சேர்ந்து உருவாவதுதான் அணு எனப்படுகிறது. இதை எளிதில் புரிந்துகொள்ள ஒரு முட்டையை அணு என்று வைத்துக்கொண்டால், உள்ளே இருக்கும் மஞ்சள் கருபோல ஒவ்வொரு அணுவும் ஒரு உட்கரு ஒன்றைக் கொண்டிருக்கும். நியூட்ரான், புரோட்டான் இவை இரண்டும் கலந்த இந்த உட்கருவைச் சுற்றி முட்டையின் வெள்ளைக் கருபோல  எலக்ட்ரான்கள் வட்டமிட்டுக்கொண்டிருக்கும். இவ்வாறு இந்த மூன்று அணுத்துகள்களையும் ஒரு முழு அணுவாகப் பிணைத்து வைத்திருக்கும் சக்திதான்  “வலுவான அணு சக்தி” என்று அழைக்கப்படுகிறது.  இந்தப் பிணைப்பை உடைக்கும்பொழுது வெளிப்படும் வெப்ப சக்தியைத்தான் நாம் அணு மின்சாரம் தயாரிக்கப் பயன்படுத்துகிறோம். இந்தப் பிளவின்போது வெளிப்படும் மற்ற இரண்டு துகள்கள்தாம் ஃபோட்டான் மற்றும் நியூட்ரினோக்கள். ஃபோட்டான் என்பது வேறு ஒன்றுமில்லை, இதுதான் நாம் காணும் ஒளி. நியூட்ரினோக்கள் இந்தப் பிரபஞ்சத்தின் மாயாவிகள். இவற்றை நாம் கண்ணால் காணமுடியாது. இவை எந்தப் பொருட்களையும் ஊடுருவி செல்லக்கூடியவை. இவற்றைப் பிடித்து, பிணைத்து வைப்பது முடியாத ஒன்று. துகள்கள் என்றால் அவற்றுக்கு நிறை இருக்கவேண்டும் அல்லவா? அதையும் நாம் அறிவியல் கொண்டு அளந்துவிட்டோம் என்று பெருமை கொண்டே ஆகவேண்டும். 

 

புரோட்டான்களும், நியூட்ரான்களும் கிட்டத்தட்ட ஒரே நிறையைக் கொண்டுள்ளன. (940 MeV/C2 = 16 பிக்கோ வோல்ட்)

எலக்ட்ரான்கள், புரோட்டான்களின் எடையில் ஏறத்தாழ 2000த்தில் ஒரு பங்கு எடையுள்ளது.

நியூட்ரினோக்கள், எலக்ட்ரான்களின் எடையில் ஏறத்தாழ 5,00,000த்தில் ஒரு பங்கு எடையுள்ளது.

ஃபோட்டான்கள் எடை பூஜ்யம் ஆகும். இவை எடையில்லாதவை. இந்த நிறை என்ன இவ்வளவு சிறியதாக இருக்கிறது என்று எண்ணுகிறீர்களா? இனிமேல் அணுவளவு எடை என்று சொல்லும்போது கொஞ்சம் யோசித்துச் சொல்லுங்கள். பார்க்கவே முடியாத ஒன்றை எடை போடுவது சிரமம் இல்லையா? அப்படியென்றால், ஒரு கிராம் இரும்பில் எத்தனை அணுக்கள் இருக்கும் பார்ப்போமா?

10 கிராம் இரும்பில் 107,800,000,000,000,000,000,000 அணுக்கள் மட்டுமே உள்ளன. மலைக்க வைக்கிறதா? உண்மைதான், இந்த பிரபஞ்சத்தில் நாமும்கூட அணுத்துகள்கள்தான். சரி, அணுக்களை புரிந்துகொண்டது போதும். மீண்டும், கார்ல் சேகனின் காஸ்மிக் காலண்டருக்குச் செல்வோம். முதல் 13 நிமிடங்களில் இந்தப் பிரபஞ்சம் இருள் மூடிக்கிடந்தது. இந்த இருள் 200 மில்லியன் ஆண்டுகள் நீடித்தது. அண்ட  நாயகன் புவியீர்ப்பு விசை, இருள் மூடிக்கிடந்த வாயு அணுக் கொத்துகளை இழுத்துப் பிடித்து, சூடேற்றி, உருவம் கொடுத்து முதல் நட்சத்திரத்தைப் படைத்த நேரம் ஜனவரி 10வது நாள். இதுவே ஒளி பிறந்த நாள். நரகாசுரன் என்ற இருள், புவிஈர்ப்பு விசை என்ற சிவனால் வதைக்கப்பட்டு ஒளி உண்டாக்கிய நாள். வாண வேடிக்கைகள்போலத் தொடர்ச்சியாக உருவாக்கப்பட்ட நட்சத்திரங்கள், சிறிய விண்மீன் திரள்களாக ஒன்றிணைந்தன. இது நடந்தது ஜனவரி 13ஆம் தேதி அன்று. 

இந்த விண்மீன் திரள்கள் மேலும் ஒன்றிணைந்து, இன்னும் பெரிய திரளாக உருவானது, சுமார் 11 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, காஸ்மிக்  ஆண்டின் மார்ச் 15 அன்று நம்முடைய பால்வீதி மண்டலம்  உருவாக்கப்பட்டது. அதிவேகத்தில் சுற்றும் ஒரு சங்குச் சக்கர வெடி எப்படிக் காட்சியளிக்குமோ அப்படித்தான் இது இருந்தது. இந்தப்  பால்வீதியில் நூற்றுக்கணக்கான பில்லியன் சூரியன்கள் இருந்தன.  இவற்றில் எது நம்முடையது? பொறுத்திருங்கள், நம் சூரியன் இன்னும் பிறக்கவில்லை.

 

நட்சத்திரங்களின் தொடர் பிறப்புகள் நடக்கும் அதே வேளையில், நட்சத்திரங்களின் இறப்பும் நடந்து கொண்டிருந்தது.  பிறப்பு என்று ஒன்று இருந்தால் மரணம் ஒன்று என்பதும் இருக்குமல்லவா? இங்கு மரணிக்கும் நட்சத்திரங்களின் சாம்பலிலிருந்து வெளிப்படும் ஒளியானது ஆயிரம் சூரிய வெளிச்சதிற்கு இணையாக இருந்தது. நாம், அணையும் விளக்கு பிரகாசமாக எரியும் என்று சொல்கிறோம் அல்லவா? அது மாதிரி. இப்படிப் பிரகாசிக்கும் ஒவ்வொன்றும் ஒரு ராட்சத நட்சத்திரம் என்றும் அதன் பெயர் “சூப்பர்நோவா” என்றும் அழைக்கப்படுகிறது. இது  ஓர் எரியும் மரணம். இங்கே ஒரு விந்தை என்னவென்றால் இந்த நட்சத்திரங்கள் இறந்துவிட்ட இடங்களில் மீண்டும் ஒரு நட்சத்திரக் கூட்டமே பிறக்கின்றது. ஆம் ஒன்றல்ல! இரண்டல்ல!! பல ஆயிரக்கணக்கான நட்சத்திரங்கள், கொத்துக் கொத்தாகப் பிறக்கின்றன. இது எப்படி இருக்கும்? எரிந்துபோன சூப்பர்நோவாவின் சாம்பல், ஓர் அணுகுண்டு வெடித்துக் கிளப்பும் நிகழ்வுபோல், வாயு மற்றும் தூசியின் மாபெரும் மேகங்களாக மாறிப் பின் அவை குளிர்ந்து, கருமேகங்கள் போன்று கனமடைந்து,  பின் அவை சுருங்கி, மழைத்துளிகள் போல மாற்றம் அடைந்து, பின் மேலும் மேலும் சுருங்கும்போது அவை மிகவும் சூடாகி, அதனால் அணுக்களின் கருத்துகள்கள் இவற்றில் ஆழமாக ஒன்றிணைய ஆரம்பிக்கின்றன.

இந்த நட்சத்திர மூலப்பொருள் மறுசுழற்சி செய்யப்பட்டு வளப்படுத்தப்படுகிறது, மீண்டும் மீண்டும், அடுத்த தலைமுறை நட்சத்திரங்களின் தோன்றல்களும், மரணங்களும் நடந்துகொண்டே இருக்கின்றன. ஆண்டுகள் நீண்டு மில்லியன், பில்லியன் என நகர்ந்துகொண்டே போய்க்கொண்டிருக்கின்றன. இன்னும்கூட நம் சூரியன் பிறக்கவில்லை. நமது சூரியன் பிறக்க இன்னும் எவ்வளவு காலம்தான் ஆகும்?  நீண்ட நெடுநேரம். அப்படியென்றால்? கிட்டத்தட்ட 6 பில்லியன் ஆண்டுகள். ஆமாம்! நம் சூரியனின் பிறந்த நாள், காஸ்மிக் காலண்டரின் ஆகஸ்ட் 31 அன்று. நம் சூரியனின் இன்றைய வயது நான்கரை பில்லியன் ஆண்டுகள். பிரபஞ்சத்தின் வயது 13.8 பில்லியன் ஆண்டுகள்.

சற்றே நம்மை உற்றுப் பார்த்தால், நாம் சுவாசிக்கும் ஆக்ஸிஜன், நமது தசைகளில் உள்ள கார்பன், நம் எலும்புகளில் உள்ள கால்சியம், நம்முடைய இரத்ததில் இருக்கும் இரும்பு, இவை அனைத்தும் நீண்ட காலமாக மறைந்துபோன நட்சத்திரங்கள்  உமிழந்துபோன எச்சங்களே என்கின்றது அறிவியல். இதை வேறு வடிவில் பார்த்தால், நாம் அனைவரும் நட்சத்திர அணுப் பொருள்களால் ஆனவர்கள் என்பதே உண்மை என்று சொல்லமுடியும். இதற்கான ஆதாரங்களையும் இந்த அறிவியல் திரட்டி வைத்திருக்கிறது.

சூரியன் பிறந்துவிட்டது. அடுத்து என்ன நடக்கப்போகிறது? புதிதாகப் பிறந்த சூரியனைச்  சுற்றி எஞ்சியிருந்த தூசியும், வாயுக்களும் சேர்ந்து ஒரு வட்டப் பாதையில் சுற்றி வர ஆரம்பித்தன. ஏன் இந்த வட்டப்பாதை? ஒரு சூறாவளி சுற்றும்போது அதன் அருகிலுள்ள அனைத்தையும் சேர்த்துச் சுற்றும்போது அது ஒரு வட்டப் பாதையை ஏற்படுத்துகிறது அல்லவா? அது போலத்தான். சூரியனைச் சுற்றி வரும் இந்தத் தூசி, மீண்டும் மீண்டும் மோதிக்கொண்டு  வளர்ந்து ஒரு குப்பைக் கோளமாக மாறியது. இந்த குப்பைக் கோளங்கள் இறுகி, குளிர்ந்து பனிப் பாறைகளாக உருமாறிப்பின் துணைக் கோள்களாக வட்டப் பாதையில் வலம் வரத்தொடங்கின.  இதில் ஒன்றுதான் நம் பூமியும். நமது சூரிய மண்டலத்தின் மற்ற கிரகங்களைப் போலவே, பூமியும் தூசியும் வாயுவும் கலந்த ஒரு குப்பைக் கோளம்தான். இவ்வாறு பிறந்த நம் பூமியின் பிறந்த நாள், காஸ்மிக் காலண்டரின்  செப்டெம்பர் 6ம் தேதி அன்று. இது நடந்தது சூரியன் பிறந்த தினத்திலிருந்து கிட்டத்தட்ட 200 மில்லியன் ஆண்டுகள் கழித்து.

பூமி கொஞ்சம் கொஞ்சமாகக் குளிர்ந்துகொண்டே, தன்னையும் சுற்றிக்கொண்டு,  சூரியனையும் சுற்றி வந்துகொண்டிருந்தது. ஏறத்தாழ ஒரு பில்லியன் ஆண்டுகள் கழிந்தபோது, பூமி ஒரு பேரிடியை எதிர்கொண்டது. ஆம், சூரியனின் சுற்றுப்பாதையில் வேகமாக நகர்ந்துகொண்டிருந்த ஒரு பிரமாண்ட விண்கல் பூமியை சற்றே எட்டி உதைத்தது.  இந்த வன்முறையால் நிலைகுலைந்து, சற்றுச் சிதைந்துபோன பூமி, சுதாரித்துக்கொண்டு தான் உடைந்துபோன பாகங்களை (குப்பைத் துகள்களை) மீட்கும் முயற்சியில் இறங்கியது. உடைந்தவை அனைத்தையும்  ஒன்றிணைத்து ஒரு வட்டப் பாதையில் தான் சூரியனைச் சுற்றுவதுபோல் சுற்றி வரச்செய்தது. நாளடைவில் இந்தக் குப்பைக் கோளம் குளிர்ந்து ஒரு பனிப் பாறையாக  உருமாறிப் பின் ஒரு துணைக்கோளாக மாறியது. இதுதான் சந்திரன். இவன் வன்முறையில் பிறந்தவன். சந்திரன் மிகவும் சிறிய கோள். இதனால்தானோ என்னவோ, நாம் இவனை மிகவும் மென்மையானவனாகச் சித்திரிக்கிறோம். சூரியக் குடும்பத்தின் அளவில் ஓர் அங்குலம் தொலைவில் புவியின் ஈர்ப்பு விசையால் மிகவும் நெருக்கமாகச் சுற்றிக்கொண்டிருந்த சந்திரன், இன்றைய பிரகாசத்தைவிட 100 மடங்கு வெளிச்சம் கொண்டிருந்தது, மேலும் இன்றிருக்கும் தொலைவில் பத்தில் ஒரு மடங்கு தொலைவில்தான் இருந்தது, இவ்வளவு நெருக்கமான ஈர்ப்பு அரவணைப்பில் சுற்றிவந்த சந்திரன் ஏன் விலகிப் போனது? ஏன் தன் ஒளியை இழந்தது? ஏன் இந்த மாற்றம்? ஆவலோடு காத்திருங்கள், அத்தனைக்கும் விளக்கம் இருக்கிறது. 

இன்னும் பல காலம் செல்லவேண்டியிருப்பதால் இந்த இரண்டாவது பாகத்தை இத்துடன் நிறைவு செய்துகொள்வோம்.

***
 

https://solvanam.com/2020/08/09/பிரபஞ்சம்-பாகம்-2/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.