Jump to content

கொழும்பு மயூரபதி பத்ரகாளி அம்மன் கோயில், அறங்காவலர் குழு மோசடிகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு மயூரபதி பத்ரகாளி அம்மன் கோயில், அறங்காவலர் குழு மோசடிகள்

இந்த ஆலயம் சாதாரண தமிழ், சிங்கள மக்களை மட்டுமல்ல, பணக்காரர்களையும், அரசியல்வாதிகளையும் கூட பக்தர்களாக கொண்டது.

2014ம் ஆண்டில் விஸ்தரிப்பு, மற்றும் புனரமைப்பு வேலைகளை தொடங்கி, பக்த கோடிகளிடம் பெரும் பணத்தை திரட்டியது.

ஆனாலும் இன்று வரை வேலைகள் முடியவில்லை. காரணம் பணமோசடி.

இந்த மோசடியின் அளவு பெரும் அதிர்சிகளை தந்துள்ளது.

இலங்கை பொலீசார், இந்திய பொலீசார், அமெரிக்க FBI என்று கிளறக் கிளற பெரும் பூதங்கள் கிளம்புகின்றன.

கோவில் விஸ்தரிப்பதாக பக்தரிடம் பணம் பறித்து, அந்த பணத்தை ஆட்டையைப் போட்டு, இந்தியாவில் பெரும் மோசடித் திட்டத்துக்கு முதலீடாக்கி உள்ளனர் என்பதே குற்றச்சாட்டாக உள்ளது. 

இந்தியாவில் ரைராணியம் அகழ்வு செய்கிறோம் என்று பலரை ஏமாத்தியுள்ளனர். இதனை நிஜமான புரஜக்ட் ஆக காட்ட, இந்திய அதிகாரிகளுக்கு, இந்த US$18.5m புரஜக்ட் தொடர்பில், இலஞ்சம் தரப்பட்டுள்ளது. பின்னர் அமெரிக்காவிலும் இந்த புரஜக்ட் தொடர்பில் நிதி திரட்டப்பட்டுள்ளது.

சாதரண இலங்கை கோவில் ஒன்றின் அறங்காவலர் குழுவின் சர்வதேச அளவு மோசடிகள் அதிரவைக்கின்றன.

அறங்காவலர் குழுவில் உள்ள இந்தியரான, சுந்தர் எனப்படும் பெரியசாமி சுந்தரலிங்கம் மீதே மூன்று நாட்டு விசாரணைகள் குவிக்கப்படுகின்றன.

இடையே, இலங்கை பொலீசாருக்கு, இந்தியாவில் நடக்கும் வியாபாரம் குறித்து விசாரணை செய்யும் அதிகாரம் இல்லை என்கிறார் அவர்.

ஆயினும் அமெரிக்க FBI விசாரணை முன்னெடுப்பே, இலங்கை, இந்திய விசாரணைகளை ஒன்றினைப்பதாக தெரிகிறது.

முழு விபரம் விசாரணை முடிவில் வரலாம்.

http://www.dailymirror.lk/recomended-news/Extortion-in-the-name-of-Devotion/277-194061

இது தொடர்பில் கொழும்பு நண்பர் சொன்னார்.

பெரும் அரசியல் செல்வாக்கு மிக்க, மகிந்தா போன்றோர் வந்து போகிற பணபலமிக்க கோவில், அயலவர்கள் விஸ்தரிப்புக்கு ஒத்துழைப்பு தருவதில்லை என்பதால் இழுக்கப்படுகிறது என்று பக்கா பிஸ்னஸ் காரரான சுந்தர் அய்யா கதை விட்டு கொண்டிருந்த போதே நினைத்தேன், ஏதோ சரியில்லை என்று...

image_94b95893f0.jpg

Link to comment
Share on other sites

இதில் என்ன ஆச்சரியம், மோசடி செய்ய தான் மதம் இருக்கின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கோவில் கொழும்பில் எங்குள்ளது?

Link to comment
Share on other sites

பாமன் கடைக்கு பக்கத்திலை, பழைய வெள்ளவத்தை  நெசவு தொழிற்சாலைக்கு அருகில்.
தமிழரை விட சிங்களவர் தான் அதிகம் போவார்கள். சனத் ஜெயசுரியா தீவிர பக்தன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, zuma said:

பாமன் கடைக்கு பக்கத்திலை, பழைய வெள்ளவத்தை  நெசவு தொழிற்சாலைக்கு அருகில்.
தமிழரை விட சிங்களவர் தான் அதிகம் போவார்கள். சனத் ஜெயசுரியா தீவிர பக்தன்.

ஓ சரி நன்றி சும்மா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Mayurapathy Sri Bathrakali Amman Kovil Sri Lanka, 17A, Mayura ...

இரண்டு முறை இந்தக் கோவிலுக்கு... சென்றுள்ளேன்.
சர்வதேசம் விசாரிக்கின்ற அளவுக்கு... ஊழல் நடந்திருக்கின்றது என்று எதிர்பார்க்கவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

இந்தக் கோவில் கொழும்பில் எங்குள்ளது?

ஏன் காவடி/பால் செம்பு எடுக்கவோ? :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நில்மினி லைக் போட்டிருக்கிறா....

 

ஏன் என்று யோசிக்கிறேன்... 🤔

 

செய்திக்கா அல்லது மோசடிக்கா 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

Mayurapathy Sri Bathrakali Amman Kovil Sri Lanka, 17A, Mayura ...

இரண்டு முறை இந்தக் கோவிலுக்கு... சென்றுள்ளேன்.
சர்வதேசம் விசாரிக்கின்ற அளவுக்கு... ஊழல் நடந்திருக்கின்றது என்று எதிர்பார்க்கவில்லை.

பழைய கோவிலுக்கோ இல்லை புது கோயிலுக்கோ..😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, Nathamuni said:

நில்மினி லைக் போட்டிருக்கிறா....

 

ஏன் என்று யோசிக்கிறேன்... 🤔

 

செய்திக்கா அல்லது மோசடிக்கா 😎

 நில்மினிக்கு மயுராபதி அம்மன் கோவில் விசயம் கனக்க தேரிஞ்சிருக்கும் போலை...😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, zuma said:

இதில் என்ன ஆச்சரியம், மோசடி செய்ய தான் மதம் இருக்கின்றது.

செய்த, செய்கிற மோசடிகளை மறைக்கவும் மதத்தை பயன்படுத்தலாம். ஏமாந்தவர்கள் இருக்கும்வரை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

ஏன் காவடி/பால் செம்பு எடுக்கவோ? :grin:

கொழும்பில் நின்ற காலங்களில் நண்பர் ஒருவரின் வேண்தலினால் ஒவ்வொரு சனியும் போவோம்.
மதியம் சாப்பாடு பிரசாதம் பிரமாதமாக இருக்கும்.இதுக்காகவே போவோம்.
அது வெங்கடேஸ்வரர் கோவிலாக இருக்கலாம்.
தெகிவளையில் இருந்து உள்ளே போகும் வீதி(களுபோவில ஆக இருக்கலாம்)
நிறைய கூட்டமாக இருந்தாலும் தாராளமாக சாப்பாடு இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்போ தான் ஞாபகம் வருகிறது 
இது விஸ்ணு கோவில்.

சனிக்கிழமை அல்ல
ஞாயிற்றுக்கிழமை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Nathamuni said:

நில்மினி லைக் போட்டிருக்கிறா....

 

ஏன் என்று யோசிக்கிறேன்... 🤔

 

செய்திக்கா அல்லது மோசடிக்கா 😎

 

4 hours ago, குமாரசாமி said:

 நில்மினிக்கு மயுராபதி அம்மன் கோவில் விசயம் கனக்க தேரிஞ்சிருக்கும் போலை...😎

நில்மினியிடமிருந்து.... மேலதிக ✍  தகவல்களை,  ஆவலுடன் எதிர் பார்க்கின்றோம். 🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சந்திரிக்கா அம்மையார் காலத்தில் டக்கியரும் நிர்வாகத்தை வெருட்டி.. சம்திங் சம்திங் வாங்கினதாக செய்திகள் அடிபட்டன.

நான்.. இந்தக் கோவிலுக்கு போவதுண்டு. நல்ல கொழும்பு உற்பத்தி.. வெள்ளை பிகருகள் பார்க்கலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 19/8/2020 at 17:18, zuma said:

பாமன் கடைக்கு பக்கத்திலை, பழைய வெள்ளவத்தை  நெசவு தொழிற்சாலைக்கு அருகில்.
தமிழரை விட சிங்களவர் தான் அதிகம் போவார்கள். சனத் ஜெயசுரியா தீவிர பக்தன்.

உங்க ஆள் கோத்தா போறதில்லையோ இந்த கோயிலுக்கு ?

சிங்களவன் கிண்ணியாவில் பிள்ளையார் கோவிலை உடைக்கிறான் இங்கு பக்த்தனாக வருகிறான் இதைப்பார்த்து பிக்குகள் குரைப்பதில்லையாக்கும் அவ்வளவு பயமாக்கும் இந்த அம்மனிடம் சிங்களவர்களுக்கும் அத்துடன்  zuma வுக்கும் போல் தெரிகிறது இந்த திரியில்  முதலாவது கருத்தும் அதன் பின் வந்த கருத்தும் 😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nedukkalapoovan said:

சந்திரிக்கா அம்மையார் காலத்தில் டக்கியரும் நிர்வாகத்தை வெருட்டி.. சம்திங் சம்திங் வாங்கினதாக செய்திகள் அடிபட்டன.

நான்.. இந்தக் கோவிலுக்கு போவதுண்டு. நல்ல கொழும்பு உற்பத்தி.. வெள்ளை பிகருகள் பார்க்கலாம். 

ஆகா இவரும் அம்மன் பக்தர்.😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, nedukkalapoovan said:

சந்திரிக்கா அம்மையார் காலத்தில் டக்கியரும் நிர்வாகத்தை வெருட்டி.. சம்திங் சம்திங் வாங்கினதாக செய்திகள் அடிபட்டன.

நான்.. இந்தக் கோவிலுக்கு போவதுண்டு. நல்ல கொழும்பு உற்பத்தி.. வெள்ளை பிகருகள் பார்க்கலாம். 

நாங்கள் இந்த கோயிலுக்கு போறது இதுக்குத் தான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, வாதவூரான் said:

நாங்கள் இந்த கோயிலுக்கு போறது இதுக்குத் தான்

சனம் வரிசையிலை வருது.....😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, குமாரசாமி said:

சனம் வரிசையிலை வருது.....😄

சாமி தரிசனம் பெறவோ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, satan said:

சாமி தரிசனம் பெறவோ? 

சாமி + ஸ்திரி தரிசனம் பெற. 

அந்தக் காலத்தில் இருந்து எங்க காலம் ஊடாக இந்தக் காலம் வரை.. இது தான் கதி. மேடை ஒன்று தான் ஆடும் ஆட்கள் வேறு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 19/8/2020 at 18:53, தமிழ் சிறி said:

 

நில்மினியிடமிருந்து.... மேலதிக ✍  தகவல்களை,  ஆவலுடன் எதிர் பார்க்கின்றோம். 🙂

இப்பதான் குமாரசாமி அண்ணாவும் சிறியும் இங்கையும்  என்னை தேடியிருக்கினம் என்று பார்த்தேன். 

1885 ஆம் ஆண்டளவில் வெள்ளவத்தை நெசவு தெழிற்சாலை கட்டுவதற்காக தமிழ் நாடு மற்றும் கேரளாவில் இருந்து வந்த தொழிலார்களை  சிறு தொடர்வீடுகளில்  அமர்த்தினார்கள். அதில் ஒரு சிறு வீடு கோயிலாக மாற்றப்பட்டு அந்த தொழிலார்கள் பத்திரகாளியை கும்பிட்டு வந்தார்கள். 1970' களில் ஒரு சிறிய பழமை வாய்ந்த, நிறைய தமிழர்களால் விரும்பப்பட்ட ஒரு கோயிலாக இருந்தது. அப்போதே மிகவும் பக்தி கொண்ட நிறைய சிங்கள மக்கள்  இந்த கோவிலுக்கு வருவார்கள். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக வியாபார மயமாக்கப்பட்ட பின் நான் போவதில்லை. 1990' களில் புதுசு புதுசாக பூசைகள் என்று துடங்கி பெண்கள் எல்லோரும் தலையில் செம்புடன் காலி வீதியில் எல்லாம் ஊர்வலம் போவார்கள். எனக்கு இவையெல்லாம் அனாவசியமான எமது இலங்கை தமிழர்களின் வழிபாடு முறையில் இருந்து  வேறுபட்ட  விதமாக பட்டது. நிறய காலத்துக்கு பிறகு ஒருமுறை போயிருந்தேன் . அரசாங்கம் வழங்கிய நிலத்தை பாவித்து கோவிலை பெருசாக கட்டியிருக்கிறார்கள். தனியாக சிங்களத்தில் மட்டும் அறிவிப்பு பலகைகள் இருந்தன. ஏன் என்று கேட்டேன். தமிழ் பக்தர்களுக்கு என்ன செய்ய வேணும்  என்று தெரியும். சிங்கள பக்தர்கள் தெரியாமல் பிழையாக ஏதும் செய்துவிடக்கூடாது என்பற்காக தான் என்று சொன்னார்கள். எனக்கு என்னவோ அந்த பழய கோயிலும் பூசை முறைகளும் தான் விருப்பம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 19/8/2020 at 13:30, குமாரசாமி said:

ஏன் காவடி/பால் செம்பு எடுக்கவோ? :grin:

😂 ஈழப்பிரியன் அண்ணாவை பால் செம்பு , காவடியுடன் எப்படி இருப்பார் என்று கற்பனை பண்ணிப்பார்க்கிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, nilmini said:

😂 ஈழப்பிரியன் அண்ணாவை பால் செம்பு , காவடியுடன் எப்படி இருப்பார் என்று கற்பனை பண்ணிப்பார்க்கிறேன்

ஈழப் பிரியனுக்கு.... முதுகு நோ, இருக்கிற படியால்...
காவடி... எல்லாம், இப்ப   எடுக்க முடியாது.  

நீங்கள், அவரின்... முதுகு நோவை, குணப்படுத்தினால்...
வாற வருசம்... குமாரசாமி அண்ணையும், ஈழப் பிரியனும்...
தூக்கு காவடி எடுப்பார்கள்... என்பது நிச்சயம்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட.... இந்தப் பதிவுக்குள், நேற்று... 
றொபின்சன் குருசோ.. எழுதிய சீண்டல்  கருத்தையும்,
அதற்கு நான்,  சாமர்த்தியமாக எழுதிய  பதிலையும்...  இன்று காணவில்லை. 😮

அதனை... நிர்வாகம் நீக்கியதும், சரியே...  :grin:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அனுபவப் பகிர்விற்கு நன்றி கோசான் அவர்களே. புத்தர் சிலைகள் எல்லாம் எந்தளவு தூரம் முளைத்துள்ளன? 
    • மனித வளம் அதிகம் இருப்பதால்தான் இன்னும் மனித மலத்தை மனிதர்களை வைத்தே கையால் அள்ளிக் கொண்டிருக்கிறார்களோ?தமிழ்நாட்டில் எண்ணெய்கப்பல் கசிந்து கடல்நீரில் கலந்த பொழுது வாளியால் அள்ளி ஊற்றினார்கள்.உண்மையில் இந்தியாவில் பொருளாதாரம் பெரும் வளர்ச்சி அடையவில்லை.ஆனால் ஒரு அணுவாயுத வல்லரசு பொருளாதாரத்தில் வளர்ந்தது போல் ஒருமாயத் தோற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.நகர்ப்புறங்கள் நவீனத் தோற்றத்தைக் காட்டிக் கொண்டிருக்கின்றன.சந்திராயனுக்கு ரொக்கற் அனுப்பிய அதே வேளையில் இந்தியாவின் கடைக்கோடி கிராமத்தில் அடிப்படை வசதிகளற்று மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.ஒப்பீட்டளவில் தென் மாநிலங்கள் ஓரளவு வளர்ச்சி அடைந்த நிலையில் வடமாநிலங்களின் நிலமை படு மோசம்.
    • சகோ சீமானின் பிள்ளைகள் பற்றிய கருத்தை இங்கே பதிவிட்டவன் யானே.  இங்கே எனது கேள்வி தனது பிள்ளைகள் தமிழ் படிக்காததற்கு  மேடை கோணல் என்பது.  ஆனால் அது உண்மையல்லவே.  எனவே இந்த இவரது கூற்று தேர்தல் நேரத்தில் அவரை கவிழ்க்க உதவும் என்பதே அவரின் அபிமானியான எனது கவலை. நன்றி. 
    • சீமான் தமிழ் தேசியத்தைப் பேசுகிறார், உண்மை - ஈழத்தில் கஜேந்திரகுமார் அணி தமிழ் தேசியத்தைப் பேசுவது போல பேசுகிறார்😎. இதனால் மட்டும் தமிழ் தேசியம் வாழும் என்றால், நீங்கள் குறிப்பிடும் தமிழ் தேசியம் "யூ ரியூப்" வியாபார தமிழ் தேசியம் என எடுத்துக் கொள்கிறேன்! இந்த "திராவிடர்-தமிழர் ஆணி" ஈழவருக்கு தேவையில்லாத ஆணி என்கிறேன். இதனால், தமிழ் நாட்டில் ஆட்சியில் இருக்கப் போகும் கட்சிகளோடும் (குறைந்த பட்சம் புலத்தில் வாழும்) ஈழவர் பகைத்துக் கொள்ள வேண்டி வரும். இன்னொரு பக்கம், சீமான் தம்பிகள் முன்மாதிரியில் போலிச் செய்திகள், வைரல் வீடியோக்கள், யாழில் நடப்பது போன்ற எங்களிடையேயான அர்த்தமில்லாத சண்டைகளும் வளரும். இதெல்லாம் "ஈழவரான எங்களுக்கு ரொம்ப நல்லது!" என்று நீங்கள் சொன்னால் நான் நம்புகிறேன்!  
    • உங்களுக்கு இந்தியா பற்றி நான் தந்திருப்பது தரவுகளை. நீங்கள் மேலே அலம்பியிருப்பது இந்தியா தொடர்பான உங்கள் ஆத்திரக் கருத்துக்களை. இந்தியா மீது அபிமானம் எனக்கும் இல்லை - ஆனால், தரவுகளை நோக்கித் தான் ஒரு நாட்டின் முன்னேற்றம் பற்றிய கருத்துக்கள் வர வேண்டும், அந்த நாட்டை விரும்புகிறோமா வெறுக்கிறோமா என்பதை ஒட்டியல்ல. பொருளாதார வளர்ச்சி ஊழலால் பெரிதும் பாதிக்கப் பட்டிருக்கிறது இந்தியாவில். ஆனால், மனித வளம் அதையும் மீறி இந்தியாவை முன்னேற்றி வருகிறது. இந்தியா போன்ற கலாச்சாரப் பின்னணி கொண்ட, ஆனால் மனித வளம் மிகக் குறைந்த பாகிஸ்தானிலோ. வங்க தேசத்திலோ இந்தியாவில் இருப்பது போன்ற வளர்ச்சி இல்லை - இது உங்களுக்குக் கசக்கலாம், ஆனால் யதார்த்தம் அது தான்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.