Jump to content

50 வயதிற்கும் குறைந்தவர்கள் மூலம் கொரோனா பரவும் ஆபத்து காணப்படுவதாக எச்சரிக்கை!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

corona.jpg

50 வயதிற்கும் குறைந்தவர்கள் மூலம் கொரோனா பரவும் ஆபத்து காணப்படுவதாக எச்சரிக்கை!

ஆசிய – பசிபிக் நாடுகளில் 50 வயதிற்கும் கீழ் உள்ளவர்கள் மூலம் கொரோனா வைரஸ் தொற்று அதிகளவில் பரவும் ஆபத்து காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் மேற்கு பசிபிக் பிராந்திய இயக்குனர் தகேஷி கசாய் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஸ்விட்சர்லாந்தின் ஜெனீவா நகரத்தில் உரையாற்றிய அவர், தொற்று பாதித்துள்ள 50 வயதிற்கும் குறைவானவர்களில் பெரும்பாலானோருக்கு தமக்கு தொற்று இருப்பது கூட தெரியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வைரஸ் தொற்றின் போக்கு மாறி வருவதாகக் கூறியுள்ள அவர், 20, 30, 40 வயது இளைஞர்கள் மூலம் அதிகளவில் கொரோனா தொற்று பரவும் அபாயம் காணப்படுவதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஜப்பான், பிலிபைன்ஸ், அவுஸ்ரேலியா ஆகிய நாடுகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரில் 3இல் 2 சதவீதமானவர்கள் 40 வயதிற்கு உட்பட்டவர்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 எனவே கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை உலக நாடுகள் அனைத்தும் இரட்டிப்பாக வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.

http://athavannews.com/50-வயதிற்கும்-குறைந்தவர்க/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.