Jump to content

எதிர்க்கட்சித் தலைவராக சஜித்


Recommended Posts

எதிர்க்கட்சித் தலைவராக சஜித்

 

 

 

9 ஆவது நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவராக சஜித் பிரேமதாசவை ஏற்றுக் கொள்வதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்தார்.

புதிய நாடாளுமன்றத்தின் முதல் அமர்வு இன்று (20) முற்பகல் 9.30 மணிக்கு ஆரம்பமாகியது. 

இந்த நிலையில், எதிர்க்கட்சி தலைவராக சஜித் பிரேமதாசவை ஏற்றுக் கொள்வதாக சபாநாயகர் அறிவித்தார்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/எதரககடசத-தலவரக-சஜத/175-254539

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தன் ஐயா,   இருக்க வேண்டிய 🪑    கதிரையிலை... சஜித் இருக்கிறார். 🥱

😤 ஹ்ம்ம்.... எல்லாம் சாணக்கிய அரசியல் செய்ய வெளிக்கிட்டதாலை, வந்த வினை.  😁 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எழுபது வருடங்களாக தன் மந்தையை தானே மேய்ஞ்சு கொண்டிருந்தார், அந்த விலங்குகளை இப்ப காட்டு விலங்குகள் கவ்வியதால் மந்தையுமில்லை, கதிரையுமில்லை. உன்னிடம் தரப்பட்டதை சரியாக கையாளாவிட்டால், அது உன்னிடமிருந்து பறித்தெடுக்கப்பட்டு வேறொருவருக்கு அளிக்கப்படும். 

Link to comment
Share on other sites

29 minutes ago, தமிழ் சிறி said:

சம்பந்தன் ஐயா,   இருக்க வேண்டிய 🪑    கதிரையிலை... சஜித் இருக்கிறார். 🥱

😤 ஹ்ம்ம்.... எல்லாம் சாணக்கிய அரசியல் செய்ய வெளிக்கிட்டதாலை, வந்த வினை.  😁 😂

தமிழ் சிறீ சாணக்கிய அரசியல் செய்து சம்பந்தர் என்ற தனி மனிதரின்  பதவி போனதை நக்கல் செய்து சிரித்து சந்தோசப்படும்  நீங்கள்  2005 ல் மகிந்த வந்தால் யுத்தம் வரும். சமாதானத்தை விட யுத்தம் செய்தால் தான் எமது பலத்தை நிரூபிக்கலாம் என்று தப்பு கணக்கு போட்டு ரணில் என்ற தனிமனிதரை பழிவாங்க   மகிந்தவை  பதவிக்கு கொண்டுவரும் சாணக்கிய அரசியல் செய்ய புறப்பட்டு அதன் விளைவாக  தமிழ் தேசியத்தின் இருப்பையே இழந்து லட்சக்கணக்கான மக்களை அழிந்து முள்ளிவாய்கால் பேரழிவால்  தமிழ் தேசியத்தை பல தலைமுறைகளுக்கு பின்தள்ளிய வரலாற்றை மிக விரைவாகவே மறந்து விட்டீர்கள்.  தமிழ் தேசியத்தின் முக்கிய பலவீனமே இது தான்.

டக்லசையும், சுமந்திரனையும். சம்பந்தனையும், கருணாவையும் இணையத்தில் திட்டி தீர்ப்பது தான் தமிழ் தேசிய எழுச்சி அல்ல. எமது தலைமைகளின் கடந்த கால தவறுகளை அடையாளம் கண்டு நிகழ்காலத்தின் ஜதார்த்தை உணர்ந்து அரசியல் செய்து மக்களின் இருப்பையும் அவர்களின் கல்வி பொருளாதாரத்தை பாதுகாக்கும் வளர்த்தெடுக்கும்  நடவடிக்கைகளை எடுப்பது தான் இப்போதய நிலையில்   தமிழ் தேசியம் எழுச்சி.  அதை செய்பவரே உண்மையான  தமிழ்த்தேசியவாதி. அதையே புதிய தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சி பேதமின்றி  செய்ய வேண்டும்.  அவர் எந்த கட்சி என்பது தற்போது முக்கியமல்ல. 

Link to comment
Share on other sites

Quote

தமிழ் சிறீ சாணக்கிய அரசியல் செய்து சம்பந்தர் என்ற தனி மனிதரின்  பதவி போனதை நக்கல் செய்து சிரித்து சந்தோசப்படும்  நீங்கள்  2005 ல் மகிந்த வந்தால் யுத்தம் வரும். சமாதானத்தை விட யுத்தம் செய்தால் தான் எமது பலத்தை நிரூபிக்கலாம் என்று தப்பு கணக்கு போட்டு ரணில் என்ற தனிமனிதரை பழிவாங்க   மகிந்தவை  பதவிக்கு கொண்டுவரும் சாணக்கிய அரசியல் செய்ய புறப்பட்டு அதன் விளைவாக  தமிழ் தேசியத்தின் இருப்பையே இழந்து லட்சக்கணக்கான மக்களை அழிந்து முள்ளிவாய்கால் பேரழிவால்  தமிழ் தேசியத்தை பல தலைமுறைகளுக்கு பின்தள்ளிய வரலாற்றை மிக விரைவாகவே மறந்து விட்டீர்கள்.  தமிழ் தேசியத்தின் முக்கிய பலவீனமே இது தான்.

ரனில்  வந்திருந்தால் என்ன நடந்திருக்கும்?

Link to comment
Share on other sites

18 minutes ago, nunavilan said:

ரனில்  வந்திருந்தால் என்ன நடந்திருக்கும்?

நிச்சயமக தமிழீழம் கிடைத்திருக்காது என்பதை  ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் பேச்சுவார்ததை தந்திரோபயத்தின் மூலம்  தீர்வு காணப்பட்டிருந்தால் தமிழ் தேசியம் என்பது இன்றய  நிலையை விட எவ்வளவோ மடங்கு  மேலான நிலையில்  இருந்ருக்கும்  என்பதை உறுதியாக கூற  பெரிய அரசியல் அறிவு ஒன்றும் தேலையில்லை. 

Link to comment
Share on other sites

3 minutes ago, tulpen said:

நிச்சயமக தமிழீழம் கிடைத்திருக்காது என்பதை  ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் பேச்சுவார்ததை தந்திரோபயத்தின் மூலம்  தீர்வு காணப்பட்டிருந்தால் தமிழ் தேசியம் என்பது இன்றய  நிலையை விட எவ்வளவோ மடங்கு  மேலான நிலையில்  இருந்ருக்கும்  என்பதை உறுதியாக கூற  பெரிய அரசியல் அறிவு ஒன்றும் தேலையில்லை. 


பேச்சுவார்த்தை ஏற்கவே ரனிலின் காலத்தில் தோல்வி அடைந்து விட்டது.  புலிகளை அழிக்க கங்கணம் கட்டி சோனியா அரசு காத்து இருந்தது. அதே போல் மேற்கு நாடுகளும்.கொலை வெறியுடன் அதே  சிறிலங்கா இராணுவம் இருந்தது. மகிந்த செய்ததை ரனில் செய்திருக்க மாட்டார் என்பதை எதை வைத்து சொல்கிறீர்கள்?

Link to comment
Share on other sites

48 minutes ago, tulpen said:

சமாதானத்தை விட யுத்தம் செய்தால் தான் எமது பலத்தை நிரூபிக்கலாம் என்று தப்பு கணக்கு போட்டு ரணில் என்ற தனிமனிதரை பழிவாங்க   மகிந்தவை  பதவிக்கு கொண்டுவரும் சாணக்கிய அரசியல் செய்ய புறப்பட்டு அதன் விளைவாக  தமிழ் தேசியத்தின் இருப்பையே இழந்து லட்சக்கணக்கான மக்களை அழிந்து முள்ளிவாய்கால் பேரழிவால்  தமிழ் தேசியத்தை பல தலைமுறைகளுக்கு பின்தள்ளிய வரலாற்றை மிக விரைவாகவே மறந்து விட்டீர்கள்.  

சிங்களம் பேச்சுவார்த்தை மூலம் ஒரு தீர்வை ஒருபோதும் தருவதற்கு தயாராக இருந்ததில்லை. சமாதான காலத்தில் நடந்த பல்வேறு சம்பவங்களை மீட்டிப்பார்த்தால் புலிகள் ஏன் சண்டையை தேர்ந்தெடுத்தார்கள் என்பதை அடையாளம் காணலாம். நீங்கள் சொல்லும் ரணிலின் ஆட்சியில் புலிகளும் மக்களும் பெரும் அவமானப்படுத்தப்பட்டு படிப்படியாக இல்லாது ஒழிக்கப்பட்டிருப்பர். 

சாணக்கியமும் இராசதந்திரமும் பலத்திலிருந்து பிறப்பவை. அது இல்லாது விடத்து எதுவும் சாத்தியப்படாது. நடைமுறை உலகு எமக்கு இது தொடர்பான பல கற்பிதங்களை அன்றாடம் எமக்கு தந்து கொண்டிருக்கின்றது. புலிகள் அதனை தெட்டனவே உணர்ந்திருந்தனர்.

Link to comment
Share on other sites

12 minutes ago, nunavilan said:


பேச்சுவார்த்தை ஏற்கவே ரனிலின் காலத்தில் தோல்வி அடைந்து விட்டது.  புலிகளை அழிக்க கங்கணம் கட்டி சோனியா அரசு காத்து இருந்தது. அதே போல் மேற்கு நாடுகளும்.கொலை வெறியுடன் அதே  சிறிலங்கா இராணுவம் இருந்தது. மகிந்த செய்ததை ரனில் செய்திருக்க மாட்டார் என்பதை எதை வைத்து சொல்கிறீர்கள்?

 

4 minutes ago, manimaran said:

சிங்களம் பேச்சுவார்த்தை மூலம் ஒரு தீர்வை ஒருபோதும் தருவதற்கு தயாராக இருந்ததில்லை. சமாதான காலத்தில் நடந்த பல்வேறு சம்பவங்களை மீட்டிப்பார்த்தால் புலிகள் ஏன் சண்டையை தேர்ந்தெடுத்தார்கள் என்பதை அடையாளம் காணலாம். நீங்கள் சொல்லும் ரணிலின் ஆட்சியில் புலிகளும் மக்களும் பெரும் அவமானப்படுத்தப்பட்டு படிப்படியாக இல்லாது ஒழிக்கப்பட்டிருப்பர். 

சாணக்கியமும் இராசதந்திரமும் பலத்திலிருந்து பிறப்பவை. அது இல்லாது விடத்து எதுவும் சாத்தியப்படாது. நடைமுறை உலகு எமக்கு இது தொடர்பான பல கற்பிதங்களை அன்றாடம் எமக்கு தந்து கொண்டிருக்கின்றது. புலிகள் அதனை தெட்டனவே உணர்ந்திருந்தனர்.

உங்கள் இருவரதும் கருத்துப்படி பேச்சுவார்த்தையிலும் தீர்வு கிடைக்காது. சண்டையிலும் தீர்வு கிடைக்காது.( அது நிரூபிக்கபட்டுவிட்டது)  அப்படியான நிலையில் பேச்சுவாரத்தையை தேர்த்தெடுத்திருந்தால்  பல ஆளுமைமிக்க புலிகளின் உறுப்பினர்கள் இன்று உயிருடன் இருந்து அரசியலை கொண்டு நடத்தி  எதிர்காலத்திலாவது வெற்றிகரமான அரசியலை நடத்தி இருக்க முடியும்.  சண்டையை தேர்த்தெடுத்த‍து ஏன்?  உங்கள் கூற்றுபடி உலக நாடுகள் எல்லாம் எமக்கு எதிராக இலங்கை அரசின் பக்கம் இருந்ததால் எம்மால் சண்டையில் தாக்குபிடிக்க முடியாது என்பதை உணராத‍து எமது தவறு இல்லையா?  

இன்று அரசியல்வாதிகளை திட்டி தீர்த்து கொண்டிருப்பதை விட புலிகளில் இருந்த யோகி, பாலக்குமாரன் போன்ற ( உதாரணத்திற்கு மட்டும் தான் இவர்களின் பெயரை குறிப்பிட்டேன்) இன்னும் பல திறமையான அனுபவம் மிக்க ஆளுமைகள் இன்றைய அரசியல்வாதிகளை பிரதியீடு செய்திருப்பார்களே. அது இன்றய நிலையை விட பலமாகதானே இருந்திருக்கும். 

 

Link to comment
Share on other sites

12 hours ago, tulpen said:

 

உங்கள் இருவரதும் கருத்துப்படி பேச்சுவார்த்தையிலும் தீர்வு கிடைக்காது. சண்டையிலும் தீர்வு கிடைக்காது.( அது நிரூபிக்கபட்டுவிட்டது)  அப்படியான நிலையில் பேச்சுவாரத்தையை தேர்த்தெடுத்திருந்தால்  பல ஆளுமைமிக்க புலிகளின் உறுப்பினர்கள் இன்று உயிருடன் இருந்து அரசியலை கொண்டு நடத்தி  எதிர்காலத்திலாவது வெற்றிகரமான அரசியலை நடத்தி இருக்க முடியும்.  சண்டையை தேர்த்தெடுத்த‍து ஏன்?  உங்கள் கூற்றுபடி உலக நாடுகள் எல்லாம் எமக்கு எதிராக இலங்கை அரசின் பக்கம் இருந்ததால் எம்மால் சண்டையில் தாக்குபிடிக்க முடியாது என்பதை உணராத‍து எமது தவறு இல்லையா?  

இன்று அரசியல்வாதிகளை திட்டி தீர்த்து கொண்டிருப்பதை விட புலிகளில் இருந்த யோகி, பாலக்குமாரன் போன்ற ( உதாரணத்திற்கு மட்டும் தான் இவர்களின் பெயரை குறிப்பிட்டேன்) இன்னும் பல திறமையான அனுபவம் மிக்க ஆளுமைகள் இன்றைய அரசியல்வாதிகளை பிரதியீடு செய்திருப்பார்களே. அது இன்றய நிலையை விட பலமாகதானே இருந்திருக்கும். 

 

 

கருணாவை பிரித்து புலிகளை பலமிழக்க செய்த ரனில் ஆளுமை மிக்க புலிகளை விட்டிருப்பார்கள் என்பது எங்கோ இடிக்கிறதே


இப்படியான மனோநிலையில்  உள்ள ரனில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வை தந்திருப்பார் என்பது நம்பும்படியாக அவரின் செயல்கள் இருக்க்வில்லை. மாறாக கழுத்தறுப்பதிலேயே குறியாக இருந்தார். அது கூட்டமைப்பு வரை தொடர்ந்திருக்கிறது,

 

Quote

உங்கள் கூற்றுபடி உலக நாடுகள் எல்லாம் எமக்கு எதிராக இலங்கை அரசின் பக்கம் இருந்ததால் எம்மால் சண்டையில் தாக்குபிடிக்க முடியாது என்பதை உணராத‍து எமது தவறு இல்லையா?  

இத்தனை ஆயிரம் உயிர்களை இழந்து கொள்கைக்காக இறந்தவர்களுக்கு துரோகம் செய்ய புலிகள் செய்ய விரும்பவில்லை என்பது தெரியவில்லையா உங்களுக்கு?
பேச்சுவார்த்தை மூலம் ஏதாவது தீர்வை மக்களுக்கு எடுக்கலாம் என்றே நாடு நாடாக தெரிந்தார்கள். அதுவும் வெற்றி அளிக்கவில்லை. 

வேறு என்ன தேர்வுகள் எஞ்சி இருந்தன என சொல்லுங்கள்?

 

 

Link to comment
Share on other sites

21 minutes ago, nunavilan said:

 

கருணாவை பிரித்து புலிகளை பலமிழக்க செய்த ரனில் ஆளுமை மிக்க புலிகளை விட்டிருப்பார்கள் என்பது எங்கோ இடிக்கிறதே


இப்படியான மனோநிலையில்  உள்ள ரனில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வை தந்திருப்பார் என்பது நம்பும்படியாக அவரின் செயல்கள் இருக்க்வில்லை. மாறாக கழுத்தறுப்பதிலேயே குறியாக இருந்தார். அது கூட்டமைப்பு வரை தொடர்ந்திருக்கிறது,

 

இத்தனை ஆயிரம் உயிர்களை இழந்து கொள்கைக்காக இறந்தவர்களுக்கு துரோகம் செய்ய புலிகள் செய்ய விரும்பவில்லை என்பது தெரியவில்லையா உங்களுக்கு?
பேச்சுவார்த்தை மூலம் ஏதாவது தீர்வை மக்களுக்கு எடுக்கலாம் என்றே நாடு நாடாக தெரிந்தார்கள். அதுவும் வெற்றி அளிக்கவில்லை. 

வேறு என்ன தேர்வுகள் எஞ்சி இருந்தன என சொல்லுங்கள்?

 

நுணாவிலான் விடுதலை புலிகளின் போராட்ட அர்ப்பணிப்பை, அவர்களின் வீரத்தையோ குறைத்து மதிப்பிட வில்லை. அதில் உங்களைப் போலவே என்க்கும் மிகுந்த மரியாதை உண்டு.  நான் பேசிக்கொண்டிருபது ஜதார்த்த அரசியல் பற்றியது.

விட்டதை பிடிக்க போராடும் மனநிலை என்பதே தவறானது என்பதே எனது எண்ணம். அது போராட்டத்திற்கு உரியதல்ல. எத்தனை ஆயிரம் உயிர்கள் இழந்தாலும்  நடைமுறை உலக அரசியலை மீறி எம்மால் எதுவும் செய்ய முடியாது என்பதே  கசப்பான உண்மை. இறுதியில் புலிகள் கூட கசப்பான முடிவு (Bitter End) என்று கூறியே ஆயுதங்களை மெளனித்திருந்தனர். 

விடுதலை புலிகள் நினைத்திருந்தால் ஒரு சில நெகிழ்வு தன்மையை காட்டி இறுதி யுத்த அழிவை தடுத்து நிறுத்தியிருக்க முடியும். தமிழரின் துரதிஷ்ரம் அவர்களால் அந்த முடிவை எடுக்கு விடாது தடுத்திருக்கிறது என்பதே எனது அபிப்பிராயம். அதன் மூலம் நாம் நினைத்த அரசியல் தீர்வை அடைந்திருக்க முடியாது என்பதை ஏற்றுக்கொள்ளுகிறேன்.ஆனால் இன்று இருக்கும் நிலையை விட மேலான நிலை இருந்திருக்கும் என்பதே உண்மை. 

ரணிலை பற்றி கூறியிருந்தீர்கள். நாம் ரணிலை மட்டும் நம்பி பேச்சுவாரத்தைக்கு செல்லவில்லை. எதிர் தரப்பில் இருக்கும் ரணில் எமக்கு எதிராக செய்ய முடிந்தால் செய்வார் என்பது இயல்பானதே. 

இப்போது அது பற்றி பேசுவது விடுதலை புலிகளின் அன்பு செலுத்துகிறோம் என்பதற்காக அவர்களின் தவறுகளுக்கு நியாயம் கற்பிக்கும் சிலரின்  தவறான அரசியல் சித்தாந்ந்தம் இன்றும் சரியான வழியில் செல்லவிடாமல் தடுக்கும் எனபதாலேயே. விடுதலை புலிகள் போன்ற உண்மையான போராட்ட இயக்க வரலாறு போற்றி பாதுகாக்கப்படவேண்டியது என்பதில் எனக்கு மறு கருத்து இல்லை. ஆனால்  அதை விமர்சனம் செய்ய மக்களுக்கு உரிமை உண்டு. 

மேலும் நுணா உங்கள் முதல் கருத்தில் தெரிவித்திருந்தீர்கள் உலகநாடுகள் எல்லாம் எமக்கு எதிராக இருந்தது என்று. அது உண்மை என்றால் உலக நாடுகளை எதிர்த்து எம்மால் ஒரு நாட்டை உருவாக்க முடியுமா? அப்படியானால் நெகிழ்வு தன்மையை காட்டினால் தானே உலக நாடுகளின் ஒத்துளைப்புடன் ஏதாவது ஒரு தீர்வுக்கு வர முடியும். முடிவற்ற யுத்தம் என்பது அழிவுக்கே வழிவகுக்கும் என்பது எமது தரப்பில் நிருப்பிக்கபட்டு விட்டது. 

 

Link to comment
Share on other sites

Quote

ரணிலை பற்றி கூறியிருந்தீர்கள். நாம் ரணிலை மட்டும் நம்பி பேச்சுவாரத்தைக்கு செல்லவில்லை. எதிர் தரப்பில் இருக்கும் ரணில் எமக்கு எதிராக செய்ய முடிந்தால் செய்வார் என்பது இயல்பானதே. 

இதை தான் ஆரம்பத்தில் சொன்னேன். மகிந்த, ரனில் யாரெனினும் ஒரே முடிவு தான் என. இருவரும் இரண்டு விதமான சிங்கள இனவாதிகள் . ஒரு வேளை மகிந்தவை தெரிந்தால் (ஏற்கனவே ரனில் பற்றி தெரிந்ததால்) வேறு ஏதாவது வழிகள் புலப்படலாம் என புலிகள் எண்ணி இருக்கலாம். மற்றது புலிகளால் ரனில் தோற்றார் என்ற பாடமும் உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nunavilan said:

ரனில்  வந்திருந்தால் என்ன நடந்திருக்கும்?

நாங்கள் எப்பவும் எங்கையும் எதிலும் எதிர்ப்பக்கம் தான் நிப்பம்.

Link to comment
Share on other sites

2 hours ago, nunavilan said:

இதை தான் ஆரம்பத்தில் சொன்னேன். மகிந்த, ரனில் யாரெனினும் ஒரே முடிவு தான் என. இருவரும் இரண்டு விதமான சிங்கள இனவாதிகள் . ஒரு வேளை மகிந்தவை தெரிந்தால் (ஏற்கனவே ரனில் பற்றி தெரிந்ததால்) வேறு ஏதாவது வழிகள் புலப்படலாம் என புலிகள் எண்ணி இருக்கலாம். மற்றது புலிகளால் ரனில் தோற்றார் என்ற பாடமும் உள்ளது.

ஒரு தரப்பு மற்ற தரப்புக்கு எதிராக இருப்புது இயல்பு. என்றுமே சிங்கள இனவாதி என்று கூறப்படும் ஒருவருடன் தான் எதிர்காலத்திலும் பேச்சுவார்தை செய்ய வேண்டிய நிலை. ரணில் புலிகளால் தோற்றார் என்பதில் எமக்கு என்ன பெருமை. புலிகளுக்கும் அதில் எந்த பெருமையும் இல்லை. அதில் இலாமடைந்திருந்தால் சந்தோசப்படலாம்.  இவ்வாறு என்னால் நீ தோற்றாய் என்ற தமிழரின் பாரம்பரிய  ஈகோவை விட அதில் எந்த பெருமையும் இல்லை.  புலிகளால் ரணில் தோற்றார் என்று ஒன்றுமில்லாத விடயத்தை பெரிதுபடுத்தி  மகிழும் நீங்கள்  விட மகிந்தவால் புலிகள் தோற்றதால் எமது இனமே தோற்றது என்ற பெரிய விடயத்தை  சிறிய விடயமாக எடுக்கிறீர்கள். 

இனவாதி என்று எளிதாக பட்டம் கொடுத்துவிடலாம். எமது தேசிய  வரலாற்றில் அரசியல் வாதிகளால் கூறப்பட்டது.  டி. எஸ் சேனநாயக்கா இனவாதி,பண்டாரநாயக்கா இனவாதி, ட்ட்லி இனவாதி, சிறிமாவோ இனவாதி, ஜே. ஆர இனவாதி, பிரேமதாசா இனவாதி, சந்திரிகா இனவாதி, மகிந்த இனவாதி, ரணில் இனவாதி,  இப்படி தொடர்ச்சியாக கூறி பேச்சுவாரத்தைகளை எல்லாம்  நிராகரிக்க நிராகரிக தமிழ் தேசியம் மேலும் மேலும் பலவீனமானதை தவிர வேறென்ன நடந்த‍து. எதிர்காலத்திலும் இப்படி இனவாதி என்று கூறி  எதிர்ப்பு அரசியல் செய்வதானால்  முதல் எம்மை உலக மட்டத்தில் பலப்படுத்த வேண்டும். அதற்கும் உலக நாடுகள் எல்லாம் எமது எதிரி என்று நாமே நிர்ணயம் செய்து கொண்டு அங்கும் எதிர்ப்பு நிலை அரசியலையே செய்கிறோம்.  நாங்கள் நினைக்கும் விரும்பும் தேசியம் என்பது குறுகிய காலத்தில் நடக்கப்போவதில்லை என்ற ஜதாரத்த‍த்தை உணர்ந்து புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் மக்களின்  வாழ்வை, கல்வியை, பொருளாதாரத்தை, வர்த்தகத்தை  உயர்த்த சிங்கள அரசின் ஆதரவுடனாவது  ஏதாவது செய்வதே தற்போது நிஜம். 

நுணா போராட்டம் என்பது இதுவரை இவ்வளவு பணத்தை இழ்ந்ந்துவிட்டோம் இனி விட்க்கூடாது என்று தொடர்ந்து விளையாடும் சூதாட்டம் இல்லை.  அதை உணராதால் இவ்வளவு இழப்பு வந்தும் இன்றும் அதை ஏற்றுக்கொள்ளாத‍தே எமது ஈகோ பலவீனம் தான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர் எதிர்கட்சி தலைவராகி வெறுவாயை மெல்ல வேண்டியான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, tulpen said:

இனவாதி என்று எளிதாக பட்டம் கொடுத்துவிடலாம். எமது தேசிய  வரலாற்றில் அரசியல் வாதிகளால் கூறப்பட்டது.  டி. எஸ் சேனநாயக்கா இனவாதி,பண்டாரநாயக்கா இனவாதி, ட்ட்லி இனவாதி, சிறிமாவோ இனவாதி, ஜே. ஆர இனவாதி, பிரேமதாசா இனவாதி, சந்திரிகா இனவாதி, மகிந்த இனவாதி, ரணில் இனவாதி,

நிரூபித்திருக்கிறார்களே.

2005ம்ஆண்டு திடீரென இந்த முடிவு எடுப்பதற்கு இருந்த காரணம் தேர்தல் கூட்டத்தில் நவீன் திஸாநாயக்கவும், மிலிந்த மொறகொடவும் பேசிய பேச்சுக்கள் ரணிலின் நரிதிட்டத்தை அப்படியே வெளிப்படுத்தியது. அதே வேளை தான் காட்டுக்கு சென்று புலிகளுடன் பேசி பிரச்சனையை தீர்ப்பேன் என்று மஹிந்தா அறிவித்தார். அதனால் மஹிந்தவுக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுக்க புலிகள் நினைத்திருக்கலாம். ந மது அரசியல் வாதிகளை சிங்களம் விலைக்கு வாங்குமட்டும், நம்மவர் விலை போகுமட்டும் இந்தப் பிரச்சனை தீராது. புலிகள் திறந்த பாதையை தொடர தெரியாமல் சிங்களத்துக்கு வக்காலத்து வாங்கி தடை போடுகிறார்கள். இதற்கெல்லாம் ம மனச்சுத்தி, இன உணர்வு வேண்டும்.  சும்மா கடந்துபோனவர்களை குற்றம் சொல்லுவதே சிலருக்கு வேலை. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.