Jump to content

HELEN - Malayalam(2019)


Recommended Posts

சி(ப)ல நாள்களின் முன்னர்(இணையத்தில்)எங்கேயோ ஒரு குட்டி கதை வாசித்திருந்தேன்..

ஒருவர் வேலைக்கு வரும் போது  தன் நிறுவனத்தில் காவலில் இருக்கும் security guard க்கு தலை அசைத்து   குட் மோர்னிங் சொல்லி செல்வாராம், அதேபோல் வேலையிலிருந்து செல்லும் போது முகமன் கூறியே செல்வார் , ஒரு நாள் வேலைக்கு வந்திருந்த இவர் திரும்பி செல்லாமல் இருந்ததை ( இவர் முகமன் கூறாமல் செல்வதில்லை என்பதை நினைவு வைத்திருந்த security guard ) இரவு ஆனதும் ஒவ்வொரு இடமாக தேடி செல்லும் போது அங்கு உணவுகள் சேகரித்து வைக்கப்படும் குளிர் பாதன அறையில் சக ஊழியரால் தவறுதலாக அடைக்கப்பட்டு இருப்பதை கண்டு பிடித்து  மீட்கப்பட்டார் என செல்லும் அக்கதை 

*******************************************
HELEN - Malayalam(2019)

Nursing படித்து விட்டு வேலைக்காக கனடாவிற்கு செல்வதற்காக IELTS படித்துகொண்டு part time ஆக kFC ? ல வேலைசெய்து கொண்டிருக்கும் ஹெலன் அம்மா இல்லாத அப்பாவுடன் வாழும் இளம் பிராயத்து பெண் ..

 அப்பாவிற்கு இவள் கனடா  செல்வது அவ்வளவு விருப்பம் இல்லை ஆயினும் கொஞ்ச காலம் என்பதால் அனுமதிக்கிறார் .

அதற்குள் அஷார் உடன் காதல் ❤️ அஷாரிற்கு இன்னும்  வேலை கிடைக்கவில்லை . அவனுடன் ஒருநாள் வேலை முடித்து வரும் வழியில் ட்ராபிக் பொலிஸ் பிடித்து அந்த பொலிஸ் அதிகாரியின் கபடத்தனத்தால் காதல் வீடு வரையும் தெரிய வர அதனால் தகப்பன் இவளுடன் முகம் கொடுத்து கதைப்பதில்லை.

அஷாரிற்கு,சென்னையில் வேலை கிடைக்கிறது. ஹெலன்க்கு கனடாவிற்கான விசா கிடைத்து டிக்கட் எடுத்தாகி விட்டது.

அன்றைய நாள் பணிமுடித்து கிளம்ப இருக்கையில் சக பணியாளர் தரும் ஒரு வேலையை செய்து முடிக்க ப்ரீஸர் ரூமுக்குள்  
செல்லும் ஹெலன் , எல்லாரும் சென்றுவிட்டார்கள் என நினைத்து  ரூமை பூட்டி விட்டு செல்லும்  கடை முதலாளியின் தவறால் உள்ளுக்குள் சிக்கு படுகிறாள்...

ஹெலன் மீண்டு வந்தாளா? 
எப்படி ? 

இறுதி வரை எங்களையும் பதைபதைக்க வச்சு சொல்லி இருக்கிறார்கள்..உள்ளுக்குள் சிக்குப்பட்ட ஹெலன் வெளிவர அல்லது மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க  ஒவ்வொன்றாக முயற்சி செய்வதும் ஒவ்வொன்றும் சரிவராமல் போவதும் ,ஹெலனுக்கும் எலிக்கும் நட்பு உருவாவது,எலி செத்ததும் அதற்காக உருகுவதும் -14 பாகை செல்சியஸ் குளிரை எங்களுக்குள் கடத்துவதிலுமாக ஹெலனாக நடித்த அன்னாபென் வெற்றி கண்டிருக்கிறார்

அப்பாவாக லால் அநேகமான படங்களில் வில்லனாக பார்த்திருந்த இவர் இதில்  பாசமான தந்தையாக வாழ்ந்திருக்கிறார், கபட பொலிஸ் அதிகாரி, நல்ல பொலிஸ் கான்ஸ்டபிள் ,லாக்கப்பில் உள்ள கைதி, காவலாளி, அயல்வீட்டுகாரர் என  எல்லோருமே கவனிக்க வைக்கிறார்கள்.

***********************************
லால் இறுதியில் அந்த காவலாளியிடம் கேட்பார்

என் பிள்ளை  அங்கே தான் இருக்கும் என நீங்கள் எப்படி உணர்ந்தீர்கள்?

அதற்கு அந்த காவலாளி சொல்வார் 

  "இந்த வேலையைத்  சுமார் 30 ஆண்டுகளாக செய்து கொண்டிருக்கிறேன்"
 
 "ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கானவர்களைப் பார்க்கிறேன்"

 நாங்கள் இதுவரை ஒருவருக்கொருவர் பேசியதில்லை."

"ஆனால் ஒவ்வொரு நாளும், உள்ளே சென்றும் வெளியே வரும்போதும்,

உங்கள் மகள் என்னை பார்த்து  கையசைத்து புன்னகைக்க 
தவறுவதில்லை.

நேற்று உள்ளே செல்லும்போது அவரை அவதானித்து  இருந்தேன்,
ஆனால் அவர் வெளியேறியதை பார்க்கவில்லை என்கண்ணில் படாமல் அவர் வெளியேறியிருக்க சந்தர்ப்பங்கள் குறைவு.
நாங்கள் காவலாளிகள் மற்றவர்களால் அவதானிக்கபடுவது குறைவு,
ஆனால் யாராயினும் நம்மை கவனித்தால் நாம் அவர்களின் முகம்களை  ஒரு போதும் மறப்பதில்லை. என 

லால் அவருக்கு கண்ணீருடன் கைகூப்பி விடை கொடுப்பார் 
**********************************
நாம் செய்யும் சில நல்ல (நடத்தை) நடவடிக்கைகளாலேயே  எங்களையுமறியாமல் பிறரால் அவதானிக்கப்பட்டு கொண்டுதானிருப்போம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அழகான ஒரு திரைக்காவியம். அருமையான நடிப்பு. நன்றி பகிர்வுக்கு.

Link to comment
Share on other sites

Amazon prime இல் இப்படத்தை நேற்றிரவு ரசித்தேன். பிள்ளைகளுடன் பார்க்க கூடிய நல்ல படம். பகிர்வுக்கு நன்றி.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.