Jump to content

விக்னேஸ்வரன் , கஜேந்திரகுமாருக்கு பாராளுமன்றத்தில் இனவாதம் பேச இடமளியோம் : என்கிறார் சரத் வீரசேகர


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

விக்னேஸ்வரன் , கஜேந்திரகுமாருக்கு பாராளுமன்றத்தில் இனவாதம் பேச இடமளியோம் : என்கிறார் சரத் வீரசேகர

 

spacer.png

விக்னேஸ்வரன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்றோருக்கு பாராளுமன்றத்திற்குள் இனவாதம் பேசுவதற்கு இடமளிக்க மாட்டோம் என்று மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ரியல் அத்மிரல் கலாநிதி சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
நிகழ்வொன்றின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே சரத் வீரசேகர இவ்வாறு தெரிவித்துள்ளார்.
விக்னேஸ்வரனும் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் பாராளுமன்றத்தில் சத்தியப்பிரமானம் செய்ய முன்னர் முள்ளிவாய்க்காலிலேயே உத்தியோகபூர்வமற்ற சத்தியப்பிரமாணத்தை செய்தனர். பயங்கரவாதிகள் இறுதியாக அழிக்கப்பட்ட இடமே அது, பயங்கரவாதிகள் நாட்டை பிளவுப்படுத்தும் எண்ணத்திலேயே செயற்பட்டனர்.

அப்படியாயின் இவர்கள் இருவரும் அங்கு சத்தியப்பிரமாணம் செய்துகொள்கின்றார்கள் என்றால் நாட்டை பிளப்படுத்தும் நிகழ்ச்சி நிரலிலேயே அவர்கள் இருக்கின்றனர். இவ்வாறாக பிளவுப்படுத்தும் எண்ணத்தில் இருந்துகொண்டு எவ்வாறு அவர்கள் பாராளுமன்றத்தில் ஒற்றையாட்சியை பாதுகாப்போம் என்று சத்தியப்பிரமாணம் செய்தார்கள் என்று நாங்கள் கேள்வியெழுப்புவோம். எவ்வாறாயினும் பாராளுமன்றத்திற்குள் இனவாதம் பேசுவதற்கு அவர்களுக்கு இடமளிக்க மாட்டோம். என அவர் குறிப்பிட்டுள்ளார். -(3)

 

http://www.samakalam.com/செய்திகள்/விக்னேஸ்வரன்-கஜேந்திரக/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

u .n ல் ..சண்டித்தனம் விட்ட நாங்கள்...எங்கடை பாளிமென்டில் கதைக்கவிடுவமே...ஆமிக்காரண்டா நான்..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.