Jump to content

வீதியால் சென்ற பெண்ணை அழைத்து தவறாக நடந்துகொண்ட இராணுவச் சிப்பாய்- முல்லைத்தீவில் பதற்றம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Mullaitivu.jpg

வீதியால் சென்ற பெண்ணை அழைத்து தவறாக நடந்துகொண்ட இராணுவச் சிப்பாய்- முல்லைத்தீவில் பதற்றம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேராவில் பகுதியில் வீதியால் சென்ற பெண்ணை அழைத்து இராணுவச் சிப்பாய் ஒருவர் தவறாக நடந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் அங்கு சிறிது பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.

அந்தப் பகுதியில் மக்கள் குடியிருப்பை அண்டிய பகுதியில் உள்ள இராணுவ முகாமில் இருந்த குறித்த இராணுவ சிப்பாய் ஒருவர் மர்ம உறுப்பை காட்டி தவறாக நடந்துகொண்டதாக குறித்த பெண் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அப்பகுதி மக்கள் இணைந்து குறித்த இராணுவ முகாமுக்கு முன்பாக ஒன்றுகூடியுள்ள நிலையில் அங்கு பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் ஆண்டிஐயா புவனேஸ்வரன் சம்பவ இடத்துக்குச் சென்று மக்களுடன் கலந்துரையாடியுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதியுமாறு சம்பவ இடத்திற்குச் சென்ற புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்த நிலையில் குறித்த யுவதி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யச்சென்றுள்ளதுடன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

http://athavannews.com/வீதியால்-சென்ற-பெண்ணை-அழ/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கூல் டவுண் பீப்பிள்.

இந்த “படம் காட்டும்” வியாதி உலகெங்கும் ஒரு வித மனநோய் உள்ள ஆக்கள் செய்யுற வேலைதானே?

கொழும்பில் கடற்கரையோர பற்றைக்குள் மினகெட்ட ஒரு நல்ல தொழில் செய்யும் தமிழ் அங்கிள் ஒருவரையும், ஒரு வெறுங்காணிக்குள் பிடிபட்ட இன்னொரு சிங்கள ஆலையும் நானும் நண்பர்களும் எச்சரித்து மிரட்டி அனுப்பியுள்ளோம்.

அண்மையில்தான் யூகேயில் காலுக்கு கீழே கமெரா வைத்து படம் பிடிப்பதை தடை செய்யும் சட்டம் வந்தது.

பஸ்சிலே ஏறி உரசுபவர்கள் வாழும் ஊர் இலங்கை. அங்கே ராணுவத்தில் இருப்பவரில் ஒருவர் இப்படி இருப்பதால் - இனி ஒரே பாலியல் வன்முறைதான் என்பதில்லை அர்த்தம்.

கற்களை ரெடியா வச்சிருங்கோ நான் கீழே சொல்ல போற விடயத்துக்கு🤣

2015 க்கு பின் ராணுவம் தமிழர் பகுதியில் செய்த பாலியல் குற்றம் என்று நான் பெரிதாக கேள்விபடவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2015 க்கு பின் ராணுவம் தமிழர் பகுதியில் செய்த பாலியல் குற்றம் என்று நான் பெரிதாக கேள்விபடவில்லை.

இவ்வளவு நாளும் அதே எண்ணிக்கொண்டிருந்தீர்கள்... இப்பதானே அவயின்ரை ஆட்களின்ரை ஆட்சி தொடங்கியிருக்கு..இனி ஆட்டம் ஆரம்பம்...இனி புதிசா எண்ணத்தொடங்கவும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்போதும் உங்கள் தரப்பு எதிர்பார்பதற்கு 180 பாகையில் நடப்பவர்கள் ராஜபக்சேக்கள். பார்க்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, goshan_che said:

கூல் டவுண் பீப்பிள்.

இந்த “படம் காட்டும்” வியாதி உலகெங்கும் ஒரு வித மனநோய் உள்ள ஆக்கள் செய்யுற வேலைதானே?

கொழும்பில் கடற்கரையோர பற்றைக்குள் மினகெட்ட ஒரு நல்ல தொழில் செய்யும் தமிழ் அங்கிள் ஒருவரையும், ஒரு வெறுங்காணிக்குள் பிடிபட்ட இன்னொரு சிங்கள ஆலையும் நானும் நண்பர்களும் எச்சரித்து மிரட்டி அனுப்பியுள்ளோம்.

அண்மையில்தான் யூகேயில் காலுக்கு கீழே கமெரா வைத்து படம் பிடிப்பதை தடை செய்யும் சட்டம் வந்தது.

பஸ்சிலே ஏறி உரசுபவர்கள் வாழும் ஊர் இலங்கை. அங்கே ராணுவத்தில் இருப்பவரில் ஒருவர் இப்படி இருப்பதால் - இனி ஒரே பாலியல் வன்முறைதான் என்பதில்லை அர்த்தம்.

கற்களை ரெடியா வச்சிருங்கோ நான் கீழே சொல்ல போற விடயத்துக்கு🤣

2015 க்கு பின் ராணுவம் தமிழர் பகுதியில் செய்த பாலியல் குற்றம் என்று நான் பெரிதாக கேள்விபடவில்லை.

கோசான் சார் நியாயத்தை பேசுறாரு.....😎

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.