Jump to content

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான போராட்டத்துக்கு ஆதரவு கோரல்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, goshan_che said:

மட்டகளப்புத்தானே என்று ஊடகங்கள் அதை செய்தியாகமல் விட்டதோ அல்லது, இங்கே இணத்தவர்கள் இணைக்காமல் விட்டார்களோ தெரியவில்லை. 

எனது விருப்பத்தளங்களில் பற்றிநாதம் இருக்கின்றது. ஆனால் அது பல மாதங்களாக இயங்கவில்லை என்பதால் கிழக்கு செய்திகளை காண்பது குறைவு. 

நம்பிக்கையான கட்சிசாராத கிழக்கு செய்தி தளம் இருந்தால் சொல்லுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, உடையார் said:

 

33 minutes ago, கற்பகதரு said:

 

சாணக்கியனும் சம்பந்தனும் நிற்கிறார்கள். விக்னேஸ்வரனும் கஜேந்திரகுமாரும் நின்றதை காணவில்லையே?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, கற்பகதரு said:

சாணக்கியனும் சம்பந்தனும் நிற்கிறார்கள். விக்னேஸ்வரனும் கஜேந்திரகுமாரும் நின்றதை காணவில்லையே?

தங்களுக்கு பார்வையும் தேடலும் சமீப காலமாக குறுகிவிட்டது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, உடையார் said:

நீங்கள் செய்வது அப்பட்டமான பிரதேசவாதம்தான் - எனென்றால் ஒன்றை விளங்கி கொள்ள முதல், இப்படி பதிகின்றீர்கள்.

கீழே உள்ள தளத்தில் போய் பாருங்கள்,

http://www.ilakku.org/

முதலில் போட்டது யாழில் நடந்த போராட்டம். அவற்களுக்கு மற்ற செய்திகள் போக முதல், யாழின் செய்தி கிடைத்திருக்கலாம். யாழின் செய்தி இணைத்தபின் எந்த செய்தியும் நான் இணைக்கவில்லை, நித்தா கொள்ள போய்விட்டேன்.

இதில் செய்திகள் இணைத்திருப்பது நானும் கிருபனும் - இப்ப சொல்லுங்கள் யாரை நினைத்து பதிவிட்டீர்கள் என்று.

இங்கு யாரும் பிரதேசத்தை வைத்து யாழில் செய்திகள் இணைப்பதில்லை.

நீங்கள்தான் இப்ப பல புதிய கோணங்களில் கிளறுகின்ற மாதிரி இருக்கு. 

நான் ஏதையும் மூடி மறைக்க தேவையில்லை, அப்படிப்பட்டவனுமில்லை

 நான் தந்து எடுத்து வளர்ப்பதும் மட்டகளப்பிலிருந்துதான்,  இன்னும் எடுக்க இருக்கின்றேன்.

கொரோணா கலத்தில் யாழ் இன்னுமொரு உறவுடன் இணைத்து உதவி செய்ததும் மட்டகளப்பிற்குதான், 02/09/20 நினைவுதினமாக சாப்பாடு கொடுக்கப்போவதும் மட்டகளப்பில்தான்....

ஒரு சிறு வட்டம்போட்டுவிட்டு எல்லாதையும் ஒரே மாதிரி எடை போடாதீர்கள்

 இந்த பிரதேச வாத த்தை கொஞ்சம் அடக்கி வாசியுங்கள், இப்ப சிதைந்து போயிருக்கு அதை இன்னும் சிதைக்க வேண்டாம், இப்படி நஞ்சூட்டி 🙏

 

 

உடையார்,

1. நீங்கள் செய்யும் உதவிகள் போற்றுதலுக்குரியன.

2. நான் இங்கே பதிந்ததை திரும்பி வாசியுங்கள். நான் முதலில் செய்திதளங்கள் இதை போடவில்லையா? அல்லது இணத்தவர்கள் இணைக்கவில்லையா என்றே கேட்டேன். கிட்டதட்ட லைவ்வாக மட்டகளப்பு போராட்டங்கள் பற்றிய செய்திகள் சமூகவலை எங்கும் வந்த போது, ஒரு தளம் தனியே யாழ் செய்திகளை மட்டும் இணைத்தது என்றால் அது நிச்சயமாக “இச்சையின்றிய” மையாவாத சிந்தனையே.

3. செய்தி இணைப்போர் யாரென்று நான் உண்மையில் பார்க்கவில்லை. தலைப்புக்களில் கிழக்கு மட்டும் விடுபட்டிருப்பது தெரிந்தது. அதைதான் ஏன் என்று கேட்டேன்.

4. நான் “இச்சை இன்றிய” என்ற பதத்தையும் அதற்கான ஆங்கில பதத்தையும் அறிந்தே பயன்படுத்தினேன். சிலர் இச்சையுடன் யாழ் மையவாதிகளாக இல்லாதவிடத்தும், நமக்கே தெரியாமல் இந்த மையவாதம் தலைகாட்டலாம் அதையே சொன்னேன்.

3 hours ago, ரஞ்சித் said:

அதுசரி, இந்தப் போராட்டங்களில் கருணா அம்மானும், பிள்ளையானும், வியாழேந்திரனும், ஜெயனந்த மூர்த்தியும், டக்கிளஸும், அங்கஜனும் திலீபனும் செலுத்திய பங்களிப்பு என்ன? 

என்ன ஐயா இப்படி கேட்டு விட்டீர்கள்

காணாமல் ஆக்கியவர்களே அவர்கள்தானே?

தமக்கு எதிராகவே போராட முடியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, கிருபன் said:

எனது விருப்பத்தளங்களில் பற்றிநாதம் இருக்கின்றது. ஆனால் அது பல மாதங்களாக இயங்கவில்லை என்பதால் கிழக்கு செய்திகளை காண்பது குறைவு. 

நம்பிக்கையான கட்சிசாராத கிழக்கு செய்தி தளம் இருந்தால் சொல்லுங்கள்.

கிருபன்,

எனது பதிவின் கருத்தை என் மேல் பிரதேசவாத பட்டம் கட்டாமல் உள்வாங்கியமைக்கு நன்றி.

பக்கசார்பின்மை பற்றிய உத்தரவாதம் தரமுடியாது. ஆனால்

Meenagam . Com

battineews . Com

என்பன நான் பார்ப்பவை.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னொன்றையும் நினைவில் கொள்ளுங்கள்.

ஏனப்பா மட்டகளப்பு செய்திகளை இணைக்கவில்லை என கேட்ட எனக்கு கிடைத்த பட்டம் பிரதேசவாதி, தமிழ் தேசியத்தின் எதிரி.

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான பொது அமைப்பு நடத்திய போராட்டத்தை தவிர்த்து, தனியே ஆவர்த்தனம் ஒரு மாவட்டத்தில் மாத்திரம் வாசித்த கட்சிக்கு கிடைக்கும் பெயர் - தமிழ் தேசியத்தின் தூண்கள்.

கஜேந்திரனுக்கு எம்பி சீட் கொடுத்தாலும் அவர் அம்பாறை எம்பி போலவே செயற்படுவார் என்றார்களே?

அம்பாறையில் போய் கஜன் ஏன் இன்னும் தனது மக்களை சந்திக்கவில்லை?

அலுவலகம் போடவில்லை ?

அல்லது அவர்கள் கட்சியின் பெயரிலும் பேச்சிலும் “தேசியம்” வளர்ப்பது - கிழக்கில் உபரி வாக்குகளை பெற்று, வடக்கில் இருந்து ஒருவரை தேசியபட்டியலில் அனுப்ப மட்டும்தானா?

இதை கேட்டால் என்னை பிரதேசவாதி என திட்ட தோணுமே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தன் ஐயாவும் ஒரு மாதிரி களத்தில இறங்கிற்றார்!

சிவனே என்று இருந்த மனிசனை களத்தில இறங்க வைச்ச வாக்காளப் பெருமக்களை நினைக்க கோபம் கோபமா வருது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஏராளன் said:

சம்பந்தன் ஐயாவும் ஒரு மாதிரி களத்தில இறங்கிற்றார்!

சிவனே என்று இருந்த மனிசனை களத்தில இறங்க வைச்ச வாக்காளப் பெருமக்களை நினைக்க கோபம் கோபமா வருது.

அடி உதவுகிறது போல் எதுவும் உதவாது இந்த முறை தேர்தலில் கிடைத்த அடி இவர்களை இனி நகர்த்தும். இந்த 11 வருடங்களாக இவர்கள் விட்ட பிழைகள் தான் இன்றைய தமிழினத்தின் இழி நிலைக்கு காரணம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, விசுகு said:

அடி உதவுகிறது போல் எதுவும் உதவாது இந்த முறை தேர்தலில் கிடைத்த அடி இவர்களை இனி நகர்த்தும். இந்த 11 வருடங்களாக இவர்கள் விட்ட பிழைகள் தான் இன்றைய தமிழினத்தின் இழி நிலைக்கு காரணம். 

நூற்றில் ஒரு வார்த்தை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, goshan_che said:

3. செய்தி இணைப்போர் யாரென்று நான் உண்மையில் பார்க்கவில்லை. தலைப்புக்களில் கிழக்கு மட்டும் விடுபட்டிருப்பது தெரிந்தது. அதைதான் ஏன் என்று கேட்டேன்.

நன்றி கோஷன்- நீங்கள் அப்படி நினைந்திருக்காவிட்டால் 🙏

 என் வாழ்கையில் நான் இதுவரை பார்த்தில்லை, இனிமேலும் இல்லை அந்த குறுகிய வட்டத்திற்குள்

 

11 minutes ago, விசுகு said:

அடி உதவுகிறது போல் எதுவும் உதவாது இந்த முறை தேர்தலில் கிடைத்த அடி இவர்களை இனி நகர்த்தும். இந்த 11 வருடங்களாக இவர்கள் விட்ட பிழைகள் தான் இன்றைய தமிழினத்தின் இழி நிலைக்கு காரணம். 

ஐயா நொந்து நூலாகி இருக்கின்றார் 😆

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, உடையார் said:

 

ஐயா நொந்து நூலாகி இருக்கின்றார் 😆

அதைவிட முக்கியம் இவர்களது தலைக்கனம். 

தங்களை விட்டால் தமிழர்களுக்கு வேறு நாதியில்லை என்ற முடிவுக்கு இவர்கள் வந்திருந்தது இந்த முறை தேர்தல் பிரச்சாரத்தின் போது தெளிவாக தெரிந்தது. முக்கியமாக சுமேந்திரன் சம்பந்தர் மற்றும் சிறீதரன் பேச்சுக்களில் பேட்டிகளில். லட்சக்கணக்கில் வாக்குகள் வித்தியாசத்தில் வெல்வோம் என்ற மமதையில் இருந்தார்கள். அடி மிக மிக பலமானது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விசுகு said:

அதைவிட முக்கியம் இவர்களது தலைக்கனம். 

தங்களை விட்டால் தமிழர்களுக்கு வேறு நாதியில்லை என்ற முடிவுக்கு இவர்கள் வந்திருந்தது இந்த முறை தேர்தல் பிரச்சாரத்தின் போது தெளிவாக தெரிந்தது. முக்கியமாக சுமேந்திரன் சம்பந்தர் மற்றும் சிறீதரன் பேச்சுக்களில் பேட்டிகளில். லட்சக்கணக்கில் வாக்குகள் வித்தியாசத்தில் வெல்வோம் என்ற மமதையில் இருந்தார்கள். அடி மிக மிக பலமானது. 

சுமேக்கு அடிக்குமேல் அடி, அவரின் செருக்கை காணவில்லை கூட்டத்தில் கதைக்கும் போது 😆

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, உடையார் said:

சுமேக்கு அடிக்குமேல் அடி, அவரின் செருக்கை காணவில்லை கூட்டத்தில் கதைக்கும் போது 😆

அதே.  ஆனால் தமிழரின் பிளவுகள் எமக்கு பெரும் பலவீனம். அதை இனியாவது இவர்கள் உணர்ந்து எல்லோரையும் உள்வாங்கி தலைவரின் தூர நோக்கை புரிந்து கொண்டு செயல்படட்டும். அண்மையில் கயேந்திரகுமாரின் பேச்சு ஒன்று பார்த்தேன். எங்களுக்குள் பிரச்சினை இருக்கலாம் ஆனால் கூட்டமைப்பு தமிழரின் பலம் என்பதை நாங்கள் மறக்க மாட்டோம் மறக்க முடியாது என்று குறிப்பிட்டிருந்தார். நல்லதொரு முன்மாதிரி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன்னாரில் இன்று மாபெரும் போராட்டம்!missing-person-mannar-2-720x480-1.jpg?189db0&189db0

 

சர்வதேச காணாமலாக்கப்பட்டோர் தினம் நேற்று (30) அனுஷ்டிக்கப்பட்ட நிலையில், மன்னாரில் இன்று (31) கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்தப் போராட்டம் மன்னார் பிரஜைகள் குழுவின் அனுசரனையுடன், மன்னார் மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் அமைப்பின் ஏற்பாட்டில் இன்று காலை 9.30 மணியளவில் மன்னார் பஸார் பகுதியில் முன்னெடுக்கப்பட்டது.

இந்த போராட்டத்தில் கலந்துகொண்ட காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் சர்வதேசமே மௌனம் காப்பது ஏன், இலங்கை அரசே உண்மையை மறைக்காதே ஒரு நாள் நிச்சயம் வெளிவரும், காணாமலாக்கப்பட்ட உறவுகள் எங்கே, சர்வதேசமே புதிய அரசாங்கத்திடம் நீதியை பெற்றுத்தாருங்கள் உள்ளிட்ட பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அத்தோடு, காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கு நினைவகம் ஒன்றை அமைப்பதற்கு இடம் கோரி கையெழுத்துக்களும் பெற்றுக்கொள்ளப்பட்டன.

அதேநேரம் காணாமலாக்கப்பட்ட உறவுகளைத் தேடும் குடும்பங்களின் அமைப்பினால் ஜனாதிபதிக்கு எழுதிய மகஜர் போராட்டம் இடம்பெற்ற இடத்திற்கு வருகைதந்த மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.குணபலனிடம் கையளிக்கப்பட்டது.

குறித்த போராட்டத்தில் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள், மத தலைவர்கள், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன், நானாட்டான் பிரதேச சபையின் தலைவர் திருச்செல்வம் பரஞ்சோதி, உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டனர்.

  • missing-person-mannar-4-720x480-1.jpg?18
  • missing-person-mannar-6-720x480-1.jpg?18
  • missing-person-mannar-1-720x480-1.jpg?18
  • missing-person-mannar-2-720x480-1.jpg?18
 
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வெளிநாட்டு சுற்றுலாப் பயணிக்கு வடை விற்றவர் கைது! வெளிநாட்டு சுற்றுலாப்  பயணியிடம் ஒரு உளுந்து வடை மற்றும் தேனீருக்கு 800 ரூபாய் அறவிட்ட குற்றச்சாட்டில் உணவகமொன்றின் பணியாளரை  களுத்துறை  பொலிஸார் கைதுசெய்துள்ளனர். மேலும், குறித்த உணவகத்தின் உரிமையாளர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார். இதேவேளை அண்மையில் கொழும்பு அளுத்கடை பகுதியில் உணவக உரிமையாளர் ஒருவர் வெளிநாட்டு சுற்றுலாப்பயணியை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1378864
    • ஜனாதிபதித் தேர்தல் களம் தெற்கைவிட இம்முறை தமிழர் தாயகப் பிரதேசத்திலும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றது. போரின் பின்னரான அனைத்து ஜனாதிபதித் தேர்தல்களிலும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்த தமிழ் மக்கள் இம்முறை அத்தகைய நிலைப்பாட்டை எடுப்பதற்குத் தயங்குவதும், தமிழ்ப் பொது வேட்பாளரை நோக்கி தமிழர்கள் அணிதிரட்டப்படுவதாலும் ஜனாதிபதித் தேர்தல் விவகாரம் பேசுபொருளாகியிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப்பொது வேட்பாளர் களமிறக்கப்படுவது தென்னிலங்கை கட்சிகளைப்போன்று தமிழ்த்தேசியக் கட்சியைச் சேர்ந்த சிலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அதே நேரம் இந்தப் பொதுவேட்பாளர் விவகாரத்தை குழப்பியடிப்பதற்கான சதி முயற்சியும் முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடுகள் தொடர்பில் பலத்த சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. கொள்கைத் தளம்பலான ஒருவர் இந்த விடயங்களை முன்னின்று செயற்படுத்துவதாகச் சொல்லிக்கொள்ளும் போது சந்தேகங்கள் எழுவது இயல்பானதே. பொதுவேட்பாளர் விவகாரத்தை ஆதரிப்பதாகக் காட்டிக்கொண்டு அதைக் குழப்பியடிப்பது தான் அவரது இலக்கா என்ற கேள்வியும் எழுகின்றது. ஏனெனில் அவரின் நடவடிக்கைகள் அப்படியானவையாகத்தான் அமைந்திருக்கின்றன. ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியே, ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளரைக் களமிறக்கும் யோசனையை முன்வைத்தது. அது தொடர்பில் பல தரப்புகளையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தது. இதேகாலப் பகுதியில் விக்னேஸ்வரன், ‘ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்கு நல்லது செய்கிறார். அவரைத்தான் ஆதரிப்பேன்' என்று அறிக்கைவிட்டார். பின்னர் ரணில் ஏமாற்றிவிட்டார் என்று சொன்னார். திடீரென பொதுவேட்பாளர் விவகாரம் தொடர்பில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினார். அது தொடர்பில் அறிக்கைகள் விடுத்தார். இந்த விவகாரத்தை முன்னெடுத்த தரப்புகளுடன் எந்தவொரு சந்திப்பையும் நடத்தாமல் தான்தோன்றித்தனமாக விக்னேஸ்வரன் விடயங்களைக் கையாள்கின்றார். இது தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரத்தை எதிர்க்கும் தரப்புகளுக்கு வாய்ப்பாக அமைந்திருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு கோரப்பட்ட பின்னர் தமிழ்ப்பொதுவேட்பாளர் யார் என்பதைப் பகிரங்கப்படுத்தலாம். விக்னேஸ்வரன் பொறுமை காக்கவேண்டும். இலங்கையிலுள்ள தமிழ்மொழி பேசும் அனைவரும் ஆதரிக்கக்கூடிய ஜனரஞ்சகமான தலைவர் ஒருவராக இருக்கவேண்டும். அப்படிப்பட்டண்டும். ஒருவரையே தமிழ்ப்பொதுவேட்பாளராக களமிறக்க வேண்டும். தமிழ்ப்பொதுவேட்பாளர் என்பது ஒரு அரசியல் தீர்மானம். எப்படி வட்டுக்கோட்டைத் தீர்மானம் காலம் கடந்தும் நிலைத்து நிற்கின்றதோ அதே போன்று தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரமும் அமையவேண்டும். நாடு முழுவதிலிருந்தும் ஆகக் குறைந்தது 15 லட்சம் வாக்குகளையாவது அவர் திரட்டிக்கொள்ளக் கூடியவராக இருக்கவேண்டும். முஸ்லிம் மற்றும் மலையக சமூகங்களின் அரசியல் தலைவர்கள் தென்னிலங்கை தரப்புகளுடன் ஒட்டிக் கொண்டிருந்து அமைச்சுப் பதவியை பெறுபவர்கள். அவர்கள் எந்தளவு தூரம் பொதுவேட்பாளர் விவகாரத்துடன் ஒத்துழைத்துச் செயற்படுவார்கள் என்பது கேள்விக்குறியானது. இவ்வாறான சூழலில் அனைத்துத் தரப்புகளுடனும் அவதானமாகவும் - நிதானமாகவும் கலந்துரையாடல் நடத்தவேண்டும். அதைவிடுத்து விக்னேஸ்வரன் போல, மின்னஞ்சலில் போதிய அவகாச மின்றி அழைப்பு அனுப்பிவிட்டு கலந்துரையாடல் நடத்த கூடாது. விக்னேஸ்வரன் தலைமை தாங்கிய எந்தவொரு விடயமும் நேர்சீராக நடைபெறவில்லை. மாகாண சபையாக இருக்கலாம் அல்லது தமிழ்மக்கள் பேரவை என்ற சிவில் அமைப்பாக இருக்கலாம் அல்லது அவரது கட்சியாக இருக்கலாம். எங்குமே அவர் ஒரே கொள்கையோடு இயங்காமையால் கடைசியில் அவையெல்லாமே குழப்பத்துக்குள் சிக்கி, செயற்றிறனை இழந்ததைக் கண்முன்னே பார்த்தோம். அப்படிப்பட்ட ஒருவர் தனது அவசரத்தனமான நடவடிக்கைகளால் தீர்க்கமான அரசியல் முடிவை குழப்பியடித்துவிடக்கூடாது என்பதே மக்களின் ஆதங்கம். (16. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/அவசரத்தனங்களும்_குழப்பங்களும்...
    • இலங்கையில் தமிழர்களுக்கு மாத்திரமல்லாமல் முஸ்லிம்களுக்கும் தாய்மொழி தமிழ்தான். இதனாலேயே தமிழர்களையும் முஸ்லிம்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் தந்தை செல்வா ஈடுபட்டார். இதனால் 'தமிழ்பேசும் மக்கள்' என்ற சொல்லை தந்தை செல்வா பாவிக்கத்தொடங்கினார். இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொட்டு இரு தரப்பு அரசியல்வாதிகளும் தமிழ் முஸ்லிம் ஒற்றுமை பற்றிப் பேசி வருகின்றனர். தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளும் பல விட்டுக்கொடுப்புகளைச் செய்து தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை கட்டியெழுப்ப அன்றிலிருந்து இன்று வரை பாடுபட்டு வருகின்றனர். ஆனால் முஸ்லிம்களோ மொழிரீதியான பிணைப்பைக் கணக்கிலேயே எடுப்பதில்லை. அவர்கள் எப்போதுமே தம்மைத் தனியான இனமாக முன்னிறுத்துவதிலும், தமது நலன்களைப் பெற்றுக்கொள்வதிலுமே கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். ஒரு சிறுபான்மை இனம் என்ற அடிப்படையில், முஸ்லிம்கள் தமது நலன்களை முன்னுரிமைப்படுத்திச் செயற்படுவதில் எவ்விதத் தவறுமில்லை என்று தமிழர்கள் கடந்துசென்றுவிடலாம். ஆனால், ஒரே மொழியைப்பேசிக்கொண்டு, சகோதர இனம் என்று சொல்லிக்கொண்டு, தமிழர்களை ஒடுக்கும் செயற்பாடுகளை முஸ்லிம்கள் மேற்கொள்வதைத்தான் ஜீரணிக்க முடியாமல் இருக்கின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் கல் முனையில் முஸ்லிம்கள் தமிழர்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும் செயற்பாடுகளை காலாதிகாலமாக மேற்கொண்டு வருகின்றனர். இதனால் கல்முனைத் தமிழர்கள் சாட்சிக்காரனின் காலில் வீழ்வதை விட சண்டைக்காரனின் காலில் வீழ்வதே மேல் என்ற நிலைப்பாட்டுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இலங்கைத்தீவை நிர்வகிப்பதற்கு 256 பிரதேச செயலர் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த 256 பிரதேச செயலகங்களின் ஊடாக அந்தந்தப் பிரதேசத்துக்குரிய மக்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். இப்படிப்பட்டநிலையில், கல்முனைப் பிரதேச செயலர் பிரிவில் முஸ்லிம் பிரதேச செயலர்களே தொடர்ச்சியாக நியமிக்கப்பட்டு வந்தனர், வருகின்றனர். இவர்கள் முஸ்லிம்களுக்குச் சார்பாக நடந்து கொள்வதாக தமிழர்கள் தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டி வந்தனர். இதனால் கல்முனை பிரதேச செயலர் பிரிவு 1989 ஆம் ஆண்டு முஸ்லிம் பிரிவு, தமிழ்ப் பிரிவு என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இவ்வாறு கல்முனைப் பிரதேச செயலர் பிரிவு இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது முஸ்லிம் பிரதேச செயலர் பிரிவு முழு அதிகாரத்துடன் செயற்படத் தொடங்கியது. தமிழ்ப் பிரிவுக்கு முழுமையான அதிகாரங்களை வழங்க விடாமல் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆட்சியாளர்களுக்கு சிங்களவர்கள் அழுத்தம்கொடுத்தனர், இப்போதும் அதே அழுத்தத்தைக் கொடுத்து வருகின்றனர். கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகம் 'உதவி அரசாங்க அதிபர் பிரிவு' என்றே இன்றுவரை அழைக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் அதன் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையை உள்ளார்ந்தமாக உணரலாம். தமிழ்ப் பிரிவுக்குரிய காணி, நிதி போன்ற விடயங்கள் முஸ்லிம் பிரிவின் கீழேயே உள்ளன. இலங்கை அரசியலில் பௌத்த பிக்குகள் தான் தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகின்றனர். அப்படியிருந்தும் ஞானசார தேரராலோ, சுமணரத்ன தேரராலோ கல்முனை தமிழ் பிரதேச செயலர் பிரிவை தரமுயர்த்த முடியவில்லை.சுமணரத்ன தேரர், ஞானசாரதேரர் ஆகியோரை விட முஸ்லிம் அரசியல்வாதிகளின் செல்வாக்கு கொழும்பு அரசியலில் கூடுதலான தாக்கம் செலுத்துகிறது என்பதே யதார்த்தம். கல்முனைப் பிரதேச செயலக தமிழ்ப் பிரிவை பூரண அதிகாரமுள்ள பிரதேச செயலகமாக தரமுயர்த்தக்கோரி கடந்த 35 வருடங்களாக கல்முனைத் தமிழர்கள் பல்வேறு சாத்வீகப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். எனினும் இன்றுவரை கல்முனை தமிழர்களுக்கு நீதி கிட்டவில்லை. இந்த வருடமும் தமிழ்ப் புத்தாண்டை கல்முனைத் தமிழர்கள் கரிநாளாக அனுஷ்டித்தனர். இந்த நிமிடம் வரை கொட்டும் மழைக்கு மத்தியிலும் கல்முனைத் தமிழர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இறுதியாக நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தில் கூடுதலான ஆசனங்களைப் பெற்றிருந்தும், கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸுக்கு தாரைவார்த்துக்கொடுத்தது. கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டதும் முதலமைச்சர் அஹமட் நஷீர் ‘வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு தான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்' என்று அறிக்கைவிட்டு, தமிழர்களின் அடிப்படைக்கோரிக்கையையே நிராகரித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் பதவிக்கு வந்த முதலமைச்சரான நஷீர் யுத்தம் நடைபெற்ற காலத்திலும் யுத்தம் முடிந்த பின்னரும் தமிழர்களுக்கு கிடைக்கவேண்டிய வேலை வாய்ப்புகள், உயர்கல்வி வசதிகள் போன்றவற்றை தமிழ்மொழியை பேசுகின்ற காரணத்தால் முஸ்லிம்கள் தட்டிப்பறித்து வருகின்றனர் என்றொரு குற்றச்சாட்டு பொதுவாக உண்டு. ஆனால், ஒரு பிரதேச செயலகத்தைக் கூட தரமுயர்த்த அனுமதிக்காமல், இன்னொரு சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளைக் கூடவா தட்டிப்பறிப்பார்கள்? தமிழ் அரசியல்வாதிகள் தீர்க்கமான ஒரு முடிவெடுக்கவேண்டிய தருணம் வந்து விட்டது. தமிழ் - முஸ்லிம் ஒற்றுமை என்றைக்கும் இருக்கத்தான் வேண்டும். ஆனால் அதைச் சொல்லிச் சொல்லியே முஸ்லிம்கள் எல் லாவற்றையும் பறித்தெடுக்க, நாம் மட்டும் இலவு காத்த கிளிகளாக ஏமாந்து கொண்டே இருக்கிறோம். இனியும் அவ்வாறான விட்டுக்கொடுப்புகளுக்கு இடமளிக்காமல், முதலில் தமிழர் நலன் அதன்பின்னரே தமிழ்-முஸ்லிம் ஒற்றுமை என்ற நிலைப்பாட்டுக்கு தமிழ்மக்களும், தமிழ் அரசியல்வாதிகளும் வரவேண்டும். அப்போதுதான் எஞ்சியவற்றையாவது இழக்காமல் காக்க முடியும். (17. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/இனநலனா!_ஒற்றுமையா!!!
    • முடிவாய் ரணிலையும் விடுறதாக இல்லை , அவர் பணக்கார வீட்டு  பிள்ளை , சந்து பொந்தெல்லாம் போகாமலா  இருந்திருப்பார் . பழம் இருக்கிறவன் அதன் சுவையை ருசிக்கிறான் ....அம்புட்டுதான் 
    • என்ன இது எங்க போனாலும் கொழுவி இழுக்க பார்க்கிறிங்க.  சுமா வை பற்றி தெரியும் என்றால் ஏன் கோத்திரத்தை அப்படி என்று எடுக்கிறீர்கள்.  என்ன பொறுத்தவரை உயர்ந்த குலமா அப்படியா இல்லையா என்பதல்ல ஏன் ஆதங்கம். பொறுக்கித்தனம் செய்பவனை பொறுக்கி என்பதுபோல தான் இது.  தப்பான பழக்கங்களை செய்கின்ற ஆள் தப்பான குலம் அவ்வளவு தான். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.