Jump to content

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான போராட்டத்துக்கு ஆதரவு கோரல்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான போராட்டத்துக்கு ஆதரவு கோரல்!

DiDUTTcXkAApsIu-960x640.jpg?189db0&189db0

 

ஆகஸ்ட் 30ம் திகதியன்று, சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு வடக்கு – கிழக்கில் கவனயீர்ப்பு முன்னெடுக்கவுள்ள போராட்டங்களுக்கு ஆதரவு வழங்குமாறு வவுனியா மாவட்டக் காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தின் தலைவி சண்முகம் சரோஜினி தெரிவித்தார்.

வவுனியாவில் தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும்,

“வடக்கில், யாழ். பஸ் நிலையத்தில் ஆரம்பமாகும் பேரணி, யாழ். மாவட்டச் செயலகம் வரை சென்று, அங்கு எ ஐ.நாவுக்குக் கையளிப்பதற்கான மகஜரை வழங்கவுள்ளோம்.

அதேபோன்று கிழக்கில் கல்லடி பாலத்தில் இருந்து காந்தி பூங்கா வரை சென்று அங்கும் மகஜரொன்று கையளிக்கவுள்ளோம்.

எமது போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு மூன்றரை வருடங்கள் முடிவடைந்துவிட்டது. இருந்தும் எமது பிள்ளைகளுக்கான முடிவுகள் இன்னும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் கட்சி பேதமின்றி எமது உறவுகளை கேட்டு நிற்கும் எமக்காக குரல் கொடுங்கள்” – என்றார்.

 

https://newuthayan.com/காணாமல்-ஆக்கப்பட்டோருக-4/

 
 
 

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான மாபெரும் போராட்டம் 30ம் திகதி நடைபெறவுள்ளது!

எதிர்வரும் 30.08.2020 அன்று சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு வடக்குக் கிழக்கில் இராணுவம் மற்றும் துணை இராணுவக் குழுவினரால் கைது செய்யப்பட்டும், கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மற்றும் யுத்த முடிவில் சரணடைந்த மற்று உறவினர்களால் கையளிக்கப்பட்ட பின்னர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த கவனயீர்ப்புப் போராட்டம் மற்றும் பேரணிகளுக்குத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பூரண ஆதரவை அறிவித்துள்ளது.

மேற்படி போராட்டங்களுக்கு அனைத்து பொது அமைப்புக்களையும், பொது மக்களையும் ஆதரவு வழங்குமாறும் குறித்த கட்சியனரால் கோரப்பட்டுள்ளது.

 

https://newuthayan.com/காணாமல்-ஆக்கப்பட்டோருக-3/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான போராட்டத்துக்கு விக்கினேஸ்வரன் அணியும் ஆதரவு!

 

 

InShot_20200824_142243730-960x960.jpg?189db0&189db0

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சர்வதேச தினத்தன்று (30.08.2020) வடக்கு கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் நடாத்தப்படும் கவனயீர்ப்புப் போராட்டம் மற்றும் பேரணிகளுக்கு தமிழ் மக்கள் தேசிய கூட்டணி முழுமையான ஆதரவைத் தெரிவித்துக் கொள்வதாக அறிவித்துள்ளது.

தமிழ் தேசிய மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் விடுத்துள்ள செய்தியில்,

“பௌத்த சிங்கள பேரினவாத அரசாங்கம் நாட்டில் அசூர பலத்துடன் ஆட்சி அமைத்துள்ள நிலையில் தமிழ் மக்கள் தமக்கு எதிராக இழைக்கப்பட்ட இனப்படுகொலைக்கான நீதியைப் பெற்றுக்கொள்ளும் போராட்டங்களை தீவிரப்படுத்த வேண்டிய அவசியமான ஒரு நிலைமை  ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், எதிர்வரும் 30ம் திகதி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சர்வதேச தின போராட்ட நிகழ்வுகள் முக்கியத்துவம் பெறுகின்றன. 

சர்வதேச சுயாதீன விசாரணை ஒன்று நடத்தப்படும்போது தான் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி கிடைப்பது  சாத்தியமாகும். அதனால், சர்வதேச சுயாதீன விசாரணை ஒன்றுக்கான ஏற்பாடுகளை சாத்தியமான எல்லா வழிகளையும் பயன்படுத்தி மேற்கொள்ளுமாறு ஐ.நா மற்றும் சர்வதேச சமூகம்  ஆகியவற்றை வலியுறுத்தி நடத்தப்படும் இந்த போராட்டங்களில் பொது அமைப்புக்கள் மற்றும் பொது மக்களை முழுமையான ஆதரவு வழங்குமாறு அன்புடன் வேண்டிக் கொள்கின்றோம்.” – என்றார்.

https://newuthayan.com/காணாமல்-ஆக்கப்பட்டோருக-5/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போராட்டத்திற்கு ஆதரவு தருமாறு கோரிக்கை விடுக்கும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்

 

எமக்கான நீதியைப் பெறுவதற்கு சர்வதேசம் கூடிய கவனம் செலுத்த வேண்டும் என்பதை மக்களாகிய நீங்கள் சர்வதேசத்திற்கு உறுதிபடத் தெரிவிக்க எமது போராட்டத்துக்கு ஆதரவு தாருமாறு காணாமல் ஆக்கபட்டோரின் உறவுகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இது தொடர்பில் ஆக்கபட்டோரின் உறவுகள் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

எதிர்வரும் 30 ஆம் திகதி (30/08/2020) சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமாகும். எமது உறவுகள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டு 11 வருடங்கள் கடந்துவிட்டன.

உயிருடனே கையளிக்கப்பட்ட, சரணடைந்த,கடத்தப்பட்ட, கூட்டிச் செல்லப்பட்ட, கைது செய்யப்பட்ட எமது உறவுகளின் நிலையை அறிவதற்கும், அதற்கான நீதியைக் கேட்டும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளாகிய நாம் 20.02.2017 இலிருந்து தொடர் கவனயீர்ப்பு போராட்டங்களை  கிளிநொச்சி, முல்லைத்தீவு, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் நடாத்தி வருகின்றோம்.

எமக்கான நீதியை நல்லாட்சி என்று கொண்டுவரப்பட்ட மைத்திரியின் அரசு வழங்கும் என்று சர்வதேசம் கண்மூடித்தனமாக நம்பியதால் 30/1 தீர்மானத்தை நிறைவேற்றவென கால நீடிப்புகளை வழங்கி இழுத்தடித்ததில் எம்முடன் போராடிய 72 உறவுகளை இழந்துவிட்டோம்.

தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்ததும் 30/1 தீர்மானத்துக்கு வழங்கிய அனுசரணையிலிருந்து விலகி தமிழர்களுக்கு நீதி வழங்கப் போவதில்லை என்பதைக் காட்டி விட்டது.

இந்நிலையில் எமக்கான நீதியைப் பெறுவதற்கு சர்வதேசம் கூடிய கவனம் செலுத்த வேண்டும் என்பதை மக்களாகிய நீங்கள் சர்வதேசத்திற்கு உறுதிபடத் தெரிவிக்க வேண்டிய தேவையுள்ளது.

எமது உறவுகள் “ ஒரு நாளாவது விடுதலைப் போராட்டத்துக்கு பங்களிப்புச் செய்திருந்தால் சரணடையுங்கள். புனர்வாழ்வளித்து விடுதலை செய்கிறோம்” என்று அரசு கூறியதை ஏற்று சரணடைந்ததால் காணாமல் ஆக்கப்பட்டவர்கள்.

உங்களின் உரிமைக்காக போராடுவதற்காக தமது இளமைக்காலத்தை அர்ப்பணித்தவர்களின் உறவுகளாகிய நாம் எமது பிள்ளைகளின் உயிருக்காகப் போராடி எமது உயிரையே விட்டுக்கொண்டு இருக்கின்றோம்.

எனவே எமக்கு நீதி கிடைப்பதற்காக சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான எதிருவரும் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு யாழ்ப்பாணத்தில் மத்திய பேரூந்து நிலையம் முன்பாக ஆரம்பித்து கச்சேரியடி வரையில் செல்லும் பேரணியிலும், மட்டக்களப்பில் கல்லடிப் பாலத்திலிருந்து காந்தி பூங்கா வரை செல்லும் பேரணியிலும் கலந்து கொள்ளுமாறு உங்கள் அனைவரையும் இருகரம் கூப்பி வேண்டுகின்றோம்.

அன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமையாதலால் அனைத்துப் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வி சாரா ஊழியர்கள்,பல்கலைக்கழக மாணவர்கள், விரிவுரையாளர்கள், மதகுருமார்கள், பொது அமைப்புக்கள், சட்டத்தரணிகள்,வர்த்தகர்கள் ,வர்த்தக ஊழியர்கள், ஆட்டோ சாரதிகள், தனியார் போக்குவரத்துப் பணியாளர்கள், விளையாட்டு கழகங்கள், சனசமூகநிலையங்கள், அனைத்தத் தொழிற்சங்க அங்கத்தவர்கள், பொதுமக்கள் , தேசியத்தை அவாவும் அனைத்துக் கட்சிகளும் அவர்களுக்கு வாக்களித்த பெருமக்களும் எமக்கு ஆதரவு தந்து எமது போராட்டத்தை சர்வதேசத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என அன்புரிமையுடன் கேட்டு நிற்கின்றோம். உங்கள் ஆதரவுடன் நாம் இலங்கை விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லுமாறு ஐநாவைக் கோருவதன் மூலமாக எமது உறவுகளுக்கான நீதியைப் பெறவேண்டும். நாமும் இறந்துபோகமுன் எமக்கான நீதி வேண்டும் இதுவே எமது கடைசி ஆசை என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

5.jpg
 

 

https://www.virakesari.lk/article/88695

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் போராட்டத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு.

August 25, 2020

TNA1-1024x466.png

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் வடக்கு கிழக்கில் எதிர் வரும் 30 ஆம் திகதி  நினைவு கூறப்பட உள்ளதோடு, அன்றைய தினம் வடக்கு கிழக்கில் இடம் பெறவுள்ள போராட்டத்திற்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பு பூரண ஒத்துழைப்பை வழங்கும் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
இவ்விடையம் தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,,,
எதிர் வரும் 30 ஆம் திகதி சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை வடக்கு-கிழக்கில் 8 மாவட்டங்களை உள்ளடக்கி மாபெரும் கண்டன பேரணி ஒன்றை மேற்கொள்ள  வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.குறித்த போராட்டத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு பூரண ஒத்துழைப்பை வழங்கும்.

ஒவ்வொரு வருடமும் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் வடக்கு கிழக்கில் தமது உறவுகளை    நினைவு கூறுகின்றனர்.காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகள் கிடைப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் அவர்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

ஆனால் இது வரை அவர்களின் போராட்டத்திற்கு எவ்வித பலனும் கிடைக்கவில்லை. எனவே காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் அரசு உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.
தீர்வு கிடைக்கும் என்று நம்பி உறவுகள் போராட்டங்களை வருடா வருடம் முன்னெடுக்கின்றனர். ஆனால் இது வரை உரிய பலன் கிடைக்கவில்லை.

எனவே நீதிக்காகவும், தமது உறவுகளுக்காகவும் எதிர் வரும் 30 ஆம் திகதி வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்படுகின்ற போராட்டத்திற்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பு பூரண ஒத்துழைப்பை வழங்கும்.
-எனவே பொது அமைப்புக்களும்,தமது பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.என அவர் மேலும் தெரிவித்தார்.  #காணாமல்ஆக்கப்பட்டோர் #போராட்டத்திற்கு #தமிழ்தேசியக்கூட்டமைப்பு #ஆதரவு.
 

https://globaltamilnews.net/2020/149231/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாமும் இறந்து போகும்முன் எமக்கான நீதிக்காக போராட வாருங்கள்

 

IMG-20200824-WA0043-960x720.jpg?189db0&189db0

எதிர்வரும் 2020.08.30ம் திகதி சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமானம் உலகளாவிய ரீதியில் பலராலும் அனுஷ்டிக்கப்படவுள்ளது. விசேடமாக தமிழ் மக்களுக்கு இந்நாள் துயரத்திலும் துயரமான நாளாகவே பார்க்கப்படுகின்றது.

இந்நாளை அனுஷ்டிக்கும் முகமாகவும், இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் சர்வதேசம் அதிகவனம் செலுத்தி உரிய தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்கு இலங்கை அரசிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் அன்றைய தினம் காலை 10.00 மணியளில் வடமாகாணம் தழுவிய ரீதியில் யாழ் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாகவிருந்து யாழ் கச்சேரியடி வரையிலும், கிழக்கு மாகாணம் தழுவிய ரீதியில் மட்டக்களப்பு கல்லடிப் பாலத்தில் இருந்து காந்தி பூங்கா வரையிலுமாக மாபெரும் கவனயீர்ப்புக் கண்டன பேரணியினை வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் ஏற்பாடு செய்துள்ளதாக அச் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவி அமலநாயகி தெரிவித்துள்ளார்.

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பேரணி தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

“எம்மால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இப்பேரணியில் அனைவரும் கலந்துகொண்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதுடன், அவர்களது அர்ப்பணிப்பில் பங்கெடுக்குமாறும் கேட்டுக்கொள்கின்றோம். அத்துடன் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பில் தற்போதைய அரசு எவ்விதமான கரிசனையும் கொள்ளாது என்பது அனைவரும் அறிந்த விடயம் அதனால் எமக்கான தீர்வினை சர்வதேசம் தலையீடு செய்து பெற்றுத் தருவதனை வலியுறுத்தும் முகமாக இப்பேரணியில் ஒன்றிணைந்து குரல்கொடுக்க வருமாறு அனைவரையும் தயவுடன் அழைக்கின்றோம்” என்றார்.

இது தொடர்பில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,

“அன்பான உறவுகளே, வருகின்ற 2020.08.30ம் திகதி சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமாகும். எமது உறவுகள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டு 11 வருடங்கள் கடந்து விட்டன. உயிருடனேயே கையளிக்கப்பட்ட, கடத்தப்பட்ட, கூட்டிச் செல்லப்பட்ட, கைது செய்யப்பட்ட எமது உறவுகளின் நிலைமையை அறிவதற்கும், அதற்கான நீதியைக் கேட்டும், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளாகிய நாம் 2017.02.20 இலிருந்து தொடர் கவனயீர்ப்புப் போராட்டங்களை கிளிநொச்சி, முல்லைத்தீவு, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் நடத்தி வருகின்றோம்.

எமக்கான நீதியை நல்லாட்சி என்று கொண்டு வரப்பட்ட மைத்திரியின் அரசு வழங்கும் என்று சர்வதேசம் கண்மூடித்தனமாக நம்பியதால் 30/1 தீர்மானத்தை நிறைவேற்றவென கால நீடிப்புகளை வழங்கி இழுத்தடித்ததில் எம்முடன் போராடிய 72 உறவுகளை இழந்துவிட்டோம். தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்ததும் 30/1 தீர்மானத்துக்கு வழங்கிய அனுசரணையில் இருந்து விலகி தமிழர்களுக்கு நீதி வழங்கப் போவதில்லை என்பதைக் காட்டிவிட்டது.

இந்நிலையில் எமக்கான நீதியைப் பெறுவதற்கு சர்வதேசம் கூடிய கவனம் செலுத்த வேண்டும் என்பதை மக்களாகிய நீங்கள் உறுதிபடத் தெரிவிக்க வேண்டிய தேவையுள்ளது. எம்முடைய உறவுகள் ‘ஒருநாளாவது விடுதலைப் போராட்டத்திற்குப் பங்களிப்புச் செய்திருந்தால் சரணடையுங்கள் புனர்வாழ்வளித்து விடுதலை செய்கின்றோம்’ என்று சிங்கள அரசு கூறியதை ஏற்று சரணடைந்ததால் காணாமல் ஆக்கப்பட்டவர்கள். உங்களின் உரிமைக்காகப் போராடுவதற்காக தங்களது இளமைக் காலத்தை அர்ப்பணித்தவர்களின் உறவுகளாகிய நாம் எமது பிள்ளைகளின் உயிருக்காகப் போராடி எமது உயிரையே விட்டுக் கொண்டிருக்கின்றோம்.

எனவே எமக்கு நீதி கிடைப்பதற்காக சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான வருகின்ற ஞாயிற்றுக் கிழமை நடைபெறும் பேரணியிலும் கலந்து கொள்ளுமாறு உங்கள் அனைவரையும் இருகரம் கூப்பி வேண்டுகின்றோம்.

அன்றைய தினம் ஞாயிற்றுக் கிழமையாதலால் அனைத்துப் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், கல்விசார ஊழியர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், விரிவுரையாளர்கள், மதகுருமார்கள், பொது அமைப்புகள், சட்டத்தரணிகள், வர்த்தகர்கள், வர்த்தக ஊழியர்கள், ஆட்டோ சாரதிகள், தனியார் போக்குவரத்தப் பணியாளர்கள், விளையாட்டுக் கழகங்கள், சனசமூக நிலையங்கள், அனைத்துத் தொழிற்சங்க அங்கத்தவர்கள், பொதுமக்கள், தேசியத்தை அவாவும் அனைத்துக் கட்சிகளும், அவர்களுக்கு வாக்களித்த பெருமக்களும் எமக்கு ஆதரவு தந்து எமது போராட்டத்தை சர்வதேசத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என அன்புரிமையுடன் கேட்டு நிற்கின்றோம்.

உங்கள் ஆதரவுடன் நாம் இலங்கை விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லுமாறு ஐ.நாவைக் கோருவதன் மூலமாக எமது உறவுகளுக்கான நீதியை பெறவேண்டும். நாமும் இறந்து போகும்முன் எமக்கான நீதி வேண்டும் இதுவே எமது கடைசி ஆசை” என்றுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் என்பவர்கள் யார்? ஜனாதிபதி பிரதமர் அமைச்சர்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். 

காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் எதிர்வரும் 30 திகதி  நடாத்தவுள்ள கண்டன ஆர்ப்பாட்ட ஊர்வலத்துக்கு அனைத்து தமிழ் மக்களும் இன, மத பேதமின்றி கலந்து கொள்ளுமாறு இன்று 26 யாழ் ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகசந்திப்பின் போது சுரேஷ் பிறேமச்சந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சியிலும் மாபெரும் போராட்டத்துக்கு அழைப்பு விடுப்பு!

North-East-Missing-Persons-Relations-Association.jpg?189db0&189db0

 

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கான அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

இந்தப் போராட்டம் எதிர்வரும் 30ம் திகதி நடைபெறவுள்ள நிலையில் போராட்டம் இடம்பெறும் நேரத்தில் ஒரு மணிநேர கதவடைப்பு செய்து தமது போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அந்த அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

கிளிநொச்சியில் இன்று (28) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே குறித்த அமைப்பினால் இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதன்போது மேலும்,

“பல்வேறு சந்தர்ப்பங்களில் போராட்டங்களை முன்னெடுத்துவந்த எமது தாய்மார்கள், இலங்கை அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இழந்து நிற்கின்றனர். எமது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்று அறியாதவர்களாய் பல தாய்மார்கள் உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறான நிலையில் இலங்கை அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இழந்துள்ளோம். அதனாலேயே நாங்கள் சர்வதேசத்தை நம்பியுள்ளோம். சர்வதேசமே இலங்கை அரசாங்கத்தின் மீது விசாரணை மேற்கொண்டு எமக்கான நீதியை பெற்றுத்தர வேண்டும்.

சர்வதேசத்திடம் நீதி கேட்பதற்காக எதிர்வரும் 30ம் திகதி வடக்கு கிழக்கில் மாபெரும் போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. குறித்த போராட்டங்களுக்கு வலுச்சேர்க்கும் வகையில் வர்த்தகர்கள், பொது அமைப்புக்கள், பல்கலைக்கழக மாணவர்கள் என பல்வேறு தரப்பினரும் எமக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக காலை 9.30 மணிக்கு பேரணி ஆரம்பமாகி பேருந்து நிலையம் வரை சென்று முடிவடையவுள்ளது. குறித்த நேரத்தில் ஒரு மணிநேரம் வர்த்தகர்கள் தமது கடைகளை மூடி எமக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அழைக்கின்றோம்” – என்று தெரிவிக்கப்பட்டது.

https://newuthayan.com/கிளிநொச்சியிலும்-மாபெரு/

 

மன்னாரிலும் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்துக்கு அழைப்பு!

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் நாளான 31ம் திகதி வடக்கு, கிழக்கு தழுவிய மாபெரும் போராட்டங்களை முன்னெடுக்க வலிந்து காணாமல் ஆக்கபட்டோரின் உறவினர்களின் அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி மன்னாரில் அன்றைய தினம் மன்னார் பிரதேச செயலகம் முன்னால் காலை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதேவேளை வடக்கில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவிலும் கவனயீர்ப்பு போராட்டங்கள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.

கிழக்கில் மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களிலும் போராட்டங்கள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

அறிக்கை
 

https://newuthayan.com/மன்னாரிலும்-மாபெரும்-கவன/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாம் இறப்பதற்கு முன்னதாகவேனும் எமது உறவுகளுக்கு நீதி வேண்டும் – வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம்

leelavthi.jpg

 

நாம் இறப்பதற்கு முன்னதாகவேனும் எமது உறவுகளுக்கு நீதி வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் உள்ளவர்கள் தமது உறவுகளை நினைத்தும்,  எமது ஏக்கத்தை உணர்ந்தவர்களாக அனைவரும் எமது போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என உரிமையுடன் கேட்டு நிற்கிறோம் என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அதன் முழு வடிவம் வருமாறு:

வடக்கு கிழக்கில்  வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிய போராட்டம் அவர்களது உறவுகளால் கடந்த 2010 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. இலங்கை அரசால் குறித்த போராட்டத்துக்கு தீர்வு தரப்படாத நிலையில், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவுகள் இணைந்து கடந்த 2017 ஆம் ஆண்டு பெப்ரவரி 20 ஆம் திகதியில் இருந்து தொடர்போராட்டமாக ஆரம்பித்தோம். இந்த தொடர் போராட்டத்தின் மூலம் எமது நியாயமான கோரிக்கைகளையும் துன்பங்களையும் உலக நாடுகளுக்கு தெரியப்படுத்தி வருகிறோம்.

இந்த போராட்டம் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தொடர்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதும் , கடந்த 11 வருடங்களாக எமக்கான நீதி கிடைக்கவில்லை, மாறாக எமது போராட்டங்களை மழுங்கடிக்கக்கூடிய வகையிலான செயற்பாடுகளே தொடர்சியாக இடம்பெற்று வருகிறது.

புலனாய்வாளர்களின் தொடர்சியான விசாரணைகள் மற்றும் பல்வேறு அச்சுறுத்தல்கள் மத்தியிலும் நாம் எமது போராட்டத்தை தொடரும் இந்த நேரத்தில் எமது போராட்டத்தை சிதறடிக்கும் நோக்கோடும் பலர் செயற்படுவதனை காணக்கூடியதாக உள்ளது. எனவே மக்கள் இதனை சரியாக புரிந்து கொண்டு எமது போராட்டத்துக்கு வலுச்சேர்க்க வேண்டும்.

தொடர் போராட்டத்தின் மூலமே நாம் எமக்கான நீதியை பெற்றுக்கொள்ள முடியும். எமது கோரிக்கைகளை சர்வதேசத்துக்கு அழுத்திச் சொல்வதற்கு நாம் பலமாக அணிதிரள வேண்டும். எமக்குள் உள்ள கட்சி ரீதியான வேற்றுமைகளை இந்த சமயத்தில் அகற்றி பொதுவான எமது உறவுகளை தேடும் போராட்டத்தில் கலந்து கொள்ள அனைவரும் எம்முடன் இணைந்து கொள்ள வேண்டும்.

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டவர்களின்  தினம் எதிர்வரும் 30 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அனுஷ்டிக்கப்படுகிறது. அன்றைய தினத்தில் வடக்கிலும் கிழக்கிலும் வெளிநாடுகளிலும் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

யாழ்மாவட்டத்தில் காலை 10 மணிக்கு யாழ். பிரதான பேருந்து நிலையமுன்றலில் ஆரம்பிக்கும் போராட்டம் பேரணியாக யாழ் மாவட்டச்செயலகம் வரை செல்லவுள்ளது. , கிழக்கு மாவட்டத்தில் காலை 10 மணிக்கு கல்லடி பாலத்தில் ஆரம்பிக்கும் போராட்டம் பேரணியாக காந்தி பூங்காவரை செல்லவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் ஊடாக நாம் முன்னெடுத்து வருகிறோம். மேலும் வெளிநாடுகளில் இடம்பெறும் போராட்டங்களுக்கு எமது புலம்பெயர் உறவுகள் தமது ஆதரவை வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

தமது உறவுகளை தேடி தேடி ஏக்கத்துடன் இறந்த உயிர்கள் ஏராளம். இதுவரை 72 க்கு மேற்பட்ட உறவுகளை இழந்துள்ளோம். மீதமாகவுள்ள நாம் தொடர்சியாக போராடி வருகிறோம். நாம் இறப்பதற்கு முன்னதாகவேனும் எமது உறவுகளுக்கு நீதி வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் தமது உறவுகளை நினைத்தும் ,  எமது ஏக்கத்தை உணர்ந்தவர்களாக அனைவரும் எமது போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என உரிமையுடன் கேட்டு நிற்கிறோம்.

ஆ.லீலாதேவி
செயலாளர்
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம்

 

http://www.ilakku.org/நாம்-இறப்பதற்கு-முன்னதாக/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாளை வடக்கு – கிழக்கில் மாபெரும் போராட்டப் பேரணி!

received_285283048827716-960x679.jpeg?189db0&189db0

 

வடக்கு, கிழக்கில் கடந்த மூன்று ஆண்டுகளாக சுழற்சி முறையில் தொடர் போராட்டங்களை முன்னெடுத்துவரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சர்வதேச தினத்தை முன்னிட்டு நாளை (30) மாபெரும் கவனயீர்ப்பு போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளனர்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சர்வதேச தினத்தை முன்னிட்டு நாளை (30) பிரதானமாக வடக்கில் யாழ்ப்பாணம் பஸ் நிலையத்தில் இருந்து மாவட்ட செயலகம் வரையும், மட்டக்களப்பில் கல்லடிப் பாலத்தில் இருந்து காந்தி பூங்கா வரையும் காலை 10 மணி முதல் கவனயீர்ப்பு போராட்ட பேரணி முன்னெடுக்கப்படவுள்ளது.

இதில் கலந்துகொண்டு காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி கோரிக்கைக்கு வலுச்சேர்க்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

https://newuthayan.com/நாளை-வடக்கு-கிழக்கில்-மா/

அனைவரும் ஒன்றிணைந்து வாருங்கள்!

Thambirasa-Selvarani-Co-ordinator-of-the-Association-of-Missing-Persons-in-Ampara-District.jpg?189db0&189db0

 

பத்து வருடங்களாகியும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் வருகையை எதிர்பார்த்து 72 இற்கும் அதிகமானவர்கள் மரணித்துள்ள நிலையிலும் தமக்கான தீர்வு வழங்கப்படவில்லை என அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க இணைப்பாளர் த.செல்வராணி தெரிவித்துள்ளார்.

அம்பாறை – கல்முனையில் இன்று (29) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும்,

“உயிருடன் ஒப்படைக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை சர்வதேசம் எங்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் நாளை போராட்டம் ஒன்றினை வடக்கு கிழக்கில் மேற்கொள்ளவுள்ளனர்.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் இப்போராட்டத்தை குழப்புவதற்காக சில தரப்பினர் முயற்சிக்கிறார்கள்.

அம்பாறையில் பத்து வருடங்களாக நாங்கள் செயற்பட்டுவரும் நிலையில் இடம்பெறவுள்ள போராட்டத்தில் தங்களது பிள்ளைகள், தங்களது உறவுகளை இழந்தவர்கள் அனைவரும் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்” – என்றார்.

 

https://newuthayan.com/அனைவரும்-ஒன்றிணைந்து-வார/

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க கோரி யாழில் போராட்டம்!

20200829_153054-960x540.jpg?189db0&189db0

 

சிறைகளில் நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி யாழில் இன்று (29) போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று மாலை இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

யாழ். மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக ஒன்று திரண்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஆதரவாளர்கள், சிறைகளில் தடுத்து வைத்துள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி கோசங்களை எழுப்பினர்.

மேலும், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ‘விடுதலை செய் விடுதலை செய் அரசியல் கைதிகளை விடுதலை செய்’, ‘வன ஜீவராசிகள் திணைக்கள ஆக்கிரமிப்பை எதிர்ப்பது பயங்கரவாதமா?’, ‘கஞ்சா கடத்தலை தடுக்க முற்பட்ட உதயசிவம் பயங்கரவாதியா?’ போன்ற வாசகங்கள் எழுதிய பதாகைகளைத் தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

குறித்த போராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னையின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், முன்னணியின் உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காணமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் யாழ்ப்பாணத்தில் உணர்ச்சிகரமான போராட்டம்

1-3-2.png

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் யாழ்ப்பாணத்தில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.

உலகளாவிய ரீதியில் சர்வதேச காணாமலாக்கப்பட்டோர் தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிண்றது அந்த வகையில், இன்று காலை 11 மணிக்கு வடக்கு கிழக்கில் மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

அதற்கமைவாக வடமாகாணத்திற்கான மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கடந்த 2017 ம் ஆண்டு முதல் வடக்கு கிழக்கு எங்கும் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தமக்கான நீதி இதுவரை கிடைக்காததனையடுத்து தமது உறவுகள் தொடர்பாக நீதி வழங்குமாறு சர்வதேசத்திடம் வலியுறுத்தி இன்று வடக்கு, கிழக்கில் பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

அந்த வகையில் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமாகிய இன்று வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு அண்மையில் சற்று முன்னர் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை ஆரம்பித்து நடத்தினார்கள்.

http://www.ilakku.org/காணமல்-ஆக்கப்பட்டோரின்-உ/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 26/8/2020 at 01:56, உடையார் said:

நாமும் இறந்து போகும்முன் எமக்கான நீதிக்காக போராட வாருங்கள்

மிகுந்த துயரமும் மனவேதனையும் தருகின்ற வரிகள்.  

தாய்மாரே உறவுகளே மன்னித்துவிடுங்கள். நாங்கள் இன்னும் பதவிகள் பட்டங்கள் அடைந்து  தமிழரா தெலுங்கரா மலையாளியா   வேடரா சிங்களவரா என்று   கண்டுபிடித்துவிட்டுத்தான் போராடுவோம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் அமைப்பின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில் மாபெரும் கவனயீர்ப்புப் பேரணி

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் அமைப்பின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில் மாபெரும் கவனயீர்ப்புப் பேரணி முன்னெடுக்கப்பட்டது.வடக்கு கிழக்கு மாகாணம் தழுவிய ரீதியில் இன்று போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், கிளிநொச்சி இடம்பெற்ற போராட்டத்தில் 500இற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டிருந்ததுடன் பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.இதேவேளை, கிளிநொச்சியில் இன்றைய திடம் இடம்பெற்ற போராட்டத்தில் மக்கள் பிரதிநிதிகள் எவரும் கலந்துகொண்டிருக்கவில்லை.

இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் பேரணியாக ஏ-9 வீதியூடாக கிளிநொச்சி மாவட்டச் செயலகம் வரை சென்று, அங்கு கவனயீர்ப்பில் ஈடுபட்டதுடன் பல்வேறு கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.இதன்போது, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மைக்கேல் பச்லெட் ஜெரியாவிற்கு மகஜர் ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.குறித்த பேரணி, இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக ஆரம்பிக்கப்பட்டது.(15)123

 

 

http://www.samakalam.com/செய்திகள்/வடக்கு-கிழக்கு-வலிந்து-க-2/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மட்டகளப்பிலும் பேரணி சாணக்கியன் தலைமையில் பொலிசாரின் தடையையும் மீறி உத்வேகமாக நடந்தது.

மட்டகளப்புத்தானே என்று ஊடகங்கள் அதை செய்தியாகமல் விட்டதோ அல்லது, இங்கே இணத்தவர்கள் இணைக்காமல் விட்டார்களோ தெரியவில்லை. 

https://www.meenagam.com/?p=13374
 

597E1B0A-71B7-4DDE-BA77-56D0A47683E7.jpe

மட்டக்களப்பு நீதிமன்ற தடையினையும் மீறி பொலிஸாரின் தடையினையும் உடைத்து மட்டக்களப்பில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டம் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் இருந்து சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினத்தினை முன்னிட்டு இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை மாபெரும் பேரணிக்கு வடக்கு கிழக்கு மாகாண வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் சங்கம் ஏற்பாடுகளை செய்திருந்தது.

இது தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டோர் உறவுகளினால் மட்டக்களப்பு பொலிஸார் மற்றும் சுகாதார பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டிருந்ததுடன் அனைவரும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி பேரணியில் கலந்துகொள்வது எனவும் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரினால் குறித்த பேரணிக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்று ஊடாக தடையுத்தரவு கோரப்பட்டு தடையுத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று காலை கல்லடிப் பாலத்திற்கு அருகில் குறித்த பேரணியில் கலந்துகொள்ளச்சென்ற மக்களை அங்கிருந்து செல்லுமாறு மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் அச்சுறுத்தல்களை விடுத்தபோதிலும் கல்லடி பாலத்திற்கு அருகில் திரண்ட பெருமளவான மக்கள் ஊர்வலம் செல்ல முயற்சித்தபோதிலும் பொலிஸார் அவற்றினை தடுத்து நிறுத்தினர்.

இதன்போது, நீதிமன்ற தடையுத்தரவினை வாசித்துக் காட்டிய பொலிஸார் நீதிமன்ற தடையினை மீறி ஊர்வலம் சென்றால் கைதுசெய்யப்படுவார்கள் என எச்சரித்தனர்.

இங்கு கலந்துகொண்ட அம்பாறை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி த.செல்வராணியை கைதுசெய்யும் முயற்சியை அங்குவந்திருந்த மக்கள் தெரிவித்த கடும் எதிர்ப்பு காரணமாக கைவிடப்பட்டது.

விடுதலைப்புலிகள் மீள் எழுச்சி பெறுவார்கள் என்று கூறி தமது போராட்டத்திற்கு தடையுத்தரவு வாங்கப்பட்டுள்ளதாகவும் விடுதலைப்புலிகளை அழித்ததாக மகிந்தராஜபகஷ கூறியுள்ள நிலையில் 60 வயதுக்கு மேற்பட்ட கிழவிகள் சேர்ந்தா விடுதலைப் புலிகளை மீள அமைக்கப்போகின்றோம் என்று பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல்ஆக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி த.செல்வராணி தெரிவித்தார்.

நாங்கள் எங்களின் கைகளினால் வழங்கப்பட்ட பிள்ளைகளையும் கணவன்மாரையும் எங்களிடம் மீண்டும் ஒப்படையுங்கள் என்றே போராடுகின்றோம் எனவும் அவர் இதன்போது பொலிஸாரிடம் தெரிவித்தார்.

இதேநேரம், கலகம் அடக்கும் பொலிஸாரும் பெருமளவான பொலிஸாரும் கல்லடி பாலத்திற்கு அருகில் குவிக்கப்பட்டிருந்ததுடன் கல்லடி பாலத்திற்கு அருகில் இருந்த புனித செபஸ்தியார் ஆலயத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஒன்றுகூடியிருந்ததுடன் இதில் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், மனித உரிமைகள் ஆர்வலர்கள், அரசியல்வாதிகள், இளைஞர் கழக உறுப்பினர்கள் என பெருந்திரளானோர் குறித்த தேவாலயப்பகுதியில் திரண்டிருந்தனர்.

இதன்போது, தேவாலய வாசல்கதவுகளை மூடப்பட்டதுடன் பேரணி செல்லாத வகையில் அப்பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் அங்குவந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களுடன் கலந்துரையாடினார். இதன்போது, உறவுகள் எந்த செயற்பாடுகளை மேற்கொண்டாலும் தன்னால் ஆதரவு வழங்கமுடியும் எனத் தெரிவித்தார்.

இதன்போது, தேவாலயத்தில் இருந்து மக்கள் பேரணியாக செல்லமுற்பட்டபோது பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டு தேவாலயத்தின் முன் வாயில் கதவு பொலிஸாரினால் மூடப்பட்டது. இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் பொலிஸாருடன் கடுமையான வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டதுடன் நீதிமன்ற தடையுத்தரவு மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் தலைவி அமலநாயகிக்குத்தான் வழங்கப்பட்டுள்ளது.

எனக்கு வழங்கப்படவில்லையெனத் தெரிவித்து பொலிஸாரையும் தள்ளியபடி வாயில் கதவினை வலுக்கட்டாயமாக திறந்து வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களின் பேரணியை நடத்திச்சென்றார்.

இதன்போது, பல இடங்களில் பேரணியை பொலிஸார் தடுக்கமுற்பட்டபோதும் கலகமடக்கும் பொலிஸாரைக் கொண்டும் பேரணியை தடுக்கமுற்பட்டபோது பேரணி உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது.

மேலும், மட்டக்களப்பு பிரதான வீதி, புகையிரத வீதியுடாகச் சென்று தாண்டவன்வெளி சந்தி ஊடாக சென்று திருமலை வீதியுடாக காந்திபூங்கா வரை பேரணி சென்று அங்கு போராட்டம் இடம்பெற்றது.

விடுதலைப் புலிகளையும் கொரோனாவினையும் காரணம் காட்டி தமது போராட்டத்தினை மழுங்கடிக்கும் செயற்பாடுகளை இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துவருவதாக வலிந்து காணாமல்ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.

இதன்போது, ஐக்கிய நாடுகள் சபைக்கு வழங்கப்படுவதற்கான மகஜர் ஒன்று மட்டக்களப்பு மறை மாவட்ட குரு முதல்வர் ஏ.தேவதாசனிடம் வலிந்துகாணாமலாக்கப்பட்டோர் உறவுகளின் அமைப்பின் கிழக்கு மாகாண பிரதிநிதிகளினால் வழங்கிவைக்கப்பட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பு நீதிமன்ற தடையினையும் மீறி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம்

Batti-30-8-2020-2-696x392.jpg

 

மட்டக்களப்பு நீதிமன்ற தடையினையும் மீறி பொலிஸாரின் தடையினையும் உடைத்து மட்டக்களப்பில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டம் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் இருந்து சர்வதேச வலிந்து காணாமல்ஆக்கப்பட்டோர் தினத்தினை முன்னிட்டு இன்று காலை மாபெரும் பேரணிக்கு வடகிழக்கு மாகாண வலிந்து காணாமல்ஆக்கப்பட்டோர் உறவுகள் ஏற்பாடுகளை செய்திருந்தது.

இது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல்ஆக்கப்பட்டோர் உறவுகளினால் மட்டக்களப்பு பொலிஸார் மற்றும் சுகாதார பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டிருந்ததுடன் அனைவரும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி பேரணியில் கலந்துகொள்வது எனவும் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரினால் குறித்த பேரணிக்கு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்று ஊடாக தடையுத்தரவு கோரப்பட்டு தடையுத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

இன்று காலை கல்லடி பாலத்திற்கு அருகில் குறித்த பேரணியில் கலந்துகொள்ளச்சென்ற மக்களை அங்கிருந்து செல்லுமாறு மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் அச்சுறுத்தல்களை விடுத்தபோதிலும் கல்லடி பாலத்திற்கு அருகில் திரண்ட பெருமளவான மக்கள் ஊர்வலம் செல்ல முயற்சித்தபோதிலும் பொலிஸார் அவற்றினை தடுத்து நிறுத்தினர்.

Batti-30-8-2020-3.jpgஇதன்போது நீதிமன்ற தடையுத்தரவினை வாசித்து காட்டிய பொலிஸார் நீதிமன்ற தடையினை மீறி ஊர்வலம் சென்றால் கைதுசெய்யப்படுவார்கள் என எச்சரித்தனர்.

இங்கு கலந்துகொண்ட அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல்ஆக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி த.செல்வராணியை கைதுசெய்யும் முயற்சியை அங்குவந்திருந்த மக்கள் தெரிவித்த கடும் எதிர்ப்பு காரணமாக கைவிடப்பட்டது.

Batti-30-8-2020-1.jpgவிடுதலைப்புலிகள் மீள் எழுச்சி பெறுவார்கள் என்று கூறி தமது போராட்டத்திற்கு தடையுத்தரவு வாங்கப்பட்டுள்ளதாகவும் விடுதலைப்புலிகளை அழித்ததாக மகிந்தராஜபகஸ் அவர்கள் கூறியுள்ள நிலையில் 60வயதுக்கு மேற்பட்ட கிழவிகள் சேர்ந்தா விடுதலைப்புலிகளை மீள அமைக்கப்போகின்றோம் என்று இங்கு பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல்ஆக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி த.செல்வராணி தெரிவித்தார்.

நாங்கள் எங்களின் கைகளினால் வழங்கப்பட்ட பிள்ளைகளையும் கணவன் மாரையும் எங்களிடம் மீண்டும் ஒப்படையுங்கள் என்றே போராடுகின்றோம் எனவும் அவர் இதன்போது பொலிஸாரிடம் தெரிவித்தார்.

இதேநேரம் கலகம் அடக்கும் பொலிஸாரும் பெருமளவான பொலிஸாரும் கல்லடி பாலத்திற்கு அருகில் குவிக்கப்பட்டிருந்ததுடன் கல்லடி பாலத்திற்கு அருகில் இருந்த புனித செபஸ்தியார் ஆலயத்தில் வலிந்து காணாமல்ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஒன்றுகூடியிருந்ததுடன் இதில் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள்,மனித உரிமைகள் ஆர்வலர்கள்,அரசியல்வாதிகள,இளைஞர்கழக உறுப்பினர்கள் என பெருந்திரளானோர் குறித்த தேவாலயப்பகுதியில் திரண்டிருந்தனர்.

இதன்போது தேவாலய வாசல்கதவுகளை மூடிய பொலிஸார் அவர்கள் பேரணியை செல்லாத வகையில் அப்பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் அங்குவந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுடன் கலந்துரையாடினார்.இதன்போது உறவுகள் எந்த செயற்பாடுகளை மேற்கொண்டாலும் தன்னால் ஆதரவு வழங்கமுடியும் என தெரிவித்தார்.

இதன்போது தேவாலயத்தில் இருந்து மக்கள் பேரணியாக செல்லமுற்பட்டபோது பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டு தேவாலயத்தின் முன் வாயில் கதவு பொலிஸாரினால் மூடப்பட்டது.இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் பொலிஸாருடன் கடுமையான வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டதுடன் நீதிமன்ற தடையுத்தரவு மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல்ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் தலைவி அமலநாயகிக்குத்தான் வழங்கப்பட்டுள்ளது.எனக்கு வழங்கப்படவில்லையென தெரிவித்து பொலிஸாரையும் தளியபடி வாயில் கதவினை வலுக்கட்டாயமாக திறந்து வலிந்து காணாமல்ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் பேரணியை நடாத்திச்சென்றார்.

இதன்போது பல இடங்களில் பேரணியை பொலிஸார் தடுக்கமுற்பட்டபோதும் கலகமடக்கும் பொலிஸாரைக்கொண்டும் பேரணியை தடுக்கமுற்பட்டபோது பேரணி உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது.

இதன்போது மட்டக்களப்பு பிரதான வீதியுடாக புகையிரத வீதியுடாக சென்று தாண்டவன்வெளி சந்தி ஊடாக சென்று திருமலை வீதியுடாக காந்திபூங்காவரையில் வந்த வலிந்து காணாமல்ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விடுதலைப்புலிகளையும் கொரனாவினையும் காரணம் காட்டி தமது போராட்டத்தினை மழுங்கடிக்கும் செயற்பாடுகளை இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துவருவதாக வலிந்து காணாமல்ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இங்கு தெரிவித்தனர்.

இதன்போது ஐக்கிய நாடுகள் சபைக்கு வழங்கப்படுவதற்கான மகஜர் ஒன்று மட்டக்களப்பு மறை மாவட்ட குரு முதல்வர் ஏ.தேவதாசனிடம் வலிந்துகாணாமல்ஆக்கப்பட்டோர் உறவுகளின் அமைப்பின் கிழக்கு மாகாண பிரதிநிதிகளினால் வழங்கிவைக்கப்பட்டது.

இந்த கவன ஈர்ப்பு பேரணியில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன்,கோவிந்தன் கருணாகரம்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன்,சீ.யோகேஸ்வரன்,பா.அரியநேத்திரன்,தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் த.சுரேஸ்,மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் உட்பட பெருமளவானோர் கலந்துகொண்டனர்

http://www.ilakku.org/மட்டக்களப்பு-நீதிமன்ற-தட/

 

5 hours ago, goshan_che said:

மட்டகளப்பிலும் பேரணி சாணக்கியன் தலைமையில் பொலிசாரின் தடையையும் மீறி உத்வேகமாக நடந்தது.

மட்டகளப்புத்தானே என்று ஊடகங்கள் அதை செய்தியாகமல் விட்டதோ அல்லது, இங்கே இணத்தவர்கள் இணைக்காமல் விட்டார்களோ தெரியவில்லை. 

வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது மாதிரி பிரதேச வாத த்தை விதைக்க பார்க்கின்றீர்கள்🤔.

செய்தி யார் காண்கின்றார்களோ அதை இணைக்கலாம் தானே இப்படி ஒரு கருத்தை பதியாமல்🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருமலையிலும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான போராட்டம்!

sampanthan-pro.jpg?189db0&189db0

 

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்கள் தினமான இன்று (30) காலை திருகோணமலையிலும் அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்துக்கு முன்பாக தங்களது உறவுகளுக்காக நீதி வேண்டி, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.

இதில், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் திருகோணமலை மாவட்ட சங்கத்தின் தலைவி உள்ளிட்ட பலரும் உறவுகளுக்காக தங்களது அமைதியான போராட்டத்தை முன்னெடுத்தனர்.

குறித்த போராட்ட இடத்துக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் விரைந்து சென்று மக்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளமையும் குறிப்பிடதக்கது.

  • IMG-20200830-WA0030-1-1024x768.jpg?189db
  • sampanthan-pro2.jpg?189db0&189db0
 
 

பொலிஸாரின் தடையை உடைத்தெறிந்து மட்டு’வில் உணர்வெழுச்சி போராட்டம்

Missing-Persons-Relations-Protest-Batticalao-5-720x480-1.jpg?189db0&189db0

 

மட்டக்களப்பு நீதிமன்றத் தடையினையும் மீறி பொலிஸார் போட்டிருந்த தடையையும் உடைத்தெறிந்து மட்டக்களப்பில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் பேரணி உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

வலிந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் சர்வதேச தினத்தினை முன்னிட்டு இன்று (30) காலை மாபெரும் பேரணிக்கு வடக்கு கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது.

இது தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளினால் மட்டக்களப்பு பொலிஸார் மற்றும் சுகாதாரப் பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டிருந்ததுடன் அனைவரும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி பேரணியில் கலந்துகொள்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

இந்நிலையில் மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸாரினால் குறித்த பேரணிக்கு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்று ஊடாக தடையுத்தரவு கோரப்பட்டு தடையுத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

இந்தசூழலில் பேரணி நடத்துவதற்காக இன்று காலை கல்லடிப் பாலத்திற்கு சென்ற மக்களை அங்கிருந்து திரும்பிச்செல்லுமாறு மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் கோரியதுடன் மக்கள் ஊர்வலம் செல்வதற்கு முயற்சித்தபோது அதனைத் தடுத்து நிறுத்தினர்.

இதன்போது, நீதிமன்ற தடையுத்தரவினை வாசித்துக் காட்டிய பொலிஸார் நீதிமன்ற தடையினை மீறி ஊர்வலம் சென்றால் கைதுசெய்யப்படுவீர்கள் என எச்சரித்தனர்.

இதேநேரம், கலகம் அடக்கும் பொலிஸாருடன் பெருமளவான பொலிஸார் கல்லடிப் பாலத்திற்கு அருகில் குவிக்கப்பட்டிருந்த நிலையில் பாலத்திற்கு அருகில் இருந்த புனித செபஸ்தியார் ஆலயத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஒன்றுகூடினர்.

இதில் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், மனித உரிமைகள் ஆர்வலர்கள், அரசியல்வாதிகள், இளைஞர் கழக உறுப்பினர்கள் என பெருந்திரளானோர் திரண்டிருந்தனர்.

இதன்போது, தேவாலய வாசல்கதவுகள் மூடப்பட்டதுடன் பேரணி செல்லாத வகையில் அப்பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் அங்குவந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மக்களுடன் கலந்துரையாடியதுடன் உறவுகள் எந்த செயற்பாடுகளை மேற்கொண்டாலும் தன்னால் ஆதரவு வழங்கமுடியும் எனத் தெரிவித்தார்.

இதையடுத்து பேரணியை முன்னெடுக்னத் தீர்மானித்து மக்கள் பேரணியாகச் செல்லமுற்பட்டபோது பெருமளவான பொலிஸார் தேவாலயத்தின் முன் வாயில் கதவை அடைத்தனர்.

இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் பொலிஸாருடன் கடுமையான வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்ட நிலையில், பின்னர் பொலிஸாரையும் தள்ளியபடி வாயில் கதவினை வலுக்கட்டாயமாக திறந்து மக்களுடன் பேரணியை நடத்திச்சென்றார்.

இதன்போது, கலகமடக்கும் பொலிஸாரைக் கொண்டு பல இடங்களில் பேரணியை பொலிஸார் தடுக்கமுற்பட்டபோதும் பேரணி உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த பேரணி, மட்டக்களப்பு பிரதான வீதி மற்றும் புகையிரத வீதியூடாகச் சென்று தாண்டவன்வெளி சந்தி, திருமலை வீதியுடாக காந்திபூங்கா வரை சென்றதுடன் அங்கு போராட்டம் இடம்பெற்றது.

இதன்போது, ஐக்கிய நாடுகள் சபைக்கு வழங்கப்படுவதற்கான மகஜர் ஒன்று மட்டக்களப்பு மறை மாவட்ட குரு முதல்வர் ஏ.தேவதாசனிடம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் அமைப்பின் கிழக்கு மாகாண பிரதிநிதிகளினால் வழங்கிவைக்கப்பட்டது.

இதன்போது கருத்துத் தெரிவித்த உறவினர்கள், “விடுதலைப் புலிகளையும் கொரோனாவினையும் காரணம் காட்டி எமது போராட்டத்தினை மழுங்கடிக்கும் செயற்பாடுகளை இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துவருகிறது.

விடுதலைப் புலிகளை அழித்ததாக மகிந்த ராஜபக்ஷ கூறியுள்ள நிலையில் 60 வயதுக்கு மேற்பட்ட கிழவிகள் சேர்ந்து விடுதலைப் புலிகளை மீள அமைக்கப்போகின்றோமா?

நாங்கள் எங்களின் கைகளினால் வழங்கப்பட்ட பிள்ளைகளையும் கணவன்மாரையும் எங்களிடம் மீண்டும் ஒப்படையுங்கள் என்றே போராடுகின்றோம்” என தெரிவித்தனர்.

  • Missing-Persons-Relations-Protest-Battic
  • Missing-Persons-Relations-Protest-Battic
  • Missing-Persons-Relations-Protest-Battic
  • Missing-Persons-Relations-Protest-Battic
  • Missing-Persons-Relations-Protest-Battic
  • Missing-Persons-Relations-Protest-Battic
  • Missing-Persons-Relations-Protest-Battic
  • Missing-Persons-Relations-Protest-Battic
  • Missing-Persons-Relations-Protest-Battic
  • Missing-Persons-Relations-Protest-Battic
  • Missing-Persons-Relations-Protest-Battic
  • Missing-Persons-Relations-Protest-Battic
  • Missing-Persons-Relations-Protest-Battic
  • Missing-Persons-Relations-Protest-Battic
  • Missing-Persons-Relations-Protest-Battic
  • Missing-Persons-Relations-Protest-Battic
 
 

முல்லைத்தீவிலும் முன்னெடுக்கப்பட்டது போராட்டம்!

IMG_20200831_003309.jpg?189db0&189db0

 

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி இன்று (30) முல்லைத்தீவில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

சர்வதேச காணாமலாக்கப்பட்டோர் தினமான இன்று வடக்கு – கிழக்கு மாகாணங்களில் பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் இன்று காலை முல்லைத்தீவிலும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளினால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

  • IMG_20200831_003321.jpg?189db0&189db0
  • IMG_20200831_003256.jpg?189db0&189db0
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சியிலும் இடம்பெற்றது மாபெரும் போராட்டம்!

Missing-Persons-Relations-Protest-Kilinochchi-6-428x241-1.jpg?189db0&189db0

 

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் அமைப்பின் ஏற்பாட்டில் கிளிநொச்சியிலும் இன்று (30) மாபெரும் கவனயீர்ப்புப் போராட்ட பேரணி முன்னெடுக்கப்பட்டது.

குறித்த பேரணி, இன்று காலை 10 மணியளவில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக ஆரம்பிக்கப்பட்டது.

இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் பேரணியாக ஏ-9 வீதியூடாக கிளிநொச்சி மாவட்டச் செயலகம் வரை சென்று, அங்கு கவனயீர்ப்பில் ஈடுபட்டதுடன் பல்வேறு கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.

வடக்கு கிழக்கு மாகாணம் தழுவிய ரீதியில் இன்று போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், கிளிநொச்சி இடம்பெற்ற போராட்டத்தில் 500இற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டிருந்ததுடன் பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.

இதேவேளை, கிளிநொச்சியில் இன்றைய திடம் இடம்பெற்ற போராட்டத்தில் மக்கள் பிரதிநிதிகள் எவரும் கலந்துகொண்டிருக்கவில்லை.

இதன்போது, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மைக்கேல் பச்லெட் ஜெரியாவிற்கு மகஜர் ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

  • Missing-Persons-Relations-Protest-Kilino
  • Missing-Persons-Relations-Protest-Kilino
  • Missing-Persons-Relations-Protest-Kilino
  • Missing-Persons-Relations-Protest-Kilino
  • Missing-Persons-Relations-Protest-Kilino
  • Missing-Persons-Relations-Protest-Kilino
 
 

பிறிதொரு தரப்பால் யாழ் கிட்டு பூங்காவில் போராட்டம்!

a4.jpg?189db0&189db0

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களான பிறிதொரு தகுதியினரின் ஏற்பாட்டில் சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தினமான நேற்று (30) காலை 11 மணியளவில் யாழ்ப்பாணம் கிட்டுப் பூங்காவிலிருந்து போராட்ட பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இங்கு பேரணிக்கு முன்னதாக காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிவேண்டி போராடும் போது உயிரிழந்த தாய் மற்றும் தந்தையருக்கு ஈகைச் சுடரேற்றி மலரஞ்சலியுடன் அகவணக்கம் செலுத்தப்பட்டது.

குறித்த பேரணியானது யாழ்ப்பாணம் நல்லூர் – கிட்டுப் பூங்காவில் இருந்து ஆரம்பமாகி முத்திரைச்சந்தியை அடைந்து அங்கிருந்து நல்லூர் ஆலயத்தை அடைந்து கோவில் வீதியூடாக நாவலர் வீதியை அடைந்து பின் ஐநாவின் வதிவிட அலுவலகத்தை சென்றடைந்தது.

இனவழிப்பு தொடர்பில் சர்வதேச விசாரணையே வேண்டும், உள்நாட்டு பொறிமுறையில் நம்பிக்கை இல்லை, ஐநாவே தலையிடு, எங்கே எங்கே உறவுகள் எங்கே?, ஐநா அமைதிப்படை வரவேண்டும், தமிழர் தேசம் அங்கீகரிக்கப்பட வேண்டும் போன்ற பல்வேறு கோஷங்கள் உறவுகளால் எழுப்பப்பட்டது.

அங்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான பொறுப்புக் கூறல் மற்றும் நீதிக்கான அவசர தேவை கருதி யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் அலுவலகத்தினூடாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவைக்கு அறிக்கையொன்றும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளால் சமர்ப்பிக்கப்பட்டது.

குறித்த போராட்டத்தில் தமி்ழ் தேசிய மக்கள் முன்னணியின் எம்பிகள் இருவர் பங்கேற்றிருந்தனர்.

இதேவேளை வடக்கின் பிரதான போராட்டமான மாபெரும் பேரணி யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் அமைப்பின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

  • a8.jpg?189db0&189db0
  • a11.jpg?189db0&189db0
  • a16.jpg?189db0&189db0
  • a1.jpg?189db0&189db0
  • a18.jpg?189db0&189db0
  • a6.jpg?189db0&189db0
  • a3.jpg?189db0&189db0
  • a2.jpg?189db0&189db0
  • a5-1.jpg?189db0&189db0
  • a4.jpg?189db0&189db0
 
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் கற்றுக்கொடுத்த பாடம், ஐயா முதலே வந்து குந்திவிட்டார். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, உடையார் said:

 

 

வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது மாதிரி பிரதேச வாத த்தை விதைக்க பார்க்கின்றீர்கள்🤔.

செய்தி யார் காண்கின்றார்களோ அதை இணைக்கலாம் தானே இப்படி ஒரு கருத்தை பதியாமல்🙏

இதில் எங்கே வாழைப்பழம்? நேரடியாகவே சொல்லியுள்ளேன்.

யாழ்பாணத்தில், வடக்கில் நடந்த நிகழ்வுகள் பற்றி இணைத்து 24 மணத்தியாலமும் ஒரு நினைவூட்டலும் தேவை பட்டிருக்கிறது மட்டகளப்பு நிகழ்வுகளை இணைக்க.

யாழ் செய்திகளை இணைத்த சமயம் ஒரு நிமிடம், மட்டகளப்பில் என்ன நடந்தது? அங்கேயும் காணாமல் ஆக்கப்பட்டோர் உளரே என நினைத்திருந்தால் - மீனகத்தை எட்டி பார்திருந்தால் அதையும் போட்டிருக்கலாம்.

ஆனால் அப்படி ஒரு நினைவு எழவில்லை? ஏன்? ஏன்னென்றால் இதுதான் unconscious bias. Unconscious Jaffna-centric attitude. 

இச்சையின்றிய யாழ்மையவாதம்.

இதை சுட்டிகாட்டினால் என்னை பிரதேசவாதி என்கிறீர்கள். 

யாழ் மையவாததுக்கு எதிராக எப்படி எழுகிறேனோ அப்படியே பிரதேசவாததுக்கும் எதிராக நான் எழுதியுள்ளேன். பழைய திரிகளை போய் பாருங்கள்.

தயவு செய்து உங்கள் தனிபட்ட சறுக்கல்களை மூடி மறைக்க பிரதேசவாதத்தை, தமிழ் தேசியத்தை ஒரு போர்வையாக்காதீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

இதில் எங்கே வாழைப்பழம்? நேரடியாகவே சொல்லியுள்ளேன்.

யாழ்பாணத்தில், வடக்கில் நடந்த நிகழ்வுகள் பற்றி இணைத்து 24 மணத்தியாலமும் ஒரு நினைவூட்டலும் தேவை பட்டிருக்கிறது மட்டகளப்பு நிகழ்வுகளை இணைக்க.

யாழ் செய்திகளை இணைத்த சமயம் ஒரு நிமிடம், மட்டகளப்பில் என்ன நடந்தது? அங்கேயும் காணாமல் ஆக்கப்பட்டோர் உளரே என நினைத்திருந்தால் - மீனகத்தை எட்டி பார்திருந்தால் அதையும் போட்டிருக்கலாம்.

ஆனால் அப்படி ஒரு நினைவு எழவில்லை? ஏன்? ஏன்னென்றால் இதுதான் unconscious bias. Unconscious Jaffna-centric attitude. 

இச்சையின்றிய யாழ்மையவாதம்.

இதை சுட்டிகாட்டினால் என்னை பிரதேசவாதி என்கிறீர்கள். 

யாழ் மையவாததுக்கு எதிராக எப்படி எழுகிறேனோ அப்படியே பிரதேசவாததுக்கும் எதிராக நான் எழுதியுள்ளேன். பழைய திரிகளை போய் பாருங்கள்.

தயவு செய்து உங்கள் தனிபட்ட சறுக்கல்களை மூடி மறைக்க பிரதேசவாதத்தை, தமிழ் தேசியத்தை ஒரு போர்வையாக்காதீர்கள்.

நீங்கள் செய்வது அப்பட்டமான பிரதேசவாதம்தான் - எனென்றால் ஒன்றை விளங்கி கொள்ள முதல், இப்படி பதிகின்றீர்கள்.

கீழே உள்ள தளத்தில் போய் பாருங்கள்,

http://www.ilakku.org/

முதலில் போட்டது யாழில் நடந்த போராட்டம். அவற்களுக்கு மற்ற செய்திகள் போக முதல், யாழின் செய்தி கிடைத்திருக்கலாம். யாழின் செய்தி இணைத்தபின் எந்த செய்தியும் நான் இணைக்கவில்லை, நித்தா கொள்ள போய்விட்டேன்.

இதில் செய்திகள் இணைத்திருப்பது நானும் கிருபனும் - இப்ப சொல்லுங்கள் யாரை நினைத்து பதிவிட்டீர்கள் என்று.

இங்கு யாரும் பிரதேசத்தை வைத்து யாழில் செய்திகள் இணைப்பதில்லை.

நீங்கள்தான் இப்ப பல புதிய கோணங்களில் கிளறுகின்ற மாதிரி இருக்கு. 

நான் ஏதையும் மூடி மறைக்க தேவையில்லை, அப்படிப்பட்டவனுமில்லை

 நான் தந்து எடுத்து வளர்ப்பதும் மட்டகளப்பிலிருந்துதான்,  இன்னும் எடுக்க இருக்கின்றேன்.

கொரோணா கலத்தில் யாழ் இன்னுமொரு உறவுடன் இணைத்து உதவி செய்ததும் மட்டகளப்பிற்குதான், 02/09/20 நினைவுதினமாக சாப்பாடு கொடுக்கப்போவதும் மட்டகளப்பில்தான்....

ஒரு சிறு வட்டம்போட்டுவிட்டு எல்லாதையும் ஒரே மாதிரி எடை போடாதீர்கள்

 இந்த பிரதேச வாத த்தை கொஞ்சம் அடக்கி வாசியுங்கள், இப்ப சிதைந்து போயிருக்கு அதை இன்னும் சிதைக்க வேண்டாம், இப்படி நஞ்சூட்டி 🙏

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காணாமல் போனோர் ஊர்வலங்களில் கலந்து கொண்ட உறவுகளுக்கு பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதுசரி, இந்தப் போராட்டங்களில் கருணா அம்மானும், பிள்ளையானும், வியாழேந்திரனும், ஜெயனந்த மூர்த்தியும், டக்கிளஸும், அங்கஜனும் திலீபனும் செலுத்திய பங்களிப்பு என்ன? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருமலையில் இடம்பெற்ற நீதி கோரிய அமைதிப் போராட்டத்தில் சம்பந்தன் !

sampanthan-pro1.jpg

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்கள் தினமான இன்று (ஞாயிற்றுக்கிழமை) திருகோணமலையிலும் அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராட்டமொன்று இடம்பெற்றது.

திருகோணமலையில் உள்ள ஆளுனர் செயலகத்துக்கு முன்பாக தங்களது உறவுகளுக்காக நீதி வேண்டி, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.

இதில், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் திருகோணமலை மாவட்ட சங்கத்தின் தலைவி உள்ளிட்ட பலரும் உறவுகளுக்காக தங்களது அமைதியான போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த அமைதிவழி இடத்துக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் விரைந்து சென்று உரிய மக்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டமையும் குறிப்பிடதக்கது.

https://vanakkamlondon.com/world/srilanka/2020/08/82381/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ரஞ்சித் said:

அதுசரி, இந்தப் போராட்டங்களில் கருணா அம்மானும், பிள்ளையானும், வியாழேந்திரனும், ஜெயனந்த மூர்த்தியும், டக்கிளஸும், அங்கஜனும் திலீபனும் செலுத்திய பங்களிப்பு என்ன? 

அவைக்கு வாக்கு கேட்டவைக்கு.. போட்டவைக்கே வெளிச்சம். 

Link to comment
Share on other sites

2 hours ago, ரஞ்சித் said:

அதுசரி, இந்தப் போராட்டங்களில் கருணா அம்மானும், பிள்ளையானும், வியாழேந்திரனும், ஜெயனந்த மூர்த்தியும், டக்கிளஸும், அங்கஜனும் திலீபனும் செலுத்திய பங்களிப்பு என்ன? 

 

2 hours ago, nedukkalapoovan said:

அவைக்கு வாக்கு கேட்டவைக்கு.. போட்டவைக்கே வெளிச்சம். 

சாணக்கியனும் சம்பந்தனும் நிற்கிறார்கள். விக்னேஸ்வரனும் கஜேந்திரகுமாரும் நின்றதை காணவில்லையே?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காஸா போர்: ஐ.நா தீர்மானத்தால் இஸ்ரேல் தனிமைப்படுத்தப்படுகிறதா? அமெரிக்கா கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கட்டுரை தகவல் எழுதியவர், டேவிட் கிரிட்டன் பதவி, பிபிசி நியூஸ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் இஸ்ரேலுடனான போர் நிறுத்தத்திற்கான தற்போதைய முன்மொழிவை ஹமாஸ் நிராகரித்துள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. உடனடி போர் நிறுத்தம் கோரிய ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானம் 'சேதத்தை' ஏற்படுத்தியுள்ளது என்பதை இது காட்டுகிறது. பாலத்தீன ஆயுதக் குழுவின் ஏற்க முடியாத கோரிக்கைகளுக்கு இஸ்ரேல் அடிபணியாது என்று பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. காஸாவில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்றும், போரை நிறுத்தவும் ஹமாஸ் கோரிக்கை விடுத்துள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. அதேநேரம் இஸ்ரேலின் அறிக்கை கிட்டத்தட்ட எல்லா விஷயங்களிலும் தவறானது என்று அமெரிக்கா கூறியுள்ளது. திங்கட்கிழமை ஐ.நா. பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னதாகவே ஹமாஸின் அறிக்கை தயாரிக்கப்பட்டதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வலியுறுத்தியுள்ளார். ஹமாஸ் ராணுவப் பிரிவின் துணைத் தலைவர் மர்வான் இசா இரண்டு வாரங்களுக்கு முன்னர் நுசைரத் அகதிகள் முகாமின் சுரங்கப்பாதை வளாகத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதை உறுதி செய்திருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.   24 மணிநேரத்தில் 81 பேர் பலி பட மூலாதாரம்,REUTERS “உளவுத்துறை அறிக்கைகள் அனைத்தையும் நாங்கள் சரிபார்த்தோம். மார்வான் இசா வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்,” என்று இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்தார். இஸ்ரேல் தெரிவிப்பதில் தனக்கு 'நம்பிக்கை இல்லை என்றும் அந்த அமைப்பின் ராணுவத் தலைமை மட்டுமே இதுகுறித்து 'இறுதியாக ஏதாவது சொல்லும்' என்றும் ஹமாஸ் அரசியல் தலைவரான இஸாத் அல் ரிஷ்க் கூறுகிறார். இசா இந்தக் குழுவின் 'மூன்றாம் நிலையில் இருக்கும் தலைவர்' என்றும், அக்டோபர் 7ஆம் தேதி தெற்கு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் 'முக்கிய ஏற்பாட்டாளர்களில் ஒருவர்' அவர் என்றும் ரியர் அட்மிரல் ஹகாரி கூறியுள்ளார். இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில், 1,200 பேர் கொல்லப்பட்டனர், 253 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் காஸாவில் பதில் தாக்குதல் மேற்கொண்டது. காஸாவில் இதுவரை 32,400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 81 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக முட்டுக்கட்டை நிலவி வருகிறது. காஸாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் முதன்முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிராக இஸ்ரேல் கடும் எதிர்வினையைப் பதிவு செய்துள்ளது.   தீர்மானத்தில் ஹமாஸை கண்டனம் செய்வது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பின் போது அமெரிக்கா வாக்களிக்கவில்லை. இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக பிரிட்டன் உட்பட 14 பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் வாக்களித்தனர். போர் நிறுத்தம், மீதமுள்ள பிணைக் கைதிகளை நிபந்தனையின்றி விடுவித்தல் மற்றும் மனிதாபிமான உதவியை விரிவுபடுத்துதல் ஆகியவை இந்தத் தீர்மானத்தில் அடங்கும். இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியும் ராணுவ ஆதரவாளருமான அமெரிக்கா, அக்டோபர் 7 தாக்குதலுக்கு ஹமாஸை கண்டிக்கத் தவறிய தீர்மானத்தை விமர்சித்துள்ளது. இருப்பினும் இஸ்ரேலின் போர் முறைகள் தொடர்பாக அதிகரித்து வரும் கோபம் காரணமாக இந்தத் தீர்மானத்தின் மீது வாக்களிப்பதில் இருந்து அமெரிக்கா விலகிக் கொண்டது. ஆனால் அமெரிக்கா இந்தப் போரின் முக்கிய நோக்கங்களுக்கு முழு ஆதரவளிப்பதாகக் கூறியது. இந்த முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இஸ்ரேல், வாஷிங்டனுக்கான தனது தூதுக்குழுவின் பயணத்தை ரத்து செய்துள்ளது. காஸாவின் தெற்கு நகரமான ரஃபாவில் தரைவழித் தாக்குதலை நடத்துவதற்கான திட்டத்தைப் பற்றி விவாதிக்க தூதுக்குழு அங்கு செல்வதாக இருந்தது. தற்போது 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ரஃபாவில் தஞ்சமடைந்துள்ளனர். முழு அளவிலான தாக்குதல் மனித பேரழிவாக நிரூபிக்கப்படலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. பின்னர் ஹமாஸ் போர் நிறுத்த திட்டத்தை நிராகரித்து அறிக்கை வெளியிட்டது. அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தத்துடன் தோஹாவில் நடைபெற்ற மறைமுக பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தத் திட்டம் உருவானது. "நிரந்தர போர் நிறுத்தத்துடன்" காஸாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் முற்றிலுமாக வெளியேறவும், இடம்பெயர்ந்த பாலத்தீனியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவும் அழைப்பு விடுத்த தன் அசல் கோரிக்கையைத் தான் பற்றி நிற்பதாக ஹமாஸ் கூறியது. ஹமாஸின் நிலைப்பாடு, 'பேச்சுவார்த்தை மூலமான ஒப்பந்தத்தில் அதற்கு எந்த ஆர்வமும் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. கூடவே ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்தால் ஏற்பட்ட சேதத்தை உறுதிப்படுத்துகிறது,” என்று செவ்வாய்கிழமை காலை இஸ்ரேலிய பிரதம மந்திரி அலுவலகம் தெரிவித்தது. ஹமாஸின் திசை திருப்பும் கோரிக்கைகளை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ளாது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஹமாஸின் ராணுவ மற்றும் அரசாங்க திறன்களை அழித்தல், எல்லா பிணைக் கைதிகளையும் விடுவித்தல், காஸா, இஸ்ரேலிய மக்களுக்கு எதிர்கால அச்சுறுத்தலை ஏற்படுத்தாததை உறுதி செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய தனது போர் நோக்கங்களை இஸ்ரேல் தொடர்ந்து அடையும்," என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.   இஸ்ரேலின் பேச்சுவார்த்தைக் குழு திரும்பிவிட்ட செய்தி பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் இந்த விமர்சனங்களை நிராகரித்துள்ளார். "இந்த அறிக்கை கிட்டத்தட்ட எல்லா வகையிலும் தவறானது. பிணைக் கைதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு இது நியாயம் இல்லாதது" என்று அவர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறினார்.“செய்தி அறிக்கைகள் மூலம் ஹமாஸின் எதிர்வினை பற்றிய தகவல்கள் பகிரங்கமாயின. ஆனால் அவர்களது பதிலின் உண்மையான சாராம்சம் இதுவல்ல. இந்த எதிர்வினை ஐநா பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்புக்கு முன் தயாரிக்கப்பட்து, அதற்குப் பிறகு அல்ல என்று என்னால் கூற முடியும்,” என்றார் அவர். கத்தாரின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாஜித் அல்-அன்சாரி தோஹாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்படவில்லை, அவை தொடர்கின்றன என்றார். "பேச்சுவார்த்தைகளுக்கான கால அட்டவணை எதுவும் இல்லை. ஆனால் நாங்கள் எங்கள் கூட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம்," என்று அவர் கூறினார். ஆனால் 10 நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இஸ்ரேல் தனது பேச்சுவார்த்தைக் குழுவைத் திரும்ப அழைத்ததாக இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய ஊடகங்களும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையும் தெரிவித்துள்ளன. இரானுக்கு பயணம் மேற்கொண்ட ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா, இஸ்ரேல் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் தனிமையை எதிர்கொள்வதை ஐ.நா.பாதுகாப்பு சபையின் தீர்மானம் காட்டுவதாகத் தெரிவித்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஒரு வார கால போர் நிறுத்தத்தின் போது இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 240 பாலத்தீன கைதிகள் 105 இஸ்ரேலிய பிணைக் கைதிகளுக்கு ஈடாக விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் நிராகரித்த புதிய ஒப்பந்தம், ஆறு வாரங்களுக்கு போர் நிறுத்தத்தை முன்மொழிந்ததாகக் கூறப்படுகிறது. கூடவே 800 பாலத்தீன கைதிகளுக்கு ஈடாக ஹமாஸால் பிடிக்கப்பட்ட 40 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிப்பதும் இதில் அடங்கும். ஆனால் காஸாவில் போரில் தோல்வியை ஏற்கும் அறிகுறி இன்னும் தெரியவில்லை. சமீபத்திய இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் பல டஜன் பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரஃபாவின் புறநகரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஒன்பது குழந்தைகள் உட்பட குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக பாலத்தீன ஊடகங்களும் உள்ளூர் சுகாதார ஊழியர்களும் கூறுகின்றனர். முசாபா பகுதியில் உள்ள அபு நக்கீராவின் வீட்டில் டஜன் கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சம் அடைந்திருந்தனர் என்றும் கூறப்பட்டது. காஸா நகரில் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே வான்வழித் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக வடக்கு காஸாவில் உள்ள அபு ஹசிரா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தனர். கடந்த 24 மணிநேரத்தில் 60 இலக்குகளைக் குறிவைத்ததாகவும், 'பயங்கரவாத சுரங்கப்பாதைகள், பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ உள்கட்டமைப்புகள்' இதில் அடங்கும் என்றும் இஸ்ரேலிய ராணுவம் செவ்வாய்கிழமை காலை தெரிவித்தது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் 'அல்-ஷிஃபா மருத்துவமனை பகுதியில் துல்லியமான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.   மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும் போது 18 பேர் கொல்லப்பட்டனர் பட மூலாதாரம்,REUTERS கடுமையான சண்டை காரணமாக நோயாளிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் ஆபத்தில் இருப்பதாக பாலத்தீனர்கள் மற்றும் உதவிக் குழுக்கள் தெரிவித்துள்ளன. 175 'பயங்கரவாதிகள்' கொல்லப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது. வடக்கு காஸாவில் விமானத்தில் இருந்து போடப்பட்ட மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும்போது 18 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக காஸாவில் உள்ள ஹமாஸின் அரசு ஊடக அலுவலகம் செவ்வாயன்று கூறியது. உணவுப் பொட்டலங்களைச் சேகரிக்கும்போது 12 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். அதேநேரம் பொருட்களை எடுக்கும்போது ஏற்பட்ட ' கூட்ட நெரிசலில்' சிக்கி ஆறு பேர் இறந்தனர் என்று கூறப்பட்டது. இந்த அறிக்கையில் மேலதிக தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. திங்களன்று வடக்கு நகரமான பைட் லாஹியாவில் கடற்கரைக்கு அருகே ஏர் டிராப்பின் போது குறைந்தது ஒரு நபராவது நீரில் மூழ்கியதை வீடியோ காட்சிகள் காட்டின. திங்களன்று அமெரிக்க விமானம் வடக்கு காஸாவில் 18 மனிதாபிமான உதவிப் பொட்டலங்களைப் போட்டதாக பென்டகனை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் தெரிவித்தது. ஆனால் பாராசூட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவை தண்ணீருக்குள் விழுந்தன. ஆனால் யாரும் உயிரிழந்ததை உறுதிப்படுத்த முடியவில்லை. இஸ்ரேலிய பிணைக் கைதி யூரியல் பரூச் கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் ஹமாஸிடம் இருப்பதாகவும் இஸ்ரேலிய ராணுவம் அவரது குடும்பத்திடம் கூறியதாக பிணைக்கைதிகள் மற்றும் காணாமல் போன குடும்பங்களின் மன்றம் தெரிவிக்கிறது. 35 வயதான, இரண்டு பிள்ளைகளின் தந்தையான பரூச், அக்டோபர் 7ஆம் தேதி சூப்பர்நோவா இசை விழாவின் போது காயமடைந்தார். பின்னர் அவர் கடத்தப்பட்டார். அதே நேரத்தில் காஸாவில் ஒரு காவலர் துப்பாக்கி முனையில் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக நவம்பரில் விடுவிக்கப்பட்ட ஒரு பெண் பிணைக் கைதி நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார். நாற்பது வயதான அமித் சுசானா தான் சிறைப்பிடிக்கப்பட்ட போது பாலியல் வன்முறைக்கு ஆளானதாகத் தெரிவித்ததாக செய்தித்தாள் குறிப்பிடுகிறது. பிணைக் கைதிகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதற்கான தெளிவான மற்றும் உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், "அத்தகைய வன்முறை தொடரக்கூடும் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன," என்றும் இந்த மாதத் தொடக்கத்தில் ஐ.நா குழு கூறியது. https://www.bbc.com/tamil/articles/cv2y4zzp76mo
    • பெரிய‌வ‌ரே நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பெற்ற‌ ஓட்டு ச‌த‌ வீத‌ம் 6:75 8ச‌த‌வீத‌ வாக்கு எடுத்து இருந்தா அங்கிக‌ரிக்க‌ ப‌ட்ட‌ க‌ட்சியாய் மாறி இருக்கும்...............இது கூட‌ தெரிய‌ வில்லை என்றால் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் கொள்கை எப்ப‌டி தெரியும்...........சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளின் க‌ருத்தை வாசிப்ப‌தில் உங்க‌ளுக்கு எங்கையோ த‌னி சுக‌ம் போல் அது தான் குறுக்க‌ ம‌றுக்க‌ எழுதுறீங்க‌ள்😁😜..............
    • 😀..... மிக்க நன்றி. இல்லை, நான் இங்கு முந்தி எழுதவில்லை. இந்த மாதம் முதலாம் திகதி தான் நான் இங்கு இணைந்தேன். இது சத்தியமான உண்மை. ஆனால் பல வருடங்களாக களத்தை வாசித்து வருகின்றேன்.
    • Courtesy: Mossad   இவ்விரு கருத்துருவாக்கங்களும் தற்கால இலங்கைத் தமிழ் அரசியல்ச் சூழலில் சுமந்திரன் என்ற தமிழரசுச் கட்சியின் முக்கிய பிரமுகருக்கு உரித்துடையவை. இருபதாம் நூற்றாண்டின் இறுதிக் காலப்பகுதிகளில் மென் வலு என்ற கருத்துடைவாத வார்த்தை ஜோசப் நையலினால் பிரபலப்படுத்தப்பட்டாலும் இருபத்தியோராம் நூற்றாண்டில் சர்வதேச உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும், கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்கப்படும் ஒரு நியாயப்படுத்தல் பதமாக மாறி முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது. இவ் வார்த்தைப்பதமானது அரசியலில் பிரயோகிக்கப்படும் சந்தர்ப்பத்தில் குறித்த தளத்திற்கு ஒரு கொள்கைப் பிரகடனத்தின்பால் இறமையுடன் செயற்படும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசாக அமைந்திருக்க வேண்டும். அரசுக்கு மாத்திரமே ராஜதந்திர நடவடிக்கைகள் மற்றும் நகர்வுகளை மேற்கொள்ள முடியும். பூகோள அரசியலின் நகர்வுகளுக்கு அமைவான நகர்வுகளை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட இலக்கினை அடைவதற்காக மேற்கொள்ள முடியும். வெவ்வேறுபட்ட இரு வேறு நிலைப்பாட்டை உடைய அதிகார இறமைத் தளங்கள் தான் ஒன்றின் மீது மற்றொன்று மென்வலுவைப் பிரயோகிக்க முடியும். தொடர்தேர்ச்சியாக கால ஓட்டத்திற்கு அமைவாக மாற்றம்பெறும் தேவைகளை அடைவதில் பிரயோகிக்கப்படும் நெகிழ்ச்சியைக் குறிக்கும் ஒரு பதமாக மென்வலுப்பிரயோகம் என்பது அர்த்தப்படுத்தப்பட முடியும்.   அரசியலில் மென் வலுவைப் பிரயோகத்திற்கு உட்படுத்துவதற்கு இறமையுடைய மக்கள் ஆணையைப்பெற்ற ஒரு தளம் இன்றியமையாதது. அத் தளத்தின் இலக்குகள் மற்றும் தேவைகள் என்பன கால மாற்றத்திற்கு உட்பட்டவைகளாகவும் காலத்திற்கு காலம் மாறிகளாகவும் காணப்படுதல் அவசியமானது. கட்சிகள் மென்வலுவைப் பாவிக்க முடியுமா என்றதொரு ஆழமான கேள்விவரும் நிலையில், ஒரு நாட்டுக்குள் இருக்கும் கட்சிகள் இயல்பான நிலையில் ஒன்றுடன் ஒன்று மென்வலுவில் அணுக முடியாது. ஒரு கட்சி தன்னுடன் சம பயணத்தில் இருக்கும் பிறிதொரு கட்சியுடன் மென்வலுவில் அணுகுகின்றது என்றால் அணுகப்படும் கட்சியை விடவும் அணுகும் கட்சி மிகவும் நெய்மையான நிலையில் இருப்பதையும் கொள்கைகள் குன்றி வீரியம் குறைந்து வழியற்ற நிலையில் பிறிதொரு நிலைப்பாடுடைய கட்சியை தனது நலனுக்காக ஆதரிக்கின்றது என்ற கருத்து மேலோங்கலும், அணுகும் கட்சிக்கு கொள்கைகள், கோட்பாடுகள் என்பன நிலையானதாக இருக்க முடியாது என்பதையும் வெளிப்படுத்துவதாக அமையும். தமிழரசுக்கட்சியில் மென்வலு அரசியல் முன்னெடுப்புக்கள் தொடர்பில் பேசும்போது சுமந்திரனைத் தவிர்த்து ஒருவிடயங்களையும் பேச முடியாது. காரணம் தமிழரசுக் கட்சியில் மென்வலு அரசியலின் பிதாமகர் சுமந்திரனே ஆவர். தமிழரசுக் கட்சியானது அல்லது அன்றைய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பானது மென்வலு அரசியல் பிரயோகத்தினை இலங்கையின் அரசாங்கத்துடன் மேற்கொண்டிருந்தது. இங்கே தான் விடயச் சிக்கல்கள் உருவாகின்றது. இலங்கை அரசுடன் யாருக்கு மென்வலு நகர்வை மேற்கொள்ள முடியும்? இரு தரப்பும் வென்று அரசு அமைக்கும் ஒரே நோக்கத்திற்காக தேர்தலில் போட்டியிடுகின்றார்கள், ஒவ்வொரு கட்சியும் கூட்டணியும் தனித்துவமான தங்களது பண்புகளைக் கூறி வாக்குச்சேகரிக்கின்றார்கள். ஒரு தரப்பினர் ஆட்சியமைக்கின்றார்கள், மற்றைய தரப்புக்கள் எதிர்த்தரப்பு ஆகின்றார்கள். எதிர்த்தரப்பு ஆன தழிழரசுக்கட்சி அல்லது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆளுந்தரப்புடன் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் பொருத்திக்கொள்ளும் இணக்கங்களுக்கு மென்வலு அணுகுமுறை என அர்த்தம் கற்பிப்பதை விடவும் டக்ளஸ் தேவானந்தாவின் கட்சி அமைக்கப்பட்ட அரசாங்கத்துடன் இணைந்து இணக்க அரசியல் என்ற பதத்தினை பாவித்துக்கொண்டு பயணிப்பது நேர்மையானதும் உண்மையானதும் ஆகின்றது.   அரசியல் கட்சிகள் மென்வலு அரசியலைப் பிரயோகிப்பதை தெளிவாக வரையறுப்பதாயின், தேர்தலில் விஞ்ஞாபன ரீதியாக முன்வைக்கப்பட்ட விடயதானங்களை அப்பட்டமாக மீறி வாக்களித்த வாக்காளர்களையும் கட்சியின் தொண்டர்களையும் ஏமாற்றி அவ் வாக்குக்களால் ஆட்சியேறிய வேட்பாளர்கள் சுயதேவைக்காக தீர்மானங்களை மாற்றி அவற்றிற்கு அர்த்தம் கற்பிக்க பிரயோகிக்கும் ஒரு கவசவாய்க்கியமே மென்வலு என வரையறுக்கலாம். தமிழரசுக் கட்சி யார்மீது மென்வலு பிரயோகித்திருக்க முடியும்? ஒரு கட்சி தன்னுடைய கொள்கைகள், கோட்பாடுகள் மற்றும் பிரகடனங்களுடன் இணங்கிப்போகின்ற நிலையுடன் ஏதோ ஒரு பொது சிந்தனைக்காக இணைந்துள்ள ஒரு கட்சியுடன் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிக் கூட்டணியுடன் ஒரு நெகிழ்ச்சித் தன்மையான அணுகு முறைகளை கையாள முனைவதுதான் மென்வலு அணுகுமுறையாகும். மாறாக கட்சிகள் என்ற நிலையில் இருந்து ஆட்சியாளர்களானபின்னர் அது அரசாங்கம் என அழைப்படும். இவ்வாறு அரசாங்கத்துடன் மென்வலு அணுகுமுறை என கூறி ஒட்டிக்கொள்வது நிபந்தனைகள் அற்ற ஆதரவு என்பதே நிதர்சனமானது. இதற்கு பிரதியுபகாரமாக ஆட்சியாளர்கள் தங்களை தக்கவைப்பதற்காக இவ்வாறான கட்சிகளுக்கு பல சலுகைகளை வழங்கவோ அல்லது மென்வலுதாரர்கள் பெற்றுக்கொள்ளவோமுடியும். தமிழரசுக் கட்சியானது தான் அடங்கு கூட்டமைப்பாக உள்ள ஏனைய கட்சிகளுடனோ அல்லது கூட்டணிகளுடனோதான் மென்வலு அணுகுமுறையைக் கையாள முடியும். சற்று ஆழமாக நோக்கின் தமிழ் தேசிய கூட்டமைப்பில் காணப்படும் அங்கத்துவ கட்சிகளுடன் தமிழரசுக் கட்சி மென்வலுவைப் பிரயோகிக்க வேண்டுமே அன்றி அரசாங்கத்துடன் அல்ல என்பது மாத்திரமே யதார்த்தமாக உள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆரம்பத்தில் அகில இலங்கைத் தமிழ் மக்கள் காங்கிரஸ் தொடக்கம் ஈற்றில் ரெலோ, புளொட் வரைக்கும் மென்வலுவின் தோல்வி காரணமாகவே சிதைந்து சென்றன என்பதை யாரும் மறுக்க முடியாது. இவ் அனைத்து சிதைவுகளிலும் ஒற்றுமைத்தன்மையான விடயமாக காணப்படுவது வெளிச்சென்ற அத்தனை கட்சிக்காரர்களது கைகளும் காட்டிய காரணகர்த்தா சுமந்திரன் மாத்திரமே. இவ்வாறான நிலையில் இலங்கை அரசாங்கத்துடன் தமிழ்தேசிய கூட்டமைப்பு மேற்கொண்ட இணக்க அரசியலை மென்வலு அணுகுமுறை என சுமந்திரன் தரப்பு விளிப்பது வேடிக்கைக்குரிய கருத்தாடல் ஆகின்றது. தமிழரசுக் கட்சி தான் அடங்கிய மற்றும் முன்னிலையில் இருந்த கூட்டணியில் கட்சிகளுக்கு இடையே உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும,; கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்க வேண்டிய மென்வலு அணுகுமுறையை தவற விட்டு தமிழ் மக்களது தரப்பின் அரசியல் ஸ்திரத்தினை அடியோடு சாய்த்துவிட்டது என்ற பழியை எவ்வகையிலும் கடந்துசெல்ல முடியாது. இவ் அனைத்து கைங்கரியங்களும் தனியே சுமந்திரன் என்றதொரு ஒற்றை அரசியல்வாதியை மாத்திரமே நேரடியாகச் சாருகின்றன. மறுபுறம் இவற்றிற்கு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காது அனுமதித்த தமிழரசுக் கட்சியின் ஏனைய கட்சி உறுப்பினர்களையும் மௌமாக அனுமதித்தது, அல்லது இடையூறுகள் மேற்கொள்ளாது துணைபுரிந்தது என்ற வகையில் தவறானவர்கள் ஆக்குகின்றது. அவசியமான இடத்தில் பிரயோகிக்கத் தவறிய மென்வலுவை தங்களது சுயதேவை நிகழ்சிநிரல் நிறைவேற்றங்களுக்காக பாவிக்கப்பட்டதா? என்ற கேள்விக்கு தமிழரசுக் கட்சியின் 2024 கட்சித்தலைவர் போட்டி தேர்தல் வரைக்கும் சென்றதும் அதில் ஒரு வேட்பாளராக சுமந்திரன் முன்னிலைப்பட்டதற்குமுரிய அடிப்படை நடவடிக்கைத் தொடர்புகள் பற்றி சற்றே சிந்திக்கவேண்டியுள்ளது. சுமந்திரனின் ஆதரவுத் தளத்தில் உள்ள தமிழரசுக் கட்சிக்காரர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர், மாகாண சபை உறுப்பினர் மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளை வழங்குவதாயின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற சாம்பார் வாளியில் இருந்து தமிழரசுக் கட்சி என்ற கரண்டியை வெளியே எடுக்கவேண்டிய தேவை சுமந்திரனுக்கு பல ஆண்டுத் திட்டமிடலில் இருந்திருக்கின்றது என்ற விடயம் புலப்படுகின்றது.   ஆக மென்வலு என்பதற்குரிய வரைவிலக்கணத்தினை வினயமாக பாவித்து காரியமாற்றப்பட்டிருந்தால் தழிழர் தரப்பின் அரசியல் இன்னும் ஒரு படி முன்னகர்ந்து இருக்க வேண்டும். இங்கே மாறாக தமிழர் அரசியல் சுக்குநூறாகக் காணப்படுகின்றது. தமிழர் தரப்பின் எதிர்காலம் தொடர்பில் தெளிவான எந்தவொரு நடைமுறை அரசியல் நோக்கமும் தமிழ் தரப்பில் உள்ள அரசியல் கட்சிகளிடம் இல்லை. இவற்றுக்கு அப்பால் குறைந்தபட்சம் தமிழர்தரப்பு ஒற்றுமைகூட இல்லை. இருந்த ஒற்றுமையையும் சீர்குலைத்த சிறப்பு சுமந்திரனை மட்டுமே சார்ந்ததாக கடந்தகால செயற்பாடுகள் காண்பிக்கின்றன. மேலும், மென்வலுற்கு கிடைத்த பிரதியுபகாரமாக அமைச்சரவை அந்தஸ்துக்கு ஒப்பான வசதி வாய்ப்புக்களுடன் நல்லாட்சிக் காலத்தில் சுமந்திரன் நாடாளுமன்ற உறுப்பினராக வலம்வந்தார். உணர்வுமிக்க வாக்காளர்களுக்கு தனது செயற்பாடுகள் மீது நியாயம் கற்பிக்க கையாண்ட கவச வாய்க்கியமே மென்வலுவாக அர்த்தம்கொள்ளப்பட்டுள்ளது. மக்களது அங்கீகாரத்தில் அதிகாரத்தில் இருக்கும் அத்தனை அரசியல்வாதிகளும் எண்ணவேண்டும் தங்களது செயற்பாடுகளுக்குரிய அங்கீகாரம் பொதுவாக்காளர்ப் பெருமக்கள் போட்ட பிச்சையே அன்றி தங்கள் தங்களுக்குரிய ஆளுமைகள், ஆற்றல்கள் மற்றும் திறன்களால் கிடைக்கப்பெற்றவைகள் அல்ல என்றும், அலரி மாளிகையில் பருகும் ஒருகோப்பை விசேட அதிதிகளுக்கான தேனீர் கூட உங்களுக்கு உரியவைகள் அல்ல அது மக்களது ஆணைக்கு உரியவைகள் என்பதை தெளிவாக உணரவேண்டும். அலரி மாளிகையில் அதிகூடிய விசேட அதிதிகளுக்குரிய தேனீர் பருகிய முதல்நிலைத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் என்றால் இன்றுவரையான காலப்பகுதியில் சுமந்திரன் மட்டுமே முன்னிலை வகிக்கின்றார். தாங்கள் செய்ய வேண்டிய கருமம் என்ன என்பதை குறைந்தபட்சம் அறியாத அல்லது பின்பற்றாத அரசியல் தலைமைகள் தமிழ் மக்களது உரிமை மற்றும் வாழ்வியல் மேலும் மேலும் சிக்கல்ப்பட கோடரிக் காம்புகளாக வலம் வருவார்களே அன்றி மீட்டார்கள் இல்லை என்ற வாதத்தினை மீணடும் உறுதிசெய்து செல்கின்றது சுமந்திரனின் மென்வலு பிரயோகம். உட்கட்சி ஜனநாயகம் என்ற பதம் தமிழரசுக் கட்சிக்குள் யாப்பிற்கு புறநீங்கலாகவும், எழுபது வருடங்களுக்கு மேற்பட்ட கால ஓட்டத்தில் இருக்காத ஒரு தத்துவமாகவும் 2024 தழிழரசுக்கட்சித் தலைவர் தெரிவிற்கான போட்டியில் இருந்து சுமந்திரன் வெளியிட்டுவரும் ஒரு நாகரீகக் கருத்தாக அமைந்திருக்கின்றது. உட்கட்சியின் தீர்மானங்கள் ஒவ்வொன்றும் ஜனநாயகப் பண்பில் எட்டப்பட்டவைகள் ஆக இருப்பின் அவை மிக மிக சிறப்பானது. தலைவர் பதவிக்காக சுமந்திரன் உட்கட்சி ஜனநாயகத்தின் உச்சப்பட்ச நம்பிக்கையில் போட்டியிட்டிருந்தார். சுமந்திரன் நிழல்த் தலைவராக தமிழரசுக் கட்சியில் செயற்பட்ட காலத்தில் நடைபெற்ற உட்கட்சி சம்பவங்கள் சிலவற்றை பட்டியலிட்டு பார்க்கையில், 01.தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளுக்குள் ஏனைய கட்சிகளுக்கு வழங்கிய செயன்முறைப் பெறுமானம். 02.தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து கட்சிகள் வெளியேறியமை மற்றும் உள்வாங்கப்பட்டமை. 03.போர்க்குற்ற சர்வதேச விசாரணை முடிந்து விட்டது, 04.விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்த காலப்பகுதியில் ஏற்பட்ட முரண்பாடு. 06.மாவை சேனாதிராசாவுக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உரிமை மறுத்து கலையரசனுக்கு வழங்கியது. 07.சம்பந்தரது முதுமை காரணமாக பதவிவிலக அவரில் அக்கறை கொண்டு இரஞ்சியது. உதாரணத்திற்கு இது போன்ற சில பிரபலமான உட்கட்சிச் செயற்பாடுகளில் உட்கட்சி ஜனநாயகம் அறிந்து செயற்பட்ட தருணங்களை வாக்காளர்கள் உண்மையை உண்மையாக சிந்திக்க வேண்டும் என கேட்டுக்கொண்டு, சுமந்திரன் மீண்டும் உட்கட்சியின் ஜனநாயகத்தினை அறிவதற்காக தமிழரசுக் கட்சியின் தலைமைக்கு போட்டியிட்டாரம். இன்று கட்சி வழக்குவரை முன்னேறியிருக்கின்றது. ஜனநாயகம் என்றால் என்ன? என்பதற்கு சுமந்திரன் ஒரு நேர்காணலில் வழங்கிய ஒரு உவமானக் கதையுடன், ஒரு குடும்பத்தில் மூன்று பெண்பிள்ளைகளும் ஒரு ஆண்பிள்ளையும் இருக்கின்றார்கள். இவர்களது விடுமுறைக்கு வெளியே செல்ல குடும்பமாக திட்டமிடும் சந்தர்ப்பத்தில் ஆண்பிள்ளை ஒரு சாகசம் போன்றதொரு சுற்றுலாவை விரும்புகின்றார், பெண்பிள்ளைகள் மூவரும் இவ்வகையைத் தவிர்த்து ஒருமித்த குரலில் வேறு ஒரு விடயத்தினை தெரிவு செய்வார்கள். இவ்வாறான சந்தர்ப்பத்தில் ஜனநாயக தீர்மானமாக பெண்பிள்ளைகளின் தெரிவுதான் அமையும் என்ற கருத்துப்பட ஒரு அழகான கதையைக் கூறியிருந்தார். இன்று உட்கட்சி விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கின்றது. இச் சந்தர்ப்பத்தில் ஏழுபேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்திருக்கின்றார்கள். இதில் சுமந்திரனை தவிர ஏனைய அறுவரும் ஒத்த நிலைப்பாட்டில் நீதிமன்றத்திற்கு தங்களது நிலைப்பாட்டினை அறிவித்திருக்கின்றார்கள். அதன்பால் வழக்கு முடிவுறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாறாக மறு முனையில் சுமந்திரன் ஏனைய அறுவரது நிலைப்பாட்டுடனும் பொருந்தாது தான் மாத்திரம் வழக்கினை தொடர இருப்பதாக தெரிவித்திருப்பதாக அறிய முடிகின்றது. சுமந்திரன் தலைவர் தெரிவில் கூறிய உட்கட்சி ஜனநாயகம், சுமந்திரன் கூறிய உவமானக் கதை ஆகியவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது சுமந்திரனது இந்த தீர்மானம் மென்வலுப்பிரயோகமா? அல்லது உட்கட்சி ஜனநாயகமா? எந்த வகுதிக்குள் அடங்கும் என தலையைப் பிய்த்துக்கொள்ளவேண்டியுள்ளது. ஈற்றில் ஒன்றுமட்டும் தெளிவாகின்றது தன் தன் வசதிக்காக பல பல தத்துவங்களை பேசுபவர்கள் தவறிழைப்பவர்கள் என்பதை நிறுவுவதில் சுமந்திரனும் தவறவில்லை என்பதுடன், இவ்வழக்கு வென்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே, வழக்கு தோற்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே ஆகும். எதிர்வரும் தேர்தல் மிகவும் சவாலானது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்து மனோகணேசன் தமிழரசுக் கட்சியில் தேர்தலில் தோன்றினால் எப்படியோ அதையும் தாண்டியதொரு நிலையிலேயே சுமந்திரனும் தேர்தலில் தோற்றவேண்டியிருக்கும். அடுத்த தேர்தலில் சுமந்திரன் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தினை தவிர்த்து மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்டு வெல்வாராக இருப்பின் தமிழரசுக் கட்சிக்குள் மென்வலுவும் உட்கட்சி ஜனநாயகமும் உயிர்ப்புடன் உள்ளது என்பதை நிறுவிக்காட்டமுடியும்.   பொறுப்பு துறப்பு! இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Independent Writer அவரால் எழுதப்பட்டு, 28 March, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. https://tamilwin.com/article/sumandran-politics-and-internal-party-democracy-1711577764
    • abaan மனிசி ஏன் இவ்வளவு பிடிவாதம் பிடிக்குது இலங்கையின் பெண்கள் கொஞ்சம் உசாரான ஆட்கள் தான் .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.