Jump to content

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான போராட்டத்துக்கு ஆதரவு கோரல்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, goshan_che said:

மட்டகளப்புத்தானே என்று ஊடகங்கள் அதை செய்தியாகமல் விட்டதோ அல்லது, இங்கே இணத்தவர்கள் இணைக்காமல் விட்டார்களோ தெரியவில்லை. 

எனது விருப்பத்தளங்களில் பற்றிநாதம் இருக்கின்றது. ஆனால் அது பல மாதங்களாக இயங்கவில்லை என்பதால் கிழக்கு செய்திகளை காண்பது குறைவு. 

நம்பிக்கையான கட்சிசாராத கிழக்கு செய்தி தளம் இருந்தால் சொல்லுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, உடையார் said:

 

33 minutes ago, கற்பகதரு said:

 

சாணக்கியனும் சம்பந்தனும் நிற்கிறார்கள். விக்னேஸ்வரனும் கஜேந்திரகுமாரும் நின்றதை காணவில்லையே?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, கற்பகதரு said:

சாணக்கியனும் சம்பந்தனும் நிற்கிறார்கள். விக்னேஸ்வரனும் கஜேந்திரகுமாரும் நின்றதை காணவில்லையே?

தங்களுக்கு பார்வையும் தேடலும் சமீப காலமாக குறுகிவிட்டது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, உடையார் said:

நீங்கள் செய்வது அப்பட்டமான பிரதேசவாதம்தான் - எனென்றால் ஒன்றை விளங்கி கொள்ள முதல், இப்படி பதிகின்றீர்கள்.

கீழே உள்ள தளத்தில் போய் பாருங்கள்,

http://www.ilakku.org/

முதலில் போட்டது யாழில் நடந்த போராட்டம். அவற்களுக்கு மற்ற செய்திகள் போக முதல், யாழின் செய்தி கிடைத்திருக்கலாம். யாழின் செய்தி இணைத்தபின் எந்த செய்தியும் நான் இணைக்கவில்லை, நித்தா கொள்ள போய்விட்டேன்.

இதில் செய்திகள் இணைத்திருப்பது நானும் கிருபனும் - இப்ப சொல்லுங்கள் யாரை நினைத்து பதிவிட்டீர்கள் என்று.

இங்கு யாரும் பிரதேசத்தை வைத்து யாழில் செய்திகள் இணைப்பதில்லை.

நீங்கள்தான் இப்ப பல புதிய கோணங்களில் கிளறுகின்ற மாதிரி இருக்கு. 

நான் ஏதையும் மூடி மறைக்க தேவையில்லை, அப்படிப்பட்டவனுமில்லை

 நான் தந்து எடுத்து வளர்ப்பதும் மட்டகளப்பிலிருந்துதான்,  இன்னும் எடுக்க இருக்கின்றேன்.

கொரோணா கலத்தில் யாழ் இன்னுமொரு உறவுடன் இணைத்து உதவி செய்ததும் மட்டகளப்பிற்குதான், 02/09/20 நினைவுதினமாக சாப்பாடு கொடுக்கப்போவதும் மட்டகளப்பில்தான்....

ஒரு சிறு வட்டம்போட்டுவிட்டு எல்லாதையும் ஒரே மாதிரி எடை போடாதீர்கள்

 இந்த பிரதேச வாத த்தை கொஞ்சம் அடக்கி வாசியுங்கள், இப்ப சிதைந்து போயிருக்கு அதை இன்னும் சிதைக்க வேண்டாம், இப்படி நஞ்சூட்டி 🙏

 

 

உடையார்,

1. நீங்கள் செய்யும் உதவிகள் போற்றுதலுக்குரியன.

2. நான் இங்கே பதிந்ததை திரும்பி வாசியுங்கள். நான் முதலில் செய்திதளங்கள் இதை போடவில்லையா? அல்லது இணத்தவர்கள் இணைக்கவில்லையா என்றே கேட்டேன். கிட்டதட்ட லைவ்வாக மட்டகளப்பு போராட்டங்கள் பற்றிய செய்திகள் சமூகவலை எங்கும் வந்த போது, ஒரு தளம் தனியே யாழ் செய்திகளை மட்டும் இணைத்தது என்றால் அது நிச்சயமாக “இச்சையின்றிய” மையாவாத சிந்தனையே.

3. செய்தி இணைப்போர் யாரென்று நான் உண்மையில் பார்க்கவில்லை. தலைப்புக்களில் கிழக்கு மட்டும் விடுபட்டிருப்பது தெரிந்தது. அதைதான் ஏன் என்று கேட்டேன்.

4. நான் “இச்சை இன்றிய” என்ற பதத்தையும் அதற்கான ஆங்கில பதத்தையும் அறிந்தே பயன்படுத்தினேன். சிலர் இச்சையுடன் யாழ் மையவாதிகளாக இல்லாதவிடத்தும், நமக்கே தெரியாமல் இந்த மையவாதம் தலைகாட்டலாம் அதையே சொன்னேன்.

3 hours ago, ரஞ்சித் said:

அதுசரி, இந்தப் போராட்டங்களில் கருணா அம்மானும், பிள்ளையானும், வியாழேந்திரனும், ஜெயனந்த மூர்த்தியும், டக்கிளஸும், அங்கஜனும் திலீபனும் செலுத்திய பங்களிப்பு என்ன? 

என்ன ஐயா இப்படி கேட்டு விட்டீர்கள்

காணாமல் ஆக்கியவர்களே அவர்கள்தானே?

தமக்கு எதிராகவே போராட முடியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, கிருபன் said:

எனது விருப்பத்தளங்களில் பற்றிநாதம் இருக்கின்றது. ஆனால் அது பல மாதங்களாக இயங்கவில்லை என்பதால் கிழக்கு செய்திகளை காண்பது குறைவு. 

நம்பிக்கையான கட்சிசாராத கிழக்கு செய்தி தளம் இருந்தால் சொல்லுங்கள்.

கிருபன்,

எனது பதிவின் கருத்தை என் மேல் பிரதேசவாத பட்டம் கட்டாமல் உள்வாங்கியமைக்கு நன்றி.

பக்கசார்பின்மை பற்றிய உத்தரவாதம் தரமுடியாது. ஆனால்

Meenagam . Com

battineews . Com

என்பன நான் பார்ப்பவை.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னொன்றையும் நினைவில் கொள்ளுங்கள்.

ஏனப்பா மட்டகளப்பு செய்திகளை இணைக்கவில்லை என கேட்ட எனக்கு கிடைத்த பட்டம் பிரதேசவாதி, தமிழ் தேசியத்தின் எதிரி.

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான பொது அமைப்பு நடத்திய போராட்டத்தை தவிர்த்து, தனியே ஆவர்த்தனம் ஒரு மாவட்டத்தில் மாத்திரம் வாசித்த கட்சிக்கு கிடைக்கும் பெயர் - தமிழ் தேசியத்தின் தூண்கள்.

கஜேந்திரனுக்கு எம்பி சீட் கொடுத்தாலும் அவர் அம்பாறை எம்பி போலவே செயற்படுவார் என்றார்களே?

அம்பாறையில் போய் கஜன் ஏன் இன்னும் தனது மக்களை சந்திக்கவில்லை?

அலுவலகம் போடவில்லை ?

அல்லது அவர்கள் கட்சியின் பெயரிலும் பேச்சிலும் “தேசியம்” வளர்ப்பது - கிழக்கில் உபரி வாக்குகளை பெற்று, வடக்கில் இருந்து ஒருவரை தேசியபட்டியலில் அனுப்ப மட்டும்தானா?

இதை கேட்டால் என்னை பிரதேசவாதி என திட்ட தோணுமே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தன் ஐயாவும் ஒரு மாதிரி களத்தில இறங்கிற்றார்!

சிவனே என்று இருந்த மனிசனை களத்தில இறங்க வைச்ச வாக்காளப் பெருமக்களை நினைக்க கோபம் கோபமா வருது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஏராளன் said:

சம்பந்தன் ஐயாவும் ஒரு மாதிரி களத்தில இறங்கிற்றார்!

சிவனே என்று இருந்த மனிசனை களத்தில இறங்க வைச்ச வாக்காளப் பெருமக்களை நினைக்க கோபம் கோபமா வருது.

அடி உதவுகிறது போல் எதுவும் உதவாது இந்த முறை தேர்தலில் கிடைத்த அடி இவர்களை இனி நகர்த்தும். இந்த 11 வருடங்களாக இவர்கள் விட்ட பிழைகள் தான் இன்றைய தமிழினத்தின் இழி நிலைக்கு காரணம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, விசுகு said:

அடி உதவுகிறது போல் எதுவும் உதவாது இந்த முறை தேர்தலில் கிடைத்த அடி இவர்களை இனி நகர்த்தும். இந்த 11 வருடங்களாக இவர்கள் விட்ட பிழைகள் தான் இன்றைய தமிழினத்தின் இழி நிலைக்கு காரணம். 

நூற்றில் ஒரு வார்த்தை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, goshan_che said:

3. செய்தி இணைப்போர் யாரென்று நான் உண்மையில் பார்க்கவில்லை. தலைப்புக்களில் கிழக்கு மட்டும் விடுபட்டிருப்பது தெரிந்தது. அதைதான் ஏன் என்று கேட்டேன்.

நன்றி கோஷன்- நீங்கள் அப்படி நினைந்திருக்காவிட்டால் 🙏

 என் வாழ்கையில் நான் இதுவரை பார்த்தில்லை, இனிமேலும் இல்லை அந்த குறுகிய வட்டத்திற்குள்

 

11 minutes ago, விசுகு said:

அடி உதவுகிறது போல் எதுவும் உதவாது இந்த முறை தேர்தலில் கிடைத்த அடி இவர்களை இனி நகர்த்தும். இந்த 11 வருடங்களாக இவர்கள் விட்ட பிழைகள் தான் இன்றைய தமிழினத்தின் இழி நிலைக்கு காரணம். 

ஐயா நொந்து நூலாகி இருக்கின்றார் 😆

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, உடையார் said:

 

ஐயா நொந்து நூலாகி இருக்கின்றார் 😆

அதைவிட முக்கியம் இவர்களது தலைக்கனம். 

தங்களை விட்டால் தமிழர்களுக்கு வேறு நாதியில்லை என்ற முடிவுக்கு இவர்கள் வந்திருந்தது இந்த முறை தேர்தல் பிரச்சாரத்தின் போது தெளிவாக தெரிந்தது. முக்கியமாக சுமேந்திரன் சம்பந்தர் மற்றும் சிறீதரன் பேச்சுக்களில் பேட்டிகளில். லட்சக்கணக்கில் வாக்குகள் வித்தியாசத்தில் வெல்வோம் என்ற மமதையில் இருந்தார்கள். அடி மிக மிக பலமானது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விசுகு said:

அதைவிட முக்கியம் இவர்களது தலைக்கனம். 

தங்களை விட்டால் தமிழர்களுக்கு வேறு நாதியில்லை என்ற முடிவுக்கு இவர்கள் வந்திருந்தது இந்த முறை தேர்தல் பிரச்சாரத்தின் போது தெளிவாக தெரிந்தது. முக்கியமாக சுமேந்திரன் சம்பந்தர் மற்றும் சிறீதரன் பேச்சுக்களில் பேட்டிகளில். லட்சக்கணக்கில் வாக்குகள் வித்தியாசத்தில் வெல்வோம் என்ற மமதையில் இருந்தார்கள். அடி மிக மிக பலமானது. 

சுமேக்கு அடிக்குமேல் அடி, அவரின் செருக்கை காணவில்லை கூட்டத்தில் கதைக்கும் போது 😆

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, உடையார் said:

சுமேக்கு அடிக்குமேல் அடி, அவரின் செருக்கை காணவில்லை கூட்டத்தில் கதைக்கும் போது 😆

அதே.  ஆனால் தமிழரின் பிளவுகள் எமக்கு பெரும் பலவீனம். அதை இனியாவது இவர்கள் உணர்ந்து எல்லோரையும் உள்வாங்கி தலைவரின் தூர நோக்கை புரிந்து கொண்டு செயல்படட்டும். அண்மையில் கயேந்திரகுமாரின் பேச்சு ஒன்று பார்த்தேன். எங்களுக்குள் பிரச்சினை இருக்கலாம் ஆனால் கூட்டமைப்பு தமிழரின் பலம் என்பதை நாங்கள் மறக்க மாட்டோம் மறக்க முடியாது என்று குறிப்பிட்டிருந்தார். நல்லதொரு முன்மாதிரி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன்னாரில் இன்று மாபெரும் போராட்டம்!missing-person-mannar-2-720x480-1.jpg?189db0&189db0

 

சர்வதேச காணாமலாக்கப்பட்டோர் தினம் நேற்று (30) அனுஷ்டிக்கப்பட்ட நிலையில், மன்னாரில் இன்று (31) கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்தப் போராட்டம் மன்னார் பிரஜைகள் குழுவின் அனுசரனையுடன், மன்னார் மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் அமைப்பின் ஏற்பாட்டில் இன்று காலை 9.30 மணியளவில் மன்னார் பஸார் பகுதியில் முன்னெடுக்கப்பட்டது.

இந்த போராட்டத்தில் கலந்துகொண்ட காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் சர்வதேசமே மௌனம் காப்பது ஏன், இலங்கை அரசே உண்மையை மறைக்காதே ஒரு நாள் நிச்சயம் வெளிவரும், காணாமலாக்கப்பட்ட உறவுகள் எங்கே, சர்வதேசமே புதிய அரசாங்கத்திடம் நீதியை பெற்றுத்தாருங்கள் உள்ளிட்ட பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அத்தோடு, காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கு நினைவகம் ஒன்றை அமைப்பதற்கு இடம் கோரி கையெழுத்துக்களும் பெற்றுக்கொள்ளப்பட்டன.

அதேநேரம் காணாமலாக்கப்பட்ட உறவுகளைத் தேடும் குடும்பங்களின் அமைப்பினால் ஜனாதிபதிக்கு எழுதிய மகஜர் போராட்டம் இடம்பெற்ற இடத்திற்கு வருகைதந்த மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.குணபலனிடம் கையளிக்கப்பட்டது.

குறித்த போராட்டத்தில் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள், மத தலைவர்கள், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன், நானாட்டான் பிரதேச சபையின் தலைவர் திருச்செல்வம் பரஞ்சோதி, உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டனர்.

  • missing-person-mannar-4-720x480-1.jpg?18
  • missing-person-mannar-6-720x480-1.jpg?18
  • missing-person-mannar-1-720x480-1.jpg?18
  • missing-person-mannar-2-720x480-1.jpg?18
 
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.