Jump to content

கனடா | மீண்டுமொருதடவை ரயிலைத் தவறவிட்ட கன்சர்வேட்டிவ் கட்சி


Recommended Posts

கனடா | மீண்டுமொருதடவை ரயிலைத் தவறவிட்ட கன்சர்வேட்டிவ் கட்சி

அலம்பலும் புலம்பலும் - சிவதாசன்
 
 

அலம்பலும் புலம்பலும் – சிவதாசன்

 


இன்று மதிய உணவின்போது அரசியலில் மட்டும் அரசியாக இருக்காத என் மனைவி ஒரு விவாதத்தைத் தொடங்கி வைத்தார். கனடிய கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைமைப்பதவிக்கான போட்டி முடிவுகள் பற்றியிருந்தது அது. ஒரு சாதாரண கனடியரின் மனநிலை எப்படியிருக்குமென்பதற்கு இது ஒரு சிறு உதாரணம்.

எனது மனைவி பெரும்பாலான தருணங்களில் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு வாக்களிப்பவர். அது பெரும்பாலும் ட்றூடோ போன்றவர்களுக்கு எதிரான வாக்குகளே தவிர கன்சர்வேட்டிவ் கட்சிக்கு ஆதரவானதல்ல. இப் பின்புலத்தில், இரவு நடந்து முடிந்த கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைமைக்கான தேர்தல் இங்கே பார்க்கப்படுகிறது.

மனைவி சொன்னார், “எனக்கு எரின் ஓ’ரூல் யாரென்றே தெரியாது. ஆனால் கன்சர்வேட்டிவ் கட்சி தன் தலைவரைத் தேர்ந்தெடுப்பது வெறுமனே கட்சிக் கொள்கைகளை முன்னெடுப்பதற்காக அல்ல, தற்போதுள்ள அரசாங்கத்தைத் தோல்வியடைய வைப்பதுவே முக்கிய நோக்கமாக இருக்கவேண்டும். கன்சர்வேட்டிவ் கட்சியின் முன்னுள்ள ‘எதிரி’ ட்றூடோ. அவரது இளமைக்கும், துடிப்புக்கும், வாக்குவன்மைக்கும் சவாலாக இருக்கக்கூடிய தலைவர் தான் இப்போது கட்சிக்குத் தேவை. அதுவே இளைய தலைமுறையினரின் வாக்குகளைக் கொண்டுவரக்கூடியது. முந்தய தலைவர் ஆண்ட்றூ ஷியர் மாதிரி பழைய தேவாலயப் பிரசங்கிகளின் கொள்கைகள் (Social conservatism) இப்போதைய கன்சர்வேட்டிவ் தலைமுறையிடம் செல்லுபடியாகாது. எரின் ஓ’ரூல் காலத்துக்கு முற்பட்டவர். பீட்டர் மக்கேயைத் தெரிவிசெய்யாததால் ட்றூடோவுக்கு இன்னுமொரு தடவை ஆள வாய்ப்பிருக்கிறது” என்று முடித்தார் அம்மையார், a common sense revelation?

நீண்ட காலத்துக்குப் பிறகு இந்த ஒரு விடயத்திலேனும் உடன்படவேண்டி வந்தது. வழக்கமான ‘தமிழ்நெஸ்’ அதற்கு விடவில்லை. அது கன்சர்வேட்டிவ் கட்சியின் மீதான அக்கறையால் வந்ததா அல்லது ட்றூடோ மீதான வெறுப்பினால் வந்ததா? – அது ஒரு மில்லியன் டாலர் கேள்வி.

பல வருடங்களுக்கு முன்னர் அமெரிக்க ஜனாதிபதி நிக்சனுக்கு பேச்செழுதிக் கொடுக்கும் பற்றிக் புக்கன்னன் அவர்கள் எங்கோ குறிப்பிட்டிருந்த ஒரு குறுஞ் செய்தியின் சாரம்சம் இது: ” ஒரு அரசியல்வாதி, தேர்தலில் வெற்றிபெறுவதற்கு முன் வாக்காள விருப்பு வெறுப்புக்களை அனுசரித்து அதற்குத் தக்கபடி தாளம் போட்டுத் தளத்தைத் தீர்மானிக்க வேண்டும். வெற்றி பெற்ற பின்னர் யதார்த்த அரசியல் தளத்துக்கு நகர்ந்துவிடவேண்டும்”.

ஸ்டீபன் ஹார்ப்பர் ஒரு தீவிர வலதுசாரியாக இருந்தாலும் அவரிடம் இருந்த ஆளுமை பல தடைகளையும் தகர்த்தெறியும் வல்லமையுடன் இருந்தது. பேச்சுக்களில் நிதானம் இருந்தது. மாறாக அண்ட்றூ ஷியர் ஒரு மத போதகரது ஆளுமையையே கொண்டிருந்தார். ஒரு Sunday school teacher என்ற ஸ்தானத்துக்கு அப்பால் அவரால் நகர முடியவில்லை. ட்றூடோவைத் தோற்கடிக்கக்கூடிய அருமையான சந்தர்ப்பத்தைத் தனியொருவராக அவர் தவறவிட்டிருந்தார். நேற்று, கட்சித் தலைமையைக் கையளிக்கும்வரை அவரின் குணாதிசயம் மாறவேயில்லை. எரின் ஓ’ரூலின் வெற்றிக்கு, அதி தீவிர வலதுசாரிகளோடு, அவரது பங்களிப்பும் நிறைய இருந்திருக்கிறது என்பது தெரிகிறது.

 

போட்டியின் மூன்றாவது சுற்று வாக்கெடுப்பின்போது, தலைமைக்கான போட்டியில் போட்டியிட்ட ஒரெயொரு பெண்ணும், கறுப்பினத்தைச் சேர்ந்தவருமான லெஸ்லின் லூவிஸ் அவர்களின் வாக்குகளே எரின் ஓ’ரூலின் வெற்றிக்குக் காரணம் என்பது உறுதிப்படுத்தப்பட்ட ஒரு செய்தி. வெள்ளையர்களை ‘old stock’ என விழிக்கும் ஸ்டீபன் ஹார்ப்பரின் ஆதரவும் எரின் ஓ’ரூலிற்கே இருந்தது போலத் தெரிகிறது. கனடாவின் மேற்கு மாகாணமான அல்பேர்ட்டாவில் ஜேசன் கெனி போன்ற தீவிர வலதுசாரிகளின் ஆதரவும் அவருக்கே இருந்தது. இதிலிருந்து எரின் ஓ’ரூலின் நிலைப்பாடு என்னவென்று தெரிகிறது.

லெஸ்லின் லூவிஸும் ஒரு தீவிர வலதுசாரி என அடையாளம் காணப்பட்டவர். தேர்தல் என்று வரும்போது அவரால் எப்படியான உதவியை ஓ’ரூலுக்கு வழங்கமுடியுமென்பது சந்தேகமாகவிருந்தாலும் அவர் வழங்கிய ஆதரவுக்கு, ஒரு அமைச்சர் பதவிக்கு இடமுண்டு. என்ன இருந்தாலும், கன்சர்வேட்டிவ் கட்சித் தலைமைக்கான தேர்தலில், ஒரு கறுப்பினப்பெண் 25% வீதம் வாக்குகளை எடுத்து மூன்றாவதாக வருவது என்பது ஒரு வகையில் சாதனைதான். அவருக்கு வாழுத்துக்கள்!

பீட்டர் மக்கே தலைவராகுவார் என்ற எதிர்பார்ப்பு பல மூலைகளிலும் எதிரொலித்தது. என்ன நடந்தது? ஒரு விடயம் புலப்படுகிறது. பணம் செலவழித்து (?) கட்சியின் அங்கத்தவர்களாக இருப்பவர்களும், ஆக்கப்படுபவர்களும் தான் உண்மையான ‘கட்சிக்காரர்கள்’. ஏனையோர் கட்சியின் வாக்காளர்கள். கட்சிக்காரர்கள் குறிப்பிட்ட தேவையை முன்வைத்து வாக்களிப்பவர்கள். வாக்காளர்கள் நாட்டின் நன்மையை முன்வைத்து வாக்களிப்பவர்கள். மக்களிடம் சென்றிருந்தால் மக்கே வென்றிருக்க வாய்ப்புண்டு. அவரிடம் இளமையிருக்கிறது, துடிப்பிருக்கிறது, அனுபவமிருக்கிறது, லிபரல் கட்சியின் முற்போக்கு (?) கொள்களில் சில அவரிடமும் உள்ளன. அந்த வகையில் அவருக்கும், ட்றூடோவுக்கும் அதிகளவு வித்தியாசமில்லை. ட்ற்டோ போன்றோர் மக்களிடமிருந்து அந்நியப்படும்வரை, அவர்போன்றோரிடமிருந்து ஆட்சியைப் பறிக்க கொஞ்சம் வித்தியாசமான இன்னுமொரு ட்றூடோதான் வேண்டும். அது இப்போதைக்கு மீட்டர் மக்கேதான்.

சீன செல்வந்தர்களுடன் வான்கூவரில் விருந்து, ஆகா கானின் தீவில் விருந்துபசாரம், எஸ்.என்.சி லவாலன் ஊழல், தற்போது ‘வீ’ தர்மஸ்தாபன ஊழல் எனப் பல சகதிகளில் ட்றூடோ விழுந்து புரண்டிருந்தாலும், ஒன்றும் அவரிடம் ஒட்டிக்கொள்ளவில்லை. அதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று பலமான எதிர்க்கட்சித் தலைமை இல்லாமையே. தற்போது கோவிட்-19 இன் நிழலில் ட்றூடோ சற்றே ஓய்வெடுக்கிறார். பீட்டர் மக்கேயானால் அவரது ஆசுவாசத் தூக்கம் மணியடித்து எழுப்பப்பட்டிருக்கும். எதோ அவரது சாதகத்தில் பத்தாம் இடம் பலம் பெற்றிருக்கிறது. இப்போது வீடு மாறமாட்டார் போலத் தெரிகிறது.

மீண்டுமொருதடவை கன்சர்வேட்டிவ் கட்சி ரயிலைத் தவறவிட்டுவிட்டது. ஆழ்ந்த அனுதாபங்கள்

https://marumoli.com/கனடா-மீண்டுமொருதடவை-ரயி/?fbclid=IwAR2RZTRiSw9mk8wpn-_Irc5vjj8v4EvqKxQbRJq2AmAacMtCnD15uP_SGG8

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.