Jump to content

தமிழ் தேசியத்திலிருந்து வழிமாறிச் செல்லாத முறைமையில் மக்களை வழிநடத்துவோம்; துரைராஜசிங்கம் நேர்காணல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தேசியத்திலிருந்து வழிமாறிச் செல்லாத முறைமையில் மக்களை வழிநடத்துவோம்; துரைராஜசிங்கம் நேர்காணல்

August 24, 2020

thurai-1.png
 

மிழ் தேசியம் பேசப்பட வேண்டிய விடயம். மக்களுக்கு சில மாயைகள் ஊட்டப்பட்டிருக்கின்றன, தமிழ் தேசியம் மிகவும் முக்கியமானது. அந்த வகையிலே தமிழ் தேசியத்திலிருந்து மக்கள் வழிமாறிச் செல்லாத முறைமையில் மக்களை வழிநடத்துவோம் என, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கி.துரைராஜசிங்கம்; தினக்குரலுக்கு அளித்த நேர்காணலிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவரது நேர்காணல் வருமாறு;

கேள்வி :- நடந்து முடிந்த 2020, பாராளுமன்ற பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்ட நிலைமையினை எவ்வாறு பார்க்கின்றீர்கள் ?

 

பதில் :- தேர்தல் பிரசாரம் செய்தபோது மக்களின் வரவேற்பு ஆதரவு அமோகமாக இருந்தது. அந்த அடிப்படையிலேதான் நான்கு உறுப்பினர்களை பெறக்கூடியதாக இருக்கும் என்ற நம்பிக்கை இருந்தது, ஆனால் வாக்களிப்பு வீதமும் நன்றாக இருந்தது. வாக்கு எண்ணும் நிலையத்தில்தான், வாக்குச்சீட்டுக்களில் வாக்களித்த விதத்தை பார்க்கும்பொழுதுதான் ஏதோ நடந்திருக்கின்றது என்பது போல தெரிந்தது. அது எங்கு, எப்படி நடந்தது என்று எங்களுக்கு தெரியாது. இருந்தபொழுதிலும் கூட களத்தில் திடீரென்று மாற்றம் ஏற்பட்டது என்பது தொடர்பாக ஆராய வேண்டியிருக்கின்றது. நாங்கள் கூடுதலாக மக்களை அணுக வேண்டும். இப்பொழுது ஏற்பட்டிருக்கின்ற இந்த நிலைமையை விரைவில் மாற்றியமைக்கலாம். திடீரென்று ஏற்பட்ட மாற்றம் தொடர்பாக காரணங்களை ஆராய்ந்ததற்கு பிறகு முடிவு எடுப்போம்.

 

கேள்வி :- தேர்தலை தொடர்ந்து தமிழ் தேசிய கூட்டமைப்பு அபிவிருத்தி சார்ந்து செயற்படவுள்ளதாக அளவளாவப்படுகிறதே ?

பதில் :- மக்களின் தேவைகள் கருதி அபிவிருத்தி தொடர்பாக அக்கறை செலுத்துவோம். எங்களுடைய உரிமை தொடர்பான விடயங்கள் எப்பொழுதும் நிகழ்ச்சி நிரலிலே இருக்கும், எந்தவிதத்திலும் உரிமையை கைவிட்டு அபிவிருத்தி விடயத்திற்குள் போகமாட்டோம். மக்களுடைய மனதிலே ஏற்பட்டிருக்கின்ற மாற்றமா, மாயையா என்பது வெகு விரைவில் தெரியவரும். ஆகவே மக்கள் எங்களுடைய நிலைப்பாட்டை உணர்ந்து கொள்வார்கள் அல்லது தாங்கள் விட்டது தவறு என்பதை உணர்ந்துகொள்ளக்கூடிய காலம் விரைவில் வரும்.

 

கேள்வி :- கோட்டாபய அரசாங்கத்தில் சமஷ்டியை பெறுவதென்பது சாத்தியமில்லை தானே ?

பதில் :- எமது கட்சியினுடைய தொடக்ககால இலட்சியம் சமஷ்டி. 1976 களில் ஏற்பட்ட சூழ்நிலைக்கு நாங்கள் தனித் தமிழீழத்தை கோரியிருந்தோம். பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் புலிகள் ஒஸ்லோ உடன்படிக்கையில் சமஷ்டி கட்டமைப்பை பரிசீலிப்பதாக கூறியிருந்தார்கள். இந்த நிலையிலே 2010 பிற்பட்ட காலப்பகுதியில் இடம்பெற்ற ஒவ்வொரு தேர்தல் விஞ்ஞாபனத்திலும் நாங்கள் ஒருமித்த நாட்டுக்குள் பிராந்தியங்களுக்கு அதி உச்சமான அதிகாரங்கள் வழங்கப்பட்ட சமஷ்டியை வலியுறுத்திக்கொண்டு வருகின்றோம்.

 

சமஷ்டி என்பது ஒரு நாட்டுக்குள்ளே அதிகாரங்களை பங்கீடு செய்கின்ற ஒரு செயற்பாடே அல்லாமல் பிரிவினை கிடையாது. தொடர்ச்சியாக சிங்கள மக்கள் மத்தியிலே சமஸ்டியை பிரிவினையென்று போதித்து வருகின்ற கபடத்தனமான செயற்பாடு இலங்கை நாட்டின் வளர்ச்சிக்கு எந்த விதத்திலும் உகந்ததல்ல. எந்த ஒரு சமஸ்டி நாடும் சீரழிந்து போனதாக வரலாறு கிடையாது. மாறாக பன்மைத்துவம் கொண்ட நாட்டிற்கு சமஷ்டிதான் சிறந்த அரசியல் திட்டம் என்பதனை அரசியல் திறனாய்வாளர்களும், நடைமுறையிலும் செய்துகாட்டப்பட்டுள்ளது.

 

ஆகவே வடக்கு கிழக்கை பிரித்துக்கொண்டு தனியாட்சி அமைப்பதற்கு சிங்கள மக்கள் ஒத்துழைக்கமாட்டார்கள், அதை நாங்கள் எதிர்ப்போம் என்று ஜனாதிபதியோ மஹிந்தவோ சொல்லுவது, முற்றிலும் சிங்கள மக்களை இருட்டிலே தள்ளிவிட்டு தமிழ்மக்கள் தொடர்பான பீதியை ஏற்படுத்தி ஒரு நியாயமற்ற முறையிலே நடந்துகொள்வது மிகவும் கண்டிக்கத்தக்கது. நாங்கள் சாத்வீக வழியைப் பின்பற்றுபவர்கள். ஜனநாயக முறையில் சமஷ்டியைப் பெறுதல் தொடர்பான விடயங்களை கையாண்டு கொண்டிருக்கின்றோம். நாங்கள் தொடர்ச்சியாக சமஷ்டியைத் தான் வலியுறுத்திக் கொண்டிருக்கின்றோம். சமஷ்டி பிரிவினை வாதமல்ல என இலங்கை உயர்நீதிமன்றமும் தீர்ப்பு வழங்கியிருக்கின்றது.

மாதுலுவெவ சோபித தேரர் தலைமையில் உருவாக்கப்பட்ட இயக்கம் உள்ளிட்ட பெரும்பான்மைத் தரப்பினரில் உள்ள நடுநிலைவாதிகளும் சமஷ்டி தொடர்பில் சாதகமான பார்வையை வைத்துள்ளனர். இந்நிலையிலே ஒரு சில பௌத்த துறவிகளினுடைய இத்தகைய கூற்றுக்கள் எங்களுடைய செயற்பாட்டை எவ்விதத்திலும் தடுக்க முடியாது.

கேள்வி :- வடக்கு கிழக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பு எவ்வாறு பயணிக்கும் ?

பதில் :- உரிமையோடு கூடிய அரசியல் என்ற ரீதியிலே பயணிக்கும். அதே நேரத்தில் மக்களின் அன்றாட தேவைகள் தொடர்பிலே மக்களோடு மக்களாக நிற்க வேண்டும் என்ற விடயத்தினை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வலியுறுத்துவோம். பாராளுமன்ற அமர்வை அடுத்து நடைபெறுகின்ற பாராளுமன்ற குழுக்கூட்டத்திலே சொல்லப்பட்ட விடயங்களை மக்களுக்கு எடுத்துச் செல்வதும், மக்களோடு சேர்ந்து வேலைத்திட்டங்களை மேற்கொள்வதும் ஆகிய விடயங்களை பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களது மாவட்டங்களுக்குச் சென்றதும் செய்விக்கக்கூடிய செயற்திட்டங்களை ஏற்படுத்துவோம்.

கேள்வி :- கடந்த எழுபது வருட காலமாக உரிமை கிடைக்காத நிலையில் கூட்டமைப்பு பேரம் பேசும் அரசியலை ஏன் செய்யக்கூடாது ?

பதில் :- உரிமைப் போராட்ட வரலாறுகளை வாசித்தறியாதவர்கள் வெறும் கால எண்ணிக்கையைக் காட்டி விடுதலை முயற்சியை முறியடிக்க நினைப்பது ஒரு அறியாமையாகும். எழுபது வருட கால எமது போராட்டம் இல்லாதிருந்திருந்தால் புத்தளம், சிலாபம், நீர்கொழும்பு, காலி, கதிர்காமம் போன்ற இடங்களிலே வாழ்ந்த தமிழர்கள் எவ்வாறு அடையாளமற்றுப் போனார்களோ அவ்விதமே வடகிழக்குத் தமிழர்களும் அடையாளத்தை இழந்திருப்பார்கள். இந்நிலையில் எமது போராட்டம் முழுமையாக வெற்றியடையவில்லை என்பதற்காக நாங்கள் எதையும் சாதிக்கவில்லை என்று சொல்வது மதிப்பீட்டாளர்களின் குறைபாட்டையே காட்டுகின்றது.

எமது மொழியுரிமையைப் பாதுகாத்துள்ளோம், குடியேற்றங்களைத் தடுத்துள்ளோம், நிருவாகத்திலே சிங்கள பௌத்த ஆதிக்கத்தை இயன்றவரையிலே தடுத்திருக்கின்றோம், நீதிமன்ற மொழியாக வடகிழக்கிலே தமிழை செயற்பட வைத்துள்ளோம், தமிழர் பிரதிநிதிகளை மக்கள் தொடர்ச்சியாகப் பாராளுமன்றம் உள்ளுராட்சி மன்றங்களுக்குத் தெரிவு செய்யும் நிலையைத் தக்கவைத்துள்ளோம். இந்நிலையிலே, அடைவுகள் எதுவும் அற்ற விதத்திலே எமது உரிமை சார் செயற்பாடு வலுவிழந்துள்ளதாகக் குறிப்பிடுவதிலே எந்தவித அர்த்தமும் இல்லை. பேரம்பேசுதல் என்பது உரிமை சார் செயற்பாட்டில் இடம்பெறக் கூடாத ஒரு அம்சமாகும். நாங்கள் எந்த விடயத்தையும் உரிமை அடிப்படையிலேதான் பெற்றுக் கொள்வோமே தவிர உரிமையை அடகு வைத்து பேரம் பேசுவதற்கு எம்மை வழிப்படுத்த மாட்டோம்.

கேள்வி :- தமிழ்த்தேசியம் பேசுவதனால் அனைத்தையும் சாதிக்க முடியுமா ?

பதில் :- தமிழ் தேசியம்தான் பேசப்பட வேண்டிய விடயம். மக்களுக்கு சில மாயைகள் ஊட்டப்பட்டிருக்கின்றன, தமிழ் தேசியம் மிகவும் முக்கியமானது. அந்த வகையிலே தமிழ் தேசியத்திலிருந்து மக்கள் வழிமாறிச் செல்லாத முறைமையில் மக்களை வழிநடத்துவோம்.

கேள்வி :- கூட்டமைப்பின் அரசியல் கருத்துக்களும் அறிக்கைகளுமே தவிர செயலளவில் எதுவுமில்லை என மக்கள் மத்தியில் அளவளாவப்படுகிறதே ?

பதில் :- அவ்வாறு நிலவுகின்ற விடயமே மாயை. திடீரென ஏற்பட்ட நெருக்குவாரங்கள் இல்லாத நிலைமை. நெருக்குவாரங்கள் இல்லை என்றதும் தனியே வாழ்வாதாரம் மட்டும்தான் என்ற அடிப்படையில் மக்கள் செல்கிறார்கள். விடுதலையை நோக்கி செல்லுகின்ற மக்களுக்கு இவ்வாறான சவால்கள் வரலாற்றில் எல்லா இடங்களிலும் காணப்படுகின்றது. அந்த வரலாற்றுப் பாடங்களை எங்களுடைய மக்களுக்கு சொல்ல வேண்டியவர்களாக இருக்கின்றோம். உலக நாடுகளிலே தங்களது விடுதலைக்காக போராடிக்கொண்டிருந்த எல்லா இனங்களுக்கும் இவ்வாறான சோதனைகள் ஏற்பட்டிருக்கின்றன. அவ்வாறான சோதனைகளில் ஒன்றாக இவ்விடயம் அமைகிறது. இந்த விடயம் மக்களுக்கு தெளிவுபடுத்தப்படும், அரசாங்கத்தின் நடைமுறைகள் மக்களை சிந்திக்க வைக்கும்.

கேள்வி :- மாகாண சபையில் மொட்டும் படகுமே ஆட்சியமைக்கவுள்ளதாக கூறப்படுகிறதே ?

பதில் :- ஒவ்வொருவரும் ஒவ்வொரு குறிப்பிட்ட காலங்களில் திட்டங்களை வைத்துக் கொள்வது வழக்கம்தான். அந்த வகையிலே இப்பொழுது ஏற்பட்ட வெற்றி பெருமிதத்திலே அவ்வாறு கூறிக்கொண்டு இருக்கின்றார்கள். நாங்கள் அதற்கேற்ற விதத்திலே வியூகங்களை அமைப்போம்.

கேள்வி :- அம்பாறை மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் இருப்பு எதிர்வரும் காலங்களில் பாதுகாக்கப்படுமா ?

பதில் :- கூட்டமைப்பின் தேசிய பட்டியல் நிலைமை இப்பொழுது சரிசெய்யப்பட்டுள்ளது. சரிசெய்யும் முகமாக தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக த.கலையரசனை அம்பாறையில் நியமித்திருக்கின்றோம். அதே நேரத்தில் அம்பாறையில் கருணாவுக்கு பின்னால் அணிதிரண்டவர்கள் கலையரசனுக்கு பின்னால் வரத்தொடங்கியிருக்கின்றார்கள். இந்த மாற்றத்தை முறையாக ஒருமுக வழிநடத்தி தேசியத்தின் பால் நடப்பதற்கேற்பவான வழிவகைகளை செய்வோம்.

கேள்வி :- இலங்கை தமிழ் அரசுக்கட்சியின் தலைவர் மற்றும் பொதுச்செயலாளர் தோற்கடிக்கப்பட வேண்டும் என கூட்டமைப்பினர் எதிர்பார்த்ததாக கூறப்படுகிறதே ?

பதில் :- தோல்வி என்பது ஒரு காலமும் நிகழாத சம்பவமல்ல. அந்த வகையிலே எங்களுக்கு தோல்வி கிடைத்திருக்கின்றது, எந்தெந்த பார்வையிலே அந்த தோல்வி கிடைத்திருக்கின்றது என்கின்ற விடயம் தொடர்பாக ஆராயவுள்ளோம். வடக்கிலே தலைவர் மற்றும் கிழக்கிலே பொதுச்செயலாளர் தோற்றதற்கு என்ன மூல காரணங்கள் என்று ஆராய்ந்து அதற்கேற்ற விதத்திலே எங்களுடைய செயற்பாடுகளை முன்னெடுப்போம்.

கேள்வி :- தேர்தலையடுத்து மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்களுக்கு கூற விழைவது ?

பதில் :- இப்பொழுது ஏற்பட்டிருக்கின்ற ஆசன எண்ணிக்கை தொடர்பான நிலைமையிலே மக்கள் குழம்பிய நிலையில் காணப்படுகின்றார்கள். அபிவிருத்தி தொடர்பாக அதிக அக்கறை இருக்கின்றதென்பதும் எங்களுக்கு தெரிகின்றது, ஆனால் தமிழ் தேசியத்தை விட்டு அபிவிருத்திற்குள் செல்வது                    தமிழ் மக்களின் அழிவுக்கான முதற்படி என்பதை மக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். அந்த விடயத்தை மக்களுக்கு கட்சி சார்பில் நாங்கள் தெளிவூட்டுவோம்.

நேர்காணல் : பா.மோகனதாஸ்
 

 

http://thinakkural.lk/article/64229

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, கிருபன் said:

அவ்வாறு நிலவுகின்ற விடயமே மாயை. திடீரென ஏற்பட்ட நெருக்குவாரங்கள் இல்லாத நிலைமை. நெருக்குவாரங்கள் இல்லை என்றதும் தனியே வாழ்வாதாரம் மட்டும்தான் என்ற அடிப்படையில் மக்கள் செல்கிறார்கள். விடுதலையை நோக்கி செல்லுகின்ற மக்களுக்கு இவ்வாறான சவால்கள் வரலாற்றில் எல்லா இடங்களிலும் காணப்படுகின்றது.

கூத்தமைப்பு கூத்தமைப்புதான் 
கொஞ்சம் விட்டால் இந்த ஆளே தங்கள் வெல்லவேண்டுமென்று  கொழும்பிற்கு போய் ராணுவத்தை கூட்டிவந்து, நெருக்குவாரங்களுக்கு துணை போவார் போல இருக்கே, உங்கள் கலையரசானால் சும்மா பாராளுமன்றத்திலிருந்து கூவுவதை தவிர ஒன்றுமே புடுங்க முடியாது, இம் முறை மஹிந்த கோத்தா கொடுக்கும் ட்ரீட்மெண்ட்டில்  வடமாகாணமும் திருந்தும்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கேள்விகள் மழப்பான பதில்கள்.எப்படியோ தேர்தல் முடிவு கொஞ்சமாவது சிந்திக்க வைத்திருக்குது.பார்ப்போம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, அக்னியஷ்த்ரா said:

கூத்தமைப்பு கூத்தமைப்புதான் 
கொஞ்சம் விட்டால் இந்த ஆளே தங்கள் வெல்லவேண்டுமென்று  கொழும்பிற்கு போய் ராணுவத்தை கூட்டிவந்து, நெருக்குவாரங்களுக்கு துணை போவார் போல இருக்கே, உங்கள் கலையரசானால் சும்மா பாராளுமன்றத்திலிருந்து கூவுவதை தவிர ஒன்றுமே புடுங்க முடியாது, இம் முறை மஹிந்த கோத்தா கொடுக்கும் ட்ரீட்மெண்ட்டில்  வடமாகாணமும் திருந்தும்  

அடேய் இந்த ஆளையும் கழட்டி விட போறாங்கள் என்ற்ய் செய்தி உள்ளால அடிபடுது 

பேச்சும் எடுபடாது பேட்டியும் எடுபடாது 

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 25/8/2020 at 17:56, தனிக்காட்டு ராஜா said:

அடேய் இந்த ஆளையும் கழட்டி விட போறாங்கள் என்ற்ய் செய்தி உள்ளால அடிபடுது 

பேச்சும் எடுபடாது பேட்டியும் எடுபடாது 

கழட்டியே விட்டார்கள். கரி நாக்கு முனி உங்களுக்கு🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/9/2020 at 22:58, goshan_che said:

கழட்டியே விட்டார்கள். கரி நாக்கு முனி உங்களுக்கு🤣

நமக்கு உள்வீட்டு விவகாரங்கள் கொஞ்சம் காதுக்கு வரும் 😊

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மைக் சின்னத்துக்கான லைற் எரியவில்லை? புதிய தலைமுறை காணொளி.
    • எண்ணையும் 82……85.5…..81.5 என ஏறி இறங்கி விட்டது. இந்த நொட்டல்களை இரு தரப்பும் ஒரு அளவுக்குள் மட்டுப்படுத்தும் என்ற @Justin கூற்று மெய்ப்படுகிறது.
    • 1988 இல் இருந்து 1997 (என நினைக்கிறேன்) நடைமுறையில் இருந்த இலங்கை தமிழ் இலக்கியம் தரம் 10, 11 பாட நூலில் “சிரிக்க தெரிந்த பாரசீகன்” என்று ஒரு கட்டுரை இருந்தது. நல்ல ஜோக்குகள் பல அதில் கையாளப்பட்டிருந்தது. அதில் (நினைவில் இருந்து) ஒரு ஜோக்: அரசவையில் ஒருவன் பொய்யாக தன்னை இறைதூதன் என கூறிய வழக்கை விசாரிக்கிறார் கலிபா. கலிபா: உனக்குத் தெரியுமா, பொய்யாக தம்மை இறைவனால் அனுப்பபட்ட தூதர் என கூறி மக்களை ஏமாற்றிய பலரை நான் கடும் சித்திரவதையுடன் கூடிய மரண தண்டணைக்கு ஆளாக்கியுள்ளேன்! குற்றம் சாட்டபட்டவர்: ஓ….கலிபா! நன்றே செய்தாய்….. நான் எவரையும் அவ்வாறு அனுப்பவில்லை!!!
    • விடுமுறைகள் தொடங்க போகுது. நம்மவர்கள் கூடுதலாக மத்திய கிழக்கூடாகவே பயணிக்கிறார்கள். ஆனபடியால் சட்டுபுட்டென்று அலுவல்களை முடியுங்கோ.
    • சிறிதோ பெரிதோ தவறு தவறு தானே அண்ணா.  இவர்கள் பலமுறை செய்து ருசிப்பட்டவர்களாக இருக்க வாய்ப்புண்டு. ஆனால் ஏழை எளிய மக்களாக இருந்து அமெரிக்க படிப்புக்கு முயற்சித்து அதன் அழுத்தம் காரணமாக இவ்வாறு நடந்திருந்தால் இவர்களுக்காக நானும் இரங்குகிறேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.