-
Tell a friend
-
Topics
-
Posts
-
வணக்கம் ரஞ்சித், இரு பகுதியிலும் தமிழர்கள் இருக்கும் போது சுமுகமாக பேசி தீர்ககும் வழிவகை இருக்கும் போது இப்படி போராடங்களில் ஈடுபடுவது குறித்து தனக்கு விளங்கவில்லை என்று நெடுக்கு ஆச்சரியப்பட்டு தெரிவித்த கருத்துக்கு பதிலாகவே எனது கருத்தை எழுதினேன். ஒரு சிறிய நிலப்பரப்புக்குள் வாழ்ந்த ஓரே நோக்கத்தை கொண்ட இளைஞர்கள் தமக்குள் ஏற்பட்ட பிரச்சனைகளை தீர்க்கக முடியாமல் வன்முறை மூலம் தீர்த்த வரலற்றை மறந்து வேற்று நாட்டு பிரஜைக்காக உள்ளவர்கள் சுமுகமாக பேசி தீர்க்கவில்லை என்ற ஆச்சரியம் அல்ல என்று குறிப்பிட்டிருந்தேன். அதாவது எம்மவரின் புரிந்துணர்வும் சகிப்பு தன்மையும் என்பது எவ்வளவு மோசமான நிலையில் இருக்கிறது என்பதையே சுட்டிக்காட்டுவதே அந்த கருத்தின் நோக்கம். தவிர மீனவர்களின் பிரச்சனையில் பேச்சு வார்த்தை மூலம் சுமுக தீர்வு காணப்படவேண்டும் என்பதே எனது விருப்பமும். நீங்கள் கூறிவாறு இருபகுதி தமிழர்களையும் பிரித்து தமிழர்களை அழிப்பது எதிரியின் நோக்கம் என்றலால், எதிரியின் நோக்கங்களை தமது செயல்களால் நிறைவேற்றியதற்கு தமிழர் சார்பில் போராடிய மித வாத, தீவிர வாத அரசியல் அமைப்புக்கள் எல்லவற்றுகும் காத்திரமான பங்கு உள்ளது. அதில் புலிகளும் விதிவலக்கல்ல என்பதே எனது கருத்து. ஈழத்தமிழரும் தமிழக தமிழரும் தம்மிடையே கலாச்சார், கல்வி, வர்த்தக, பொருளாதான உறவுகளை வளர்த்து கொள்ள வேண்டும் என்பதில் எனக்கு மாற்று கருத்து இல்லை. நிச்சயமாக அது நடைபெற வேண்டும். இது கட்சி பேதமின்றி தமிழகத்தில் பல்வேறு மட்ட மக்களுடன் தொடர்புகளை பேணுவதன் மூலம் நடைமுறைப்படுத்தப்டல் வேண்டும். ஆனால், தமிழக அரசியலில் தலையிட்டு, ஒரு சிலரின் குறுகி பதவி மோக அரசியல் தந்திரத்திற்க அந்த வாய்ப்புக்களை பலியிடுவர்கள் புலம் பெயர் நாடுகளில் வாழும் தேசியப்பிரியர்கள் என்று தம்மை தாமே அழைக்கும் சுயநல கும்பலே ஆகும். நீங்கள் கூறியது போல் ஆயுதப்போராட்டத்திற்கு எதிராக மனப்போக்குடன் நான் என்றுமே இருந்ததில்லை. ஆனால் ஆயுத போராட்டம் என்பது வெற்றி அல்லது தோல்வி என்ற இரு புள்ளியில் தான் முடியும். ஆனால் அதனுடன் சேர்ந்த அரசியல் தந்திரோபாய போராட்டங்கள் அது முன்னேறிய பாதையில் இருந்து திரும்பி வர வைக்காமல் சந்தர்ப்பம் வரும் போது தொடரும் தன்மையுடையது. அதுவே உலக நியதி. துரதிஷ்ரவசமாக, அரசியல் போரை மேற்கொள்ளாமல் (மற்றவர்களையும் மேற்கொள்ள விடாமல்) இராணுவ முறையிலேயே முழு நம்பிக்கை கொண்டு அதை செய்வதிலேயே நம்மவர்கள் இருந்தனர். ஆயுத போராட்டம் இன்று சாத்தியமற்றது என்று மக்கள் இன்று நினைப்பதற்கு அதில் ஈடுபட்டவர்களே முழுப்பொறுப்பையும் ஏற்க வேண்டும். (தலைப்புக்கு அப்பாற்பட்டதாயிலும் நீங்கள் என்னிடம் கேட்ட கேள்விக்கு பதிலாகவே இதை தெரிவித்தேன்)
-
By vanangaamudi · Posted
முதலில் இந்த இயந்திரத்தை பாவனைக்கு பாதுகாப்பற்றது என தடை செய்யவேண்டும். இதை தயாரித்து விற்பனை செய்யும் தொழிற்சாலைக்கு அரசு அனுமதி வழங்கப்பட்டதா என்பதையும் பரிசீலிக்கவேண்டும். அனைத்துக்கும் மேலாக இந்த இலவச விளம்பரத்தை யாழில் இருந்து அகற்றுவது நல்லது. -
By உடையார் · பதியப்பட்டது
பயணத்தடை, சொத்துக்களை முடக்குதல் – மிசேல் பசெலெடின் பரிந்துரைகள் 29 Views போர்க் குற்றங்களில் ஈடுபட்ட சிறீலங்கா அரச அதிகாரிகள் மற்றும் படை அதிகாரிகளின் வெளிநாடுகளில் உள்ள சொத்துக்களை முடக்குதல் மற்றும் அவர்கள் மீதான பயணத்தடைகளை கொண்டுவருதல் போன்ற விடயங்கள் ஐக்கிய நாடுகள் சபையின் ஆணையாளரினால் சமர்ப்பிக்கப்பட்டவுள்ள அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளரின் அறிக்கையானது சிறீலங்கா அரசுக்கு அனுப்பப்பட்டிருந்தது. அதற்கான பதிலை சிறீலங்கா அரசு எதிர்வரும் 27 ஆம் நாளுக்கு முன்னர் அனுப்ப வேண்டும். இந்த நிலையில் அறிக்கையில் உள்ள விடயங்கள் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் சிறீலங்கா அரச அதிகாரிகள் மற்றும் படை அதிகாரிகள் மீதான பயணத்தடை மற்றும் அவர்களின் சொத்துக்களை முடக்குதல் போன்ற விடையங்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும் சிறீலங்காவில் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு அனைத்துலக குற்றவியல் நீதி மன்றத்தின் விசாரணையையும் ஆணையாளர் மிசேல் பசெலெட் பரிந்துரை செய்துள்ளார். அதேசமயம், சிறீலங்காவில் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பில் ஆதாரங்களை சேகரிக்கவும், விசாரணைகளை மேற்கொள்வதற்கும் அனைத்துலக பொறிமுறையை மேற்கொள்வது தொடர்பிலும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். இதனிடையே, ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவரின் அறிக்கையானது புலம்பெயர் சமூகத்தின் கருத்துக்களை அப்படியே பிரதிபலிப்பதாக சிறீலங்காவின் வெளிவிவகாரச் செயலாளர் அட்மிரல் ஜெயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார். முன்னைய அறிக்கையை விட இது மிகவும் மோசமான அறிக்கை அதாவது வெளிநாட்டு நீதிபதிகள் தவிர்ந்த 30/1 தீர்மானத்தின் சரத்துக்கள் அனைத்தையும் நிறைவேற்றவேண்டிய கட்டயத்திற்கு சிறீலங்கா தள்ளப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார். https://www.ilakku.org/?p=40151 -
நட்டுவை தவறான முறையில் பந்துவீசுகின்றார் என்று ஓராண்டு பந்து வீச விடவில்லை தமிழ்நாட்டு கிரிக்கெட் சங்கம், பந்து வீசும் பாணியை மாற்றி இப்போது சாதித்திருக்கிறார்.
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.