Jump to content

வூல்மர் இயற்கையாகவே மரணமடைந்தார் சர்ச்சைக்கு அடுத்த வாரம் முற்றுப்புள்ளி


Recommended Posts

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பொப் வூல்மர் மரணம் தொடர்பாக நிலவி வந்த சர்ச்சை முடிவுக்கு வருகிறது. அவரது மரணம் இயற்கையானது தான் என்று ஜமேக்கா பொலிஸார் அறிவிக்கவிருக்கிறார்கள்.

மேற்கிந்தியாவில் நடந்த உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் போது பாகிஸ்தான் பயிற்சியாளர் பொப் வூல்மர் இறந்தார். ஜமேக்காவில் அவர் தங்கியிருந்த ஹோட்டலில் மர்மமான முறையில் இறந்துகிடந்தார்.

இது ெதாடர்பாக பாகிஸ்தான் வீரர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. முதல் கட்ட சோதனையில், வூல்மர் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டிருப்பதாக ஜமேக்கா பொலிஸார் கூறினார்கள். இதனால், இந்த வழக்கு சூடுபிடித்தது. இருப்பினும், கொலையாளிகள் யாரும் சிக்கவில்லை.

இதைத் தொடர்ந்து ஸ்கொட்லாந்து யார்ட் துப்பறியும் நிபுணர்கள் ஜமேக்கா சென்று விசாரணை மேற்கொண்டனர். இதில் வூல்மர் கொலை செய்யப்படவில்லை. அவர் மரணம் இயற்கையானது என்று தங்கள் அறிக்கையில் அவர்கள் குறிப்பிட்டனர்.

இதனால், இந்த வழக்கில் குழப்பம் ஏற்பட்டது. சம்பவம் நடந்து 2 மாதத்திற்கு மேலாகியும் நிலவி வந்த இந்த சர்ச்சை விரைவில் முடிவுக்கு வரவிருக்கிறது.

வூல்மர் மரணத்தில் இன்னும் மர்மம் இருப்பதாக நீடித்துக் கொண்டு செல்ல ஜமேக்கா பொலிஸார் விரும்பவில்லை. அவர்கள் தங்களது விசாரணை முடிவில் பொப் வூல்மர் கொலை செய்யப்படவில்லை. அவர் இயற்கையான முறையில் தான் இறந்திருக்கிறார். வூல்மர் ஏற்கனவே, உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார். நீரிழிவு நோயாலும் அவதிப்பட்டார். இதன் காரணமாக அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்திருக்கிறார் என்று அடுத்தவாரம் அறிவிக்கவிருப்பதாக இங்கிலாந்தில் இருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டிருக்கிறது.

இது பற்றி வூல்மரின் மனைவி கில்லிடம் கேட்டபோது, `வூல்மர் இயற்கையான முறையில் தான் இறந்தார் என்பதற்கான எந்த தகவலும் எங்களுக்கு வரவில்லை' என்றார்.

--thinakkural--

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.