Jump to content

கைலாசாவில் தொழில் தொடங்க 3மாவட்டங்களுக்கு முன்னுரிமை- நித்தியானந்தா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Nithyanantha.jpg

கைலாசாவில் தொழில் தொடங்க 3மாவட்டங்களுக்கு முன்னுரிமை- நித்தியானந்தா

மதுரை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்ட மக்கள் கைலாசாவில் தொழில் தொடங்க முன்னுரிமை அளிக்கப்படும் என நித்தியானந்தா தெரிவித்துள்ளார்.

பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட நித்தியானந்தாவை கைது செய்யுமாறு நீதிமன்றத்தினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று, கைலாசா என்ற தனித்தீவை உருவாக்கியுள்ளதாக அறிவித்தார்.

எனினும் குறித்த கைலாசா என்ற தனித்தீவு எந்த இடத்தில் இருக்கின்றது என சரியான தகவல் தெரியாமல் பொலிஸார் நித்தியானந்தாவை தேடி வருகின்றனர்.

இதனிடையே  கைலாசா எனும் தனிநாட்டின் பிரதமர் தான்தான் என தெரிவித்தார். பின்னர், தனிக்கொடி, கடவுச்சீட்டு ஆகியவற்றை உருவாக்கியுள்ளதுடன் கைலாசா நாட்டுக்கான ரிசர்வ் வங்கியும் தொடங்கப்பட்டதாக அறிவித்தார்.

மேலும், கைலாசா நாட்டுக்கான நாணயங்களையும் விநாயகர் சதுர்த்தியன்று அவர்  வெளியிட்டுள்ளார். அதற்கு தமிழில் பொற்காசு என பெயர் வைத்துள்ளார்.

இந்நிலையில் 56 இந்து நாடுகளுடன் மட்டுமே தான் வர்த்தகம் செய்ய விரும்புவதாக நித்தியானந்தா தெரிவித்துள்ளார்.

அந்தவகையில் தனது நாட்டிற்கு வருகை தரும் திருவண்ணாமலை, காஞ்சிபுரம், மதுரை ஆகிய 3 மாவட்ட மக்களுக்கு தொழில் தொடங்குவதற்கு முன்னுரிமை  அளிக்கப்படும் என  நித்யானந்தா தற்போது அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/கைலாசாவில்-தொழில்-தொடங்க/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆள் குடுக்கிற அலுப்பில, விரைவில் உள்ளுக்கு போகப்போகின்றார்,😂

பணம் எப்படியெல்லாம் சேர்கின்றது 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் கூட பிறந்த ஊர மறந்து விடுவாரோ பயந்து போய்ட்ன்..👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

நான் கூட பிறந்த ஊர மறந்து விடுவாரோ பயந்து போய்ட்ன்..👍

தோழர் என்ன தொழில்வாய்ப்பு வைத்திருக்கிறார் என்று எண்ணும்போது?
எனக்கும் ஒரு மதுரை பிறப்பு  சான்றிதழ் வேணும் .... கொஞ்சம் ஒழுங்கு பண்ணித்தாருங்கள்.

அவ்வளவு பக்தைகளும் இருக்கும் கைலாசாவில் 
தொழில்வாய்ப்பு எனும்போதே உடம்பு கூசுது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Maruthankerny said:

தோழர் என்ன தொழில்வாய்ப்பு வைத்திருக்கிறார் என்று எண்ணும்போது?
எனக்கும் ஒரு மதுரை பிறப்பு  சான்றிதழ் வேணும் .... கொஞ்சம் ஒழுங்கு பண்ணித்தாருங்கள்.

அவ்வளவு பக்தைகளும் இருக்கும் கைலாசாவில் 
தொழில்வாய்ப்பு எனும்போதே உடம்பு கூசுது 

10:40 to 12:34

அவயள் பக்தி பாடல் போட விடுவினம் .. ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் தாங்காது அலுப்பு தட்டிவிடும் தோழர்..😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Maruthankerny said:

தோழர் என்ன தொழில்வாய்ப்பு வைத்திருக்கிறார் என்று எண்ணும்போது?
எனக்கும் ஒரு மதுரை பிறப்பு  சான்றிதழ் வேணும் .... கொஞ்சம் ஒழுங்கு பண்ணித்தாருங்கள்.

அவ்வளவு பக்தைகளும் இருக்கும் கைலாசாவில் 
தொழில்வாய்ப்பு எனும்போதே உடம்பு கூசுது 

தம்பி ஏன் இந்த வீபரீத ஆசை? போனால் படுகுழிதான் மீண்டு வர ஏலாது😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, Maruthankerny said:

 

அவ்வளவு பக்தைகளும் இருக்கும் கைலாசாவில் 
தொழில்வாய்ப்பு எனும்போதே உடம்பு கூசுது 

பக்தைகளுக்கு உடல் மசாஜ் சென்டர்  திறந்து நடத்துவமா....தோழரே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, putthan said:

பக்தைகளுக்கு உடல் மசாஜ் சென்டர்  திறந்து நடத்துவமா....தோழரே

அதெல்லாம் அரசர் பார்த்துக்கொள்ளுவார்......நீங்கள் அரசருக்குத்தான் மசாஜ் செய்யவேண்டி இருக்கும், சம்மதமா......!  😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் இப்படியே கதைச்சுக் கொன்டு இருங்கோ.நான் இப்ப ஏர்போட்டில் நிக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

private-number-caller-1.jpg

சில வாரங்களுக்கு முன்னரே ஒரு "பிரைவேட் எண்"லிருந்து அழைப்பு வந்தது..! 🤔

என்னவென்று விசாரித்தால்,

'கைலாசா'வில் மின்சார வசதி கட்டமைப்புகளை (Electrical Network Infrastructure) சடுதியில் ஏற்படுத்தி தர நீங்கள் முன்வரவேண்டும், இங்கு புதிதாக ஏற்படுத்திவரும் மின்சார துறைக்கு நீங்கள்  தலைமை தாங்கவேண்டும், நீங்கள் வல்லவர், நல்லவர்' என அன்பான வற்புறுத்தல்கள்.. 🤗

அழைத்தவர் ஒரு பெண் பொறியாளார், அதுவும் மின் பொறியாளர்..!! :)

இந்த அரிய சந்தர்ப்பத்தை தவற விடுவேனா..?

கைலாசா நாட்டின் 'ஹெலிபேடில்' நான் இறங்கி நிற்கிறேன்..இப்போ..! 🥰

அவசரக் குறிப்பு:

தமிழர்களுக்கு மட்டுமே 'கைலாசா மின்சார துறை'யில் வேலை வாய்ப்பு வழங்கப்படும்..!

2iBt.gif     powerlines-generators.jpg  

 

Link to comment
Share on other sites

ஐயையோ! வன்னியர் ஒரு பூட்டப் பிள்ளையைக் கூடக் காணாது கைலாசம் போகப் போகிறாரா...? கடவுளே.!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Paanch said:

ஐயையோ! வன்னியர் ஒரு பூட்டப் பிள்ளையைக் கூடக் காணாது கைலாசம் போகப் போகிறாரா...? கடவுளே.!!

நீங்கள் வேற.....அவர் இப்பவே கைலாசாவில்  வாரிசுகள்  உருவாக்கப் போகிறார் போல ......!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவரின் அலம்பறைகள் எவ்வாறு எவ்வித பிரச்னைகளும் இல்லாமல் தாங்கப்படுகின்றன என்று ஒரு இந்திய நண்பரிடம் விசாரித்தேன்.

இவர் ஏதோ ஒரு சக்தி கொண்டவர் என்ற பயத்தினை கர்நாடக,  தமிழக அரசியல் வாதிகள் மத்தியில் உருவாக்கி விட்டார்.

இவரை தொட்டவர்கள் ஏதோ ஒருவகை சிக்கலுக்கு ஆளாகின்றனர் என்று உணர்கின்றனர்.

இவரை முதலில் கைது செய்த எடியூரப்பா பதவி இழந்தார். 

அவருக்கு பின் பதவிக்கு வந்த சீத்தாராமையாவின் குடும்பத்தில், (மகன் என்று நிணைக்கிறேன்) ஓர் துர் மரணம்.

எடியூரப்பா சாமியார் காலில் விழுந்து மன்னிப்பை கோரி அவர் ஆசீர்வாதத்தினால், பகீரதப் பிரயத்தனத்துடன் பதவிக்கு மீண்டும் இப்போது வந்துள்ளனர்.

ஜெயலலிதா நடவடிக்கை எடுக்க முயல, சிறைக்கு போனார்... பின்னர் இறந்தார்.

சாமியார் வேற தானே கடவுள் என்கிறார்.

காகம் இருக்க பனம்பழம் விழுந்த கதையோ தெரியவில்லை. இந்த பயம் அவரை கைதாகாமல் வெளியே இருக்க வைக்க, எடியூரப்பா பிஜேபி என்பதாலும் மத்திய அரசும் கண்டுகொள்ளாமல் , போவதால் அவரும் கைலாச என்று அலம்பரை பண்ணுகிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, சுவைப்பிரியன் said:

நீங்கள் இப்படியே கதைச்சுக் கொன்டு இருங்கோ.நான் இப்ப ஏர்போட்டில் நிக்கிறேன்.

நான் கைலாசாவுக்கை நிண்டு தேத்தண்ணி ஆத்திக்கொண்டு நிக்கிறன், 😎

Link to comment
Share on other sites

28 minutes ago, Nathamuni said:

இவரின் அலம்பறைகள் எவ்வாறு எவ்வித பிரச்னைகளும் இல்லாமல் தாங்கப்படுகின்றன என்று ஒரு இந்திய நண்பரிடம் விசாரித்தேன்.

இவர் ஏதோ ஒரு சக்தி கொண்டவர் என்ற பயத்தினை கர்நாடக அரசியல் வாதிகள் மத்தியில் உருவாக்கி விட்டார்.

இவரை தொட்டவர்கள் ஏதோ ஒருவகை சிக்கலுக்கு ஆளாகின்றனர் என்று உணர்கின்றனர்.

இவரை முதலில் கைது செய்த எடியூரப்பா பதவி இழந்தார். மீண்டும் இப்போது வந்துள்ளனர்.

ஜெயலலிதா நடவடிக்கை எடுக்க முயல, சிறைக்கு போனார்... பின்னர் இறந்தார்.

காகம் இருக்க பனம்பழம் விழுந்த கதையோ தெரியவில்லை.

இவர் ஏதோ ஒரு சக்தி கொண்டவர் என்பதில் உண்மையும் இருக்கலாம். நாம் அறிந்தது கை மண் அளவு. அறியாதது பிரபஞ்சங்களையும் தாண்டிய அளவு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Paanch said:

ஐயையோ! வன்னியர் ஒரு பூட்டப் பிள்ளையைக் கூடக் காணாது கைலாசம் போகப் போகிறாரா...? கடவுளே.!!

2 hours ago, suvy said:

நீங்கள் வேற.....அவர் இப்பவே கைலாசாவில்  வாரிசுகள்  உருவாக்கப் போகிறார் போல ......!  😁

கரண்ட் கனெக்சன் குடுக்கப்போன வன்னியர் அபிசேக ஆராதனையில் கலந்திருப்பாரா? :grin:

 

Link to comment
Share on other sites

1 hour ago, குமாரசாமி said:

கரண்ட் கனெக்சன் குடுக்கப்போன வன்னியர் அபிசேக ஆராதனையில் கலந்திருப்பாரா?

வன்னியர் கைலாசத்திற்கு வந்து ஆராதனையிலும் கலந்து கரண்ட் கனெக்சனும் கொடுத்துவிட்டார். அவரைக் கண்டதும் ஒன்று என்னமா பளிச்சென்று மண்டபமே ஒளிரப் பிரகாசிக்குது, நம்பமுடியவில்லையா 49 வினாடிகள் அதாவது 1 நிமிடம் 2 வினாடியிவிருந்து 51 வினாடிவரை வீடியோவைப் பாருங்கள்.🤩    

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Paanch said:

வன்னியர் கைலாசத்திற்கு வந்து ஆராதனையிலும் கலந்து கரண்ட் கனெக்சனும் கொடுத்துவிட்டார். அவரைக் கண்டதும் ஒன்று என்னமா பளிச்சென்று மண்டபமே ஒளிரப் பிரகாசிக்குது, நம்பமுடியவில்லையா 49 வினாடிகள் அதாவது 1 நிமிடம் 2 வினாடியிவிருந்து 51 வினாடிவரை வீடியோவைப் பாருங்கள்.🤩    

சாமிகளே,

'சம்சாரமே மின்சாரம்' என மின்சாரத்தோடு வாழ்ந்து, கைலாசாவிற்கு ஒளியை கொடுக்க முனைந்தால், நீங்கள் தவறுதலாக எடை போடுகிறீர்கள். vil-respire.gifvil2_cligne.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, suvy said:

அதெல்லாம் அரசர் பார்த்துக்கொள்ளுவார்......நீங்கள் அரசருக்குத்தான் மசாஜ் செய்யவேண்டி இருக்கும், சம்மதமா......!  😎

அரசருக்கு ரெஸ்ட் கொடுப்பம் என்றால் விட மாட்டியள் போல....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 26/8/2020 at 17:44, putthan said:

பக்தைகளுக்கு உடல் மசாஜ் சென்டர்  திறந்து நடத்துவமா....தோழரே

உங்களுக்கு ரொம்பத்தான் ஆசை !!!

Link to comment
Share on other sites

On 27/8/2020 at 05:50, ராசவன்னியன் said:

சாமிகளே,

'சம்சாரமே மின்சாரம்' என மின்சாரத்தோடு வாழ்ந்து, கைலாசாவிற்கு ஒளியை கொடுக்க முனைந்தால், நீங்கள் தவறுதலாக எடை போடுகிறீர்கள். vil-respire.gifvil2_cligne.gif

ராஜவன்னியர், அப்ப அப்ப தேவைப்படும் போது றிமூட் மூலம்  பவர் கட் பண்ணும் தொழில்நுட்ப வசதியை அளித்தால் சன்னியாசிகள் சக்தி வழிபாடு செய்யும் போது வீடியோ  எடுத்து  அவர்களின் பக்தியை குலைக்கும் விஷமிகளின் செயலை ஒழிக்கலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/9/2020 at 12:26, tulpen said:

ராஜவன்னியர், அப்ப அப்ப தேவைப்படும் போது றிமூட் மூலம்  பவர் கட் பண்ணும் தொழில்நுட்ப வசதியை அளித்தால் சன்னியாசிகள் சக்தி வழிபாடு செய்யும் போது வீடியோ  எடுத்து  அவர்களின் பக்தியை குலைக்கும் விஷமிகளின் செயலை ஒழிக்கலாம். 

அதற்கும் வழி இருக்கிறது.

வளர்ந்த நாடுகளில் ஸ்கேடா(SCADA) என்ற தொழிற் நுட்பத்தின் மூலம் நாட்டிலுள்ள அனைத்து மின்சார கட்டமைப்புகளை ஒருங்கிணைத்து நெறிப்படுத்துகிறார்கள்.

உதாரணமாக, நித்தியானந்த குடியிருக்கும் அல்லது அல்லது நீங்கள் சொன்ன சக்தி வழிபாடின்போது அந்த வீட்டிற்கு மின்சாரம் விநியோகிக்கும் குறிப்பிட்ட மின்சார கம்பிக்கு(Cable Feeder) மின் விநியோகத்தை தொலைதூரத்திலிருக்கும் கட்டுப்பாட்டு அறையிலிருக்கும்(SCADA Master Station) கணணியில் ஒரு பொத்தானை தட்டினால் மின்சாரம் உடனே துண்டிக்கப்பட்டுவிடும்..!

ஆனால் இப்பொழுது இருட்டிலும் தெளிவாக காணொளி பதியும் கருவிகள் வந்துவிட்டனவே..! நீங்கள் சொல்லும் விஷமிகள் அந்தவகை புதிய கருவிகளை பயனபடுத்தினால் ஒன்று செய்ய இயலாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கைலாசா நாட்டில் ஹிந்து பாராளுமன்றம் அமைக்கப்படும் : நித்தியானந்தா வெளியிட்டுள்ள புதிய வீடியோவில் அறிவிப்பு.!

full.jpg

கைலாசா: இந்தியாவில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய சுவாமி நித்தியானந்தா க ைலாசா என்ற நாட்டை உருவாக்கி வருகிறார். நாட்டில் தேடப்படும் குற்றவாளி பட்டியலில் உள்ள நித்தியானந்தா எங்கு இருக்கிறார் என்பது எந்த காவல் அமைப்புகளுக்கும் தெரியவில்லை.

இதற்கிடையே நித்தியானந்தா தான் கைலாசா என்ற நாட்டை உருவாக்கி அங்கு வாழ்ந்து வருவதாக அவரே வீடியோ வெளியிட்டார். இது குறித்து நடந்த ஆய்விலும் இந்திய அதிகாரிகள் குறிப்பிடும் வகையில் இதுவரையில் எதையும் கண்டறியவில்லை.

IMG-20200907-140136.jpg

ஓரு ஆண்டுக்கு மேலாக அதிகாரிகள் நித்தியானந்தாவைத் தேடி வரும் (?) நிலையில், செய்திகளுக்குப் பேட்டி அளிப்பது, வீடியோக்கள் வெளியிடுவது, கைலாசா நாடு குறித்து அறிவிப்புகளை வெளியிடுவது உள்ளிட்டவற்றை அவர் வாடிக்கையாக கொண்டிருந்தார்.

கைலாசா நாட்டுக்கென தனி ரிசர்வ் பேங்க், கரன்சிகள் என அதிரடி அறிவிப்பை விநாயகர் சதுர்த்தியன்று நித்தியானந்தா வெளியிட்டார். இந்நிலையில் கைலாசா நாட்டில் பாராளுமன்றம் அமைப்பது தொடர்பாக புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

அதில் கைலாசா நாட்டில் ஹிந்து பாராளுமன்றம் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார். இதை தொடர்ந்து விரைவில் கைலாசா நாட்டிற்கான பாஸ்போர்ட் குறித்த அறிவிப்பும் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.

https://m.dinakaran.com/article/news-detail/615190

  டிஸ்கி :  

வல வல.. கொல கொல.. என்டு பகிடி கதைக்காமல் கைலாச நாடாளுமன்றத்தில் மெம்பர் ஆக வழிய பாருங்கப்பா .!.👍 ☺️..😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 26/8/2020 at 19:35, கற்பகதரு said:

இவர் ஏதோ ஒரு சக்தி கொண்டவர் என்பதில் உண்மையும் இருக்கலாம். நாம் அறிந்தது கை மண் அளவு. அறியாதது பிரபஞ்சங்களையும் தாண்டிய அளவு.

முதலில் நல்ல பச்சை மட்டையால் நாலு சாத்த எல்லாம் சரியாகும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, பெருமாள் said:

முதலில் நல்ல பச்சை மட்டையால் நாலு சாத்த எல்லாம் சரியாகும் .

ஏமாறுபவர்கள் இருக்கும் வரை, ஏமாற்றிக்கொண்டிருப்பவர்களுக்கு பஞ்சமேது,

இவர் தொட்ட இடம் நல்ல இடம், அதுதான் இன்றுவரை இவரை சூழ ஒரு படை😁

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.