Jump to content

இந்திய அணியின் சிரேஷ்ட வீரர்களுடன் புதிய ஒப்பந்தம் குறித்து 11 ஆம் திகதி பேச்சு


Recommended Posts

புதிய ஒப்பந்தம் குறித்து இந்திய சிரேஷ்ட வீரர்களுடன் கிரிக்கெட் சபையின் 2 பேர் கொண்ட குழு 11 ஆம் திகதி ஆலோசிக்கவுள்ளது.

உலகக் கிண்ண தோல்வியின் எதிரொலியாக இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு இருந்த பழைய ஒப்பந்த முறை அடியோடு ரத்து செய்யப்பட்டது.

அந்த முறையில் ஏ, பி, சி என்று மூன்று பிரிவாக வீரர்கள் தரம் பிரிக்கப்பட்டு முறையே 50 இலட்சம், 35 இலட்சம், 20 இலட்சம் ரூபா ஆண்டுக்கு ஊதியமாக வழங்கப்பட்டது.

இதற்குப் பதிலாக தற்போது புதிய ஒப்பந்தத்தை இந்திய கிரிக்கெட் சபை வகுத்துள்ளது.

இதன்படி பாகுபாடின்றி அனைத்து வீரர்களுக்கும் சமமாக 5 இலட்சம் ரூபா ஊதியம் வழங்கப்படும் என்று கிரிக்கெட் சபை அறிவித்தது.

மேலும், ஒவ்வொரு போட்டி மற்றும் தொடர்களில் கிடைக்கும் வெற்றி அடிப்படையில் போனஸ், ஊக்கத் தொகை வீரர்களுக்கு இலட்சக்கணக்கில் வழங்கப்படும். போட்டிக் கட்டணமும் உண்டு.

கிரிக்கெட் சபையின் இந்த புதிய ஒப்பந்தத்தில் வீரர்கள் இன்னும் கையெழுத்திடவில்லை.

இதில் சில திருத்தங்களை செய்ய வீரர்கள் வற்புறுத்துவார்கள் என்று தெரிகிறது. இது தொடர்பாக வீரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த ஏற்கனவே கிரிக்கெட் சபைத் துணைத் தலைவர் மனோகரன், பொருளாளர் என். ஸ்ரீனிவாசன் ஆகியோரை கொண்ட 2 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழு 11 ஆம் திகதி சிரேஷ்ட வீரர்கள் சிலருடன் ஒப்பந்தம் குறித்து பெங்களூரில் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக இந்திய கிரிக்கெட் சபை செயலாளர் நிரஞ்சன் ஷா தெரிவித்தார்.

இந்திய கிரிக்கெட் சபையின் செயற்குழு 12 ஆம் திகதி டில்லியில் கூடுகிறது. அதற்கு ஒருநாள் முன் வீரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.

விளம்பர கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்தும் வீரர்கள் கோரிக்கை விடுப்பார்கள் என்று கூறப்படுகிறது.

--thinakkural--

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.