Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: tree, plant, sky, shoes, grass, outdoor and nature

 

என் வீட்டிலிருந்து கொஞ்சத் தூரம் சென்றால் அந்தப் பெருவெளி கண்ணுக்கு எட்டிய தூரம்வரை  பரந்து விரிந்திருந்தது. அந்த வெளியின் நடுவே புற்களைத் தவிர வேறு எதுவும் இல்லை. ஆனால் சுற்றிவர பெரு மரங்கள் கிளைபரப்பி கோடையில் இலைகள் நிறைந்துபோய் பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமான காட்சி.

காலையில் நடப்பது எனக்கு மட்டுமல்ல பலருக்கும் விரும்பியோ விரும்பாமலோ செய்யவேண்டிய ஒரு கடனாக மாறியிருந்தது. எனக்கு மற்றவர்களுடன் சேர்ந்து நடப்பதும் சரிவராது. ஏனெனில் எப்படியும் இருவர் அமைதியாக நடக்கவே முடியாது. ஏதாவது ஒரு கதையில் ஆரம்பித்து மற்றொன்றில் தாவித் தொடரும்.  நான் இரு கைகளையும் அரைவாசி தூக்கியபடி விசுக் விசுக்கென நடக்கத் தொடங்கி  இருப்பது ஆண்டுகளாவது ஆகியிருக்கும்.

எப்போதுமே மற்றவர்களுக்காக பலதையும் விட்டுக்கொடுக்காத என் மனம் இதற்கும் இசைவதில்லை. அதனால் காலை ஆறுமணிக்கே எழுந்து தனியாகச் சென்று நடக்கவாரம்பித்துவிடுவேன். அநேகமாக அந்த நேரம் ஒரு இரண்டு மூன்றுபேர் தான் தூரத்தில் நடந்துகொண்டிருப்பார்கள். அது மனதுக்கு ஒரு துணிவையும் கொடுக்கும். மழைக்காலங்களில் சோம்பலில் வழிந்தபடி படுத்துக்கிடப்பதையே பலரும் விரும்புவதால் நானும் சிலநேரம் கடமை தவறாது  எழுப்பும் மணிக்கூட்டை நிறுத்திவிட்டுப் படுத்தாலும் என்கணவர் எழும்பு என்று அரியண்டப்படுத்தியே எழுப்பிவிடுவார்.

அவர் ஒண்டும் என்னில உள்ள கரிசனையால் என்னை எழுப்புவதில்லை. நான் ஆறுக்கு எழும்பி அவருக்கு வேலைக்குச் சாப்பாடு கட்டிவைத்து, பாலைக் காய்ச்சி தண்ணி எதுவும் கலக்காமல் கோப்பி போட்டு வைத்துவிட்டு நடையைக் கட்டுவேன். முன்னர் எல்லாம் ஒருசில நாட்கள் நான் எழும்பாது விட்டால் மனிசன் தானாகத் தேநீரைப் போட்டுக் குடிக்காமல் போயிடுவார். அன்று முழுதும் எனக்கு எதோ குற்ற உணர்வாகவே இருக்கும். ஆனா இப்ப அதை எல்லாம் கடந்து வந்தாச்சு. எனக்கு காலையில் படுக்கவேணும் போல இருந்தால் யாரையும் பற்றிக் கவலை கொள்ளாமல் படுக்க முடிகிறது. நானும் மனிசிதானே. நெடுக எல்லாருக்கும் வேலை செய்துகொண்டு இருக்க ஏலுமே. சரி சொல்லவந்த விசயத்துக்கு வாறன்.

கொரோனாக் காலத்தில ஆறு மணிக்கு எழும்பிப் போனால்த்தான் குறைவான ஆட்கள் நடந்துகொண்டிருப்பினம். ஒரு ஏழு மணிக்குப் போனால் அந்தப்பக்கம் இந்தப்பக்கம் என்று எக்கச்சக்கமான சனம். என்னடா இது என்று அடுத்தநாள் முகக் கவசம் அணிந்துகொண்டு போனால் என் வேக நடைக்கு முகக்கவசம் நனைந்து மூச்சும் அடைப்பதுபோல் இருக்க, அடுத்த நாளில் இருந்து ஆறுமணிக்கே எழுந்து நடப்பது. இல்லையென்றால் படுத்தே இருப்பது என்றாகிவிட மனிசனின் புறுபுறுப்பு அதைவிட அதிகமாகிப் போனது. வேலைவெட்டியும் இல்லை. உள்ள சாப்பாடெல்லாம் செய்து யூடியூப்பில் போடுறன் எண்டு சாப்பிட்டுத் தள்ளுறாய். உடம்பு வைக்கப் போகுது எழும்பு எழும்பு என்று ...... அந்தக் குத்தல் கதையைக் கேட்பதிலும் எழும்பி நடக்கிறதே மேல் என்று நடக்கப் போக புதிதாக எனக்கொரு பிரச்சனை அங்கேயும்.

கூடுதலாக அங்கே நடப்பவர்கள் இடதுபக்கமாகவே நடந்து போக ஒரு சிலர்தான் எதிர்ப்பக்கமாக வருவினம். நான் யாரும் இடப் பக்கமாகத் தூரத்தில் வருவது தெரிந்தால் வலப்பக்கமாக மாறி நடக்கத் தொடங்குவன். என் கண்கள் பார்க்கின் தூரத்தை மனதால் அளந்து அவர்கள் அதிக தூரம் என்றால் நான் மாறி நடப்பன். நான் அதிக தூரம் நடந்திருந்தால் அதே பக்கமாக எள்ளளவும் நகராமல் நடந்துகொண்டிருப்பன். வாறவை என்னை விலத்தி நடக்க வேண்டியதுதான். அவள் ஒருத்தி இப்ப புதிதாக நடக்கவாரம்பித்து நான் போகும் நேரத்துக்கு வருவதுமில்லாமல் நான் நடக்கும் இடப்பக்கமாகவே எதிர்ப்புறம் நடந்து வருகிறாள்.

ஒருநாள் இரு நாட்கள் புதியவள் என்பதனால் விட்டுக்கொடுத்து நான் விலகி நடந்தால் அவவுக்கு தான்பெரிய மகாராணி எண்ட நினைப்பு. தொடர்ந்து ஒரு வாரமா அந்தப் பக்கமிந்தப்பக்கம் போகாமல் அதே நடை.  நானும் எத்தனை நாள் தான் பொறுமையாய் நடப்பது ? இண்டைக்கு இவவை ஒருகை பார்ப்பதாக மனதில் எண்ணிக்கொண்டு குனிந்ததலை நிமிராமல் நடந்துகொண்டிருக்க, எனக்கு முன்னாள் அவள் வருவதை என் கண்கள் கண்டுகொண்டவுடன் அவள் என்னை இடித்துவிட்டுச் சென்ற இடியில் என் தேசம் குலுங்கிப் போக மனதில் கோபம் கோபுரம்கட்ட ஆரம்பிச்சிட்டுது.

இரண்டாவது சுற்று நடக்கும்போதும் பார்த்தால் நான் அதே பக்கமாக அதிக தூரம் நடந்திருக்க இடையில் இருந்த சிறிய நடை பாதையில் வந்து நான் நான் நடந்துவந்துகொண்டிருந்த பாதையில் ஏறியவளுக்கு நான் நடந்துகொண்டிருப்பது தெரிந்ததுதானே இருக்கவேணும். ஆனால் அவவோ எதுவும் தெரியாததுபோல் நடந்து வர, நானும் மற்றப்பக்கம் மாறி நடக்காமல் தொடர்ந்து நடக்க இன்னும் ஒரு மூன்று மீற்றர் தூரம்தான் இருக்கு அவளுக்கும் எனக்கும். என் மனம் இம்முறை விட்டுக்கொடுக்க முடியவே முடியாது எண்டு அடம்பிடிக்க, அவள் இம் முறையும் இடித்துக்கொண்டு போனால் அவமானம்போக அவளை இடிக்கும் அளவு எனக்கும் வலுவில்லை என்பது அவள் முதல் சுற்றில் இடித்த அனுபவம் சொல்ல, மனம் ஒரு செக்கனில் முடிவெடுக்க நான் களராத காலனியின் நூலைக் கட்டுவதற்காய் குனிய அவள் வேறு வழியேயின்றி என்னை விலத்திக்கொண்டு மற்றப்பக்கமாகப் போக, மனதில் ஒரு நின்மதியும் மகிழ்வும் ஏற்பட அந்தப் பெருவெளியின் மரங்களினூடே கைவீசி முகம் கொள்ளாச் சிரிப்புடன் நடக்கிறேன் நான் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அவள் இம் முறையும் இடித்துக்கொண்டு போனால் அவமானம்போக அவளை இடிக்கும் அளவு எனக்கும் வலுவில்லை என்பது அவள் முதல் சுற்றில் இடித்த அனுபவம் சொல்ல, மனம் ஒரு செக்கனில் முடிவெடுக்க நான் களராத காலனியின் நூலைக் கட்டுவதற்காய் குனிய அவள் வேறு வழியேயின்றி என்னை விலத்திக்கொண்டு மற்றப்பக்கமாகப் போக, மனதில் ஒரு நின்மதியும் மகிழ்வும் ஏற்பட அந்தப் பெருவெளியின் மரங்களினூடே கைவீசி முகம் கொள்ளாச் சிரிப்புடன் நடக்கிறேன் நான் .

சுமே கில்லாடிதான் 😀 கால்தடம் போடத்தெரியுமா, அடுத்த முறை பாவியுங்கள் 🤣

"அவளை இடிக்கும் அளவு எனக்கும் வலுவில்லை " 🤔🤔🤔

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக கவனித்துப் பார்த்தீர்களா, ஒருவேளை கண் தெரியாத பெண்ணாக இருக்கப் போறார்......அதெப்படி வீட்டில் இருந்து வீதி வரை எல்லோருக்கும் உங்களோடுதான் ஒரு தனகல் .....!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, suvy said:

நன்றாக கவனித்துப் பார்த்தீர்களா, ஒருவேளை கண் தெரியாத பெண்ணாக இருக்கப் போறார்......அதெப்படி வீட்டில் இருந்து வீதி வரை எல்லோருக்கும் உங்களோடுதான் ஒரு தனகல் .....!   😁

அதுதானே .. எங்கட யாழ்கள செல்லப்பிள்ளையுடன் என்ன சேட்டை😡

 எங்கே எம் யாழ்கள தடகள வீரர்கள், அடுத்தமுறை சுமே நடக்கும் போது மூன்று சுற்று பாதுகாப்பு அரண் அமைக்க வேண்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, உடையார் said:

சுமே கில்லாடிதான் 😀 கால்தடம் போடத்தெரியுமா, அடுத்த முறை பாவியுங்கள் 🤣

"அவளை இடிக்கும் அளவு எனக்கும் வலுவில்லை " 🤔🤔🤔

 

கால்த்தடம் நல்லாய் போடுவன். ஆனா சட்டச்சிக்கல் ஏதும் வந்தாலும் எண்டுதான் ........

22 hours ago, suvy said:

நன்றாக கவனித்துப் பார்த்தீர்களா, ஒருவேளை கண் தெரியாத பெண்ணாக இருக்கப் போறார்......அதெப்படி வீட்டில் இருந்து வீதி வரை எல்லோருக்கும் உங்களோடுதான் ஒரு தனகல் .....!   😁

அதுதான் எனக்கும் விளங்கேல்லை அண்ணா

பச்சைகள் தந்த சுபேஸ், சுவி அண்ணா, குமாரசாமி ஆகியோர்க்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சம் இல்லை நன்றாகவே வாய் விட்டு சிரித்தேன். எதிராளியை இடிக்கும் வலு சுமேயிடம் இல்லையா? ஆமா நானுந்தான் ஒவ்வொரு நாளும் 5 மைல் தூரம் நடக்கிறேன் ஒரு போதும் யாரும் என்னை இடிப்பதும் இல்லை இடிப்படுவதும் இல்லை அது எப்படி உங்களுக்கு மட்டும் எங்கு போனாலும் இடர்பாடு????  உங்களில் அப்படி என்ன தான் வித்தியாசமாக உள்ளது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, வல்வை சகாறா said:

கொஞ்சம் இல்லை நன்றாகவே வாய் விட்டு சிரித்தேன். எதிராளியை இடிக்கும் வலு சுமேயிடம் இல்லையா? ஆமா நானுந்தான் ஒவ்வொரு நாளும் 5 மைல் தூரம் நடக்கிறேன் ஒரு போதும் யாரும் என்னை இடிப்பதும் இல்லை இடிப்படுவதும் இல்லை அது எப்படி உங்களுக்கு மட்டும் எங்கு போனாலும் இடர்பாடு????  உங்களில் அப்படி என்ன தான் வித்தியாசமாக உள்ளது?

அதுக்கெல்லாம் ஒரு கொடுப்பனவு வேண்டும்......"முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்படக்கூடாது".   😎

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கையில் உள்ள தண்ணீர் போத்தலில் இருந்து அபிஷேகம்   செய்துவிடுங்கோ   😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, suvy said:

அதுக்கெல்லாம் ஒரு கொடுப்பனவு வேண்டும்......"முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்படக்கூடாது".   😎

 

அது சரி இப்ப யார் இதிலை முட(வி)வன்.ஏதோ என்னால் முடிந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, சுவைப்பிரியன் said:

அது சரி இப்ப யார் இதிலை முட(வி)வன்.ஏதோ என்னால் முடிந்தது.

Vandu Murugan Vadivelu Politicians Comedy- Vakkil Vandu Murugan GIF | Gfycat

ஏன் .....நல்லாத்தானே போயிட்டிருக்கு.....!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்ரி,

வீண் வம்பு ஏன்?

அவளுக்கு கொரோனா கிரோனா இருந்து உங்க மேல ஒரு இருமல் இருமிவிட்டால்!!!!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, suvy said:

அதுக்கெல்லாம் ஒரு கொடுப்பனவு வேண்டும்......"முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்படக்கூடாது".   😎

 

சுவியண்ணா உங்கள் கருத்தை வாசித்தபின்னர் கவிமனம் கோணல்மானலாக யோசிக்குது.😁

சுமே இடித்தவர் ஆணா? அல்லது பெண்ணா? அல்லது பெண்களில் ஆணா? இல்லையென்றால் ஆண்களில் பெண்ணா? இந்த வித்தியாசத்தை கண்டு பிடித்து சொல்லுங்கள். ஏன் இடித்தார் என்று சொல்கிறேன்.😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அக்கோய் உங்களைப்பற்றி அவவும் இப்போ இன்னொரு தளத்திலே கதை எழுதி இருப்பாவோ 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, வல்வை சகாறா said:

கொஞ்சம் இல்லை நன்றாகவே வாய் விட்டு சிரித்தேன். எதிராளியை இடிக்கும் வலு சுமேயிடம் இல்லையா? ஆமா நானுந்தான் ஒவ்வொரு நாளும் 5 மைல் தூரம் நடக்கிறேன் ஒரு போதும் யாரும் என்னை இடிப்பதும் இல்லை இடிப்படுவதும் இல்லை அது எப்படி உங்களுக்கு மட்டும் எங்கு போனாலும் இடர்பாடு????  உங்களில் அப்படி என்ன தான் வித்தியாசமாக உள்ளது?

design அப்பிடி  😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது இரும்பு பெண்மணி தட்சரின் வாரிசாக தான் இருக்கும். பஞ்சு மூட்டைகளை கண்டு இரும்பு ஏன் விலத்தணும். (ஏதோ நம்மால முடிஞ்சது 😜)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 26/8/2020 at 10:33, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

முன்னர் எல்லாம் ஒருசில நாட்கள் நான் எழும்பாது விட்டால் மனிசன் தானாகத் தேநீரைப் போட்டுக் குடிக்காமல் போயிடுவார். அன்று முழுதும் எனக்கு எதோ குற்ற உணர்வாகவே இருக்கும். ஆனா இப்ப அதை எல்லாம் கடந்து வந்தாச்சு. எனக்கு காலையில் படுக்கவேணும் போல இருந்தால் யாரையும் பற்றிக் கவலை கொள்ளாமல் படுக்க முடிகிறது. நானும் மனிசிதானே. நெடுக எல்லாருக்கும் வேலை செய்துகொண்டு இருக்க ஏலுமே. சரி சொல்லவந்த விசயத்துக்கு வாறன்.

எனக்கு இதில அந்த இடிபாடு எல்லாம் பெரிசாப் படல்ல. அதெல்லாம் சர்வசாதாரணம். ஆனால்.. இவாட.. இந்த மனுசனின் நிலைமையை நினைச்சா தான்..

நாமளும் முந்தி நாங்களாவே விடிய எழும்பி.. ------- ரீ கப்பசீனோ.. எல்லாம் போட்டுக் குடிச்சு.. நூடில்ஸ் எல்லாம் போட்டு சாப்பிட்டு.. தான் யுனிக்கோ.. வேலைக்கோ கிளம்பிறது. இப்ப மனிசி இருக்குத்தானே (அம்மா சமைச்சு சாப்பாடு தருவாங்க தானே என்ற அந்தப் பழைய பள்ளிக்கால.. நினைப்பு வந்திட்டு) என்ற ஒரு துணிவில்.. கொஞ்சம் தாமதமாக எழும்பி.. குளிச்சுக் கிழிச்சு வெளிக்கிட.. சாப்பாடு.. ரீ எல்லாம் ரெடியாக இருக்கும். இப்ப அதுக்கு பழகிட்டு.

இவாட கதையைப் பார்த்தப்புறம்..நாங்களும்.. ஒரு காலத்தில்.. மீண்டும்.. அந்தப் பழைய நிலைமைக்குப் போகனுமா.. என்றப்போ.. கொஞ்சம்.. கலவரமாத்தான் இருக்கு. 

அதுசரி.. இவா ஏன் இதுகளை.. இதுக்க திணிக்கிறது.. எத்தின மனுசன்மார்ர மனுசிமாரும்.. யாழை வாசிப்பினம் தானே. ஓசில ஐடியாக் கொடுக்கிறது.. பதட்டப்படுறது மனுசன்மாராச்சே. எதுக்கும் உசாராத்தான் இருக்கனும். 😃😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 28/8/2020 at 00:32, வல்வை சகாறா said:

சுவியண்ணா உங்கள் கருத்தை வாசித்தபின்னர் கவிமனம் கோணல்மானலாக யோசிக்குது.😁

சுமே இடித்தவர் ஆணா? அல்லது பெண்ணா? அல்லது பெண்களில் ஆணா? இல்லையென்றால் ஆண்களில் பெண்ணா? இந்த வித்தியாசத்தை கண்டு பிடித்து சொல்லுங்கள். ஏன் இடித்தார் என்று சொல்கிறேன்.😎

இப்படி கேட்கப்படாது 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 27/8/2020 at 16:31, வல்வை சகாறா said:

கொஞ்சம் இல்லை நன்றாகவே வாய் விட்டு சிரித்தேன். எதிராளியை இடிக்கும் வலு சுமேயிடம் இல்லையா? ஆமா நானுந்தான் ஒவ்வொரு நாளும் 5 மைல் தூரம் நடக்கிறேன் ஒரு போதும் யாரும் என்னை இடிப்பதும் இல்லை இடிப்படுவதும் இல்லை அது எப்படி உங்களுக்கு மட்டும் எங்கு போனாலும் இடர்பாடு????  உங்களில் அப்படி என்ன தான் வித்தியாசமாக உள்ளது?

அறையைப் பூட்டிப்போட்டும் இருந்து  யோசிச்சும் விளங்கவே இல்லை 😎

On 27/8/2020 at 16:41, நிலாமதி said:

கையில் உள்ள தண்ணீர் போத்தலில் இருந்து அபிஷேகம்   செய்துவிடுங்கோ   😄

நான் தண்ணீர் மட்டுமல்ல போனைக் கூடக் கொண்டு போவதில்லை நடக்கும்போது. அப்படியே நின்மதியா நடப்பன்.

On 27/8/2020 at 17:32, வல்வை சகாறா said:

சுவியண்ணா உங்கள் கருத்தை வாசித்தபின்னர் கவிமனம் கோணல்மானலாக யோசிக்குது.😁

சுமே இடித்தவர் ஆணா? அல்லது பெண்ணா? அல்லது பெண்களில் ஆணா? இல்லையென்றால் ஆண்களில் பெண்ணா? இந்த வித்தியாசத்தை கண்டு பிடித்து சொல்லுங்கள். ஏன் இடித்தார் என்று சொல்கிறேன்.😎

பெண்ணேதான் 😃

On 27/8/2020 at 16:42, சுவைப்பிரியன் said:

அது சரி இப்ப யார் இதிலை முட(வி)வன்.ஏதோ என்னால் முடிந்தது.

 எனக்கும் அதுதான் சந்தேகம் ????😀

On 27/8/2020 at 17:36, முதல்வன் said:

அக்கோய் உங்களைப்பற்றி அவவும் இப்போ இன்னொரு தளத்திலே கதை எழுதி இருப்பாவோ 🤣

அட அதை யோசிக்காமல் அவசரப்பட்டிட்டனே 🤣

On 28/8/2020 at 15:52, Sabesh said:

design அப்பிடி  😉

😀😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, விசுகு said:

அது இரும்பு பெண்மணி தட்சரின் வாரிசாக தான் இருக்கும். பஞ்சு மூட்டைகளை கண்டு இரும்பு ஏன் விலத்தணும். (ஏதோ நம்மால முடிஞ்சது 😜)

இதுக்காகவே கண்டும் காணாமல் உங்களை இடிச்சிட்டுப் போகவேணும் 😀

11 hours ago, nedukkalapoovan said:

அதுசரி.. இவா ஏன் இதுகளை.. இதுக்க திணிக்கிறது.. எத்தின மனுசன்மார்ர மனுசிமாரும்.. யாழை வாசிப்பினம் தானே. ஓசில ஐடியாக் கொடுக்கிறது.. பதட்டப்படுறது மனுசன்மாராச்சே. எதுக்கும் உசாராத்தான் இருக்கனும். 😃😃

சிரிச்சு முடியேல்லை. சாகும் வரையும் பெண்களைக் கொண்டு வேலைவாங்கத்தான் உந்த ஆண்கள் கலியாணம் கட்டுறது.

On 27/8/2020 at 17:09, goshan_che said:

அன்ரி,

வீண் வம்பு ஏன்?

அவளுக்கு கொரோனா கிரோனா இருந்து உங்க மேல ஒரு இருமல் இருமிவிட்டால்!!!!

 

அதையும் ஒரு எருமை செய்ததுதான். ஓடிக்கொண்டு இருந்தவன் எனக்கு கிட்ட வந்து தும்மின தும்மில மடையா எண்டு திட்டியும் போட்டன். ஆனா நாலுநாள் வரைக்கும் நெஞ்சிடிதான்.  😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

சிரிச்சு முடியேல்லை. சாகும் வரையும் பெண்களைக் கொண்டு வேலைவாங்கத்தான் உந்த ஆண்கள் கலியாணம் கட்டுறது

சாகும் வரைக்கும் ஆண்களும் தானே வீட்டுக்கு மாடா உழைக்கினம். அவை ஏன் இப்படி சுயநலமாச் சிந்திக்கிறதில்லை.. அப்படின்னு பெண்கள் ஏன் சிந்திக்க மறுக்கினம். 

உயிரியல் ரீதியிலும் பெண் தான் குழந்தைக்கு.. உணவூட்ட வசதி படைக்கப்பட்டிருக்கு.. ஆணுக்கில்லையே. 😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, nedukkalapoovan said:

சாகும் வரைக்கும் ஆண்களும் தானே வீட்டுக்கு மாடா உழைக்கினம். அவை ஏன் இப்படி சுயநலமாச் சிந்திக்கிறதில்லை.. அப்படின்னு பெண்கள் ஏன் சிந்திக்க மறுக்கினம். 

உயிரியல் ரீதியிலும் பெண் தான் குழந்தைக்கு.. உணவூட்ட வசதி படைக்கப்பட்டிருக்கு.. ஆணுக்கில்லையே. 😃

பிள்ளைக்கு உணவூட்டத்தானே. அதைவிட்டு பேரப்பிள்ளைகள் கண்டபின்னும் கணவன், பிள்ளைகளுக்கு ஆலவட்டம் பிடிக்கவேணுமோ???? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

பிள்ளைக்கு உணவூட்டத்தானே. அதைவிட்டு பேரப்பிள்ளைகள் கண்டபின்னும் கணவன், பிள்ளைகளுக்கு ஆலவட்டம் பிடிக்கவேணுமோ???? 

இப்படியே சும்மா வாயடிச்சிட்டு இருங்கோ. கடைசியில் பிள்ளையும் கவனிக்காது.. உங்கட புறுபுறுப்பு தாங்கேலாது கணவனும் தனிமையை தேடத்தொடங்கிடுவார்.. இல்ல நாய்க் குட்டிகள் வாங்கி விளையாடுவார்.. நீங்கள்.. தனிமையில் வெறுமையில் தவிக்க வேண்டியான்.

இதையே கணவனுக்கு ஒத்தாசையாக இருந்து.. அவரின் துணையோடு உலகம் சுற்றுவது பற்றி யோசிச்சுப் பாருங்கள்... எவ்வளவு அழகாக இருக்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்க புது குடித்தனக்காரர் படுற பாடு என்றால் 😂
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 31/8/2020 at 17:01, nedukkalapoovan said:

இப்படியே சும்மா வாயடிச்சிட்டு இருங்கோ. கடைசியில் பிள்ளையும் கவனிக்காது.. உங்கட புறுபுறுப்பு தாங்கேலாது கணவனும் தனிமையை தேடத்தொடங்கிடுவார்.. இல்ல நாய்க் குட்டிகள் வாங்கி விளையாடுவார்.. நீங்கள்.. தனிமையில் வெறுமையில் தவிக்க வேண்டியான்.

இதையே கணவனுக்கு ஒத்தாசையாக இருந்து.. அவரின் துணையோடு உலகம் சுற்றுவது பற்றி யோசிச்சுப் பாருங்கள்... எவ்வளவு அழகாக இருக்கும். 

 நண்பிகளுடன் கூட உலகம் சுற்றிப்பார்க்கலாம். 😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

 நண்பிகளுடன் கூட உலகம் சுற்றிப்பார்க்கலாம். 😃

இப்போ இப்படி ஒரு கூட்டம் வெளிக்கிட்டு இருக்கிறது.. இங்கும் சிலர்..ஒரு குழுவாக கரிபியன் போறது சிங்கப்பூர் மற்றும் யூறோப் ..ஆடு மாடு மாதிரி கட்டாக் காலிகள் மாதிரிதிரிய த் தொடங்கினால் வீடு வாசல் என்னத்துக்கு.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.