Jump to content

பகைவரிடத்தில் பாசம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பகைவரிடத்தில் பாசம்

யேசுவோ நமக்காக கல்வாரி சிலுவையிலே மரித்தார், பின்பு உயிர்த்தார் என்று நினைவு கூறும் அவருடைய அன்பை பெற்றவர்களாய் நம்மை பகைக்கிறவர்களிடத்தில் பகையை மறந்து அவர்களுக்கு நல்ல காரியங்களை செய்வோம்.

பகைவரிடத்தில் பாசம்
இயேசு
 
ஒரு கிராமத்தில் சிறுமி ஒருவர் நன்றாக படிப்பதிலும் பைபிள் வாசிப்பதிலும் கவனமாக இருந்து வந்தாள். ஆனால் சிறுமியின் வீட்டின் அருகே இருப்பவர்கள் சிறுமியின் குடும்பத்தை பற்றி எப்போதும் ஒரு குற்றத்தை கண்டுபிடித்து சண்டையிட்டு கொண்டிருந்தனர். இப்படி காலங்கள் சென்று கொண்டிருந்த வேளையில் ஒரு நாள் பக்கத்து வீட்டில் இருந்தவருக்கு பிறந்த நாள் வந்தது.

அந்த நாள் அந்த சிறுமியோ கையில் ரோஜா மலர்களை எடுத்துக்கொண்டு பக்கத்து வீட்டுக்கு சென்று ஐயா உங்களுக்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்கள், கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக என்று கூறினார். உடனே அவர் அந்த சிறுமியை இமை கொட்டாமல் பார்த்து நின்றார். பின்னர் அந்த சிறுமியை பார்த்து நீ, எனக்காக பிறந்த நாள் வாழ்த்து சொல்கிறாய், நான் உன் கண் முன்னே உன் பெற்றோரை வாயில் வந்தபடி பேசி திட்டி உள்ளேன். உங்களிடம் எப்போதும் சண்டையிட்டு கொண்டு உன் வீட்டில் உள்ள அனைவரும் எங்களிடம் பேசவே மாட்டார்கள். ஆனால் நீயோ எனக்கு வாழ்த்து சொல்ல வந்துள்ளாயே? என்று திகைத்து போனார்.
 
 
உடனே அந்த சிறுமி ஐயா, இயேசு உங்களை நேசிக்கிறார். ஆகவே நானும் உங்களை நேசிக்கிறேன் என்று சொன்னாள். பின்னர், இன்று உங்களுக்கு பிறந்த நாள் என்று கேள்விப்பட்டவுடன், நான் தினமும் வாசிக்கும் பைபிளிள் மத்தேயு 5-ம் அதிகாரம் 44-ம் வசனத்தில், உங்கள் சத்துருக்களை சிநேகியுங்கள், உங்களை சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள், உங்களை பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள், உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும், துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள் என்று சொல்லப்பட்டுள்ளது எனக்கு ஞாபகம் வந்தது. உடனே தான் உங்களை சந்திக்க வந்தேன். இனி நாம் பகைவர்களாக இருக்க வேண்டாம். நாம் அனைவரும் தேவ பிள்ளைகளாக வாழ்வோம் என்று கூறி சென்று விட்டாள் அந்த சிறுமி. அவரும் மனம் திரும்பி அவர்களை நேசிக்க ஆரம்பித்து நன்றாக வாழ்ந்து வந்தனர்.

இதே போல தான் நாமும் இந்த உலகத்தில் எத்தனையோ காரியங்கள் இயேசுவுக்கு பிடிக்காத காரியத்தை செய்து கொண்டிருக்கிறோம். ஆனால் இயேசுவோ நமக்காக கல்வாரி சிலுவையிலே மரித்தார், பின்பு உயிர்த்தார் என்று நினைவு கூறும் இந்த தவக்காலத்தில் அவருடைய அன்பை பெற்றவர்களாய் நம்மை பகைக்கிறவர்களிடத்தில் பகையை மறந்து அவர்களுக்கு நல்ல காரியங்களை செய்வோம். தேவன்தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக ஆமென்.

ஜெபசிங், அன்பின் ஊழியம், வீரபாண்டி.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையான கைமாறு

உண்மையான கைமாறு

யூத அதிகார வர்க்கத்தில் முதன்மை பெற்றிருந்த பரிசேயர்களின் தலைவர் ஒருவனுடைய வீட்டிற்கு விருந்து சாப்பிடச் சென்றிருந்தார் இயேசு. விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் அடித்துப்பிடித்து முதன்மையான இடங்களைத் தேர்ந்தெடுப்பதை இயேசு கவனித்தார். அப்போது அவர்களுக்கு ஓர் உவமையைச் சொன்னார்:

“யாராவது உங்களைத் திருமண விருந்துக்கு அழைத்திருந்தால், முதன்மையான இடத்தில் போய் உட்காராதீர்கள். ஏனென்றால், உங்களைவிட மதிப்புமிக்க நபரும் அழைக்கப்பட்டிருக்கலாம். உங்களையும் அவரையும் அழைத்தவர் உங்களிடம் வந்து, ‘இவருக்கு இந்த இடத்தை விட்டுக் கொடுங்கள்’ என்று கேட்பார். அப்போது, நீங்கள் வெட்கத்தோடு கூனிக் குறுகி கடைசி இடத்திற்குப் போக வேண்டியிருக்கும். எனவே நீங்கள் அழைக்கப்பட்டிருந்தால், கடைசி இடத்தில் போய் உட்காருங்கள்; அப்போது உங்களை அழைத்தவர் வந்து, ‘நண்பரே, முதன்மையான இடத்தில் போய் உட்காருங்கள்’ என்று சொல்வார். அப்போது, மற்ற விருந்தினர்கள் முன் உங்களுக்குக் கவுரவமாக இருக்கும். தன்னைத் தான் உயர்த்துகிற எவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத் தான் தாழ்த்துகிற எவனும் உயர்த்தப்படுவான்” (லூக்கா 14:8-11) என்றார்.

 
பிறகு, தன்னை விருந்துக்கு அழைத்த பரிசேயர் தலைவனைக் கனிவுடன் அருகில் அழைத்த அவர், “நீங்கள் விருந்தை அளிக்கும்போது, உங்கள் நண்பர்களையோ, சகோதரர்களையோ, உறவினர்களையோ, அக்கம் பக்கத்திலுள்ள பணக்காரர்களையோ அழைக்க வேண்டாம். அப்படி அழைத்தால் ஒருவேளை பதிலுக்கு அவர்களும் உங்களை எப்போதாவது அழைக்கலாம்.

அது உங்களுக்குச் செய்யப்படுகிற கைமாறாகிவிடும். அதனால் விருந்து அளிக்கும்போது, ஏழைகளையும் உடல் ஊனமுற்றவர்களையும், கால் ஊனமுற்றவர்களையும், பார்வையற்றவர்களையுமே அழையுங்கள்; அப்போது சந்தோஷப்படுவீர்கள். ஏனென்றால், உங்களுக்குக் கைமாறு செய்ய அவர்களிடம் ஒன்றும் இருக்காது. ஆனால், நீதிமான்களுடைய உயிர்த்தெழுதலின்போது உங்களுக்குக் கைமாறு கிடைக்கும்” (லூக்கா 15:12-14 ) என்றார்.

“உளப்பூர்வமான அழைப்பை நிராகரித்த எவரும் நான் அளிக்கிற விருந்தைச் சாப்பிடப்போவதில்லை என்று நான் உங்கள் எல்லாருக்கும் சொல்கிறேன்” என்றார் இயேசு

 

https://www.maalaimalar.com/devotional/christianity/2020/08/25140824/1822555/Jesus-Christ.vpf

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

தேவனை ஏமாற்ற முடியாது

தேவனை ஏமாற்ற முடியாது

 

ஒரு பெண் மற்றொரு பெண்ணின் கோழியை திருடி விட்டாள். இந்த திருட்டு சம்பவம் குறித்த வழக்கு நீதிபதியிடம் விசாரணைக்கு வந்தது. விசாரணையில் அந்த பெண் நான் கோழியை திருடவில்லை. அந்த பெண் என் மீது வீண் பழி சுமத்துகிறாள் என்று கூறினார். உடனே நீதிபதி இந்த வழக்கு விசாரணையை தள்ளி வைத்து இன்னொரு நாள் விசாரணை நடத்துகிறேன் என்று கூறினார்.

உடனே அவர்கள் நீதிமன்றத்தில் இருந்து வெளியே வர சில அடிகள் எடுத்து வைத்தனர். அப்போது அங்கிருந்த நீதிபதி பக்கத்தில் இருந்த ஒருவரை பார்த்து, பார்த்தீர்களா? கோழியை திருடி தின்று விட்டு அதன் இறகை தலையிலே வைத்துக் கொண்டு, கோழியை நான் திருடவில்லை என்று சாதித்து விட்டாளே என்று அந்த பெண்ணின் காதில் கேட்கும்படியாக கூறினார்.

 


இதை கேட்டதும் அந்த பெண் தன் கூந்தலை மெதுவாக தடவி பார்த்தாள். அவ்வளவுதான், நீதிபதி உடனே அவளை அழைத்துவரச்செய்து அவளுடைய வாயில் இருந்தே அந்த திருட்டை ஒப்புக்கொள்ள வைத்தார். இதே போல தான் இயேசுவின் சீடர் யூதாஸ் என்பவரை பார்த்து நீ, என்னை மூன்று தரம் மறுதலிப்பாய் என்று கூறினார். ஏன் இப்படி கூறினார் என்றால் யூதாஸ் என்பவர் இயேசுவை சிலுவையில் அறையும் படி தேடிக்கொண்டிருந்தவர்களிடம் இவர்தான் இயேசு என்று காட்டிக்கொடுத்தார்.

ஆனால் நான் இயேசுவை காட்டிக்கொடுக்கவில்லை என்று மூன்று முறை மறுப்பு தெரிவித்தார். இதைத்தான் இயேசுவானவர் யூதாஸ் என்றும் சீடர் தன்னை காட்டிக்கொடுப்பதற்கு முன்பதாகவே அவரிடம் நீ என்னை முன்று முறை மறுதலிப்பாய் என்று கூறினார். ஆம், தேவ பிள்ளைகளே நாமும் இந்த உலகத்தில் பல்வேறு குற்றங்களை செய்து விட்டு அதை நாம் மறைத்து நான் இந்த குற்றத்தை செய்யவில்லை என்று நம்மை நாமே ஏமாற்றிக்கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கலாம்.

ஆனால் நாம் குற்றம் செய்யவில்லை என்று மனிதர்களை ஏமாற்றலாம், தேவனை ஏமாற்ற முடியாது. தன்னை காட்டிக்கொடுத்த சீடரை முன்கூட்டியே அறிந்தது போல, நாம் செய்யும் குற்றங்களையும் அவர் அறிந்திருக்கிறார் என்று நாம் மறந்து போகக்கூடாது. அதனால் தான் நம்முடைய பாவங்களுக்காக கல்வாரி சிலுவையிலே ரத்தம் சந்தி தன் உயிரையை பலியாக கொடுத்துள்ளார்.

இதுகுறித்து பைபிளில் 1 யோவான் முதலாம் அதிகாரம் 17&ம் வசனத்தில், இயேசு கிறிஸ்துவின் ரத்தம் சலக பாவங்களையும் நீக்கி, நம்மை சுத்திகரிக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. எனவே நாம் இதுவரை செய்த குற்றங்களை அவரிடத்தில் அறிக்கையிட்டு குற்றங்களை மன்னியும் என்று இந்த தவக்காலத்தில் தேவனிடத்தில் மன்னிப்பை பெற்று, குற்ற உணர்வு இல்லாத மகிழ்வான வாழ கற்றுக்கொள்வோம்.

ரபிபிரபு, நற்செய்தி ஊழியங்கள், காங்கேயம்.

 

https://www.maalaimalar.com/devotional/christianity/2020/09/16130348/1887750/Jesus-Christ.vpf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மூன்றே நாட்களில் ஆலயத்தை எழுப்பிய அற்புதர்

மூன்றே நாட்களில் ஆலயத்தை எழுப்பிய அற்புதர்

 

முப்பதாவது வயதில் யோவான் தீர்க்கதரிசியிடம், யோர்தான் நதிக்கரையில் திருமுழுக்குப் பெற்றார் இயேசு. அப்போது சீமோன், அந்திரேயா, பிலிப்பு, நாத்தான்வேல் ஆகிய நான்கு பேர், இயேசுவை ‘மெசியா’ எனக் கண்டுகொண்டு அவரைப் பின்தொடர்ந்து சென்று அவரிடம் சீடர்களானார்கள். அதன் பிறகு மக்களுக்கு அவர் போதிக்க ஆரம்பித்தார். போதனையைத் தொடங்கும்முன், தனது முதல் அற்புதத்தைத் தனது தாய் மரியாளின் வேண்டுகோளுக்கு இணங்க நிகழ்த்திக் காட்டினார்.

கலிலேயாவில் உள்ள கானா ஊரில் ஒரு திருமண விருந்து நடைபெற்றது. இயேசுவின் தாய் அங்கு வந்திருந்தார். இயேசுவும் அவரது சீடர்களும்கூட அந்தத் திருமண விருந்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள். யூதத் திருமண விருந்தில், முதல் தரமான திராட்சை ரசம் பரிமாறப்படுவது விருந்தோம்பலின் முக்கிய அம்சமாக இருக்கும். விருந்தினர் வருகை எதிர்பார்த்ததைவிட அதிகரித்துவிட்டதால், திராட்சை ரசம் தீர்ந்துபோனது. இயேசுவின் தாய் அவரைப் பார்த்து, “பரிமாறுவதற்கு அவர்களிடம் திராட்சை ரசம் இல்லை” என்றார்.

 


அதற்கு இயேசு, “தாயே, நீங்கள் எதிர்பார்ப்பதைப் புரிந்துகொண்டேன். ஆனால் என் வேளை இன்னும் வரவில்லையே” என்று பதிலளித்தார். பரலோகத் தந்தையின் ஏற்பாட்டின்படி இயேசு தன்னை வெளிப்படுத்தும் காலம் அப்போது கனிந்திருக்கவில்லை. அதைத்தான் இயேசு அப்படிக் குறிப்பிட்டார். ஆனால் ஒரு மகனாகத் தன் தாயின் சொல்லை எப்படித் தட்டுவது?

தூய்மைச் சடங்கு செய்யத் தேவைப்படும் ஆறு தண்ணீர் ஜாடிகள், அந்தத் திருமண வீட்டின் முற்றத்தில் வைக்கப்பட்டிருந்தன. அவற்றில் இருந்த தண்ணீரும்கூடத் தீர்ந்து போயிருந்தது. அந்த வீட்டின் பணியாளர்களை அழைத்த இயேசு, “இந்த ஜாடிகளில் தண்ணீர் நிரப்புங்கள்” என்றார். அவர்களும் ஜாடிகளின் விளிம்புவரை நிரப்பினார்கள். தண்ணீர் திராட்சை ரசமாக மாறியிருந்தது. இதைக் கண்ட அவருடைய சீடர்கள், அவர் மீது மேலும் நம்பிக்கை வைத்தார்கள்.

இயேசு செய்த முதல் அற்புதம் (கானா ஊர் திருமணம்) பற்றி, கலிலேயா முழுவதும் செய்தி பரவ ஆரம்பித்தது.

யூதர்களின் முக்கியப் பண்டிகையான ‘பாஸ்கா’ சீக்கிரத்தில் வரவிருந்ததால், இயேசு எருசலேமுக்குப் போனார். அங்கு ஏக இறைவனுக்காக 46 ஆண்டுகள் செலவழித்து யூதர்கள் கட்டியிருந்த பிரமாண்டமான பேராலயம் இருந்தது. அந்த ஆலய வளாகத்துக்குள் நுழைந்தபோது, அங்கே கண்ட காட்சியைப் பார்த்துக் கொதித்துப் போனார் இயேசு.

யூத வியாபாரிகள் அந்த ஆலயத்தை, ஒரு பேரங்காடி போல் பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள். ஒரு கணமும் தாமதிக்காமல் கயிறுகளைக் கொண்டு உடனடியாக ஒரு சாட்டையைத் தன் கைப்படப் பின்னினார். ஆலயத்தில் ஆடு, மாடு, புறா விற்பவர்களையும், மேசைகளைப் போட்டு நாணய மாற்றம் செய்துகொண்டிருந்த தரகர்களையும் ஆலயத்தில் இருந்து சாட்டையால் அடித்து விரட்டினார். “இவற்றை இங்கிருந்து எடுத்துக்கொண்டு போங்கள். என் தகப்பனுடைய வீட்டை இனியும் சந்தைக்கடை ஆக்காதீர்கள்” (யோவான் 2: 16) என்றார்.

இயேசுவின் கோபத்தைக் கண்ட யூதர்கள் அவரை நெருங்கி, “இப்படியெல்லாம் செய்ய உமக்குக் கடவுள் அதிகாரம் கொடுத்திருக்கிறார் என்றால், அதை எங்களுக்கு நிரூபிக்க முடியுமா?” என்று கேட்டு இயேசுவை மடக்கினார்கள். அதற்கு இயேசு, “இந்த ஆலயத்தை இடித்துப் போடுங்கள், மூன்று நாட்களில் திரும்பவும் எழுப்புவேன்” (யோவான் 2:19) என்றார்.

இயேசுவின் இந்த வார்த்தைகளைக் கேட்டு, ‘நம்மிடம் வசமாகச் சிக்கினார்’ என்று நினைத்த யூதர்கள், “இந்த ஆலயத்தைக் கட்டி முடிக்க நாற்பத்தாறு ஆண்டுகள் பிடித்தன. நீரோ.. இதை மூன்று நாட்களில் எழுப்பிவிடுவேன் என்று சொல்வது வேடிக்கையாக இருக்கிறதே?” என்றார்கள். ஆனால் இயேசு தனது உடலாகிய ஆலயத்தைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தார். மனித உடலும் இறைவன் குடியிருக்கும் ஆலயம் என்பதை உணர்த்தினார். தனது உடலைக் குறிப்பிட்டே அவர் இவ்வாறு பதில் அளித்தார்.

இயேசு கொல்லப்பட்டு மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தபோது, ‘உடைத்தெறிந்த ஆலயத்தை மூன்று நாட்களில் திரும்பக் கட்டுவேன்’ என்று அவர் சொன்னதை சீடர்கள் நினைத்துப் பார்த்து, இயேசுவின் வார்த்தைகள் அவரது மறைவுக்குப் பின் தெளிவாய் விளங்கியதால் தேவ சாட்சிகளாய் மாறினார்கள்.

 

https://www.maalaimalar.com/devotional/christianity/2020/09/15090509/1887437/Jesus-Christ.vpf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யேசுநாதரை என்ன காரணத்திற்காக யூதர்கள் சிலுவையில் அறைந்தார்கள் என யாராவது கூறமுடியுமா 🤔

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

கடவுள் அமைத்துக் கொடுத்த வாழ்க்கை.

கடவுள் அமைத்துக் கொடுத்த வாழ்க்கை

 

நதித் தீரத்தின் தெற்குப்பகுதியில் இருந்த சோதோம் நகரில் குடியேறி வாழ்ந்து வந்தார், ஆபிரகாமின் அண்ணன் மகனாகிய லோத்து. சோதோம் நகரின் அருகிலேயே கொமோரா நகரமும் இருந்தது. இந்த இரு நகரங்களிலும் சிலைகளை வணங்கி வந்த மக்கள், பாலியல் குற்றங்கள் உட்பட பெரும் பாவங்களைச் செய்து மிக இழிவான வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருந்தார்கள். இதனால் பரலோகத் தந்தையாகிய யகோவா, லோத்துவையும் அவனது குடும்பத்தாரையும் சோதோம் நகரிலிருந்து வெளியேறச் செய்துவிட்டு, அந்த நகரங்களை முற்றாக அழித்தார்.

கானான் நாட்டில் வசித்துவந்த ஆபிரகாம் தனது சகோதரனாகிய லோத்து, சாவிலிருந்து தப்பித்துக்கொண்டதை அறிந்து நிம்மதியடைந்தார். ஆனால் ‘கானான் நகரமும் கடவுளின் சாபத்துக்கு ஆளாகுமோ?’ என்று அஞ்சினார். இதனால் தனது மகன் ஈசாக்கு, ‘எக்காரணம் கொண்டும் கானான் பெண்ணொருத்தியை மணந்துகொள்ளக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார் ஆபிரகாம். எனவே தனது மந்தைகளையும் சொத்துக்களையும் நிர்வகித்துவந்த தனது மூத்த வேலைக்காரரை அழைத்தார். அவரிடம் “எனது தந்தையின் தேசமும் தற்போது எமது உறவினர்கள் வசித்துவரும் நகரமுமாகிய ஆரானுக்குச் சென்று, என் மகனுக்குப் பொருத்தமான மணமகளைத் தேடி அழைத்து வாருங்கள்” என்று அனுப்பினார்.

 


வேலைக்காரரும் அவரது விருப்பத்தை ஏற்று அதிகாலையில் புறப்பட்டார். நீண்ட பயணத்துக்குப் பின்பு ஆரான் நகரின் எல்லையை அடைந்தார். அது மாலை நேரம். அந்த இடத்தில் ஒரு சமுதாயக் கிணறு இருந்தது. தங்கள் வீட்டுத்தேவையான குடிநீரை சேகரித்துச் செல்ல மாலை நேரத்தில் இளம்பெண்கள் கிணற்றடிக்கு வருவது சமூக மரபாக இருந்தது. எனவே இந்தக் கிணற்றுக்கு நீர் எடுத்துச் செல்லவரும் ஆரான் நகரின் பெண்களில் ஒருத்தியை ஈசாக்கிற்கும் மணமகளாகத் தேர்ந்தெடுக்க தனக்கு வழிகாட்டும்படி கடவுளாகிய யகோவாவிடம் அந்த வேலைக்காரர் பிரார்த்தனை செய்தார். அவரது பிரார்த்தனையை கடவுள் கேட்டார்.

வேலைக்காரர் எதிர்பார்த்ததைப் போலவே ஒரு இளம்பெண் தண்ணீர் எடுக்க வந்தாள். முழுமையான முக்காடிட்டு, அடக்கமே வடிவாக, அழகின் மொத்த உருவமாக கையில் தண்ணீர் குடுவை ஏந்தி அங்கே வந்த அந்தப் பெண்ணின் பெயர் ரெபெக்கா. வேலைக்காரர் அந்நிய தேசத்தின் ஆண்மகனாக இருந்தும் தன் எதிரில் நின்றுகொண்டிருந்த காரணத்தால் அவருக்கு வணக்கம் சொன்னாள். அவளது பணிவில் குளிர்ந்த வேலைக்காரர் “பெண்னே.. எனக்குக் குடிக்க கொஞ்சம் தண்ணீர் தருவாயா?” என்றார். உடனடியாக கிணற்றிலிருந்து அவருக்குத் தண்ணீர் எடுத்துக்கொடுத்தாள்.

ஆனால் வேலைக்காரர் கேட்காமலேயே நீண்டதூரம் பயணித்துக் களைப்படைந்திருந்த அவரது ஒட்டகத்தை கண்டு, அது குடிக்கக் குடிக்க தண்ணீரை இறைத்து சளைக்காமல் ஊற்றிக் கொண்டே இருந்தாள். விலங்குகளுக்கும் இரங்கிய அவளிடம் “பெண்ணே.. உனது தந்தையின் பெயரென்ன?” என்று கேட்டார் வேலைக்காரர். மேலும் “இன்றிரவு உங்கள் வீட்டில் தங்கிச் செல்ல எனக்கும் எனது ஒட்டகங்களுக்கும் இடமிருக்கிறதா?” என்று கேட்டார்.

அவள் மறுப்பேதும் கூறாமல் “என் தந்தையின் பெயர் பெத்துவேல். எனக்கொரு சகோதரர் இருக்கிறார். அவரது பெயர் லாபான். எங்கள் வீட்டில் போதுமான இடமிருக்கிறது. தாராளமாக எங்கள் வீட்டில் நீங்கள் தங்கிச் செல்லலாம்” என்றாள். ஆபிரகாமின் அண்ணன் நாகோரின் மகன்தான் பெத்துவேல். இது தலைமை வேலைக்காரருக்கு நன்கு தெரிந்திருந்தது. இவ்வாறு ஆபிரகாமின் உறவினர் வீட்டுக்கே தன்னை வழிநடத்திச்சென்ற கடவுளாகிய யகோவாவுக்கு அவன் மண்டியிட்டு நன்றி சொன்னார்.

அன்றிரவு பெத்துவேலின் இல்லத்தில் தங்கி அவர்களது விருந்தோம்பலை ஏற்றுக்கொண்டார் ஆபிரகாமின் தலைமை வேலைக்காரர். தாம் ஈசாக்கிற்கு மணமகள் தேடி வந்த காரணத்தையும், கடவுள் எவ்வாறு ரெபெக்காளை அடையாளம் காட்டினார் என்பது பற்றியும் எடுத்துக் கூறினார்.

இது கடவுளின் ஏற்பாடு என்பதை அறிந்த பெத்துவேலும், அவரது மகனும் ஈசாக்கிற்கு ரெபெக்காளை திருமணம் செய்துவைக்க சம்மதித்தார்கள். ரெபெக்காவும் சம்மதம் தெரிவித்தாள். மறுநாளே ரெபெக்காளை ஒட்டகத்தில் ஏற்றிக்கொண்டு கானான் தேசத்துக்குப் புறப்பட்டார் ஆபிரகாமின் வேலைக்காரர்.

அவர்கள் கானான் தேசத்தின் எல்லைக்குள் இருந்த வயல்வெளியில் பிரவேசித்தபோது, ஈசாக்கை நேருக்கு நேராய்ச் சந்தித்தாள் ரொபெக்கா. இதனால் இருவரது மனதுக்குள்ளும் மகிழ்ச்சி பொங்கியது.

தனக்காகக் கடவுள் நிச்சயித்த பெண்ணை கண்டுகொண்ட சந்தோஷம் ஈசாக்கை நிறைத்தது. ஈசாக்கும் ரெபெக்காளும் திருமண பந்தத்தில் இணைந்தனர். கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அந்தத் தம்பதிக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தனர். அவர்களுக்கு ‘ஏசா’ என்றும், ‘யாக்கோபு’ என்றும் பெயரிட்டனர்.

https://www.maalaimalar.com/devotional/christianity/2020/09/29121800/1930872/Jesus-Christ.vpf

On 17/9/2020 at 09:48, Kapithan said:

யேசுநாதரை என்ன காரணத்திற்காக யூதர்கள் சிலுவையில் அறைந்தார்கள் என யாராவது கூறமுடியுமா 🤔

எனக்கு அந்தளவு அறிவு இல்லை. வேறு யாராவது கூறுவீர்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவசரத்தில் முடிவெடுக்கக்கூடாது- ஆன்மிக கதை

அவசரத்தில் முடிவெடுக்கக்கூடாது- ஆன்மிக கதை

புத்தர் தன்னுடைய சீடர்கள் சிலருடன், ஒரு ஊருக்குப் பயணப்பட்டுக் கொண்டிருந்தார். நெடுந்தூரப் பயணம் அது. உச்சிப் பொழுது, வெப்பத்தால் தகித்துக் கொண்டிருந்தது. அந்த நேரம் பார்த்து ஒரு பெரிய ஆற்றை கடந்து செல்ல வேண்டியிருந்தது.

அதனால் அந்த ஆற்றங்கரையின் ஓரத்தில் இருந்த ஒரு பெரிய மரத்தின் அடியில் ஓய்வெடுத்துவிட்டு வெயில் குறைந்ததும் ஆற்றைக் கடந்து அந்தக் கரையில் உள்ள ஊருக்குச் செல்லலாம் என்று புத்தர் முடிவு செய்தார். அதன்படி புத்தரும், அவரது சீடர்களுக்கு ஓய்வெடுக்கத் தொடங்கினர்.

நீண்ட பயணத்தினாலும், வெப்பத்தினாலும் புத்தருக்கு நீர் தாகம் எடுத்தது. உடனே ஒரு சீடரிடம், ஆற்றில் இருந்து குடுவையில் தண்ணீர் எடுத்துவரும்படி கூறினார். உடனே அவசர அவசரமாக ஓடிச் சென்ற ஒரு சீடர், தண்ணீரை குடுவையில் எடுக்கும்போதுதான் கவனித்தார். அந்த நீர் மிகவும் கலங்கிப்போய் இருந்தது. எனவே தண்ணீர் எடுக்காமல் அங்கிருந்து திரும்பி வந்தவர் புத்தரிடம், “குருவே.. அந்த ஆற்றின் நீர் குடிப்பதற்கு ஏதுவானதாக இல்லை” என்று தெரிவித்தார்.

புத்தரோ, “என்ன சொல்கிறாய்.. அப்படி இருக்க வாய்ப்பே இல்லை.. நீ சற்று ஓய்வெடுத்து விட்டு சிறிது நேரம் கழித்து போய் நீர் எடுத்துவா” என்றார்.

அப்போது அந்த சீடனுக்குள் ஒரு சந்தேகம். ‘குரு இவ்வளவு உறுதியாகச் சொல்கிறார் என்றால், நாம்தான் சரியாக கவனிக்காமல் வந்துவிட்டோம் போல் இருக்கிறது. எனவே உடனடியாக மீண்டும் சென்று தண்ணீரை எடுத்து வந்துவிடுவோம்’ என்று நினைத்தபடியே உடனடியாக சென்று ஆற்று நீரை எடுக்கக் குனிந்தார்.

இப்போதும் அந்த நீர் கலங்கிப்போய் தான் இருந்தது. சீடனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. மீண்டும் புத்தரிடம் வந்தவர், “குருவே.. நீங்கள் சொல்லியதால் மீண்டும் சென்றேன். ஆனால் இந்த ஆற்றின் நீர் அருந்துவதற்கு தகுந்ததாக இல்லை” என்றார்.

“நான்தான் உன்னை சிறிது நேரம் ஓய்வெடுத்து விட்டு, பின்னர் சென்று தண்ணீர் எடுத்துவா என்றேனே.. நீ எதற்காக உடனடியாகச் சென்றாய். சரி ஒன்றும் பிரச்சினையில்லை. நீ சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு, தாமதமாகச் சென்று தண்ணீர் எடுத்துவா” என்றார்.

குழப்பத்திலேயே மரத்தடியில் படுத்து சற்று ஓய்வெடுத்த அந்த சீடன், புத்தர் சொன்னதுபோலவே சிறிது நேரம் கழித்துச் சென்று தண்ணீர் எடுக்கப்போனான். இப்போது ஆற்றின் நீர் மிகவும் தெளிவாக இருந்தது. அதில் இருந்து குடுவையில் தண்ணீர் எடுத்து வந்து புத்தரிடம் கொடுத்தார். அதை வாங்கி தாகம் தீர அருந்தினார், புத்தர்.

அப்போது அந்த சீடர், தனக்கான சந்தேகத்தைக் கேட்டார். “நான் முதலில் இரண்டுமுறை சென்றபோது கலங்கிப்போய் இருந்த ஆற்றின் நீர், இப்போது எப்படி தெளிந்தது?” என்று புத்தரிடமே கேட்டார்.

அதற்கு புத்தர், “நாம் வந்த அந்த நேரத்தில்தான் ஒரு மாட்டு வண்டி இந்த ஆற்றினைக் கடந்து சென்றிருந்தது. அதனால்தான் ஆற்றின் நீர் கலங்கிப்போய் இருந்தது. அதனால்தான் உன்னை சற்று நேரம் கழித்து போய் தண்ணீர் எடுத்துவா என்று கூறினேன். நான் தண்ணீர் வேண்டும் என்று கேட்டதும் அவசரத்திலும், பதற்றத்திலும் நீர் எடுக்கச் சென்றதால், உன்னால் இந்த உண்மையை உணரமுடியவில்லை. கலங்கியிருக்கும் நீரைப்போலவே, குழப்பத்தில் இருக்கும் மனதால் எந்த முடிவையும் சரியாக எடுக்க முடியாது. அதனால்தான் எதனால் நீர் கலங்கியிருக்கிறது என்ற உண்மையை உன்னால் உணர முடியவில்லை” என்று விளக்கினார்.

பின்னர் தன்னுடைய அனைத்து சீடர்களுக்குமாக ஒரு உபதேசத்தை வழங்கினார். நீங்கள் அனைவரும் ஒன்றை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். இந்த ஆற்றின் நீரைப்போலத்தான் உங்கள் மனமும். அந்த மனமானது குழப்பத்தில் இருக்கும்போது, அதனை அதன் போக்கிலேயே விட்டுவிடுங்கள். சிறிது நேரம் சென்றதும், அது தானாகவே தெளிவடைந்துவிடும். மனதை அமைதிப்படுத்த எந்த ஒரு விஷயத்தையும் கஷ்டப்பட்டு செய்ய வேண்டியதில்லை. நீங்கள் செய்ய வேண்டியது, சிறிது நேரம் பொறுமையாக இருக்க வேண்டும் அவ்வளவே. அந்த கால அவகாசத்திலேயே மனது அமைதியடைந்துவிடும். பின்னர் எடுக்கும் முடிவு சரியானதாக இருக்கும். பொறுமையே மனதைப் பக்குவப்படுத்தும். இன்னும் சொல்லப்போனால், பிரார்த்தனைகளை விடவும், மிக உயர்ந்தது பொறுமைதான்” என்றார்.

https://www.maalaimalar.com/devotional/worship/2020/10/01114753/1931354/Spiritual-Stories.vpf

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

கடவுள் என்பவர் யார்? என்பதை உணர்த்திய ஆன்மிக கதை

கடவுள் என்பவர் யார்? என்பதை உணர்த்திய ஆன்மிக கதை

 

ஒரு துறவி ஆற்றங்கரையில் அமர்ந்து தண்ணீர் ஓடும் அழகையே பார்த்துக் கொண்டு இருந்தார். இயற்கையில் ஈடுபட்டு மனம் ஒருமுகப்பட்டதால் மவுனத்தில் ஆழ்ந்தார்.

அந்த நேரம் இளைஞன் ஒருவன் வந்தான். கடவுளைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்ற தேடல் அவனுள் இருந்தது.

 
""சுவாமி எனக்கு ஒரு சந்தேகம். கடவுள் என்பவர் யார் என்பதை உங்களால் சொல்ல முடியுமா?'' என்று கேட்டான்.

துறவியோ அதைக் கண்டு கொள்ளாமல், தொடர்ந்து அமைதி காத்தார். கேள்வி அவரின் காதில் விழவில்லை என்பதை அவரின் மவுனம் உணர்த்தியது.

""சுவாமி! நான் சொல்வது உங்களின் காதில் விழவில்லையா?'' என சத்தமாக கத்தினான். இப்போது துறவி வாய் திறந்தார்.

""கேள்விக்கான பதிலை சொல்லிவிட்டேனே!'' என்றார். இளைஞனுக்கு கோபம்.

""வாயே திறக்கவில்லை! பதில் சொல்லியாச்சு என்கிறீர்களே! துறவி பொய் சொல்லலாமா?'' என்று சற்று கோபமாகவே கேட்டான்.

""மகனே! மவுனமே எனது பதில்'' என்றார் துறவி.

இளைஞனோ,""இப்படி புதிர் போட்டு பேசினால் எப்படி புரியும்? தெளிவாகச் சொல்லுங்கள்,'' என்றான்.

""ஆன்மிகத்தின் ஒட்டுமொத்த பிழிவே மவுனம் தான். எங்கும் நிறைந்திருக்கும் கடவுளை வார்த்தைகளுக்குள் யாரும் அடக்க முடியாது. உனக்குள்ளே தேடிக் கண்டெடுக்க வேண்டிய பொக்கிஷம் அவர். மவுனமாக தியானத்தில் ஆழ்ந்து விடும் நேரத்தில் மட்டுமே அவரோடு உறவாட முடியும்,'' என்ற துறவி மீண்டும் மவுனத்தில் ஆழ்ந்தார்.

 

https://www.maalaimalar.com/devotional/worship/2020/11/09112345/2050351/Spiritual-Stories.vpf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மோசேயுடன் பேசிய கடவுள்

மோசேயுடன் பேசிய கடவுள்

‘இஸ்ரவேலர்கள் மத்தியில் புரட்சியை ஏற்படுத்தி, அவர்களை எகிப்தின் அடிமைத் தளையிலிருந்து விடுவித்துச் செல்லும் கலகக்காரனாக மோசே மாறக்கூடும்’ என்று பயந்தான், பார்வோன் மன்னன். அதனால் மோசேயைக் கண்டுபிடித்து, கொல்லும்படி ஆணையிட்டான். உயிரைக் காத்துக்கொள்ள எகிப்திலிருந்து தப்பித்து ஓடிய மோசே, வறட்சியும் பாலைவனச் சோலைகளும் கொண்டிருந்த மீதியான் நாட்டின் எல்லைக்குள் நுழைந்தார்.

அங்கே ஆண்கள், பெண்கள் எனப் பலரும், ஆட்டு மந்தைகளை மேய்த்துக்கொண்டிருந்ததை மோசே கண்டார். மோசே மந்தைகளை மேய்த்தவர் இல்லை என்றாலும், அவரது பெற்றோர் மற்றும் முன்னோர்களின் குலத்தொழிலாக மேய்ப்புத் தொழிலே இருந்ததால், அங்கே மேய்ப்பர்களையும் கனிவான முகங்களைக் கொண்ட பெண்களையும் கண்ட அவரது மனதில் நிம்மதியும் அமைதியும் உண்டானது. அவர் இளைப்பாறுவதற்காக அங்கே இருந்த கிணற்றருகே சென்றார். அப்பகுதியில் இருந்த ஒரே கிணறு அது.

 
அங்கே பிரதான மேய்ப்பனாகவும், பல நூறு குடும்பங்களுக்குத் தலைமை மதகுருவாகவும் இருந்தார் எத்திரோ. அவருக்கு ஏழு புதல்வியர் இருந்தனர். அவர்கள் ஆண் பிள்ளைகளைப்போல் தங்களது கிடைகளை மேய்த்துப் பேணிக் காத்துவந்தனர். மோசே கிணற்றருகே சென்றபோது அப்பெண்கள் மிகுந்த சிரமத்துடன் தண்ணீர் இறைத்து தொட்டிகளை நிரப்பி தங்களது ஆடுகளுக்குக் காட்டிக்கொண்டிருந்தனர். ஆனால் அங்கே வந்து சேர்ந்த சில ஆண் மேய்ப்பர்கள், அப்பெண்களை மிரட்டிக் கிணற்றை விட்டு அகன்று செல்லுமாறு பயங்காட்டினார்கள்.

இதனால் அச்சமடைந்த அவர்கள் கலக்கமுற்று நகர, அவர்களைத் தடுத்து நிறுத்தினார், உயிருக்குப் பயந்து ஓடிவந்த மோசே. “வீணாகப் பயம் காட்டுகிறவர்களை நினைத்து அஞ்சத் தேவையில்லை” என்று நம்பிக்கை தந்த அவர், அவர்களது ஆடுகளுக்குத் தண்ணீர் இறைத்துக் கொடுத்தார். “வாட்டசாட்டமான இந்த ஆண்மகன் யார்? எளிதில் மிரண்டுபோகும் இப்பெண்களுக்கு அரணாக இருக்கட்டும் என்று எகிப்திலிருந்து எத்திரோவால் தருவிக்கப்பட்டிருப்பானோ?” என்று முணுமுணுத்தவாறு அந்த ஆண் மேய்ப்பர்கள் பின்வாங்கினர்.

பிறகு ஆடுகளுடன் கூடாரத்துக்குத் திரும்பிய பெண்கள், தந்தையிடம் ஓடிச் சென்று தங்களுக்கு உதவிய எகிப்திய மனிதனைப் பற்றிக் கூறினார்கள். எத்திரோ தன் மகளிரிடம் “அம்மனிதர் எங்கே? ஏன் அவரை விட்டுவிட்டு வந்தீர்கள்? அவரைப் போய் அழையுங்கள், நம்மோடு அவர் உணவருந்தட்டும்” என்றார். அவர் இவ்வாறு சொல்லிக்கொண்டிருக்கும்போதே மோசே அவர்களது கூடாரத்தை நெருங்கி வந்துகொண்டிருந்தார். அவரை வரவேற்ற எத்திரோ “அடைக்கலம் தேடும் உம் கண்களில் அமைதி உண்டாகட்டும். எங்களோடு நீர் இங்கே தங்கிவிடும்” என்று கூறி ஆதரவு தந்தார்.

அப்பகுதியின் தலைமை குரு தனக்குக் காட்டிய தயவைக் கண்டு, மோசே அவர்களோடு தங்குவதில் மகிழ்ச்சியடைந்தார். நாட்கள் எரிநட்சத்திரங்களைப்போல் வீழ்ந்தன. எத்திரோ தன் மூத்த மகளாகிய சிப்போராளை மோசேக்குத் திருமணம் செய்துவைத்தார். மோசே, சிப்போராள் தம்பதிக்கு ஒரு மகன் பிறந்தான். அவனுக்குக் கெர்சோம் என்று பெயரிட்டனர்.

மாமனாரின் குடும்பத்துக்கு நன்றியுள்ள மருமகனாக, அவர்களது மந்தைகளை திறம்படக் காத்து பெருக்கி வந்தார், மோசே. பொதுவாகவே வெயிலால் வாடிவந்த மீதியான் நாட்டை, கோடைக்காலம் மேலும் வாட்டியது. காய்ந்த புற்களும் கூட இல்லாமல் ஆடுகள் பசியால் வாடுவதை மோசேவால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

எனவே ஆடுகளுக்குத் தேவையான புல்லைத் தேடி, கண்களுக்குப் பசுஞ்சோலையாகக் காட்சியளித்த ஓரேப் மலைக்கு தன் ஆடுகளோடு வந்து சேர்ந்தார். ஆடுகள் வயிறாரப் புற்களை மேய்ந்துகொண்டிருந்தன. இக்காட்சியைக் கண்டு மோசேயின் மனம் நிறைந்தது. அந்த சமயத்தில் அங்கே அவருக்கு ஓர் எதிர்பாராத அனுபவம் ஏற்பட்டது. பசுமையான செடிகள் சூழ்ந்த புதர் ஒன்று எரிந்துகொண்டிருந்தது. பெரும் தீயாக அது இருந்தாலும், அப்புதரில் இருந்த செடிகளும், இலைகளும், பூக்களும் நெருப்பால் கருகிப்போகாமல் அப்படியே இருந்தன.

‘இது எப்படிச் சாத்தியம்?’ என்று அதிசயித்தவாறே, எரியும் புதர் அருகே சென்று கவனித்தார் மோசே.

அவர் புதரின் அருகில் சென்றபோது அதிலிருந்து ஒரு குரல் ஒலித்தது. “மோசே.. அங்கேயே நில். நெருப்பின் அருகில் வராதே. உன் பாதணிகளைக் கழற்றி வை. ஏனென்றால் நீ நிற்கிற இந்த இடம் புனிதமானது.” ஒரு வானதூதன் மூலமாகக் கடவுள், மோசேயுடன் பேசினார். அப்போது மோசே தன் முகத்தை மூடிக் கொண்டார்.

கடவுள் தொடர்ந்து பேசினார் “எகிப்தில் என் மக்கள் படுகிற துன்பத்தைக் கண்டேன். அவர்களை நான் விடுவிக்கப்போகிறேன். என் மக்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டு வர நான் உன்னைத்தான் அனுப்பப் போகிறேன்” என்றார். மோசே மெல்ல கண்களைத் திறந்து பார்த்தார். கடவுளிட்ட பணியை செய்ய ஆயத்தமானது அவரது கண்களில் தெரிந்தது.

https://www.maalaimalar.com/devotional/christianity/2020/11/10132744/2060636/jesus-christ.vpf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புன்னகைப்போம் வாழ்வைப் புதுப்பித்துக் கொள்வோம்

புன்னகைப்போம் வாழ்வைப் புதுப்பித்துக் கொள்வோம்

மனம் ஒரு கண்ணாடி. கவலை என்பது அதில் படியும் அழுக்கு போன்றது. அந்த அழுக்கினைப் போக்கும் இராஜதிரவமே புன்னகை என்பது. புன்னகை என்பது முகத்திற்கு மட்டுமல்ல. மனதிற்கும் அழகுசேர்க்கிறது.

புன்னகைக்கு மட்டுமே புத்துணர்ச்சி ஊட்டுகிற வல்லமை உண்டென்பது பல்வேறு மனிதர்களின் வரலாறு காட்டும் மகிழ்ச்சியான செய்தி ஆகும். கலைவாணர் என்.எஸ். கிருஸ்ணன் ஒரு முறை தனது மகிழுந்தில் பயணம் செய்து கொண்டிருந்த போது, கார் விபத்துக்குள்ளாகி மரத்தில் மோதிக்கிடந்தது. நல்ல வேலை இவருக்கு ஏதும் ஆகவில்லை. இவர் வாகனத்திலிருந்து இறங்கி பக்கத்தில் மரத்து நிழலில் உட்கார்ந்து கொண்டு, ஓட்டுநரை விட்டு மெக்கானிக்கை அழைத்து வரக் கூறினார். அந்த பக்கம் வந்த ஒருவர் என்ன ஆனது எனக் கேட்க ஒன்றுமில்லை. நீண்ட நேரம் பயணம் செய்ததால் மரத்தில் எனது காரை நிறுத்திவிட்டு, ஓய்வு எடுத்துக்கொண்டு உள்ளேன் என்றாராம். தனது கார் விபத்துக்குள்ளான இந்த நிலையில் யாராலாவது இப்படி நகைச் சுவையை அடித்துக்கொண்டு உட்கார்ந்திருக்க முடியுமா?. அதுதான் கலைவாணர். இந்த மனநிலைதான் அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது என்பதை, அதன் ஆழத்திலிருந்து புரிந்துகொள்ள வேண்டும்.

 
சகுந்தலா என்ற இவரின் திரைப்படத்தைப் பார்த்த திருவிதாங்கூர் சமஸ்தானத்து மகாராஜா சென்னை வந்து அப்போது ஸ்டுடியோவில் நடித்துக் கொண்டிருந்த என்.எஸ். கிருஸ்ணன் மற்றும் எ.ஏ. மதுரம் ஆகியோரைச் சந்தித்துப் பாராட்டினாராம். பின்பு அவர்களோடு சேர்ந்து புகைப்படமும் எடுத்துக் கொண்டு சென்றாராம்.

எனவே நகைச்சுவை உணர்வு நம்மை உயர்த்துவதோடு, சோகம் நம்மைத் தாக்காமலும் பாதுகாக்கும் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

மனிதன் மட்டுமே சிரிக்கத் தெரிந்த விலங்கு. சிரிப்பு ஒரு மனிதனுக்கு நல்ல அறிமுகத்தைத் தருகிறது என்பதை உணர்ந்தோர் அறிகின்றனர். நகைச்சுவை உணர்வு என்பது துன்பத்தின் சுமையை எளிதாக்குகிறது. பரபரப்பான வாழ்க்கையை பரவசப்படுத்துகிறது. சுருங்கச் சொன்னால் சோகங்களிலிருந்து மீட்டெடுக்கிறது. ஆகவே இடுக்கண் வரும்போதும் நகுவோம். இல்லறம் சிறக்க சிரித்து மகிழ்வோம்.

எனக்கு மட்டும் நகைச்சுவை உணர்வு இல்லாமல் இருந்திருந்தால் நான் என்றைக்கோ இறந்திருப்பேன் என்று நமது தேசத் தந்தை மகாத்மா காந்தி குறிப்பிட்டுள்ளது எண்ணிப்பார்க்கத் தக்கது. நாம் சிரித்து வாழவேண்டும் என்பதில் தவறில்லை. ஆனால் பிறரைத்தாக்கி, கிண்டலடித்து மகிழக் கூடாது. அது தமிழர் வழியுமல்ல. நாகரிகமும் அல்ல. ”நகையுள்ளும் இன்னாது இகழ்ச்சி” என வள்ளுவம் கூறுவதை மனதில் ஆழப் பதிய வைத்துக்கொள்ள வேண்டும்.

வீட்டில் அனைவரும் மகிழ்ச்சியாக கூடி அமர்ந்து பேசிச் சிரித்து மகிழ்வது நல்ல குடும்பத்திற்கான நாகரிக அடையாளம். அது மட்டுமின்றி குடும்பத்திற்குள் உள்ளோரோடு ஒரு நெருக்கத்தையும் அதிகரிக்கும். இதனை இன்றைய நமது கலாச்சாரத் தேவை என்றே கூறலாம்.

நாம் மகிழ்ச்சியாய் இருக்கும் போது, நமது உடலில் 86 தசைகள் இயங்குகின்றன. குறிப்பாக மூளைக்குத் தகவல் அனுப்பும் நரம்புகள் நன்கு இயங்குவதோடு, பெப்டைன் என்ற ஒரு வித கார்மோன் சுரந்து இரத்த ஓட்டத்தை எளிமையாக்குகிறது. இதனால் உடலில் சுறுசுறுப்பு பிறக்கிறது. உற்சாகம் ஊற்றெடுக்கிறது. இதனால் மனம் அமைதி அடைகிறது.

வாய்விட்டுச் சிரிக்கும் போது, உடலின் உள் உறுப்புகள் நன்கு இயங்குகின்றன. சிரிப்பினை உள் உறுப்புகளுக்கான உடற்பயிற்சி என்றே அழைக்கப்படுகிறது. எனவேதான் நம் முன்னோர்கள் வாய்விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்றார்கள். சென்னை போன்ற பெரும் நகரங்களில் சிரிப்புக் கழகங்கள் உருவாக்கப்பட்டு, சிரிப்பூட்டும் தெரபி முறையைப் பின்பற்றுகின்றனர். சிரிப்பு ஒரு மருத்துவ முறை என்பதை நவீன அறிவியல் உலகம் பல முறைகளில் நிரூபித்துள்ளது.

வாழ்க்கை இருட்டிலேயே கிடக்கிறது.

சிரிக்கும்போது மட்டுமே

வெளிச்சமடைகிறது’

என்ற புதுக்கவிதையின் உட்பொருள் ஆழமானது.

நாம் கோபப்படும்போது, உடலில் 32 தசைகள் மட்டுமே இயங்கும். அதுவும் இத் தசைகளின் இயக்கத்தால் இரத்த ஓட்டத்தில் தடை ஏற்படுகிறது. இதனால் இருக்கமான நிலையில் உடல் தசைகள் இயங்கும். ஆகையால் இதயத்திற்குச் செல்லும் ரத்தமும் இதயத்திலிருந்து வெளியேறும் ரத்தமும் அழுத்தத்திற்கு உள்ளாகின்றன. ஆகவேதான் அடிக்கடி கோபப்படுபவர்களுக்கு இதயம் சார்ந்த நோய்கள் வர வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

மகிழ்ச்சியாய் இருப்பதற்கும் சில வரையறைகள் உள்ளன. நம்முடைய மகிழ்ச்சி பிறருக்கும் மகிழ்ச்சி அளிப்பதாய் இருக்க வேண்டும். பிறரைத் துன்பத்தில் ஆழ்த்திவிட்டு, ஒருவன் மகிழ்ச்சி அடைவானேயானால், அம்மகிழ்ச்சி துன்பத்தை விடக் கொடுமையானது. பிறரை மகிழவைத்து மகிழ்வதே, மகிழ்ச்சியில் உயர்வானது. விக்ரம் சாராபாய் பள்ளிப் பருவத்தில் வகுப்பறையில் ஒரு விளையாட்டு விளையாடுவாராம். பொதுவாக குழந்தைகள் வகுப்பில் நண்பர்களின் பொருட்களை எடுத்து வேறு இடத்தில் ஒளிய வைத்துவிட்டு, தேட வைப்பார்கள். தேடிக் கிடைக்கவில்லை என்றால், கடைசியில் எடுத்துக் கொடுத்து மகிழ்வார்கள். இது ஒரு வகுப்பறை விளையாட்டு. ஆனால் விக்ரம் சாராபாய் திடீரென்று சாக்லேட்டுகளை வாங்கி வந்து யாரும் அறியா வண்ணம், அனைத்து மாணவர்களின் பைகளிலும் வைத்துவிடுவாராம். நண்பர்கள் பையினை திறக்கும் போது, இன்ப அதிர்ச்சிக்கு ஆளாவார்கள். அந்த இன்ப அதிர்ச்சியைக் கண்டு மகிழ்வாராம் விக்ரம் சாராபாய்.

நம்முடைய மகிழ்ச்சி பிறருக்கும் எப்படி மகிழ்ச்சியாய் இருக்க வேண்டுமோ, அதைப்போல நமக்கும் உண்மையான மகிழ்ச்சியாய் இருக்க வேண்டும். சிலர் எதற்கு மகிழ்ச்சியாய் இருக்கிறோம் என்பதே தெரியாமல் மகிழ்ச்சியாய் இருக்கிறார்கள். இந்த மகிழ்ச்சி உண்மையான மகிழ்ச்சியல்ல. மகிழ்ச்சிக்கு அர்த்தம் இருக்க வேண்டும்.

முல்லா ஒரு குடிகாரர். தினமும் குடிப்பார். ஆனால் ஒவ்வொரு முறை குடிக்கும் போதும் இனி குடிக்கக் கூடாது எனக் கருதுவார். குடிக்கக் கூடாது என நினைப்பார். கள்ளுகடை வாசல்வரை மட்டுமே அந்த மனஉறுதி நிற்கும். கள்ளுக்கடையைப் பார்த்ததும் தன்னையே அறியாமல் உள்ளே நுழைந்து விடுவார். ஒருமுறை மனக் கட்டுப்பாட்டோடு கள்ளுக்கடையைக் கடந்து சென்று விட்டார். அவரின் மனஉறுதியை அவராலேயே நம்ப முடியவில்லை. மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. மகிழ்ச்சியைக் கொண்டாட வேண்டாமா? கள்ளுக்கடைக்குள் நுழைந்தார். மகிழ்ச்சியை முறையாகக் கொண்டாடினார். இந்த மகிழ்ச்சி, வாழ்க்கையை எந்த வகையிலும் மேம்படுத்தாது. எனவே மகிழ்ச்சியும் வாழ்க்கையை மேம்படுத்துவதாக இருக்க வேண்டும்.

 

https://www.maalaimalar.com/health/womensafety/2020/11/16091930/2071825/happy-smiling-family.vpf

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ஜென் துளிகள்: பயிற்சிக்குத் துயரம் அவசியம்

zen-quotes  

சமூக நீதிக்காகவும் வன்முறையற்ற அமைதியான சமூகத்தை உருவாக்குவதற்காகவும் பணியாற்றிவரும் வியட்நாமிய பௌத்த குருவான திக் நியட் ஹான், தனது 94-வது பிறந்தநாளை சமீபத்தில் கொண்டாடினார். சமூக நீதி, அக அமைதி இரண்டையும் அடிப்படையாகக் கொண்டவை இவரது போதனைகள். 1960-களில் வியட்நாமில் அமெரிக்கா நடத்திய யுத்தத்தால் சேதமுற்ற பள்ளிகளைக் கட்டியதோடு அமெரிக்காவுக்குச் சென்று அகிம்சை இயக்கத்தையும் மேற்கொண்டவர். 1967-ம் ஆண்டில் மார்டின் லூதர் கிங் ஜூனியர், இவருக்கு நோபல் பரிசைப் பரிந்துரைத்தார். பிரான்ஸ் நாட்டில் 1982-ம் ஆண்டு ப்ளம் வில்லேஜ் என்ற மடாலயத்தை உருவாக்கினார். 2014-ம் ஆண்டில் ஏற்பட்ட உடல் நலக்குறைவால் வியட்நாமுக்குத் திரும்பினார். மலைகள் சூழ்ந்த பகுதியில் வாழ்ந்துவரும் திக் நியட் ஹான் தனது பிறந்தநாளை முன்னிட்டு கொடுத்த நேர்காணலிலிருந்து சில துளிகள்…

* * *

 
 
 

சமூக மாற்றத்துக்கான பணியும் ஆன்மிக வளர்ச்சிக்கான காரியமும் வேறு வேறல்ல. ஒருவன் சாதகத்தில் ஈடுபடும்போது உள்ளே உள்ள துயர், சுற்றியுள்ள துயர் இரண்டையுமேதான் எதிர்கொண்டாக வேண்டும். மலைக்குச் சென்று தனியாகப் பயிற்சி மேற்கொள்ளும்போது உள்ளே உள்ள கோபம், பொறாமை, விரக்தி ஆகியவற்றை அறியவே முடியாது. அப்படியான மனநிலை நம்மிடம் உருவெடுப்பதைப் பார்ப்பதற்கு நாம் மக்களுடன் பழகவேண்டியது அவசியம். அதனால்தான் ஆன்மிகப் பயிற்சிக்கு துயரம் என்பது மிக அவசியமாக உள்ளது.

* * *

கோபத்தை அரவணைப்பதற்கு புத்தரால் பல பயிற்சிகள் பரிந்து ரைக்கப்பட்டுள்ளன. கோபத்தை வெளியிடுவது அறிவார்த்தமானது அல்ல. ஏனெனில், கோபத்தின் அடிப்படையும் கோபத்தின் விதையும் நம்முள் உள்ளவை என்கிற உண்மையை அது புறக்கணிக்கிறது. அந்தக் கோபத்தின் விதை பெற்றோர் களாலோ மூதாதையோர்களோ நம்மிடம் கடத்தப்பட்டிருக்கலாம். அதை சமூகமும் தொடர்ந்து வளர்த்துவந்திருக்கிறது. கோபத்தை வெளிப்படுத்தும்போது நமது அமைப்பிலிருந்து வெளிக்கொண்டு வருவதாக நினைக்கி றோம். வார்த்தைகளாலோ உடல் அசைவுகள் வழி யாகவோ கோபத்தை வெளிப்படுத்தும் போது, கோபம் வலுப்படவே செய்கிறது. அதனால் அது அபாய கரமான வழிமுறையாகும்.

கோபத்தின் விதையை அங்கீகரிப் பதும், புரிதல் - பரிவின் ஆற்றலால் அதை மட்டுப்படுத்துவதுமே கோபத்தைக் குறைப்பதற்கான ஒரே வழி. கோபத்தின் விதை நம்மிடம்தான் உள்ளது. அது உருவமெடுக்காத நிலையில் நாம் சிரிப்பதற்கும் நிறைவாக இருப்பதற்குமான திறனைக் கொண்டவர்கள்தான். அதனாலேயே கோபத்தின் விதை நம்மிடம் இல்லை என்பது அர்த்தமில்லை. யாராவது எதையாவது சொல்லும்போதோ செய்யும்போதோ அந்த விதைக்குத் தண்ணீர்விடுகிறார். அப்போது அது சிலிர்த்தெழுந்துவிடுகிறது. கோபத்தின் விதை எப்போது உருவமெடுக்கிறது என்பதைக் கவனித்து, அதைக் கவனிக்கக் கற்றுக்கொள்வது அவசியமானது.

* * *

உணவில்லாமல் எதுவும் உயிர்த்தி ருக்காது என்று புத்தர் கூறினார். மெய்யறிவு, நிறைவு, கவலை, அல்லல் எல்லாவற்றுக்கும் இது பொருந்தும். மெய்யறிவு என்றால் வேறொன்றும் அல்ல. நீங்கள் ஒரு தேநீரைப் பருகும்போது, தேநீரைப் பருகுகிறோம் என்கிற விழிப்புணர்வு மட்டுமே. அந்த மனம்நிறை கவனம், அந்த விழிப்புணர்வுதான் மெய்யறிவு. நீங்கள் ஏற்கெனவே பல முறை தேநீர் அருந்தியிருக்கிறீர்கள். ஆனால், அதைப் பருகுவதைப் பற்றி நீங்கள் அறிந்திருக்கவே யில்லை. எதிர்காலம், இறந்த காலம் தொடர்பிலான கவலைகளில் நீங்கள் ஆழ்ந்து இருந்திருக்கிறீர்கள். தேநீர் குடிக்கும் செயலில் உங்கள் மனத்தைக் குவித்தால் கொஞ்சம் தேநீரைப் பருகும்போதும் ஆனந்தம் தானாகவே வரும்.

* * *

புத்தர் ஏற்கெனவே இங்கிருக் கிறார். நீங்கள் மனம்நிறை கவனத்துடன் இருந்தால் எதிலும் புத்தரைக் காணமுடியும், குறிப்பாக சமூகத்திலும். இருபதாம் நூற்றாண்டு என்பது தனிமனித வாதத்துக்கானது. ஆனால், இனியும் அது அவசியமில்லை. மனிதர்கள் - உயிர்கள் சேர்ந்த சமூகமாகவே வாழ முயல வேண்டும். ஒரு துளி நீராக அல்ல, நதியாகப் பொழிய விரும்புவோம். அப்படியாகத்தான் இங்கே, இப்போதே புத்தரின் இருப்பை நம்மால் உணர்வது சாத்தியமாகிறது. ஒவ்வொரு எட்டிலும், ஒவ்வொரு மூச்சிலும், பேசும் ஒவ்வொரு வார்த்தையிலும், செய்யும் ஒவ்வொரு செயலிலும் புத்தர் உருவமெடுக்கிறார். புத்தரை வேறெங்கும் தேடவேண்டாம். தினசரி வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்தையும் மனம்நிறை கவனத்துடன் வாழும் கலை அது.

 

https://www.hindutamil.in/news/supplements/anantha-jothi/605391-zen-quotes-2.html

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இயேசுவின் உருவகக் கதைகள் 21: கேட்டதெல்லாம் கிடைத்துவிட்டால்...

jesus-story  

தான் சொல்வதை எளிய மக்களும் எளிதில் புரிந்துகொள்ள வேண்டு மென்றுதான் உவமைகள் எனப்படும் உருவகக் கதைகளை இயேசு சொன்னார். அவர் சொன்ன எடுத்துக் காட்டுகளை மனத்தில் வைத்துச் சிந்தித்தால் போதும்; அவ்வப்போது நம்மில் தோன்றும் கேள்விகளுக்கான பதிலைப் பெறலாம்.

துன்பங்களைக் கடவுள் அனுப்புவதாக நினைப்போர் இருக்கிறார்கள். ‘ஏன் கடவுள் இப்படிச் செய்கிறார்? ஏன் மாற்றி மாற்றி என் வாழ்க்கையில் சோதனைகளையும் வேதனைகளையும் அனுப்புகிறார்?’ என்று கேட்போர் இருக்கிறார்கள்.

தங்கள் மன்றாடல்கள் கேட்கப்படவில்லை. தாங்கள் கேட்டதைக் கடவுள் தரவில்லை. அப்படியானால், என் மீது அவருக்கு அக்கறை இருக்கிறதா? என்னை அவர் அன்பு செய்கிறாரா என்று சிலர் அங்கலாய்க்கிறார்கள்.

இந்த இரு வகையான கேள்விகளுக்கும் இயேசு சொன்ன ஒரு எடுத்துக்காட்டில் பதில் இருக்கலாம். என்ன சொன்னார் இயேசு? “உங்கள் பிள்ளை உங்களிடம் வந்து அப்பம் வேண்டும் எனக் கேட்டால் அவனுக்குக் கல்லைக் கொடுப்பீர்களா? உங்களில் யாராவது அப்படிச் செய்வீர்களா? மீன் சாப்பிட ஆசைப்பட்டு, உங்கள் மகன் மீன் வேண்டும் எனக் கேட்டால் அவனுக்குப் பாம்பைக் கொடுப்பீர்களா? இங்குள்ளோரில் எந்தத் தந்தையாவது இப்படிச் செய்வாரா?” என்று கேட்டுவிட்டு, தான் சொல்ல விரும்பிய உண்மையைச் சொன்னார்.

“உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல வற்றை, நற்கொடைகளை மட்டுமே தர வேண்டும் என்று தீயோராகிய உங்களுக்கே புரிந்திருக்கிறதே! அப்படியானால் உங்கள் இறைத்தந்தை நல்லது அல்லாத எதையும் உங்களுக்குத் தருவாரா?” என்று கேட்டார் இயேசு.

இறைவன் தீயதைச் செய்வாரா?

இயேசு கேட்ட இந்தக் கேள்விக்குப் பின்னே உள்ள கேள்விகள் என்ன? நம்மைத் தம் பிள்ளைகளாகக் கருதி அன்பு செய்யும் இறைவன் நமக்குத் துன்பங்களை அனுப்புவாரா? எனவே, நம்முடைய துன்பங்களுக்குக் கடவுளைக் குறைசொல்வது தவறாகாதா?

கடவுள் துன்பங்களை அனுப்புவதில்லை. காரணம், அவர் நம் அன்புத் தந்தை. அப்படியென்றால், துன்பங்கள் எங்கிருந்து வருகின்றன என்பதைப் பற்றி யோசிக்க வேண்டும்.

சில துன்பங்கள் நாமே தேடிக்கொள்பவை என்பது எளிதில் புரியும். ஆபத்தானவற்றை உறுதியாய் உடனே விலக்காமல், அவற்றை உள்ளே அனுமதித்தால், அவை நம்மை விரைவாகவோ மெதுவாகவோ அழிக்கும் என்பது விளங்கும். ஆசைகள், தேவைகளை கட்டுக்குள் வைத்திருக்கும் கட்டுப்பாடு இல்லாவிட்டால், அவை நம்மை இழுத்துப் போய் காட்டாற்றில் தள்ளக்கூடும் என்பது புரியும்.

வேறு சில துன்பங்கள் பிற மனிதரிடமிருந்து வருபவை என்பதையும் நாம் புரிந்து கொள்வோம். தங்களின் தன்னல லாபங்களுக்காக நம்மை ஏமாற்றி, நம்மைப் பயன்படுத்துவோர், எந்த உயர்ந்த விழுமியமோ, கொள்கையோ, மனிதநேயமோ இல்லாமல் தங்களின் பேராசைகளுக்கு நம்மைத் தீனியாக்க முனைவோர் என்று இந்தப் பட்டியல் நீளும்.

சில துன்பங்கள் எங்கிருந்து வருகின்றன என்று நம்மால் எளிதில் புரிந்துகொள்ள இயலாது என்பது உண்மை. விபத்துகள், இயற்கைப் பேரிடர்கள், ஒரு சிலரின் தவறுகளால் எண்ணற்ற மக்களைப் பாதிக்கும் பெரும் துன்பங்கள் போன்றவை எளிதில் புரிந்துகொள்ள முடியாதவை. இப்படி நம் சிந்தனை விரிந்தால், துன்பங்களை அனுப்புவது கடவுள் என்று தவறாக எண்ணி, அவரைக் குறை சொல்ல மாட்டோம்.

இயேசு சொன்ன தந்தை-மகன் எடுத்துக்காட்டு இன்னொரு புதிருக்கும் விடை சொல்லலாம்.

கேட்பதை கடவுள் ஏன் கொடுப்பதில்லை?

ஏன் நான் கேட்டதைக் கடவுள் தரவில்லை? கேட்டும் தராதவருக்கு எப்படி என் மீது அக்கறையும் அன்பும் இருக்க முடியும் என்று கேட்போர் இருக்கிறார்கள். இயேசு சொன்ன இந்த எடுத்துக்காட்டை முன்வைத்து, உற்றுநோக்கினால் இதற்கும் அங்கே பதில் இருப்பதைப் பார்க்கலாம். பசியில் மகன் அப்பம் கேட்டால், அன்பான தந்தை அதை நிச்சயம் அவனுக்குத் தருவார். பத்து அப்பம் சாப்பிட்ட பிறகும், மகன் தொடர்ந்து அப்பம் கொடு என்று கேட்டால், நல்ல தந்தை என்ன சொல்லுவார்?

“நெருப்பை விழுங்கினால் எப்படி இருக்கும் என்று நான் பார்க்க வேண்டும். கொஞ்சம் நெருப்புத் தா” என்று ஒரு முட்டாள் மகன் கேட்டால், அன்பும் ஞானமும் உள்ள தந்தை என்ன செய்வார்?

தொடர்ந்து மன்றாடிய பிறகும் நாம் கேட்டதைத் தரவில்லை என்றால், எதற்காக அதைக் கடவுள் தர மறுத்திருப்பார்? அது நம் தேவை என்று நினைத்தது தவறாக இருக்கலாமோ?

ஆபத்தான ஆசையைத் தேவை என்று நாம் ஒருகட்டத்தில் நினைத்திருக்கலாம். நமது சிந்தனை ஆழப்பட்டு அந்தக் கோரிக்கையைக் கடந்த பிறகு, நாம் கேட்டதைத் தராமல் இருந்த இறைவனுக்கு நாம் நன்றி சொல்லத் தானே செய்வோம்.

“அறியாமல், ஆழமாகச் சிந்திக்காமல் அவசரத்தில் கேட்டுவிட்டேன். நான் கேட்டதைத் தராமல் இருந்ததற்கு நன்றி, இறைவா!”

https://www.hindutamil.in/news/supplements/anantha-jothi/612574-jesus-story-4.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கல்லறையில் உடல்கள் தோண்டியெடுப்பு.. மனித எலும்பில் உருவாகும் போதைப் பொருள்.. அடிமையாகும் இளைஞர்கள்! ’போதைப் பொருட்கள் உயிருக்குக் கேடு விளைவிக்கும்’ என விளம்பரப்படுத்தப்பட்டாலும், அதன் விற்பனையும் அதற்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்தே வருகிறது. உலகளவில் பலர் இந்தப் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். அந்த வகையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் இதற்கு பலர் இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர். அதிலும், மனித உடல் எலும்புடன் தயாரிக்கப்படும் ஒருவித போதைப் பொருளுக்குத்தான் அவர்கள் அதிகமாக அடிமையாகி இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருளுக்கு அடிமையான இந்நாட்டு மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. அதிலும், இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் ’குஷ்’ என்ற ரக போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த ’குஷ்’ போதைப்பொருள் மனித எலும்புகளிலிருந்து உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த ’குஷ்’ ரக போதைப்பொருள் சியரா லியோன் பகுதியில் பழக்கத்திலிருந்து வருகிறது. இதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தயாரிப்பவர்கள் கல்லறையில் இருக்கும் புதைகுழிகளைத் தோண்டி பிணங்களை சேகரித்து அதன் எலும்புகளிலிருந்து ’குஷ்’ போதைப்பொருளைத் தயார் செய்வதகாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த எலும்புகளுடன் , கஞ்சா மற்றும் சில இரசாயனங்கள் கலந்து இந்தப் போதைப் பொருள் தயாரிக்கப்படுகிறது. இதற்காக, சியரா லியோனில் இதுவரை நூற்றுக்கணக்கான புதைகுழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த போதை மருந்து கிட்டத்தட்ட பல மணி நேரம் போதை தருவதாகச் சொல்லப்படுகிறது. மேலும் இந்தப் போதைக்கு அடிமையான இளைஞர்கள் தங்களிடம் இருக்கும் பொருட்களை (புத்தகங்கள், ஆடைகள்) விற்று அந்த போதை மருந்தை வாங்குவதாகவும், அதற்குப் பிறகு வீட்டில் உள்ள பொருட்களைத் திருடிச் சென்று கொடுத்து வாங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் மூலம் நாட்டில் குடியிருப்பதற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கவலை தெரிவித்துள்ளார். இதன் பிடியிலிருந்து மக்களை மீட்க போதைப்பொருள் ஒழிப்பு மையங்கள் அமைக்கப்படும் எனவும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நாட்டு ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.   https://thinakkural.lk/article/299459
    • வடக்கு மீனவர்களின் ஓயாத போராட்டம் ஜே.ஏ.ஜோர்ஜ் “அது ஒரு சனிக்கிழமை, நான் எனது வலைகளை எடுப்பதற்காக கடலுக்கு சென்றேன். வலை நிறைய மீன்களை எதிர்பார்த்து சென்ற எனக்கு அங்கு அதிர்ச்சியே மிஞ்சியது. ஏனென்றால் நான் விரித்து வைத்திருந்த வலைகள் அங்கு இல்லை.  எனது வலைகளை இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை சேதப்படுத்தி விட்டனர். ஆனால் இது முதல் முறையாக நடக்கும் சம்பவம் இல்லை” -  இவ்வாறு தனது கதையை கூறும் மீனவரான ரெஜினோல்ட் தனது கடந்த கால அனுபவங்களுடன் ஒப்பிடுகையில் தற்போதைய தனது போராட்டம் தீவிரமடைந்திருப்பதாக கூறுகின்றார். 20 ஆண்டுகளாக தனது வாழ்க்கைக்காக கடல் அலைகளுடன் போராடி வரும் ரெஜினோல்ட் மட்டுமன்றி வடமாகாண மீனவர்களில் அதிகளவானவர்கள் தற்போது இவ்வாறு கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர். இலங்கை கடற்பரப்பிற்குள் இழுவை படகுகளை பயன்படுத்தி இந்திய மீனவர்கள் முன்னெடுக்கும் மீன்பிடி நடவடிக்கைகளே இந்த நெருக்கடிக்கு காரணமாக உள்ளது. நெடுந்தீவைச் சேர்ந்த ரெஜினோல்ட் தனது தந்தையுடன் இணைந்து நீண்டகாலம் மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில், திருமணத்துக்கு பின்னர் தற்போது தனியாக தொழில் செய்கின்றார். “நான் என் படகை மோட்டார் இல்லாமல் பயன்படுத்துகிறேன். மோட்டார் ஒன்றை வாங்க என்னிடம் போதுமான பணம் இல்லை. அதனால் என்னால் அதிக தூரம் செல்ல முடியாது. கடந்த காலங்களில் மீன்பிடிக்க பாரம்பரிய வலைகளைப் பயன்படுத்தினேன். இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை எனது வலைகளை சேதப்படுத்தி விட்டனர். எனவே, இப்போது மீன்பிடிக்க சிறிய வலையைப் பயன்படுத்துகிறேன். இதனால், முன்பு போல் மீன் பிடிக்க முடியவில்லை. கடலில் இரண்டு மூன்று மணி நேரம் மாத்திரமே செலவிட முடிகின்றது. எனக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.  எனது மூத்த மகன் ஐந்தாம் வகுப்பு படிக்கிறான். அவர்களுக்காக நான் பல செலவுகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. பொருட்களின் விலை முன்பை விட அதிகமாக உள்ளது. குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவது இப்போது மிகவும் கடினமாக உள்ளது” என்கிறார் ரெஜினோல்ட். அமெரிக்க பாதுகாப்பு பல்கலைக்கழகம் 2008ஆம் ஆண்டு துருக்கியின் இஸ்தான்புல் நகரில் ஏற்பாடு செய்திருந்த செயற்குழு கூட்டத்தில் கலாநிதி சனத் டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட அறிக்கையின்படி, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கடல் எல்லை மூன்று கடல் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. வடக்கில் வங்காள விரிகுடா, நடுவில் பாக்கு நீரிணை, தெற்கில் மன்னார் விரிகுடா என இந்த கடல் எல்லைகள் உள்ள நிலையில், பாக்கு நீரிணை ஊடாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சராசரி தூரம் சுமார் 32 கிலோமீற்றர்கள் என அறிக்கை கூறுகிறது. கச்சதீவில் இருந்து இந்தியாவின் ராமேஸ்வரம் வரையிலான தூரம் சுமார் 14 கடல் மைல்கள், அதாவது சுமார் 26 கிலோமீட்டர்கள். யாழ்ப்பாணத்தில் இருந்து கச்சத்தீவு வரை சுமார் 60 கிலோமீட்டர் தொலைவான கடற்பரப்பில் தனது அதிகாரத்தை கொண்டுள்ள இலங்கை கடற்படை, சர்வதேச கடல் எல்லையை தாண்டி இலங்கை கடலுக்குள் நுழையும்  இந்திய இழுவை படகுகள் குறித்து அவ்வப்போது  நடவடிக்கை எடுத்து வருகிறது. எவ்வாறாயினும், இலங்கை  கடற்பரப்புக்குள் இந்திய இழுவை படகுகள் பிரவேசிப்பது  நாளாந்தம் இடம்பெறுவதாக வடபகுதி மீனவ சங்க தலைவர்கள் கூறுகின்றனர். “இது ஒரு தீவிரமான பிரச்சினை. இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படை உள்ளிட்டவர்கள் தேவையான நடவடிக்கை எடுக்காதமையே இந்த பிரச்சினை தொடர்வதற்கு முக்கிய காரணமாக உள்ளது.  ஏராளமான இந்திய இழுவை படகுகள் இலங்கை கடல் பகுதிக்குள் நுழையும் நிலையில், கைது செய்யப்படும் இந்திய மீனவர்கள் மற்றும் கைப்பற்றப்படும் இந்திய இலுவை படகுகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கை எடுத்து இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மீன்பிடி அமைச்சு நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை. இந்திய மீனவர்கள் பயன்படுத்தும் இழுவை படகுகள் வடபகுதி மீனவர்களுக்கு சொந்தமானதை படகுகளை விட பெரியவை. அவை தினமும் வடக்கு கடல் பகுதிக்குள் நுழைவதால், ஏராளமான பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதனால் வடபகுதி மீனவர்களின் வருமானம் பாதிக்கப்படுவதுடன், இந்திய இழுவை படகுகளால் இலங்கை மீனவர்களின் வலைகளுக்கு சேதம் ஏற்படுகின்றது. அத்துடன், எமது மீன்பிடி வளம் பறிபோகிறது. எமது மீனவர்களுக்குச் சொந்தமான படகுகளை சேதப்படுத்திய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன”- என யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் சமாசங்களின் சம்மேளன தலைவர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார். அத்துடன், இந்தியாவில் இருந்து இழுவை படகுகள் வருவதை தடுக்கும் வகையில் இலங்கையில் சட்ட அமைப்பு இருப்பதாகவும் எனினும், அவற்றால் நடைமுறையில் இலங்கை மீனவர்களால் எந்தவித பயனையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை என, அன்னராசா சுட்டிக்காட்டினார். 1979 ஆம் ஆண்டின் 59 ஆம் இலக்க கடற்றொழில் (வெளிநாட்டு மீன்பிடி படகுகளை ஒழுங்குபடுத்துதல்) சட்டத்தின் 04ஆவது பிரிவின்படி, அனுமதியின்றி மீன்பிடி தொடர்பான நடவடிக்கைகளுக்காக வெளிநாட்டு மீன்பிடி படகுகளை இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க பயன்படுத்தக்கூடாது என்று கூறுகிறது. அத்துடன், இலங்கை கடற்பரப்பிற்குள் வெளிநாட்டுப் படகுகள் பிரவேசித்தால், மீன்பிடிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், அந்தப் படகில் உள்ள மீன்பிடி சாதனங்களை முறையான முறையில் தடுத்து வைக்க வேண்டும் என்று சட்டத்தின் 05வது பிரிவு கூறுகிறது. வெளிநாட்டுப் படகுகளை நிறுத்தவும், சோதனைகளை நடத்தவும், பிடியாணையுடன் அல்லது இல்லாமலும் படகுகளைக் கைப்பற்றவும், தனிநபர்களைக் கைது செய்யவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.  2018 ஆம் ஆண்டில், இந்த சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டதுடன், இலங்கையில் உள்ள ஆயுதப்படைகளின் தளபதிகள் மற்றும் அதன் அமுலாக்கத்துக்காக கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் தலைவர் ஆகியோருக்கு பொறுப்பை வழங்கும் கூடுதல் சரத்துகள் அறிமுகப்படுத்தப்பட்டன. வெளிநாட்டுப் படகுகள் மூலம் இலங்கைக் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்தால் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். இந்த குற்றம் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் ஒரு மாதத்துக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. இந்த சட்டத்தை நிறைவேற்றுவதற்கு பொறுப்பான அமைச்சருக்கு விதிமுறைகளை உருவாக்கும் திறன் உட்பட விரிவான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. 1981 ஆம் ஆண்டு இந்தச் சட்டத்தின் கீழ் இலங்கைக் கடற்பரப்பில் நுழைவதற்கான அனுமதியைப் பெறுவதற்கான நடைமுறைகளை கோடிட்டுக் காட்டும் விதிமுறைகள் வெளியிடப்பட்டன. இந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு மீன்பிடி அமைச்சு மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் என்பன மீள தவிர்க்க முடியாத பொறுப்பைக் கொண்டுள்ளன. இந்திய மீனவர்கள் வட கடலில் மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை முற்றாக நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்பிலான கலந்துரையாடல் 2023 ஜனவரி 24 ஆம் திகதி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.  மேலும், 2023ல் சட்டவிரோத வெளிநாட்டு மீன்பிடி கப்பல்கள் மற்றும் மீனவர்கள் குறித்து அந்தந்த நிறுவனங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. எவ்வாறாயினும், இந்திய இழுவை படகுகளினால் வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண போதிய நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் இன்னமும் தவறியுள்ளதுடன், இதனால் பிரச்சினை தொடர்ந்து மோசமாகி வருகிறது. இவ்விடயம் தொடர்பில் வினவிய போது கடற்றொழில் அமைச்சின் செயலாளர் கே.என். குமாரி சோமரத்ன, இந்த பிரச்சினைக்கு இரு நாடுகளுக்கிடையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என தெரிவிக்கின்றார். “இந்த விவகாரம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்த விடயம் தொடர்பில் மீண்டும் ஒருமுறை கலந்துரையாடலை ஆரம்பிக்குமாறு வெளிவிவகார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். வெளிவிவகார அமைச்சரும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதை நாம் அறிவோம். இப்பிரச்சினை தொடர்பாக தற்போதுள்ள சட்டங்களில் திருத்தம் செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. தற்போது, முதல் தடவை கைதுக்கான தண்டனை மற்றும் மீண்டும் மீண்டும் கைது செய்யப்பட்டதற்கான தண்டனையை சட்டம் குறிப்பிடுகிறது, ” என்று அவர் கூறுகின்றார். இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்ய கடற்படையின் அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு ஏன் பணிப்புரை வழங்கப்படவில்லை என வினவியபோது, அந்தச் சட்டம் இன்னமும் அமுலில் உள்ளதாகவும், அதன்படி தற்போது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் செயலாளர் தெரிவித்தார். இது இவ்வாறாக இருக்கும் நிலையில், இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் எண்ணிக்கை 150க்கும் அதிகமாகும். இது அதிக எண்ணிக்கையாக தெரிந்தாலும், நாளாந்தம் இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழையும் இந்திய மீனவர்களின் வருகையுடன் ஒப்பிடுகையில் இது மிகக் குறைவு என மீனவ சங்கத் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில், இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்கும் இந்திய மீனவர்களை கண்காணிப்பதற்காக வடக்கில் ‘கடல் காவலர்கள்’ எனப்படும் தன்னார்வ குழுவொன்றை ஸ்தாபிப்பதற்கான அமைச்சரவை பத்திரத்தை கடற்றொழில் அமைச்சர் சமர்ப்பித்துள்ளார். இதேவேளை, இந்திய மீன்பிடி பிரச்சனையால் நாளாந்தம் 350 மில்லியன் ரூபாய் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக அமைச்சு மதிப்பிட்டுள்ளது. இந்த நிலையில், தற்போதைய கடற்றொழில் அமைச்சர் வடக்கில் உள்ள மீனவர்களின் வாக்குகளால் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டதாகவும், கடற்றொழில் அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அவர் போதிய தலையீடுகளை மேற்கொள்ளவில்லை என வடமாகாண மீனவர் சங்க தலைவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். வடக்கில் உள்ள எழுவைத்தீவு, அனலைத்தீவு, நெடுந்தீவு உள்ளிட்ட, மீன் பிடி தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ள மக்கள் வசிக்கும் தீவு பகுதிகள் இன்னும் இலங்கை கடற்படையினரின் கண்காணிப்பிலேயே உள்ளதை எம்மால் நேரடியாக காண முடிந்தது. இந்த தீவுகளின் கடற்படையினரின் சோதனை சாவடி அல்லது முகாம் இன்னும் செயற்பாட்டிலேயே உள்ளது. இவ்வாறு வடக்கின் கடற்பரப்பை சுற்றி ரோந்து நடவடிக்கையில் ஈடுபடும் இலங்கை கடற்படையினர், இந்திய மீனவர்கள் இலங்கைக்குள் பிரவேசிப்பதை தடுக்க  உரிய நடவடிக்கை எடுக்காதது குறித்து வடபகுதி மீனவர்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர். இலங்கை கடற்படையினர் நினைத்தால் இந்திய மீனவர்களை இலங்கை கடல் வளத்தை சுரண்டாமல் இலகுவாக தடுத்து நிறுத்த முடியும் என்பதே வடபகுதி மீனவர்கள் நம்பிக்கையாகும். ஆனால், அது இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை என்பது அந்த மீனவர்கள் நிலையை நேரில் பார்க்குத்போது தெளிவாக புலப்படுகின்றது.   https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/வடக்கு-மீனவர்களின்-ஓயாத-போராட்டம்/91-336077
    • யாழ்.பல்கலையின் பொன்விழாவை முன்னிட்டு ஆய்வு மாநாடு! adminApril 18, 2024 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பதாண்டைப் பூர்த்தி செய்து பொன்விழாக் காண்கின்றது. அதனை முன்னிட்டு முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வுமாநாட்டை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப்படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளன. ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வடக்கு மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் கருப்பொருளில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராசா தலைமையிலும் உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் மற்றும் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இவ் ஆய்வுமாநாடு அரங்கேறவுள்ளது. கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி.ஆ.நித்திலவர்ணண் மாநாட்டின் இணைப்பாளராகச் செயற்படுகின்றார். வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிரஞ்சன் மற்றும் வட மாகாணக் கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தாளர்களாகக் கலந்துகொள்கின்றனர். எதிர்வரும் 20ம் திகதி சனிக்கிழமையும் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை மற்றும் மாலை அமர்வுகள் எனத் திட்டமிடப்பட்டுள்ள இம்மாநாட்டின் காலை அமர்வுகள் கைலாசபதி கலையரங்கிலும் மாலை அமர்வுகள் உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்திலும் நடைபெறவுள்ளன. சனிக்கிழமை நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் திறவுகோல் உரையினை கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பீட கல்வி உளவியல் இருக்கைப் பேராசிரியர் மஞ்சுளா விதாணபத்திரண நிகழ்த்தவுள்ளார். ‘வாண்மைத்துவ விருத்திக்கான ஆய்வு மைய புத்தாக்கங்கள்: வடக்கு இலங்கையின் ஆசிரியர் கல்விக்கான தந்திரோபாய அணுகுமுறை’ எனும் தலைப்பில் இவ் உரை நிகழவிருக்கின்றது. திறவுகோல் உரையினைத் தொடர்ந்து மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்திய மையக்கருத்துரைகள் இடம்பெறவுள்ளன. இக்கருத்தரங்கிற்கு உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் தலைமைதாங்கவுள்ளார். ‘இலங்கையின் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியை முறைமைப்படுத்தல் – சவால்களும் பிரச்சனைகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர்.தி.முகுந்தனும், ‘வட மாகாணக் கல்வியின் சமகால உள சமூக நிலைமைகள்’ எனும் தலைப்பில் உளமருத்துவ நிபுணர் சி.சிவதாசும், ‘இலங்கையின் பாடசாலைக் கலைத்திட்டத்தின் சவால்களும் புதிய போக்குகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர் எவ்.எம்.நவாஸ்தீனும், ‘சட்டத் தீர்மானங்களை அறிவிப்பதில் கல்வியியல் ஆய்வுகளின் தேவைகள்’ எனும் தலைப்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமாரும் உரையாற்றவுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் ஜெயலக்சுமி இராசநாயகம் தலைமை தாங்கவுள்ளார். இந் நிகழ்வில் திறவுகோல் உரையை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் கு.சின்னப்பன் ‘தமிழ் கற்பித்தலில் புதிய போக்குகள்’ எனும் தலைப்பில் நிகழ்த்தவுள்ளார். அதனைத் தொடர்ந்து ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் தலைப்பில் கலைப்பீடப் பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் திறந்த புலமைத்துவக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் அதிபருமாகிய என்.தெய்வேந்திரராஜா, கல்வியியல் ஆய்வாளரும் அகவிழி மற்றும் ஆசிரியம் சஞ்சிகைகளின் ஆசிரியருமான தெ.மதுசூதனன், தேசிய கல்வி நிறுவன விரிவுரையாளர் ஐ.கைலாசபதி, கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலய அதிபர் ஜெய மாணிக்கவாசகர், இலங்கை பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஜீவராணி புனிதா, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கல்லூரியின் முன்னாள் பணிப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் திட்ட முகாமையாளருமாகிய ஜே. ஜூட் வோல்ற்றன் மற்றும் கிளிநொச்சி வடக்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் அலுவலர் சு.வீரசுதாகரன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். பார்வையாளர்களின் வினாக்களுக்கும் விடையளிக்கும் நிகழ்வாகவும் இக் கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது. ‘வடக்கு மாகாணப் பாடசாலைகளின் வெற்றிகளும் பின்னடைவுகளும்’, ‘பாடசாலைகளும் சமூகமும் – எங்கு நாம் நிற்கின்றோம் – முன்னோக்கிப் போவதற்கான வழிகள்’, ‘எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளை அளவிடுதல்’, மற்றும் ‘கல்வியும் வேலைவாய்ப்பும் – சந்தர்ப்பங்களும் சவால்களும்’ எனும் தலைப்புக்களில் இக்கலந்துரையாடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் கருத்துச்செறிவுகளை மாநாடு நிறைவுபெற்ற பின்னர் கொள்கை ஆவணமாக வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரண்டு நாள்களும் மாலை அமர்வுகள் பலாலி வீதியில் அமைந்துள்ள உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்தில் நடைபெறும். இரண்டு நாள் மாலை அமர்வுகளிலும் தலா நாற்பத்து நான்கு ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு தலைப்புக்களிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆசிரியக் கல்வியலாளர்கள், கல்வி நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வாளர்களினால் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன   https://globaltamilnews.net/2024/201875/
    • போட்டியில் கலந்துகொண்ட @kalyani யும், @கந்தப்புவும் வெற்றிபெற வாழ்த்துக்கள். இன்னும் 15 மணித்தியாலங்களே இருப்பதனால், யாழ்களப் போட்டியில் விரைவில் கலந்துகொள்ளுங்கள்😀 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு  
    • அமெரிக்கா ஏதோ ஒரு விதத்தில் பங்கு எடுக்கும், எடுக்க வேண்டிய நிலை, இஸ்ரேல் ஈரானுக்கு திருப்பி அடித்தால் . (மற்ற திரியில் சொன்னனது போல , இஸ்ரேல் க்கு தெரியும், அமெரிக்கா, மேற்கு பாதுகாப்புக்கு எப்போதும் வரும் என்று. அதை மேற்கும், மீண்டும், மீண்டும் சொல்லுகின்றன. இதுவே பங்கு எடுப்பது. அமெரிக்கா செய்வது, இஸ்ரேல் ஐ பாதுகாப்பத்தற்கு ஈரானின் ஏவுகணனைகளை தடுப்பது act of  war,)   ஈரானின் தூதரகம் மீதான இஸ்ரேல் இன் தாக்குதல் , மேற்கு, குறிப்பாக US க்கு தெரிந்து (அதன் மூலம் 5 கண்கள் உளவு நாடுகளுக்கு - 5 eyes intelligence community தெரிந்து), US ஆமோதித்து, அனுமதித்து  நடத்தப்பட்ட தாக்குதல். ஏனெனில், இஸ்ரேல் இப்படியானவற்றை அமெரிக்காவிடம் சொல்லாமல் செய்வதில்லை. மேலும், France க்கும்  உச அறிவித்து இருக்கும், ஏனெனில், சிரியா பிரான்ஸ் இன் காலனித்துவம்  கீழ் இருந்தது. மற்றது, பிரச்னை வந்தால் செக்யூரிட்டி கவுன்சில் இல் பிரான்ஸ் இந்த உதவி தேவை, ஆனால், இந்த காலனி என்பதே பிரதான  காரணம். இது செக்யூரிட்டி கவுன்சில் இல் எழுதப்படாத  விதி- காலனித்துவ அரசுகளே, முனைய காலணிகளின் இப்போதைய அரசுக்கள் சார்ந்த  விடயத்தில் முன்னுரிமை உள்ளது என்பது .  எனவே, மேற்கு ஆகக்குறைந்தது மறைமுக பங்குதாரர் (கனடா தூதரகத்தை காலி செய்தது அநேகமாக இந்த 5 eyes வழியாகத் தான் இருக்கும்) இஸ்ரேல் சொல்லியது தாக்குதலுக்கு மிகச் சிறிய நேரத்துக்கு முதல் என்று (வேண்டும் என்று) அமெரிக்கா கசிய விட்டு, சில செய்திகள் காவுகின்றன. அனால், தாக்குதலை இஸ்ரேல் 2 மாதமாக திட்டமிட்டது என்று பின் செய்து வந்தது.  கேக்கிறவன் கேணையனாக இருந்தால் ... என்ற அமெரிக்காவின் கதை. (அப்படி US  இடம் சொல்லாமல் இஸ்ரேல் செய்தது, Sinnai மீதான தாக்குதல், கைப்பற்றலும்  , ஆனால், அது பெரிய யுத்தத்தின் ஒரு பகுதி, Egypt முதல் தாக்கி இருந்தது). அமெரிக்காவுக்கு முதலே (ஏற்ற காலத்தில் ) தெரியும் என்றது, newyork times வெளியிட்டு உள்ள இன்னொரு செய்தியானா, அமெரிக்கா, இஸ்ரேல் அதிகாரிகள் ஈரானின் எதிர்பபை குறைத்து மதிப்பிட்டு விட்டார்கள் என்று அதிகாரிகள் அவர்களின் வாயால் சொன்னதாக என்ற செய்தியில்   இருந்து தெரிகிறது.   இதனால் தான் மேற்கு, ஈரானை தடுக்க முனைந்தது. முடியாமல் போக, அது தடுத்தது. un இன் பகுதி charter ஐ குழிதோண்டி புதைத்தன அமெரிக்காவும், அதன் வாலுகளும்.  இதை மேற்கு rule based என்று சொல்லும் என்று நினைக்கிறன்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.